Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காஞ்சி மக்கள் மன்றம் என்பது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட ,பின்தங்கிய வகுப்பு மக்களுக்கு பெண்களால் நடத்தப்படும் ஒரு சேவை அமைப்பாகும். இதன் தலைவி மகேஷ் அவர்கள் ஆவார். இவர்கள் பல சமுதாய விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாத்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களின் உயிர் காக்க தன் இன்னுயிரை ஈந்த செங்கொடி என்ற பெண் இந்த காஞ்சி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கொடி கிராமத்தில் அமைந்துள்ள காஞ்சி மக்கள் மன்றத்திற்கு 27-04-12 அன்று காலை 9.50 க்கு ஒரு நான்கு சக்கர வண்டி வந்தது (நீல நிற ஸ்கார்பியோ பதிவு எண் 6 CC…

  2. அந்தக் கால மே தினமும் இந்தக் கால மே தினமும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-01 09:34:16| யாழ்ப்பாணம்] இன்று தொழிலாளர் தினம். உழைக் கும் மக்களின் உரிமை வென்றெடுக்கப்பட்ட நாள். அந்த நாள் உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஒரு காலத் தில் முதலாளித்துவ ஆதிக்கத்தில் வதைபட்ட தொழிலாளர்களின் உரிமை விடயங்கள், வேலை நேரங்கள், வேதன நிர்ணயங்கள் என்ற பல்வேறு அடிப்படை உரிமைகள் தொடர்பில் உலகம் சிந்திக்கத் தலைப்பட்டது. அதன் விளைவாக வேலைநேரம் மற் றும் ஓய்வு என்பன வரையறுக்கப்பட்டன என்ற வரலாற்றின் அடிப்படை யில் மே தினம் அனுஷ்டிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. எனினும் அன்றைய காலத்தில் தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தால் நசுக்கப்பட்டதன் காரண மாக தொழிலாளர…

    • 0 replies
    • 725 views
  3. இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது என்று பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளதற்கு இலங்கை அரசு தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. போரின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீரல் தொடர்பான விஷயங்கள் குறித்து, அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவதற்கு பிரிட்டிஷ் அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்று இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார். பிரிட்டனின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அமைப்புகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன என்றும், அவ்வமைப்புகள் போதிய அளவில் தங்களது செயல்பாடுகளை முன்னெ…

  4. தொப்புள்க்கொடி உறவென்று உறவுகொண்டாடும் தமிழகத்துக்கும் தமிழீழத்துக்கும் பிரிவினைவாதத்தை தூண்டி ஈழத்தமிழனையும் தமிழகத்தையும் பிரித்துவிடவேண்டு என்ற சிங்களதேசத்தின் நீண்டநாள் ஆவலுக்கு ஒரு பிரச்சனையாக இன்று வடக்குமீனவர்கள் தமிழக மீனவருக்கு எதிராக தூண்டிவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த ஈனவேலையை வெற்றிகரமாகச் செய்வதற்கு சிங்கள அடிவருடிகள் சிலரையும் அதற்கு பொறுப்பாக (ஈ பி டி பி) ஒட்டுக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் சிங்களம் களமிறக்கியுள்ளது தமிழர் தாயகமெங்கும் திட்டமிட்டு சிங்கள மயமாக்கப்படுவதும் தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலகளுக்கும் அதை அண்மித்த பகுதிகளிலும் புதிது புதிதாகவும் அவரச அவசரமாகவும் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுக்கொண்டிருப்பதையும் தமிழர்களத…

    • 0 replies
    • 628 views
  5. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மேதினக் கூட்டம் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7.00 மணிவரை கரவெட்டி சாமியன் அரசடி ஞானவைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. சாமியன் அரசடி சந்தியில் கூடிய மக்கள் அங்கிருந்து ஞானவைரவர் ஆலயத்திற்கு ஊர்வலமாகச் ஞானவைரவர் ஆலய முன்றலில் சென்றடைந்தது. அங்கு ஓய்வுபெற்ற காணிப்பதிவாளர் செல்வரட்ணம் தலைமையில் மேதினக்கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். அங்கு நெல்லியடி விவசாய அமைப்புக்களின் தலைவர் தம்பையா கனகரஜயா இளம் சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளார் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவார்…

