ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜ.தே.கவுடனோ பொதுசன ஜக்கிய மக்கள் முன்னணியுடனோ இணைந்து கொள்ளப்போவதில்லையென மூத்த ஊடகவியலாளரான வித்தியாதரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் சார்பினில் முதலமைச்சர் வேட்பாளராக வடக்கு தேர்தலில் போட்டியிடப்போவதாக வித்தியாதரன் கூறிவந்திருந்த நிலையினில் இறுதி நேரத்தினில் அவரது பெயரும் வெட்டப்பட்டிருந்தது. இந்நிலையினில் ஊடகவியலாளரான வித்தியாதரன் ஜ.தே.கவுடன் இணைந்து போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளிவந்திருந்த நிலையினில் அதனை மறுதலித்துள்ள அவர் எனினும் ஆளும் தரப்பு மற்றும் ஜ.தே.க தரப்புகளினிலிருந்து தமக்கு அழைப்புக்கள் வந்தனை ஏற்றுக்கொண்டார்.எனினும் அவ்வழைப்புக்கள் நட்பு ரீதியாகவே வந்திருந்ததாக கூறிய அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அத்தரப்புக்களுடன் இணைந…
-
- 5 replies
- 718 views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நாமல் ராஜபக்சவின் புளூ பிரிகேட் (நீலப் படை) எனப்படும் நாளைய இளைஞர் அமைப்பு யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியில் இறங்கியுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த அன்ரனி ரங்கதுசார என்பவரின் தலைமையில் வேட்பாளர் பட்டியல் இன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் போட்டியிடும் நிலையில், சிறிலங்கா அதிபரின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் தனது நாளைய இளைஞர் அமைப்பை போட்டியில் இறக்கி விட்டுள்ளார். யாழ்.மாவட்டத்தில், அதிகளவு சுயேட்சைக் குழுக்களைக் களமிறக்கி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கும் வாக்குகளை சிதைக்க அரசாங்கத் தரப்பு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாகவே நாமல் ராஜபக…
-
- 0 replies
- 446 views
-
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, விடுதலைப் புலிகளால் இரணைமடுவில் அமைக்கப்பட்ட ஓடுபாதை வழியாகவே வன்னிக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வரும் ஓகஸ்ட் 25ம் நாள் தொடக்கம், 31ம் நாள் வரை சிறிலங்காவில் உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இவரது பாதுகாப்பு மற்றும் பயண ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய, ஐ,நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் தலைமைப் பாதுகாப்பு ஆலோசகர் ஆப்ரஹாம் மதாய் தலைமையிலான குழுவொன்று கடந்தவாரம் சிறிலங்கா வந்திருந்தது. நவநீதம்பிள்ளை தலைமையிலான குழுவினர், தனியார் விமானம் மூலமே, சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்வதற்கே ஐ.நா அதிகாரிகள் விருப்பம் கொ…
-
- 0 replies
- 450 views
-
-
-சுமித்தி தங்கராசா வடமாகாண சபை தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு 'நாளைய இளைஞர் அமைப்பு' வேட்பு மனுவினை இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனர். நாளைய இளைஞர் அமைப்பு சுயேட்சைக்குழுவாகவே போட்டியிடவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அணியினரே யாழ். மாவட்டத்pல் உள்ள இளைஞர், யுவுதிகள் சார்பாக போட்டியிடவுள்ளனர். சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளரான அன்டனி ரங்கதுஷhர யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் சுயேட்சைக்குழுவிற்கான வேட்பு மனுவை கையளித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் ஏன் கிடைக்கவில்லை என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி பதிலளிக்கைய…
-
- 0 replies
- 433 views
-
-
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கனேடிய பிரதமர் ஸ்டிபன் கார்பர் கலந்துகொள்வார் என இலங்கை அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெரிடே பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை இன்று சந்தித்துள்ளார். இதன்போதே வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொதுநலவாய அமைப்பிலுள்ள 54 நாடுகளில் 85 சதவீதமானவை தமது பங்குபற்றலை உறுதிப்பத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-…
-
- 0 replies
- 300 views
-
-
இலங்கையின் சட்டம் காட்டுச் சட்டமாக உருவாகியுள்ளமை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மற்றும் அமைச்சர் ஜனக்கவின் மகன் மீதான தாக்குதல்களில் இருந்து வெளிப்படையாக புலனாவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா நாட்டின் பிரதான நகரில் நேற்று பகல் தாக்கப்பட்டமையை பார்க்கும்போது சாதாரண பொதுமக்கள் மீது மேற்கெள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் கதைப்பாரற்ற நிலையுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (30) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதேவேளை பண பற்றாக்குறை காரணமாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி பெரும் பண பிரச்சினைக்கு உட்பட்டுள்ளன. அரசு பல்வேறு தேவை…
