ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
UNO Geneve முன்றவில் கவனயீற்புப் போராட்டம். PHOTOS, தமிழீழம் | ADMIN | DECEMBER 1, 2012 AT 20:25 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது இலங்கை இராணுவத்தால் கட்டவுள்த்து விடப்பட்டுள்ள அடாவடித்தனங்களைக் கண்டித்து யெனிவாவில் உள்ள ஐக்கியநாடுகள் சபைக்கு முன்பாக ஓர் ஒன்றுகூடலை சுவிஸ் இளையோர் அமைப்பு ஒழுங்குசெய்துள்ளது இந்த க் கண்டன ஒன்றுகூடலில் அனைத்துச் சுவிஸ்வாழ் தமிழ்மக்களையும் கலந்துகொண்டு உங்கள் தார்மீகக் கடமையைச் செய்யும்வண்ணம் உரிமையோடு கேட்கப்படுகின்றது. http://thaaitamil.com/?p=39691
-
- 0 replies
- 329 views
-
-
வடக்கு, கிழக்கு அலுவலகங்களுக்கு தனிச் சிங்களத்தில் சுற்றறிக்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச அலுவலர்களுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கை தனிச் சிங்கள மொழியில் அனுப்பப்படுவதால் அரச உத்தி யோகத்தர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கை தனிச்சிங்களத்தில் மட்டும் அனுப்பப்படுவதால் தமிழர்களின் உரிமை மீறப்படுகிறது. இது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சமூக நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் லயனல் குருகே இவ்வாறு தெரிவித்தார். யாழ்.மாவட்ட அரச உத்தி யோகத்தர்கள் மற்றும் சிவில் சமூகத்தினருக்கான மொழி உரிமை தொடர்பான செயலமர்வு யாழ். மானிப்பாய் வீதி…
-
- 0 replies
- 275 views
-
-
குடாநாட்டிலுள்ள 179 இடங்களை படைக்கு தாரைவார்க்கும் டக்ளஸ்; இரகசியமாக நடந்தது நேற்றுக் கூட்டம் யாழ்.குடாநாட்டில் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலுமாக 179 இடங்களைத் தமக்குத் தருமாறு இராணுவத்தினர் கோரியுள்ளது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க நேற்றுக் கூட்டமொன்றை நல்லூர் பிரதேச செயலகத்தில் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்துக்கு கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சபைகளின் தவிசாளர்களுக்கு எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. யாழ்.அரச அதிபர், மேலதிக அரச அதிபர், திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஈ.பி.டி.பி. வசமுள்ள சபைகளின் தவிசாளர்களுக்கும், ஏனைய சபைகளின் எதிர்க்கட்சியான ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கூட்டத்…
-
- 0 replies
- 467 views
-
-
Rescue operations are in progress to locate four persons including a French national, who went missing since yesterday morning after they had gone to dive in the sea near Mount Lavinia, police said. http://www.dailymirror.lk/news/23941-four-missing-in-mt-lavinia-seas.html
-
- 1 reply
- 346 views
-
-
Lanka tops sexual harassment list in South Asia SATURDAY, 01 DECEMBER 2012 08:25 Sri Lanka has topped the list of sexual harassment cases in the South Asian region especially relating to women being harassed in public transport, the Legal Aid Commission said yesterday. Commission’s Chairman S. S. Wijeratne made this revelation while addressing the White Ribbon campaign that was held at Bastian Mawatha with the aim of stopping sexual harassment in public transport. Referring to a journal report that published recently, Mr. Wijeratne said as Sri Lankans we should seriously be concerned about the matter. “Though the population in India is higher than Sri Lanka, incidence…
-
- 0 replies
