ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143417 topics in this forum
-
TNA VS EPDP யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று கூச்சல் குழப்பங்கள் மதிதியில் முடிந்தது:- 08 அக்டோபர் 2012 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று கூச்சல் குழப்பங்கள் மதிதியில் நடந்து முடிந்துள்ளது. ஆளும் தரப்பின் பங்காளியான ஈபிடிபி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திரகுமார் மற்றும் அலென்ஸ்ர்pன் ஆகியோர் பிரசன்னமாகியிரு;தனர். கூட்டமைப்பின் சார்பில் அதன் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியமாக இன்று ஒன்று திரண்டு கலந்து கொண்டிருந்தனர். மாவை சேனாதிராசா சுரேஸ் பிறேமச்சந்திரன், விநாயகமூர்த்தி, சிறீதரன், சுமந்திரன் மற்றும் சரவணபவன் என அனைவரும் திரண்டிருந்தனர். யாழ்குடாநாட்டில் படை முகாம்களுக…
-
- 2 replies
- 797 views
-
-
புலிகளின் நிலைப்பாட்டிலேயே தமிழ்க்கூட்டமைப்பு: பஷில் By General 2012-10-08 09:29:42 பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. யதார்த்தமான தீர்வைக் காணவேண்டுமாயின் தமிழ்க் கூட்டமைப்பு சகல கட்சிகளும் கலந்துகொள்ளும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கே வரவேண்டும் ௭ன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ்க் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் ௭ன்று கூறமுடியாது. மேலும் தீர்வு விடயத்தில் புலிகள் அமைப்பு கொண்டிருந்த நிலைப்பாட்டையே தமிழ்க் கூட்டமைப்பும் கொண்டுள்ளது. இது தீர்வு முயற்சிக்கு ஆரோக்கியமானதல்ல ௭ன்றும் அவர்…
-
- 3 replies
- 521 views
-
-
[size=4]நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இருதரப்புப் பேச்சுக்களை இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.[/size] [size=4]சமநேரத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டுடன் இந்தப் பேச்சுக்களை இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.இதுதொடர்பாக அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் விரிவாக ஆராய்ந்துள்ளார்.[/size] [size=4]நேற்று புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து…
-
- 10 replies
- 652 views
- 1 follower
-
-
வலிகாமம் சீராவலையில சுமார் 15 ஏக்கர் காணி இராணுவத்தினரால் ஆக்கிரமிப்பு சீன உதவியுடன் புதிய முகாம் - 08 அக்டோபர் 2012 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலமாக இருந்து விடுவிக்கப்பட்ட சீராவலை கிராமப்பகுதியில் சுமார் 15 ஏக்கர் காணியை இராணுவத்தினர் ஆக்கிரமித்து புதிதாக முகாம் அமைக்கும்பணியினை ஆரம்பித்துள்ளனர். உடுவில் பகுதியில் நிலை கொண்டுள்ள 513 ஆவது படைப்பிரிவே இப்பகுதியினில் பாரிய படைமுகாம் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கான முன்னேற்பாடகாக குறித்த சாவாரித்திடலைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருவதுடன், படைமுகாம் அமைப்பதற்கென சீனாநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கட்டடப் பொருட்களும் கொண்டு…
-
- 0 replies
- 227 views
-
-
வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தைத் தொடர்ந்து அந்த மக்கள் இடம் பெயர்ந்து சென்ற நிலையில் மீண்டும் தமது சொந்த மண்ணில் குடியமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் இம்மக்களில் பலர் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அப்பகுதிகளில் உள்ள இரும்புகளை எடுத்து விற்பனை செய்கின்றனர். மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களே குறித்த இரும்புகளை எடுத்து விற்பனை செய்கின்றனர். குறிப்பாக மாத்தளன், பொக்கனை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளிலேயே அதிகளவில் மக்கள் இரும்பை எடுக்கின்றனர். இந்த நிலையில் இரும்பை எடுக்கும் மக்கள் மீது தொடர்ச்சியாக அப்பகுதிகளிலுள்ள இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொள்வதால் அவர்கள் பாதிப்படைந்துள்ளனர். குறித்த இரும்புகளை அகழ்வதற்கு அரசாங்கம் தனியாருக்கா…