    • 0 replies
    • 607 views
  6. தமிழ் ஈழ முகமூடியை மறுபடியும் தாங்கி வலம் வரத் தொடங்கி விட்டார் கருணாநிதி. நேரத்துக்கும் ஆளுக்கும் தகுந்த மாதிரி வேடம் தாங்குவது அவருக்கு வழக்கமானதுதான். ஆனால், அதற்குத் தமிழ் இனத்தையும் தமிழ் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட உடல்களையும் பணயம் வைக்க அவர் முடிவு எடுத்திருப்பதுதான் வேதனையானது. இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு ஈவு இரக்கம் இன்றி, தமிழ் இனப்படுகொலையை நடத்தியதற்கும், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளைப் போர்க்களத்தில் முறியடிப்பதற்கும், இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ராடார்களும், ஆயுதங்களும் தந்ததுதான் அடிப்படைக் காரணம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாயும் வழங்கி, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் அவ்வப்போது அனுப்பிவைத்து, சிங்களவன் நடத்திய இனக்கொலை யுத்த…

  7. இன்று பிரித்தானியாவின் மத்திய லண்டன் பகுதியில் நடைபெறும் மேதின நிகழ்வுகளில் இலங்கையில் நடைபெற்ற தமிழினப்படுகொலையை வெளிக்காட்டும் பரப்புரை பதாகைகள் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. இலங்கைத் தீவில் 60 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் தமிழினப் படுகொலையின் உச்சமாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் அவலங்களை சர்வதேசத்திற்கு வெளிக்காட்டும் நோக்கத்தோடு இப் பரப்புரை பதாகைகள் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. குறிப்பாக சனல் 4 தொலைக்காட்சியினால் சர்வதேசத்திற்கு ஆதாரங்களோடு அம்பலப்படுத்தப்பட்ட "Sri Lanka's Killing Fields" எனும் காணொளியை மீண்டும் மீண்டும் சர்வதேசத்தின் கண்களின் முன் கொண்டுவந்து இலங்கைத் தீவில் நடைபெற…

  8. பிரித்தானிய அரசாங்கத்தின் மனித உரிமைகள் அறிக்கையில் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான கரிசனைக்குரிய நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கப்பட்டதை இலங்கை அரசாங்கம் விமர்சித்துள்ளது. யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் மாத்திரமே கடந்துள்ள நிலையில் பொறுப்புடைமை விவகாரத்தில் இலங்கை போதுமானளவு செயற்படவில்லை என இலங்கை மீது குற்றம் சுமத்துவதற்கு பிரிட்டனுக்கு உரிமையில்லை என வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமால் பெரேரா கூறினார். "நாம் போதுமானளவு செய்யவில்லை என அவர்கள் எப்படி கூறமுடியும்? எந்த அடிப்படையில் அவர்கள் அப்படி கூறுகிறார்கள்? கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த வருடம் டிசெம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. எனவே அந்த அறிக்கையி…

    • 1 reply
    • 673 views
  9. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொள்ளப்பட்ட இராஜதந்திர நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறுவதால், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும், துறைசார்ந்த அமைச்சர்களும் பாரிய நெருக்கடிகளைச் சந்திப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறிலங்காவுக்குப் இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணத்தின் போது இராஜதந்திர நெறிமுறைகள் மீறப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழு இரண்டாம் நிலைக் குழுவே என்றும், ஆனால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ள…

  10. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவினை அரசு பெற்றிருந்தால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மாறியிருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். எமது மக்களுக்கு எங்களை தெரியும். எங்களுக்கு எமது மக்களை தெரியும். அத்துடன் எமது மக்கள் பெறும் துன்ப, துயரங்கள் மற்றும் கஷ்டங்களும் எங்களுக்கு தெரியும். இதனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு கண்டிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் தேசிய மே தின கூட்டம் யாழ். குருநகர் சென்றோக்ஸ் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அ…

