Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]கனடாவின் ஆளுங்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் கிச்சினர் மத்திய தொகுதி நாடாள மன்ற உறுப்பினரும், தமிழ் மக்களின் நீண்ட கால நண்பருமான ஸ்ரீபன் வூட்வோர்த் அவர்கள் தமிழர்களின் தொடரும் துயரம் பற்றி தனது ஆழ்ந்த கவலையையும் மேலும் இலங்கையில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற ஆயிரக்கணக்காக அநியாய கொலைகள் தொடர்பாக சுதந்திரமான போர்க்குற்ற விசாரணை அனைத்துலக ரீதியில் இடம்பெற வேண்டுமென்றும் கோரிக்கையும் விடுத்து பின்வரும் அறிக்கையும் வெளியிட்டுள்ளார். தமிழர் தாயகத்தில் இருக்கின்ற தங்களின் உற்றார் உறவினர் நண்பர்கள் படும் கொடுமைகளையும் அவர்கள் சந்திக்கும் மரணங்களையும் எண்ணி மிகவும் ஆழமான கவலையில் இருக்கும் கனடியத் தமிழரைச் சந்திக்கும்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினரான எனக்கு ஏ…

  2. [size=5]வட மாகாணசபைத் தேர்தல் இழுத்தடிக்கப்படுவதன் மர்மம்[/size] [size=5][size=4]வட மாகாண சபைக்கான தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற அழுத்தம் அரசாங்கத்துக்கு அதிகரித்து வருகிறது. [/size][/size] [size=5][size=4]உள்நாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளால் இந்த அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ இல்லையோ - சர்வதேச அளவில் இது இலங்கைக்குத் தலைவலி கொடுக்கின்ற விவகாரமாக மாறியுள்ளது.[/size][/size] [size=5][size=4]வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு அரசாங்கம் பல்வேறு பதில்களைக் கொடுத்தது. அந்தக் காலஎல்லைகள் எல்லாம் இப்போது முடிந்து விட்டன. இப்போதைய நிலையில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் சரியானதொரு காலஎல்லையைச் சொல்லவே தயாராக இல்லை.[/si…

    • 0 replies
    • 954 views
  3. [size=5]முன்னாள் போராளிகள் பலர் படை முகாம்களில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு![/size] [size=4]விடுதலை செய்யப்பட்டு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் குடியேறியுள்ள முன்னாள் போராளிகள் பலர் படை முகாம்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். புனர்வாழ்வு வழங்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாப்புகள் உள்ளதாகவும் சுயதொழில் நடவடிக்கைகளுக்காக கடன் உதவி வழங்கப்படுமெனவும் அரசு முன்னர் கூறியது. ஆனால் தற்போது முன்னாள் போராளிகள் பலர் படைமுகாம்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள். இது குறித்து கிள்நொச்சியில் உள்ள தொண்டு நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள…

  4. திருகோணமலையின் துறைமுகத்தினை அண்டிய உவர்மலைபகுதியில் வசிக்கும் மக்களின் குடும்ப விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் சிறீலங்கா படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உவர் மலைபகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் படையினர் அங்குள்ளகுடியிருப்பாளர்களின் விபரங்களை திரட்டுவதுடன் புதிதாக யாரும் வந்து குடியிருக்கின்றார்களா என்ற விபரத்தினை மக்களிடம் கேட்டு பதிவுசெய்வதுடன் புதிதாக யாரும் வந்தால் அவர்கள் தொடர்பான பதிவினை மேற்கொள்ளுமாற மக்களுக்கு படையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள மக்களின் குடும்ப அட்டை மற்றும் அடையாளஅட்டை அல்லது படைஅடையாள அட்டை போன்ற ஆள்அடையாளத்தினையும் குடும்ப அடையாளத்தினையும் உறுதிப்படுத்தும் அட்டைகளை வாங்கி பதிவுசெய்வதுடன் குடு…