-
- 0 replies
- 355 views
-
-
புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தை சிதைக்கும் எரிக் சோல்கெய்ம்! திங்கள், 8 அக்டோபர் 2012( 10:22 IST ) Share on facebookShare on twitterMore Sharing Services எமது விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் எரிக் சோல்கெய்மைக் கொண்டு அழித்தது போன்று தழிழீழக் கொள்கையில் உறுதியாக இருக்கும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தையும் பலத்தையும் சிதைப்பதற்கு தற்போது மீண்டும் அவர் களமிறக்கப்பட்டுள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி குற்றம்சாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எமது விடுதலைப் போராட்டம் பலம்பெற்ற ஒரு சக்தியாக வளர்ந்து தாயகத்தில் ஒரு நடைமுறை அரசை விடுதலைப்புலிகள் நிர்வகித்துக் கொண்டிருந்த வேளையில், அந…
-
- 1 reply
- 489 views
-
-
இந்தியா சென்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் இந்தியாவின் பலவீனமான உறுதிமொழிகளை ஆதாரத்துடன் இந்தியா ராஜதந்திரிகளுக்கும் அனைத்துலக இராஜ தந்திரிகளுக்கும் எடுத்துக் கூறி , சிங்கள அரசாங்கங்களுடன் பேசி ஒப்பந்தம் போட்டு தீர்வு காண முடியாது , தமிழீழமே நீதியுடன் தமிழர்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்து வாழ்வதுக்கான ஒரே வழி என்பதை பின்வரும் ஆதாரங்கள் மூலம் நிரூபித்து அவர்களின் ஆதரவை பெறுவது காலத்தின் தேவையாக உள்ளது : 1 . நீண்ட பேச்சுவார்த்தைகள் மூலம் காலத்தைக் கடத்தி , இறுதியில் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இலங்கை அரசாங்கம் எழுத்தில் போட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் 25 வருடங்களின் பின்பும் அதன் ஒரு சரத்தை கூட இந்தியாவால் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து செயல்படுத்த முடிய…
-
- 0 replies
- 460 views
-
-
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களை மானூஸ் தீவுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் 08 அக்டோபர் 2012 ஆரம்பிக்கப்படும் சட்டவிரோதமான படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களை பப்புவா நியூகினியின் மானூஸ் தீவுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஒருவார காலத்துக்குள் ஆரம்பிக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்து கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை நாவுறு மற்றும் பப்புவா நியூகினி தீவுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை அவுஸ்திரேலியா ஆரம்பித்துள்ளது. நாவுறு தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக பப்புவா நியூகினியின் மானூஸ் தீவுகளுக்கு அனுப்பும் …
-
- 0 replies
- 207 views
-
-
தன்னையும், தனது கைக் குழந்தையையும் கைவிட்டு, விவாகரத்துப் பெற வேண்டாமென மன்றாடினாள் மனைவி. ஆனால் விவாகரத்துப் பெற்று, மற்றொரு பெண்ணை மீண்டும் மண முடிப்பேன் என அடம்பிடித்தான் கணவன். நான் தவறு செய்திருந்தால் பகிரங்கமாக இங்கு மன்னிப்புக் கோருகிறேன் எனவும் கெஞ்சிப்பார்த்தாள். கல்நெஞ்சுக் கணவனோ சிறி தும் நெகிழ்ந்து கொடுக்கவில்லை. பொறுமையின் எல்லைக்கே சென்றாள் மனைவி, தான் கொண்டுவந்திருந்த கத்தி ஒன்றை தன் கைப்பையிலிருந்து எடுத்து ஆவேசத்துடன் கணவனைக் குத்தி விட்டு தன் கைக்குழந்தையுடன் அங்கிருந்து சென்று விட்டாள். இது கற்பனைக் கதையல்ல, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூர் காதி நீதிமன்றத்தில் நடந்த உண்மைச் சம்பவம். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது: நிந்தவ…
-
- 4 replies
- 875 views
-
-
