ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
'தமிழ் தேசிய முன்னணி' என்னும் புதிய அரசியல் கட்சி வவுனியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டம் மகாறம்பைக்குளம் வீதியில் உள்ள அலுவலகத்திலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தக் கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் வழிமுறைகளையும் இளைஞர், யுவதிகளுக்கான அரசியல் களத்தை அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கட்சியின் சின்னம், கொடி என்பன மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டதுடன், இந்தக் கட்சியின் பெயர்ப்பலகை உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது கட்சியின் நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
வருடாந்த வோல்ஸ்வேகன் கார் கண்காட்சி 14ஆவது தடவையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொழும்பு பிரசேத்திலுள்ள பழைய கார்கள் இதில் கலந்துகொண்டனர். காலி முகத்திடலில் ஆரம்பமான இந்த கார் சாவரி பாதுக்கையை சென்றடைந்தவுடன் நிறைவடைந்தது. (படப்பிடிப்பு - குஷான் பதிராஜ) http://tamil.dailymirror.lk/--main/63272-2013-04-08-08-13-54.html
-
- 0 replies
- 418 views
-
-
களனி பிரதேச சபை அங்கத்தவர் ஹசித்த மடவல கொலைத்தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வாவின் நாடாளுமன்ற செயலாளரின் மகனுக்கு எதிராக பிடியாணையொன்று இன்று திங்கட்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடவத்தை பதில் நீதவானே இந்த பிடியாணையை பிறப்பித்தார். சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் நாடாளுமன்ற செயலாளர் சரத்குமார் எதிரிசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். பிரதான சந்தேகநபரினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் மாற்றியமைக்கப்பட்தற்கான சான்றுகள் இருப்பதாக அரசாங்க பகுப்பாய்வாரள் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை அமைச்சர் மேர்வின் சில்வாவின் நாடாளுமன்ற செய…
-
- 0 replies
- 645 views
-
-
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிந்தியடைந்து தேசியமட்டத்தில் முன்னணி வகிக்கும் மாணவர்களின் தரநிலையைவெளியிடுவதில் சிறுபான்மையினருக்கு இலங்கை அரசுதுரோகமிழைத்துள்ளது. இது தமிழ் மொழி மாணவர்களுக்குப்பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில்வெளியிடப்பட்டிருந்தன. இந்தப் பெறுபேறுகள் வெளியாகியசில மணி நேரங்களுள் சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளின்தேசிய மட்ட நிலைகளும் வெளியிடப்பட்டு, அவர்களுக்குஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலும் அலரிமாளிகையில்வைத்து கௌரவமும் அளிக்கப்பட்டது. ஆனால், தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகளின் தேசியமட்டத்திலான தர நிலைகள் இன்னமும்வெளியிடப்படவில்லை. இந்தப் பாரபட்சம் எதற்காக என தமிழ்கல்வி மான்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.…
-
- 2 replies
- 939 views
-
-
இந்திய எம்.பிக்கள் குழுவின் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மக்கள் மற்றும், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் எம்.பிக்களின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரகாஷ் ஜவடேகர்(பா.ஜ), சந்தீப் தீட்சித்(காங்) உட்பட 7 எம்.பிக்கள் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 7 பெரும் இன்று முதல் 12 ஆம் தேதி வரை இலங்கைப் பயணத்திற்கு திட்டமிட்டிருந்தனர். இளைகையுடன் அரசியல், வர்த்தகம், தொழில் குறித்து இக்குழு ஆலோசிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பயணத்துக்கு இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13865:india-srilanka-no&catid=…
-
- 1 reply
- 688 views
-
-
