Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கணவனின் நடத்தை காரணமாக குடும்ப வாழ்வில் வெறுப்படைந்து, விரக்தி கொண்ட நான்கு பிள்ளைகளின் தாய் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்குக் வந்தாள். தானில்லா விட்டால் தன் பிள்ளைகள் கஷ்டப்படுமே என்ற கவலைகொண்ட அத்தாய் தன் நான்கு பிள்ளைகளையும் கிணற்றில் தள்ளி உயிரை மாய்த்துக்கொள்ளச் செய்யவும் முனைந்தாள். கிணற்றினுள் தாயால் தள்ளிவிடப்பட்ட இருபிள்ளைகள் உயிரிழந்த நிலையில் மற்றைய இரு பிள்ளைகளில் ஒரு பையன் தப்பியோடி தகவல் கொடுத்ததன் பேரில் அந்த இரு பிள்ளைகளும் தெய்வாதீனமாக உயிர்தப்பினர். வவுனியா சின்னசிட்டிகுளம், நேரியகுளம் எனுமிடத்தைச் சேர்ந்த றிஸ்வான் நபீசா எனும் மேற்படி நான்கு பிள்ளைகளின் தாய் மீது வவுனியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டவழக்கில் மொத்தமாக 18 வரு…

  2. யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் யாழில் 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகநேசன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பின் போதே அவர் முற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதன்படி யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 28பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்அனுமதியற்ற சாராய விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக 3 பேரும் சூழல் மாசடைவதற்குக் காரணமான 3 பேரும் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றத்திற்காக 45 பேரும் என மொத்தமாக 85 பேர் யாழ்ப்பாணப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்…

  3. போதையில் ஆடினால் பொலிஸில் மாட்டுவர்; தென்மராட்சியில் அதிரடி நடவடிக்கை ஆரம்பம் தென்மராட்சிப் பிரதேச பொலிஸார் அண்மைக் கால மாக பொது இடங்களில் மது போதையில் காணப்படு வோரைக் கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின் றனர்.இரவு வேளையில் மது போதையில் பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் குழப்பம் விளை விப்பவர்கள், வீதிகளில் சண்டையிடுவோர், மது அருந்தி விட்டு வாகனம் செலுத்துவோரைக் கைது செய்து வருகின்றனர். பொலிஸாரால் கைது செய்யப்படுவோர் அருகில் உள்ள வைத்தியசாலை களில் பரிசோதனை செய் யப்பட்டு நீதிமன்றில் முற் படுத்தப்படுகின்றனர். கிராமப் புறங்களில் மது பான விற்பனை முற்றாக நிறுத்தப்பட்டதால் மதுப் பிரியர்கள் சாவகச்சேரி நகரப் பகுதியில் உள்ள மதுபான …

  4. மீழ்குடியேற்றம் முடிவடைந்துவிட்டதாக சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக முகாமில் இருந்த மக்களை ஆயுத முனையில் மிரட்டி அழைத்து வந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மரங்களின் கீழ் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி தவிக்க விட்டுள்ளனர் சிங்கள காட்டுமிராண்டிப் செட்டிகுளம் நலன்புரி முகாமில் தங்கி யிருந்த கேப்பாபிலவு, மந்துவில் கிராமங்களைச் சேர்ந்த 361 குடும்பங்களே நேற்றுத் திங்கட்கிழமை இராணுவத்தினரால் வற்றாப்பளைக்கு கொண்டுவரப்பட்டன.பலவந்தமாக இந்தக் குடும்பங்கள் முல் லைத்தீவு மாவட்டத்தின் கைவேலி மற்றும் வற்றாப்பளை மகா வித்தியாலயம் ஆகிய இடங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றித் தங்கவைக்கப்பட்டுள்ளன. நேற்றுக்காலை செட்டி குளம் நலன்புரி நிலையத் துக்குச் சென்ற இராணுவத்தினரும் அரச அதிக…

  5. ஈழத்தமிழர்கள் உலகம் முழுதும் பரவி வாழ்ந்தாலும் தமது உணவுர்கள் அனைத்தும் தாயகத்தை எண்ணியே துடிக்கின்றதுக்கு அமைவாக , 22 .09 .2012 அன்று சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்ற எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற பொங்குதமிழ் நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் உலகத்தமிழர்களின் ஒன்றுபட்ட உரிமைக்குரல் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்கு ஒலிக்கும் என்பதை பறைசாற்ற நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால்23 .09 2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு “எமது நிலம் எமக்கு வேண்டும்” பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது . அத்துடன் தியாக தீபம் திலீபனின் 25வது ஆண்டு ஞாபகார்த்த நினைவு வணக்க நிகழ்வும் மற்றும் லெப் கேணல் சங்கர் ,அண்மையில் மகிந்த ரா…

