Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவில் புலிகளின் சீருடையுடன் எலும்புக் கூடு! [Friday, 2012-12-21 09:37:09] முல்லைத்தீவு ஆனந்தபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள காணியொன்றில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக் கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனந்தபுரம் 5ஆம் வட்டாரத்திலுள்ள பழனியப்பன் தங்கம்மா என்பவரின் வீட்டிலுள்ள பதுங்கு குழியிலிருந்தே இந்த எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட போரில் இடம்பெயர்ந்து செல்வதற்காக குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டு உபகரணங்களை பதுங்கு குழியினுள் இட்டு மூடியுள்ளார். தற்போது அதனை எடுப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை பதுங்கு குழியை தோண்டியபோது அதிலிருந்து ஆணின் மண்டையோடு ஒன்று வெளிப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேலும் சில அடி தூரம் தோ…

  2. ஹசன் அலி, பைசல் காசிம் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றம்: - [Friday, 2012-12-21 08:55:34] நிந்தவூர் பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மூவரின் பகிஷ்கரிப்புக்கு மத்தியில் எதிர்க்கட்சி உறுப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேவேளை நிந்தவூர் பிரதேச சபையின் நேற்றைய அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிந்தவூரைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஹசன் அலி மற்றும் பைசால் காசிம் ஆகிய இருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள நிந்தவூர் பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நேற்று வியாழக்கிழமை அத…

  3. ஐ. நா அதிகாரிகளால் பத்திரிக்கையாளர் மாநாடுகளில் வெளியிடப்பட்ட அறிக்கைகள், விக்கிலீக்கின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்ட உண்மைகள், படுகொலைக் களத்தில் பணியாற்றிய 12 ஐ. நா அதிகாரிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது எத்தகைய பொதுமக்கள் அழிவுகள் ஏற்படினும் புலிகளை தோற்கடித்து அழித்துவிடவேண்டும் என்று ஐ. நா திட்டமிட்டுச் செயற்பட்டது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. பாரிய மனிதப்படுகொலைகளை மறைப்பதற்காகத் திரும்பத் திரும்ப சிங்கள அரசாங்கத்தினது "போர் சூனியப் பிரதேசம் மீது கனரக ஆயுதங்களைப் பாவிக்க மாட்டோம்" எனும் பொய்யை முழுமையாக வேண்டுமென்றே நம்பியது மட்டுமல்லாமல், வேண்டுமென்றே வன்னிக் கொலைக்களத்தில் நடந்த படுகொலைகளை மறைத்தது, அங்கே நடைப…

  4. இலங்கையின் நிதி நிலமை ஆபத்தில்; சர்வதேச நாணைய நிர்ணைய சபை எச்சரிக்கை. இலங்கையின் நிதி நிலமை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக சர்வதேச நாணைய கட்டுப்பாட்டுச்சபை எச்சரித்துள்ளது இதன் மூலம் உலகின் ஆபத்தான நிதி நிலமை கொண்ட 14 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது வாங்கிய கடனை அடைக்கும் தகமையோ புதிய கடன்களை பெறும் தகுதிகளோ இலங்கையிடம் தற்போது இல்லை என்பது இந்த எச்சரிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்த எச்சரிக்கையினைத் தொடர்ந்தே சிங்களத்தின் உற்ற நண்பன் சீனா கூட தனது 868 பில்லியன் ரூபா கடந்தொகையினை நிறுத்தி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது http://www.pathivu.com/news/22925/57//d,article_full.aspx

    • 3 replies
    • 906 views
  5. பிரதம நீதியரசரை அரசியலில் இணையுமாறு சரத் பொன்சேகா கோரிக்கை 20 டிசம்பர் 2012 பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை அரசியலில் இணைந்து கொள்ளுமாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். செயற்பாட்டு அரசியலில் களமிறங்குமாறு பிரதம நீதியரசரிடம், சரத் பொன்சேகா அழைப்பு விடுத்துள்ளார். பிரதம நீதியரசர் அரசியலில் களமிறங்கினால் அதற்கு பூரண ஆதரவளிக்கத் தயார் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார். அரசியலில் களமிறங்கியமை தமக்கு எவ்வித வருத்தமளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவொரு நபரினதும் இத்த கயிற்றை தாம் சாப்பிடவில்லை எனவும், பிரதம நீதியரசர் அரசியலில் களமிறங்குவதில் தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தே…