'சுதந்திர ராஜபாட்டை' இன்று திறப்பு வடக்கையும்தெற்கையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள "சுதந்திர ராஜபாட்டை' அல்லது "பாதெனிய அனுராதபுரம் மார்க்கம்' ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று மு.ப 10 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. கொரியக் கூட்டரசின் 700 கோடி ரூபா நிதியுதவியுடன் துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்தப் பெருந்தெரு மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 15 மீற்றர் அகலமும், 80 கிலோமீற்றர் நீளம் கொண்ட இந்தப் பாதை மறு சீரமைக்கப் பட்டுள்ளதன் மூலம் வடமேல் மாகாணத்திலிருந்து பாதெனிய ஊடாக வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களுக்கு நேரடிப் போக்குவரத்து வசதி ஏற்பட்டுள்ளது என்று துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அம…
-
- 2 replies
- 611 views
-
-
திராவிடன் சேனையின் தமிழர்களை காக்கும் போர் வாள் என்ற அமைப்பு உரிமை கோரி எதிர்வரும் சித்திரை 08ம் திகதிக்கு முன் தமிழர் தாயக பூமியை விட்டு முஸ்லீம் வர்த்தகரகள் வெளியெறுமாறு எச்சரிக்கை என்ற தலைப்பில் துண்டப் பிரசுரம் ஒன்று வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று போடப்பட்டுள்ளது.அந்த துண்டுப் பிரசுரத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. இறுதி எச்சரிக்கை தமிழர் தாயக பூமியை ஆக்கிரமிக்கும் நோக்கோடு எமது தாயக மண்ணில் வர்த்தகம் செய்யும் இஸ்லாமிய வர்த்தகர்களை வெயியேறுமாறு எச்சரித்தும் அதனை அலட்சியம் செய்த இஸ்லாமிய வர்த்தகர்களே எதிர்வரும் சித்திரை 08ம் திகதிக்கு முன்னதாக எமது மண்ணை விட்டு வெளியேறுமாறு இறுதியாக எச்சரிக்கிறோம். வன் முறை எமது வழியல்ல அதுதான் வழி என நீங்கள் கருதினால் அதைவி…
-
- 1 reply
- 645 views
-
-
இந்தியாவில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கைவிடுத்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தமிழ் அமைப்புகள் பெங்களூரில் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், னப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதுடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை உலக நாடுகள் இனப்படுகொலை குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண…
-
- 4 replies
- 897 views
-
-
நாங்கள் ஈழத்தமிழர்களா பிறந்தது எங்கள் குற்றமா? � குழந்தைகளோடு கண்ணீருடன் ஜெயநந்தினி ஈழத் தமிழர்கள் மேல் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்ளும் ஜெ. அரசு, இலங்கை அகதிகளை சிறப்பு முகாம்களில் வைத்தும் இரண்டு ஈழக் குழந்தைகளை புழல் சிறையில் அடைத்தும் சித்ரவதை பண்ணிக் கொண்டிருக்கிறது" என ஆவேசமாய் கொந்தளிக்கிறார்கள் ஈழ ஆதரவு மாணவர்கள். இவர்களை இப்படி கொதிக்க வைத்திருப்பது ஜெயநந்தினி விவகாரம். யார் இந்த ஜெயநந்தினி? ஈழத் தமிழ்ப் பெண். ஏழே வயதான சிறுவன் பரிதிக்கும் நான்கே வயதான சிறுமி பிருந்தாவுக்கும் தாய். இவரது கணவர் சந்திரகுமார். ஈழத்தின் கடைசி யுத்தத்தின் போது தமிழகம் வந்து, இப்போது பூந்தமல்லி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார். …
-
- 1 reply
- 735 views
-
-
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் இளம் வர்த்தகரும் அவரது மனைவியும் இனந்தெரியாத குழு ஒன்றினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (08.04.13) இலங்கை நேரம் அதிகாலை 12.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. செங்கலடி – பதுளை வீதியில் உள்ள குறித்த தம்பதிகளின் வீட்டுக்கு சென்ற இனந்தெரியாத ஆயுதம் தரித்த குழு; இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளதுடன் கத்தியினால் கழுத்துப் பகுதியில் வெட்டியும் உள்ளனர். உயிரிழந்தவர்கள் 48 வயதான சிவகுரு ரகு மற்றும் 41 வயதான இந்திரமூர்த்தி வித்ரா என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அங்கு சென்ற ஏறாவூர் பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை …
-
- 0 replies
- 441 views
-
-
