ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
தமிழர்களின் ஆதரவுக் குரல்களை திட்டமிட்ட வகையில் இலங்கை அரசாங்கம் நசுக்கி வருவதற்கு எதிராக பிரித்தானிய மகாராணி இராஜதந்திர அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அமைதியாக நாட்டை விட்டு வெளியேறலாம் என்ற அடிப்படையிலேயே இன்று நிலைமை காணப்படுகிறது. இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறைமைக்கு எதிராக உள்ள எந்த வெளிநாட்டு அரசாங்கமும், நிறுவனங்களும் மற்றும் தனியாட்களையும் இலங்கை அரசாங்கம் ஒரேவகையிலேயே நடத்துகிறது. இந்தநிலையில் தமது கொள்கைகளுக்கு அப்பால் சென்று செயற்படும் யாரும் நாட்டில் இருந்து அமைதியான முறையில் வெளியேறலாம் என்று நிலைப்பாட்டையும் அது கொண்டுள்ளதாக பிரித்த…
-
- 0 replies
- 227 views
-
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையை மதிப்பீடு செய்வதற்கு, ஜனவரி மாதம் அங்கு செல்லவுள்ளதாக முன்னர் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார். ஜனவரி மாதம் முடிவடைவதற்கு இன்னமும் 12 நாட்களே உள்ள நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்டது போன்று, சிறிலங்கா செல்லும் திட்டம் உள்ளதா என்று இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் நேற்று நவநீதம்பிள்ளையிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர், ஆம், சிறிலங்கா செல்லும் திட்டம் உள்ளது என்று பதிலளித்துள்ளார். எனினும், அவர் தனது பயணம் எப்போது இடம்பெறவுள்ளது என்ற தகவலை வெளியிடவில்லை. http://w…
-
- 0 replies
- 217 views
-
-
-எஸ்.ஜெனி மன்னாரில் மற்றுமொரு ஊடகவியளாருக்கு 'சியாத் இய்க்கம்' என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏ.எஸ்.எம்.பஸ்மி என்பவருக்கே இவ்வாறு நேற்று முன்தினம் மாலை இவ்வாறு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றம் மீது கடந்த வருடம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்போது சம்பவ இடத்தில் நின்று செய்திகளை சேகரித்த மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவருக்கு எதிராக கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 'சியாத் இயக்கம்' என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி ஊடகவியலாளர்கள் கொலை மிரட்டல் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இந்நிலையிலே மேற்படி பஸ்மி என்பவருக்கும் கொலை மிரட்டல் கடிதம் அ…
-
- 0 replies
- 332 views
-
-
சிறிலங்காவுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ள பரசிற்றமோல் January 15, 2013, 6:48 am|views: 124 பல அழுத்தங்களுக்கு உள்ளாகி வரும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு, மற்றுமொரு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவில் பயன்படுத்தும் நோய் வலி நிவாரணியான பரசிற்ற மோல் வில்லைகள் வழமையைவிட அதிகமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டில், சிறிலங்காவின் சனத்தொகையை விட 40 மடங்கு அதிகமான, பரசிற்ற மோல் வில்லைகள் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டில், வலி நிவாரணியான 810 மில்லியன் பரசிற்றமோல் வில்லைகள் அரசு மருத்துவமனைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. 2011ம் ஆண்டில் 560 மில்லியன் பரசிற்றமோல் வில்லைகளே அரசு மருத்து…
-
- 6 replies
- 939 views
-
-
தலைமன்னாரில் பேருந்து விபத்து - 12 பேர் கவலைக்கிடம்! [saturday, 2013-01-19 07:55:01] மன்னார் - தலைமன்னார் கரசல் இரண்டாம் கட்டைச் சந்தியில் இன்று (18) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 12 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் எட்டுப் பெண்களும் நான்கு ஆண்களும் அடங்குவர். இது தொடர்பான விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://seithy.com/breifNews.php?newsID=74137&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 344 views
-
-