13 ஆவது சட்டத் திருத்தத்தை ஓர் அரசியல் தீர்வாக ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை! இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின்படி கொண்டுவரப்பட்ட 13 ஆவது சட்டத் திருத்தத்தை தமிழர் இனப் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாக தாம் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை என்றும், ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள, நடைமுறை சாத்தியமுள்ள ஒரு தீர்வையை தாம் நாடுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி பேசுவதற்காக அடுத்த சில தினங்களுக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புது தில்லிக்கு விஜயம் செய்யவுள்ளனர். இந்தியா,13 ஆவது சட்டத் திருத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும், போரால் பாதிக்கப்பட்ட வட பகுத…
-
- 0 replies
- 352 views
-
-
இலங்கை அரசியலில் சில தரப்பினரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவியான அனோமா பொன்சேகா, அரசியல் செயற்பாடுகளுக்கு விடைகொடுத்து விட்டு அமெரிக்கா சென்று குடியேறவுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. தனது விடுதலை என்பது மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளதன் காரணமாக தனது மனைவியை அரசியலில் முழுமையாக ஈடுபடுத்த சரத் பொன்சேகா விரும்பியிருந்தும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெரும்பாலானோர் இதற்கு இணக்கம் தெரிவிக்காமையே அனோமாவின் அரசியல் துறவறத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, எதிர்வரும் 18ஆம் திகதி சரத் பொன்சேகாவின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றில் அனோமா பொன்சேகாவையும் கலந்து கொள்ளச் செய்யவுள்ள சரத் பொன்சேகாவின் தீர்மானத்து…
-
- 1 reply
- 783 views
-
-
[size=2][size=4]சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மைதானத்துக்கு நேரடியாக விஜயம் செய்துள்ளார். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்ற நிலையில் இலங்கை அணியை ஊக்குவிக்கும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...7-15-50-49.html[/size][/size]
-
- 2 replies
- 532 views
-
-
பல தசாப்தங்களாக தமிழீழ விடுதலையைக் கொச்சைப்படுத்தியும், ஈழத் தமிழரின் விடுதலைக்காக வீரம் செறிந்த ஆயுதப் போரை முன்னெடுத்த விடுதலைப் புலிப் போராளிகளைக் களங்கப்படுத்தியும் எழுதிவந்த சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'இந்து' பத்திரிகை முதல் முறையாக சிங்கள அரச தரப்பினர் வழங்கிய இராணுவப் புள்ளிவிவரங்கள் பொய் என்று தெரிவித்துள்ளதுடன், தான் சேகரித்த நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் செப்டம்பர் 20-ஆம் தேதியன்று நீண்ட முக்கிய தலைப்புக் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக ஆயிரம் நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான் என்கிற உதாரணம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்து வெளியேற்றுமாறு பல வெளிநாட்டு அரசாங்கங்கள் கடந்த ஒர…
-
- 0 replies
- 423 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரானது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மனிதப் பேரழிவு என போர் முடிவுக்கு வந்த பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் கூறியதாக Frances Harrisonதெரிவித்துள்ளார். இலங்கையில் கடமையாற்றிய பி.பி.சி செய்திச் சேவையின் முன்னாள் ஊடகவியலாளரான Frances Harrison கடந்த 04ஆம் திகதி Open Democracy எனும் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டள்ளது. இக்கட்டுரையில் அவர் குறிப்பிட்ட முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம். 'இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரால் வைத்தியசாலைகள் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் வைத்திய கலாநிதி நிரோன் (உண்மையான பெயரல்…