- 321 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 02 டிசம்பர் 2012 20:35 ஈராக்கிடமிருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடையுத்தரவு விதித்ததனைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஈராக்கிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யும் யோசனைத் திட்டம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இதற்கு முன்னர் இலங்கை ஈரானிடமிருந்து 92 வீதமான மசகு எண்ணெயை கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=20881:2012-12-02-20-36-32&catid=43:normal-news&Itemid=18
-
- 1 reply
- 376 views
-
-
பிரதம நீதியரசர் பதவியை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை – மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவிய வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் பதவியை வகிப்பது தொடர்பில் தாம் எந்தவிதமான எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ஆலோசகரான செயற்பட்டு வரும் மொஹான் பிரிஸை, அரசாங்கம் அடுத்த பிரதம நீதியரசராக நியமிக்கும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஊடகங்களில் வெளியான அறிக்கையில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதம நீதியரசர் பதவிக்கு தாம் பொருத்தமானவரா என்பதனை தம்மால் தீர்மானிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ள…
-
- 0 replies
- 336 views
-
-
மாவட்ட நீதவான்கள் மற்றும் நீதிபதிகள் கொழும்புக்கு இன்று திங்கட்கிழமை அழைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. நீதிச்சேவைகள் ஆணைக்குழுவே நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த அழைப்பை விடுத்துள்ளதாகவும் விடுமுறை தினமான நேற்றைய தினமும் நீதிச்சேவை ஆணைக்குழு வேலைச்செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மாவட்ட நீதவான்கள் மற்றும் நீதிபதிகள் கொழும்புக்கு அவசரமாக அழைக்கப்பட்டுள்ளதனால் நீதிமன்றத்தின் இன்றைய நடவடிக்கைகள் யாவும் ஸ்தம்பிதம் அடைவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுக்கிறது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53953-2012-12-02-20-36-30.html
-
- 4 replies
- 669 views
-
-
[size=4]நாட்டின் பல பாகங்களிலும் இடம் பெறுகின்ற வாகன விபத்தக்களில் நாள்தோறம் ஆறு தொடக்கம் ஏழு பேர்வரை பலியாகின்றனர். அத்தோடு நாள்தோறும் நடைபெறகின்ற விபத்துக்களில் 40 சதவீதமானவை மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கரவண்டிகளுமாகும் என பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். வாகன விபத்துக்கள் அதிகரிப்பதற்கு சாரிதிகள் மாத்திரம் காரணம் என சொல்லிவிட முடியாது பாதசாரிகளின் கவனயீனமும் அதில் செல்வாக்கு செலுத்துகின்றன. எனவே வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு பொதுமக்களும் தமது ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறு இடம்பெறுகின்ற வாகன விபத்துகளால் வருடத்துக்கு இரண்டாயிரத்துக்கு அதிகமா@னார் உயிரிழப்பதுடன் ஒ…
-
- 2 replies
- 358 views
-
-
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான டெலோ என்று அழைக்கப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தனியான முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளது. டெலோவின் பொதுச் சபை கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போதே தனியான முன்மொழிவொன்றை சமர்ப்பிப்பது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தனியான முன்மொழிவை தயாரிப்பதற்றகாக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இந்த குழுவில் டெலோவின் தலைவர் செல்வம் அடைகலநாதன், பொது செயலாளர் ஹென்றி மகேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், என். ஸ்ரீகாந்த…
-
- 0 replies
- 425 views
-
-
