Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலி ஆதரவாளர்களை நிராகரிக்குமாறு கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை 28 ஜூலை 2013 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களை நிராகரிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தள்ளார். தனிப்பட்ட நலன்களுக்காகவும் அச்சம் காரணமாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிலர் உதவிகளை வழங்கி வந்தததாகத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு வெளிநாட்டு சில சக்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், வன்னி யுத்த களத்தில் சிக்கியிருந்த அப்பாவி பொதுமக்களை இந்தப் பிரச்சாரங்களின் மூலம் ஏமாற்றிவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த மக்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட தருணத்தில் எந்தவொரு தரப்பினரும் குரல் கொடுக்கவில்லை எ…

  2. நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார் 28 ஜூலை 2013 இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கை விஜயம் குறித்து, நவநீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதி முதல் 27ம் திகதி வரையி;ல் பேரவையின் 24ம் அமர்வுகள் நடைபெறவுள்ளது. அமர்வுகளின் ஆரம்ப உரையை நவநீதம்பிள்ளை ஆற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வம் ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வரையில் நவநீதம்பிள்ளை இலங்கைய…

  3. பிரித்தானிய முதலீட்டாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய தயங்குகின்றனர் 28 ஜூலை 2013 பிரித்தானிய முதலீட்டாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய தயங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமை மற்றும் காணிப் பிரச்சினைகள் போன்றன காரணமாக இலங்கையில் முதலீடு செய்வதில் பிரித்தானிய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருவதாக இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் ரொபி புலொச் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே யுத்தத்தின் பின்னர் பிரித்தானிய முதலீட்டாளர்கள் அதிகளில் இலங்கைக்கு வருகை தரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பௌதீக கட்டமைப்பு மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டிய வகையில் அமைந்துள்ள போதிலும், சட்டப் பிணக்குகள் குறித்த விவக…

  4. தமிழ் மக்களிடம் தற்போது எஞ்சியிருப்பது கல்வி என்ற ஆயுதம் மட்டும்தான் அதனை தமிழ் பிள்ளைகள் இறுகப்பற்றிப் பிடிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு அம்பிளாந்துரை வடக்கில் பிரித்தானியா எனின்தரோ பல்கலைக்கழக மாணவர்களினால் அமைக்கப்பட்ட பாலர் பாடசாலை திறப்புவிழா நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், இன்று தமிழர்களிடம் எஞ்சியிருப்பது இரண்டு விடயங்கள்தான் அதில் ஒரு விடயம் தமிழ் தேசிய உணர்வு மற்றது கல்வி கற்க வேண்டும் என்ற உணர்வு இந்த இரண்டு விடயங்களுமே இன்று தமிழர்களின் அடையாளமாகவுள்ளது. குறிப்பாக தமிழ் மக்கள் கடந்த காலங்களில் தங்களது உரிமைகள…

    • 0 replies
    • 331 views
  5. வலி.வடக்கில் சிறிலங்கா விமானப்படைக்கு ஒதுக்கப்படட் நிலம் என அறிவித்தல் பலகை நாட்டப்பட்டு அங்கு சுன்னாம்புக் கல்கள் பாரிய அளவில் அகழ்ந்து செல்லப்படுவதா தெரியவந்துள்ளது. இதனை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. வலி.வடக்கு மாவிட்ட புரத்தில் இருந்து கீரிமலைக்குச் செல்லும் வீதியின் இரு மருங்கிலும் சுன்னாம்புக்கற்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அங்கு பாரிய இயந்திரத்தின் உதவியுடன் உடைக்கப்பட்டு சல்லிகளாக மாற்றப்படுகின்றது. இவ்வாறு மாற்றப்படும் கற்கள் யாழில் இருந்து தென்னிலங்கைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றது. இவ்வாறு சுன்னாம்புக்கல் அகழ்ந்த இடங்களில் பாரிய குழிகள் ஏற்பட்டுள்ளது.…

    • 0 replies
    • 414 views
  6. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களின் போது தனித்துப் போட்டியிடுவது என்ற ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் உயர்பீடம் நேற்று முன்தினம் இரவு கொழும்பிலுள்ள அதன் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கூடிய போதே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=24849

    • 0 replies
    • 379 views
  7. இந்திய உயர் அதிகாரிகள் மாவை எம்.பியை அச்சுறுத்தியதாக தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வசித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மனைவியை நாட்டைவிட்டு வெளியேற்றாதிருக்க, சீ.வீ. விக்னேஸ்வரனை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க இடமளிக்க வேண்டும் என அதிகாரிகள் மாவை எம்.பிக்குத் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க...http://tamilworldtoday.com/?p=24839