  6. நிலம் உள்ளிறங்கி 60 அடி பள்ளம் திடீரென தோற்றம் திடீரென நிலம் உள்ளிறங்கி 60 அடிக்கும் மேலான பள்ளம் தோன்றியது. பெரிய மரங்கள் அதில் புதையுண்டன. மாத்தளை துங்கொலவத்தையிலுள்ள தொரகும்புர பகுதியிலேயே இந்த நில வெடிப்பு இடம் பெற்றுள்ளது. சுமார் 25 அடி விட்டமும் 60 அடி க்கும் மேலான ஆழமும் உடைய குழி அங்கு தோன்றியுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த புவிச்சரிதவியல் திணைக்களத்தினர், ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியிலேயே வெடிப்பு இடம்பெற்றதால் உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை. பலா, கித்துள் போன்ற உயரமான மரங்கள் புதையுண்டுள்ளன. 2005 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற வெடிப்புக்கள் இடம்பெற்றதாகவும், நிலத்தடியில் உள்ள சுண்ணக்கற்களின் கசிவே முன்னர் நடந்த வெடிப…

  7. டிச 19, 2012 சிறீலங்காப்படையினரின் புலனாய்வு தகவலின் அடிப்படையில் சென்னையில் ஈழத்தமிழர்கள் 4பேர் கைது! இந்தியப்படையினரின் உளவுத்தகவலின் அடிப்படையில் சென்னை பல்லாவரம் பகுதியில் இருந்த 4 ஈழத்தமிழ் அகதிகளை கியூபிரிவு காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள். சிறீலங்கா படையினர் வன்னியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னாள் போராளிகள் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள் அவர்களின் புலனாய்வு தகலின் படி சிறீலங்காப்படையின் அதிகாரிகள் இந்திய மத்திய உளவுத்துறைக்கு இரகசிய தகவல் அனுப்பியுள்ளார்கள். இதனை தொடர்ந்து மத்திய உளவுத்துறையினரும் கியூ பிரிவு காவல்துறையினரும் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்கள். அதன் பின்னர் ஜஜீ.ஆபாஸ்குமார் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சென்னை பல…

  8. இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியாவினால் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று உறுதியளித்தார். ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங் தலைமையிலான குழுவினர், இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரஜீவ் தெவாரி, கேணல் எஸ்.கே.ஆச்சர்யா, கேணல் எஸ்.சீ.தேவ்கன், கெப்டன் ரஜீவ் மெத்திவ்ஸ் மற்றும் இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் அசோக் கே.காந்தா ஆகியோருடன் இலங்கை இராணுவ தளபத…

  9. இலங்கை அரசாங்கத்தால் இறுதிக்கட்ட யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், எதற்கும் அஞ்சாத விடுதலைப் புலிகளையே நிலைகுலைய வைத்துள்ளது என பி.பி.சி. முன்னாள் செய்தியாளர் பிரான்சிஸ் ஹாரிசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த நான்காம் கட்ட போர் குறித்து, அவர் எழுதிய “still- Counting the Dead” என்ற ஆங்கில நூல், “ஈழம்- சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்” என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில், நூலை கவிஞர் சேரன் வெளியிட, மூத்த பத்திரிகையாளர் சதானந்த மேனன் பெற்றுக் கொண்டார். இந்நூல் வெளியிட்டு விழாவில் நூலாசிரியரான பிரான்சிஸ் ஹாரிசன் உரையாற்றுகையில்: இலங்கையில் போர் முட…

