Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பதவியில் இருந்து இறக்கப்பட்ட மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் பாதுகாப்புக்காக இலங்கை அரசாங்கம் இலங்கை பாதுகாப்பு படையினரை இன்று இரவு மாலைத்தீவுக்கு அனுப்பி வைக்க உள்ளது. உதவி காவற்துறை அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான 10 அதிரடிப்படையினர், 15 இராணுவத்தினர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவின் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 20 படையினர் இவ்வாறு மாலைத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தற்போது சட்டரீதியாக செயற்படும் மாலைத்தீவு அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணுவதற்கு பதிலாக பதவியில் இருந்து விலகிய ஜனாதிபதியின் நண்பர் மொஹமட் நஷீட்டின் பாதுகாப்புக்காக இவ்வாறு இலங்கை பாதுகாப்பு படையினரை அனுப்பி வைப்பது சர்வதேச சட்டங்களை மீறும் நடவடிக்கை என சுட்டிக்கா…

    • 6 replies
    • 1.1k views
  2. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு ஆதரவு தேடும் ராஜதந்திர சமர் ஆரம்பம்: ஜீ.எல். பீரிஸ் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக பாரிய ராஜதந்திர போராட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார். ஜெனீவாவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுடன் நடத்திய காலை உணவு சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யுத்தத்தின் கடைசிக் கட்டத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவுள்ள மேற்படி தீர்மானம் தீங்கற்றது எனவும் அது குறித்து இலங்கை கவலையடையத் தேவையில்லை எனவும் அமெரிக்கா …

  3. ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில் அத் தீர்மானத்தைச் சமர்ப்பிக்கப் போவது யார் என்ற கேள்வி பொதுவாக அனைத்துலக இராஜ தந்திரிகள் மட்டத்திலான ஊகங்க்ள் எழுந்துள்ளன. இந்தத் தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ள நாடு எது என்று தீர்மானிக்க முடியாமல். இலங்கை வெளிவிவகார அமைச்சு குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இந்தத் தீர்மானத்தை அமெரிக்காகவே சமர்ப்பிக்கலாம் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு நம்பியிருந்தது. ஆனால், அமெரிக்கா இராஜதந்திரிகள் பிளேக்கும், மரியா ஒரேரோவும் கொழும்பில் வைத்து இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்ததை அடுத்து, அமெரிக்கா இதனை சமர்ப்பிக…

  4. Watch Mithivedi on the net For the first time ever in the history of Tamil cinema, a film has been released on the net. Mithivedi, which deals with the landmines issue in Sri Lanka, was released on the net on February 17th. According to a press note, movie buffs in US, Canada, Europe, Middle East and Australia can watch the film on the website www.mithivedi.com.au on the pay per view rental basis. Daniel Balaji, who has acted in a number of Tamil films and television serials and known for his performance in Kaakha Kaakha as one of Suriya’s friends, has played the menacing Sri Lankan Army Lieutenant and Neelima has played an Eelam Tamil woman trying to save her b…

  5. ஜனாதிபதி – சம்பந்தன் சந்திப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. http://www.tamilmirror.lk/component/content/article/87-front-main-news/36354-2012-02-21-14-41-12.html

  6. அமைதியான முறையில் பொதுமக்களால் நடாத்தப்படும் போராட்டங்கள் மீது இராணுவபலம் பிரயோகிப்பதால் சிரியாவைப் போன்றதொரு புரட்சி நிலைமை இலங்கையிலும் உருவாகக் கூடும் என ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மக்களது அமைதிவளிப் போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என அரசாங்கம்அறிவித்துள்ள போதிலும், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தும் அளவிற்கு நாட்டில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலவசக் கல்வியை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் பல்கலைக்கழகமாணவர்கள் நடத்திய போராட்டங்கள் மீ…

    • 5 replies
    • 573 views
  7. தமிழர்களுக்குச் சுண்ணாம்பு, பலுசிஸ்தானியர்களுக்கு வெண்ணெய்-அமெரிக்காவின் கபட நாடகம்! இஸ்லாமாபாத்: பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கு பிரிந்து போய் தனிநாடு அமைத்துக் கொள்ளக் கூடிய "சுயநிர்ணய உரிமை" என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தால் அலறிப் போய் கிடக்கிறது பாகிஸ்தான். அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு அதன் இரட்டை வேடத்தையும், கபட நாடகத்தையும் அம்பலப்படுத்துவதாக உள்ளது. ஈழத் தமிழர்களின் தனி நாடு கோரிக்கையை ஏற்காத அமெரிக்கா இப்போது சுயநல நோக்குடன் பலுசிஸ்தான் தனி நாடாகலாமே என்று சப்பை கட்டுவதாக கூறப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்காக பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை இருமுறை அழைத்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அ…