தமிழக திரைப்பட துறையினர் VS இலங்கை திரைப்படத்துறையினர் + விளையாட்டு வீரர்கள் தமிழ் திரைப்பட துறையினர் அண்மையில் நடத்திய உண்ணாவிரதம் மற்றும் இலங்கைக்கு எதிராக தற்போது சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படும் பொய் பிரசாரங்களுக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை திரைப்பட கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் இணைந்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி 4.30 மணிக்கு பூஜைகளை நடத்தவுள்ளனர். அன்றைய தினம் இலங்கையில் படப்பிடிப்புகளை நடத்துவதில்லை என இலங்கை கலைஞர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த பூஜை வழிப்பாட்டில் கலந்து கொள்ளும் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் அனைவரும் வெள்ளை நிறை ஆடைகளை அணிந்து வருமாறு இலங்கை கலைஞர்களின் தேசிய அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது http://www.globalta…
-
- 0 replies
- 372 views
-
-
ஏட்டிக்குப் போட்டியாக அரசஆதரவு ஆர்ப்பாட்டம் தமிழ்மக்களால் திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது தமிமக்கள் தமது அடிப்படை பிரச்சினைகளை வலியுறுத்தி இன்று முல்லைதீவு மாவட்ட செயலகம் முன்பதாக ஆர்ப்பாட்டமொன்றிற்கு திட்டமிட்டிருந்த நிலையில் இலங்கை அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஆதரவாளர்கள் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஜனாதிபதி இணைப்பாளருமான கனகறட்ணத்தை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தி உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிவரும் முஸ்லிம்களின் குடியேற்றத்தை தடுக்கும் வகையிலும் இந்த பிரதேசத்தில் இனக்கலவரமொன்றுக்கு தூபமிடு…
-
- 0 replies
- 424 views
-
-
எதிர்வரும்; வடக்கு மாகாண தேர்தலினில் கூட்டமைப்பு சார்பினில்; பெருமளவிலான முக்கியஸ்தர்களின் ஆதரவுடன் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராசா முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் 'லங்காதீப' பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஆனாலும் இந்த முடிவை இன்னும் சில வாரங்களின் பின்னரே கூட்டமைப்பு உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் என்றும் இன்னும் சில வாரங்கள் செல்லக் கூடுமெனவும் லங்கா தீப தெரிவித்துள்ளது. இதனிடையே ஈபிடிபி தனது முதன்மை வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசாவினை நிறுத்த முடிவு செய்துள்ளது. முன்னதாக டக்ளஸ் தேவானந்தா களத்தில் குதிக்கலாமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அம்முடிவை …
-
- 0 replies
- 621 views
-
-
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8ஆவது தேசிய மாநாடு இன்று சனிக்கிழமையும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் 7ஆவது தேசிய மாநாட்டின் பதவியியல் தலைமைக்குழு இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஒன்றுகூடி மாலை 5 மணிவரை நடைபெறும். மாவட்ட ரீதியாக 8ஆவது தேசிய மாநாட்டிற்கான தெரிவுகள் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார். இதன்போது மாவட்ட ரீதியாக 72 பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். 20 பேர் சர்வதேச ரீதியாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்த 92 பேரும் கூடி 23 பேரை தேசியப்பட்டியல் மூலமாக தெரிவு செய்யவுள்ளனர். பொதுக்குழு அங்கத்தவர்கள் 1…
-
- 2 replies
- 594 views
-
-
தேசியகீதத்தில் தமிழிற்கு இடமில்லை: வாசுதேவவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு! [Monday, 2013-04-08 08:13:01] ஒரு நாட்டின் தேசிய கீதத்தை இருமொழிகளில் பாடும் நாடு ஏதேனும் இருந்தால் அந்த நாட்டின் பெயரைத் தனக்குக் கூறுமாறு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய கீதத்தில் சிங்களமொழியுடன் தமிழ்மொழியையும் சேர்த்துக் கொள்வது தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவையின் போது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு காட்டமாக தெரிவித்துள்ளார். தான் இவ்வாறானதொரு தீர்மானத்துக்கு வந்தால் சிங்கள பௌத்த மக்களுடன் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிவரும். இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக…
-
- 2 replies
- 651 views
-
-