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார். [size=3][size=4]தென் இந்தியாவில் புலிகள் மீள ஒருங்கிணைய முயற்சித்து வருவதாகவும், மாவோ தீவிரவாதிகளுடன் தொடர்பு பேணி வருவதாகவும் இந்தியத் தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத செயற்பாடுகள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட்ட போதிலும், வெளிநாடுகளில் புலிகளின் ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]சிறிய சந்தர்ப்பங்களைக் கூட பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய முயற்சிக…
-
- 3 replies
- 607 views
-
-
30 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு சிறிலங்காவில் வெப்பநிலை அதிகரிப்பு. சிறீலங்கா | ADMIN | OCTOBER 7, 2012 AT 09:01 சிறிலங்காவில் கடந்தவாரம் முப்பதாண்டு இல்லாத வகையில், அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.கடந்தவாரம் வவுனியாவில் 40.1 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.பொலன்னறுவ மாவட்டத்தில் 40 பாகை செல்சியஸ் வெப்பம் நிலவியது. அனுராதபுர, பொலன்னறுவ, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இதுபோன்று கடும் வெப்பநிலை காணப்படும் என்று சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரியான ஜீவன் கருணாரத்ன கூறியுள்ளார். மலையகத்திலும் வெப்பநிலை சிறிதளவு அதிகரித்துள்ளது. கண்டியில் 32.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது. அதேவேளை, கொழும்பில் சராசரி …
-
- 0 replies
- 699 views
-
-
கேப்பாபுலவு என்பது மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான இயற்கை வளங்களைக் கொண்டு அமைந்த ஒரு கிராமம். இங்கு விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலம் காணப்படுவதுடன் வெள்ளப் பாதிப்பு அற்ற பகுதியுமாகும். இவ்வாறான நிலப்பகுதியை தமதுவசம் சூறையாடியுள்ள படையினர் அப்பகுதிக்கு உரிய மக்களை மீளக் குடியமர்த்தாமல் இழுத்தடித்து வந்த நிலையில் அந்த மக்கள் போராட்டம் நடத்தியபோது அச்சுறுத்தப்பட்டு கழிவு அபிசேகம் செய்தமை தொடர்பாக கடந்தவாரம் இப்பகுதியில் பார்த்தோம். இந்த மக்களை பழிவாங்கும் நோக்குடன் சிறீலங்காப் படையினர், மக்களின் விருப்பத்தைக் கேளாமலே மக்களை ஏமாற்றி வவுனியா மெனிக்பாம் முகாமில் இருந்து அவர்களை பலவந்தமாக அகற்றி அடர்ந்த காட்டுப்பகுதியில் நிர்க்கதி நிலையில் விடப்பட்டனர். உங்களுக்கு ஏது சொந்தம…
-
- 1 reply
- 699 views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ளது. ௭ங்கோ ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் நடக்கவுள்ள இந்தத் தேர்தலுக்கும் இலங்கைக்கும் ஒரு தொடர்புமில்லை ௭ன்று ஒதுங்கி இருந்துவிட முடியாது. அது இலங்கைத் தீவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே உள்ளது. முன்னர் அமெரிக்க அரசியல் குறித்த செய்திகளை நாம் உலகச்செய்தியாகவே பார்த்தோம். இப்போது அது உள்நாட்டுச் செய்தி போலவே மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தினால், உலகமே ஒரு கிராமமாகி விட்டது மட்டும் இதற்குக் காரணமல்ல. இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா வகிக்கும் பாத்திரமும் தான் ஒரு காரணம். 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் இந்த நிலை ஏற்பட்டது ௭ன்று சொல்லலாம். அப்போது நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஏற்படக் கூடிய ஆ…
-
- 0 replies
- 545 views
-
-
[size=4]யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் திமுது ஆடிகல உட்பட சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பினர் பயணித்த வாகனத்தின் மீது இனந்தெரியாத நபர்களினால் கழிவு எண்ணெய் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நல்லூர் பின் வீதியில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் யாழ்ப்பாணம், கலட்டிப்பகுதியில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதாற்காக வருகை தந்த மேற்படி அமைப்பினர், நிகழ்வில் கலந்துகொண்டு இன்று கொழும்புக்கு செல்வதற்கு முன்னர் நல்லூருக்குச் சென்ற போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர்கள் மீது கழிவு எண்ணெய…
-
- 0 replies
- 483 views
-
-