பல்கலைக்கழக மாணவர் போராட்டம் – அழிப்பதற்கு ஆயத்தமாகும் பிழைப்பு வாதிகள் : சபா நாவலன் இனச்சுத்திகரிப்பு வன்னியில் கொத்துக்கொத்தாக் மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் உலகின் அத்தனை அதிகார மையங்களும் அண்ணார்ந்துபார்த்து இரசித்துக்கொண்டிருந்தன. ஆயிரமாயிமாக அல்ல, லட்சம் லட்சமாக புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பிய அமரிக்க நாடுகளின் தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். குழந்தைகள், முதியோர், ஊனமுற்றோர் என்று யாரும் விதிவிலக்கின்றி ஐரோப்பிய வீதிகள் நிரம்பின. இதனால் எல்லாம் இலங்கை அரசுக்கு யாரும் அழுத்தங்களை வழங்கவில்லை. இலங்கை அரசோடு பேரம் பேசி தமக்கு வேண்டியதை ஏகபோகங்கள் பெற்றுகொண்டன. இலங்கை அரசு தான் திட்டமிட்ட அனைத்தையும் நிகழ்த்தி முடித்தது. இன அழிப்பிற்குக் கிடைத…
-
- 6 replies
- 1k views
-
-
[size=4]யாரும் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது. நாட்டிற்கோ, சமூகத்துக்கோ, கலாசாரத்துக்கோ, தனிப்பட்ட நபருக்கோ அடிமைத்தனமாக வாழ்பவர்களை, மீட்டெடுக்கும் வகையில் ஐ.நா,. சார்பில் டிசம்பர் 2 அம் திகதி, சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. போரில் தோல்வி அடைந்த நாட்டினரை, அடிமைகளாகச் சிறையில் வைக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. நாளடைவில் கைதிகளை சாதகமான வழியில் பயன்படுத்த தொடங்கினர். இவ்வாறு தொடங்கியது தான் அடிமைப் பணி. ஐரோப்பிய நாடுகள், காலனி நாட்டு மக்களை அடிமைகளாக்கினர். தற்போதைய நவீன உலகிலும், அடிமைகள் இருக்கின்றனர். கட்டாயப்படுத்தி வேலை பார்ப்பவர்கள், கடத்தப்படுதல், கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர், பாலியல் தொழிலாளர் என பல வழிகளில் இன்னல்பட…
-
- 6 replies
- 2.3k views
-
-
வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகள் மற்றும் அரசாங்கம் பெறும் கடன்கள் என்பனவற்றில் வடக்கின் அபிவிருத்திக்காக 85 சதவீதம் செலவு செய்யப்படுகிறது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வவுனியா சாளம்பைக்குளம் அல்-அஷா மஹாவித்தியாலயத்தின் மூன்று மாடிக்கான அடிக்கல்லினை நாட்டி வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சீமா இலாஹி பலூஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர். அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், வடக்கில் வா…
-
- 2 replies
- 495 views
-
-
[size=2] [size=4]யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்தும், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்தும் நாட்டிலுள்ள சகல பல்கலைக் கழகங்களும் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2] [size=4]யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி வழியில் முன்னெடுத்த கவனவீர்புப் போராட்டத்தை இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கலைத்துள்ளனர். இதன்போது மாணவர்களை அவர்கள் விரட்டி விரட்டி மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர். [/size][/size] [size=2] [size=4]மேலும் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் உள்பட நான்கு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுமுள்ளன…
-
- 4 replies
- 883 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்க உயர்தூதரகம் விடுத்திருந்த அறிக்கையை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளதாக இன்றைய (01) திவய்ன பத்திரிகை தெரிவித்துள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா தனது கவலையையும் கரிசனையையும் வெளியிட்டிருந்தமை தெரிந்ததே. இது இவ்வாறிருக்க, யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த மாவீர்ர் தின நிகழ்வுகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழே முன்னெடுத்தனர் என சிறிலங்காவின் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்படலான புலிகளின் தலைவர்களின்…
-
- 1 reply
- 927 views
-
-
