ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143377 topics in this forum
-
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்புக்கு 1992-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க கோரி 2010-ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மத்திய தீர்ப்பாணையத்தின்படி வைகோவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் தர்மாராஜ், வேணுகோபால் முன்னிலையில் இன்று (09) நடைபெற்றது. விவாதத்தின் போது வைகோ, இலங்கையில் நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடை விதிப்பது சரியல்ல. 2010-க்குபின் விடுதலைப் புலிகளால் இந்தியாவில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என …
-
- 1 reply
- 565 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர விரிசலை சீர்செய்ய இலங்கை அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்தியாவிடம் இருந்து சாதகமான சமிக்ஞைகள் வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது. விரிசலைச் சீர் செய்யும் நோக்கில் அமைச்சரும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்றை இந்தியாவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு புதுடில்லியிடம் இருந்து இதுவரை சாதகமான பதில் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண காத்திரமான நகர்வு ஒன்றை இலங்கை அரசு மேற்கொள்ளும் வரை இலங்கையின் எந்த இராஜதந்திர முயற…
-
- 0 replies
- 609 views
-
-
சிறுபான்மையினரை அரசு நடத்துகின்ற முறை சரியா?; ஹக்கீமிடம் கேட்கிறார் சுரேஷ் வடக்கு, கிழக்கில் வாழும் சிறுபான்மையின மக்கள் இலங்கை அரசால் நீதியாகவும், நேர்மை யாகவும் நடத்தப்படுகின்றனரா என்ற கேள்விக்கு சிறுபான்மையின மக்களின் தலைவர்களுள் முக்கியமான ஒருவர் என்ற அடிப்படையில் நண்பர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிலளிக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். கம்பன் விழாவுக்கு முக்கிய அதிதியாக அழைப்புவிடுக்கும் அளவுக்கு தமிழில் பாண்டித்தியம் பெற்ற தமிழ்மகன் நண்பர் ஹக்கீம், தமிழ் பேசும் மக்கள் தொடர்பிலான இலங்கை அரசின் செயற்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளாரா என்றும் அவர் கேள்வி எழுப…
-
- 1 reply
- 546 views
-
-
மலேசியா நோக்கிப் பயணித்த மிஹின் லங்கா நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தின் பொருட்கள் எடுத்துச் செல்லும் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://www.saritham.com/?p=56608
-
- 2 replies
- 574 views
-
-
இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஒன்றை ஏற்படுத்த மிகச் சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளாக இடம்பெற்ற வன்முறைகள் ஓய்ந்துள்ள நிலையில், இன சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றவும் சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், தற்போதைய ஆளும் கட்சி இந்த சந்தர்ப்பத்தை சரயிhன முறையில் பயன்படுத்திக் கொள்ள தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்கள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும், இவ்வாறான சந்தர்ப்பங்கள் அடிக்கடி கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சந்திரிக்கா பண்டாரநயாக்கவினால் நிறுவப்பட்ட த…
-
- 1 reply
- 449 views
-
-
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நா அமைப்பின் பங்கு பணிகள் குறித்து மீளாய்வு செய்யும் பணி ஆரம்பமாகியுள்ளதாக, ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதி தாமரா குணநாயகம் தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் தொலைபேசி வழியாக அளித்துள்ள செவ்வி ஒன்றில், நம்பகமான வட்டாரங்கள் மூலம் தமக்கு இந்தத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார். ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையின் பரிந்துரைக்கு அமையவே, இந்த மீளாய்வை ஐ.நா மேற்கொள்கிறது. இந்த மீளாய்வை மேற்கொள்வதற்காக தொராயா ஒபெய்ட் என்ற ஐ.நாவின் மூத்த அதிகாரி ஒருவரை ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் ஏற்கனவே நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, எதிர்…
-
- 0 replies
- 418 views
-
-
நாட்டின் பல இடங்களில் மீண்டும் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலையில் நேற்றுமுன்தினம் இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்த இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். திருகோணமலை அன்புவெளிபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் ரகுமாறன் (வயது 27) என்ற இளைஞனே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். தனியார் வைத்திய சாலை ஒன்றுக்கு மருந்து எடுப்பதற்காகச் சென்ற போதே இவர் கடத்தப்பட்டுள்ளதாக இளைஞனின் தயார் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இளைஞன் கடத்தப்பட்டுள்ளதை திருகோணமலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார். இளைஞனின் கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை பொல…
