ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
குண்டு வெடிப்பில் அறுவர் படுகாயம் _ வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணியமடு பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோஹண தெரிவித்தார். புளியங்குளம் மணியமடு பிரதேசத்தில் நேற்று மாலை 5 மணியளவில் சின்னப்பரந்தன் ஓயாவிற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டொன்றை பரீட்சித்து பார்க்க முற்பட்ட வேளையிலேயே அறுவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அப்பகுதியில் பாலம் ஒன்றின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்தோர் எனவும் அவர் தெரிவித்தார். வீட்டு வளாகத்திலோ அல்லது பொது இடங்களிலோ எங்காயிருந்தாலும் சந்தேகத்திற்கிடமான அல்லது மர்மப் பொருள்கள் காணப்பட்…
-
- 0 replies
- 651 views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தெரிவுக்குழுவே இறுதி முடிபு எடுக்கும் என அரச தரப்பால் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் இதுகாறும் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டியதில்லை. அதே சமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வை தெரிவுக்குழுவே தீர்மானித்துக் கொள்ளும் எனவும் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு தேவையெனவும் சிறீலங்கா ஜனாதிபதியால் கூறப்படுகின்றது. வன்னிப் போரை நடத்திய அரசு போரை ஆரம்பிப்பதற்கு முன்னதாக தெரிவுக்குழு ஒன்றை நியமித்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரைத் தொடர்வதா? அவ்வாறு போரைத் தொடர்ந்தால் வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழ்கின்ற மக்களின் நிலைமை எப்படி அமையும்? என்றெல்லாம் ஆராய்திருந்தால், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரித்தானியாவில் இருந்து இயங்கும் சனல் 4தொலைகாட்சி ஈழ தமிழர்களின்விடியலுக்காக தன்னை அர்ப்பணித்து அயராதுஉழைத்து வருகின்றது . பலர் அந்த தொலைகாட்சிக்காக பல போர்குற்ற ஆவணம்களை அளித்து வருவதுடன் தாம்சந்தித்த இன்னல்களையும் எடுத்தியம்பி வருகின்றனர் .ஆனால் இந்தியாவை மையமாக வைத்து பலமுதுநிலை படைய போராளிகள் மறைந்து வாழ்வது தெரிந்ததே ..இலங்கை இராணுவத்தினால்பதிக்க பட்ட பல நூறு தமிழர்களும் அங்கே வாழ்கின்றனர் . இவர்களை கைது செய்யும் முகமாக சனல் 4தொலைக்சாட்சி செய்தியாளர்கள் தாமென கோரிசெவ்வி கண்டுள்ளனர் புதிய மர்ம கும்பல் ஒன்று . இந்த புதிய முகமூடி தமிழர் கும்பலை நம்பி அவர்களும் செவ்வி அளித்துள்ளனர் .இதனை மேப்பம் பிடித்த அந்த நாட்டு உளவு படை அவர்களை மடக்கி பிடித்துள்ளது . …
-
- 5 replies
- 1.9k views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் இவ்வித பிரயோசனமும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குமாறு அவர்கள் கோருவதாகவும் அவ்வாறு வழங்க அரசாங்கம் ஒருபோதும் இணங்காது எனவும் அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார். இருந்தபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு கோருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் அவற்றை வழங்க முன்வராது என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவது காலத்தை கடத்தும் செயல் என கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார். இந்தியாவை எடு…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்.மாநகரசபையின் ஈபிடிபி அங்கத்தவரான மனுவல் மங்கள நேசன் இன்று மாலை இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்துள்ளார். இன்று மாலை யாழ்.நகரின் நாவலர் வீதி மற்றும் கஸ்தூரியார் வீதி சந்திக்கும் சந்திப்பகுதியினில் வைத்து அவர் தாக்கப்பட்டுள்ளார். மூன்று மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து வந்த கும்பலொன்றே தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. காயமடைந்த மனுவல் மங்கள நேசன் வீதியால் பயணித்த சிலரால் மீட்கப்பட்டு யாழ்..போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மைக்காலமாக தான் சார்ந்த கட்சியுடன் முரண்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.globaltam...IN/article.aspx