[size=4]தமிழீழு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து மிகவும் தீவிரமான முறையில் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக 60 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்ட ஆலோசனைக்குழு நேற்று அறிவித்துள்ளது.[/size] [size=4]பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு விசாரணையின் இறுதி நடவடிக்கை மற்றும் அடுத்தகட்ட செயற்பாடு என்பவை தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என அதன் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 80 உற…
-
- 1 reply
- 359 views
-
-
யாழ். இருபாலையில் கோரவிபத்து: மூவர் சம்பவ இடத்திலேயே பலி; 12 பேர் படுகாயம்! சிறீலங்கா | ADMIN | OCTOBER 5, 2012 AT 23:11 யாழ். இருபாலையில் இடம்பெற்ற கோரவிபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். 12 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுள்ளதாக பதிவின் செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் பருத்தித்துறைச் சாலை இருபாலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த தென்னிலைங்கை சுற்றுலாப் பயணிகளின் பேருந்தும் அது போல பருத்தித்துறையில் இருந்து யாழ் நகர் நோக்கி விரைந்து கொண்டிருந்த தனியார் சிற்ரூர்தியும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இரு ஊர்திகளின் ஓட்டுனர்களும் அந்த இடத்திலேயே சாவடைந்து …
-
- 1 reply
- 1k views
-
-
சித்திரவதையால் மூளை பாதிக்கப்பட்ட தமிழ் அகதி - அவுஸ்ரேலிய ஊடகத்தில் பரபரப்பு செய்தி!
-
- 0 replies
- 707 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வேண்டும்! எரிக் சொல்ஹெய்ம் October 7, 2012 09:38 am இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடித் தீர்வு வழங்க வேண்டுமென முன்னாள் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ´ஸ்டில் கவுன்டிங் தி டெட்´ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தமிழ் மக்களை அணுக வேண்டுமாயின் நான்கு முக்கிய காரணிகளுக்கு தீர்வு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து தமிழ் அ…
-
- 0 replies
- 1k views
-
-
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார எல்லைக்குள் மலையகத் தோட்டப்புறங்களையும் உள்வாங்க வேண்டும்! இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார எல்லைக்குள் மலையகத் தோட்டப்புறங்களையும் உள்வாங்க வேண்டும் என்று மலையக சிவில் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதேச சபைகளுக்கான தேர்தல்களில் வாக்களிக்க உரிமை இருக்கும் தோட்டப்புற மக்களுக்கு அந்தப் பிரதேச சபைகளின் சேவைகளைப் பெறுவதில் மட்டும் சட்டரீதியான தடைகள் இருப்பதாக நீண்டகாலமாக சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டி வருகின்றனர். இலங்கையின் உள்ளூராட்சி மன்ற முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை அரசாங்கம் எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளது. இதற்கான விவாதத்தின்போது, மலையக மக்…
-
- 0 replies
- 356 views
-
-
தமிழர்களை கொன்று குவித்த சிங்கள நாட்டு அணிக்கு ஆதரவா? அஸ்வினுக்கு குவியும் கண்டனங்கள்! சிறீலங்கா, விளையாட்டு செய்திகள் | ADMIN | OCTOBER 6, 2012 AT 20:20 இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழர். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு தமிழர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருப்பதைக் கண்டு தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஒவ்வொரு போட்டியிலும் அஸ்வினின் அபாரமான பந்துவீசும் திறமையைக் கண்டு, மேலும் மேலும் தமிழன் எனப் பெருமைப்பட்டனர். இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் உலகக்கோப்பை 20-20 கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறிவிட்டது. இந்த நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இறுதிப்…
-
- 17 replies
- 1.2k views
-