ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
தமது சொந்த நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 30 வருடங்களுக்குப் பின் சென்ற கொக்குத்தொடுவாய் மக்கள் மகாவலி திட்ட அதிகாரிகளால் நேற்று விரட்டியடிக்கப்பட்டனர். கொடிய போர் காரணமாக 1984 ஆம் ஆண்டு கொக்குத்தொடுவாய் மத்தியைச் சேர்ந்த மக்கள் அரசினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருந்தனர். யுத்தம் முடிந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டனர். இருப்பினும் மீளக் குடியமர்த்தப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் மக்களுக்குரிய விவசாய நிலங்கள் திருப்பி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக வெலிஓயாப் பகுதி பிரதேச செயலருடன் மக்கள் தொடர்பு கொண்ட போது அந்தப் பகுதியில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டது. இந்தச் …
-
- 1 reply
- 431 views
-
-
யுத்தம் நிறைவடைந்த நிலையில் மீதமாகும் நிதிவளங்களை சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு புலம்பெயர்ந்தவர்கள் முயற்சிப்பதாக மஹிந்த அமைச்சரவையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சிலாபம் – மாதம்பை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். தற்போது நாட்டில் பயங்கரவாதம் இல்லை எனவே, யுத்தம் நிறைவடைந்து விட்டது. அது மீண்டும் ஏற்படாது. ஆனால் யுத்தம் நிறைவடைந்த போதும், எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.சர்வதேச மட்டத்தில் பல சவால்கள் பல உள்ளன. ஈழக்கனவு இன்னும் நிறைவடையவில்லை. புலம்பெயர்ந்தவர்களிடம் பிரபலமான பொறிமுறையொன்றே செல்கிறது. 30 வரு…
-
- 2 replies
- 421 views
-
-
அமைச்சர் ரிசாட் பதியூதீனின் கோரிக்கைக்காக பதவி விலகப் போவதில்லை என காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார். கிராண்ட்பாஸ் ஸ்வர்ன மாவத்தையில் பள்ளிவாசல் மீதான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, காவல்துறை மா அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அமைச்சர் ரிசாட் பதியூதீன் கோரியிருந்தார். எனினும் அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தம்மை நியமித்ததாகவும், தம்மை பதவி விலகுமாறு கோர அமைச்சருக்கு உரிமையில்லை எனவும் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார். குறைந்தளவான அதிகாரத்தைப் பயன்படுத்தி மோதலைக் கட்டுப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 556 views
-
-
இலங்கை கடல் எல்லைக்குள் வந்து டோலார் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் உரிமையை சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கை ஒன்றில் பிரபல அமைச்சர் ஒருவர் கையெழுத்திட்டுள்ளதாகவும் இதனடிப்படையில் எதிர்காலத்தில் சீனாவுக்கு சொந்தமான 40 மீன்பிடி கப்பல்கள் இலங்கை தேசியக் கொடியுடன் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதை ஆரம்பிக்கும் எனவும் அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன நிறுவனம் பிடிக்கும் மீன்களில் 30 வீதம் சீன நிறுவனத்திற்கும், 10 வீதம் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்திற்கும், எஞ்சிய 60 வீதம் அமைச்சரின் இணைப்புச் செயலாளருக்கு சொந்தமான கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள நிறுவனத்திற்கு வழங்கப்படும் எனவும் உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் உடன்படிக்கை ஒ…
-
- 1 reply
- 697 views
-
-
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் முறிகண்டில் உள்ள பழைய முறிகண்டி ஆலயத்தை இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று மோதி அடியோடு பிரட்டியிருந்தது. பன்னெடுங்காலமாக இருந்த தொன்மை மிகுந்த ஆலயத்தை பிரட்டிய செயற்பாடு இப்பகுதி மக்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. நாட்டில் இந்து ஆலயங்கள் பலவும் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகியமை, விக்கிரகங்கள் அழிப்பு என தொடர் சம்பவங்கள் இடம்பெற்று வந்த வேளை விபத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆனால் எதிர்பாராத விபத்தினாலேயே ஆலயத்தில் தமது வாகனம் மோதுண்டதாக வாகனச்சாரதி தெரிவித்தார். திருமுருகண்டிப் பிள்ளையார் ஆலயம் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. அதற்கு முன்பாக பழைய முறிகண்டியிலேயே இந்த ஆலயம் இருந்ததாகக் கூறப்படுகிற…