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐ.நாவில் சிறிலங்கா அரசாங்கம் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக கடந்த காலத்திலும், தற்போதும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளிற்கு இந்தியா தனது ஆதரவை வழங்கவில்லை. இவ்வாறு அமெரிக்க பொஸ்டன் நகரை தளமாகக்கொண்ட GlobalPost ஊடகத்தில் Jason Overdorf எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவிற்குள் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணை அறிக்கை பூசி மெழுகப்பட்ட ஒன்று என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்ப் பிரிவினைவாதிகளிற்கு எதிராக 25 ஆண்டு காலமாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் இ…
-
- 1 reply
- 991 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விடுதியை இராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். பல்கலைக் கழகத்தின் பாலசிங்கம் ஆண்கள் விடுதியின் இருமருங்கிலும் தரித்து நின்று வீதியால் செல்பவர்களை இராணுவத்தினர் சோதனை செய்தனர். இந்தச் சம்பவம் இன்றைய தினம் மாலை ஏழு மணியிலிருந்து இடம்பெற்றுள்ளது. வழமைக்கு மாறாக இன்றைய தினம் மாலை இராணுவத்தினர் ரோந்தின் பொழுது விடுதியின் சூழலில் தரித்து நின்று சோதனையில் ஈடுபட்டனர். யாழ் பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் விதமாகவே இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பொழுது மாணவர்களும் வீதியால் சென்ற மக்களும் தடுத்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். http://www.globaltam...IN/article.aspx
-
- 0 replies
- 662 views
-
-
நாட்டில் யுத்தம் முடிந்த பின்னரும் 60,000படைச்சிப்பாய்கள் தப்பி ஓடியுள்ளனர்.தங்களுக்கு ஏற்படத்தப்பட்டிருக்கும் அவமானங்களை சகித்துக்கொள்ள முடியாமலே அவர்கள் ஓடுகின்றனர்.நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய படைச் சிப்பாய்கள் இன்று மலசலகூடம், வாய்க்கால்கள் துப்பரவு செய்யவும், புல்லு நடவும், பாதை வெட்டவும் கூலிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இது படையினருக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் அவமானமாகும்- என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் குற்றஞ் சாட்டினார். பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஓதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த அரசின் இணையத்த…
-
- 0 replies
- 795 views
-
-
தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் தவிர்ப்பு; நெருக்கடி ஆய்வுக்கான அனைத்துலகக் குழு தெரிவிப்பு இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை யில் தவிர்க்கப்பட்டுள்ளதாக "நெருக்கடி ஆய்வுக்கான அனைத்துலகக் குழு' தெரி வித்துள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் பெண்களின் பாதுகாப்பின்மை என்ற தலைப்பில் அந்த குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பெண்கள், நீண்ட காலமாகத் தொடரப்பட்ட யுத்தம் நிறைவடைந்த பின்னர் நிலவும் தற்போதைய சூழலிலும் பாதுகா…
-
- 0 replies
- 776 views
-
-
ஏற்கனவே நீங்கள் செய்யவில்லை எனில், பின்வரும் இணைப்பில் அழுத்திமின் மனு மேலே கையெழுத்திடுங்கள்..http://epetitions.direct.gov.uk/petitions/14586 அத்துடன் நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த இணைப்பை முன்னோக்கி அனுப்ப முடியுமாயின் நாம் நன்றி உடையவர்களாக இருப்போம். உங்கள் தகவலுக்கு, மனுவில் கையெழுத்து இடுப்பவர் பிரித்தானிய குடிமகனாக அல்லது பிரித்தானியாவில் வாழ்பவராக இருக்க வேண்டும் . இந்த மனுவில் கையொப்பம் இட வயது எல்லை கிடையாது. நீங்கள் மின் மனு வலைத்தளத்தில் ஒரு மின் மனுவில் கையெழுத்திடும் போது உங்கள் கையொப்பங்கள் உண்மையானதா என சோதிக்க உங்கள் பெயர், முகவரி மற்றும் மின்னஞ்சல் அளிக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் இந்த நோக்கத்த…