  5. டெல்லியில் இந்திய அரசியல் தலைவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ரகசிய ஆலோசனை நடத்த உள்ளாக கூறப்படுகின்றது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற இங்கு வந்துள்ளார். அவர் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் அடைந்த பிறகு டெல்லியில் உள்ள இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரையை அடுத்து, அவரைக் கைது செய்யுமாறு சிங்களப் பேரினவாதக் கட்சிகள் குரல் எழுப்பி வந்தன. இந்த நிலையில் தான் அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தார். அவர் சென்னையில் இருந்து கொழும்பு திரும்புவதற…

    • 0 replies
    • 686 views
  6. மக்களை காவல் காப்பதற்கு இருப்பதாக சொல்லிகொள்கிற துறையினரும், கண்ணுக்கு புலனாகாத துறையினரும் தற்போது யாழ்பாணத்தில் முழுநேர தொழிலாக எண்ணெய் வர்த்தகம் செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்களை பயன்படுத்தி இன்று அரசாங்கம் வடக்கில் கழிவு எண்ணெய் அரசியல் செய்கிறது. மன்னார் கடலில் எண்ணெய் ஆய்வு நடத்தும் இந்திய நிறுவனங்கள் இனிமேல் யாழ்ப்பாண நிலப்பரப்பிலும் எண்ணெய் அகழ்வு வேலைகளை ஆரம்பிக்கலாம். அடுத்த வாரம் இலங்கை வரும் சிவசங்கர் மேனனுக்கு இந்த ஆலோசனையை நாம் வழங்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இந்த விவகாரம் இன்று சந்தி சிரிக்கும் உண்மையாகிவிட்டது. மக்களின் ஜனநாயக சாத்வீக போராட்டங்களுக்கு எதிரான, இந்த வெட்கங்கெட்ட கழிவு எண்ணெய் அரசியலை இந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும் எ…

    • 0 replies
    • 989 views
  7. புகலிடம் கோரும் அகதிகளை எந்தவொரு நாடும் திருப்பி அனுப்பக் கூடாதென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாக ஆபிரிக்க மேற்கு ஆசிய நாடுகளில் அகதிகளை திரும்ப அனுப்பும் பிரச்சினை அதிகரித்துள்ளது. இந்நிலையில் உலக அகதிகள் தினம் நேற்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் தான் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் அகதிகள் தஞ்சமடைகின்றனர். எனவே அவர்களை வரவேற்க வேண்டும். உள் நாட்டில் பல்வேறு நிதிப் பிரச்சினைகள் இருந்தாலும் அகதிகளாக வருபவர்களை திரும்ப அனுப்பக்கூடாது. வேறு வழியில்லாத நிலைய…

    • 0 replies
    • 682 views
  8. வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த 7பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. நீதிமன்ற உத்தரவுக்கமைய மேற்படி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதமே மோதலாக மாறியுள்ளது என்றும் இதனால் கைதிகளில் எழுவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்…

    • 0 replies
    • 496 views
  9. [size=3][/size] [size=3][size=4]சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவில் மிருகவேள்வியைத் தடுக்கக்கோரும் ஆணைகோர் மனு மீதான வாதப்பிரதிவாதங்களை ஜூலை 27ஆம் திகதி எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.இந்த மனு நேற்று புதன்கிழமை நீதியரசர்கள் எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் தீபாலி விஜேசுந்தர முன்னிலையில் எடுக்கப்பட்டது.[/size][/size] [size=3][size=4]ஸ்ரீபோதிராஜ மன்றம், ஜாதிக சங்க சம்மேளனம், தர்மவிஜய மன்றத் தலைவர் ஒல்கொட் குணசேகர, வண. பண்டிரிப்புவே வினீதா தேரோ, மிருக நலன்புரி நம்பிக்கை நிருவனத் தலைவி இராங்கனி டீ சில்வா, அதன் தர்மகர்த்தா விசாக திலகரத்ன, இலங்கை மிருக பாதுகாப்பு சங்க உதவித் தலைவர் லொறைன் மார்கரைட் பார்தோலொமஸ், அதன் செயலாளர் ஷர்மினி …

