ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
யாழ் மாநகரசபையால் மேற் கொள்ளப்படும் பொங்கல் பெரும் திருவிழாவை முன்னிட்டு யாழ் முனியப்பர் கோவில் முன்பாக பெண்கள், ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. thx http://newjaffna.com
-
- 1 reply
- 710 views
-
-
ஹெய்டியில் சிறுமிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறிலங்கா படையினர் மீது சிறிலங்கா அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா கூறியுள்ளது. இதுதொடர்பாக நியுயோர்க்கில் கருத்து வெளியிட்ட ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி, “நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஹெய்டியில் அமைதிகாப்புப் படையில் பணியாற்றிய சிறிலங்காப் படையினர் சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மற்றும் பாலியல் ரீதியான சுரண்டலுக்கு உட்படுத்தியது பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டிய முழுப்பொறுப்பும் சிறிலங்கா அரசுக்கே உள்ளது. இது அமைதிகாப்புப் படைக்கு படையினரை அனுப்பும் நாடுகளை சார்ந்த விவகாரம். இது அவர்களின் பிரச்சினை. இது அவர்களின் இறையாண்மைக்குட்பட்ட பொறுப்பு. அவர்களின் …
-
- 8 replies
- 1.1k views
-
-
நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் செயலகத்தில் பணியாற்றும், சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகள் சந்துலவிடம், ஐ.நாவுக்கான சிறிலங்காவின பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தவறாக நடந்து கொள்ள முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நியுயோர்க்கில் உள்ள சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதியின் செயலகத்தில் உள்ள அதிகாரி ஒருவரை ஆதாரம்காட்டி இந்தத் தகவலை ‘லங்கா நியூஸ் வெப்‘ இணையத்தளம் வெளியிட்டுள்ளது. செயலகத்தில் தன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், போராடி அவரது பிடியில் இருந்து தப்பிக் கொண்டதாகவும் அமைச்சர் ரம்புக்வெலவின் மக…
-
- 15 replies
- 2.4k views
-
-
இலங்கைக்கு வாரி இறைக்கும் இந்திய அரசு இலங்கைக்கு வாரி இறைக்கும் இந்திய அரசு தம் மக்களுக்கு கிள்ளிக் கொடுக்கிறது: சீமான் இலங்கையில் சிங்களவர்கள் வாழும் பகுதிகளில் நிறைவேற்றப்படும் புகையிரத திட்டங்களுக்காக ஆயிரகணக்கான கோடி ரூபாய் அளிக்கும் மத்திய அரசு, இந்த நாட்டில் இயற்கை பேரிடரால் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களிற்காக வெறும் 500 கோடியை மட்டும் ஒதுக்கியுள்ளதாக சீமான் குற்றஞ் சுமத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்க உடனடி நிவாரணமாக ரூ. 2000 கோடியை அளித்து, அதனை பொங்கல் திருநõளிற்கு முன்னர் மக்களை சென்றடையும் வகையில் அளித்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று சீமான் கூறியுள்ளார். அவர் விடுத்த அறிக்கையிலேயே இவ்வா…
-
- 1 reply
- 783 views
-
-
சிறிலங்காவிலேயே யாழ்ப்பாண மாவட்டம் தான் வாழ்க்கைச் செலவினம் அதிகமுள்ள மாவட்டமாக சிறிலங்காவின் குடிசன மதிப்புப் புள்ளிவிவரத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள, யாழ்.பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் வி.பி.சிவநாதன், " கொழும்பிலிருந்து தொலைவில் இருப்பதால் யாழ்ப்பாணத்துக்கு பொருட்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவினங்கள் காரணமாக விலைவாசி உயர்ந்து காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பல்பொருள் அங்காடிகளில் குறித்த விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதும், போர்க்காலத்தில் செலவினங்களைக் கட்டுப்படுத்தி வாழ்ந்த யாழ்ப்பாண மக்கள் தற்போது திறக்கப்பட்ட பொருளாதார…