  8. இறுதி யுத்தத்தில் நிராயுதபாணியாக பேசச் சென்ற பொழுது சிங்களப் படைகளால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சவின் கொலைக்கரம் இருப்பதை உறுதிசெய்யும் ஒலிப்பதிவு அமெரிக்காவிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த போராளிகளினதும், பொதுமக்களினதும் உயிர்களைப் பாதுகாக்கும் நிமித்தம் எரிக் சொல்கைம் போன்றோர் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் 2009 மே 18 அன்று நிராயுதபாணியாக பேசச் சென்ற தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன், காவல்துறைப் பொறுப்பாளர் இளங்கோ (ரமேஸ்) ஆகியோர் சிங்களப் படைகளால் கொடூரமான முறையில் சுட்டும், எரிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர…

    • 1 reply
    • 1.4k views
  9. ஐ.நாவுக்கான இலங்கைத் தூதரகம் மேலதிக பாதுகாப்பு கோருகிறது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், தமக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் ஜெனீவாவிலுள்ள, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் கோரியுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவரான விஸ்வநாதன் ருத்ரகுமார் தலைமையிலான எல்.ரி.ரி.ஈ. செயற்பாட்டாளர்கள் குழுவொன்று பெப்ரவரி 27 ஆம் திகதி லண்டனிலிருந்து ஜெனீவாவுக்கு வரவுள்ளதாக இலங்கைத் தூதரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் நெடியவன் தலைமையிலான மற்…

    • 4 replies
    • 671 views
  10. பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் பாவிக்கும் வார்த்தைப் பிரயோகங்களில் தரக்குறைவை நன்கு அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது என நீதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றவூப் ஹக்கீம், கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற "பாராளுமன்ற நடவடிக்கைகள் 2012" என்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்: முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விளிக்கும் பொழுது அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியை குறிப்பிட்டு அதன் கௌரவ உறுப்பினர் என கூறுவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு கண்ணியமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு வந்தனர். பாராளுமன்ற விவாதங்களின் போது உறுப்பினர்கள் மிகவும் கண்ணியமாக நடந்…

  11. ஜெனிவாவில் ஆதரவைப் பெற சிறிலங்கா ஏற்பாடு செய்த ஒன்றுகூடல் நிகழ்வு! முக்கிய நாடுகள் புறக்கணிக்க முடிவு ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் நாளை மறுதினம் ஏற்பாடு செய்துள்ள விசேட ஒன்றுகூடல் நிகழ்வை முக்கியமான பல நாடுகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று கொழும்பிலிருந்து ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரி…

  12. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நியாயப்படுத்தி, மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவை, தமிழக அரசும் பின்பற்றுவதாக, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.புலிகள் இயக்கத்துக்கு, மத்திய அரசு தடை விதித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், 2010ம் ஆண்டு மே மாதம், மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட்டது. தடை விதித்ததற்கு போதிய காரணங்கள் உள்ளதா, இல்லையா என்பதை முடிவு செய்ய, தீர்ப்பாயத்தையும் மத்திய அரசு அமைத்தது.தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீர்ப்பாயத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர், மனு தாக்கல் செய்தனர். மத்திய அரசு விதித்த தடை செல்லும் என, தீர்ப்பாயம் உத்தரவிட்டது…

  13. வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எந்தவொரு நபரேனும் மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், குற்றச் செயல்கள் தொடர்பில் வெளிச்சக்திகளின் விசாரணைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என அவர் அறிவித்துள்ளார். உள்நாட்டு ரீதியான பொறிமுறையொன்றின் அடிப்படையில் விசாரணைசெய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்…

  14. ஜெனீவாவில் ஐ.நா வின் மனித உரிமை மாநாடு மார்ச் மாதம் ஆரம்பமாக உள்ளது யாவரும் அறிந்ததே. இம் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர சில வல்லரசு நாடுகள் முனைப்புக்காட்டி வருகிறது. இதனை தமிழர்கள் சாதகமாகப் பயன்படுத்தி தமது காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பிரித்தானியவில் உள்ள சில முன்னணி தமிழ் அமைப்புகள் குறிப்பிட்ட சில நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் உள்ளனர். இதன் ஒரு அங்கமாக ஜெனீவாவில் மாநாடு நடைபெறும் போது ஐ.நா மன்றத்துக்கு முன்னால் தமிழர்கள் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். இதனை முறியடிக்க, இலங்கை அரசானது பல வழிகளில் முனைப்புக்காட்டி வருகிறது. தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பிரித்த…

