ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
நாடாளுமன்றம், கொழும்பு மாநகரபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் மொழிப் பெயர்ப்பாளராக கடமையாற்றி வந்த சத்தியசீலன் பாக்கியராஜ் (வயது 34) என்பவர், இனந்தெரியாதோர் சிலரால் திருகோணமலையில் வைத்து கடத்தப்பட்டுள்ளார் என்று திருகோணமலை, துறைமுகப் பொலிஸில் அவரது மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சத்தியசீலனின் மனைவியின் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொழும்பு, ஒபேசேகரபுரத்தைச் சேர்ந்த சத்தியசீலன், விடுமுறைக்கு ஊருக்குச் சென்ற தனது மனைவியை அழைத்து வருவதற்காக நேற்று அதிகாலை திருகோணமலைக்குச் சென்றுள்ளார். …
-
- 0 replies
- 521 views
-
-
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவின் கலைஒளி கிராமத்தைச் சோ்ந்த பாடசாலை மாணவி ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தரம் 11ல் கல்வி கற்கும் நல்லதம்பி கௌசிகா என்ற பாடசாலை மாணவியே நேற்றையதினம் சனிக்கிழமை (21) இரவு 7.00 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெற்றோருக்கு இடையே ஏற்படட குடும்பச் சண்டை காரணமாகவே விரக்தி அடைந்த இந்த மாணவி தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துள்ளார். உடனடியாகக் கோப்பாய் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ் போதனாவைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனளிக்காது அதிகாலை இரண்டு மணியளவில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் …
-
- 0 replies
- 678 views
-
-
சிறிலங்கா விமானப்படையை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சீனாவிடம் வாங்கப்பட்ட மூன்று போர் விமானங்களை 6 மில்லியன் டொலர் செலவில் சிறிலங்கா அரசாங்கம் தரமுயர்த்தவுள்ளது. கே-8 ரகத்தைச் சேர்ந்த மூன்று போர் விமானங்களே முதற்கட்டமாக தரமுயர்த்தப்படவுள்ளன. இந்தப் போர் விமானங்களில் Head Up Display System (HUD) மற்றும் Multi-Function Display System (MFD) ஆகியன நவீன கருவிகள் பொருத்தப்படவுள்ளன. Head Up Display System மூலம் விமானிகளின் வழக்கமான பார்வைக் கோணத்துக்கும் அப்பாலுள்ளவற்றையும் பார்க்கும் வசதி கிடைக்கும். Multi-Function Display System மூலம் போர் விமானத்திலுள்ள ரேடர் , ஆயுதங்கள் மற்றும் வழிநடத்துதல் காட்சி தரவுகளை விமானி பெற்றுக் …
-
- 0 replies
- 627 views
-
-
மனித உரிமை கவுன்சில் அமர்வுகளுக்கு முன் வடக்கில் தேர்தல்? ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்சில் அமர்வுகளுக்கு முன்னதாக வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடாத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படக் கூடிய போர்க் குற்றச்சாட்டுக்களை முறியடிக்கும் நோக்கில் வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் வட மாகாணசபைக்கான தேர்தலுக்காக வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களை முறியடிக்கவும் இந்திய மத்திய அரசாங்கத்தின் பூரண ஆதரவினை பெற்றுக் க…
-
- 0 replies
- 499 views
-
-
மொழிப்பெயர்ப்பாளர் பா.சத்தியசீலன் இனந்தெரியாதோரால் கடத்தல் நாடாளுமன்றம், கொழும்பு மாநகரபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் மொழிப் பெயர்ப்பாளராக கடமையாற்றி வந்த சத்தியசீலன் பாக்கியராஜ் (வயது 34) என்பவர், இனந்தெரியாதோர் சிலரால் திருகோணமலையில் வைத்து கடத்தப்பட்டுள்ளார் என்று திருகோணமலை, துறைமுகப் பொலிஸில் அவரது மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சத்தியசீலனின் மனைவியின் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு, ஒபேசேகரபுரத்தைச் சேர்ந்த சத்தியசீலன், விடுமுறைக்கு ஊருக்குச் சென்ற தனது மனைவியை அழைத்து வருவதற்காக நே…
-
- 0 replies
- 721 views
-
-