-
- 1 reply
- 409 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் புலிகளும் சிங்கள மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்புகோரவேண்டும் என்று தெரிவித்துள்ளார் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர். வெலிவேரிய தாக்குதல் சம்பவத்துக்கு மன்னிப்புகோரும் அரசு முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு மன்னிப்புகோரவில்லை என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே தேரர் மேற்கண்டவாறு கூறினார். "புலிகளிடமிருந்து மக்களை மீட்பதற்காகவே வன்னியில் இராணுவம் மனிதாபிமான போரை முன்னெடுத்தது.எனவே, முள்ளிவாய்க்கால் போருக்கும் வெலிவேரியா தாக்குதல் சம்பவத்துக்குமிடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இதைக்கூடப் புரிந்துகொள்ளமுடியாத நிலையிலேயே கூட்டமைப்பு …
-
- 0 replies
- 333 views
-
-
நாவற்குழியில் நேற்று முன்தினம் இரவு கைக்குண்டு வெடித்த இடத்திலிருந்து நேற்றுக்காலை வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்றைத்தாம் மீட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி பதில் நீதிவான் கணபதிப்பிள்ளை முன்னிலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு சமர்ப்பிக்கப்பட்டது. அதனைச் செயலிழக்க வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார். நாவற்குழியில் 300 வீட்டுத் திட்டத்தில் உள்ள விகாரை மீதே நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கைக்குண்டு ஒன்று வெடித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். அதன் போது விகாரை முன்பாகவுள்ள மண்டபத்தில் சில இடங்களில் சிறிது வெடிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் நிலைமையைப் பார்வையிட்டுச் சென்றனர். பின்னர் நேற்றுக் காலையும் அங்கு பொலிஸ…
-
- 0 replies
- 356 views
-
-
இந்திய மீனவர்களை துரித கதியில் விடுதலை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்து மீறி பிரவேசித்த இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை துரித கதியில் விடுதலை செய்வதற்கான சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைள வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை துரித கதியில் விடுதலை செய்யுமாறு கோரும் உரமை இந்தியாவிற்கு காணப்படுகின்றது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், உள்நாட்டில் பின்பற்றப்பட வேண்டிய சில சட்ட விதிகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என்பதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டுமேன தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட …
-
- 0 replies
- 309 views
-
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று காலை விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று முற்பகல் 10 மணிக்கு கந்தனுக்கு அரோஹரா, முருகனுக்கு அரோஹரா கோஷங்கள் ஆலயமெங்கும் பரவ, ஆலய மணிகள் அனைத்தும் ஓங்கி ஒலிக்க, நாதஸ்வர தவில் கான மழை பொழிய கொடியேற்றப் பெருந்திருவிழா இடம்பெற்றது. இன்றைய கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமான மஹோற்சவத் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளன. http://goldtamil.com/?p=6348
-
- 0 replies
- 695 views
-
-
79 வயது மதிக்கத்தக்க பிக்குவின் சடலமொன்று குருநாகலில் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கலத்துட்டுவாகம பூரணரஜ மஹா விஹாரையின் பின்னாலிலிருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கழுத்தில் வெட்டு காயங்கள் காணப்படுவதாக தெரிவித்த குருநாகல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=89695&category=TamilNews&language=tamil இந்த பிக்கு வெட்டி கொல்லும் அளவுக்கு என்னதான் அப்படி செய்திருப்பார் ...... ?
