ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
ஜனாதிபதி அவசரமாக கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை நடத்தியுள்ளார்? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்றிரவு பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவின் சட்டத்தரணிகளில் ஒருவரான கந்தையா நீலகண்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரதம நீதியரசரை, பதவியில் இருந்து விலகுமாறு அறிவிக்க வேண்டும் என தாழ்மையுடன் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. தற்போதே தாம் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான குற்றச்சாட்டுக்களை வாசித்ததாகவும் இந்த குற்றச்சாட்டுக்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் அளவுக்கு போதுமானது அல்ல எனவும் ஜனாதிபதி நீலகண்டனிடம் கூறியுள்ளார். எனினும் அந்த குற்றச்சாட்டுக்களை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பின்வாங்க முடியாது எனவும் இதனால், பிரதம நீதியரசரை…
-
- 0 replies
- 408 views
-
-
யாழ்.பல்கலை நிர்வாகத்தின் பொறுப்பற்ற நடத்தைக்கு கண்டனம் .... யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறுப்பற்ற நடத்தையினை கண்டித்து பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர்கள் சங்கம் இன்று கண்டன எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். காலை 10 மணிக்கு பல்கலைக்கழக துணைவேந்தரது பிரதான அலுவலகம் முன்பதாக குவிந்த அவர்கள் தமது கைகளில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கெதிரான சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர். முன்னதாக குறைவான ஆட்களே ஒன்று திணை;ட போதும் பின்னர் பலரும் ஒருங்கிணைந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். மாணவர்கள் சிறைகளில் நிர்வாகமோ சுற்றுலா விடுமுறையில் பல்கலைக்கழகமென்ன கோமாளிகளின் கூடாரமா என பல கோசங்களை தாங்கிய பதாதைகள் அங்கு பிடிக்கப்பட்டிருந்தன. நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்…
-
- 3 replies
- 582 views
-
-
யாழ். கோண்டாவில் நந்தாவில் அம்மான் கோவிலுக்கு அருகில் (இந்து மகா வித்தியாலயம் அருகில்) இன்று வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களின் வெட்டுக்காயங்களுக்குள்ளாகி ஒருவர் பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த நபரை துரத்தித் துரத்தி வெட்டியதாக சம்பவத்தை நேரில் கண்ட பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. உருக்குலைந்த நிலையிலான சடலம் தற்சமயம் யாழ். போதனா வைத்தியசாலையில் கோப்பாய் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடம்பு முழுவதும் வெட்டுக்காயங்களுடன் காணப்படும் குறித்த சடலம், 35 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவருடையதாக இருக்கலாம் எனவும் வைத்தியசாலையின் உறுதிப்படுத்தப்படாத தகவல்…
-
- 1 reply
- 640 views
-
-
மாவீரர்களுக்குச் செய்யும் மரியாதை - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா 07 டிசம்பர் 2012 அண்மையில் யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தை பல்கலைக்கழக மாணவர்கள் நினைவு கூருவதற்குச் செய்த முயற்சிகளுக்கு இலங்கை இராணுவமும் பொலீசும் செய்த தடைகளையும் வில்லங்கங்களையும் எதிர்த்தும் போரில் மரணத்தவர்களை நினைவு கூரும் உரிமையை வலியுறுத்தியும் யாழப்பாணப்பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அமைதியான எதிர்ப்புப்போராட்டம் இலங்கை இராணுவத்தாலும் காவல் துறையாலும் மோசமான முறையில் அடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இந்தப்போராட்டங்களில் முன்ணணியில் நின்ற நான்கு மாணவர்களை பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கைது செய்து தடுத்து வைத்திருக்கிறது. இவர்களில் ஒருவர்மட்டும் பிணையில் தற்போது விடுவிக்…
-
- 3 replies
- 302 views
-
-