    • 0 replies
    • 491 views
  8. புகலிடக் கோரிக்கையாளர் முகாம்களில் சித்திரவதைச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாலியல் ரீதியான வன்முறைகள், தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=24825

    • 0 replies
    • 338 views
  9. தயாமாஸ்டர் கைவிடப்பட்டாரா? அவர்தலைமையில் முன்னாள் போராளிகளை அரசாங்கம சுயேட்சையாக் களமிறக்கப் போகிறதா 27 ஜூலை 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- சுதந்திரக்கட்சியில் வடக்கு தேர்தலில் குதிக்கப் போவதாக அறிவிப்பை விடுத்திருந்த விடுதலைப் புலிகளது பேச்சாளர் தயாமாஸ்டரையும் மஹிந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளதா? அல்லது மகிந்த ராஜபக்ஸ சகோதரர்களின் அரசியல் வியூகமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இன்றிரவு வெளியான சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளர் பட்டியலில் தயா மாஸ்டரது பெயர் இருந்திருக்கவில்லை. இதனையடுத்து தேர்தலில் தனித்து சுயேட்சையாகப் போட்டியிட தயா மாஸ்டர் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகின்ற போதும் அதனை தயா மாஸ்டர் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் நடைபெறவ…

  10. வேட்பாளர் விபரம் வெளியிட்டது புளொட்! நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சார்பில் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வெளியாகியுள்ளது.யாழ்ப்பாண மாவட்டம் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முல்லைத்தீவு மாவட்டம் கந்தையா சிவநேசன் (பவன்), வவுனியா மாவட்டம் வவுனியா நகரசபை முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி) மற்றும் வவுனியா நகரசபை முன்னைநாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), மன்னார் மாவட்டம் இருதயராஜா சார்ள்ஸ் ஆகியோர் வட மாகாணசபைத் தேர்தலில் புளொட் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களாவர். இருப்பினும் ஏனைய கட்சிகளின் சார்பில் போட்டியிடுவோர் தொடர்பிலான விபரங்கள் …

    • 0 replies
    • 509 views
  11. யாழ்ப்பாணத்தினில் சுயாதீன ஊடகவியலாளரான சிறீராமச்சந்திரன் மயூரதன்(வயது 28) தாக்கப்பட்டுள்ளார்.தாக்குதலை தடுக்க முற்பட்ட அவருடன் கூடி நின்ற நண்பரொருவர் கடுமையான காயங்களிற்குள்ளாகியுமுள்ளார். சிறீராமச்சந்திரன் மயூரதன் யாழ். ஊடக அமையத்தின் நிர்வாக அங்கத்தவர்களுள் ஒருவருமாவார். இன்று வழமை போல தனது வீட்டினையண்டிய திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் வீதியில் நண்பருடன் கதைபேசியவாறு நின்ற வேளை வானொன்றினில் வந்திறங்கிய கும்பலொன்றே தாக்குதலை நடத்தியுள்ளது. கூரிய ஆயுதங்கள் மற்றும் கம்பிகளால் தாக்குதல்களை நடத்திய பின்னர் கழுத்திலிருந்து தங்கச்சங்கிலியையும் அவர்கள் அறுத்துச்சென்றுள்ளனர்.தாக்குதலை தடுக்க முற்பட்ட நண்பர் மீது நடத்தப்ப்ட்ட தாக்குதலில் அவரது மண்டை உடைந்துள்ளது. இன்று இடம்பெற…

  12. யாழ்.போதனாவைத்திய சாலையில் இராணுவத்தினர் இரத்த தானம் 512 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதில்23 ஆவது கஜபா படைப் பிரிவிலிருந்து 150 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரத்ததானம் வழங்கினர். இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த நிக்ழவ ஏற்பாடு செய்திருந்ததாகத் 512 ஆவது படைப்பிரிவின் கேர்ணல்,அஜித் பல்லாவல தெரிவித்திருந்தார். http://onlineuthayan.com/News_More.php?id=419062201327515285

    • 5 replies
    • 407 views
  13. இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால யுத்தத்தின் போது காணாமல்போனோர் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்க எடுத்துள்ள தீர்மானத்தில் பாரிய சந்தேகம் தோன்றியுள்ளதாக மனித உரிமைகள் தொடர்பான சட்ட ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=24770