-எம்.எஸ்.நூர்தீன் நாடாளுமன்றத்திலும் கிழக்கு மாகாண சபையிலும்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு வழங்கியுள்ள ஆதரவினை உடனடியாக மீளப்பெற வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாக மட்டக்களப்பு மாநகர சபையின்; ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் என்.கே றம்ழான் தெரிவித்துள்ளார். கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 7ஆசனங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருந்த போதிலும். முஸ்லிம் காங்கிரஸ் இன்றி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினாலோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலோ கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க முடியாது நிலை காணப்பட்டது. இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொடுத்த வாய்ப்பையும் மு.கா கைநழுவவிட்டுவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கிழக்…
-
- 0 replies
- 578 views
-
-
"இளந்திரையன் மனைவி மக்களுக்கு சுவீடன் தஞ்சம்" - பி.பி.சி விடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி, பிள்ளைகளுக்கு சுவீடன் தஞ்சம் வழங்கியுள்ளது என்று அவர்களுடன் படகில் சென்றிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் லோகினி ரதிமோகன் பிபிசிக்கு தகவல் தந்துள்ளார். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணைந்த இளந்திரையன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்றே தமக்குத் தெரியாது என இளந்திரையன் குடும்பத்தார் தன்னிடம் கூறியதாக லோகினி தெரிவித்தார். துபாயில் ஐநா அகதிகள் உதவியமைப்பின் (யு என் எச் சி ஆர்) பொறுப்பில் இருந்துவரும் இலங்கைத் தமிழர்களில் லோகினியும் ஒருவர். "இசைப்பிரியா கதியை நினைத்து இலங்கை திரும்ப அஞ்சுகிறேன்" ஆஸ்திரேலியா செ…
-
- 1 reply
- 850 views
-
-
தமிழீழ வீர வரலாற்றைத் தமிழக மாணவர்களின் பாட நூல்களில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டக் கல்லூரிகளின் மாணவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்துச் சட்டக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. *இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை. இது குறித்து நம்பத் தகுந்த சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தண்டனை வழங்க வேண்டும். *ஈழத் தமிழர்களுக்குத் தனித் தமிழீழமே ஒரே தீர்வு. இதனை ஐக்கிய நாடுகள் சபை பொதுவாக்கெடுப்பின் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும். இலங்கை மீது பொ…
-
- 1 reply
- 729 views
-
-
சிறிலங்கா முஸ்லீம்களும் அவர்களின் ஆயுதக் குழுக்களும் - விக்கிலீக்ஸ் [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 07:44 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் சிறிலங்கா ஜம்தீ இஸ்லாம், தௌகிட் ஜமாத், தப்லீக் ஜமாத் மற்றும் ஜமதீ முஸ்லீம் ஆகிய நான்கு முஸ்லீம் குழுக்கள் செயற்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வோசிங்டனுக்கு அறிவித்ததாக விக்கலீக்ஸ் இரகசியச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி யூன் 09, 2004 அன்று 'நம்பகமானது' எனக் குறிப்பிடப்பட்டு சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்றி ஜே.லன்ஸ்ரெட்டால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதாக விக்கிலீக்ஸ் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. "உள்ளக புலனாய்வின் முன்னாள் அதிகாரியான M.I. CADER என்பவ…
-
- 4 replies
- 564 views
-
-
ரணில், சந்திரிக்கா இரகசிய சந்திப்பு - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு! [sunday, 2013-04-07 08:09:32] முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு 7ல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்திலேயே இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும், அச்சந்திப்பில் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு அதிகமாக இருவரும் பல்வேறு அரசியல் விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இந்த …
-
- 2 replies
- 737 views
-
-
