Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முஸ்லிம் அமைச்சர்-பிரதி அமைச்சர்கள், எம்பிக்கள் அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும்! பேரினவாத சக்திகள் தொடர்ச்சியாக பள்ளிவாசல்களைத் தாக்கி முஸ்லிம்கள் மீது காடைத்தனங்களை கட்டவிழ்த்து விட்டுள்ள போதிலும் அராசங்கம்.... அவற்றைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்ற இச்சூழ்நிலையில் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தமது அமைச்சுப் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு சமூகத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் என்பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதலைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெ…

  2. வெலிவேரியவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தனர். இந்த சம்பவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் சிசிலி புயோலி தெரிவித்துள்ளார். சுத்தமான குடிநீரை வழங்க வேண்டுமெனக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நவனீதம்பிள்ளை இந்த மாதத்தில் இலங்கைக்கு விஜய…

    • 1 reply
    • 254 views
  3. பாடசாலை மாணவர்கள் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பாக்கு நுகரும் கலாசாரம் ஒன்றை ஏற்படுத்தவென தீவிர முயற்சிகள் திரைமறைவில் திட்டமிட்டமுறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் வாய்கட்டி மௌனமாக இருப்பது வடபகுதி மக்கள் மத்தியில் அதிக விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. இனந்தெரியாத கும்பல் ஒன்றின் ஏற்பாட்டினால் போதை கலந்த பாக்குப் பொருள்கள் பிரமிட் வடிவத்தில் மாணவர்களைச் சென்றடைகின்றதாக அறியமுடிகின்றது. இவ்வாறான பொருள்கள் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய மாணவர்களை இலக்கு வைத்து இலவசமாக விநியோகிக்கப்படுவதாகவும் மாணவர்கள் அறிந்தும் அறியாமலும் அவற்றை வாங்கி உட்கொண்ட பின்னர் அவஸ்தைப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இடர்வரினும் எளிதினில் …

    • 3 replies
    • 556 views
  4. வெலிவேரிய நீரில் நச்சுத்தன்மை காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெலிவேரிய தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள நீர் மற்றும் மண்ணில் நச்சுப் பதார்த்தம் உள்ளடங்கியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டள்ளது. பூவியியல் மற்றும் கனிமவள ஆய்வு மையத்தினால் குறித்த பிரதேச நீர் மற்றும் மண் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீர் மற்றும் மண் வகைகளில் ஒரு வகை நச்சுப் பதார்த்தம் காணப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையை அண்டிய 25 சதுர கிலோ மீற்றர் பரப்பிலும், தொழிற்சாலைக்கு வெளியில் 35 சதுர கிலோ மீற்றர் பரப்பிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மண் மற்றும் நீரில் அமிலத்தின் செறிவு அதிகாமாகக் காணப்படுவதுடன் ஐட்ரஜன் மற்றும் பி.எச் பெறுமானங்கள் குறைவாககக் காணப்படுவதாக பூவியியல் மற்…

    • 1 reply
    • 483 views
  5. வெலிவேரிய ரத்துபஸ்வல ஆர்ப்பாட்டத்தை அடக்க இராணுவத்தை வரவழைத்த காவற்துறை அதிகாரி யார் என்பது மர்மமாக இருப்பதாக தெரியவருகிறது. அவசரகாலச் சட்டம் அமுலில் இல்லாத நிலையில், சிவில் பிரச்சினை ஒன்றிக்காக இராணுவத்தை அழைக்க வேண்டுமாயின், நீதவான், அரசாங்க அதிபர், காவற்துறை அத்தியட்சகர் உட்;பட பிரதேசத்தின் உயர் அதிகாரிகளின் அனுமதியை பெற்று கொள்ள வேண்டும். இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தினரை அங்கு வரவழைத்து, ஆர்ப்பாட்டத்தை அடக்குமாறு கோரிக்கை விடுத்த அதிகாரி யார் என்பது தெரியாதுள்ளதாக கூறப்படுகிறது. எந்த அதிகாரியும் தாமே இராணுவத்தை அழைத்ததாக ஏற்றுக்கொள்ளவில்iலை என்பதும் குறிப்பிடதக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/artic…