2009 மே மாதத்தில், சிறிலங்காவின் தடுப்பு முகாம்களுக்கு பயணம் செய்து, அங்கே இருந்த சிறார்கள், துப்பாக்கி முனையில்பாடிக்காட்டினர், இது வரையில் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் பற்றி, பான் கி மூன் போர்க்குற்ற விசாரணைகளுக்கான நடவடிக்கைகள் எதனையுமே எடுக்கவில்லை. இக்குற்றங்கள் சிறிலங்காவின் ஐ நா பிரதிநிதி அலுவலகத்தாலேயே மேற்கொள்ளப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பொன்றின் போது, ஐ.நா செயலாளர் நாயகம், சிறிலங்கா ஆட்சியைக் குறைகூறுவதை விடுத்து, தனது ஊழியர்களையே குறை சொன்னார். இவ்வாறு ஐ.நா செயலாளர் நாயகம் மீது தனது கடுமையான விமர்சனத்தை இன்னர் சிற்றி பிரஸ் முன்வைத்துள்ளது. குற்றப் பொறுப்புக்கள் தொடர்பில் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில்…
-
- 2 replies
- 713 views
-
-
உமா வரதராஜன் தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்’ என்ற அறிக்கையில் தனது பேர் சேர்க்கப்பட்டதுக்கு எழுதிய மறுப்புக்கு எனது பதில் - சுமதி சிவமோகன் தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள் என்ற 71 பேரால் கையொப்பமிடப்பட்ட அறிக்கை இலங்கையில் உள்ள மக்களிடையே, குறிப்பாக முஸ்லிம்கள், தமிழ் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. போரிற்குப் பின்பான காலகட்டத்திலே தமிழ் முஸ்லிம் உறவுகள் எப்படியிருக்க வேண்டுமென்ற நோக்கிலே எழுந்த இம் முயற்சியில் தம்மையும் சேர்த்துக் கொள்ளுமாறு 71 பேரைவிட கூடுதலான பேர் கேட்டுக்கொண்டனர். நாம் அனுப்பிய மடலை காலம் தாமதித்து பார்த்ததில் கையொப்பம் வழங்கமுடியாமல் போனதை…
-
- 0 replies
- 752 views
-
-
இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று பார்வையிடுவதற்கு ஒழுங்குகளை செய்து தரும்படி சிறிலங்கா அரசிடம் கோரப் போவதாக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு அவர் நேற்றிரவு கொழும்பை வந்தடைந்தார். கொழும்பு புறப்பட முன்னர் அவர் இந்திய ஊடகங்களுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். "யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களையும், இந்துக் கல்லூரி மாணவர்களையும் சந்திக்கவுள்ளேன். அத்துடன் அங்குள்ள புலமையாளர்கள், நிபுணர்கள், பொதுமக்களை சந்திப்பதையிட்டு நிச்சயமாக மிகவும் மகிழ்ச்சிடைகிறேன். 2020இல் இந்தியாவை ஆற்றலுள்ள நாடாக மாற்றுவதற்கான தி…
-
- 6 replies
- 779 views
-
-
சிங்களப்படையை மடியில் வைத்துக் கொண்டு ஏது சிவில் நிர்வாகம் ? January 21, 2012 வடக்கு மாகாணத்தில் அனைத்து விடயங்களிலும் இராணுவத்தின் தலையீடு அளவு கடந்து அதிகரித்துள்ளது. இதனால் எந்த ஒரு விடயத்தையும் இராணுவப் பிரசன்னம் இல்லாமல் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. எந்த நிகழ்வாக இருந்தாலும் அதற்கு இராணுவத்தைக் கட்டாயம் அழைக்க வேண்டும் என்ற வாய்மூல உத்தரவு அரச அதிகாரிகள் முதல் அனைத்துத் தரப்புக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தாம் சுயமாகச் சிந்தித்து தமது விருப்பத்துக்கு ஏற்ப எந்தவொரு செயலிலும் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர். இது வடக்கில் அரசு இராணுவ ஆட்சியையே தொடர்ந்தும் வைத்திருக்க விரும்புகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு நேற்று யாழ்ப்பாணத்த…
-
- 0 replies
- 659 views
-
-
எதிர்வரும் 29.01.2012 ம் திகதி நடைபெற இருக்கின்ற நயினையுறை நாக பரமேஸ்வரி அம்மனுடைய,திருக்குட திருமஞ்சன பெரும்சாந்தி விழாவினை முன்னிட்டு,இன்றைய 3 ம் நாளாகிய நவக்கிரக ஹோமம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றதன் சில காட்சிகள். thx http://newjaffna.com
-
- 0 replies