  11. இலங்கையில் நீதித்துறை நன்கு விருத்தியடைந்ததாக காணப்படினும் வினைத்திறன் மிக்க குற்றவியல் நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றுக்கு கணிசமான தடைகள் காணப்படுவதாக ஐக்கிய இராச்சியத்தின் 2011ஆம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வழக்குப்பற்றி கருத்துரைத்துள்ளது. சரத் பொன்சேகா குற்றவாளியாக காணப்பட்டு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வெள்ளைக்கொடி வழக்கு, அரசியல் நோக்கம் கொண்டிருந்தது என சிவில் சமூகக் குழுக்கள் கவலை தெரிவித்திருந்தன. சகல வழக்குகளிலும் சட்டம் சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் பிரயோகிக்கப்பட வேண்டும் என ஐக்கிய இராச்சியம் இலங்கையிடம் வலியுறுத்த…

  12. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தும்,' டெசோ' கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக, தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் தி.மு.க.தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்,நேற்று கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன்,சுப்புலட்சுமி ஜெகதீசன்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான 'டெசோ'அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டது.'ட…

  13. 2006 தொடக்கம் 2011 வரையான காலப்பகுதியில், அதாவது புலிகளுக்கு ஆதரவான கட்சிகள் சிறிலங்காத் தமிழர்கள் நிலைப்பாட்டில் இந்தியா தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த போது அந்தக் காலப்பகுதியில் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழ்ப் புலிகளை அழிப்பதில் சிறிலங்காவுக்கு ஆதரவாக இருந்த இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளை தட்டிக் கேட்காது அமைதி காத்திருந்தார். இவ்வாறு இந்தியாவின் கல்கத்தாவை தளமாகக்கொண்ட The Telegraph ஆங்கில ஊடகத்தில் அதன் சிறப்பு செய்தியாளர் G.C. SHEKHAR எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி, சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஈழத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்…

  14. வவுனியாவில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் சிங்களவர் ஒருவரின் சடலம் அனுமதி ஏதும் இன்றித் திடீரெனத் தகனம் செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வவுனியா தச்சன்குளம் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த இடத்துக்கு அருகிலேயே விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாகவே வவுனியா நகரசபையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற நகரசபைத் தலைவர் ஐ.கனகையா தலைமையிலான குழுவினர் இது தொடர்பாக ஆராய்ந்துள்ளனர். தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இந்தப் பகுதியில் இத்தகைய சம்பவம் இடம்பெற்றமை கண்டிக்கத்தக்கது என்றும் இது தொடர்பாகப் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதாகவும் நகரசபைத் தலைவர் தெரிவித்தார். கடந்த 25 ஆம் திக…

    • 0 replies
    • 320 views
  15. சிறிலங்காவில் முன்னர் பணியாற்றிய இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஒருவர் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களமான பென்ரகனின் உயர்நிலைப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இனத்துவக் கற்கைகளுக்கான அனைத்துலக நிலையத்தின், தெற்காசிய சிறுபான்மையினர் உரிமைகள் என்ற திட்டத்தின் பணிப்பாளராகவும், பின்னர் வொய்ஸ் ஒவ் அமெரிக்காவின் கொழும்பு செய்தியாளராகவும் பணியாற்றிய விக்ரம் சிங் என்பவரே பென்ரகனில் உயர் பதவியைப் பெற்றுள்ளார். பென்ரகனில் தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவுக்கான பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். தெற்கு மற்றும் தென்கிழக்காசியா தொடர்பான கொள்கைகளின் அபிவிருத்தி தொடர்பாக மேற்பார்வை செய்வதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம…

  16. இலங்கையில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையருக்கு 15 வருட சிறைத் தண்டனை விதிக்க வேண்டுமென அமெரிக்க நீதி திணைக்களம் கோரியுள்ளது. விடுதலைப் புலிகளுக்காக பொருட்களை வாங்க முயன்றமையால் ரமணன் மயில்வாகனம் என்ற சந்தேக நபர் பாரிய குற்றத்தினை மேற்கொண்டுள்ளார் என அமெரிக்க வழக்குரைஞர் ஒருவரால் நியூயோர்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணிசமான, நீண்ட சிறைத் தண்டனை விதிக்கப்படாவிடின் சட்டத்துக்கான மதிப்பை கெடுப்பதாகிவிடும். எனவே ஒருவர் பயங்கரவாத இயக்கத்துக்கு பொருள் ரீதியான உதவி வழங்கினாலும் கடும் தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளலாமெனத்…