  10. [size=4]கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுடன் பல சந்தர்ப்பங்களில் ஆயுதப்படையினரே ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிர மசிங்க நாடாளுமன்றில் கூறினார். இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு: நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துள்ளது. காட்டுச் சட்டமே நடைமுறையில் உள்ளது. ஹம்பாந்தோட்டையில் ஜே.வி.பி. நடத்திய பகிரங்கக் கூட்டத்தின் போது ஆயுததாரிகள் அங்கு வந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இன்னும் தெற்கில் சுதந்திரமாக நடமாடித்திரிகின்றனர். பொலிஸார் சந்தேக நபர்களைக் கைதுசெய்யாது மௌனம் காக்கின்றனர். இறந்தவர்களுக்கான இறுதிக்கிரியையைக் கூட நடத்த விடாம…

  11. [size=4]வடமாராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் பகுதியில் தமிழ்மக்கள் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் சிறீலங்கா படையினரின் துணையுடன் சிங்கள கடல்தொழிலாளர்கள் தொழில்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள. வடக்கே யாழ்ப்பாணம் கடற்கரைதொடக்கம் திருகோணமலை புல்மோட்டை வரையான கடற்கரை பகுதிகளில் அத்துமீறிய சிங்கள கடல்தொழிலாளர்களின் நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. தமிழ்மக்கள் வாழ் இடங்களில் நிலஅபகரிப்பினை மேற்கொண்டு படையினரின் செறிவினை மேலும்அதிகரிக்கும் நோக்கில் சிங்கள படையினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளை கடற்தொழில் நடவடிக்கைக்காக பெருமளவான சிங்களவர்கள் வடக்கு கடற்கரைஓரங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். புல்மோட்டடை,கொக்குத்தொடுவாய்,கொக்கிளாய்,நாயாறுமற்…

  12. [size=3][/size] [size=3][size=4]வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த 7 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[/size][/size] [size=3][size=4]இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.[/size] [size=4]நீதிமன்ற உத்தரவுக்கமைய மேற்படி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.[/size] [size=4]இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதமே மோதலாக மாறியுள்ளது என்றும் இதனால் கைதிகளில் எழுவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற…

  13. ஒலிம்பிக் போட்டியில் இலங்கை தமிழச்சியின் இசையா? June 19, 20120 லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில் இலங்கை தமிழச்சியான மியா என்றழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் அவர்களின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரித்தானிய நாளிதழ்கள் தகவல்கள் தெரிவித்துள்ளது. 2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம் லண்டனில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் தெரிவுசெய்யப்பட்ட உலகப் பாடல்கள் அடங்கிய ஒரு நிகழ்ச்சியும் உண்டு. இந்நிகழ்ச்சியில் இடம் பெறும் 86 பாடல்களில் தமிழ்த் திரைப்படப் பாடலும் ஒன்று என்று பிரித்தானிய நாளிதழ்கள் சில தகவல்கள் வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் பிரிட்டிஷ் இச…

  14. இலங்கையில் பதிவாகும் பாலியல் வல்லுறவுகளில் நூற்றுக்கு 89 சதவீதமானவை 16 வயதுக்கும் குறைந்த சிறுமியர் மீது மேற்கொள்ளப்பட்டவை என சோசலிஷ மகளிர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சமன்மலி குணசிங்க தெரிவித்துள்ளார். பெலவத்தை ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.நாட்டில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களில் 48 சதவீதமானவை பாலியல் துஷ்பிரயோகங்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தலையீடுகள் மற்றும் பொலிஸார் சரியான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமை போன்றவற்றால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாரதூரமான குற்றச் செயல்களுக்கு ஆளாகி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். திறந்த பொருளாதார முறையின் கீழ் அனைத்தும் பணத்தி…

  15. [size=3] [/size] இந்திய அரசியல் தலைவர்களை இரகசியமாகச் சந்திக்கவுள்ள சம்பந்தன்? [size=4] டெல்லியில் இந்திய அரசியல் தலைவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ரகசிய ஆலோசனை நடத்த உள்ளாக கூறப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளார். அவர் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் அடைந்த பிறகு டெல்லியில் உள்ள இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரையை அடுத்து, அவரைக் கைது செய்யுமாறு சிங்களப் பேரினவாதக் கட்சிகள் குரல் எழுப்பி வந்தன. …

