ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறை ஒழிக்க வேண்டும் என யாழ்.மாவட்ட பெண்கள் என்னும் அமைப்பின் சிலரால் ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று மெற்கொள்ளப்பட்டது. யாழ். பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டமானது, வைத்தியசாலை வீதி வழியே கண்டி வீதியின் ஊடாக யாழ்.மாவட்ட செயலகத்தில் நிறைவு பெற்றது. இதன்போது யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. http://www.virakesari.lk/article/local.php?vid=3795
-
- 0 replies
- 347 views
-
-
சிங்கள அரசால் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் உளவாளிகள் இராமேஸ்வரம் ஊடாக தமிழகத்தில் தரையிறக்கம் [Wednesday, 2013-04-03 08:45:45] தமிழக மக்களது தமிழீழம் சார்ந்த உணர்வினையும், எழுச்சியினையும் முறியடிப்பதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் தம்மால் பயிற்றுவிக்கப்பட்ட பல தமிழ் உளவாளிகளை இராமேஸ்வரம் ஊடாக தமிழகத்தில் தரையிறக்கி வருகின்றது. தமிழீழ மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவர்கள் மீது இனப் படுகொலை புரிந்த சிங்கள ஆட்சியாளர்கள் அனைத்துலக விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டு, போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும். தமிழீழ மக்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து அவர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடாத்த வேண்டும். என்ற முதன்மைக் கோரிக்கைகளுடன் தொடரும் தமி…
-
- 2 replies
- 769 views
-
-
விமலின் முன்னிலையில் ஈபிடிபி அலெஸ்ரின் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாவற்குழியில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல நாவற்குழியில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என விமலின் விமல் வீரவன்சவின் முன்பாகவே அரச நாடாளுமன்ற அங்கத்தவரான அலென்;ஸ்ரீன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ். சேன்றிருந்த விமல் வீரவன்ச மேடையில் அமர்ந்திருக்க அவருக்கு முன்பாகவே பகிரங்கமாக இந்தக் குற்றச்சாட்டை அலென்;ஸ்ரீன் முன்வைத்தார். ஈபிடிபி சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள அவருக்கு எதிராக கட்சியினுள் ஒரங்கட்டல்கள் ஒருபுறம் தலைதூக்கியுள்ள நிலையில் அவரது பகிரங்கமான அவரது கருத்து வெளியாகியுள்ளது. நாவற்குழியில் வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தம…
-
- 0 replies
- 488 views
-
-
யாழ்.நகரப்பகுதியில் அண்மையில் வைத்தியரொருவர் தாக்கப்பட்ட சம்பவம் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டதென கூறி மேல் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் மறுதலித்துள்ளனர். நெடுந்தீவு அரச வைத்தியசாலையின் பல்வைத்திய நிபுணர் ஒருவர் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை யாழ்.நகரப்பகுதியில் தாக்கப்பட்டிருந்தார். மது போதையில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த குழுஒன்றே வீண் முரண்பாடுகளை ஏற்படுத்தி அவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளான வைத்தியர் சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் புகார் செய்ய முற்பட்டவேளை அதனை ஏற்க மறுதலித்த பொலிஸார் இராணுவப் புலனாய்வு பிரிவினருடன் முரண்படவேண்டாம் என ஆலோசனையும் தெரிவித்துள்ளனர். குருநகரை சேர்ந்த குறித்த நபர் தனது கிராமத்திலும்…
-
- 0 replies
- 251 views
-
-
போரில் இறந்த போராளிகளுக்கு அரச நிகழ்வில் அஞ்சலி இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிரிழந்த போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இன்றைய தினம் குருநகர் பகுதியில் இடம்பெற்ற அரச நிகழ்வு ஒன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். குருநகர் பகுதியில் மகிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணிக்கப்படவுள்ள தொடர்மாடி வீட்டுத்திட்டத்தை அமைச்சர் விமல் வீரவன்ச இன்றைய தினம் ஆரம்பித்து வைத்தார். இன்நிகழ்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் யுத்தத்தின் போது உயிரிழந்த போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்துமாறு அறிவிக்கப்பட்டது. இதன்போது அங்கு கூடியிருந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், மாநகர முதல்வர் என பலரும் எழுந்து நின்று மெளன அஞ…