- 814 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம் நிகழ்வு டென்மார்க்கின்ற நகரில் இடம்பெறவுள்ளதாக தகவற்றுறை அமைச்சகத்தின் ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22-01-2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 15:30 மணிக்கு Industrivej 15A / 7200 Grindsted எனும் முகவரியில் இடம்பெறுவதாக ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமகால அரசியல் நிலைவரம் மற்றும் நா.த.அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தான விழிப்பூட்டல் நிகழ்வாக இடம்பெறவுள்ள இப்பொதுக் கூட்டத்தில் நா.தஅரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் கலந்து கொள்கின்றார். உள்துறை அமைச்சின் டென்மார் பிரதிநிதி இளையராஜா சிதம்பரநாதனின் ஒழுங்குபடுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் அரங்கம் நிகழ்வில் அனைவரையு…
-
- 2 replies
- 736 views
-
-
தன்னார்வ விடயத்தில் இலங்கை முன்னேற்றம் கண்டு வருவதாகவும் கிராமிய மட்டத்திலான வளர்ச்சி மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐ.நாவின் கொழும்பு அலுவலக அதிகாரி குறிப்பிட்டார். "சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களின் பின்னர் மக்களுக்கு உட்கட்டுமான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அபிவிருத்திப் பணிகளிலும் தன்னார்வ விடயங்களிலும் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு செயற்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகிறோம். அந்தப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன" என அவர் மேலும் தெரிவித்தார். http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 545 views
-
-
சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளை விடுதலை செய்யும்போது அவர்களை கண்காட்சிப் பொருட்களாக நடத்துகின்றமை கண்டிக்கத்தக்கது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். நாளையதினம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ள முன்னால் விடுதலைப்புலிப் போராளிகளின் விடுதலை நிகழ்வு குறித்து கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்தொடர்ந்து கூறுகையில்: கடைசியுத்தத்தின் போது சரணடைந்த முன்னால் விடுதலைப்புலிப் போராளிகளை சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு அமைய விடுதலை செய்யவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்தவகையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னால் விடுதலைப்புலிப் போராளிகளை விடுதலை செய்வதை தமிழ் தே…
-
- 0 replies
- 551 views
-
-
சைக்கிள் பெற வந்தோருக்கு கிடைத்தது டோக்கன் மட்டுமே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பங்குபற்றிய சைக்கிள் வழங்கும் நிகழ்வுக்காக அழைத்துவரப்பட்ட மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மக்கள் சைக்கிள்கள் கிடைக்காத நிலையில் "டோக்கனுடன்' மட்டும் திரும்பிச் சென்றனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கடந்த 18 ஆம் திகதி யாழ்.பொது நூலகத்தின் முன்பாக வைத்து இந்திய அரசின் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதற்காக வடமாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் தலா 50 பேர் வீதம் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அரச பேருந்து மூலம் ய…
-
- 2 replies
- 668 views
-
-
தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களிற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடப்பாட்டிலிருந்து விலகிப் போகக் கூடாது அல்லது சமூகத்தின் மத்தியில் காணப்படும் தீவிரவாதப் போக்குக் கொண்ட சக்திகளால் ஊறுவிளைவிக்கும் போதும் கூட தமது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும். இவ்வாறு சென்னையை தளமாகக்கொண்ட 'The Hindu' ஆங்கில நாளேடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடனான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சந்திப்பின் போது, தமிழர…
-
- 2 replies
- 561 views
-
-