-
- 3 replies
- 854 views
-
-
பேச்சை நிறுத்துவது உடன்பாட்டு மீறல்தெரிவுக்குழு தொடர்பான கூட்டமைப்பின் முடிவில் மாற்றமில்லை என்கிறார் சுமந்திரன் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குப் பெயர்களைக் கூட்டமைப்பு தரும்வரை தீர்வுப் பேச்சுகளைத் தொடர்வதில்லையென்று அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிர்ச்சியும், கவலையும் வெளியிட்டுள்ளது. "இப்படியான உறுதியான தீர்மானமொன்றை அமைச்சரவை எடுத்திருக்குமாயின், தீர்வுப் பேச்சுகளைத் தொடர்வதற்கு அரசானது தமிழ்க் கூட்டமைப்புடன் செய்துகொண்ட உடன்பாட்டையே மீறும் செயல்" அதுவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலு…
-
- 3 replies
- 788 views
-
-
யாழ்.குடாநாட்டின் நெடுந்தீவுப்பகுதியில் இலங்கை அரசு ஜந்து நட்சத்திர விடுதியொன்றினை கட்டத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாதம் யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இவ்விடுதிக்கான அடிக்கல்லை நாட்டி வைக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கூடிய விகிதாசாரப்படி தனக்கு தமிழ் மக்களது வாக்கு நெடுந்தீவிலேயே வீழ்ந்திருந்ததாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அடிக்கடி கூறிவருவது அனைவரும் அறிந்ததே. தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டைய விட நெடுந்தீவிலேயே கூடிய அளவில் விகிதாசாரப்படி வாக்குகள் வீழ்ந்ததென அவர் கூறிவருகின்றார். இந்நிலையில் நெடுந்தீவினை சின்ன சிங்கப்பூராக்கப் போவதாகவும் பேசியும் வருகின்றார். சீன நிதி உதவியுடன் நெடுந்தீவில் கார்ப்…
-
- 26 replies
- 1.7k views
-
-
ரொறன்டோ ஸ்காபுரோ நகரில் இரவிரவாக ஒன்றரை மணி நேரத்திற்குள் 9 Tim Hortans உணவு நிலையத்தில் இரண்டு தமிழ் இளஞர்கள் வங்கி மெஷின்களை கொள்ளையடித்துள்ளனர். இரவிரவாக கிடைத்த தகவலையடுத்து உசாரடைந்த இரகசிய பொலிசார் நகரின் பல Tim Hortons களில் பதுங்கியிருந்து இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறம்ரன் நகரைச் சேர்ந்த பிறைXXX - XXXXXXX - வயது 20, ரொறொன்ரோவைச் சேர்ந்த ஜேய்XXX - XXXXXXX - வயது 20. ஆகியோர் மீது 48 கொள்ளைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மார்க்கம் வீதி ,கிங்க்ஸ்ரன் வீதியிலுள்ள Tim Hortans உணவு நிலையத்தில் இவர்கள் கோப்பிக்கு ஓடர் கொடுத்துவிட்டு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்துவது போன்று நடித்து வங்கி மெஷினை காருக்குள் இருந்…
-
- 46 replies
- 4k views
-
-
ஆயுதப் பேராட்டத்தைவிட மக்கள் எழுச்சியானது மக்களுக்கு வெற்றிகரமான வழியாகும்: ஜே.வி.பி. ஆயுதப் போராட்டத்தைவிட பொதுமக்கள் எழுச்சியானது மக்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடிய வழியாக அமையும் என ஜே.வி.பி. இன்று கூறியுள்ளது. ஆயுதப் போராட்டத்திற்கூடாக அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு இலங்கையில் வழி இல்லை என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ கூறி சில நாட்களின்பின் ஜே.வி.பி. இவ்வாறு கூறியுள்ளது. சிறிய மூளை கொண்டவர்கள்கூட இத்தருணத்தில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஆயுதப்போராட்டம் நடத்துவதற்கு யோசிக்க மாட்டார்கள் என இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கூறினார். 'சர்வாதிகார ஆட்சிகளை மக்கள் எழுச்சிகளும் வீதிப் போரா…
-
- 2 replies