    • 1 reply
    • 245 views
  6. வடக்கு மாகாண சபை தேர்தல் மற்றும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு என்பன நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில் இந்தியா, இலங்கைக்கு எதிரான தனது அழுத்தங்களை அதிகரிக்க தயாராகி வருகிறது. இந்தியா, இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி இந்திய அரசியல் கட்சிகள் அண்மையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். வடக்கு மாகாண சபை தேர்தல் மற்றும் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நெருங்கி வரும் நேரத்தில் இந்தியாவில் இந்த ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கலாம் என இந்திய அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில், இலங்கைக்கு எதிராக இந்தியா கடும் நிலைப்பாடுகளை கடைபிடிக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.அடுத்த வரும் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நில…

    • 2 replies
    • 869 views
  7. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95124/language/ta-IN/article.aspx

  8. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வொஷிங்டனுக்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தற்போது கனடாவிற்கு விஜயம் செய்துள்ளனர். கனேடிய விஜயத்தை முடித்துக் கொண்டு அவர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். நாட்டின் அரசியல் சூழ்நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கனடாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கு தேர்தல்கள் மற்றும் ஏனைய நிலைமைகள் குறித்து சம்பந்தன் தெளிவுபடு…

  9. அமைச்சர் பசீர் சேகுதாவூத்திற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் அனுமதியை கோராது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியை சேகுதாவூத் ஏற்றுக் கொண்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். கட்சியின் அனுமதியை பெற்றுக் கொள்ளாது பதவிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இது தொடர்பில் விசாரணைகள் நடத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, கட்சியின் கொள்கைக்கு புறம்பான வகையில் தாம் செயற்படவில்லை என பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articl…

  10. காத்தான்குடிக்கு தனிச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்ற ஐய்யப்பாடு மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது 09.08.2013ம் திகதி பெருநாள் தினத்தில் காத்தான்குடியிலும் அண்டிய ஆரைய்பதி மட்டக்களப்பு பகுதிகளிலும் முஸ்லீம்கள் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் இருவர் மூவர் சகிதம் பயணித்தனர் தமிழர்களின் பண்டிகைக்காலங்களில் அனுமதிகேட்டால் இல்லை என்று துரத்திப்பிடிக்கும சட்டம் இங்கு !? http://www.arayampathi.com/2013/08/blog-post_9.html

    • 5 replies
    • 710 views
  11. யாழ்ப்பாணம், நாவற்குழி விஹாரையின் மீது இனந்தெரியாத நபர்கள் இன்றிரவு கைக்குண்டுவீச்சியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே கைக்குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/78387-2013-08-10-17-06-38.html

    • 13 replies
    • 924 views
  12. எமக்கு சிங்கப்பூரும் வேண்டாம் யப்பானும் வேண்டாம் யாழ்ப்பாணம் தான் வேண்டும். ஆயிரம் தலை தாங்கிய அபூர்வ சிந்தாமணிக்கு ஒரு பகிரங்க மடல். கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே! தங்களது நேற்றைய அறிக்கையினை கேட்டு யாழ்ப்பான மக்கள் மட்டுமல்ல வட மாகாண முழு தமிழ் மக்களுமே அதிர்ந்து போயுள்ளனர். உங்களது அறிக்கை தமிழ் மக்கள்மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது 'குட்டக்குட்ட குனிபவனும் மடயன் குனியக்குனிய குட்டுபவனும் மடயன்' இதில் நீங்கள் எந்தரகம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை.'ஆலை இல்லா ஊருக்க இலுப்பம் பூ சக்கரை' என்பது போல் இருக்கிறது உங்கள் நடவடிக்கை. இனி விடயத்துக்கு வருவோம். யாழ்ப்பாணத்தை குட்டி சிங்கப்பூர் ஆக…