-
- 2 replies
- 806 views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தில் இல்லாத அக்கறை இப்போது எப்படி இந்தியாவுக்கு வந்தது கேள்வி எழுப்புகிறார்; விமல் இறுதிக் கட்ட யுத்தத்தில் இல்லாத அக்கறை இப்போது எப்படி இந்தியாவுக்கு வந்தது கேள்வி எழுப்புகிறார்; விமல் news இலங்கையில் இனங்களுக்கு இடையே ஐக்கியம் உருவாகுவதனை விரும்பாது ஜெனீவாவில் மனித உரிமைகள் மீறல் குற்றத்தினை முன்வைத்து மீண்டும் குழப்பத்தினை ஏற்படுத்தவே தென்னிந்தியா முயற்சி செய்கின்றது என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட விமல் வீரவன்ச குருநகர் 5 மாடி வீட்டுத்திட்டத்தின் மீள்நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில…
-
- 1 reply
- 754 views
-
-
சென்னையில் சினிமா நட்சத்திரங்களினால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்திய போராட்டம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. தென் இந்தியாவின் புகழ் பூத்த சினிமா நட்சத்திரங்களாக போற்றப்படும் ரஜனிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜய், அஜித், போன்ற முன்னணி நட்சத்திரங்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த ஏழு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இந்த போராட்டம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு இந்தியாவிற்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயத்திற்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அர…
-
- 3 replies
- 1.1k views
-
-
கொழும்பு: தென் இந்தியாவிலிருந்து வரும் சரக்குகளை புறக்கணிக்கப்போவதாக கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக துறைமுக தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த மகேஷ் சமரவிக்ரமே கூறுகையில், இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சுகளும், சுற்றுலா பயணிகளும் தமிழகத்தில் தாக்கப்படுவதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. எனவே தென் இந்தியாவிலிருந்து வரும் சரக்குளை புறக்கணிக்க துறைமுக தொழிலாளர்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளனர். மேலும், முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு எதிராக கொழும்பு துறைமுகத்தில் பதாகைகளையும் துறைமுக தொழிலாளர்கள் வைத்துள்ளனர். Dinamalar
-
- 2 replies
- 989 views
-
-
பாஜக தலைவர் எல்.கே. அத்வானியைச் சந்தித்துப் பேசினார் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க. புதுதில்லிக்கு வந்துள்ள ரணில் விக்ரமசிங்க, இன்று காலை 11 மணி அளவில் அத்வானியின் இல்லத்துக்கு வந்திருந்தார். இந்தச் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது. http://dinamani.com/latest_news/article1527373.ece
-
- 3 replies
- 523 views
-
-
பெஷன் பக்' களஞ்சியசாலை மீதான தாக்குதல்: சந்தேகநபர்கள் 17 பேரும் விடுதலை பெபபிலியான பகுதியில் அமைந்துள்ள 'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது கடந்த 28 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பிக்குகள் உட்பட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களை இன்று கங்கொடவில் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தினர். இதன்போது 'பெஷன் பக்' நிறுவனத்தினர், இந்த வழக்கினை தொடர்ந்து மேற்கொள்ள தேவையில்லை என நீதவானுக்கு அறிவித்தனர். இதனையடுத்து நீதவான் சந்தேக நபர்கள் 17 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தார். (படம்:ஜே.சுஜீவகுமார்) http://www.virakesari.lk/…
-
- 0 replies
- 746 views
-
-
