Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நார்வே: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சமர முயற்சிகளில் ஈடுபட்ட நார்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நார்வேயில் சோசலிசஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சியின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச உதவிகளுக்கான அமைச்சராக எரிக் சொல்ஹெய்ம் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட இருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் எரிக்சொல்ஹெய்ம் கழற்றிவிடப்பட்டிருக்கிறார். அவரை பதவி விலகுமாறு கட்சித் தலைவர் அதுன் வலியுறுத்தியுள்ளார். கட்சித் தலைமையின் முடிவால் எரிக் சொல்ஹெய்ம் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கை உட்பட இனமோதல்கள் நிகழ்ந்த நாடுகளில் அமைதிப் பேச்சுக்கான ஏற்பாடுகளை எரிக்சொல்ஹெய்ம் மேற்கொண…

    • 1 reply
    • 497 views
  2. இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி!- தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் [ வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012, 03:50.15 AM GMT ] [ தற்ஸ்தமிழ் ] இலங்கைக்கு எதிராக கிடைத்துள்ள முதல் சர்வதேச அடி, தமிழகத்தில் பெரும் உற்சாகத்தையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், வக்கீல்கள், மாணவர்கள், அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஈழ மக்கள் இந்த தீர்மான வெற்றியை கொண்டாடி வருகின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இந்தியாவின் ஆதரவுடன் நிறைவேறிய செய்தி காட்டூத் தீ போல நேற்று மாலையில் தமிழகம் முழுவதும் பரவியது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள், மதுரை உயர்நீதிமன்ற கிளை வக்கீல்கள் திரண்டு பட்டாசுகளைக…

    • 1 reply
    • 874 views
  3. அமெரிக்கா பெற்ற வெற்றியை அமுல்படுத்த இலங்கை மக்கள் இடமளிக்கமாட்டார்கள்- வீரவன்ஸ! Published on March 23, 2012-11:22 am · ஜெனீவாவில் அமெரிக்கா பெற்ற வெற்றியை அமுல்படுத்த இலங்கை மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு நிர்மாண பொறியியல் துறை அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொது கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘”ஜெனீவாவில் வாக்களிப்பு முடிந்து விட்டது. ஆனால் இது இலங்கையில் நடக்கும் ஒரு சாதாரண தேர்தலல்ல. அது உலகில் மிகச் சிறிய நாடான எமது இலங்கையை எதிர்த்து உலகிலே மிகப் பெரிய வல்லரசான அமெ…

    • 3 replies
    • 822 views
  4. சிகிரியாவில் சுனாமியானாலும் மகிந்தவிடம் இருந்து சுனாமி ஏற்படாது - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- ஊடகவியலாளர்களின் கை கால்களை உடைக்கப் போவதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். சில ஊடகவியலாளர்களின் கை கால்களை உடைக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவே அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று கிரிபத்கொட பிரதேசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறி…

    • 0 replies
    • 577 views
  5. எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் எச்சரிக்கை – அடங்கிப்போனது சிறிலங்கா! Published on March 23, 2012-7:58 am · அமெரிக்காவின் அழுத்தத்தை தொடர்ந்து, ஈரானிடமிருந்து கச்சாய் எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு ஓமானிடமிருந்து கச்சாய் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு உடன்படிக்கை ஒன்றில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என 12 நாடுகளுக்கு அமெரிக்க எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியிருந்தது. இந்த எச்சரிக்கையை மீறினால் கடும்விளைவுகளை சந்திப்பதுடன் பொருளாதார தடைகளையும் சந்திப்பீர்கள் என இலங்கை உட்பட 12 நாடுகளுக்கு அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது. இலங்கை 93 வீதமான கச்சாய் எண்ணெய்யினை ஈரானிடமிருந்தே இறக்குமதி செய்கிற…

    • 0 replies
    • 1.1k views
  6. ஐ.நா.தீர்மானம்: நியாயமான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது இந்தியாவின் திருத்தம்: நாம் தமிழர் கட்சி ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் மெய்பிக்க வாய்ப்பளிக்கும் ஒரு நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான இரண்டு திருத்தங்களைச் செய்துள்ள இந்திய அரசு, அதன் மூலம் நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டையை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா அறிமுகம் செய்த வரைவுத் தீர்மானத்தின் மிக முக்கியமான மூன்றாவது பிரிவில், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில்நுட்ப உதவிகளையு…

    • 1 reply
    • 712 views
  7. ஜெனிவா மனித உரிமைகள் அமைப்பின் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றிருந்தாலும் அதற்கு முகங்கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. வாக்கெடுப்பில் அமெரிக்கா வெற்றி பெற்றிருந்தாலும் தாம் தமது நிகழ்ச்சி நிரலுக்கமைய நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை தொடர்ந்து முன்னெடுக்கபோவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நாவினூடாகக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு காலக்கெடு விதித்தாலும் அது குறித்து தாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளரும் பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான லக்ஷமன் யாப்பா …