மாணவர்களின் விளையாட்டுத் திறமையை மேம்படுத்த சீன அரசாங்கம் உதவி - நாமல் ராஜபக்க்ஷ கோரிக்கை விடுத்தாராம்! [saturday, 2013-01-19 08:12:37] வடக்கு, கிழக்கு மாகாண மாணவர்களின் விளையாட்டுத் திறமையை மேம்படுத்துவதற்காக சீன அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளது. இதற்கமைவாக, நான்கு கோடி ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை சீன அரசாங்கம் கையளித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் விளையாட்டு உபகரணங்களை அலரி மாளிகையில் இன்று கையளித்தார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய சீன இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, யுத்தத்தின் பின்னர் பிள்ளைகளின் மனோநிலையை வழமையான நிலைக்குக் கொண்டுவர…
-
- 0 replies
- 223 views
-
-
தங்க வாயில்... வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2013 18:07 தெற்காசியாவின் மீன் ஏற்றுமதியின் தங்க வாயிலான கேந்திர நிலையம், திக்கோவிட்ட மீனவ துறைமுகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது. மீன் ஏற்றுமதிக்காகவே தயாரிக்கப்பட்ட இந்த புதிய துறைமுகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பசில் ராஜபக்ஷ, பீளிக்ஸ் பெரேரா, பிரதியமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே, சரத் குமார குணரத்ன, துலீப் விஜேசேகர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு – ஜனாதிபதி ஊடக பிரிவு) http://tamil.dailymirror.lk/--main/57200-2013-01-18-12-44-30.html
-
- 2 replies
- 736 views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நாவற்குழி எனுமிடத்தில் வைத்தே இன்றிரவு 10.45 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலினால் பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. தாக்குதலில் பயணிகளுக்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை. என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/57233-2013-01-18-17-49-51.html
-
- 11 replies
- 753 views
-
-
பெரும்பான்மையினருக்கு சார்பாக செயற்படும் சில இனவாத அரசியல்வாதிகள் மலையக மக்களை அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக ஓரம்கட்ட முனைந்து வருகின்றனர். இத்தகைய பச்சோந்தி அரசியல்வாதிகளை மலையக அரசியல்வாதிகள் மலையகத்திற்கு அழைத்து வந்து மாலையணிவித்து கௌரவித்து வருவது வெட்கக்கேடான செயலாகும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.இராஜரட்ணம் தெரிவித்தார். நாட்டில் இனவாதிகளின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றமை குறித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுபான்மை மக்களின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது. சகல மட்டங்களிலும் சிறுபான்மையினர் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். சிறுபான்மையினர் இன்னும் பல்வேறு உரி…
-
- 0 replies
- 412 views
-
-
மகாராணி இல்லாத மாநாடா? உலகத் தலைவர்களும் வரார்; பொதுநலவாய விவகாரத்தில் இலங்கைக்கு பேரிடி இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாட்டைப் புறக்கணிப்பதற்கு கனடா, பிரிட்டன் உள்ளிட்ட முக்கிய சில நாடுகள் தீர்மானித்துள்ளன என்று இராஜ தந்திர வட்டாரங்களிலிருந்து நம்பகரமாக அறியமுடிகின்றது. அதேவேளை, இந்த மாநாட்டை வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பதற்கு இலங்கை வரவிருந்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவரும், பிரிட்டனின் மகாராணியுமான எலிசபெத் தனது பயணத்தை இரத்துச் செய்வார் என்றும் அந்தவட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இதனால் இனிவரும் காலங்களில் இலங்கை அரசு அரசியல், பொருளாதார ரீதியில் பல நெருக்கடி…
-
- 5 replies
- 676 views
-
-
