ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளா் நவநீதம் பிள்ளை இலங்கை பயணத்தின்போது பிரதான எதிர்க்கட்சிகள் உட்பட 50 பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவநீதம்பிள்ளை கொழும்பை விட வடக்கு கிழக்கு மாகாணங்களில் தான் கூடுதல் நாட்கள் நிற்பார் என்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவா் கூறினார். வடக்கு கிழக்கில் பொதுமக்களுடன் கலந்துரைாயடுவார் என்றும் குறிப்பாக கிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக் குடியமா்ந்த மக்கள், முன்னாள் போராளிகள் பலருடனும் அவா் உரையாடுவார் எனவும் அந்த அதிகாரி கூறினார். நவநீதிம்பிள்ளையின் இலங்கைக்காக பயண எற்பாடுகள் நிகழ்ச்சி நிரல்கள் அனைத்தும் கொழும்பு ஜ.நா அலுவலகம் செய்து வருவதாகவும் அந்த அதிகாரி …
-
- 0 replies
- 271 views
-
-
இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தப்பட்ட துண்டுப் பிரசுரங்களை கண்டி நகரில் விநியோகித்துக்கொண்டிருந்ததாக கூறப்படும் அரேபிய நாட்டைச் சேர்ந்த ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் விபரங்களுக்கு....http://tamilworldtoday.com/archives/28074
-
- 2 replies
- 461 views
-
-
காலம் காலமாக சிங்கள பேரினவாதம் திட்டமிட்டவகையில் தமிழினவழிப்பை மேற்கொள்வதே தன்னுடைய செயற்பாடாக முன்னெடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில் தமிழர்களின் உயிர் நாடியாக திகழ்கின்ற கல்வியை பாதிக்கின்ற செயற்பாடுகளையும் தமிழினத்தின் ஆணிவேராக திகழ்கின்ற தமிழர்களின் இளைய சமுதாயத்தையும் அழிக்கின்ற செயற்பாட்டில் முழுமையாக தீவிரம் காட்டி வருகின்றது. தமிழர்களின் இளைய சமுதாயத்தை அழிக்கின்ற செயற்பாடுகளில் ஒன்றாக 14.08.2006ம் ஆண்டு அன்று செஞ்சோலை வளாகத்தில் நடைபெற்ற கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறையில் பங்கேற்றுக் கொண்டிருந்த மாணவிகள் மீது நடாத்தப்பட்ட படுகொலை திகழ்கின்றது. உலகுக்கு குழந்தையை அறிமுகப்படுத்துவது ஓர் தாயாக திகழ்கின்றால் அந்த தாய் தான் தனது தேசத்திற்கு ஓர் சிறந்த குடி…
-
- 3 replies
- 353 views
-
-
இலங்கையில் இருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் வர்த்தகத்தின் பிரதான நபர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச என்று அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆட்கத்தல் வர்த்தகத்துடன் ராஜபக்ச மாஃபியாக்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற தகவலுடன் அந்த இணையத்தளம் ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தியை அடுத்து, அவுஸ்திரேலிய அரசு இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. படகு மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த சிலரை அந்த நாட்டு அதிகாரிகள் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த முயற்சித்த போது, அவர்களில் இருந்த சிதரன் என்ற நபர் இலங்கைக்கு திரும்பிச் ச…
-
- 3 replies
- 654 views
-
-
நாட்டின் பிரதான மதங்கள் இழிவுபடுத்தப்படுவதனை தடுப்பதற்கு பௌத்த சாசன அமைச்சு புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அச்சு ஊடகங்களிலும் இணையத்தின் வழியாகவும் பிரதான மதங்களின் கற்பிதங்களுக்கு புறம்பான வகையிலோ அல்லது மதக் கொள்கைகள் கோட்பாடுகளை இழிவுபடுத்தும் வகையிலோ தகவல்களை வெளியிட தடை விதிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக பௌத்த மதத்தை இழிவுபடுத்துவதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் வரைவுச் சட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தையோ அதன் கொள்கைகள் கோட்பாடுகளையோ இழிவு படுத்தக் கூடிய அச்சு மற்றும் இணைப் பிரசூரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர், பௌத்த சாசன ஆணையாளர் மற்றும் நான்கு பீடங்களின் பீடாதிபதிகளினால…
-
- 6 replies
- 345 views
-
-
யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவில் கடந்தவாரம் காசோலை மோசடி தொடர்பில் 3 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸார் அத்தியட்சகர் ஜிவ்ரி தெரிவித்தார். யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு செய்தி தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் தற்போது காசோலை மோசடி அதிகரித்துள்ளது. கடந்த வாரமும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் வியாபார நோக்கத்திற்காக காசோலை கொடுத்து மோசடி செய்தமை தொடர்பில் 3 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி யாழ்.நகரில் வியாபார நோக்கத்திற்காக 3 இலட்சம் ரூபா காசோலை கொடுத்து மோசடி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த 8…
-
- 0 replies
- 367 views
-
-