-
- 23 replies
- 1.4k views
-
-
கிழக்கு மாணாண ஆலயங்களில் ஒலிபரப்பப்பட்டு வந்த கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பாடல்களுக்கு இராணுவம் தடை விதித்துள்ளது. இது தொடர்பில் கொக்கட்டிச் சோலை தான்தோன்றீச்சரம் ஆலய நிர்வாகத்துக்கு இராணுவம் எச்சரிக்கை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கவிஞர் இரத்தினதுரைய 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, வன்னி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் பல பாடல்களுக்கு அவர் வரிகளை எழுதி இருந்தார். எனினும் தற்போது அவர் எங்கு உள்ளார் என்ற தகவல்கள் எவையும் தெரியவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அவர் தமிழ் நாட்டுக்கு அகதியாக சென்ற போது, கியு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் உண்…
-
- 0 replies
- 403 views
-
-
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கட்டாயமாக நாற்பது நாட்கள் கட்சிக்காக பணியாற்ற வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கண்டிப்பான கட்டளையிட்டுள்ளது. அண்மையில் சமூர்த்தி உத்தியோகர்தர்களுக்கு வடக்கில் நியமனம் வழங்கப்பட்டது. இவர்களின் நியமனங்கள் கட்சி அடிப்படையில் பங்கிடப்பட்டது. ஈபிடியிபின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் யாழ் மாவட்ட சுகந்திரக்கட்சி வேட்பாளர் அங்கயன் ஆகியோருக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நியமனம் பங்கிடப்பட்டது. அவர்கள் தமது கட்சிக்காக ஆதரவை அடிப்படையாகக் கொண்டு நியமனங்களை வழங்கியிருந்தனர். அத்துடன் நியமனங்கள் வழங்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்குரிய எதி…
-
- 1 reply
- 657 views
-
-
மீண்டும் கிரிஸ் மனிதன் பாணியில் மக்களை பணியவைக்கும் முயற்சியில் படையினர் – திருடர்களை கட்டுப்படுத்த முடியாது என கைவிரிக்கும் பாதுகாப்பு தரப்பினர் – கிளிநொச்சி இரத்தினபுரத்தில் தொடர்ச்சியாக திருடர்கள் மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். இதனால் மக்கள் பெரும் அச்சுறுத்தலான சூழ்நிலையில் நாட்களை நகர்த்தி வருவதாகத் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளனர். இரவு மட்டுமன்றி பகலிலும் திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அண்மையில் கிளிநொச்சி இரத்தினபுரத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையடிக்க முயற்சித்தனர். இன்றைய தினம் பட்டப்பகலில் சுற்றிவர வீடுகளில் ஆட்கள் இருந்த வேளையில் இரத்தினபுரம் 16 வீட்டுத் திட்டப்பகுதி…
-
- 1 reply
- 383 views
-
-
Facebook Twitter Google+ பகிர்க நண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக 'மாவை' சேனாதிராஜா இலங்கையில் மாகாண சபை என்பது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றும் கூறி வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியடுவதற்கான காரணத்தை ஞாயிறன்னு தெளிவுபடுத்தியது. வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையிலேயே போட்டியிடப் போவதாகத் தெரிவித்து, கடந்த 2008 ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்தலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது. இந்த நிலையில் இந்த மாகாண சபையில் கூட்டமைப்பு ஏன் போட்டியிடுகின்றது என்பது குறித்த விளக்கமளிக்க்பட்டிருக்கின்றது.ஆயினும் தற்போது, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு, வடமாகாணத்திற்குத் தனியாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் …
-
- 2 replies
- 427 views
-
-