  17. யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற பொது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு தொடர்பிலான பத்திரிகையாளர் சந்திப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தினால் ஆத்திரமடைந்த ரணில் தானும் பத்திரிகையாளர் சந்திப்பிற்குச் செல்லாமல் ஒதுங்கிக் கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.யாழ்ப்பாணத்தின் பிரபல விடுதி ஒன்றில் இன்று நண்பகல் பொது எதிர்க்கட்சிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதாக ஏற்பாடாகியிருந்தது. இச் சந்திப்பில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கு கொள்வதாக முடிவாகியிருந்தது. இறுதிவரையில் வருகின்றோம் வருகின்றோம் என்று தெரிவித்துவந்த கூட்டமைப்பின் …

    • 5 replies
    • 1.4k views
  18. இன்னும் உயிருடன் இருக்கின்றன மருதாணி மரங்கள் மற்றும் சில பூவரச மரங்கள் பாதி நிழலை வைத்திருக்கிறது மருத மரம் சாம்பல் சுவடுகளின் மேலாய் புதிய கூடாரம் நாட்டப்பட்டிருக்கிறது வானத்தின் காயம் ஆறிவிடும் என்று அம்மா நம்புவதைப்போல மீண்டும் வீடு வளரும் என்று தங்கை நம்புகிறாள் காணி நிலத்தில் மீண்டும் பாடல்கள் முளைக்கின்றன -தீபச்செல்வன் கவிஞர். தீபச்செல்வன் ( 1983 ) ஈழத்தின் வன்னிப் பிரதேசத்தில் பிறந்தவர். போரின் பூமிக்குள்ளேயே வளர்ந்து வாழ்ந்து வருபவர். 2005ஆம் ஆண்டில் முதல் கவிதை பிரசுரமானது. கண்முன்னால் நடந்த கொடூரங்களை எல்லாம் இந்த உலகிற்கு சாட்சியமாகச் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பில் , இவரது எழுத்துக்கள் மிகக்…

    • 1 reply
    • 556 views
  19. யாழ். சுதுமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை 9.30 மணியளவில் வீதியால் சென்றுகொண்டிருந்த போது இனந்தெரியாத நபர்களால் ஓட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு நெருப்பில் காய்ச்சப்பட்ட கம்பி யினால் சுடப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இவர் தற்போது சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த புதன் கிழமை இரவு வேலைக்குச் சென்று விட்டுச் சுதுமலையில் தனது வீடு நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் நடுவீதியில் ஆட்டோ ஒன்றில் வந்த மூவர் அடங்கிய கும்பலால் கடத்தப்பட்டுப் பிறிதோர் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு நெருப்புக் கம்பியால் சுடப்பட்டு யாழ்.போதனா வைத்தியசா…

    • 0 replies
    • 624 views
  20. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவிடம் கையளிப்பதற்கான செயல்திட்டம் ஒன்றை சிறிலங்கா தயாரிக்கின்ற நிலையில், அதை வொசிங்டனிடம் கையளிப்பதற்கு முன்பாக, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தமக்குள்ளது என்பதை சிறிலங்காவை வெளிப்படுத்த வைக்கும் நகர்வுகளில் ஒபாமா நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடுத்தமாதம் வொசிடங்னுக்குப் பயணமாவதற்கு ஒரு வாரம் முன்னதாக, அந்த செயல் திட்டத்தை கொழும்பில் வெளியிடுமாறு அமெரிக்கா கூறியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சிறிலங்கா அரசின் செயல்திட்ட அறிக்கை, நாமல் ராஜபக்ச மற்றும் சஜின் வாஸ் கு…