-
- 1 reply
- 953 views
-
-
குடும்பப் பெண்ணொருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் லெப்டினன்ட் தரத்தைச் சேர்ந்த இராணுவ வீர்ர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளைப் பிரதேசத்தைச் சோந்த 34 வயதான குடும்பப் பெண்ணையே 24 வயதான இராணுவ வீர்ர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். நேற்று அதிகாலை குறிப்பிட்ட இராணுவ லெப்டினன்ட் சொந்த ஊரான காலியிலிருந்து கொழும்பு வந்து கொண்டிருந்தபோது பேருவளை பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கு தனிமையில் இருந்த பெண்னை அச்சுறுத்தி அவரைப் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பெண்ணின் அபயக் குரலையடுத்து அங்கு விரைந்த ஊரவர்களையும் பொலிஸாரையும் கண்ட சந்தேக நபர், கடலில் பாய்ந்து தப்ப முயற்சித்த போத…
-
- 0 replies
- 1.3k views
-
-
மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் அரசு ஒரு தீர்வை முன்வைக்க விரும்புமானால் அப்படியானதொரு தீர்வு தமிழ் மக்களுக்குத் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது எனவும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை எனவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்து ´அத தெரண தமிழிணையம்´ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வினவியது, இதற்கு பதிலளித்த கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், காணி, பொலிஸ் அதிகாரங்கள் அற்று பேச்சுவார்த்தை நடத்துவதானால் அது பயனளிக்காது. காணி மற்றும் பொலிஸ் அதிகா…
-
- 0 replies
- 643 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக அரசாங்கத்துடன் இணைந்து அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை நேற்று பாராளுமன்ற கட்டிடத்தில் சந்தித்து சுமார் இரண்டு மணிநேரம் நடத்திய கலந்துரையாடலின் போது அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நடந்து கொள்ளும் போக்கை புலிகளுடன் ஒப்பிட்டு பார்க்குமிடத்து இவ்வமைப்பு புலிகளை விட மோசமான முறையில் நடந்து கொள்கின்றது என்றே நான் நினைக்கின்றேன் என்றார் பசில் ராஜபக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவிற்கு நான் போக முடியாமல் உள்ளது. இலண்டனிற்கும் தான் நான் மட்டுமல்ல எனது மகனும் போக முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் பொன்சேகா என்னைப்பற்றி கூறிய வெள்ளைக்கொடி சம்பவமே என்று பொரிந்து தள்ளியுள்ளார் கோத்தாபாய. இத்தாலியில் இருந்து ஒரு பொன்சேகா ஆதரவு சிங்கள புத்திஜீவி ஒருவர் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார். பொன்சேகாவிற்கு மூன்றுவருட சிறை நியாயமற்றது எனவும் கூறியுள்ளார். இதன் போது ஆட்திரமடைந்த கோத்தாபாயா உங்களைப்போல் நான் மின்னஞ்சல் மூலம் போர் செய்பவன் அல்ல நான் களத்தில் நின்று போராடினேன் விடுதலைப்புலிகளை ஒழித்தேன் அப்படிப்பட்ட நான் இன்று வெளி நாடுகளுக்கு போகமுடியாது செய்துவிட்டார் பொன்சேகா அவருக்கு மூன்று வருடமல்ல 10 வருடம் சிறையில் போட்டிருக்…
-
- 0 replies
- 773 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் பிழையான கருத்துக்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் சில நிறுவனங்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. இவ்வாறு போலியான தகவல்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார். சில நிறுவனங்கள் பொய்யான தகவல்களை சர்வதேச அமைப்புக்களுக்கு வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். போலியான தகவல்களை வழங்கி வரும் மனித உரிமை நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் வ…
-
- 0 replies
- 498 views
-
-