  10. இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள 6 நாடுகளைச் சேர்ந்த தூவர்கள், தங்களுடைய நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர். இந்நிலையில், பெலாரஸ் குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவராக விட்டலி ஏ.பிரீமா, அயர்லாந்தின் இலங்கைக்கான தூதுவராக பெய்லிம் மெக்லாக்லின், சுவீடனின் இலங்கைக்கான தூதுவராக ஹெரால்ட் சன்ட்பர்க், மொங்கோலியாவின் இலங்கைக்கான தூதுவராக சஞ்ஜாசுரேன் பயரா, ஆப்கானிஸ்தானின் இலங்கைக்கான தூதுவராக சய்டா மொஹமட் அப்டாலி மற்றும் பர்கினா பசோவின் இலங்கைக்கான தூதுவராக இட்ரிஷ் ரவோயூ அவுட்ராகோ ஆகியோரே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றவர்களாவர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இவர்கள் தங்களது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர். இந்நிகழ்வில்,…

  11. இலங்கையில் சிவப்பு மழை.. விருத்தாசலத்தில் மஞ்சள் மழை- மக்கள் பீதி Posted by: Mathi Published: Tuesday, December 18, 2012, 10:04 [iST] விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுவிருத்தகிரிகுப்பத்தில் திடீரென மஞ்சள் மழை பெய்ததால் பொதுமக்கள் பீதிக்குள்ளாகினர். புதுவிருத்தகிரிகுப்பம் கிராமத்தில் நேற்று முற்பகல் 11 மணியளவில் திடீரென வானம் இருண்டது. பின்னர் 15 நிமிடம் கழித்து மழை கொட்டியது. ஆனால் மழையின் நிறத்தைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மஞ்சள் நிறத்தில் மாவு போல் மழை பெய்ததால் அமில மழை என நினைத்து பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். 'அமில மழை' பெய்வதாக பக்கத்து கிராமங்களுக்கும் தகவல் பரவ பரபரப்பு பற்றிக் கொண்டது. ஏற்கனவே இலங்கையில் சிவப்பு மழ…

  12. சிறிலங்காவில் பெய்துவரும் கடும் மழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களால் இரண்டு இலட்சம் வரையான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், சுற்றுலாப் பயணிகளின் வருமானம் பாதிக்கப்படும் என்பதால், அவசரகாலநிலையை அறிவிக்காமல் சிறிலங்கா அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது. சிறிலங்காவில் கடும் மழையினால், பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தரைவழிப் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இரண்டு இலட்சம் மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் வரை காணாமற் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வேகமாக உதவிகளை…

    • 2 replies
    • 761 views
  13. பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை விவகாரத்தால் உள்நாட்டு, சர்வதேச அழுத்தங்கள் நெருக்கடிகளில் அரசு சிக்கியுள்ளதால் ஷிராணி பண்டாரநாயக்கவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன்னிப்புக் கேட்டு இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்தது. சட்டவரையறைக்கு உட்பட்ட சமூகந்தான் பிரதம நீதியரசர் பதவியில் இருக்கவேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இன்று அந்தச் சமூகத்தில் 99 சதவீதமானோர் அவருக்கு முழுமையான ஆதரவு தெரிவிக்கின்றனர். எனவே, இந்த விடயத்தை இனிமேலும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை என்று நவ சமசமாஜக்கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள அஸ…

  14. இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில் ஐ.நா அதிகாரிகளான பான் கி மூன், ஜான் ஹோம்ஸ், விஜய் நம்பியார் ஆகியோரை குற்றவாளிகளாக விசாரிக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஞாயிற்றுக்கிழமை மாலை மே17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழினப் படுகொலையில் ஐ.நா உயர் அதிகாரிகள் இலங்கைக்கு துணை நின்றதற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டன. சமீபத்தில் சார்லஸ் பெட்ரி வெளியிட்ட இலங்கை பற்றிய ஐ.நா உள் விவகார அறிக்கையில் மறைக்கப்பட்ட விடயங்களும் வெளியிடப்பட்டன. மே17 இயக்கத்தின் உமர் அவ்ர்கள் பேசுகையில், மார்ச் 15,2009 அன்று இலங்கையில் இனப்படுகொலை நடக்கப்போகிறது என இனப்படுகொலை தடுப்பு அதிகாரி ஃபிரன்சிஸ் டெங் அளித்த அறிக்கை புறக்கணிக்கப்படுகிறது.…