  15. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில் எழவுள்ள நெருக்கடிகளை சமாளிப்பதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்திலான காய் நகர்த்தல்களை என்றுமில்லாதவாறு முன்னெடுத்து வருகின்றது என தெரியவருகிறது. ஜெனிவா மாநாட்டில் இலங்கை விவகாரம் குறித்து எவ்வாறானதொரு வகிபாகத்தை வகிப்பது தொடர்பில் இந்தியா ஆழமாகப் பரிசீலித்துவரும் தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், கொழும்பு அரசு தனது உயர்மட்ட இராஜதந்திரிகள் அடங்கிய குழுவொன்றை டில்லிக்கு அனுப்பி வைத்துள்ளது என்றும் அறியமுடிகின்றது. டில்லியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராஜதந்திரிகள் பட்டாளம் அந்நாட்டின் வெளிவிவகார அமை…

  16. இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பதற்கு சீனாவுக்கு அனுமதி மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்குவதை விடுத்து விலையை குறைத்து நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தும் ஐ.தே.க. வின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான தயாகமகே எமது கடல் எல்லையில் மீன்பிடிக்கும் உரிமையை சீனாவுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தயாகமகே இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் மண்ணெண்ணெயின் விலையை இன்றைய அளவுக்கு உயர்த்…

    • 5 replies
    • 979 views
  17. போர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய? [ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 08:49 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா இராணுவத்தின் தொடர்பாடல் சமிக்கை அதிகாரியாகக் கடமையாற்றிய கோத்தாபய ராஜபக்ச போன்றவர்கள் கூட இரகசியத் தொடர்பாடல் முறைமையைப் பேணவில்லை. ஆகவே குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கட்டளை அமைந்துள்ளது. இது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளையாகும். இவ்வாறு அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட ஊடகமொன்றில் Sydney Morning Herald ஊடகத்தின் Asia-Pacific editor, Hamish McDonald எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. …

    • 3 replies
    • 1.8k views
  18. அரிசி விலையும் உயர்த்தப்படக் கூடிய அபாயம் http://youtu.be/oLLFRpKVUgo இலங்கையின் ரூபாயில் ஏற்பட்ட வீழ்ச்சி பெற்றோலிய விலையில் 49 வீத அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கையில் பாரிய போராட்டங்கள் ஏற்ட்டுள்ளதாகவும் தேயிலை ஏற்றுமதியில் ஏற்ட்டுள்ள தடையும் இலங்கையில் இருதரப்பு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அல்ஜசீராவின் ஆய்வு கூறுகிறது. அரிசி விலையும் உயர்த்தப்படக் கூடிய அபாயம் நாட்டில் அரிசி விலையும் உயர்த்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலையேற்றத்தின் எதிரொலியாகவே அரசியின் விலை உயர்த்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு நான்கு ரூபா வீதம் அரசியின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. …

    • 4 replies
    • 1.1k views
  19. 21ஆம் நூற்றாண்டில் மனித உரிமை பாதுகாப்பும், அது எதிர்கொள்ளும் அறைவல்களும் – இலங்கை குறித்து ஒரு ஆய்வு என்ற தலைப்பிலான சர்வதேச மனித உரிமைகள் மாநாடு நேற்று முன்தினம் கனடா ரோரன்ரோவில் நடைபெற்றது. உலகெங்கும் இருந்து வருகைதந்த மனித உரிமை வல்லுனர்கள் பேராளர்கள் கலந்து கருத்துரை வழங்கினர். தமிழர்களின் நீதியான போராட்டத்தை வென்றெடுக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் அயராது தொடர்ந்தும் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை பலரும் வலியுறுத்தினர். தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் நியாத்தை உலகம் உணரத் தலைப்பட்டுள்ள இன்றைய நிலையில் தமிழர்கள் அயராது தொடர்ந்தும் உழைக்க வேண்டியதன் அவசியம் மேலும் வலியுறுத்தப்பட்டது. டேவிட் மெற்றாஸ், டெனிலோ ரெயிஸ், டேயிற்றி மக்கோனல், அலிபெய்டுன், தியடோர் ஓர்லின்,…

