ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143434 topics in this forum
-
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த அறிக்கை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று தினங்கள் இடம்பெற்ற இந்த மாநாடு கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பான அறிக்கை ஒன்றை மாநாட்டில் சமர்ப்பித்துள்ளனர். யுத்த வலய மக்களின் நிலைமை, அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினைக்கான தீர்வு, யாழ்ப்பாண மாணவர்களின் கைது, காணிப்பிரச்சினை, தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.இந்தியா, அவுஸ்ரேலியா, மியன்மார் போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http…
-
- 3 replies
- 642 views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு இலங்கையின் உதவியையும் பயிற்சியையும் வழங்க தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிக்ராம் அண்மையில் இலங்கைக்கு வருகைதந்திருந்த போது இதனை நான் தெரிவித்திருந்தேன். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இ;ந்திய படைகளுக்கு பயிற்சியளிக்கும் என்ற எங்களுடைய நிலைப்பாட்டை மீண்டும் நான் கூறினேன். நாம் இந்த துறையில் பயிற்சி மட்டுமன்றி நெறியாள்கை ஒன்றினையும் வரைந்துள்ளோம். இவற்றை பயங்கரவாதத்திற்கு முகம்கொடுக்கும் ஏனைய நாடுகளுக்கும் வழங்க நாம் முன்வந்த…
-
- 6 replies
- 773 views
-
-
யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில் கடமை புரிந்து வந்த பொலிஸார் திடீரென இன்று காலை முதல் அவ்விடத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக கலைப்பீட மாணவர்கள் கூடுவதனை அடுத்தே இந்த திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இது குறித்து தெரியவருவதாவது: யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில், விஞ்ஞான பீட வாயில், மாணவர் விடுதிகளின் வாயில்களில் கடந்த நவம்பர் 28ம் திகதி முதல் யாழ்ப்பாண பொலிஸார் காவற்கூடுகளை அமைத்து காவல் கடமையில் ஈடுபட்டு வந்தனர். பொலிஸாரின் பிரசன்னம் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் அமைவதாகக் குறிப்பிடப்பட்டு கடும் விமர்சனங்களுக்குள்ளாகிய நிலையிலும், ஒரு மாத காலமாக நிலைகொண்டி…
-
- 0 replies
- 480 views
-
-
சீருடையுடன் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்த இராணுவச் சிப்பாய்க்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. குறித்த இராணுவச் சிப்பாயை எதிர்வரும் 8ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு அனுராதபுர நீதவான் ருவான்திக்கா மாரபன உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர் ரனசேவா இராணுவ முகாமிற்கு அருகாமையில் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்ததாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். 20 மில்லிகிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறித்த இராணுவச் சிப்பாய், நீண்டகாலமாக சீருடையில் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=73007&category=TamilNews&language=…
-
- 1 reply
- 220 views
-
-
நவம்பர் 27 அன்று சீனாவுடன் கூட்டுச் சேர்ந்து உருவாக்கப்பட்ட SupremeSAT 1 எனும் புதிய செய்மதியானது தற்போது அதற்கான சரியான இடத்தில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் யூன் 2013ல் இதன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்புதிய செய்மதி அதற்கான சரியான திசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது விண்ணில் தனது செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு இன்னமும் ஆறு மாதங்கள் தேவைப்படுவதாகவும் Supreme குழுவின் பிரதம நிறைவேற்று இயக்குனர் விஜித் பீரிஸ் தெரிவித்துள்ளார். "நாங்கள் இந்த செய்மதிக்கான தரைக்கட்டுப்பாட்டு நிலையம் தொடர்பில் பல்லேகல விண்வெளி கல்லூரியுடன் பேச்சுக்களை நடாத்தி வருகிறோம். இத்திட்டத்தை அமுல்படுத்துவதில் தொலைத் தொடர்பாடல் அதிகார சபையின் அனு…
-
- 2 replies
- 344 views
-
-
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஐ.நா கவனம் 31 டிசம்பர் 2012 பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் சட்டத்தரணிகள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை தொடர்பான விசேட பிரதிநிதி கப்ரியல் நூலா தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளும், நீதித்துறைச் சார்ந்தோர் மீதான தாக…
-
- 2 replies
- 562 views
-
-