  15. யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசின் அச்சுறுத்தல்களை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்பாணத்தில் முன்னெடுக்கபடவுள்ள உண்ணாநிலைப் போராட்டத்திற்கு வலுவூட்ட சமவேளை லண்டனில் அடையாள உண்ணாநிலைப் போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஓருங்குசெய்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 21ம் நாள் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை No. 10 Downing Street, Westminster, London இடத்தில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. தாயக கவனயீர்ப்பு போராட்த்திற்கு புலம்பெயர் தமிழர்களின் தோழமையுணர்வினைத் தாயக மக்களுக்கு தெரிவிக்கவும் , போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லவும், இக்கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டத்தில் அனை…

  16. தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யும் வரையில் பகிஸ்கரிப்பு போராட்டத்தை கைவிடுவதென்ற பேச்சிற்கே இடமில்லையென பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெளிவுபட அறிவித்து விட்டது. பல்கலைக்கழக துணைவேந்தரது அழைப்பின் பேரில் மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தனர். அவ்வேளையில் பல்கலைக்கழகத்தில் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக பேசப்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் விடுவிக்கும் வரையில் போராட்டத்தை விலக்கி கொள்வதென்ற பேச்சிற்கே இடமில்லையென மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதனிடையே எதிர்வரும் வெள்ளிக்கிழமை பலாலியில் மாநாடொன்றை நடத்த யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி…

  17. இமாச்சலத்தில் இலங்கை – இந்திய படைகளின் கூட்டுப் போர்ப் பயிற்சி! December 20th, 2012 அன்று வெளியிடப்பட்டது - கருத்துக்களேதுமில்லை சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைகள் இந்திய இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவுடன் இணைந்து, கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நஹான் சிறப்புப்படை பயிற்சி நிலையத்தில் இந்தப் போர்ப்பயிற்சி நடைபெற்று வருகின்றது. இதுபற்றிய தகவல்களை இரகசியமாகப் பேணிக் கொள்வதென இருநாட்டு அரசுகளும் முடிவு செய்துள்ளதாக, இந்தியாவின் உயர்மட்டப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போர்ப்பயிற்சி, எதிர் வரும் 24ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இந்த பயிற்…

  18. யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - HRW 20 டிசம்பர் 2012 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட வேண்டும் அல்லது அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென அந்த அமைப்பு கோரியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் பயங்கரவாதத் தடைப் பிரிவிரினரால் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆரம்பத்தில் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த மாணவர்கள் தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனைய மாணவர்கள் பற்றிய தகவல்களைக் கோரி குறித்த மாணவர்களிடம் கடுமையான விசாரணை ந…

  19. சிறிலங்காவில் பெளத்தம் மட்டும்தான் – ஏனைய மதங்களுக்கு இடமில்லை. சிறீலங்கா | ADMIN | DECEMBER 14, 2012 AT 21:01 சிறிலங்காவின் தென்மாகாணத்தில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகெற்றிய பிரதேசத்திலுள்ள Jeevanalokaya Sabhawa தேவாலயத்தில் கடந்த ஞாயிறன்று காலைப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்கர்கள் மீது 80 வரையான புத்த பிக்குகளின் தலைமையில் 1000ற்கு மேற்பட்ட காடையர்கள் காடைத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதலை மேற்கொள்வதற்கு காவற்துறையின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டதுடன், தேவாலய சொத்துக்கள் நாசமாக்கப்பட்டு, அங்கு பிராத்தனையை நடாத்திக் கொண்டிருந்த போதகர் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதாக கத்தோலிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இத்தேவாலயத்தை ஒரு நாளுக்…

  20. சட்டக்கல்லூரிக்கு கூடுதலான முஸ்லிம் மாணவர்கள் இம் முறை தெரிவு செய்யப்பட்டிருப்பதை காரணம் காட்டி நீதித்துறை முஸ்லிம் மயப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதித்துறை அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளதுடன் நீதித்துறை முஸ்லிம் மயப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நீதியமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய புலமையாளர் கவுன்சிலின் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் பந்துல சந்திரசேகர என்பவர் ஊடகங்கள் ஊடாக தெரிவித்து வரும் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் ஜாதிக ஹெல உருமய முக்கியஸ்தர் உதயகம்மன்பிலவிற்கு எடுத்துரைத்துள்ளார். சட்டக் கல்லூரி நீதியமைச்சுடன் சில விவகாரங்களி…