-
- 3 replies
- 576 views
-
-
இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது சரிதான்: சிதம்பரம் இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தது சரியான முடிவுதான் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது அதனை 15 நாடுகள் எதிர்த்திருந்தன என்றாலும், இந்தியாவின் ராஜீய முயறிகள் மூலம் சவுதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தமது நிலைபாட்டை எதிர்காலத்தில் மாற்றிக்கொள்ள வைப்பதென்பதும் சாத்தியமே என சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படவிருப்பதைப் பாராட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் அமைச்சர் சிதம்பர…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கை யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் தான் வகித்த பாத்திரம் குறித்து ஐ.நா. மீளாய்வு செய்ய ஆரம்பித்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் தருஸ்மன் அறிக்கை என அழைக்கப்படும், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் சிபாரிசுக்கிணங்க இம்மீளாய்வு இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நம்பகமான வட்டாரங்கள் மூலம் தனக்கு இத்தகவல் தெரியவந்ததாக ஜெனீவாவிலுள்ள, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம், தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்திற்கிணங்க, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 22ஆவது கூட்டத்தொடரின்போது, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானி…
-
- 0 replies
- 578 views
-
-
இந்தியாவின் கிழக்குக் கரையோரத்தில் அந் நாட்டின் முதலாவது ஆளில்லா உளவு விமானம் காண்காணிப்பில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மற்றும் இந்தியாவுக்குமிடையிலான பாக்கு நீரிணையின் கடற் பிராந்திய நடவடிக்கைகளைக் காண்காணிக்கும் நோக்கிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் தமிழ் நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கு அப்பால் உள்ள பாக்கு நீரிணை, மன்னார் குடா மற்றும் பாக்கு நீரிணை குடா என்பனவற்றை துல்லியமாக கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இராமேஸ்வரத்தில் ஆளில்லா உளவு விமான கூடம் ஒன்றை ஸ்தாபிப்பதன் மூலம் சிறந்த முறையில் இந்தியாவின் கடலோர பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. http://www.eeladhesa...lle-nachric…
-
- 5 replies
- 929 views
-
-
கோட்சே கொன்றது காந்தியை இலங்கை கொன்றது அகிம்சையை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-08 11:28:06| யாழ்ப்பாணம்] அகிம்சா மூர்த்தி என்று உலகப் புகழ்பெற்ற அண்ணல் மகாத்மா காந்தி இந்த வையகத்திற்கு அகிம்சையின் பெருமை யை புகட்டிய உத்தமர். அவரின் அகிம்சைப் போராட்டம் இந்திய தேசத்திற்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது என் பதற்கு அப்பால், விடுதலைப் போராட்டத்திற்குப் பின் அரசியலில் பிரவேசித்து ஆட்சிப் பதவியை பெற்றுக் கொள்ளா மல், ஓர் அகிம்சைவாதி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை தன் வாழ்க்கையில் காட்டிநின்றதனாலேயே காந்தி, மகாத் மாவாகப் போற்றப்பட்டார். அத்தகைய உயர்வுமிக்க காந்தியை கோட்சே என்ற கொடியவன் சுட்டுக் கொன்றான். பாரத தேசத்திலிருந்து பாகிஸ் தான் பிரிபடுவதை ஏ…
-
- 6 replies
- 769 views
-
-
மன்னார், திருக் கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக் கரைக்குச் சமீபமாக தனியார் காணி ஒன்றில் போயா தினமான கடந்த வெள்ளிக்கிழமை வெண்கலத்திலான புத்தர் சிலை திடீரென கொண்டு வரப்பட்டு "பிரித்" ஓதி வழி பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் தனியார் காணியில் சிறிய புத்தர் சிலை ஒன்றை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.ஆனால் தற்போது திடீரென மேற்படி வெண்கலத்திலான சிலை கொண்டுவரப்பட்டு அங்கு வழிபாட்டுத் தலமும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. சுமார் ஆயிரத்து 500 கிலோ கொண்ட இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டமை மன்னார் மாவட்ட இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கேதீஸ்வரத்தின் தீர்த்தக் கரையான பாலாவிக்குச் சமீபமாக, இந்…
-
- 4 replies
- 818 views
-
-