    • 1 reply
    • 712 views
  13. சுற்றுலா விசாவில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் இந்திய புலனாய்வாளர்கள் குழுவினர் வடக்கு, கிழக்கிற்கு சென்று தகவல்களை திரட்டி புலனாய்வு பணிகளில் ஈடுபட்டு வருவதாக சிறிலங்கா புலனாய்வு பிரிவினர் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் இருந்து சென்று வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மக்கள் மத்தியில் நடமாடும் இந்த நபர்கள் பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளிட்ட தகவல்களை மக்களிடம் இருந்து பெற்று வருவதாகவும் குறிப்பிட்டள்ள சிறீலங்கா புலனாய்வு பிரிவினர் இந்த பிரதேசங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புவதற்கான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்ற சந்தேகம் தமக்கு எற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர் - http://www.thinakkathir.com/?p=51703#sthash.eh8AlhnT.dpuf

    • 2 replies
    • 453 views
  14. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதன்பிள்ளை இலங்கை குறித்து சர்வதேச விசாரணை குறித்து ஆராய்வதற்காகவே இலங்கைக்கு விஜயம் செய்வதாக ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க.... http://tamilworldtoday.com/?p=27216

  15. முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களில் பலபெண்களை ஏமாற்றி மேசடியில் ஈடுபட்ட நபர்ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள். முல்லைத்தீவு பகுதியில் வழக்கொன்றில் பலகாலமாக தேடப்பட்டு வந்த குறித்த நபரினை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் பல பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி அவர்களிடம் பெற்ற பணத்தினை செலுத்த மறுத்து வந்ததாகவும் இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையில் முறையிட்டுள்ளார்கள். இதனையடுத்து காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார் குறித்த நபரை எதிர்வரும் 21ஆம் நாள்வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. http://www.sankathi24.com/news/32221/64//d,fullart.aspx

  16. சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய வெலிவேரிய, ரதுபஸ்வல பொதுமக்கள் தாக்கப்பட்டதற்காக சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பொதுமன்னிப்புக் கோரியுள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிர்களையும், உடமைகளை இழந்தவர்களுக்கும் அவர் ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார். தமது கடமையைச் செய்ய முயன்ற பல ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட அசௌகரியங்கள் துரதிஸ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காப் படையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்களால் மன்னிக்கப்பட முடியாதது என்றும் அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், எந்த வகையினும் இத்தகைய நடவடிக்கையைத் தான் ஏற்றுக் கொள்ளவில…

  17. கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்திற்கு நாளை காலை 7 மணி வரை பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பிரதேசத்தில் அனைவரையும் வீடுகளுக்குள் சென்று அமைதியைப் பேணுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலதிக தகவல்களுக்கு.. http://tamilworldtoday.com/?p=27293

    • 0 replies
    • 416 views
  18. மட்டக்களப்பு – தாந்தாமலை கொல்லர்மலை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டதாக முனைக்காட்டை சேர்ந்த தமிழரான ஆசிரியர் ஒருவரும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினை சேர்ந்த நான்கு சிங்களவர்கள் உட்பட ஏழு பேரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று (08) காலை தாந்தாமலை பிரசேத்துக்குட்பட்ட கொல்லர்மலை பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் எனவும் ஏனையவர்களில் நால்வர் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்த சிங்களவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். தனது தாயின் தாயார் புதைத்து வைத்த தங்க நகைகளை மீட்கவே தாங்கள் இப்பகுதிக்கு வந்ததாக கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணையின்போது தெரி…

    • 1 reply
    • 684 views
  19. அமெரிக்கா செல்லவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனேடியக் கிளை நாளை ஒழுங்கு செய்துள்ள ஒன்றுகூடலில், இரா.சம்பந்தன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இதையடுத்து எதிர்வரும் 12ம் திகதி அமெரிக்கா செல்லவுள்ள அவர்கள் வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளை சந்தித்து வடக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்து விளக்கமளிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும், இதுதொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளிய…