- 513 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் யாழ் பல்கலைக்கழத்தில் உள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறியபோது, முதல் வருட மாணவர்கள் கூச்சலிட ஆரம்பித்தாக பல்கலைக்கழக மாணவர் உரிமை செயற்பாட்டாளரான உதுல் பிரேமரட்ன கூறினார். அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் என முத்திரைக்குத்த முற்படுவதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் நாம் இலங்கையர் அமைப்பை நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான உதுல் பிரேமரட்ன கூறினார். ‘ஒருவரை எல்.ரி.ரி.ஈ. செயற்பாட்டாளர் என முத்திரைகுத்திவிட்டால் அவரின் உரிமைகளை அரசாங்கம் நசுக்குவது சுலபமாகும். அரசாங்கம் எம்மை பயங்கரவாதிகள் எனவும் விமர்சிக்கிறது’ என அவர் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கழகத்த…
-
- 0 replies
- 897 views
-
-
புலம்பெயர் தமிழர்களின் சவால்களை எதிர்நோக்கத் தயார் என்று பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். "இலங்கை தேசியப் பாதுகாப்பின் எதிர்கால சவால்கள்" என்ற தொனிப்பொருளில், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பாதுகாப்புச் செயலாளர் விசேட உரையாற்றிய போதே இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த ஒஸாமா பின்லேடனை கொலை செய்ய வேண்டுமென அந்த நாடு கருதியது. அதேபோன்று இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த வேலுபிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை முறியடித்தமை …
-
- 0 replies
- 801 views
-
-
பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை மாற்றுவதற்கு LLRC அறிக்கை போதுமானதல்ல! - கனடா 2013ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரசியல் தலைவர்களின் மாநாட்டைப் புறக்கணிப்பது என்ற கனடாவின் தீர்மானத்தை மாற்றிக் கொள்ள மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் காத்திரமான முன்னெடுப்புகள் அவசியம் என கனேடியப் பிரதமர் Stephen Harperரின் பேச்சாளர் Andrew MacDougall தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் வகையில் பரிந்துரைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என அவர் குற்றம் சும…
-
- 3 replies
- 624 views
-
-
மே 18இன் பின்னரான சவால்களும் வாய்ப்புகளும் [img முள்ளி வாய்க்காலில் இனப்படுகொலை நடைபெற்று இரண்டு வருடங்களாகின்றன. அந்கப்படுகொலை தந்த அதிர்ச்சியிலிருந்து தாயகத் தமிழ் மக்கள் மட்டுமல்ல உலகத்தமிழ் மக்களே இன்னும் விடுபடவில்லை. படுகொலையில் இருந்து தப்பியவர்கள், காயமடைந்தவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவேயில்லை. மீள்வதற்குரிய பணிகளும் சீராகக் கட்டியெழுப்பப்படவில்லை. போர் அவலத்தைச் சுமந்த மக்கள் இன்று போரின் பின்னரான அவலத்தையும் சுமக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் ஒரு அரசியல் சமூகமாக வாழ அனுமதிக்கப் படாததினால் இயல்புநிலைக்குக் கொண்டுவரும் பணிகளைச் சக தமிழர்களாலும் மேற்கொள்ள முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை. தம…
-
- 1 reply
- 700 views
-
-
இலங்கையும் ஊடகப் பண்பாடும் இலங்கையில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகள் தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இதுவரையான வன்முறை அனுபவங்கள் ஊடகத் தொழிற்பாடுகளில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இதனால் அவரவர் சுயதணிக்கைக்கு உட்பட்டு இயங்கும் மனோ பாவத்தை வளர்த்துள்ளன. அப்படி முடியாதவர்கள் ஊடகத் துறையை விட்டு வெளியேறி அல்லது நாட்டைவிட்டு வெளியேறும் அவலம் பொது நடைமுறையாக மாற்றமுற்று வளர்ந்துள்ளன. இலங்கையில் 1990ஆம் ஆண்டு ஐ. தே. கட்சி ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி சொய்ஸா முதல் 2009ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சசிமதன் வரை 41 ஊடகவியலாளர்கள் வன்முறைகளினால் தமது உயிரை இழந்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட இந்த 41 ஊடகவியலாளர்களில் 36 …