  14. தேசிய சாமாதானப் பேரவையினால் மட்டக்களப்பு விடுதி ஒன்றில் இன்று (27.07.13) ஏற்பாடு செய்யப்பட்ட காணி நடைமுறைகள் தொடர்பான கருத்தரங்கில் மட்டக்களப்பு மங்கராமய விகாரதிபதி குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். இக் கருத்தரங்கிற்குள் பிரவேசித்த மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் இந்த கருத்தரங்கு தவறான முறையில் நடைபெறுவதாகக் கூறி குழப்பத்தில் ஈடுபட்டார். கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் காணி பிரச்சினை மற்றும் அவற்றுக்கான தீர்வு தொடர்பிலான பரிந்துரைகள் குறித்து தெளிவுப்படுத்துவதற்கான செயலமர்வொன்று நடத்தப்பட்டது. தேசிய சமாதான பேரவையினாலேயே இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சே…

  15. பிரதமர் கெவின் ரொட்டின் புகலிடக் கோரிக்கையாளர் கொள்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் மக்கள் கூடி தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் வாசிக்க... http://tamilworldtoday.com/?p=24774

    • 0 replies
    • 479 views
  16. பருத்தித்துறையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பாரிய சுரங்கப் பாதை கண்டு பிடிப்பு: அதிர்ச்சியில் இராணுவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் நகரையும் துறைமுகப் பகுதியையும் இணைக்கும் பாரிய சுரங்கப் பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. பருத்தித்துறை நகரின் மத்தியில் பஸ் நிலையத்தில் வீதி திருத்தப் பணிகள் ஈடுபட்டிருந்த புல்டோசர் வாகனம் வீதியிலுள்ள பாரிய குழியொன்றில் திடீரென்று இறங்கியது. இதன் பின்னர் அந்த குழி நீண்டு கொண்டு சென்றதால் அச்சமடைந்த வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தினர் இதனை இராணுவத்தினருக்கு அறிவித்தனர். இந்நிலையில் இது துறைமுகத்தை நோக்கி செல்லும் சுரங்கப்பாதை தானா? என இராணுவத்தினர் ஆய்வுகளை செய்து வருகின்றனர். விடுத…

    • 1 reply
    • 894 views
  17. யாழ்ப்பாணத்தில் வட்டிக்குவாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இதேவேளை வட்டிக்கு கொடுப்பவர்களும் வரையறையின்றி நாளுக்கு நாள் மீற்றர் வட்டிக்கு பணம்கொடுக்கின்றார்கள் இதனால் ஏற்படும் பிரச்சனைகளால் பலர் தற்கொலை செய்கின்றார்கள். இதுவரை மீற்றர் வட்டிகொடுமையால் யாழில் 22பேர் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை முறைப்பாட்டின் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. http://www.sankathi24.com/news/31834/64/22/d,fullart.aspx

    • 1 reply
    • 345 views
  18. தாம் அரசாங்கத்துடன் இணையவதற்கு 25 கோடி ரூபாவை பெற்றுக் கொண்டதாக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தயாசிறி ஜயசேகர நிராகரித்துள்ளார். அத்துடன், அவ்வாறு நான் 25 கோடி பெற்றிருந்ததாக நிரூபிக்க முடியுமாவெனவும் கட்சியில் இருந்து விலகிய தயாசிறி ஜயசேகர அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாந்துவுக்கு சவால் விடுத்துள்ளார். ஹெட்டிபொல நகரில் நேற்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். "இப்பொழுது கூறுகிறார்கள் 25 கோடியை வாங்கிக்கொண்டுதான் தயாசிறி அரசுக்கு சென்றாராம். அவ்வாறான கருத்துக்கள் பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஒருவர் போகும்போது கூறும் பொதுவான வாரத்தைதான் அது…

    • 0 replies
    • 588 views
  19. வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கத்தினால் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் 500 குடும்பங்களுக்கு உடனடியாக வீடுகளைக் கட்டிக்கொள்வதற்காக வடமாகாணத்தில் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரியவருகிறது. மேலும், http://tamilworldtoday.com/?p=24711

    • 0 replies
    • 528 views
  20. விசேட விஜயமொன்றை மேற்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான பாதுகாப்பு ஆலோசகர் ஆபிரஹாம் மாத்தை மற்றும் அவரது குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். இக்குழுவினர் நேற்று வியாழக்கிழமை திருகோணமலைக்கு விஜயம்செய்ததுடன் அங்கு கிழக்கு பிராந்திய கடற்படை படைத்தளபதி ரியர் அடமிரல் ரொஹான் அமரசிங்கவை அவரது தலைமை அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/76521-2013-07-26-12-10-59.html