கிளிநொச்சி கோயில் காணி பறிப்பு; நீதிமன்றின் உதவியை நாட முடிவு; நிர்வாகமும் கிராம மக்களுமாக கிளிநொச்சி தொண்டமான் நகர் உதிரவேங்கை ஆலயத்தின் காணியை தென்பகுதி நிறுவனம் ஒன்று அபகரித்துள்ள நிலையில் இது தொடர்பில் நீதிமன்றின் உதவியை நாடப்போவதாக ஆலய நிர்வாக சபையினர் அறிவித்துள்ளனர். கடந்த மூன்று நாள்களாக குறித்த காணியில் தென்பகுதி நிறுவனம் தனது கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இது குறித்து அதிருப்தி வெளியிட்ட அந்தப் பகுதி மக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் கேள்விகளுக்கு தென்பகுதியைச் சேர்ந்த நிறுவனத்தினர் முறையற்ற பதில்களை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரச அதிபர், ஆளுநர் உட்பட முக்கியமானவர்களின் அனுமதியுடனேயே தாம் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுவதாக அவர்கள் ஆலய நிர்வாகத்திடம்…
-
- 0 replies
- 561 views
-
-
400 மரண தண்டனை கைதிகளின் தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றம் By General 2013-04-08 09:52:06 நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ள 400 மரண தண்டனை கைதிகளின் தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்படவுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் வயதைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. குறித்த கைதிகளின் வயதைக் கருத்திற் கொண்டு மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரரட்ன பல்லேகம சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சிடம் கோரியுள்ளார். மரண தண்டனைக் கைதிகளை அண்மையில் சந்தித்த போது அவர்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் குறித்து அறிந்து கொண்டதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/local.php?…
-
- 0 replies
- 359 views
-
-
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பொதுபல சேனாவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகளை கண்டும் காணாது போல் இருக்கும் இன்னுமொரு பௌத்த பிக்குவே மஹிந்த ராஜபக்ஷ ஆவார். இவ்வாறு பொதுபல சேனாவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பாரிய பிரச்சிiiயை ஏற்படுத்தும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜெனீவா பிரச்சினையை மறைப்பதற்காக அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இனவாத அமைப்பே இந்த பொதுபல சேனா என்ற அமைப்பு. இந்த அமைப்பின் செயற்பாடால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 1915 ஆம் ஆண்டுகளில…
-
- 1 reply
- 432 views
-
-
2012 க.பொ.த சா/த தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு 2012 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப்பரீட்டை பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடுவோருக்கு பரீட்டைகள் திணைக்களத்தினால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. 1 உங்களது பெறுபேற்றினைத் தெரிந்துக்கொள்வதற்கு உங்களது பரீட்சைச் சுட்டெண்ணைத் திருத்தமாக உட்படுத்துக. வேறொரு சுட்டெண்ணை உட்படுத்துவதால் வேறொருவரது பெயரும் பெறுபேறும் பெறப்படும். 2 இப்பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகளோ விசாரணைகளோ இருப்பின், இலங்கை பரீட்சைத்திணைகளத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது. மூலம்/ஆக்கம் :…
-
- 13 replies
- 1.4k views
-
-
மக்களுக்கான காணிப்பங்கீடு தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நேற்று முல்லைத்தீவில் போராட்டம் வெடித்தது. மக்கள் திரண்டு வந்து அமைச்சருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனது பரிவாரங்களையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து பின்வாங்கிச் சென்றார். "காணியில்லாமல் 30 வருடங்களாக நாம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது ஆதரவாளர்களுக்குக் காணிகளை பகிர்ந்தளிக்க முயற்சிக்கின்றார்'' என ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருந்த மக்கள் குற்றஞ்சாட்டினர். முள்ளியவளை ஆறாவது மைல்கல் அருகில் 540 ஏக்கர் தேக்கங்காடு உள்ளது. இந்தக் காட்டை முற்றாக அழித்து அந்…
-
- 2 replies
- 612 views
-