-
- 1 reply
- 734 views
-
-
இலங்கையின் இன்றைய பிரச்சனைகள் - இந்தியாவில் இருக்கும் களச் செயல்பாட்டாளர்களுடன் ஓர் உரையாடல் பல நேரங்களில் இலங்கை சம்பந்தப்பட்ட விவாதங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவையாகப் பிரித்துப் பேசப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் நமக்கு முழுமையான புரிதல் இருப்பதில்லை. இலங்கை சம்பந்தப்பட நிலைப்பாடுகளில் பல பிரச்சனைகள் வருவதற்கும் இதுவே காரணம். நமக்குத் தேவை தற்கால நிகழ்வுகள் பற்றிய முழுமையான புரிதல் மட்டுமல்ல, கடந்த காலம் பற்றியான புரிதலும் தான். இந்த முழுமையான புரிதல், அந்தத் தளத்தில் தொடர்ந்த செயல்பாடுகளையும், தகவல் சேகரிப்பையும் அடிப்படையாகக் கொண்டு கவனத்துடனும், உண்மையுடன் இருக்க வேண்டும். உலகத்தில் உள்ள பல விஷயங்களை போன்று இலங்கையைப் பொறுத்தவரையிலும் மேலே கூறப்…
-
- 1 reply
- 628 views
-
-
-
- 22 replies
- 4.8k views
-
-
சிறு வயதில் இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்றவர்கள் அல்லது இந்திய முகாங்களில் பிறந்த பிள்ளைகளுக்கு நாடொன்றிற்கு திரும்பி வந்ததென்பது சவால் மிக்க விடயமாக உள்ளது. இவ்வாறு IRIN இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, முன்னர் யுத்தம் இடம்பெற்ற சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்திற்கு மீளத் திரும்பி வந்த தங்கம்மாவிற்கு [பெயர் மாற்றப்பட்டுள்ளது] அது ஒன்றும் குறுகிய பயணமாக அமைந்துவிடவில்லை. "இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு இருபதாண்டுகளாக நான் காத்திருந்தேன்" என அவர் கூறுகிறார். தென்னிந்திய மாநிலமான…
-
- 1 reply
- 588 views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா-இந்துத்துவ உணர்வோடு தமிழ்ப் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றினாலும் தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே என்பதை ஆணித்தரமாக விளக்கும் கட்டுரை இது. கட்டுரை ஆசிரியர் ‘சோதிடப் புரட்டு’ நூலை எழுதிய கனடா வாழ் சிந்தனையாளர் நக்கீரன். பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது அவற்றைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்ள மாட்டான். இந்த அறுபது ஆண்டுகளை கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் புராணிகர்கள் உருவாக்கி விட்டார்கள். நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்…
-
- 5 replies
- 2.6k views
-
-
1984-இல்இலங்கை திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள தென்னமரவாடி என்ற பசுமை நிறைந்த தமிழ் கிராமம். சிங்கள வெறியர்களால் சூறையாடப்படுகிறது. அந்த கிராம அழிவிலிருந்து ஒரு ஈழ விருட்சம் வீரமாய் துளிர்விடுகிறது.. அதன் போராட்டக் கதை 2009 முள்ளிவாய்க்கால் வரை தொடர்கிறது.. முடிவே வரலாறு….. இல்லை அது முடியாத வரலாறு என தேன் கூடு திரைப்படம் திசைக்காட்டுகிறது இலங்கை வரைபடத்திலிருந்து அழிக்கப்பட் ட ஒரு தமிழீழக்கிராமத்தை தேன்கூடு திரைப்படத்தில்..