முதலில் இங்கிணைக்கப்பட்டுள்ள காணொளியை பாருங்கள்.. http://youtu.be/6Hd1QyvKM1o சிறீரங்கவின் பேச்சு ஏதோ தமிழ் மக்கள் மீது அக்கரையுள்ளதாகவும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும் சுமந்திரன் போன்றோர் அரசியல் தீர்வு பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள தமிழ் உணர்வாளர்கள் அனுமதிக்கக் கூடாது போன்ற ஒரு மாபெரும் விம்பத்தை பாராளுமன்றத்தில் உருவாக்கிறது. உண்மையில் மகிந்த மாத்தயா வீட்டு குசினிவரைக்கும் சிறீரங்கா போய்வரும் விசயம் சிலபேருக்குதான் தெரியும். ஒரு வகையில் டகிளஸ் தேவனந்தா போன்றவர்களின் அரசியல் வெளிப்படையானது. அவரது அரசியல் தென்னிலங்கையில் ஆளும் அரசாங்கத்திடன் 'ஒட்டி' செய்யும் வழிப்பாட்டு அரசியல். டக்கிளஸுடன் ஒப்பிடும்போது, உண்மையில் சிறீர…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஒரு இராணுவ முகாமைக்கூட நீக்கும் உத்தேசம் இல்லை: ஜனாதிபதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இராணுவ முகாம்களை நீக்குமாறு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுக்கின்ற போதிலும், ஒரு இராணுவ முகாம் கூட நீக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் வைத்து கூறினார். http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/33066-2011-12-21-13-43-01.html
-
- 1 reply
- 798 views
-
-
ஆடும் வரை ஆடட்டும் ஆட்டம் முடியும்போது... இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தெரிவுக்குழுவே இறுதி முடிபு எடுக்கும் என அரச தரப்பால் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் இதுகாறும் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டியதில்லை. அதே சமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வை தெரிவுக்குழுவே தீர்மானித்துக் கொள்ளும் எனவும் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு தேவையயனவும் ஜனாதிபதியால் கூறப்படுகின்றது. வன்னிப் போரை நடத்திய அரசு போரை ஆரம்பிப்பதற்கு முன்னதாக தெரிவுக்குழு ஒன்றை நியமித்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரைத் தொடர்வதா? அவ்வாறு போரைத் தொடர்ந்தால் வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழ்கின்ற மக்களின் நிலைமை எப்படி அமையும்? என்றெல்லாம் ஆரா…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை பெண்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகக் குற்றச்சாட்டு இலங்கை : தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு, கிழக்கில் உள்ள பெண்கள் பாரிய பாதுகாப்பு நெருக்கடிக் குள்ளாகியுள்ளதாக சர்வதேச நெருக்கடிக் குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர் முடிவடைந்துள்ள காலப்பகுதியிலிருந்து இன்றுவரை பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையிலும் உரிய நிவாரணம் எதுவும் இல்லாத பரிதாப நிலைமையே தற்போது காணப்படுகின்றது. பெண்களுக்கு பொருளாதார ரீதியில் பாதுகாப்புப் போதுமானதாக இல்லாத அதேவேளை அவர்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இருக்கின்றது. வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகளவு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலை காணப்படுவதுடன் படைகளில் ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
சுமந்திரனிடம் செவிப்பறை வெடிக்க வாங்கிக்கட்டினார் யோகேஸ்வரன். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனுக்கு தேசியப் பட்டியல் எம்பி செவிப்பறை வெடிக்க அடித்தாரா? தலையங்கம் சற்றுச் சங்கடமாகத்தான் இருக்கும், ஆனால் செவிப்பறை வெடிக்க கையால் அல்ல சொல்லாலும் செயலாலும் குடுத்திருக்கின்றார் சுமந்திரன் யோகேஸ்வரனுக்கு. இன்ரர்நெஷ்னல் அலேட் என்கின்ற அமைப்பினால் 40 வயதுக்கு உட்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உரிமைகள், மக்கள் தொடர்பாடல், முகாமைத்துவம், பல்லினச்சமூகங்களுடனான உறவைபேணுதல் போன்ற விடயங்களில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு தம் ஆற்றலை வழர்த்துக்கொள்வது …
-
- 5 replies
- 2.3k views
-
-
