Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசாங்கம் மத ரீதியாக புறக்கணிப்புக்களை மேற்கொள்வதாக கூறி கருதினால் மல்கம் ரஞ்சித் விழா புறக்கணிப்பு போராட்டத்தினை தொடங்கியுள்ளார். இதனால் இம்முறை நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் எந்த ஒரு அரச நிகழ்விலும் பங்குகொள்ளமாட்டார். மொரட்டுவ ராவணாவத்தை சிறுவர் இல்ல சம்பவம் தொடர்பில் நியாயம் கிடைக்கும்வரை தனது இந்த முடிவு அமுலில் இருக்கும் என அவர் அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். . அன்னை தெரெசாவினால் அமைக்கப்பட்ட மிசனெரி ஒவ் செரிட் என்ற பெயருடைய நிறுவனம் உலகம் முழுவதும் பல சிறந்த சேவைகளை புரிந்துள்ளதாகவும் அதேபோன்றதொரு சேவையையே மொரட்டுவ மிசனெரியும் செய்ததாக ஆண்டனை கருதினால் மலெ்கம் ர…

  2. முறிவடைந்தது கூட்டமைப்பு - அரசு பேச்சுவார்த்தை _ வீரகேசரி இணையம் 12/3/2011 தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் சுமார் ஒரு வருட காலமாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இன்று முறிவடைந்துள்ளது. அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்குமிடையில் 15 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றபோது, பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நியமிக்கக் கூடிய தமிழத்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பெயர்களை முன்வைக்குமாறு அரசதரப்பில் வலியுறுத்தப்பட்டதையடுத்தே பேச்சுவார்த்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றக் கட…

  3. மும்பையில் இடம்பெற்ற 26/11 பாணி தாக்குதல்களை தவிர்க்கும் முகமாக, 80 இடைமறிப்பு படகுகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு இந்திய கடற்படை தீர்மானித்துள்ளது. இதற்காக இலங்கை கப்பல்கட்டும் நிறுவனமொன்றுடன் இந்திய கடற்படை ஒப்பந்தம் செய்துள்ளது. இக்கலங்களை இணைப்பதுடன், 26/11 தாக்குதல்களின் பின்னர் கரையோர பாதுகாப்புக்கான கடற்படைக் கலங்கள் பயன்பாட்டில் 70 சதவீத அதிகரிப்பும் வான்கலங்களின் பயன்பாட்டில் 100 சதவீத அதிகரிப்பும் ஏற்படும் என இந்திய கடற்படை தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா கூறியுள்ளார். இந்த அதிவேக இடைமறிப்புப் படகுகள் மணித்தியாலத்திற்கு 50 கடல்மைல் வேகத்தில் செல்லக்கூடியவையாகும். கரையோரப் பிரதேசங்களில் சந்தேகத்திற்கிடமான படகுகளை இடைமறிப்பதற்கு இப்படகுகள் பயன்படுத்தப்படும் என இந்…

  4. சவேந்திர சில்வா:- விடுதலைப்புலிகளின் தளபதிகளின் ஒருவரான கேர்ணல் ரமேஷின் மனைவியான வத்சலாதேவியினால் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் தான் ஆஜராக போவதில்லை என என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரிதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தனது இந்த தீர்மானம் குறித்து சவேந்திர சில்வா, அமெரிக்க நீதிபதி போல் ஒடினனுக்கு அறிவித்துள்ளார். தனது சட்டத்தரணி மூலம், இதனை அறிவித்துள்ள அவர், தனக்கு தூதர் என்ற சிறப்புரிமைகள் இருப்பதாக கூறியுள்ளார். சவேந்திர சில்வா, கடந்த வியாழக்கிழமை, அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. http://www.globaltam...IN/article.aspx

  5. ஊட்டகத் துறையினருக்குப் பெரும் அதிர்ச்சி - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக நியூசிலாந்தில் இருந்து வரதராஜன் கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் கூட்டு நிறுவனப் பணிப்பாளர் மனோ விக்கிரமநாயக்கவின் திடீர் மறைவு ஊட்டகத்துறையினருக்குப் பெரும் அதிர்ச்சி தரும் இழப்பாகும்.சக்தி சிரச நிறுவனங்களின் ஆரம்பத்துக்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் முக்கிய பணியாற்றியவர் அவர் . தனியார் ஊடக நிறுவனங்களின் பணி நெருக்கடி நிறைந்த காலகட்டங்களைத் தாண்டும் போதெல்லாம் மனோ போன்றவர்களின் மனோதைரியமான சேவை மனப்பாங்கும் ஆத்மார்த்தமான ஈடுபாடும் தான் ஏனைய ஊடகங்களையும் திடப்படுத்தின என்றால் அது உயர்வு நவிற்சியன்று. சிரச சக்தி என்ற எழு(எழுச்சி மிக்க) ஏழு ஊடகங்களின் இக்கட்டான காலகட்டங்களில்…