-மொஹொமட் ஆஸிக் கண்டி போதனா வைத்திய சாலையின் ஆண் தாதி ஒருவர் வைத்தியசாலை வளாகத்திலுள்ள 80 அடி உயரமான மரமொன்றின் மேலேறி எதிர்ப்பில்; ஈடுபட்டுள்ளார். கண்டி வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதிமார்களுக்கு இடையில் சில தினங்களாக இடம் பெற்று முறுகல் நிலை இன்று 16 முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. எனினும், அந்தப் போராட்டம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த வைத்தியர்கள் சிலரை அறை ஒன்றில் பூட்டி வைத்ததாகக் கூறப்படும் பெண் தாதி ஒருவரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரியே குறித்த ஆண் தாதி மரத்திலேறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார். மரத்தின் மேலேறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள தாதியை மரத்திலிருந்து இறக்குவதற்கு பொலிஸாரும் வைத்தியசாலை அதிகாரிகளும் பார…
-
- 1 reply
- 271 views
-
-
வெலிவேரியவில் ராஜபக்ச பயங்கரவாதத்தை முன்னெடுக்க பொலிஸ் மற்றும் இராணுவத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களே பயன்படுத்தப்பட்டனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்சவினரது பயங்கரவாதத்திற்கு கீழ்ப்படியாமல் சீருடையின் கௌரவத்தை பாதுகாத்து கொள்ளுமாறு இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். வெலிவேரிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதுடன் தாக்குதலுக்கு கட்டளையிட்டது யார் என்பது கண்டுப்பிடிக்கப்பட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில் நடத்தப்படும் விசாரணையானது திருடனின் தாயிடம் போய் மறைவிடத்தை கேட்பது போன்ற…
-
- 1 reply
- 208 views
-
-
மன்னார் வளைகுடாப் பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் எரிவாயுக் கிணறுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் இயற்கை வாயுக்களைப் பெற்று கொண்டு அவற்றுக்குப் பதிலாக பொருள்கள் மற்றும் சேவைகளை வழங்க இந்தியா ஆயத்தமாகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவலை இந்தியப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. இது சம்பந்தமான பேச்சுக்களை மேற்கொள்ள இந்திய கனிம எண்ணெய் வள அமைச்சர் விரைவில் சிறீலங்கா செல்லவுள்ளார் கெயான் இந்தியா நிறுவனத்தினால் மன்னார் வளைகுடாப் பிரதேசத்தில் தோண்டப்பட்டுள்ள இரு எரிவாயுக் கிணறுகளில் ஏற்கனவே இயற்கை வாயுக்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாக மன்னார் வளைகுடா மற்றும் காவேரிக் கடற்படுகையில் எஞ்சியுள்ள 13 கடற்படுகைகளில் …
-
- 1 reply
- 341 views
-
-
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனிடம் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கிளிநொச்சியில் விசாரணை நடத்தியுள்ளனர். அண்மையில் அவர் கனடாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பாக அரச சார்பு ஊடகங்களில் வெளிவந்திருந்த செய்திகள் தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை காலை 9.40 மணிமுதல் 11.30 வரையில் இந்த விசாரணை நடைபெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். பயங்கரவாதப் புலனாய்வு பிரிவின் கொழும்பு அலுவலகப் பொறுப்பாளர் பிரசன்ன டி அல்விஸ் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான திலகரட்ண உதயகுமார் ஆகியோர் தமது கிளிநொச்சி அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தி தன்னிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து சென்றுள்ளதாக …
-
- 1 reply
- 333 views
-
-
யாழ் கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபையில் வாகன ஓட்டுனருக்கான பயற்சியாளராக கடமையாற்றும் அதிகாரி இராஜரத்தினம் கங்கய்மகேந்தன் என்பவர் யாழ் அச்சுவேலி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் ஒரு மில்லின் ரூபாய்க்கு சீமேந்து மற்றும் கூரைதகடுகளை கொள்வனவு செய்துவிட்டு காசோலை கொடுத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். யாழ் கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபையில் வாகன ஓட்டுனர்களுக்கான பயிற்சி ஆசிரியராக இராஜரத்தினம் கங்கைமகேந்தன் யாழ்ப்பாணம் கோண்டாவில் பேருந்து தரிப்பிட மத்திய நிலையத்தில் வேலை செய்து வருகிறார். அச்சுவேலை பலநோக்கு கூட்டுறவு சங்க கிழை முகாமையாளரை ஏமாற்றி வங்கியில் பணம் இல்லாத வங்கி கணக்கில் இருந்து ஒரு மில்லியன் ரூபாய்களுக்கு காசோலை வரைந்து கொடுத்துவிட்டு அச்சுவேலி பலநோக்கு கூட்டுற…
-
- 0 replies
- 291 views
-
-
: வெலிவேரிய ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான இராணுவ விசாரணைகளை இராணுவ முகாம்களுக்கு வெளியில் நடத்துமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் நீதியரசருமான ஆர்.பி. பெரேரா நேற்று இராணுவத்திற்கு அறிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக பிரதேசவாசிகள் முகாமுக்கு சென்று சாட்சியங்களை வழங்குதில் அச்சம் காணப்படுவதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பாக முறைப்பாடுகள் எதுவும் கிடைக்காத போதிலும் பிரதேசத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதனை தவிர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் 26 அரச நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் அறிக்கைகளின் பின்னர் எதிர்காலத்தில நடவடிக்கை எடுப்பார் எனவும் மனித உரிமை ஆணைக்குழுவின்…
-
- 2 replies
- 329 views
-
-
யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒருவரத்தில் 156 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. வழமையான அடிதடி மற்றும் கோஸ்ரி மோதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அதிகமாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அப் புள்ளிவிபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.இன்று காலை 10.30 மணிக்கு யாழ்.காவல்துறை நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பில் போதே மேற்படி புள்ளிவிபரங்கள் தொடர்பாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படித் தகவலில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவில் 84 குற்றவாளிகளும், காங்கேசன் துறை காவல்துறை பிரிவில் 72 குற்றவாளிககும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்தப் பகுதி நீதிமன்றங்களில் முன்னில…
-
- 0 replies
- 290 views
-
-
சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்களின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் திருகோணமலை மற்றம் மன்னார்பகுதிகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிறீலங்கா கடற்படை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்திருந்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களது காவல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.தமிழக மீனவர்கள் 21 பேரின் காவலை மேலும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீட்டித்துள்ளது மன்னார் நீதிமன்றம். http://www.sankathi24.com/news/32323/64…
-
- 0 replies
- 246 views
-
-
சிறீலங்காவின் மஹரகம ஸ்ரீ தேவானந்த வீதியில் ரயில் கடவைக்கு அருகில் ஓடும் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதுக்கையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற 650 இலக்க ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இன்று (16) காலை 7.05 அளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்தவர் பெண் பிக்கு ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர். சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மஹரகம காவல்துறையினர். விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.sankathi24.com/news/32326/64//d,fullart.aspx
-
- 0 replies
- 350 views
-
-
யுத்த காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் போனவர்கள் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உலகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கையே என விடுதலைப்புலிகளது முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் தெரிவித்தார். இந்த மாதம் இலங்கைக்கு வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கணக்கு காட்டுவதற்கு மஹிந்தராஜபக்ஸ முற்பட்டுள்ளார். இவ்வாறான பல குழுக்களை நாங்கள் கண்டுவிட்டோம். அவற்றின் விசாரணை அறிக்கைகள் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிந்துள்ளதாகவும் அனந்தி மேலும் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் கேள்வி ஒன்றி…
-
- 1 reply
- 391 views
-
-
திருகோணமலை மாணவர் படுகொலைச் சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து மாணவர்கள் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த ரெஜியார் மனோகரன் என்ற மாணவரின் தந்தை டொக்டர் காசிப்பிள்ளை மனோகரன் சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் இந்த மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென கோரி, மனோகரன் மனித உரிமைப் பேரவ…
-
- 1 reply
- 299 views
-
-
பிரதான சிலையையும் எடுத்துச் செல்ல முயற்சி தம்புள்ள கண்டலம சந்தியில் அமைந்துள்ள காளி கோயிலின் பிரதான சிலையை, பௌத்த பிக்குகள் எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர். தம்புள்ள உயன்வத்த ரஜமகா விகாரையில் உள்ள விஸ்ணு ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய முயற்சித்துள்ளனர். இதன் போது ஆலய பூசகரும் இந்து பக்தர்களும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் குறித்த பிரதேசத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பௌத்த பிக்குகள் ஊர்வலமாகச் சென்று குறித்த சிலையை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர். ஒரு மணித்தியாலம் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. குறித்த கோயிலை வேறும் இடத்தில் அமைப்பதற்கு 5ம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. http://globalt…
-
- 3 replies
- 602 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் லண்டனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த நான்கு விரிவுரையாளர்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடாத்தப்படும் என இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் க்சனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் நடைபெறும் தமிழ் மொழி கருத்தரங்களில் பங்கேற்கச் செல்வதாகக் கூறி இந்த நான்கு விரிவுரையாளர்களும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடுதலை புலி ஆதரவு பிரிவின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக உறுதி செய்யப்பட்டால் வ…