இலங்கைப் படையினர் மீதான பாரதூர குற்றச்சாட்டுகள் குறித்து ஆணைக்குழு போதிய கவனம் செலுத்தவில்லை: கனடா இலங்கைப் படையினரின் சில சக்திகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாரதூரமான குற்றச்சாட்டுகள் குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் போதியளவு கவனம் செலுத்தப்படவில்லை என கனடா தெரிவித்துள்ளது. இவ்வாணைக்குழுவின் அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த கனடா, ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இலங்கைக்கான கணேடிய உயர் ஸ்தானிகர் புரூஸ் லெவி தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்கு கூறுகையில், டிசெம்பர் 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க…
-
- 1 reply
- 936 views
-
-
த. தே கூ வினுள் இடம்பெறும் பனிப்போரில் நாம் நடுநிலை வகிப்போம். சித்தார்த்தன். புளொட்டினுள் சில்லறைகள் கிடையாது என்றும் கூறுகின்றார்! தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தலைமைப் பதவிக்காக முன்னாள் ஆயுததாரிகட்கும், ஆயுதம் தாங்காதோருக்குமிடையே பனிப்போர் ஒன்று இடம்பெற்றுவருகின்றது. இந்நிலைமைகள் தொடர்பாக அக்கூட்டமைப்பின் பங்காளியாக தம்மை அண்மையில் இணைத்துக்கொண்டுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன்அவர்களிடம் இலங்கைநெற் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டது. கேள்வி - நீங்கள் இப்போது முற்றுமுழுதாக தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து விட்டீர்களா? பதில் - எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் முற்றுமுழுதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றோம். கே…
-
- 5 replies
- 1.4k views
-
-
மண்டைதீவுப் பகுதி சிறிலங்காக் கடற்படைத்தளத்தில் இருந்து ஏவப்பட்ட எறிகணையே வேலணைப் பகுதியில் நேற்று மாலை வீழ்ந்து வெடித்துள்ளது. இன்று காலை எறிகணை வீழ்ந்த வீட்டுக்குச் சென்ற இராணுவத்தினரும், கடற்படையினரும் இந்த உண்மையை ஒத்துக் கொண்டுள்ளனர். நேற்று மாலை வேலணை 7ம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் மர்மப் பொருள் ஒன்று வீழ்ந்ததில் பெரிய குழி ஒன்று உருவாகியிருந்தது. இது குறித்து ஊர்காவற்றுறைப் காவற்றுறையினருக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு சென்ற காவற்றுறையினர் அதனுள் ஆபத்தான வெடிபொருள் இருக்கலாம் எனவும், அந்தக் குழி அருகே செல்ல வேண்டாம் எனவும், இன்று காலை அதை வந்து மீட்பதாகவும் கூறி சென்றனர். இந்த நிலையில் இன்று காலை குறித்த வீட்டுக்கு இராணுவத்தினரும், கடற்படையினரும் செ…
-
- 0 replies
- 845 views
-
-
இலங்கையில் பல வருடங்களாக நடைபெற்ற யுத்தம் பல உயிரிழப்புக்கள் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் யுத்தம் முடிந்து நல்லதொரு எதிர்காலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர வேண்டும் என்பதையே ஜேர்மன் விரும்புகின்றது என இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் எச்.இ.ஜென்ஸ் புளோட்னர் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று (21) இடம்பெற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சி ஊடாக சமாதானத்தை கட்டியெழுப்புதல் செயற்றிட்டத்தின் கீழ் பயிற்சிபெற்ற ஒரு தொகுதி இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜேர்மன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நடைபெற்றுவருகின்ற இச்செயற்றிட்டத்தின் கீழ் யுத்தம் மற்றும் சு…
-
- 1 reply
- 872 views
-
-
2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக 98 வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் பெறப்பட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துள்ள அனைத்து கூட்டு கட்சிகளும் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், ஐதேக, ததேகூ, ஜதேகூ என்பன திட்டத்திற்கு எதிராக வாக்களித்தன. http://www.saritham.com/?p=44797
-
- 0 replies
- 521 views
-