மீண்டும் வரைந்து வரலாறாக்கியிருக்கிறது.. மனிதர்கள் மடியலாம்.. மண் மடியாது! தமிழீழ மக்கள் மண்ணை விட்டுதான் போகிறார்கள்.. மண் அவர்களை விட்டுப்போகாது.. ஆண்ட தமிழினம் மீண்டும் ஆளும்… தமிழீழத்திற்காக நம்பிக்கையையும், தமிழ்நாட்டுக்கு ஓர…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் போர்க் குற்றங்கள் - அய். நா. அவையின் வல்லுநர் குழு அறிக்கை குறித்த உரையாடல் இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஆயுதப் போர், 2009 மே 18 அன்று முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்த ஒரு வாரத்திற்குள் 2009 மே 23 அன்று, அய். நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கைக்குச் சென்றார். இலங்கை அரசு விமானத்தில் போர்ப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். பின்னர் இலங்கை அரசு அழைத்துச் சென்ற ஒரு 'மாதிரி முகாமை’ எட்டிப் பார்த்தார். கொழும்பு திரும்பி, இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கையில், இலங்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்து பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகளைப் பான் கி மூன் வலியுறுத்தினார். இலங்கை அரசு அதற்கான முயற்சிகளை…
-
- 0 replies
- 638 views
-
-
கனடாவில் ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள மார்க்கம் நகர சபையும், பிக்கரிங் நகர சபையும், தமிழர் திருநாளாம் தைத்திருநாளை தமிழர் மரபுரிமை நாளாக அங்கீகரித்துள்ளதோடு ஜனவரி 13,14,15ம் நாட்களில் தமிழர் மரபினை எடுத்தியம்பும் தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளை முன்னெடுப்பதையிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கல்வி, கலாச்சார மற்றும் உடல்நலத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காலம் என்பது மாறாத அசைவு வேகத்தைக் கொண்டு அளவிடப்படுவது.நாம் வாழும் பூமியானது தன்னைத் தானே சுற்றி வருகிறது. அது ஒரு முழுச் சுற்றுச் சுற்ற எடுக்கும் காலத்தை ஒரு நாள் என்று அனைத்து மக்களும் எடுத்துக் கொள்கின்றனர…
-
- 4 replies
- 776 views
-
-
யாழ் மாநகர சபையின் பொங்கல் விழாவை ஒட்டிய நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின. thx
-
- 0 replies
- 818 views
-
-
தமிழ் மக்களின் குறைகளை இலங்கையில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தீர்க்க தவறியமையே இனப் பிரச்சினை ஏற்பட மூல காரணம் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கையினால் வெளியிடப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த யுத்தத்தின் போது அரச தரப்பினாலும் விடுதலைப் புலிகளாலும் மனித உரிமைகள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இறுதியாக 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அவ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன எனவும் இதன் போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கைய…
-
- 2 replies
- 563 views
-
-
தலைமன்னார் மதவாச்சி இடையே ரயில் சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் உதவியுடனேயே இது இடம்பெறவுள்ளது.ரயில் சேவையை ஆரம்பிக்கும் பொருட்டு அப்பகுதிக்கான ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகளை முன்னெடுக்குமாறு அரசு ரயில்வே திணைக்களத்தைப் பணித்துள்ளது. இதனையடுத்து அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரயில்பாதையைப் புதிதாக அமைப்பதற்கு வசதியாக அதனைத் துப்பரவு செய்யும் பணிகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார். மதவாச்சியிலிருந்து செட்டிகுளம், மடு, மன்னார், தலைமன்னார் ஆகிய பகுதி கள் ஊடாகச் செல்லும் ரயில் பாதையை இந்த ஆண் டின் இறுதிக்குள் புனரமைத்து ரயில் சேவையை ஆரம்பிப்பதற்க…
-
- 0 replies
- 315 views
-
-
2012ம் ஆண்டின் ஆரம்ப நாட்களில் யாழ்ப்பாண நகரத்தின் காட்சிகளின் தொகுப்பு thx http://newjaffna.com
-
- 0 replies
- 780 views
-