கடந்துபோன 2012 ஆம் ஆண்டு இலங்கையை பொறுத்தவரை பல வகைகளிலும் ஒரு ஏமாற்றம் மிக்க ஆண்டாகவே கடந்து போயிருப்பதாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், சிலோன் டுடே பத்திரிகையின் மூத்த செய்தி ஆசிரியரும், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான அனந்த் பாலகிட்ணர் கூறியுள்ளார். போரில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இலங்கை தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த மார்ச் மாதத்தில் நடந்த ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக வந்த தீர்மானம் ஒரு உந்து சக்தியாகப் பார்க்கப்பட்டாலும், அதனையடுத்து பெரிய அளவில் எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை இலங்கையின் தென்பகுதி அரசியலைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் பலமிழந்த நிலையில், ஒரு தனிந…
-
- 1 reply
- 702 views
-
-
இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பெண்கள் n;தாடர்பில் கவனம் செலுத்துமாறு அமெரிக்க முதல் பெண்மணியான மிச்சல் ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பரக் ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பெண்கள் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் பெண்களின் நிலைமை குறித்து மி;ச்சல் ஒபாமாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் வடக்குகிழக்கு வாழ் பெண்களில் பலர் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. யுத்தத்தின் போது கணவரை இழந்த பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் குடும்பத் தலைமைப் பொறுப்பை வகித்து வருவதாகவும், வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித…
-
- 0 replies
- 712 views
-
-
கடந்த சில தினங்களாக வன்னியில் பெய்துள்ள மழைகாரணமாக இரணைமடுக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகையில் சில குளங்கள் உடைப்பெடுத்து வெள்ள நீர் காட்டாறாக பாய்ந்துவருகின்றது. இவ்வாறு வன்னியில் வீதிகளையும் ஊர்மனைகளையும் ஊடறுத்து பாய்ந்துவரும் காட்டாற்று வெள்ளத்தில் எமது உறவுகள் சிக்கித்தவித்து வருகின்றனர். மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக மாபெரும் இனஅழிப்பில் இருந்து தப்பியவர்கள் வனவாசம் மேற்கொண்டு தம்மை நிலைப்படுத்த முற்படுகையில் இயற்கை அன்னையும் தனது பங்கிற்கு அவ்வப்போது சோதனைமேல் சோதனை கொடுத்துக்கொண்டுதான் உள்ளார். எமது மக்கள் மழை வெள்ளத்தில் சிக்குண்டு தவித்துவரும் நிலையில் எம்மவர்களது புலம்பல் அந்த இயற்கை அன்னையின் காதுக…
-
- 2 replies
- 900 views
-
-
By General 2012-12-31 13:49:07 இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவியொருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டமையைக் கண்டித்தும் உயிரிழந்த மாணவிக்கு ஆதரவு தெரிவித்தும் கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அண்மையில் கையொப்பம் திரட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சமூக அமைப்பைச் சார்ந்தோர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர். http://www.virakesari.lk/article/local.php?vid=2335
-
- 5 replies
- 445 views
-
-
மண்டைத்தீவில் நான்கே வயதேயான சிறுமி பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை:- 28 டிசம்பர் 2012 யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசும் அதனது முகவர்களும் அபிவிருத்தி பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கையில் இன்று நான்கே வயதேயான சிறுமி பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மண்டைத்தீவு கிணறொன்றிலிருந்து இன்று மதியம் குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமியான சுரேந்திரன் சுதந்தினி வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் குறித்த சிறுமி பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளான நிலையில் சடலமாக வீசப்பட்டிருந்தமை இன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மனித பயன்பாட்டிலில்லாத குறித்த கிணற்றினுள் சிறுமி அணிந்து சென…
-
- 38 replies
- 2.4k views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கூட்டமொன்று, கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையில் இன்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கூட்டங்கள் ஒவ்வொரு பீடங்களின் மாணவர் ஒன்றியத்துடன் தனித்தனியாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினால் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று கலைப்பீட மாணவர் ஒன்றியத்துடன் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதற்கு இணங்க மறுத்த ஒன்றியம், மாணவர்களை விடுவிக்கும்வரை கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க…
-
- 0 replies
- 489 views
-
-