யாழ்ப்பாணத்தில் தந்தை அல்லது தாயை இழந்த 5,732 சிறுவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டில் தந்தையை இழந்த சிறுவர்கள் 4,679 பேரும் தாயை இழந்த சிறுவர்கள் 1,053 பேரும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தையை இழந்த நிலையில், நெடுந்தீவில் 101 சிறுவர்களும் வேலணையில் 226 சிறுவர்களும் ஊர்காவற்றுறையில் 179 சிறுவர்களும் காரைநகரில் 123 சிறுவர்களும் யாழ்ப்பாணத்தில் 381 சிறுவர்களும் நல்லூரில் 301 சிறுவர்களும் சண்டிலிப்பாயில் 530 சிறுவர்களும் சங்கானையில் 346 சிறுவர்களும் உடுவிலில் 503 சிறுவர்களும் தெல்லிப்பழையில் 364 சிறுவர்களும் கோப்பாயில் 186 சிறுவர்களும் சாவகச்சேரியில் 551 சிறுவர்களும் கரவெட்டியில் 354 சிறுவர்களும் பருத்தித்துறையில் 461 சிறுவர்களும் மருதங்கேணி…
-
- 8 replies
- 700 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தூதுக்குழு ஒன்று விரைவில் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றது. இத்தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்புக்கு சென்று அமரர் இராசமாணிக்கத்தின் 100வது பிறந்த தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் கொழும்பு திரும்பியதும் வெளிநாட்டுப்பயணங்கள் பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் முதலில் தென்ஆபிரிக்கப் பயணத்தினை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் இந்தியாவில் இருந்து திருகோணமலை திரும்பிய சம்பந்தன் மேலும் தெரிவித்தார். தென்னாபிரிக்க பயணம் பற்றி கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ. சுமந்திரன் "தென்னாபிரிக்கா நடுநிலை வகிக்கவில்லை, தனது பட்டறிவுகளைய…
-
- 1 reply
- 446 views
-
-
பதவி நீக்கப்பட்ட தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்க ஏழு நீதிபதிகளுக்கு வழங்கிய இடமாற்ற உத்தரவுகளை புதிய தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் ரத்துச் செய்தார். ஏதிர்வரும் 21ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் ஷிரானி பண்டாராநாயக்க இடமாற்றங்கள் குறித்து உத்தரவிட்டார். அதற்கான கடிதங்களும் நீதிபதிகளுக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில் அந்த இடமாற்றங்கள் செல்லுபடியற்றதாக அறிவித்து, அவற்றை புதிய தலைமை நீதிபதி ரத்துச் செய்துள்ளதாக எமது கொழும்பு செய்தியாளர் கூறினார். மொஹான் பீரிஸின் நடவடிக்கை அவரது சுயமான முடிவு அல்ல என்றும் ஜனாதிபதியின் தலையீட்டினால் மொஹான் பீரிஸ் அவ்வாறு செய்தாரெனவும் வழக்கறிஞர் ரெமேஸ் டி சில்வா தெரிவித்தார். http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.as…
-
- 1 reply
- 387 views
-
-
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிவிலக்கியமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளை ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார். பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடரில் இது தொடர்பில் அறிக்கையொன்றை முன்வைக்கபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பு மற்றும் சமரச செயன்முறைகள் தொடர்பில் அந்த அறிக்கையில் கவனம் செலுத்தப்படும். என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை இலங்கையில் ஒரு கசப்பான பிளவை ஏற்படுத்தும். இந்த விவகாரம் பொறுப்பு மற்றும் சமரச செயன்முறைகளுக்கு ஒரு கசப்பாக சமிக்ஞையை காட்டுகின…
-
- 3 replies
- 327 views
-
-
இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வடக்காக 10 கிலோமீட்டர் தொலைவில் மிகப்பெரியதான திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார். ஆசியாவிலேயே மிகப் பெரிய மீன்பிடித்துறைமுகம் என்று இலங்கை அரச ஊடகங்கள் விபரித்துள்ள திக்கோவிட்ட துறைமுகம் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் கிட்டத்தட்ட 53 யூரோ மில்லியன் செலவில்(இலங்கை ரூபாயில் கிட்டத்தட்ட 9500 மில்லியன் ரூபாய் செலவில்) நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மொத்த செலவில் 45 யூரோ மில்லியன் நிதியை ( 65 வீதமளவு கடனாகவும் 35 வீதமளவு மானியமாகவும்) நெதர்லாந்து வழங்கியுள்ளது. மிகுதி 8 யூரோ மில்லியன் பணத்தை இலங்கை அரசாங்கம் செலவிட்டுள்ளதாக திக்கோவிட்ட துறைமுக நிர்வாக முகாமையாளர் நுவன் ஜயசிங்க ப…
-
- 1 reply
- 701 views
-
-