19 வயது பெண் ஒருவரை பயன்படுத்தி நிர்வாண வீடியோ காட்சிகளை படமெடுத்து இருவட்டில் உள்ளடக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் பௌத்த விகாரையின் விகாராதிபதி பிக்கு ஒருவரை விசாரணை செய்வதற்காக கைது செய்துள்ளளாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவன் மனைவியின் காட்சிகளே இந்த இருவட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பிக்கு தன்னியக்க வீடியோக் கெமரா ஒன்றின் மூலமே இந்தக் காட்சிகளை எடுத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://goldtamil.com/?p=6278
-
- 4 replies
- 1k views
-
-
இந்த வருட யுத்தம் முடிந்த பின்னர் செய்வதாக சொன்ன உறுதி மொழிகளை செய்து காட்டுங்கள் என சொன்ன நவநீதன் பிள்ளைக்கு எதிராக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்டி தந்த இந்நாட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு, மத தீவிரவாதிகள் தந்துள்ள இந்த வருட ரம்ஸான் பரிசுதான், கிராண்ட்பாஸ் இஸ்லாமிய பள்ளிவாசலின்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/archives/27391
-
- 3 replies
- 497 views
-
-
"வெலிவேரியாவில் மூன்று உயிர்கள் இராணுவத்தினரால் காவுகொள்ளப்பட்டதற்கு உடனடியாகவே பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ள அரசு, முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட போரை நடத்தியதற்காக இதுவரை மன்னிப்புக் கோரவில்லை. இதிலிருந்தே தமிழர்களுக்கு இந்நாட்டில் நியாயம் கிடைக்காது என்பதை சர்வதேச சமூகம் அறிந்துகொள்ளவேண்டும்." என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வெலிவேரிய சிங்கள மக்கள்விவகாரம்; முள்ளிவாய்க்காலோ தமிழ் மக்கள் விவகாரம் என்றபடியால்தான் அரசு இவ்வாறு நடந்துகொண்டுள்ளது என்றும் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சுத்தமான குடிதண்ணீருக்காக போராட்டம் நடத்திய வெலிவேரிய மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியமைக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்ச…
-
- 1 reply
- 279 views
-
-
பழைய பள்ளிவாசலை உடைக்கும் நகர அபிவிருத்தி சபையின் திட்டம் கைவிடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது ( படம்: தாக்குதலுக்கு உள்ளான புதிய பள்ளிவாசல்) இலங்கையின் தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றவும் அதனருகில் உள்ள பழைய பள்ளிவாசலை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பௌத்த சாசனம் மற்றும் மதவிவகார அமைச்சில் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பழைய பள்ளிவாசலை அகற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்கனவே …
-
- 1 reply
- 587 views
-
-
மன்னார் விடத்தல் தீவைச் சேர்ந்த யுவதி ஒருவரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதியம் முதல் காணவில்லை என அவரது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளார். மன்னார் விடத்தல் தீவைச்சேர்ந்த ஏ.சுகன்னியா (வயது-17) என்ற யுவதியே காணாமல் பேயுள்ளார். குறித்த யுவதி தனது உறவினர்களுடன் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த நிலையில், மன்னார் விடத்தல் தீவில் உள்ள தனது பெற்றோரிடம் வருவதற்காக நேற்று முந்தினம் புதன் கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரோடு குறித்த யுவதி மன்னார் வருகை தந்துள்ளார். மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் மதியல் 1 மணியளவில் நின்ற போது அழைத்து வந்த உறவினர் கடைக்குச் சென்று விட்டு மீண்டும் அந்த யுவதி நின்ற இடத்திற்கு சென்ற போது யுவதியும், அவர் வைத்திருந்த உடுப்பு பையுடன் …
-
- 0 replies
- 457 views
-
-