    • 2 replies
    • 555 views
  20. -எஸ்.கே.பிரசாத் எமது கடற்பிரதேசத்தில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கடற்படையினருக்கு அமைச்சர் ராஜித சேனாரத்தன உத்திரவிட்டுள்ளார். இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர், மாதகல் பகுதிக்குச் சென்று அங்குள்ள மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது, குறித்த பகுதியில் இந்திய இழுவைப் படகுகள் மற்றும் சாதாரண படகுகளில் பெருமளவான இந்திய மீனவர்கள் வந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கையை கடற்படையினரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று மாதகல் கடற்தொழிலாளர்கள் - அமைச்சரிடம் தெரிவித்தனர். இது தொடர்பில் குறித்த பிரதேச கட…

    • 1 reply
    • 377 views
  21. வெள்ளவத்தை, மயூராபதி பத்ரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ கலந்துகொண்டிருப்பதை படங்களில் காணலாம்.( படங்கள்: ஜனாதிபதி பாரியார் அலுவலக ஊடகப்பிரிவு) http://tamil.dailymirror.lk/--main/78357-2013-08-10-09-52-45.html

    • 1 reply
    • 393 views
  22. -நவரத்தினம் கபில்நாத் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் கண்காணிக்கப்படுவதற்கு வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களே காரணம் என்று ஈ.பி.டி.பி கட்சியின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் சிவன் சிவகுமார் தெரிவித்தார். வட மாகாணசபையை அரச தரப்பினர் கைப்பற்றினால் சிங்கள குடியேற்றங்கள் தள்ளி வைக்கப்படும் என்பதுடன் பொலிஸ் காணி அதிகாரங்களையும் எடுத்துக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வட மகாணசபை தோதல் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கத்தை ஆதரித்து நிற்கும் கட்சிகளை மக்கள் ஆதரித்தால் மக்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் …

    • 1 reply
    • 397 views
  23. இந்தியாவில் கற்றுவரும் மட்டக்களப்பை சேர்ந்த இளம் இயக்குனர் கோவர்த்தனின் இரண்டாவது குறும்படமாக வெளிவரும் CHECK MATE இன் வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் பிற்பகல் 04.00 மணிக்கு இடம்பெறவுள்ளது இடம்பெறவுள்ளது. இந்தியாவின் சினிமாத்துறையில் தனக்கென ஒரு பாதையை வகுத்து அதில் பல வெற்றிகளை குவித்த மட்டக்களப்பை சேர்ந்தவரும் இந்தியாவின் முன்னணி இயக்குனருமான பாலுமகேந்திராவின் பட்டறையில் கோவர்த்தன் இயக்குனர் பயிற்சியை சிறந்த முறையில் பெற்றுள்ளார். இதன் வெளிப்பாடாக கோவர்த்தன் வெளியிட்ட முதலாவது குநற்திரைப்படமான "நானும் ஒரு தாய்" வெளியீடு இந்தியாவில் ஏழு விருதுகளையும் இலங்கையில் தேசிய ரீதியில் விருதையும் பெற்றுக்கொடுத்துள்ளது. மட்டக்க…

  24. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் ஓர் சுதந்திர மனிதர் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுதந்திரமாக எந்தவொரு இடத்திற்கும் அவர் செல்ல முடியும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குமரன் பத்மநாதன் அரசாங்க வீடொன்றில் தங்கவில்லை எனவும் அவர் கிளிநொச்சி, மதவாச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கு சுதந்திரமாக செல்வதாகவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, குமரன் பத்மநாதன் போன்றவர்களை அரசாங்கம் மன்னரைப் போன்று நடாத்தும் அதேவேளை, சாதாரண புலி உறுப்பினர்களை கடுமையாக நடாத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல குற்றம் சுமத்தியுள்ளார். குமரன் பத்மநாதனுடன் பிரச்சினையிருந்தால் அ…

    • 7 replies
    • 780 views
  25. விடுதலைப்புலிகளின் மட்டு -அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த கௌசல்யனின் முகாம் அமைந்திருந்ததாக கூறப்படும் பகுதியில் புதையில் தோண்டிய எட்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய நால்வர் விசாரணைகளுக்காகத் தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குழுவினா மடு பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஷ்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளரான சுனேத்திர நலிந்த சில்வா, தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏரந்த மாரம்ப சில்வா, பெண் உதவியாளர் லசித்தா மாலி ரத்நாயக்க, சாரதி அரு…

    • 0 replies
    • 500 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.