20/01/2013 Australia vs. Sri Lanka Cricket at the Sydney Cricket Ground. Over 60 years of Genocide against Tamils cannot be hidden by cricket. The massacre of up to 100,000 Tamils in May 2009 cannot be hidden by cricket. Hundreds and thousands of lives shattered by the Sri Lankan Government cannot be hidden by cricket. As Trevor Grant, former chief cricket writer at The Age has said: “This cricket team is really part and parcel of maintaining the credibility a government that has already been called out on war crimes and crimes against humanity by the UN, and it continues to persecute the Tamils in the Northern and Eastern regions of Sri Lanka.” The 20th of January…
-
- 1 reply
- 397 views
-
-
மக்கள் இதுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்படாத மயிலிட்டிப் பகுதியில், படையினரால் பசுப்பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் "யோக்கட்' உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று கடந்த தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டிப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து கடந்த 23 வருடங்களாக நலன்புரி நிலையங்களிலேயே தங்கியுள்ளனர். தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி அந்தப் பகுதியில் மக்கள் மீளக்குடியமர்வதற்குப் பாதுகாப்புப் படையினர் அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று மயிலிட்டிப் பகுதியில் படையினரால் "யோக்கட்' உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி விடுத்…
-
- 0 replies
- 560 views
-
-
யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2013 இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் மாகாலிங்கம், மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தனர். சர்வதேச வர்த்தக கண்காட்சியானது நான்காவது தடவையாக நடைபெறுகிள்றது. அதன்படி இன்று 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் இக் கண்காட்சி எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. கண்காட்சியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரதம விருந்தினர்களை வரவேற்கும் நிகழ்வு யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்றது. அதனையடுத்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இங்க…
-
- 0 replies
- 796 views
-
-
கொமன்வெல்த்துக்கு என்ன பெறுமதி உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன. சிறிலங்கா அரசாங்கம் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்துள்ளது குறித்து கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதுகுறித்து நியுயோர்க்கில் செய்தியாளர் ஒருவர், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநதி பாலித கொஹன்னவிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அப்போதே,"கொமன்வெல்த்துக்கு என்ன பெறுமதி உள்ளது?" என்று கிண்டலாக அவர் பதில் கேள்வி எழுப்பியுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?20130118107619
-
- 0 replies
- 457 views
-
-
“சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் இடம்பெறும் எல்லா வெளிநாட்டுத் தலையீடுகளுக்கும் ஒரே காரணம் விடுதலைப் புலிகளை அழித்தது தான்.” இவ்வாறு கூறியுள்ளார் சிறிலங்காவின் வீடமைப்பு மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ச. ‘போர் மற்றும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பின்னர் சிறிலங்கா‘ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “பல்வேறு வடிவங்களில் சிறிலங்காவுக்கு எதிரான வெளிநாட்டுச் சதிகள் இடம்பெறுகின்றன. புலம்பெயர் தமிழர்களும், குறிப்பிட்ட மேற்கு நாடுகளும் சிறிலங்காவில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்புகின்றன. போர்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த, சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தீர்மானத்துக்கு ஆதரவு திரட்ட அனை…
-
- 0 replies
- 407 views
-
-