இனப் பிரச்சினைக்கான தீர்வை அரசு முன் வைக்காதவரை இந்த நாட்டில் அமைதியும் நிம்மதியும் ஏற்படப் போவதில்லையயன்பது நிறுத்திட்டமான உண்மை. விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றி என்பது தற்காலிகமான ஒரு விடயம். இனப் பிரச்சினைக்கான தீர்வென்பது விடுதலைப் புலிகளுடன் மட்டும் தொடர்புபட்டதாயின் விடுதலைப் புலிகளை தோற்கடித்ததோடு அந்தப் பிரச்சினை நின்று போய் இருக்கும். ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களுடன் சம்பந்தப்பட்டது. அதனால்தான் முப்பது வருடகால ஆயுதப் போராட்டத்தை புலிகளின் தலைவர் பிரபாகரனால் முன்னெடுக்க முடிந்தது. விடுதலைப் போராட்டத்தின் அத்திபாரம் முதல் கட்டுமானம் வரை இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்குச் செய்த அநியாயங்கள், அட்டூழியங்கள், உரிமை மறுப்…
-
- 0 replies
- 788 views
-
-
[size=5]இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன! பொதுநலவாய நாடுகள் அமர்வில் பங்கேற்கப் போவதில்லை! கனடா மீண்டும் அறிவிப்பு"[/size] [size=4]மனித உரிமைகள் மேம்படாது போனால்,2013 ம்,ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் பங்கேற்கப் போவதில்லை என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Chrystiane Roy இதனை தெரிவித்துள்ளார்.[/size] [size=3] [size=4]கனடாவை பொறுத்தவரையில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க தவறி வருவதாகவே கருதப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் இன்னும் மனித உரி…
-
- 1 reply
- 541 views
-
-
ஏறத்தாள 25 ஆண்டுகளுக்கு முன் தமிழீழ விடுதலைப் போராளிகள் குட்டிமணி ஜகன் இருவரின் நினைவாக எழுப்பட்ட தூண் இது. சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் பாலத்திற்கு அருகாமையில் மையப் பகுதியில் அமைந்துள்ளது இந்தத் தூண். குட்டிமணி தன் தலைவன் காட்டிய நெறி தவறியதில்லை. வைத்த குறியும் தப்பியதில்லை. சிங்கள நீதிமன்றம் மரணதண்டனை விதித்தபோதும் இவர் நீதிமன்றத்தில் “என்னைத் தூக்கிலிட்ட பின் என் கண்களை கண்ணில்லாத ஒரு தமிழனுக்கு கொடுங்கள். அதன் மூலம் மலரப்போகும் தமிழ்ஈழத்தை நான் பார்க்கவேண்டும்.“ என்றார். இதன் காரணத்தாலேயே சிறைச்சாலையில் வைத்தே சிங்கள வெறியரின் முழுமையான இரையாகி, உயிரோடிருக்கும் போதே இவர் கண்கள் தோண்டப்பட்டு வீரஉரை நிகழ்த்திய இவர் நாவும் அறுக்கப்பட்டது. ஜெகன் என்கின்ற ஜெகநாதன் …
-
- 0 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 2.3k views
-
-
பல்கலைக்கழக சூழலில் படையினரின் பிரசன்னம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது. பல்கலைக்கழகம் மற்றும் விடுதிச் சூழலில் இராணுவத்தினரின் பிரசன்னம் மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளதனால் விடுதியில் உள்ள மாணவர் மத்தியில் அச்சத்தினை தோற்றிவித்துள்ளது. கடந்த 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பல்கலை விடுதி மற்றும் பல்கலை வளாகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டமையினை அடுத்து பல்கலைக்கழக சூழலில் இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் நேற்று முன்தினம் குவிக்கப்பட்ட இராணுவத்தினர் மீளவும் எடுக்கப்பட்டனர். எனினும் பொலிஸார் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இன்று வழமைக்கு மாறான முறையில் மேப்ப நாய்களுடன் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் விடுதியில் தற்போதுள்ள ம…
-
- 0 replies
- 502 views
-
-
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது இராணுவம் நடத்தியிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. இதன் மூலம் ஒரு தெளிவான செய்தியைத் தமிழ்ச் சமூகத்துக்கு அரசாங்கம் கூறியிருக்கின்றது. குடாநாட்டில் மாணவர் அமைதியின்மையால் ஏற்பட்டுள்ள பதற்றிலை முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலை காணப்படவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. போரில் பலியானவர்களை நினைவுகூரும் மாவீரர் தின நிகழ்வுடன் ஆரம்பமாகிய இந்தச் சம்பவங்கள், அமைதியாக ஊர்வலம் சென்ற மாணவர்களை இராணுவத்தினரும், பொலிஸாரும் துரத்தித்துரத்தித் தாக்குதல் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கின்றது. பல மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். சில மாணவர்கள் விசாரணை என்ற பெயரி…