    • 6 replies
    • 834 views
  21. அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ பகிரங்கமாக ஆதரவு வெளியிட்டுள்ளமை பாதுகாப்புச் செயலாளர் கேர்ணல் கோதாபய ராஜபக்‌ஷவை ஆத்திரமடையச் செய்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். போதைப் பொருள் வர்த்தகம், கப்பம் பெறுதல் ஆகியவற்றை மேற்கொண்டுவந்த அமைச்சர் மேர்வின் சில்வாவின் சகாக்கள் பலர், பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் வெள்ளைவேனில் கடத்தப்பட்டிருந்த போதிலும், அவர்கள் ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்து விடுவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன், அமைச்சர் மேர்வின் சில்வை சிக்க வைப்பதற்காக களனி பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மேர்வின் சில்வாவிற்கெதிராக செயற்படுமாறு கேர்ணல் கோதாபய…

  22. சிறிலங்காவில் இறுதிப் போரின் போது கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான ஆதாரத்தை முதல்முறையாக கண்டுபிடித்துள்ளதாக ஐ.நா நிபுணர் வெளியிட்ட தகவலை அம்பலப்படுத்திய ஏபி செய்தியாளர், முன்னர் சிறிலங்காவில் இருந்து வெளியேற்றப்பட்டவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் தெற்காசியப் பிரிவின் பணிப்பாளராக உள்ள ரவி நெஸ்மன் என்ற இந்திய ஊடகவியலாளரே, சிறிலங்காவில் இறுதிப்போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் ஐ.நாவிடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியிட்டிருந்தார். சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான தொழில்நுட்ப ஆலோசகரான அலன் போஸ்டன், ஐ.நா தலைமையகத்துக்கு அனுப்பிய மின்னஞ்சல் அறிக்கையை அடிப்ப…

    • 0 replies
    • 692 views
  23. மகிந்த ராஜபக்‌ஷவிற்கு தத்தமது ஆளுமையை வெளிப்படுத்துவதற்காக பல அமைச்சர்கள் இம்முறை மே தினத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் ஜனாதிபதியினால் புறந்தள்ளப்பட்ட கட்சியின் அமைச்சர்களே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைய தமக்கான அரசியல் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் அவர்களது ஆதரவாளர்களுடன் குறித்த அமைச்சர்கள் களமிறங்கத் திட்டமிட்டுள்ளனர். அத்துடன், தமது பலத்தைக் காண்பிக்க பெருமளவிலான கூட்டத்தை ஒன்றுதிரட்டவும் இவர்கள் முயற்சித்து வருகின்றனர். ஜனாதிபதி மீது அதிருப்தி கொண்டுள்ள அமைச்சர்கள் இவ்வாறு செயற்படும் நிலையில், மக்கள் தற்போது சந்தித்துள்ள பார…

    • 0 replies
    • 474 views
  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தை இழப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. ஏற்கனவே ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டுக்கு செல்லாமையால் தமிழ் மக்களின் அதிருப்திக்குள்ளாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேதினத்தை நடத்துவதற்கான முனைப்புகளில் ஈடுபட்டுள்ளமை தமிழ் மக்களை மீண்டும் கவலையடையச் செய்துள்ளது. சர்வதேச தொழிலாளர் தினமாகிய மே தினத்தை இதுவரை காலமும் தென்னிலங்கையில் நடத்திய ஐக்கிய தேசியக்கட்சி இவ்வருடம் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தலைமையிலான புதிய இடதுசாரி முன்னணி மற்றும சிறிதுங்க ஜயசூரியவின் ஐக்கிய சோசலிசக்கட்சி ஆகிய அரச…

  25. சிறீலங்காவிற்கான நெதர்லாந்து தூதுவர் லூயிஸ் டபிள்யூ. எம். பியெட் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வட பகுதிக்கான இந்த பயணத்தின் போது வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை பார்வையிடுவதுடன் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறியை இன்று காலை சந்திக்கவுள்ள சிறீலங்காவிற்கான நெதர்லாந்து தூதுவர் வடக்கின் தற்போதைய நிலைமை தொடர்பாக கலந்தாலோசிக்கவுள்ளார். இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநர் பணிமனையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சந்திர சிறியின் கட்டளையின் கீழ் வடக்கிற்கு செல்லும் எந்த அதிகாரிகளும் அ…

    • 0 replies
    • 378 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.