  6. ஐ.நா பொதுச்சபையின் மூன்றாவது குழுக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் தீவிர முயற்சிகளில் ஐரோப்பிய நாடுகள் சில ஈடுபட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவொன்றை நியுயோர்க் அனுப்பவுள்ளது. ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் ஒரு அங்கமாக மூன்றாவது குழுக்கூட்டம் நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது. இதில் சிறிலங்காவுக்கு எதிரான மனிதஉரிமைகள் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியில் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சில ஈடுபட்டுள்ளன. இந்தத் தீர்மானத்தை வரைவதற்கும், அதற்கு ஆதரவு தேடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் பிரித்தானியாவைச் சேர்ந்த குழுவொன்று ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளது. இந்தக்குழு சக்திவ…

  7. நான் பிறரைப் போன்று பதவிக்காக வாழவில்லை. தமிழீழ விடுதலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்காக போராடுவேனே தவிர பதவிக்காக எப்போதும் உயிர் வாழ மாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சேலத்தில் கூறினார். சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜா, இலங்கை அதிபர் ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 17-ம் தேதி தீக்குளித்தார். பலத்த தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி 18-ம் தேதி இறந்தார். ராஜபக்சவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக, மத்திய பிரதேச மாநிலம் சென்றிருந்த வைகோ ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பினார். அவர் விஜயராஜாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, சேலம் நெத்த…

  8. [size=2] [size=4]செம்மணி இந்து மயானத்துக்கு அருகேயுள்ள தரிசு நிலங்களில் கொட்டப்படும் கழிவுகளில் உலோகப் பொருள்களைத் தேடி சிறுவர்கள் பலர் தினமும் அங்கு வருவதாகப் பலரா லும் முறைப்பாடு தெரி விக்கப்படுகின்றது.[/size][/size] [size=2] [size=4]இந்தப் பகுதிகளில் வெளியிடங்களிலிருந்து கொண்டு வரப்படும் கழிவுகள் இரவு வேளைகளில் கொட்டப்படுகின்றன. கடந்த சில நாள்களாக பாடசாலைக்குச் செல்ல வேண்டிய சிறுவர்கள் பலர் பாடசாலை நேரங்களில் இந்தப் பிரதேசத்தில் இரும்பு, தகரம் போன்ற உலோகப் பொருள்களை கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் பொறுக்கி வருகின்றனர்.[/size][/size] [size=2] [size=4]இதேவேளை, இவ்வாறு உலோகப் பொருள்களைப் பொறுக்கும் சிறுவர்கள் தம்மை யாராவது பார்த்துக் கொண்டு நின்றால் ஓடி ஒளிப்பதா…

  9. [size=4]இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும் என்பதுவே சர்வதேச சட்டம். இதை ஐநாவின் மீள் குடியேற்ற ஒழுங்கும் அங்கீகரித்துள்ளது. இலங்கையில் போரினால், இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழ் மக்களில் பெருந்தொகையானோர், தமது சொந்த கிராமங்களில் குடியேற்றப்படவில்லை. வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த கிராமங்களில் குடியேறமுடியாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது நிலங்களை அரசு இராணுவ மற்றும் பல்வேறு தேவைகளுக்காக பிடித்து வைத்துள்ளது. இந்நடவடிக்கைகள் அரசின் உண்மையான மீள்குடியேற்ற கொள்கையை படம் பிடித்து காட்டுகின்றன. இந்நிலையில், தமது சொந்த இடங்களில் குடியேறுகின்ற தமிழ் மக்களின் உர…

  10. [size=2] [size=4]வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்துக்கு மூடுவிழா செய்வதற்காக அங்கு தங்கியிருந்த கேப்பாப்புலவு மக்களை நிர்ப்பந்தித்து அரசு வெளியேற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேப்பாப்புலவுப் பகுதியில் இன்னமும் படைத்தளங்கள் விலக்கப்படாததோடு, கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கையும் பூர்த்தியாகாத நிலையிலேயே அந்தப் பகுதி மக்களை முகாமில் இருந்து வெளியேற்றி வேறு இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.[/size][/size] [size=2] [size=4]"இலங்கையில் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு அவற்றில் தங்கியிருந்த மக்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர் என்று சர்வதேசத்துக்கு காட்டுவதற்காகவே இவ்வாறு நாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றோம்…