  8. நேற்று சிறீலங்கா மீது தனது பிடியை அதிகரிக்கும் வகையிலும் சிறீலங்கா இனவெறி அரசுக்கு ஓரளவு சார்பாகவும் அதன் போர்க்குற்றங்களை அதுவே விசாரிக்க முன்னிலைப்படுத்தும் நோக்கிலும்.. தமிழர்களுக்கு சாக்குப் போக்குக் காட்டியும்.. ஒரு தீர்மானத்தை ஐநா மனித உரிமைகள் பேரவையில் இந்திய திருத்ததுடன் கொண்டு வந்த அமெரிக்கா.. அதற்கிடையில் சிறீலங்காவில் பெருமளவு மனித உரிமை விடயங்கள் முன்னேற்றம் கண்டுவிட்ட திருப்தியிலோ என்னவோ.. இன்று சிறீலங்காவிற்கான கடல்.. மற்றும் ஆகாயக் கண்காணிப்பு மற்றும் இராணுவ தளபாட விற்பனைக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி சிங்களக் கடும்போக்காளர்கள் அமெரிக்காவிற்கு எதிராக திரும்புவதை தடுக்க அல்லது அவர்களை திருப்திப்படுத்த முடிவெடுத்துள்ளது. The US announce…

  9. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தனது நிலைப்பாட்டிற்கு இணங்கியே இலங்கை;கு எதிராக இந்தியா வாக்களித்தது எனவும் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக கரிசனைகள் வெளிப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென விரும்பியதாகவும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இலங்கையின் இறைமையை இந்தியா மீற விரும்பவில்லை எனவும் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது ஏன் என செய்தியாளர்கள் வினவியமைக்கு பதிலளிக்கும் போதே இந்திய பிரதமர் இவ்வாறு கூறினார். “சாதக பாதகங்களை சீர்தூர்க்கி பார்க்க வேண்டும். நாம் செய்தது இலங்கை தொடர்பான எமது நிலைப்பாட்டிற்கிணங்கியதே. இலங்கையின் இறைமையை மீற நாம் விரும்பவில்லை. ஆனால்…

  10. இலங்கை, இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி பொதுநல வழக்கு. சென்னை: இலங்கை தமிழர்களின் பிரச்சனையை சுமூகமாக தீர்க்கும் வரை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இலங்கை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனால் இந்தியாவுக்கு இறுதிப் போட்டியி்ல் பங்கேற்கும் வாய்ப்பு பறிப் போனது. அதேபோல ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திடம் தோல்வியை தழுவிய இலங்கை, இந்தியாவை தொடரில் இருந்து வெளியேற்றி விட்டு, வங்கதேசத்திற்கு இறு…

  11. சென்னை: தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. ஆனால் சகோதரச் சண்டைதான் தமிழ் ஈழம் அமைவதைக் கெடுத்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்வி, தமிழ் ஈழம் பற்றியதுதான். அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு: ஈழத்தில் நடந்த சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என் கருத்து என்றார் கருணாநிதி. அப்போது, புலிகள் நடத்திய சகோதர யுத்தம் தவறானது என்று சொல்கிறீர்கள். தந்தை செல்வா போன்றோர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் தமிழர்கள் மீது அத்துமீறல்கள் நடந்…

  12. இலங்கை தோல்வி: கிளிநொச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்தியா ஆதரவுடன் நிறைவேறியது. நேற்று பிற்பகல் இந்த தகவல் பரவியதும் உலகம் முழுவதும் வாழும் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஈழத்திலும் தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது. குறிப்பாக கிளிநொச்சி, அக்கராயன் பகுதிகளில் ஈழத்தமிழ் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்து இந்த வெற்றியை குதூகலமாக கொண்டாடினார்கள். கிளிநொச்சி நகரில் ஒரு கட்டத்தில் பட்டாசுகள் வெடி சத்தம் 10 நிமிடங்களுக்கும் மேல் தொடர்ச்சியாக நீடித்தது. ராணுவ நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்த வெற்றியைக் கொண்டாடினார்கள். ஈழத்…

  13. இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு மத்திய அரசு தடையாக உள்ளது : சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் மெய்பிக்க வாய்ப்பளிக்கும் ஒரு நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான இரண்டு திருத்தங்களைச் செய்துள்ள இந்திய அரசு, அதன் மூலம் நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டையை உருவாக்கி உள்ளது. தீர்மானத்தின் 3-வது பிரிவில், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில் நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவே…