குனூத் அந்நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் ஜம்இய்யாவின் வழிகாட்டலை ஏற்று நம்மக்கள் சுன்னத்தான நோன்புகளை நோற்று பிரார்த்தனை செய்து வந்ததோடு குனூத் அந்நாஸிலாவையும் தமது தொழுகைகளில் ஓதி வந்தனர். தற்பொழுது குனூத் அந்நாஸிலாவைத் தொடரவேண்டிய அவசியம் உணரப்படாமையினால் அதனை நிறுத்திக் கொள்ளலாம் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக்கொள்கிறது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தேசிய பொதுச் செயலாளர், அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மைக்காலமாக நாட்டில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகள் சகலரையும…
-
- 0 replies
- 569 views
-
-
முஸ்லிம்கள் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை கைவிட்டு இன்று பரிதவிக்கின்றனர் April 1, 2013 10:03 pm கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு பாடம் கற்பிக்கக்கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டு இன்று பரிதவிக்கும் நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு அவர் கூறினார். அவர் தொடர்ந்து கூறியதாவது, தம்புள்ள பள்ளிவாயல், தெஹிவல, குருணாகல் பள்ளிவாயல் தாக்குதல், அதனை நடத்தியவர்கள் எவருமே கைது செய்யப்படவில்லை என்பதன் மூலம் எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகும் விபரீதத்தை அறியும் அறிவை எமக்கு இறைவன் தந்தான். இதனாலேயே நா…
-
- 6 replies
- 981 views
-
-
போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் காயங்களை ஆற்றாது, நான்கு வருடங்களின் பின்னரும் அதை நினைவுபடுத்தும் வகையில் ஞாபகச் சின்னங்களை அரசு நிறுவுவது பெரும் தவறான செயலாகும். இது தமிழர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். ஜெனிவா தீர்மானத்தினூடாக இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இடைவேளை அல்ல எனச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கைக்குள்தான் உலகம் இருக்கின்றது என்ற நிலைப்பாட்டில் அரசு இருக்கின்றது என்றும் தெரிவித்தார். கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெர…
-
- 1 reply
- 553 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சனை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் ஆகியன தொடர்பாக நாளைய தினம் கருத்து வெளியிப்படும் என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் யஷ்வந் சின்ஹா இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கான வாழ்வு நிலை சுய கௌரவத்துடனும் சம உரிமையும் வாழ வழியேற்படுத்தல் மறுவாழ்விற்கான உதவி என்பன தொடர்பாகவே கருத்துக்கள் வெளியிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையேஇ பாரதீய ஜனதா கட்சி இலங்கை தமிழர் தொடர்பாக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாகவும் பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் யஷ்வந் சின்ஹா தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/56423
-
- 5 replies
- 3.1k views
-
-
முள்ளியவளை குடியேற்றுவதற்கு எதிரான மனு விசாரணைக்கு வருகிறது முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பகுதியில் அரசாங்கத்துக்கு சொந்தமான காட்டுப் பகுதிகளை அழித்து அங்கு முஸ்லிம் மக்களைக் குடியேற்றுவதற்கு மீள்குடியேற்றத்துக்கு பொறுப்பான ஜனாதிபதியின் விசேட குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று அறிவிக்கும்படி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. விதிகளுக்கமைய அரசாங்க காணிகளை மக்களுக்கு வழங்கும் அதிகாரம் மாவட்ட செயலாளருக்கு மட்டுமே இருந்துவருகின்ற சூழ்நிலையில் மாவட்ட செயலாளரை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதியின் விசேட குழு மக்களுக்கு காணிகளை வழங்கும் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளது என இந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 339 views
-
-