  11. அம்பலமாகும் உண்மைகள் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்புவதென்ற பேரில் நடந்து வரும் மிகப்பெரும் மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். குறிப்பாக ஆட்களை கடத்தும் முகவர்களுடன் அவ்வப்பகுதி பொலிஸார் மற்றும் கடற்படையினர் நிழலாக தொடர்புபட்டுள்ளதும் தற்போது அம்பலமாகியுள்ளது. வடமராட்சி வடக்கு கடற்பரப்பில் நேற்று (23.09.12) அதிகாலை 46 பேர் இதே போன்று அரங்கேற்றப்பட்ட நாடகம் ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட வேளை அகப்பட வைக்கப்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளது. கடத்தல்காரர்கள் ஆளொருவரிடமிருந்து தலா மூன்று இலட்சம் வரையில் கட்டணம் அறவிட்டுள்ளனர். இவ்வாறாக பயணிக்கும் படகொன்றை அவர்கள் சுமார் …

  12. பாகிஸ்தான், மாலைதீவு, வியட்னாம் உட்பட ஐந்து நாடுகள் பங்குபற்றும் கூட்டு இராணுவ பயிற்சி மட்டக்களப்பில் தற்போது நடைபெற்று வருகிறது என அதிர்வு இணையம் அறிகிறது. இந்த பயிற்சியில் சீனா கலந்துகொள்ளவில்லை என்பது போன்ற தோற்றப்பாட்டை இலங்கை வெளிப்படுத்தியுள்ளபோதிலும், இக் கூட்டுப் பயிற்சியில் சீனாவும் கலந்துகொண்டுள்ளது எனத் தெரியவருகிறது. இந்தியா இதில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்ற செய்திகளும் கசிந்துள்ளது. நீர் -காகங்கள் என்று இந்த பயிற்சி நடவடிக்கைக்கு பெயர் சூட்டாப்பட்டுள்ளது. பாரிய குண்டுகளை வெடிக்கச் செய்து, அதன் மத்தியில் தரையிறங்கும் ஒரு படைப்பிரிவை, எவ்வாறு ஊடறுத்து தாக்குவது என்பது தொடர்பாக இப் பயிற்சி நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் வேடிக்கையான விடையம் என்ன…

  13. கிழக்குமாகாணத்தில் நேசக்கரம் கல்வித்திட்டத்தில் 2500மாணவர்கள் பயன் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் 55பாடசாலைகளில் 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 2500மாணவர்களுக்கான தயார்படுத்தல் பயிற்சிநெறி வகுப்புகள் நேசக்கரம் ஆதரவில் நடாத்தப்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிப்புற்ற மாணவர்களும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களும் இப்பயிற்சி நெறியில் பயனடைந்துள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சை பயிற்சி வகுப்பு 2012 உதவியோர்:- வொல்கானோ-78,19€ நாகரட்ணம் கிருபாகரன் -19,41€ அகூதா – 109,32€ = 206,92€ (30900,00/=Rs) சவுதியிலிருந்து ரமேஸ் – 16200,00/=Rs உதவியாய் கிடைத்த தொகை மொத்தம் – 47100,00/= Rs மொத்தச் செலவு – 105250,00/= மீதிச் செலவு 58150,0…

  14. புனித இஸ்லாம் மதத்தினையும் எம் பெருமானார் (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு சிறுவர், அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் (பா.உ) தமது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் இக்கண்டனம் விடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சரின் ஊடகச் செயலாளர் ஏ.எம்.ஜெசீம் இலங்கை மற்றும் சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அவ் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, மேற்கத்திய நாடுகளின் இஸ்லாம் மதத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக இது போன்ற தொடர்ச்சியான காழ்புணர்ச்சிகளை இஸ்லாத்திற்கு விரோதமான விஷமிகள் மேற்கொண்டு வருவதை முஸ்லிம்களாகிய நாம்இனியும் பொறுத்திருக்க முடியாது. இத்தகைய இழ…