(சுமித்தி) கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தரையாடவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் அ.இராஜகுமாரன் இன்று தெரிவித்தார். இந்நிலையில், மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கும், உயர்க்கல்வி அமைச்சருக்கும் மகஜரொன்றை அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். யாழ். பல்கலைக்கழத்தில் மாணவர்களின் விடுதலை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்றினை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று காலை மேற்கொண்டனர். இக்கலந்துரையாடலின் போது, மாணவர்களை விடுதலை செய்வது குறித்து பல்கலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் கல்விசாரா ஊழியர்க…
-
- 0 replies
- 244 views
-
-
(சுமித்தி) யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது விவகாரமானது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் இந்த விடயத்தில் பொலிஸார் தலையிட முடியாது என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெறும் வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, 'யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள், ஆனால் சம்பந்தப்பட்ட பிரதேச பொலிஸ் அதிகாரிகள் தாம் கைது செய்யவில்லை என தெரிவிக்கின்றார்கள். இது தொடர்பான விளக்கம் என்ன?' என்று ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்…
-
- 0 replies
- 315 views
-
-
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் உள்ள 400 புகலிடக் கோரிக்கையாளர் வீசா அனுமதி வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இணைப்பு வீசா வழங்கப்பட்டே இவர்கள் விடுவிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கே இவ்வாறான இணைப்பு வீசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் டார்வினிலிருந்து வெளியேறி விக்டோரியா, குயின்ஸ்லான்ட் போன்ற இடங்களில் குடியமர்வார்கள் என்றும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன. வேலை செய்வதைத் தடுக்கும் வகையில் இவர்களுக்கு இணைப்பு வீசா வழங்கப்பட்டிருப்பதுடன், இவர்களுக்கு அடிப்படையான சில நலன்புரிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுமென அவுஸ்திரேலியாவின் குடிவரவ…
-
- 0 replies
- 362 views
-
-
புறக்கோட்டை கடைத்தொகுதியில் தீ வெள்ளிக்கிழமை, 07 டிசெம்பர் 2012 13:40 0 COMMENTS கொழும்பு, புறக்கோட்டை கடையொன்றிலுள்ள கேஸ் சிலிண்டரொன்று பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள கடைத்தொகுதி தீப்பற்றி எரிவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புறக்கோட்டை, இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள குளிர்பானம் மற்றும் பழக்கடைத் தொகுதியே இந்த தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது. தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54299-2012-12-07-08-11-11.html
-
- 0 replies
- 236 views
-
-
“நேசம்” கல்வித் திட்டத்தில் இணைந்து புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு ‘நேசம் கல்வித்திட்டம் 2012′ புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா 12.11.2012 அன்று இந்து கலாசார மண்டபம் , நாவற்குடா , மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது. திரு. ஆ. ஜனனன் (அமைப்பாளர் – Bright Future – Nesakkaram) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிவஸ்ரீ உ. ஜெகதீஸ்வர குருக்கள் (J.P) , அருட்தந்தை ஓ.ஐ. ரஜீவன் அடிகளார் , திரு.கிரிதரன் (பிரதேச செயலாளர் மண்முணை வடக்கு மட்டக்களப்பு) திரு .மு. கமலராஜா (சமுக சேவை உத்தியோகத்தர் மண்முணை வடக்கு) ஆகியோர் கலந்து கொண்டு சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து சிறப்புரைகளை வழங்கினர். ‘நேசம் கல்வித்திட்டம்’ சிறப்பபுச்சித்தியடைந்த 125ம…
-
- 16 replies
- 1.3k views
-
-