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சிக்க வைக்க, தனது பிரச்சாரங்களுக்கு பயனப்படுத்தும் நோக்கில் சிறிலங்கா அரசு எடுத்து முயற்சி பலனளிக்கவில்லை செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் வட தமிழீழத்தில் எஸ்.எம்.கிருஸ்ணா பங்கெடுத்துக் கொண்ட நிகழ்சிகள் த.N.கூட்டமைப்பினர் பங்கெடுக்காதது குறித்து சிறிலங்காவின் பொருளாதார அபிவிரித்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா பங்கெடுத்து ஆரம்பித்த வைத்த வட பகுதி வேலைத்திட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்ளாதது ஏன் என கேள்வியெழுப்பிய அமைச்சர் பசில் ராஜபக்ச இதுதான் இந்தியாவுக்கு அவர்கள் செய்யும்…
-
- 0 replies
- 481 views
-
-
மட்டக்களப்பில் கலைப்பிரிவில் முதலாம் இடம்பெற்ற அகிலா 28DEC 2011ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடத்தைச் சேர்ந்த களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவி செல்வி விஸ்வேஸ்வரன் அகிலா முதலாமிடத்தை பெற்றுள்ளார். மூன்று பாடங்களிலும் (புவியியல், ஜரோப்பிய வரலாறு, தமிழ்) ஏ சித்திகளைப் பெற்று இம்மாணவி மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 15வது இடத்தையும் பெற்றுள்ளார். இம்மாணவி தனது ஆரம்பக் கல்வியை குருக்கள்மடம் கலைவாணி தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர்படிப்பை பட்டிருப்பு தேசிய பாடசாலையிலும் பயின்றுள்ளார். http://muhasabanet.wordpress.com/2011/12/28/%E0%AE%AE…
-
- 8 replies
- 1.1k views
-
-
தமிழ் – முஸ்லீம் முரண்பாடு – எதிரிகளை இனம் காண்போம் : சபா நாவலன் யாழ்ப்பாணத்திலிருந்து இரவோடிரவாக மனித நாகரீகம் அவமானப்படும் வகையில் வெளியேற்றப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் குறித்து இரண்டு தசாப்தங்களின் பின்னர் பேசப்படுகின்ற அரசியலும் அதன் பின்னரான அணி சேர்க்கைகளும் நம் மத்தியில் புரையோடிப் போயிருக்கும் ஆயிரம் அழுக்குகளை உரசிப்பார்க்கும் உரைகல். தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட வேளையில் தமிழ் சமூகத்தின் முன்னணி சக்திகள் மத்தியிலிருந்து திரும்பிப் பார்க்கத்தக்க கண்டனக் குரல்கள் வெளிவரவில்லை. அது குறித்த மௌனம் மட்டும் தான் எஞ்சியிருந்தது. விரல்விட்டு எண்ணத்தக்க கயவர்கள் மட்டும் வெளியேற்றத்தை ஆதரித்திருந்தனர். அவர்களில் டி.பி.எஸ்.ஜெயராஜ…
-
- 2 replies
- 834 views
-
-
விடுதலைப் புலிகளிடம் மாதாந்தம் 30,000 ரூபாவை பெற்ற யாழ். படைத் தளபதி! - பொன்சேகா குற்றச்சாட்டு!! சிறிலங்கா படைத்தரப்பின் யாழ். மாவட்டத் தளபதியாக தற்போது பணியாற்றுபவர் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கொழும்புப் பொறுப்பாளரிடமிருந்து மாதாந்தம் 30,000 ரூபாலை இலஞ்சமாகப் பெற்று வந்ததாக சிறிலங்காவின் முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகா இன்று குற்றம் சுமத்தியுள்ளார். சிறிலங்கா படைத்தரப்பினருக்கான ஆயுத கொள்வனவின் போது, ஹைகோப் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல்கள் தொடர்பிலான வழக்குக்காக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் சரத் பொன்சேகா அழைத்து வரப்பட்டிருந்தார். இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணைகள் முடிந்த பின்னர் ந…
-
- 3 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த சிறிலங்கா அரசாங்கம், அதனை மறைத்து, இந்தப்போரில் சிறிலங்காப் படையினரும், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுமே கொல்லப்பட்டதாக கூறத் தொடங்கியுள்ளது. போரில் உயிரிழந்த குடிமக்கள் பாதுகாப்புப் படையினரின் நினைவாக மிகிந்தலையில் நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூபியை திறந்து வைத்து உரையாற்றியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மனிதாபிமானப் போரில் சிறிலங்காப் படையினரும், சிங்கள முஸ்லிம் பொதுமக்களுமே கொல்லப்பட்டதாக கூறியுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், இந்தப் போரில் கணிசமானளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள நிலையிலேய…