  15. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த பொழுது கொள்கை, புரிந்துணர்வு அடிப்படையில் ஒத்தியங்குவதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இன்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற சக்தியாக வளர்ந்திருக்கிறது. தமிழர்களின் வலிமையான சக்தியாக சர்வதேசம் ஏற்றுக்கொள்வதற்கு கொள்கை ரீதியாக ஒன்றுபடக்கூடிய ஏனைய கட்சிகளும் கூட்டமைப்புடன் இணைய முன்வரவேண்டும் ௭ன தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் நேற்று முன்தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் தலைவர் சம்பந்தனின் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோர் கூட்டமைப்பினை முன்நகர்த்துவது தொடர்பில் தம…

  16. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் இன்று காலை சித்திரவதையினால் முரையான மருத்துவ வசதி இன்றிஉயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தினர் என்ற குற்றச்சாட்டில் இலங்கைக் கடல் எல்லையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள ஐவரில் ஒருவரே மேற்படி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி உயிரிழந்தவர் தமிழகம் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சில வாரங்களுக்குன் முன்னர்தான் இந்திய வெளியுறவு அமைச்சர் சிறிலங்கா சிரைகளில் தமிழக மீனவர்கள் யாரும் இல்லை எனக் கூரியமை நினைவிருக்கலாம். http://thaai…

  17. [size=4][/size] [size=4]மன்னார் உப்புக்குளம் மீனவர்களின் விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு ௭திராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை அவதானிக்கும் பொருட்டு ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் தனது பிரதிநிதியொருவரை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.[/size] [size=4]மேற்கு அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான மார்க் டிரவல் இவ் வழக்கு விசாரணைகளில் அவதானியாகச் செயற்படும் பொருட்டு நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்தார். இவர் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணையின் போது சர்வதேச அவதானிப்பாளராக செயற்படவுள்ளார்.[/size] [size=4]இதுதொடர்பில் கருத்த…

  18. [size=4]'தனியார் காணிகளை இராணுவத்தினர் தங்களது தேவைக்கான சுவீகரிக்க முடியாது. அவ்வாறு சுவீகரித்தாளும் தேவைக்கு குறைந்தளவு காணிகளையே சுவீகரிக்க முடியும். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் தனியார் காணி சுவீகரிப்புக்கு எதிராக அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 17இன் கீழ் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடரலாம்' என்று முன்னாள் வடக்கு கிழக்கு காணி உதவி ஆணையாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் - தமிழ்மிரருக்கு தெரிவித்துள்ளார். தனியார் காணிகளை இராணுவம் சுவீகரிப்பதற்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை. அரச காணியை எடுத்துக்கொள்ளும் அதிகாரமும் இராணுவத்திற்கில்லை என்று அவர் குறிப்பிட்டார். அரச காணியை சுவீகரிப்பது என்றாலும் இராணுவம் நேரடியாக அதனை எடுத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு எடு…

  19. கச்சத்தீவு, இலங்கைத் தமிழர்கள் படுகொலை, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், டெசோ ஏமாற்று வேலை என்று அடுக்கடுக்காக தமிழினத்துக்கே இழிவை ஏற்படுத்திய கருணாநிதி தன்மானம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர் கலைராஜன் கடுமையாக சாடியுள்ளார். 1974ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது அன்று தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அதனை தடுத்து நிறுத்த என்ன செய்தார்? மவுனசாமியாக இருந்து சம்மதம் தெரிவித்த தமிழின துரோகிதானே இந்த தன்மானம் பேசும் கருணாநிதி? அன்றைக்கே தடுத்திருந்தால் இன்றைக்கு 550-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிர் இலங்கை இராணுவத்தினரால் பறிக்கப்பட்டிருக்குமா? 1975-இல் புதுப்பிக்கப்படவேண்டிய காவிரி நதிநீர் …

  20. இலங்கையை தனது கைக்குள் போட்டுக் கொண்டு விட்ட சீனா அடுத்து ஆப்கானிஸ்தானையும் தன் பக்கம் திரு்பபும் முயற்சிகளில் இறங்கியுள்ளதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மேலும் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தான் நமது பரம்பரை எதிரி, பாகிஸ்தானால் தான் நமக்கு ஆபத்து என்று நாம் பாரம்பரியமாக கத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான ஆபத்து சீனாதான் என்பதை நாம் ஏனோ வசதியாக மறந்து கொண்டிருக்கிறோம். பாகிஸ்தானில் யாராவது தும்மி அந்த சத்தம் இந்தியாவுக்குள் கேட்டு விட்டாலே டென்ஷனாகி விடும் நாம், சீனாக்காரர்கள் இந்திய எல்லைப் பகுதியில் அருணாச்சல் பிரதேசத்தில் பல ஆயிரம் கிலோமீட்டர்களை ஸ்வாகா செய்தாலும் கூட கண்டு கொள்ளாமலேயே இருக்கிறோம். தற்போது இந்தியாவை எப்படியெல்லாம் சுற்றுச் சூழ…