சிங்கள மக்களின் சனத்தொகை வீழ்ச்சி: போலிப் பிரச்சாரம் இலங்கையில் மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி அதன்மூலம் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நோக்கம் என்று ஏகாதிபதிபத்தியத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டுகிறது. இந்த துரதிஸ்டவசமான நிலைமை நாட்டை அபாயமான கட்டத்தை நோக்கி தள்ளிக்கொண்டிருப்பதாக அந்த அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் தம்பர அமில தேரர் கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார். நாட்டில் சிங்கள மக்களின் சனத்தொகை கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டதாக செய்யப்படுவது போலியான பிரச்சாரம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ‘1981-ம் ஆண்டில் 74 வீதமாக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை 2011-ம் ஆண்டில் 74.9 வீதமாக உள்ளது. அதேபோல 30 …
-
- 0 replies
- 394 views
-
-
சிறிலங்கா தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையும் எதிர்கொள்ளும் சவால்களும் [ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013, 07:05 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா மீது இந்தியா கடும்போக்கான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்பது உண்மையாகும். ஆனால் சிறிலங்காவின் சீனாவுடனான உறவானது எதிர்பார்ப்பது போல் அவ்வளவு காத்திரமானதல்ல. இவ்வாறு இந்தியாவின் ஜவாகலால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் பேராசிரியரான பி.சகாதேவன்* Deccan Herald ஆங்கில ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தமிழ்நாட்டு அரசாங்கமும் அதன் எதிர்க்கட்சியும் சிறிலங்காத் தமிழர்களுக்கு நீதி மற்றும் உரிமையை அந்நாட்டு அரசாங்கம் வழங்க வேண்டும் என்பத…
-
- 1 reply
- 579 views
-
-
ஐ.நா தீர்மானம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு! - கஜேந்திரகுமார் கருத்துரை ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முற்றாக நிராகரிக்கின்றது. அத்தீர்மானம் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை அடியோடு அழித்துள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இத் தீர்மானம் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயற்பாடு என்பதால் தீர்மானத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முழுமையாக நிராகரிப்பதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்ற ஜ.நா மனிதவுரிமை கூட்டத் தொடரில் உரையாற்றி நாடு திரும்பிய பின்னர் ஐ.நா தீர்மானம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் …
-
- 0 replies
- 412 views
-
-
ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு சிவப்பு கம்பள மரியாதை: என் தாயாரை பிடித்து தள்ளுவதா? லோரன்ஸ் By General 2013-04-02 11:35:30 இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு திருப்பதி கோவிலில் சிவப்பு கம்பளம் விரித்து மரியாதை செய்கிறார்கள். ஆனால் இந்தியாவை சேர்ந்த, குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நடிகரான என்னுடைய தாயாரை கோவில் ஊழியர்கள் பிடித்து தள்ளியது தரக்குறைவான செயலாகும் என நடிகர் லோரன்ஸ் தெரிவித்துள்ளார். நடன இயக்குனரும், நடிகருமான லோரன்ஸ் கடந்த 31.03.2013 அன்று இரவு குடும்பத்துடன் திருப்பதி வந்தார். திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். 01.04.2013 அதிகாலை 6.30 மணியளவில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக கிரேடு–2 வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று…
-
- 0 replies
- 522 views
-
-
சண்டே லீடர் ஊடகவியலாளரிடம் காவல்துறையினர் விசாரணை 02 ஏப்ரல் 2013 சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் ராசீயா விக்ரமதுங்கவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ராசீயாவின் வீட்டுக்கு பிடிவிராந்துடன் சென்ற காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் மன்னார் பிரதேசம் தொடர்பில் வெளியிட்ட சில கட்டுரைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த கட்டுரைகள் தொடர்பில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் ராசீயாவின் வீட்டுக்குச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/t…