ஆசிரியை மீது அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் ஏழு மாணவர்களை இடைநிறுத்தியது பாடசாலை நிர்வாகம் ஆசிரியை ஒருவரைப் பற்றி அவதூறு பரப்பும் செயற்பாட்டை முன்னெடுத்த குற்றச்சாட்டில் யாழ். கொக்குவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழுவின் பணிப்புரைக்கு அமைவாக கல்லூரியின் அதிபரினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது கொக்குவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை தனது கற்றல் செயற்பாட்டைக் கடந்து மனம் புண்படும் வகையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி மாணவர்களை இழிவுபடுத்துவதாகவும் அவரை உடனடியாக வெளியேற்றுமாறும்…
-
- 0 replies
- 652 views
-
-
இலங்கை யுத்தத்தின் போதான தனது பாத்திரத்தை மீளாய்வு செய்ய ஆரம்பித்தது ஐ.நா. இலங்கை யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் தான் வகித்த பாத்திரம் குறித்து ஐ.நா. மீளாய்வு செய்ய ஆரம்பித்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் தருஸ்மன் அறிக்கை என அழைக்கப்படும், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் சிபாரிசுக்கிணங்க இம்மீளாய்வு இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நம்பகமான வட்டாரங்கள் மூலம் தனக்கு இத்தகவல் தெரியவந்ததாக ஜெனீவாவிலுள்ள, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம், தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைறேறப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்திற்கிணங்க, அடுத்த வருடம…
-
- 6 replies
- 1.4k views
-
-
ஐக்கியதேசியக் கட்சி வருகின்ற மேதினத்தை கூட்டமைப்பின் உதவியோடு யாழ்ப்பாணத்தில் நடாத்தமுடிவு செய்துள்ளது. இது தமிழ்த் தேசிய அரசியலை பௌத்த சிங்கள பேரினவாதத்தினுள் கரைக்கும் ஒரு சதி முயற்சி. இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இன்று இலங்கைத் தேசியம் என எதுவுமில்லை. அதற்கான பன்மைத்துவ கட்டமைப்புக்கு சிங்கள தேசம் தயராக இல்லை. தென்னிலங்கையில் இரு பிரதான கட்சிகளிடமும் இருப்பது சிங்களத் தேசியம் தான். இது விடயத்தில் இரு பிரதான கட்சிகளிடத்தேயும் பெரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது. சிங்களத் தேசியம் சிங்கள பௌத்த பேரினவாதமாக எழுச்சியடைந்து பல்வேறு ஆக்கிரமிப்புகளின் மூலம் தமிழ் மக்களின் இருப்பைச் சிதைத்த போது தான் ஒரு தற்காப்பு முயற…
-
- 2 replies
- 853 views
-
-
இலங்கை நிலைமை தொடர்பில் சுவீடன் அரசாங்கம் அக்கறை! இலங்கை நிலைமைகள் தொடர்பில் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் இலங்கைத் தூதரிடம் கேட்டறிந்து கொண்டார். சுவீடனுக்கான இலங்கைத் தூதுவர் அழகப்பெருமவை ஸ்ரோக்ஹோம்மில் நேற்று சந்தித்துக் கலந்துரை யாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பீல்ட் மிகுந்த கரிசனை செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்குக் கிழக்கு பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் தற் போதைய நிலைமைகள் குறித் தும் அவர் ஆவலுடன் கேட்டறிந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது. அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற…
-
- 0 replies
- 696 views
-
-
ஜெனிவா பிரேரணை; முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க ஹிஸ்புல்லா சவூதி செல்கிறார் ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனதி உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க, சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நாளை திங்கட்கிழமை சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரிலேயே, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக குறித்த நாடுகளுக்க விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். இ…
-
- 5 replies
- 593 views
-
-
இலங்கையில் சனிக்கிழமை அதிகாலை காணாமல்போன மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் பிரேம்குமார் குணரட்ணத்தை கண்டுபிடித்துத் தருமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் தற்போது வசிக்கும் அவரது மனைவி டாக்டர் சம்பா சோமாரட்ண, ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற தனது கணவரை கண்டுபிடித்துதருமாறு ஐநாவிடமும் ஆஸ்திரேலிய அரசிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பரில், ஜேவிபியிலிருந்து பிரிந்து உருவான மக்கள் போராட்ட இயக்கத்தினர் பல்வேறு மனித உரிமை செயற்பாட்டு போராட்டங்களை முன்னெடுத்துவந்தனர். இந்த அமைப்பினர் அண்மையில் உருவாக்கிய ‘முன்னிலை சோசலிஸக் கட்சியினர்’ ஏப்ரல் 9ம் திகதி (திங்கட்கிழமை) கட்சியின் முதலாவது மாநாட்டை நடத்த ஒழுங்கு செய்திருந்த …
-
- 3 replies
- 882 views
-
-
இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்கக்கூடிய சாத்தியம் இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடையை விதிக்க கூடிய சாத்தியம் அதிகரித்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறிய நாடு ஒன்று ஐ.நா. தீர்மானத்தை கொச்சைப் படுத்தும் வகையில் செயற்படுவது அவ்வளவு நல்லதல்ல என்ற அடிப்படையிலும், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித் தமைக்காக, இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் நெருங்கிய தொடர்பை வலுப்படுத்த இலங்கை அரசு முயற்சிப்பதையும் அடுத்து, இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெ…