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளை தங்கள் திணைக்களத்தில் இணைத்து அங்கத்துவம் வழங்கி அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வானது வாழைச்சேனை கல்குடாவிலுள்ள கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை திணைக்கள அலுவலகத்தில் கிழக்கு மாகாணத்திற்கான பணிப்பாளர் கந்தசாமி கிருஷாந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவிப் பணிப்பாளர் சத்தியசீலன் ரமேஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சாரதிகள் கலந்து கொண்டு அங்கத்துத்தினை பெற்றுக் கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரும் உல்லாச பயணிகளுக்கு திறம்பட பல இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்காக சாரதிகளை சுற்றுலாத் திணைக்களத்தினு…
-
- 0 replies
- 332 views
-
-
குளோபல் தமிழ் செய்தியாளர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேரூந்து ஒன்றில் ஒலித்த சிங்களப்பாடல்களை நிறுத்துமாறு பயணிகள் கேட்டபோது பாடலை நிறுத்த பேருந்து நடத்துனர் மறுத்ததும் சிறிது நேரம் முறுகல் நிலையும் குழப்பமும் ஏற்பட்டது. குறித்த பேரூந்தில் சிங்கள இசைக்கச்சேரி வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டன. சமார் 11 மணியை தாண்டிய பொழுது அவற்றை நிறுத்தும் அல்லது தமிழ்ப் பாடல்களைப் போடவும் என்று பயணிகள் கேட்டனர். தாம் போடும் பாடல்களை மட்டுமே பார்க்க முடியும் என்றும் பேரூந்தில் விடுமுறையில் சென்ற இராணுவத்தினர் ஒரு சிலர் இருப்பதாகவும் அவர்களுக்காகவே இந்தப் பாடல்களை ஒளிபரப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பல தடவைகள் பயணிகள் கேட்டபொழுதும் மறுத்த பேரூந்து நடத்துனர் தொடர்ந்து சிங…
-
- 15 replies
- 1.2k views
-
-
ஒரே தேசம், ஒரே மக்கள் என்ற ஜனாதிபதியின் கோஷம் உண்மையானால் தமிழரின் நில உரிமை, தொழில் உரிமை என்பன அங்கீகரிக்கப்படவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற, வடக்கு, கிழக்கில் தற்போது இடம்பெற்றுவரும் காணி சுவீகரிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு: 30 ஆண்டு கால போர்ச்சூழல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது வெற்றிவிழாவின் போது ஜனாதிபதி ஒரே தேசம், ஒரே மக்கள் எனப் பிரகடனம் செய்தார். நாமும் உரிமையுடன் கூடிய இந்த நாட்டின் அபி…
-
- 3 replies
- 432 views
-
-
முஸ்லீம்கள் கிழக்கு மாகாணத்தில் சைவ கோவல்களை உடைத்து கொள்ளையிட்டு வரும் அதேவேளை தென்னிலங்கையில் பள்ளிவாசல்களை புத்த பிக்குகளும் சிங்களவர்களும் உடைத்து வருகின்றனர். இதன் உச்சக்கட்டமாக கொழும்பு கிறாண்பாஸ் பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்களில் எழுப்படும் சத்தத்தால் ஆத்திரம் அடைந்த சிங்கள மக்கள் புத்த பிக்குகளிடம் முறையிட்டதை அடுத்தே புத்த பிக்குகள் பள்ளிவாசல்களை உடைத்து வருகின்றனர் என சிங்கள தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த பள்ளிவாசல் உடைப்பு மகிந்த மற்றும் கோத்தாவின் அனுசரணையுடனேயே நடத்தப்பட்டு வருகிறது. - http://www.thinakkathir.com/?p=51705#sthash.bn777zsB.dpuf
-
- 3 replies
- 636 views
-
-
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக தகவலுக்கு http://tamilworldtoday.com/?p=27345
-
- 1 reply
- 479 views
-
-
இலங்கையின் தலைநகர் கொழும்பின் கிராண்ட் பாஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றை நேற்று பௌத்த கும்பல் ஒன்று தாக்கியதை அடுத்து அப்பகுதியில் மதக் கலவரம் வெடித்திருந்த நிலையில் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் . ஞாயிற்றுக்கிழமை போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது என்றாலும் பதற்றங்கள் நீடிக்கின்றன.இதனிடையே முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் மதப் பிரதிநிதிகள் போன்றோர் பௌத்த சாசன அமைச்சகத்தில் இவ்விவகாரம் தொடர்பில் விவாதித்துவருகின்றனர். அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ரிசாட் பதியுதீன், துணை அமைச்சர் ஃபைசர் முஸ்தஃபா போன்றோர் சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்டுள்ளனர். அமெரிக்க தூதரகம் கண்டனம் …
-
- 0 replies
- 309 views
-