  16. [size=3][/size] [size=3][size=4]இலங்கையில் தங்கியுள்ள 243 அகதிகளை 14 நாட்களுக்குள் நாட்டிலிருந்து வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் கடிதம் மூலம் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]இவர்கள் 2005 ஆம் ஆண்டு வெளிநாட்டு அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகளின் சபையின் உயஸ்தானிகராலயத்தினால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக செயற்பட்டனர் என்பதே இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.[/size][/size] [size=3][size=4]இந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் இவர்கள், பல்வேறு தொழிகளில் ஈடுப்பட்டமை, பதிவு இடங்களை மாற்றியமை, மற்றும் வேறு பல சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டமை போ…

  17. [size=3] [size=4]14 வருடங்களாக அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கியூபாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த 5 பேர் அடங்கிய குழுவின் இரண்டு பேரின் தாய்மாரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.[/size] [size=4]இதன் போது கருத்து வெளியிட்ட கியூபா மக்கள் ஒத்துழைப்பு நிறுவனத்தின் உப தலைவர் எலியோ காடஸ், கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்கவும் 5 பேரை விடுதலை செய்வதற்கும், இலங்கை வழங்கிய உதவிகளை மதிப்பதாக தெரிவித்துள்ளார்.[/size] [size=4]கியூபாவிற்கு எதிராக அமெரிக்காவில் இருந்து செயற்படும் பயங்கரவாத குழு தொடர்பாக விசாரணை நடத்த சென்ற, கியூபா பயங்கரவாத தடுப்பு பிரிவின் 5 பேர் கடந்த 1998 ஆம் ஆண்டு அமெரிக்க காவற்துறையினரால் கைதுசெய்யப்பட…

  18. [size=4]சுற்றாடல் பாதிப்பிற்கு அபிவிருத்தி அடைந்தநாடுகளே காரணம் என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். பிரேஸிலில் நடைபெற்ற ரியோ20 மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]உலகம் வெப்பமயமாதல் தீவு நாடுகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளின்செயற்பாடுகளினால் சுற்றாடல் பாதிக்கப்படும் அதேவேளை, அதன் விளைவுகளை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அனுபவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]மூன்று தசாப்த கால பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு இலங்கை தற்போது பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய பணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தனதுரையில் தெரிவித்த…

  19. [size=3] [/size] தமிழக மீனவர்கள் 9 பேரும் விடுதலை [size=4] இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகபட்டினம் - அக்கரபேட்டை மீனவர்கள் 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர் கடந்த 16ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடல்சீற்றம் காரணமாக இலங்கை எல்லைக்குள் நுழைந்துள்ளனர். இதனையடுத்து, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் யாழ். மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் 9 பேரும் தற்போது காங்கேசன்துறை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களில் அவர்கள் தமிழ…

    • 0 replies
    • 393 views
  20. [size=3] Print this[/size][size=3] [/size][size=3] [size=3] [/size] இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 100 பேர் ஆஸி. கிறிஸ்மஸ் தீவில் தஞ்சம் [size=4] சுமார் 100 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகொன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (20) இரவு அவுஸ்திரேலிய கடற்படையினர் குறித்த படகை கைப்பற்றியுள்ளனர். ஒரு மாதத்தில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்றவர்களின் தொகை இரண்டாவது தடவையாக ஆயிரத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்னர் 2001ம் ஆண்டு டம்பா கலவரத்தில் ஒரு மாதத்தில் 1000 பேர் அகதி அந்தஸ்த்து கோரி அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்தனர். உள்ளூர் நேரப்படி நேற்று இரவு …