-
- 0 replies
- 388 views
-
-
அனுமதியின்றி மத அனுஷ்டானங்களை மேற்கொள்ளும் பள்ளிவாயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெமட்டகொட ஜாமியுத் தௌஹீத் பள்ளிவாயலுக்கும், தெமட்டகொட வீதி ஜமாத்தே இஸ்லாமி, இஸ்லாமிய புத்தகசாலைக்கும் பொதுபல சேனாவினால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இக் கடிதங்கள் பொதுபல சேனா அமைப்பின் கடித முகப்பிலேயே எழுதப்பட்டுள்ளன. இனவாதத்தை தூண்டும் வகையிலும் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு இக்கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'அனுமதியின்றி செயற்படுத்தி வரும் அடிப்படைவாத பள்ளிவாயலை உடன் அகற்ற வேண்டும். சிங்கள இனத்தின் இதயமான அக்ர போதி விகாரை உள்ள பூமிக்குள் இதற்கு இனிமேல் இடம் கிடையாது. எதிர்வரும் சிங்கள புத்தாண்டு…
-
- 6 replies
- 626 views
-
-
இன அழிப்புக்கு இந்திய அரசு எவ்வைகையில் உதவுகின்றது? : S.G.ராகவன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான இந்தியாவின் வீடமைப்புத் திட்டம், வன்னியில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதை, இலங்கை இராணுவத்தின் வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கையில் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான “இந்தியாவின்” போரைத்தான் தாம் நாடத்தியதாக இலங்கை அதிபர் ராஜபக்சே பகிரங்கமாக கூறியிருக்கிறார் இவை செய்திகள்தான். தற்போது வடகிழக்கில் நடப்பவை என்ன? இலங்கை அரசு மிகத் தீவிரமாக இன அழிப்பை நடாத்தி வருகின்றது, இவ்வின அழிப்புக்கு இந்திய அரசு எவ்வைகையில் உதவுகின்றது என்பதை பார்ப்போம் 1. இலங்கை அரசு…
-
- 2 replies
- 684 views
-
-
போர்க்குற்ற விசாரணைக்குப்பின்னால் ஓடிக்கொண்டிருப்பதால் எந்தப்பயனும் இல்லை; மக்கள் போராட்டம் ஒன்றே வழி ! போர்க்குற்ற விசாரணைக்குப்பின்னால் ஓடிக்கொண்டிருப்பதால் எந்தப்பயனும் இல்லை மக்கள் போராட்டம் ஒன்றே வழி என்றும்,போர்க்குற்ற விசாரணயை நம்பித்தான் தமிழீழ விடுதலைப்போராட்டமேஇருக்கின்றது என்றும் இரு துருவங்கள் இருக்கின்றன. இவ்விரண்டையும் முற்றாகமறுக்காமலும், அதே நேரத்தில் முற்றாக ஏற்காமலும் நம் முன் உள்ள நடைமுறை சார்ந்த திசை வழி என்ன? தமிழரைக்காப்போம் (Save Tamils Movement) அமைப்பின் சார்பில் "ஐ.நா. தீர்மானமும் ஈழத்தின் திசை வழியும்" என்ற தலைப்பில் நேற்று (31.03.2013) ஞாயிறு மாலை சென்னை தி.நகரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழீழத்திற்க…
-
- 1 reply
- 670 views
-
-
வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் ஆகஸ்ட் முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிப்ப முடியும்:- வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இரட்டை குடியுரிமை வழங்கப்படும் போது, செயற்படுத்தப்பட வேண்டிய புதிய சட்டத்திருத்தங்களை உருவாக்கப்பட்டுள்ளன என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். இரட்டை குடியுரிமை வழங்கப்படும் போது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இரட்டை குடியுரிமை என்ற போர்வையில் வடக்கில் காணி உர…
-
- 19 replies
- 1.1k views
-
-
சிங்கள இனவாதப் பேய் தமிழரை மட்டுமல்ல அவ்வப்போது சிங்களவரையும் அடித்து ஊமைகளாக வைத்திருக்கிறது. அந்தப் பேய்க்கு பயந்து புலம் பெயர்ந்த ஒரு சிங்களவர் கதை.. இலங்கை அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்ததற்காக அச்சுறுத்தலுக்கு ஆளான பல பத்திரிகையாளர்கள் சுவிட்சர்லாந்து உள்பட ஐரோப்பாவின் பல நாடுகளில் அரசியல் புகலிடம் பெற்று வாழ்ந்துவருகின்றனர். ஜெனீவாவில் அரசியல் புகலிடம் பெற்றுவாழும் இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுனந்த தேசப்பிரிய. இவர் சிங்களர் என்றாலும், இலங்கைத் தமிழர் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளில் அரசுக்கு முரணான கருத்துக்களை முன்வைத்ததால், அரசிடமிருந்தும் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் உயிருக்கே ஆபத…
-
- 0 replies
- 488 views
-