-
- 0 replies
- 289 views
-
-
-நவரத்தினம் கபில்நாத் சிறைச்சாலைகளில் தமிழ் இளைஞர், யுவதிகள் பல வருடங்களாக வாடுகின்றபோது கருணா அம்மான் மற்றும் கே.பி. க்கு பாலூட்டி வளர்க்கின்றனர். தயா மாஸ்டரை தாலாட்டுகின்றார்கள். தமிழினிக்கு விடுதலை. இவர்களால் வழிநடத்தப்பட்டு பிடித்துச் செல்லப்பட்டு புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டவர்கள் இன்றும் சிறையில் வாடுகின்றனர் என்று ஜே.வி.பி. யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதிலும் 89 ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகள் வாழ்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார். 'தேசிய ஒற்றுமைக்காக ஜே.வி.பி.யை வெற்றி பெறச்செய்வோம்' எனும் க…
-
- 1 reply
- 395 views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளராக, ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகருமான சின்னத்துரை தவராசா போட்டியிடவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், ஈபிடிபிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஈபிடிபி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விபரமும் வெளிவந்துள்ளது. யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கமல், யாழ்.மாவட்ட அமைப்பாளர் ஐ.சிறிரங்கேஸ்வரன், வடமராட்சி அமைப்பாளர் எஸ்.பாலகிருஸ்ணன், அலெக்சான்டர் சூசைமுத்து (சாள்ஸ்), சுந்தரம் டிவகலாலா, ஆறுதல் நிறுவன இணைப்பாளர்…
-
- 0 replies
- 283 views
-
-
விஜித ரோஹண விஜிதமுனியை நீங்கள் மறந்திருக்கலாம். இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்காக இலங்கை சென்ற ராஜீவ்காந்தியை தாக்கிய கடற்படை வீரர். அந்த தாக்குதலுக்குப் பின் இருவேறு விதமாய் அவர் நினைவூகூரப்பட்டார். ஒரு பக்கம் அவரை கைது செய்து சிறையிலடைத்தார்கள். ஆனால் தேசிய வெறியர்களால் ஒரு தேசிய நாயகராக சிங்கள மக்களிடம் மேன்மைப்படுத்தப்பட்டார். சிங்கள மக்களிடம் நிலவும் இந்திய வெறுப்பின் அடையாளமாக நிலை நிறுத்தப்படும் விஜிதா ரோஹண இன்று வரை ராஜீவ்காந்தியை தாக்கியதற்காக வருந்தவில்லை என்பதோடு இச்செயலுக்காக மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறார். தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு என்று இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்வதற்காக ராஜீவ் காந்தி 1987-ம் ஆண்டு இலங்கை சென்றிருந்தார். இந்த ஒப்பந்தத்தை சிங்களர்க…
-
- 0 replies
- 509 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரனுடன் தேவை ஏற்படின் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் விக்னேஸ்வரனது கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் இன்று (30) அலரி மாளிகையில் ஜனாதிபதியிடம் கேள்வினொன்றை முன்வைத்தார். அதற்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது மட்டும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார். அதிக விருப்பு…
-
- 0 replies
- 351 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு வேட்பாளர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்! [Tuesday, 2013-07-30 10:43:27] வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட, வேட்பாளர் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு வேட்பாளர்கள் நேற்று சிறிலங்கா இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட வேட்பாளர்களான சாவகச்சேரியை சேர்ந்த சட்டவாளர் சயந்தன் மற்றும் எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற சிறிலங்கா படையினர், அவர்களின் அரசியல் செயற்பாடுகள் குறித்து நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மேலும் தெரிவிக்கையில்: இது ஒரு தே…
-
- 0 replies
- 704 views
-
-
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் கிடையாது என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டமோ அல்லது மாகாணசபை முறைமையோ தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வாக அமையாது என்பதே கட்சியின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் மாகாணசபைகளின் அதிகாரங்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுனர் அல்லது அரசாங்கத்திடமே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் மெய்யான அதிகாரப் பகிர்வினை வழங்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் தி…