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சி வன்னியில் நீடித்தால் அங்கு எந்தவிதமான சீர்கேடுகளும் நடந்திருக்காது என்று சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவமொன்றை வவுனியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் சிறிலங்காவிலிருந்து ஒலிபரப்பாகும் சூரியன் எவ்.எம் அலைவரிசை மூலமாக அம்பலப்படுத்தியுள்ளார். இச் சம்பவமானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது. சூரியன் எவ்.எம் அலைவரிசையில் தைப்பொங்கல் தினமாகிய திங்கட்கிழமை நிகழ்ச்சியொன்று ஒலிபரப்பாகியது. “தமிழ் மக்களின் கலாசாரம் திட்டமிட்டுச் சீரழிக்கப்படுகின்றதா” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வாசகர்கள் தொலைபேசியூடாக கருத்துக்களைக் கூற அந்தக் கருத்துக்கள் நேரடியாகவே ஒலிபரப்பாகி…
-
- 10 replies
- 1.3k views
-
-
நீதித்துறையினரும் வழக்குரைஞர்களும் மிரட்டப்படுவதால் இவ்வருடம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளின் போது இலங்கை எவ்வளவு தூரம் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இப்போது தெரியவில்லை என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. சர்வதேச யூரிகள் மன்றம், சர்வதேச சட்டவுரைஞர்கள் சங்கம் என்பன எவ்வாறெனினும் இந்த பிரச்சினையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரஸ்தாபிக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரம் முதலில் நாடாளுமன்றத்தை விழுங்கியது. இப்பொது நீதித்துறையை விழுங்கிவிட்டது. அடுத்து உள்ளவர்கள் சட்டவுரைஞர்கள். இந்த பிரச்சினை தொடர்ந்தும் விசனத்துக்குரிய விடயமாக மனித உரிமைகள் பேரவையில் இருக…
-
- 0 replies
- 425 views
-
-
Sri Lankan National Security Media Centre hacked and defaced by Game Over A Hacker with twitter handle "@ThisIsGame0ver" has hacked into the official website of Sri Lanka's Media Center for National Security. The Media Centre for National Security (MCNS) was established for the specific purpose of disseminating all national security and defence-related information and data to the Media and the public from one co-coordinated centre. The hack was announced in Twitter . As per the mirror of the defacement page, the security breach was occurred on 14th Jan. The hacker defaced main page(nationalsecurity.lk) as well as uploaded a defacement page in uploads …
-
- 21 replies
- 6.5k views
-
-
பொதுநலவாய அமைப்பில் இருந்து சிறிலங்காவை இடைநிறுத்துவதற்கான தருணம் வந்துவிட்டதாக முன்னாள் இராஜதந்திரியும், பொதுநலவாய அமைப்பின் பத்து முன்னணி உறுப்பினர்கள் குழுவின் முன்னாள் உறுப்பினருமான Sir Ronald Sanders தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலமே தனது 2.1 பில்லியன் மக்களிடத்தில் பொதுநலவாய அமைப்பு நம்பிக்கையை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், பொதுநலவாய அமைப்பின் உயர்ந்த கொள்கைகளான ஜனநாயகம், மனிதவுரிமை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை சிறிலங்கா மீறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'பொதுநலவாய அமைப்பின் உயரிய கொள்ளைகளை பேணிப் பாதுகாப்பதும், அதனை உயர்…
-
- 11 replies
- 940 views
-
-
வடக்கில் இன முரண்பாடுகள் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கின் மன்னாரில் இவ்வாறான ஓர் சூழ்நிலை காணப்படுவதாக இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டியன் ரொபிச்சன் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூக மக்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களுக்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குறித்த பிரதேச மக்களின் அபிலாஷைகள் மற்றும் நோக்கங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். கடற்படையினரின் கட்டுப்பாடுகளினால் மீனவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் முஸ்லிம…
-
- 2 replies
- 546 views
-