-
- 0 replies
- 425 views
-
-
பயங்கரவாதிகள் அரசியல் கட்சிகளில் இணைந்து செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தளை கொஹொன்வலவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே பாதுகாப்புச் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் வடக்கு கிழக்கில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும், சில பயங்கரவாதிகள் அரசியல் கட்சிகளுடன் இணைந்து நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முனைகின்றார்கள். பயங்கரவாத நடவடிக்கைளில் ஈடுபட்டு காணாமல் போவோர் குறித்து அரசாங்கமோ, இராணுவமோ பொறுப்பு சொல்லாது. சில வெளிநாட்டு நிறுவனங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருகின்றன என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 483 views
-
-
கிருஷ்ணா வந்தான் வெண்ணெய் திருடினான் : கூத்தாட்டம் ஜனாதிபதி பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் போவார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா சொல்லிவிட்டு போய் விட்டார். ஆனால் அவர் நாட்டில் இருந்த அன்றே அரசு கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை நடத்தாமல் புறக்கணித்தது. இதைவிட பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் என்றால் செனற் சபை என்பதுதான் அர்த்தம் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல புதிய கதை சொல்கிறார். இந்நிலையில் இந்தியாவிலிருந்து கண்ணன் வந்து கதை சொன்னான் என தமிழ் மகா ஜனங்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். . பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் செல்ல அரசாங்கம் தயார் என இந்திய வெளிவ…
-
- 6 replies
- 1.3k views
-
-
பயங்கரவாத நடவடிக்கைகளில் காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கமோ அல்லது இராணுவமோ பொறுப்பு கூறாது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். வடக்கு கிழக்கில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதும், பல்வெறு அரசியல் கட்சிகளின் பின்னால் ஒழிந்துகொண்டுள்ள பயங்கரவாதிகள், பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கான விஷத்தைக் கக்கிக்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். அத்துடன், அவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடபட்டு வருவோருக்கான ஆதரவினை சர்வதேச அமைப்புக்கள் வழங்கி வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார். யுத்த காலத்தின் போது உயிரிழந்த மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த 2217 இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உத்தம பூஜா பதக்கங்களை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கி…
-
- 1 reply
- 445 views
-
-
கலாம் மும்மொழி கல்வித் திட்டத்தை துவக்கி வைக்கிறார் இலங்கையில் மும்மொழிக் கல்வித் திட்டத்தை துவக்கி வைக்க முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று கொழும்பு செல்கிறார். இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வரும் அதிபர் ராஜபக்சே, உலக நாடுகளை ஏமாற்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இலங்கையில் மும்மொழி கல்வித் திட்டத்தை ராஜபக்சே அமல்படுத்த உள்ளார். இதற்கான தொடக்க விழா நாளை மாலை கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு, ராஜபக்சேயுடன் சேர்ந்து மும்மொழி கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளார். திங்கட்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் கலாம் அங்கு பல…
-
- 4 replies
- 1.1k views
-
-
நேற்று யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகிய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் தொடக்க நிகழ்வு உட்பட முழுமையான அனைத்துக் காட்சிகளும் thx http://newjaffna.com
-
- 0 replies
- 668 views
-