  21. வடபகுதியில் இருந்து சென்ற பேரூந்து வெள்ளத்தில் மூழ்கியது புதன்கிழமை, டிசம்பர் 19, 2012 வடபகுதியில் இருந்து இன்று அதிகாலை புறபப்ட்ட பயணிகள் பேரூந்து சிலாபம் அருகே வெள்ளத்தில் மூழ்கியது. மழை வெள்ளத்துடன் இழுத்துச்செல்லப்பட்ட இந்த பேருந்தில் 60 பேர் வரை பயணம் செய்துள்ளனர். இதுவரை பயணிகள் மீட்கப்படவில்லை, வெள்ளத்தினுள் சிக்குப்பட்ட பேரூந்திற்குள்ளேயே பயணிகள் அந்தரித்த வண்ணம் சுமார் 6 மணி நேரமாக முடக்கப்பட்டுள்ளனர். இதனை ஒரு புதினமாக சுமார் 500 வரையான சிங்கள மக்கள் துர இருந்து பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், கூடவே பொலிசாரும் கடற்படையினரும் தூர இருந்தே பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%95…

  22. மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் தொங்குப்பாலத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் சுமார் 12 ஆடிக்கு மேல் ஆற்று நீர் தற்போது பாய்ந்து கொண்டிருப்பதாக குஞ்சுக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லக்டன் டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மடு பிரதான வீதியில் இருந்து பெரிய குஞ்சுக்குளம்இமாதா கிராமம்இபெரிய முரிப்பு ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதிகள் தற்போது திருத்த வேளைகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கினறது.அப்பகுதியூடாக காணப்படும் கட்டுக்கரை குளத்தின் துருசு பல வருடங்களாக சேதமடைந்த நிiயில் காணப்படுகின்றது. -இந்த நிலையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக தற்போது குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள ஆறு த…

  23. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் - குளோபல்தமிழ்ச்செய்தியாளர் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யும் வரையில் பகிஸ்கரிப்பு போராட்டத்தை கைவிடுவதென்ற பேச்சிற்கே இடமில்லையென பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று தெளிவுபட அறிவித்து விட்டது.பல்கலைக்கழக துணைவேந்தரது அழைப்பின் பேரில் மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.அவ்வேளையில் பல்கலைக்கழகத்தில் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக பேசப்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் விடுவிக்கும் வரையில் போராட்டத்தை விலக்கி கொள்வதென்ற பேச்சிற்கே இடமில்லையென மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதனிடையே எதிர்வரும் வெள்ள…

    • 2 replies
    • 665 views
  24. (ஹபீல் பாரிஸ்) பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி புதிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இந்த பிரேரணையில் கைச்சாத்திட்டவர்களே விசாரணை நடத்துபவர்களாகவும் உள்ளனர். இதற்கு அப்பாலும் முரண்பாடுகள் உண்டு என ஐ.தே.க கூறியது. குற்றப்பிரேரணையை விசாரிப்பவர்களுக்கு குற்றப்பிரேரணை செயன்முறையுடன் வேறு வகையில் தொடர்புள்ளவர்களுக்கும் இடையில் குடும்ப உறவுகள் காணப்படுகின்றன. இது இன்னொரு முரண்பாடு ஆகும் என ஐ.தே.க எம்.பி சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் கணவரான தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை தொடக்கப்பட்ட முறைபற்றி கேட்டபோதே சேனசிங்க எம்.பி மேற…

  25. தமிழ்ப் பிரதேசத்தில் இராணுவம் நிலை கொண்டிப்பது குறித்த விவாதங்கள் தமிழ் அரசியல் வட்டாரங்களில் சமீப காலங்களாக இடம்பெற்று வருகின்றதாக கூறி தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்பும் நோக்கத்தில் அவ்வியக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.. 'இலங்கை இராணுவம் உட்பட முப்படைகள் என்பவை தமிழ் மக்களால் ஆக்கிரமிப்பு படைகளாகவே அதாவது சிங்களப்படைகளாவே பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், எமது தாயகத்தில் இருந்த ஆக்கிரமிப்பு படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமாகும். இலங்கை இனப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.