'சுப்ரீம் செற் 1' இலங்கையின் செய்மதியா இல்லை, சீனாவின் செய்மதியா? - ரணில் கேள்வி [Friday, 2012-12-07 10:40:34] அண்மையில் விண்ணுக்கு ஏவப்பட்ட சுப்ரீம் செற் 1 என்ற செயற்கைகோள் பற்றிய தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 27ம் திகதி இலங்கை முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியதாக உள்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. வெளிநாட்டு ஊடகங்களில் சீனாவினால் மற்றுமொரு செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உலக நாடுகள் விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு சர்வதேச ரீதியாக அனுமதிப் பெற்றுக்கொள்ள வேண்டும். இலங்கை பெற்றுக்கொண்ட அனுமதியை சீனா பயன்படுத்துகிறதா அல்லது, சீனா பிர…
-
- 0 replies
- 255 views
-
-
அபுதாபி நீதிமன்றம் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது 07 டிசம்பர் 2012 அபுதாபி நீதிமன்றம் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இலங்கையரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு நபர் ஒருவரை குறித்த இலங்கையர் படுகொலை செய்துள்ளார். கொலையுண்டவரின் குடும்பத்தினர் நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினால் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர் தரப்பில் மேன்முறையீடுகள் செய்யப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articl…
-
- 0 replies
- 857 views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தொடர்ந்த வண்ணம் இருக்கும் கைதுகளையும் தாக்குதல்களையும் கண்டித்து டென்மார்க்கில் இரு நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்: திசைகள் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது . தமிழர் தேச மக்கள் மீதான இலங்கை அரச வன்முறைகள் தொடர்வதை இத்தாக்குதல் மேலும் வெளிக்காட்டி நிற்பதாக கூறும் டென்மார்க் திசைகள் இளையோர் அமைப்பு தமிழ் மக்களைக் காக்க சர்வதேச சமூகத்தை உடன் செயற்படுமாறும் வேண்டியுள்ளன. அதேவேளை சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழர் தாயகமே ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வாகும் என்பதை வலியுறுத்தியுள்ள அறிக்கைகள் அத்தீர்விற்காக விரைந்து செயற்படுமாறு சர்வதேச சமூகத்தையும் வேண்டியுள்ளன. சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை உடன் விடுதலை…
-
- 0 replies
- 208 views
-
-
யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவர்கள் 5 பேருட்பட 6மாணவர்கள் வவுனியா கொண்டு செல்லப்பட்டனர்- 06 டிசம்பர் 2012 யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் ஜந்து பேருட்பட ஆறு மாணவர்கள் இன்று கைது செய்யப்பட்டு வவுனியாவில் செயற்பட்டு வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு இன்றிரவு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முன்னதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனிடையே குறித்த மாணவர்களில் மருத்துவ பீட மாணவர்கள் ஜவரையும் மருத்துவ பீடாதிபதி பாலகுமாரன் முன்னணி மருத்துவரும் விரிவுரையாளருமான ரவிராஜ் மற்றும் மருத்துவர் முகுந்தன் ஆகியோர் இராணுவப் புலனாய்வு பிரிவினரி…
-
- 2 replies
- 843 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையானது துணை பொது செயலாளர் நாயகம் ஜேன் ஹெலியசன் தலைமையில் மதிப்பாய்வு குழுவொன்றை அமைக்கவுள்ளது என இன்டர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையானது சார்லஸ் பெட்ரி அறிக்கை அல்லது 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் ஐ.நா. நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்கே மதிப்பாய்வு குழுவை அமைக்கவுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெஸ்ரிக்கி தெரிவித்துள்ளார். சார்லஸ் பெட்ரியின் அறிக்கை ஐ.நா. தலைமையகத்தில் மூன்று வாரங்களுக்கு முன்னர் கையளிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54199-2012-12-05-20-25-25.html
-
- 4 replies
- 881 views
-
-