    • 0 replies
    • 498 views
  21. [size=4]156 அகதிகள் கொல்லம் கடற்கரையிலிருந்து புறப்பட்டனர். புறப்பட்ட சற்று நேரத்தில், கேரள அரசின் காவல்துறை அவர்களைக் கைது செய்தது.[/size] ஈழத்து அகதிகளுக்கு இந்தியாவில் வாழ்வுரிமை இல்லை. மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. திறந்தவெளிச் சிறைச்சாலை போன்ற முகாம்களுக்குள் 30 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறார்கள் அல்லது தடுப்பு முகாம்களுக்குள் கேட்பாரின்றி வாடுகிறார்கள். [size=5]ஏறத்தாழ 70 ஆயிரம் அகதிகள், 112 முகாம்கள், 200 சதுர அடி கூடுகளுக்குள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வாழ்க்கை. இவர்களைத் தவிர தடுப்பு முகாம்களில் தனிமையில் வாடுவோர் நூற்றுக் கணக்கான ஈழத்தமிழ் இளைஞர்கள். ஓராண்டு அன்று ஈராண்டுகள் அல்ல, பல ஆண்டுகள் வழக்கு எதுவும் இல்லாமல், உணவு, உறையுள் மட்டுமே கிடைக் க…

    • 0 replies
    • 873 views
  22. தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள, சிறிலங்கா இராணுவத்தினரின் நில அபகரிப்புக்கு எதிராக, யூன் 26ல் செவ்வாய்கிழமை, உலகத் தமிழர் தேசங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழர் தாயகத்தின் முறிகண்டி ஆலய முன்றலில், எதிர்வரும் 26ம் நாள் நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்திற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த அறைகூவல் வெளிவந்துள்ளது. நில அபகரிப்புக்கு எதிரான போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் மெதுமெதுவாக ஆங்காங்கே மேலெழுந்து வருகின்றன. தமிழர் தாயகத்தில் மேலெழும் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு வலுவூட்ட, அதற்கு சமாந்திரமாக உலகத் தம…

    • 4 replies
    • 617 views
  23. [size=3][/size] [size=3][size=4]எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் வட, கிழக்கு மாகாணசபை தேர்தல்களில் பிரசாரத்திற்கு அமைச்சர் பட்டாளங்களை அனுப்புவதை விட இனப்பிரச்சினைக்கான துரித தீர்வை அரசு மேற்கொண்டாலேயே தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு நிச்சயமாக வாக்களிப்பார்கள் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,[/size][/size] [size=3][size=4]கடந்த வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் நேரத்தில் தென்னிலங்கையிலுள்ள அமைச்சர்களும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசாரத்திற்கு சென்றிருந்தார்கள். நானும் அவர்களுடன் இணைந்து அரசாங்கத்திற்காக வா…

  24. '100 முள்ளிவாய்க்கால்கள்': இலங்கை அமைச்சரின் பேச்சுக்கு கருணாநிதி கண்டனம்-பிரதமருக்கு கடிதம் சென்னை: ஒரு முள்ளிவாய்க்கால் சம்பவமே போதும், நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பிறகு வட இலங்கையில் தமிழர் நிலங்கள் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தங்கள் பூர்வீக வீடுகள், நிலங்களை இழந்த தமிழ் மக்கள், இப்போது அறவழிப் போரில் மீண்டும் குதித்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கடந்த மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14வ…

  25. தமிழர்தாயகப்பரப்பில் பௌத்த விகாரைகள் அமைப்பதன் பின்னணியில் பாரிய சூழ்ச்சி காணப்படுவதாக தமிழ்தேசியகூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தமிழ்மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் படையினரை கொண்டு அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இதன்சூழ்சிதான் என்ன என்று சுரோஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் அதிகளவான பௌத்த விகாரைகளை அமைக்கும் நடவடிக்கையில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள். குறிப்பாக தமிழர்களின் வாழ்இடங்களில் முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்டிய பகுதிகளை அதியுயர்பாதுகாப்பு வலயமாக அறிவித்துள்ள படையினர் அங்கு பௌத்த விகாரைகளை அமைத்து சிங்களபொளத்த சின்னத்தினை நிறுவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். http://thaaitamil.com/%E0%AE%8…

    • 0 replies
    • 557 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.