-
- 5 replies
- 541 views
-
-
மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேசத்தின் கெவிலியாமடு பகுதியில் சிங்களவர்கள் தொடர்ந்து அத்துமீறிக் குடியேறி வருவதாகவும் இதனை உடன் தடுத்து நிறுத்துமாறும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பொன். செல்வராசா மாவட்ட அரசாங்க அதிபரைக் கேட்டுள்ளார். அம்பாறை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கெவிலியாமடு கிராமத்தில் ஏற்கனவே 227 சிங்களக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதேபோன்று புழுகுணா கிராமத்தில் 50 சிங்களக் குடும்பங்கள் உள்ளனர். இவற்றுக்கும் மேலாக தற்போது அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் அத்துமீறி பிரவேசித்து வாழ்கின்றனர். இவ்வாறு அத்துமீறிக் குடியேறிய நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள குடும்பங்களுக்கு அங்கு வாழ்வதற்கான வாக்காளர் இடாப்பு பதிவோ வேறு எதுவுமோ இல்லை. இதேவேள…
-
- 0 replies
- 346 views
-
-
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் வன்முறை முறைப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலதிக தகவல்களுக்கு..http://tamilworldtoday.com/?p=25122
-
- 0 replies
- 335 views
-
-
ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரலாம். அதற்கு இடையில் ஆனால், ''வாயை''த் திறக்கக்கூடாது. அதேபோன்று ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இலங்கை தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை வழங்கவும் அவருக்கு அதிகாரம் கிடையாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=25127
-
- 3 replies
- 459 views
-
-
-மொஹொமட் ஆஸிக் அரசியல் அமைப்பிலிருந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை அகற்றகோறி கண்டி, ஸ்ரீதலதா மாளிகையின் முன் சில பௌத்த அமைப்புக்கள் அமைதிப் பிராத்தனை (அதிஷ்டான பூஜா) ஒன்றை நேற்று திங்கட்கிழமை நடாத்தினர். http://tamil.dailymirror.lk/--main/76863-13-.html
-
- 1 reply
- 353 views
-
-
-சுபுன் டயஸ் வெற்றிலைக்கேணி 55 ஆவது படைப்பிரிவினால் நடத்தப்பட்ட தமிழ்மொழி பயிற்சி நெறியை 3 ஆவது தொகுதி படைவீரர்கள் பூர்த்தி செய்துள்ளனர். தமது கடமையை சிறப்பாக செய்யவும் பொதுமக்களுடன் நல்லுறவை வளர்க்கவும் இராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட இதை பயிற்சி திட்டத்தினால் 55 படைப்பிரிவு தலைமையகத்திலுள்ள 100 க்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் நன்மையடைந்துள்ளனர். இந்த மூன்றாவது தொகுதி இராணுவ வீரர்கள் தமது தமிழ்மொழித்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கலைநிகழ்வையும் நடத்தினர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/76859---3----.html
-
- 0 replies
- 545 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி ஆனந்தி எழிலன் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வெளியிட்ட பட்டியலில் ஆனந்தி எழிலனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். இவரது கணவரான எழிலன் இறுதியுத்தத்தின் பொழுது படைத்தரப்பிடம் சரணடைந்தார். தனது முன்னிலையிலேயே தனது கணவர் சரணடைந்ததாகவும் அவரை படையினரே அழைத்துச் சென்றதாகவும் ஆனந்தி நல்லிணக்க ஆனைக்குழுவின் முன்னிலையில் சாட்யளித்தார். தனது கணவர் உயிருடன் உள்ளார் என்றும் அவரை விடுவிக்க வேண்டும் என்றும் ஆனந்தி தொடர்ச்சியாகக் கோரி வந்தார். சரணடைந்த தனது கணவரையும் அவரைப…
-
- 0 replies
- 1k views
-
-
திருகோணமலையில் வெடிபொருட்களுடன் மூன்று பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதி சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கர வண்டியில் குறித்த நபர்கள் இந்த வெடிபொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 30 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. எராகண்டி மற்றும் இழுப்பைக்குளம் ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் உப்புவெளி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94608/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 473 views
-
-
-றிப்தி அலி 13ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும் என ஜப்பானின் உள்நாட்டு அலுவல்கள், தொடர்பாடல் அமைச்சர் யொஷpத்தகா ஷpன்டோ தெரிவித்தார். இது ஒரு நாட்டின் அரசியலமைப்பில் உள்ள விடயமாகும். இதனால் குறித்த நாடே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். எனினும் இந்த சட்டமூலம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். கலந்துரையாடல்கள் அமைச்சரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ இடம்பெற வேண்டும் என ஜப்பானிய அமைச்சர் குறிப்பிட்டார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் உள்நாட்டு அலுவல்கள், தொடர்பாடல் அமைச்சர் யொஷpத்தகா ஷpன்டோ, கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற…