  14. அமெரிக்கா முன்வைத்த பிரேரணையால் ஈழத் தமிழர்களுக்கு விடுதலையை பெற்று கொடுக்காது!-பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை! அமெரிக்காவும் சிறிலங்காவும் கற்றுக்கொண்ட பாடங்கள்- நல்லிணக்க ஆணைக்குழு, ஜெனீவா மனிதவுரிமை பேரவையின் அமர்வில் கொண்டுவரப்பட்ட பிரேரணையும்சிறிலங்கா அரசு இந்திய ஆகிய நாடுகள் அமெரிக்க மனிதவுரிமை ஆணைக்குழுவில் முன்வைத்த பிரேரணையை பார்த்து அஞ்சுவது போன்ற பார்வையை எமக்கு அளித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த பிரேரணை தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சபையில் ஒரு சிறு கதவு திறக்கப்பட்டுள்ளது என்ற பார்வையில் எமக்குள் நாம் ஒரு திருப்தியை ஏற்படுத்தி கொண்டாலும், இதற்காக அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு நாம் ஆதரவு குரல் கொடுத்தாலும் …

  15. திருகோணமலையில் தமிழர்களின் முச்சக்கரவண்டியை அடித்து நொறுக்கிய சிங்கள இனவெறியர்கள் இன்று காலை திருகோணமலையில் தமிழர்களின் முச்சக்கரவண்டியை சிங்கள இனவெறியர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் யாழ் நகரின் தீவக பகுதிகளில் சிறீலங்கா அரசானது சிங்கள பயங்கரவாத இராணுவத்தினரை கூடுதலாக நிலைநிறுத்தி மக்களை அச்சுறுத்திய வண்ணம் உள்ளனர். http://www.tamilveli.com/showurl.php?url=http://feedproxy.google.com/~r/meenakam/PJVH/~3/Zh_9NVSd8cc/41786&type=P&itemid=211853

  16. மற்றுமொரு முள்ளிவாய்க்காலா இடிந்தகரை...?: கொளத்தூர் மணி [Photos] எல்லா மாநிலங்களிலும் விரட்டியடிக்கப்பட்டதால் அணுமின்நிலையத்தை தென்தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளத்தில் நிறுவ மத்திய அரசு முடிவெடுத்தது. அன்றிலிருந்து இந்த அணுஉலைக்கு எதிராகப் போராடி வரும் மக்கள் 2011இல் புகுசிமாவில் நடந்த அணுஉலை பேரழிவிற்குப்பின் மேலும் உறுதியாகப் போராடிக்கொண்டிருக்கின்றனர். மக்களின் உணர்வைப் புரிந்து செயல்படுவதாக “மக்களின் அச்சத்தைப் போக்காமல் மத்திய அரசு கூடங்குளம் அணுஉலையை திறக்கக்கூடாது” என்று முதல்வர் முன்மொழிந்து தமிழகசட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு நேரெதிராக இன்று மக்களை அச்சுறுத்தி அணுஉலையை திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. கூடங்குளத…

  17. திருகோணமலையில் தமிழர்களின் முச்சக்கரவண்டியை அடித்து நொறுக்கிய சிங்கள இனவெறியர்கள் இன்று காலை திருகோணமலையில் தமிழர்களின் முச்சக்கரவண்டியை சிங்கள இனவெறியர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் யாழ் நகரின் தீவக பகுதிகளில் சிறீலங்கா அரசானது சிங்கள பயங்கரவாத இராணுவத்தினரை கூடுதலாக நிலைநிறுத்தி மக்களை அச்சுறுத்திய வண்ணம் உள்ளனர். http://www.tamilveli.com/showurl.php?url=http://feedproxy.google.com/~r/meenakam/PJVH/~3/Zh_9NVSd8cc/41786&type=P&itemid=211853

  18. ஐ.நாவில் அமெரிக்கா வெற்றி கண்டது! இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர அடி! ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசாங்கம் மாபெரும் இராஜதந்திரச் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த 4 வாரங்களாக, உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு மட்டுமல்ல, இலங்கைத் தீவை மையப்படுத்திய உலக அரசியல் வெளியிலும், இப்பிரேரணை விவகாரம் முக்கிய விடயமாக மாறியிருந்தது. இந்நிலையில் இன்று ஐ.நா கூட்டத் தொடர் அமர்வில் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அமெரிக்காவின் பிரேரணையினை 24 நாடுகள் ஆதரித்தும், 15 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் வாக்கெடுப்ப்ப…