  21. [size=6]முஸ்லிம் காங்கிரஸ் விரும்பிய மாகாண அமைச்சுகளை வழங்க அரசு மறுப்பு! நெருக்கடியில் ஹக்கீம்!![/size] கிழக்கு மாகாணசபை அமைச்சரவையில் தமக்கு கல்வி உட்பட முக்கிய அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளை அரசு அடியோடு நிராகரித்திருப்பதால் புதிய சர்ச்சை உருவாகியிருக்கிறது. அரசின் இந்த நிராகரிப்பினால் கடுமையாக அதிருப்தியடைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தீர்மானமொன்றை எடுப்பதில் குழப்பத்தில் உள்ளதாகத் தெரிவருகின்றது. தாம் கோரிய அமைச்சுப் பதவிகளை அரசு வழங்காவிட்டால் கிழக்கு மாகாண அமைச்சரவையில் வேறு எந்த அமைச்சுப் பொறுப்புகளையும் ஏற்காமல் சுயாதீனமாக செயற்படுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூர…

  22. [size=2] [size=4](ரொமேஸ் மதுசங்க, நவரத்தினம்) இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களை கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக தங்க வைக்கப்பட்டிருந்த வவுனியா, செட்டிக்குளம் நலன்புரி முகாம் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக மூடப்பட்டது. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வந்த நிலையில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்நலன்பரி நிலையமானது மக்களின் படிப்படியான மீள்குடியேற்றத்தின் பின்னர் இறுதியாக கேப்பாபிளவு மற்றும் மந்துவில் கிராமங்களைச் சேர்ந்த 360 குடும்பங்களையும் முல்லைத்தீவில் மீள்குடியேற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி முகாம் பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேர…

  23. [size=4]இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த இறுதித் தீர்மானத்தை அரசாங்கம் விரைவில் எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]13ம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]1987ம் ஆண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் தீர்வுத் திட்டம் அமை…

  24. யாழ், வடமராட்சி,பொலிகண்டிப் கிராமத்தில் இன்று அதிகாலை வீட்டிற்குள் புகுந்து மூன்று இளைஞர்கள் சிங்கள கடற்படையினரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். குறித்த மூவரின் வீட்டிற்கு வந்த சாதாரண உடையில் மோட்டர் சைக்கிளில் வந்த குறித்த கடற்படையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி மூவரையும் அடித்தவாறு சென்றதாகவும் குறித்த இளைஞர்களின் உறவினர்களால் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், குறித்த இளைஞர்களின் பெற்றோரால் வல்வெட்டித்துறை காவற்றுறையினரிடம் இச் சம்பவம் குறித்து முறையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thaaitamil.com/?p=33156

  25. மஹிந்த அரசாங்கத்திற்கும், கூட்டமைப்பிற்கும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கலாம் எனக் கூறப்படுகின்றது. பெரும்பாலும் இந்த பேச்சுவார்த்தை நாடகம் நவம்பர் மாத ஜெனீவா கூட்டத்தொடரினை மையமாக வைத்து தொடங்கலாம். நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால்தான் பேசமுடியும் என மஹிந்தரும், அதில் அங்கம் வகிக்க முடியாது என சம்பந்தனும் இத வருடம் முழுவதும் கூறிவந்தார்கள். ஆனால் இப்போது ஜெனீவா கூட்டம் வருவதால் மஹிந்தருக்கு பேச்சு நடத்துவது போன்று காட்டவேண்டிய தேவையுள்ளது. ஆகவே பேச்சினை ஆரம்பிக்கவுள்ளனர். இதற்கு அழுத்தம் கொடுக்குமாறு மன்மோகன் சிங்காரை மஹிந்த டில்லியில் கேட்டுக்கொண்டாராம். http://thaaitamil.com/?p=33154

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.