பெற்றோலிய விலை குறித்து கவனம் செலுத்தவும்:ஐ.எம்.எவ் இலங்கை, ஏற்றுமதி போட்டி மூலம் அதன் நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். என்பதுடன் ஒரு மென்மையான மாற்று விகிதம் ஊக்குவிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி கொஷிக் மத்தாய் தெரிவிக்கையில், 'இறக்குமதியில் ஒரு இணையற்ற அளவிற்கு ஏற்ற இறக்கம் இருப்பினும் பயனுள்ள இறக்குமதி ஒரு பொருளாதார கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும். நிதி தேவையை குறைக்கும் பொருட்டு, நாட்டில்; ஒரு மென்மையான மாற்று விகிதத்தை இந்த ஆட்சியானது ஊக்குவிக்கவேண்டும் அதற்காக ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இலங்கை பெற்ரோலிய இறக்குமதி ந…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதியுடன் தற்போதைக்கு சந்திப்பு இடம்பெறுவதற்கு வாய்ப்பு இல்லையென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திப்பு தொடர்பாக வெளியுறவு அமைச்சர் பீரிஸ் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும்;, எந்த அடிப்படையில் பேச்சை ஆரம்பிப்பதென்று சம்பந்தன் கேள்வி எழுப்பியதாகவும் கூட்டமைப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதேவேளை கடந்த நான்காம் திகதி சந்திப்புக்கு வருமாறு அழைக்கப்பட்டபோது, அதற்குச் செல்லாத நிலையில், பிறிதொரு திகதியை வழங்குமாறு சம்பந்தன் கேட்டாரெனவும், அதற்கு இதுவரை பதில் வழங்கப்படவில்லையெனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எமது கொழும்பு செய்தியாளரிடம் தெரிவித்தார். ஜனாதிபதியை சந்திப்பதாக இருந்தால் முத…
-
- 0 replies
- 377 views
-
-
பிரதம நீதியரசர்களை பதவி நீக்கும் சட்ட மூலம் பாராளுமன்றில் வியாழக்கிழமை, டிசம்பர் 6, 2012 பிரதம நீதியரசர்களை பதவி நீக்கம் செய்யும் சட்ட மூலம் ஒன்று இலங்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் பிரதம நீதியரசர்களை பதவி நீக்க முடியும் கூறப்படுகின்றது. இது நீதித்துறையில் சுதந்திரத்தன்மையினை முற்றிலும் கட்டுப்படுத்தும் செயல் எனக் கூறப்படுகின்றது. இதே வேளை நீதித்துறையில் அரசு தலையிடும் விதம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0…
-
- 1 reply
- 580 views
-
-
சில புகலிடக் கோரிக்கையாளர்களை பிரித்தானியா நாடு கடத்தத் தீர்மானித்துள்ளது 06 டிசம்பர் 2012 சில இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை பிரித்தானிய அரசாஙக்கம் நாடு கடத்தத் திட்டமிட்டுள்ளது. புகலிடம் கோரி பிரித்தானியாவிற்குள் பிரவேசித்த சிலரே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளதாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது. குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் விரைவில் விமானத்தின் மூலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. லண்டனில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தபபட உள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86269/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 476 views
-
-
பிரதமர் பதவியில் மாற்றம், ரட்னசிறி மீண்டும் பிரதமர்? 06 டிசம்பர் 2012 பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க மீளவும் பிரதமராக நியமிக்கப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பிரதமர் டி.எம். ஜயரட்னவின் உடல் நலனைக் கருத்திற் கொண்டு இவ்வாறு பதவியில் மாற்றம் ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் ரட்னசிறி விக்ரமநாயக்கவிற்கான பாதுகாப்பு கடந்த சில தினங்களாக பலப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது தற்போதைய பிரதம ஜயரட்ன, தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும், பிரதமர் பதவியையும் இராஜினாமா செய்வார் எனவும், இது தொடர்பில் வெகு விரைவில் ஜனாத…
-
- 1 reply
- 302 views
-
-
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இதுவரை யாழ்பபாணத்தில் 25 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சந்திரா வாகிஸ்த பி.பி.சிக்கு தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகளாக இருந்தவர்களும், விடுதலைப் புலிகளுடன் இணைந்து பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மற்றும் நேற்று முன்தினம் கோப்பாய், சாவகச்சேரி, உரும்பிராய் ஆகிய இடங்களில் இருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் ஏனையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் கைதுசெய்யப்படுவதற்கான ஆவணங்கள் கைதிகளின் உறவினர்களிடம் வழ…