அரச அல்லது உள்ளுர் தனியார் நிறுவனங்களுடன் எவ்விதத் தொடர்புகளையும் கொண்டிராடிமல் சர்வதேச நாடுகளின் நிதி உதவியுடன் சிறிலங்காவில் செயற்பட்டு வரும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க மஹிந்த அரசு தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.இது தொடர்பில் கோத்தா உரிய கட்டளைகளை வழங்கியுள்ளாராம். . குறித்த அரசார்பற்ற நிறுவனத்தின் தலைவர் ஆடம்பர வாகனம், ஆடம்பரமான வீடு மற்றும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ளார். இவர் வருடத்தில் 15 க்கும் மேற்பட்ட தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன என திவய்ன வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளது. 2002 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் இந்த …
-
- 2 replies
- 503 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்த தயார்: அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தத் எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அமர்வுகளின் மூலமே 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர முடியும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். எனினும் 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை செய்வது குறித்து அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் அதற்கு தயார் எனவு…
-
- 0 replies
- 623 views
-
-
சிறிலங்காவில் தொடரப்பட்ட நீண்ட கால யுத்தத்தின் இறுதி மாதங்களில் போரில் சிக்குண்ட தமிழ் மக்களை பாதுகாப்பதில் ஐக்கிய நாடுகள் சபை போதியளவு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு கடந்த மாதம் ஐ.நா இது தொடர்பான உள்ளக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. 2008ன் பிற்பகுதியில் தமிழ்ப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்த போது சிறிலங்காவின் வடக்கில் நிலைகொண்டிருந்த ஐ.நா பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். இந்த நேரத்தில் அங்கு தொடர்ந்தும் பணியில் ஈடுபடுமாறு தமிழ்ப் பொதுமக்கள் ஐ.நா அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்த போதும், தனது பணியாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஐ.நா சுட்டிக்காட்டியது. இதன்பின்னர் தனது பணியாளர்…
-
- 0 replies
- 747 views
-
-
இந்தியாவின் தமிழகத்தில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்டதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் விசாரணைகளின் போது ஒப்புக் கொண்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நான்கு பல்கலைக்கழக மாணவர்களில் இருவர் இவ்வாறு தாம் பயிற்சி பெற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். சுற்றுலா வீசா மூலம் தமிழகத்திற்கு சென்று பயிற்சி பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இரண்டாம் தலைமுறைப் படைப் பிரிவு என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு, யாழ்ப்பாண இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி வருவதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. தமிழகத்தில் பயிற்சி பெ…
-
- 1 reply
- 729 views
-
-
மாங்குளம், கொக்காவில் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மேற்படி வைத்தியர், பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், மேற்படி வைத்தியரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/55914-2012-12-31-10-10-29.html மருத்துவர் சிவசங்கர் மாங்குளம் பொலிஸில் மருத்துவர் சிவசங்கர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவி…
-
- 0 replies
- 635 views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர் மீதான புனர்வாழ்வு சட்டவிரோதமானது! - சரத் பொன்சேகா விமர்சனம்!! அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், நீதிமன்ற உத்தரவின்றி எந்தச் சட்டத்தின் பிரகாரம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளரும், பாதுகாப்புத் தரப்பினரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிலுள்ள சட்டதிட்டங்கள் அனைவருக்கும் சமமானதாக இருத்தல் வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்கோ அல்லது எந்தவொரு தரப்புக்கோ இதில் பாகுபாடு இருத்தல்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரா…
-
- 7 replies
- 829 views
-
-
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளியேன்! புனர்வாழ்வின் பின்னரே மாணவர்களை விடுவிப்பேன்!! - கோத்தபாய 'நான் நினைத்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழக மாணவர்களைத் தடுப்புக் காவலிலும் வைக்க முடியும். அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். ஆனாலும், மாணவர்களின் எதிர்கால கல்வியை கருத்திற்கொண்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் நால்வரையும் புனர்வாழ்வு வழங்காமல் விடுவிக்கவே முடியாது.' கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது சிறிலங்கா படைத்துறை அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸா…