-
- 3 replies
- 418 views
-
-
-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா சுதந்திரக்கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்கள் மேற்கொண்ட மறியல் போராட்டத்தின் போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த எம்.எம்.சீராஸ் என்பவர் வேட்பாளர் பட்டியிலில் இடம்பெறாததையடுத்தே இந்த மறியல் போராட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் இளைஞர் ஒருவர் 'சிராஸ் அண்ணனை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக்கொள்ளாவிட்டால் தீக்குளிப்பேன்' என்று சொல்லி அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்த மண்னெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்ற முயற்பட்டுள்ளார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் தீக்கு…
-
- 8 replies
- 808 views
-
-
தமிழக மாணவர்கள், 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும்' என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக மாணவர் போராட்டம் குறித்தான 'அறப்போர்' ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் பேசினார். 2013 மார்ச் மாதத்தில், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் அமெரிக்கா தாக்கல் செய்த மோசடியானத் தீர்மானத்தை எதிர்த்து நடைபெற்ற தமிழக மாணவர்களின் எழுச்சியை ஆவணப்படுத்தும் விதமாக, 'அறப்போர்' ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. மரணதண்டனைக்கு எதிரான ஆவணப்படமான 'இப்படிக்கு தோழர் செங்கொடி' படத்தை இயக்கிய பத்திரிக்கையாளர் திரு. வெற்றிவேல் சந்திரசேகர், 'அறப்போர்' படத்தை இயக்கியுள்ளார். செங்கொடி மீடியா ஒர்க்ஸ் சார்பில், திரு. சி.கபிலன் படத்தைத் தயாரித்துள்ளார். இப்ப…
-
- 0 replies
- 459 views
-
-
நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்றை ஏற்படுத்த பொது பலசேனா என்ற அப்பன் பெயர் தெரியாத அமைப்பு முயற்சித்து வருகிறது. அவர்கள் அப்படி செய்யும் போது, நாம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றோம். இதனை பொறுக்க முடியாத பலசேனா அமைப்பு எங்களை பைத்தியம் என்று கூறுகிறது என அமைச்சர் டிலான பெரேரா தெரிவித்துள்ளார். மதத்தின் போர்வையால், தம்மை தலைவர்களாக உருவாக்கி கொண்டு, இனவாதியாக இருப்பதற்கு பதிலாக பைத்தியகாரனாக இருப்பது சிறந்தது நான் எப்போதும் இனவாதியா இருந்ததில்லை.எவர் எதனை கூறினாலும் நான் இருக்கும் நிலைப்பாட்டில் இருந்து மனிதனாக செயற்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். மதம் என்ற போர்வையில் பல சேனாக்களை உருவாக்கும் சிலர், நாட்டை தீயிட்டு வருகின்றனர் எனவும் அவர் …
-
- 3 replies
- 486 views
-
-
வடமாகாணசபை தேர்தலில் ஈ.பி.டி.பியின் வேட்பாளர்களாக முன்னாள் வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த சுந்தரம் டிவகலாலாவும், யாழ்ப்பாணத்தில் தற்போது ஊடகவியலாளராக இருக்கும் கோ.ருஷாங்கனும் போட்டியிட உள்ளனர். அரச பதவியில் இருந்த காலத்தில் சுந்தரம் டிவகலாலா அரசுக்கு ஆதரவாக இருந்து தொடர்ந்து பதவிகளை பெற்று சலுகைகளை அனுபவித்து வந்தார். ஓய்வு பெற்ற பின் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றினார். அதேபோல ஊடகவியலாளர் ருஷாங்கன் மட்டக்களப்பில் இருந்த காலத்தில் புலிகளின் செல்வாக்கு பெற்றிருந்ததால் புலிகளை ஆதரிப்பவர் போல காட்டிக்கொண்டாலும் மட்டக்களப்பில் ஒரு முறை ருஷாங்கனுக்கு புலிகள் அடித்ததை தொடர்ந்து கொழும்பு சென்று புலி எதிர்ப்பு வாதியாக மாறினார். இதற்கு முதல் வங்கி முகா…
-
- 0 replies
- 570 views
-
-
ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணியின் சிறிலங்கா அரசு சார்பு ஒட்டுக்குழுவை சேர்ந்த மூவர் இன்று காலை முதல் யாழ்.தந்தைசெல்வா சதுக்கத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர் விடுதலை கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான தங்க முகுந்தன், செல்லன் கந்தையா, செல்லையா விஜிதரன் ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் தமக்கு இடமளிக்கவில்லை என குற்றம் சாட்டியே இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். - http://www.thinakkathir.com/?p=51470#sthash.ekUwms9R.dpuf
-
- 1 reply
- 700 views
-