-
- 7 replies
- 1.3k views
-
-
"புலிகளுடைய போராட்டம் முடிந்து விட்டது. அந்த இயக்கம் அழிந்து விட்டது என நாம் பேசிக் கொண்டிருந்தாலும் அந்த இயக்கம் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதை ஜெனீவா சென்ற போது அறிய முடிந்தது" என கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் றிசாட் பதுயுதீன் தெரிவ்த்தார். கிண்ணியா பிரதேச முஸ்லிம்களின் எதிர்நோக்கியுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எம்.எம். ஹில்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் சகோதரர்கள் வந்து அவர்…
-
- 4 replies
- 892 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 06 ஏப்ரல் 2012, 08:52 GMT ] [ தா.அருணாசலம் ] திருகோணமலையில் அமெரிக்கா தளம் ஒன்றை அமைப்பதற்காக சிறிலங்காவில் போரை நீடிக்கவும், அதைத் தீவிரப்படுத்தவும் அமெரிக்கா முயற்சிக்கும் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பல ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்திருந்ததாகவும், அமெரிக்காவின் தந்திரத்தை அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார் என்றும் சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பிலியந்தலவில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், கொச்சினைத் தளமாகக் கொண்டு வெளிவந்த ‘த வீக்‘ ஆங்கில வாரஇதழில், 1986ம் ஆண்டு மார்ச் 23ம் நாள் வெளியான செவ்வி ஒன்றில் வே.பிரபாகரன் விரிவாக விளக்கியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்தச்…
-
- 2 replies
- 949 views
-
-
ஜெனீவாத் தீர்மானம் தமிழர்களின் உரிமைப் போராட்டப் பாதையை சர்வதேச அந்தஸ்த்துக்கு உயர்த்தியுள்ளது என ஒருசாரரும், அதில் எதுவுமே இல்லை மேற்குலக சதிக்குள் வீழ்ந்துவிடக் கூடாது என இன்னொருசாராரும் எதிரும்புதிருமான கருத்துகள் கடந்த சில நாட்களாக செய்திகளில் முக்கியத்துவம் பெறுகின்றன. சிறிலங்கா அரசால் முன்வைக்கப்பட்ட LLRC எனப்படும் நல்லிணக்க ஆணைக்குழு முன் வைத்த பரிந்துரைகளையும் அது கையாளத் தவறிய பொறுப்புக் கூறல் விடயங்களையும் அமுல்படுத்த சிறீலங்காவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நடை பெற உள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இந்த அமுலாக்கல் எவ்வளவு தூரம் நடைபெற்றுள்ளது என்பது தொடர்பான மீளாய்வு நடைபெற உள்ளது . இந்த சந்திப்புப் புள்ளி நோக்க…
-
- 3 replies
- 946 views
-
-
April 8th, 2012 அன்று வெளியிடப்பட்டது - கருத்துக்களேதுமில்லை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்தொன்றைக் கூறியிருந்தார். விடுதலைப் புலிகளின் கருத்தொருமைமிக்கவர்களாகவும் கனவில் சஞ்சரித்துக் கொண்டு தனி நாட்டை அமைக்கும் நோக்கில் செயற்படுகின்ற இனவாத சக்திகள், இன்னும் இருந்து கொண்டுதானிருக்கின்றன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் இனவாதம் களையப்பட வேண்டுமென தெரிவித்திருந்தார். இனக்குரோதங்களும், சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறைகளும், யாரால் கட்டவிழ்த்து விடப்படுகின்றன எனும் உண்மை, தமிழ் இலக்கியத்தின் மீது பற்றுகொண்ட ஹக்கீமிற்கு புரியவில்லை என்பது கவலைக்குரியது. ம…
-
- 0 replies
- 629 views
-
-
இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்த பிரச்னையில் இந்தியா இராஜதந்திர நடவடிக்கையைக் கையாண்டு வருகிறது என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கின்றார். கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பு, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம், திருச்சியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அதில் பங்குகொண்டு நிகழ்த்திய உரையின்போதே சிதம்பரம் இதனைத் தெரிவித்தார். கூட்டத்தில் ப. சிதம்பரம் மேலும் பேசியது: "இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்க…
-
- 3 replies
- 608 views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பு குறித்து கருத்து வெளியிடும் உரிமை எமக்கும் உள்ளது என அந்த அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு என்பது அந்நிய அமைப்பு அல்ல. சிலர் அதனை அந்நியமாக்க முயற்சிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் அமைப்பில் நாமும் உறுப்புரிமை வகிக்கின்றோம். எமது பக்க நிலைப்பாடுகளை வெளியிடக் கூடிய உரிமை உள்ளது என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினர் பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகின் ஏனைய அமைதி காக்கும் படையினரை விடவும் இலங்கைப் படையினர் சிறந்த முறையில் கடமையாற்றி வருகின்றனர். …
-
- 1 reply
- 685 views
-