-
- 0 replies
- 704 views
-
-
யாழில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம்; ஐதே.க அறிவிப்பு யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள்அரசாங்கத்திற்கு எதிராக மூன்று நாள் போராட்டத்தினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்தே இந்தப் போராட்டத்தினை நடாத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம், 16 ஆம் 17ஆம் திகதிகளில் இந்தப் போராட்டத்தினை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது நாட்டில் உள்ள அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கிலேயே இந்தப் போராட்டம் நடத்…
-
- 0 replies
- 344 views
-
-
2011 ஆம் ஆண்டு நத்தார் தினத்தில் செஞ்சிலுவை சங்க ஊழியரான ஹூறம் சைக் எனும் பிரித்தானிய பிரஜை கொல்லப்பட்டதை இலங்கை அரசாங்கம் மூடி மறைப்பதாக பிரித்தானிய தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சைமன் டன்க்ஸுக் விசனம் தெரிவித்தார். உள்ளூர் அரசியல்வாதி ஒருவரை பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கம் இந்த வழக்கை மெதுவாக கைவிட முயல்வதையிட்டு தான் கவலையடைந்துள்ளதாக அவர் கூறினார். தங்காலையில் ஒரு சுற்றுலா மையத்தில் குடிகார கும்பல் ஒன்றின் துன்புறுத்தலிலிருந்து உணவக உரிமையாளரை காப்பாற்றுவதற்கான சமாதான முயற்சியில் ஈடுபட்ட போதே இவர் துப்பாக்கியால் சுடப்பட்டும் கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டார். ஒரு வருடம் கழிந்துவிட்ட நிலையில் சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்…
-
- 3 replies
- 736 views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரன் மீது நல்லூரில் அசிற் வீச்சு! [saturday, 2012-12-29 10:22:48] முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரன் துவாரகேஸ்வரன் மீது சற்றுமுன் யாழ்.நல்லூர் ஆலய பகுதியில் அசிற் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அசிற் வீசப்பட்ட நிலையில் காயமடைந்த துவாரகேசஸ்வரன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://seithy.com/breifNews.php?newsID=72900&category=TamilNews&language=tamil
-
- 10 replies
- 820 views
-
-
அரச துறையில் பல்வேறு வெற்றிடங்கள் நிலவுகின்றன. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களை தேடிக்கொள்வதில் அரசாங்கம் சிக்கல்களை எதிர்கொள்கின்றது. என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். குருணாக்கல் டி.எஸ்.சேனாநாயக்க வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரச துறையில் இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் கூடுதலான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறான வேலை வாய்ப்புகள் இருந்தும் முக்கியமான துறைகளில் இணைந்து கொள்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். அரசாங்கத்தில் பல்வேறு துறைகளில் வெற்றிடங்கள் நிலவுகின்றன. அந்த வெற்றிடங்களுக்கு த…
-
- 5 replies
- 783 views
-
-
பிரித்தானியாவின் தொழிலதிபரொருவர் வத்தளையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். றிச்சர்ட் வில்கின்ஸன் என்ற 49 வயதுடைய பிரித்தானிய தொழிலதிபரே இன்று மரணமாகியுள்ளார். இங்கிலாந்திலிருந்து மாலைதீவுக்கு பயணிக்கும் வழியில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரித்துநின்றபொழுது குறித்த தொழிலதிபருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை வத்தளையிலுள்ள தனியார் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ராகமை வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணை அதிகாரி மேற்படி நபரின் மரணம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்ததில் புற்றுநோய் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாகவும் அவரது சடலத்தை இங்கிலாந்துக்கு எடுத்துச்செல்ல அனும…
-
- 1 reply
- 684 views
-
-
(ஹனீக் அஹமட்) கிழக்கு மாகாண முதலமைச்சர் குறித்து எமது கட்சி முக்கியஸ்தர்கள் இந்த மேடையில் கூறிய சில விடயங்களைக் கேட்கும்போது, அவர் நம்பிக்கைக்குரியவர் என்கிற மனப்பதிவில் தாக்கம் ஏற்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் இரண்டு வருடங்களுக்கு மட்டும்தான் அந்தப் பதவியில் இருக்க முடியும் என்பதனை நான் அறுதியும் உறுதியுமாகக் கூறுகின்றேன் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24ஆவது பேராளர் மாநாடு நேற்று சனிக்கிழமை தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் நடைபெற்றது. இம் மாநாட்டின் இரண்டாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதேவேளை, அரசாங்கத்தை விட்டும் முஸ்லிம் காங்கிரஸ் விலகாது என்றும்…
-
- 2 replies
- 499 views
-