    • 1 reply
    • 292 views
  21. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையர் நவநீதம்பிள்ளை அடுத்த மாதம் சிறிலங்கா வர திட்டமிட்டுள்ள நிலையில் அவரது பாதுகாப்பு ஆலோசகரான ஏப்ராஹாம் மத்தாய் சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளார். சிறிலங்கா வந்துள்ள அவர் தனது விஜயத்தின் முதல் கட்டமாக திருகோணமலை கடற்படை தலைமையகத்துக்குச் சென்று அங்கு கடற்படை அதிகாரிகளைச் சந்தித்து பேசியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் குறுகிய காலப்பகுதிக்குள் பல்வேறு தரப்பினரையும சந்தித்துப் பேசவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் சிறிலங்கா அரச தலைமைகளுடனான இவரது சந்திப்பு தொடர்பான தகவல்கள் மிக இரகசியமாகப் பேணப்டுவதாகக் கூறப்படுகிறது. http://goldtamil.com/?p=2762

    • 0 replies
    • 443 views
  22. மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி போரதீவு குளத்திலிருந்து மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று முற்பகல் எலும்புக்கூட்டை கண்டெடுத்ததாக பிரதேசத்திற்குப் பொறுப்பான காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அந்த பிரதேசத்தில் காணாமல்போனதாகக் கூறப்படும் வயோதிபர் ஒருவரின் எலும்புக்கூடாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். http://www.sankathi24.com/news/31820/64//d,fullart.aspx

  23. கிளிநொச்சி கரியநாகபடுவானில் வேலிக்கு தெளிக்கப்பட்ட பூச்சி மருந்து காற்றில் கலந்ததில் அதனைச் சுவாசித்த 14 மாணவர்கள் மயக்கமடைந்து வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. நேற்று மாலை வேலை மேற்குறித்த பகுதியில் உள்ள சிறுவர்கள் மாலை நேர வகுப்பிற்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். இதன் போது வீடு செல்லும் வழியில் உள்ள வீட்டு உரிமையாளர் தனது காணியின் எல்லையில் அமைந்துள்ள வேலியில் கறையானுக்கு பூச்சி மருந்து விசிறியுள்ளார். அவர் விசிறிய பூச்சி மருந்து காற்றில் கலந்ததால் வீதியால் சென்ற சிறுவர்கள் பூச்சிமருந்தினை சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் சற்ற…

  24. முல்லைத்தீவ முள்ளியவளை குமுழமுனை வீதியில் உள்ள கற்பூரப் புல்வெளியில் 10 ஏக்கர் காணியில் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. முள்ளியவளை பிரதேச்தில் ஏற்கனவே நீராவிப்பிட்டி தண்ணீரூற்று போன்ற பகுதிகளில் பெருமளவான முஸ்லீம் மக்கள் குடியேறி இனக்கலப்பு திருமணங்களும் நடைபெற்று வருகின்ற நிலையில் முறிப்பு ஊடாக குமுழமுனை செல்கின்ற பகுதியில் காணப்படும் கற்பூரபுல்வெளி எனப்படும் பகுதியில் முஸ்லீம் மக்களை குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முள்ளியவளை பிரதேசத்தை சுற்றிலும் முஸ்லீம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் அதிகாரம் கொண்ட முஸ்லீம் வர்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது முள்ளியளை ஒட்டிசுட்டான் வீதியில் உள்ள தேக்கங் …

  25. யாழ்ப்பாணத்தில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் நான்கு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறை புள்ளிவிபரம் தெரிலித்துள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாய்,காங்கேசன்துறை,அச்சுவேலி பகுதிகளில் குறித்த சிறுமிகள் பாலியல் துஸ்பிரயேகத்திற்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறை பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உரும்புராய் கிழக்கு பகுதியில் 15அகவை சிறுமியும்,காங்கேசன் துறைப்பகுதியில் 13,14 அகவை சிறுமிகள் தொடராக ஆசிரியரினால் பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். அதேபோல் அச்சுவேலி பகுதியில் 8அகவை சிறுமிமீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த முறைப்பாடுகள் காவல்துறையின் பதிவுக்குட்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. http://www.sankathi24.com/news/31833/64//d…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.