-
- 2 replies
- 601 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விரைவில் சுதந்திரப்பட்டயம் ஒன்றினை பிரகடனப்படுத்தும் - பிரதமர் வி.உருத்திரகுமாரன் [ ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2012, 08:26 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விரைவில் தென் ஆபிரிக்கா சுதந்திரப் போரட்டக் காலத்தில் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸினால் பிரகடனப்படுத்தபட்டது போன்ற சுதந்திரப்பட்டயம் [Freedom charter] ஒன்றினை பிரகடனப்படுத்த இருக்கிறது. இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஆற்றிய தொடக்க நாள் உரையில் தெரிவித்துள்ளார். அவரது உரையின் முழுவடிவம் : கௌரவ சபாநாயகர் அவர்களே! கௌரவ அரசவை உறுப்பினர்களே! கௌரவ மேலவை உறுப்பினர்களே! மதியுரைக்குழு உறுப்பினர்களே! சிறப்பு விருந்தினர்களே!…
-
- 1 reply
- 422 views
-
-
யாழ் நகரில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் யாழ் பஸ் நிலையம் முன்பாக உள்ள சோமசுந்தரப்புலவர் சிலையருகில் நடைபெறும். பல்கலை மாணவர்கள் மீதான அரச வன்முறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு அழைக்கின்றோம். தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த தமது உறவுகளுக்கு கடந்த 27-11-2012 அன்று ஈகைச் சுடரேற்றி நினைவு கூர்ந்தார்கள் என்று கூறி யாழ் பல்கலைக்கழக மாணவிகளதும் மாணவர்களதும் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவத்தினர் துப்பாக்கிகளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவர்களைத் தாக்கியும் இருந்தனர். இச்சம்பவங்களைக் கண்டித்து மறுநாள் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்…
-
- 0 replies
- 462 views
-
-
யாழ்.பல்கலை மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோனுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை இன்று நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை தொலைபேசியூடாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். பொலிஸாரினால் நேற்றும் நேற்று முன்தினமும் கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பில் பொலிஸ் மா அதிபருடம் தொலைபேசி மூலம் த.தே.கூ தலைவர் கேட்டபோது ஆரம்பத்தில் கைது தொடர்பில் தெரியாது எனவும் தனக்கு 5 நிமிடங்கள் தரும்படியும் கேட்டிருந்தார். அதனையடுத்து பொலிஸ்மா அதிபர் தெரிவிக்கையில், பொலிஸாரினால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் குற்றத் …
-
- 0 replies
- 373 views
-
-
மன்னாரில் இடம்பெறும் மர்மக் கைதுகளால் மக்கள் அவலநிலையில்.. [sunday, 2012-12-02 09:40:36] மன்னார் பிரதேசத்தில் சில பகுதிகளில் திடீரென ஆயுததாரிகள் சுற்றிவளைத்து அப்பகுதியில் தங்கியிருக்கும் இளைஞர்களைக் கைது செய்து இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். இவர்களை விடுவிப்பதற்காக பெற்றோர் குறித்த முகாம்களுக்குச் சென்றால் , பல மணித்தியாலங்கள் காத்திருக்க வைத்துவிட்டு , உங்களுடைய பிள்ளைகள் இம் முகாமில் இல்லை வேறு முகாம்களுக்கு சென்று பாருங்கள் என இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். கைது செய்பவர்களிடம் சிங்கள மொழியிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தாம் எதற்காக கைது செய்யப்பட்டோம் எனத் தெரியாமலேயே முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன என அவாகளது சட்டத்தரணிகள் தெரிவித்தனர…
-
- 0 replies
- 381 views
-