-
- 1 reply
- 575 views
-
-
யாழில்மக்களை விரட்டியடித்து சுற்றுலா விடுதிக்கான அடிக்கல்லை யோகேஸ்வரியும் ஹத்துறுசிங்கவும் நாட்டினர் யாழ்.நகரின் புறநர்பகுதியான கொட்டடி பகுதியிலுள்ள முத்தமிழ் திடல் காணியிலிருந்த பொது மக்கள் அண்மையில் விரட்டப்பட்டிருந்த நிலையில் அங்கு அவசர அவசரமாக தற்போது 250 மில்லியன் ருபா செலவில் மிகவும் பிரமாண்டமான சுற்றுலா விடுதி அமைக்கப்படவுள்ளது. அதற்கான அடிக்கல்லினை யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் தளபதி மகிந்த ஹத்துறுசிங்க மற்றும் ஈபிடியின் யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் இணைந்து இன்றைய தினம் நாட்டி வைத்துள்ளனர். எனினும் இக்காணிகளில் குடியிருந்தவர்களுக்கு எந்தவித மாற்று ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படாததால் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதுடன் வீதிகளில்…
-
- 1 reply
- 419 views
-
-
எமது இளைஞர்களின் உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்ட எமது இளைஞர்கள் காணாமல் போகின்றனர். கடத்தப்படுகின்றனர் இதனாலேயே அவர்கள் ஆஸி. நோக்கி செல்கின்றனர். எனவே அவுஸ்திரேலிய அரசாங்கம் எமது இளைஞர்களை திருப்பி அனுப்ப வேண்டாம். அவ்வாறு அனுப்பப்பட்டால் அவர்கள் படுகொலை செய்யப்படுவர் இல்லாவிட்டால் காணாமல் போவர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று சபையில் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பேசுகையிலேயே கூட்டமைப்பின் மட்டு. எம்.பி. பா. அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தமிழ் இளைஞர்கள் சுதந்திரமாக இன்று தமது பிரதேசங்களில் …
-
- 0 replies
- 623 views
-
-
வியாழக்கிழமை, 06 டிசெம்பர் 2012 2013ஆம் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி சார்பான சோஷலிச இளைஞர் முன்னணியினர் கொழும்பு, லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (படங்கள்:சமந்த பெரேரா) http://tamil.dailymirror.lk/--main/54262-2012-12-06-13-22-50.html
-
- 0 replies
- 354 views
-
-
பூகோள ரீதியான சட்ட அதிகாரத்தை ஐ.நா தனது கைகளில் எடுக்காவிட்டால் போர்க்குற்றவாளிகளின் பெருங் கூட்டத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று eruditiononline.co.uk இணையத்தில் Alex Longley எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டம் தொடர்பான ஐ.நாவின் நடவடிக்கைகளை உள்ளடக்கிய உள்ளக அறிக்கை கடந்த நவம்பர் மாத ஆரம்பத்தில்,வெளியிடப்பட்டது. போரில் அகப்பட்டுத் தவித்த பொதுமக்களை ஐ.நா காப்பாற்றத் தவறியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கான தனிநாடொன்றை அமைப்பதை நோக்காகக் கொண்டு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ்ப் புலிகள் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். 25 ஆண்டுக…
-
- 0 replies
- 534 views
-
-
வவுனியா மன்னார் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்டுகின்ற பெட்டி கடை ஒன்றில் இரவு வேளைகளில் கலாச்சாரா சீரழிவுகள் இடம் பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா மன்னார் வீதியில்ளாமைந்துள்ள கலைமகள் விளையாட்டு அரங்கு அருகில் வீதியோரத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கைவிடப்பட்ட நிலையில் தகரத்தால் அடைக்கப்பட்ட பெட்டிக் கடை ஒன்று காணப்டுகின்றது. பூட்டுக்கள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்படும் அப்பெட்டி கடைக்குள் இரவு நேரங்களில் உள் நுழைகின்ற சில ஆண்களும் பெண்களும் தவறான நடத்தைகளில் ஈடுபடுவதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர இரவு வேளைகளில் அப்பெட்டிக் கடையானது சில மது பிரியர்களின் மதுபானசாலையாகவும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களும் போ…
-
- 0 replies
- 840 views
-