    • 0 replies
    • 512 views
  19. இந்தியாவின் வழியில் பல நாடுகள் நிலைப்பாட்டை மாற்றின: ஜெனீவாவில் இலங்கை அதிகாரிகள் திணறல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை விவகாரத்தில் லத்தின் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகள் பல, இந்தியாவின் வழியில் தமது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளன. இதனால் இப்பிரேரணையை தோற்கடிப்பதற்கு போதிய வாக்குகளைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை தூதுக்குழுவினர் தடுமாறுவதாக தெரியவருகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவம், கௌரம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்காலம் கிடைக்கவேண்டுமென்ற இந்தியாவின் நோக்கத்தை இப்பிரேரணை கொண்டிருந்தால் இப்பிரேணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க கடந்த திங்கட்கிழமை அறிவித்…

  20. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பதினைந்து நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களித்தமை பெரும் திருப்தியளிக்கிறது என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக இன்று 24 நாடுகளுக்கும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் 15 நாடுகள் இலங்கைக்கு சார்பாக பிரேரணையை எதிர்த்து வாக்களித்தமை பெரும் திருப்பதியளிக்கிறது என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “அந்நாடுகள் மீது பல்வேறு வகையில் செலுத்தப்பட்ட கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் 15 …

    • 10 replies
    • 2.4k views
  21. கண்ணாடி வீடுகளில் வசிப்போர் மற்றவர் மீது கல்லெறியும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் கலந்துக் கொண்டுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையில், இலங்கை சம்பந்தமாக அமெரிக்கா கொண்டு வந்த யோசனைக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளாது எனவும் இது மனித உரிமை பேரவையின் கொள்கைகளுக்கு முரணானது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மருத்துவர்கள் முதலில் தம்மை குணப்படுத்தி கொள்ள வேண்டும் என கூறி, அமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார். இதன் பின்னர் இலங்கைக்கு எதிரான யோசனை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், 9 மேலதிக வாக்குகளினால் யோசனை நிறைவேற்றப்ப…

    • 3 replies
    • 1.7k views
  22. இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை இந்தியா ஆதரித்தது ஏன் என்பது தொடர்பாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளிவந்த செய்தியை ஈழதேசம் இணையத்திற்காக மொழி ஆக்கம் செய்தவர் மூர்த்திநாத். 1 ) மனித உரிமைகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா அரசு தொடர்ந்து பொய்களையே கூறி வருகிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,இது தொடர்பில் சர்வதேச நாடுகளின் இறையான்மையினை மதித்து ஸ்ரீலங்கா அரசு செயல்பட்டு தனது சொந்த முயற்ச்சிகளை செயல்படுத்த வேண்டும். 2 )இந்தியா சிறிலங்காவின் LLRC அறிக்கையின் பரிந்துரைகளை வரவேற்றது,நாட்டில் இருக்கும் அனைத்து இன மற்றும் சமயங்களிடையே சமரசத்தையும் இணக்கப்பாட்டையும் உருவாக்கும் என்று நம்பினோம் உண்மையில் ஸ்ரீ லங்கா அரசு …

    • 7 replies
    • 1.5k views
  23. அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் : இந்தியா இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிப்பதற்கான காரணங்களை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியப் பிரதிநிதி விளக்கியிருந்தார்:- இலங்கையின் படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது. இலங்கையில் வாழும் அனைத்து இன மற்றும் மதக்குழுக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வு மூலமான நல்லிணக்கத்தை அந்நாட்டில் கொண்டுவருவதற்கு இந்த பரிந்துரைகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திதருவதாய் இந்தியா நம்புவதாகத் தெ…

  24. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த நாடுகளின் முழுப்பட்டியல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளது. 15 நாடுகள் எதிராகவும், 8 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தும் இருந்தன. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்: 01.இந்தியா 02.பெல்ஜியம் 03.பெனின் 04.கேமரூன் 05.சிலி 06.கோஸ்டாரிக்கா 07.செக் குடியரசு 08.கௌதமாலா 09.ஹங்கேரி 10.ஆஸ்திரேலியா 11.இத்தாலி 12.லிபியா 13.மொரிசியஸ் 14.மெக்சிகோ 15.நைஜீரியா 16.நார்வே 17.பெரு 18.போலந்து 19.மால்டோவா குடியரசு 20.ரோமானியா 21.ஸ்பெயின் 22.சுவிட்சர்லாந்து 23. அமெர…

    • 7 replies
    • 1.9k views
  25. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டும் யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பில் நீதி வழங்குமாறு வலியுறுத்தியும் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் இல்லம் மற்றும் தேவை நாடும் மகளிர் அமைப்பு ஆகிய இணைந்து இவ்வார்ப்பாட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தன. இவ்வார்ப்பாட்டம் இன்று காலை 8.30 மணியளவில் நல்லூரில் இருந்து ஆரம்பமாகி யாழ்.மாவட்ட செயலகத்தில் நிறைவு பெற்றது. யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து, யாழ்.அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தலைமையில், கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. இதன்போது, பெண்கள் மீது வன்முறைகளிலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியு…

    • 1 reply
    • 825 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.