-
- 2 replies
- 361 views
-
-
நெடுந்தீவில் வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஆளும்தரப்பு மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவமானது நேற்றிரவு 9 மணியளவில் நெடுந்தீவு மேற்கிலுள்ள ஒற்றைப்பனையடியில் இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவில் மிக அண்மையில் கூட்டமைப்பின் கிளை அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாகாண சபை பிரசாரப் பணிகளை கூட்டமைப்பினர் மேற்கொண்டு வந்தனர். ஆளும்தரப்பின் பிரதேச சபை தவிசாளர் தலைமையில் பிரதேச சபை வாகனத்தில் சென்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இச்சம்பவத்தில் நெடுந்தீவில் திருமணம் செய்து வசித்து …
-
- 1 reply
- 223 views
-
-
இலங்கையுடனான வர்த்தக உறவுகளை இரண்டு மடங்காக விஸ்தரிப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் மூன்று ஆண்டு காலப்பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை இரட்டிப்பாக்க தீர்மானித்துள்ளது. இதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் பெறுமதி பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்டையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் அண்மைக்காலமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2003ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியிலேயே காணப்பட்டது. இதேவேளை, இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் இந்தியா காத்திரமான பங்களிப்பு வழங்கி வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தான…
-
- 1 reply
- 228 views
-
-
இந்திய மக்கள் பால் மா பாவனை செய்வதில்லை. மில்க் பவுடர் என்றால் அவர்களுக்கு என்னவென்றே தெரியாது என ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் பால் மா பயன்படுத்துகின்றனர். ஆனால் அயல் நாடான இந்தியா பால் மா இறக்குமதி கூட செய்வதில்லை. என மஹரகமவில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார். 13வது திருத்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு மக்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட முடியாது அவ்வாறு வழங்கினால் அது எருமை மாட்டுக்கு கொம்பு வழங்குவதற்கு சமனாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அதன் பிரதிபலன்களை பின்னர் அனுபவிக்க நேரிடும் என இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர…
-
- 1 reply
- 292 views
-
-
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் வடமராட்சியின் புலோலிப்பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை கிராமத்தில் கிணறு ஒன்றில் இருந்து 17 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள்; மீட்கப்பட்டுள்ளன என குளோபல் தமிழ்ச்செய்தியாளர் தெரிவித்துள்ளார். எனினும் அவை அனைத்தையும் உரப்பைகளினுள் படையினர் எடுத்துச்சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில். இந்த பகுதிகளில் உள்ள ஏனைய கிணறுகளை சுத்தம் செய்ய வேண்டாம் என்று இராணுவம் காணி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அண்மையிலேயே மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளினில் தமது மூடப்பட்ட கிணறுகளை அகழ தொடங்கியிருந்தனர்.அவ்வாறு அகழும் பணிகள் நடந்து கொண்டிருக்கையினிலேயே மனி…
-
- 8 replies
- 796 views
-
-
ராஜபக்ஷ அரசாங்கம் அழுகிவரும் கிழங்காக மாறியுள்ளது - பௌத்த தர்மத்திற்கு முரணாக முஸ்லீம்களுடன் மோதலை உருவாக்குகிறது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அழுகி வரும் கிழங்காக மாறியுள்ளது என மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். ஹபராதுவ பிரதேசத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தனது வங்குரோத்து நிலைமையை உணர்ந்துள்ளது. அரசாங்கத்தின் முட்டாள்தனமாக செயற்பாடுகள் காரணமாக மக்கள் அரசாங்கத்திடம் இருந்து வேகமாக விலகி வருகின்றனர். அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளதை உணர்ந்துள்ளது. பௌத்தர்கள் என தம்மை கூறிக்கொள்பவர்கள் மோதல்களை உருவாக்கி வருகின்றனர். பௌத்த தர்மத்திற்கு முரணான செயற்படுவர்களை பயன்படுத்தி அரசாங்கம் முஸ்லிம் மக்…
-
- 3 replies
- 521 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நேரில் விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 25ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் நவனீதம்பிள்ளை இலங்கையில் தங்கியிருப்பார். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நவனீதம்பிள்ளை கள விஜயங்களை மேற்கொள்வார் என அவரது பேச்சாளர் ருபர்ட் கொல்விலி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்க அமைச்சர்கள் ஆகியோருடன் நவனீதம்பிள்ளை சந்திப்புக்களை நடத்துவார் என குறிப்பிட்டுள்ளார். சிரேஸ்ட நீதித்துறை அதிகாரிகளுடனும் நவனீதம்பிள்ளை சந்திப்புக்களை நடத்த உள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதனை கண்காணிக்கும் செயற்குழுவினரையும் நவனீதம்பிளi…
-
- 1 reply
- 278 views
-