    • 2 replies
    • 663 views
  20. சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவால் இந்தியாவிற்கு எதுவிதமான பிரச்சினையும் இல்லை என இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போது, இலங்கை - இந்தியா இடையேயான உறவுநிலை பற்றி கேள்வி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை உள்ளிட்ட அண்டைய நாடுகளுடன் சகோதரத்துவத்துடனான நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்தியாவின் கொள்கை எனவும் அண்டை நாடுகளில், இன்னல்களை ஏற்படுத்தல் மற்றும் பிரிவினையைத் தோற்றுவிப்பது தமது நோக்கம் அல்ல எனவும் கிருஷ்ணா இதன்போது குறிப்பிட்டுள்ளார். யுத்த காலப்பகுதியினுள் இருந்த இலங்கைக்கு இடையேயான சகோதரத்துவத்தை தொடர்ந்தும் பேணி வரு…

  21. கங்க சிறிகம பகுதியில் உள்ள விகாரையொன்றில் வைத்து கஞ்சாவுடன் தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதேச காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினை அடுத்தே விகாரையினைச் சுற்றி வளைத்த போது இவ் பெளத்த தேரர் கைதுசெய்யபட்டுள்ளதாகவும் இவரிடமிருந்து 500 கிறாம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ் பெளத்த தேரரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பெளத்த தேரர் ஒருவர் கஞ்சாவைத்திருந்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.saritham.com/?p=51289

  22. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் கொடியை காட்டியவா கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இன்று சிட்னியில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியின் போது, நபர் ஒருவர் புலிக்கொடியை அசைத்துள்ளார். இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய போது புலிக் கொடி அசைக்கப்பட்டது. குறித்த நபரை அவுஸ்திரேலிய காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து இலங்கை ரசிகர்கள் இருந்த பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதேவேளை, சி.பீ கிண்ண முக்கோன ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை அணி முதல் வெற்றியை இன்று பதிவு செய்து கொண்டது. அவுஸ்திரேலிய அணியை எட்டு விக்கட்டுகளினால் வீ…

  23. சிறிலங்கா அமைதியை அடைந்தது எப்படியாக இருந்தாலும், அதன் மனிதஉரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது. போர்க்குற்றங்களைப் புரிந்தவர்கள் அனைத்துலகச் சட்டங்களின் படி பொறுப்புக்கூறுதல் அவசியம் என்று பாகிஸ்தானின் பிரபல நாளேடான DAWN கருத்து வெளியிட்டுள்ளது. “மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள்“ என்ற தலைப்பில இன்று வெளியாகியுள்ள DAWN நாளேட்டின் ஆசிரியர் தலையங்கத்திலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது- சிறிலங்காவில் ஒப்புமையான அமைதி ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கான இழப்புகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. சிறிலங்கா முன்னெடுத்த போர் ஒட்டுமொத்த அனைத்துலக சட்டங்களின் மீதும் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்…

  24. கோவையில் இலங்கை நர்சுகளுக்கு பயிற்சி-கேரள வைத்தியசாலைக்கு பெரியார் தி.க. கண்டனம் கோவை: கோவையில் இலங்கை நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரியவைத்திய பார்மசியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெரியார் தி.க. நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். கோவையை அடுத்த நவக்கரையில் ஆரியவைத்திய பார்மசி உள்ளது. இங்கு இலங்கையை சேர்ந்த 5 நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக பெரியார் தி.க. பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த அவர் ஆரிய வைத்திய சாலையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து பயிற்சி பெற்ற இலங்கை நர்சுகள் 5 பேரும் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஆரிய வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட…

  25. கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்தது முதல் ஏ9 வீதியில் இது வரை 28 புத்த சிலைகள் நாட்டப்பட்டு இருக்கின்றன. புத்த சமயிகள் அறவே இல்லாத இடத்தில் அல்லது மிக சொற்ப அளவில் உள்ள இடத்தில் இவை நாட்டப்பட்டு இருப்பது ஒரு வகையில் நகைச்சுவைக்கு உரியது ஆகும். இவற்றுள் பெரும்பாலானவை வவுனியாவுக்கு அப்பால் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற இடங்களில் நாட்டப்பட்டு இருக்கின்றன. தமிழ் சமுதாயத்தின் கலாசார மற்றும் சமயம் மீதான சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பாகவே இதை காண முடிகின்றது. ஆனால் இந்த ஆக்கிரமிப்பு குறித்து வெளியில் பேசுகின்றமைக்கோ, ஆர்ப்பாட்டம் செய்கின்றமைக்கோ இங்கு வாழ்கின்ற தமிழர்கள் அஞ்சுகின்றனர். இலங்கை ஒரு புத்த நாடாக இருப்பதால் புத்த கலாசாரத்தை நாடு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.