  6. சிறிலங்கா அரசாங்கம் போர் முடிந்தும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை என கனேடிய வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். கூடவே இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு உள்ளது. எனினும் இலங்கையில் வளர்ந்துவரும் சர்வாதிகாரப் போக்கையே நாங்கள் காண்கிறோம் என்றும் அமைச்சர் ஜோன் பயட் தெரிவித்துள்ளார். . கடந்த ஒக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் விமர்சித்திருந்தார். இதனையடுத்தே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயட் இதனைத் தெரிவித்தார்.படையினர் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்…

  7. சிறிலங்கா அரசின் நிகழ்வுகள் அனைத்தையும் புறக்கணிப்பது என்று கத்தோலிக்கத் திருச்சபை முடிவு செய்துள்ளதாக கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று அறிவித்துள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் கடந்தவாரம் அன்னை தெரசா இல்லத்தில் நடத்தப்பட்ட தேடுதலின் பின்னர் ஏற்பட்டுள்ள தவறுகளை சிறிலங்கா அரசாங்கம் திருத்திக் கொள்ளும் வரை இந்த முடிவு நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இன்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய அவர், அன்னை தெரசா இல்லத்தில் இருந்த அருட்சகோதரி ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். …

  8. சிறீலங்கா அரசுடன் இணைந்து தாயகப்பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை படுகொலை செய்த இன அழிப்புக்கான பிராயச்சித்தமாக வீடுகளை அமைத்துக் கொடுக்க இந்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையினால் இடம்பெயர்ந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு 49 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க 1,319 கோடி இந்திய ரூபாவை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இடம்பெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க இந்திய அரசு உதவி செய்ய முன்வந்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மற்…

  9. பல மனைவிகளை வைத்திருப்பதே அரசர்களுக்குப் பெருமை. அதுவே அவர்களுக்கு கௌரவம். எனக்கும் பல மனைவியர் இருக்கின்றனர். எனது திறமையை நான் நிரூபித்துள்ளேன். என்னைப்போலவே தயாசிறி எம்.பி யும் நிரூபித்துள்ளார் என்பதுடன் சேவலின் வேலை கொத்துவதாகவும் அது எங்கு கொத்தினாலும் கொத்தியதுதான் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். "அரசர்களுக்கு பல மனைவிமார் இருப்பதே அவர்களுக்குப் பெருமை. எனினும் நான் இரத்தினபுரிக்கு அடிக்கொரு தடவை சென்றுவருவதாக இங்கு தெரிவிக்கின்றனர். எனது உறவினர் வீட்டில் இடம்பெற்ற வைபவத்துக்கே நான் சென்றிருந்தேன். அதில் தவறில்லை.…

  10. மேற்குலகத்திற்கு தமிழ் மக்கள் தேவையா? தமிழ் மக்களுக்கு மேற்குலகம் தேவையா? நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குழுவினர் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். ஜனாதிபதி அதனைப் பரிசீலனை செய்துவிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகவும் அதன் ஒரு பிரதியை ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு அனுப்பப் போவதாகவும் தகவல். அரசினைப் பொறுத்தவரை இரண்டும் கெட்டான் நிலை. அறிக்கையினை வெளியிட்டாலும் பிரச்சினை. அறிக்கையை வெளியிடாவிட்டாலும் பிரச்சினை. இதனால் அறிக்கையின் சில விடயங்களை மட்டும் கசியவிட்டு உள்நாட்டினதும் சர்வதேசத்தினதும் பிரதிபலிப்பைப் பார்க்கின்றது. சர்வதேச சக்திகளுக்கு குறிப்பாக மேற்குலக சக்திகளுக்கு இந்த அறிக்கை தொடர்பாக எந்தவித நம்ப…

    • 7 replies
    • 1.3k views
  11. விஞ்ஞானிகளின் எதிர்வு கூறலுக்கு அமைய எதிர்வரும் 2040ஆம், 2050 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கடல் மட்டம் உயருமானால் மட்டக்களப்பு நகர கரையோரத்தின் 20 சதவீதமும் நீர்கொழும்பு நகர கரையோரத்தில் 15 சதவீதமும் மூழ்கும் அபாயம் உள்ளதாக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டிட வடிவமைப்பு பீடத்தின் தலைவரான பேராசிரியர் பி.கே.எஸ் மகாநாம கூறினார்.ஐ.நா.வின் மனித குடியிருப்பிற்கான திட்டத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வரண்ட வலயம், ஈர வலயம் என்ற அடிப்படையில் முறையே மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய கரையோர நகரங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. “விஞ்ஞானிகளின் எதிர்…

  12. மஹிந்தரின் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க கூட்டமைப்பினையும் வலியுறுத்துவதற்காக சம்பந்தர் அவர்களை மஹிந்த சந்திக்கின்றார். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று சம்பந்தர் நேற்று வலியுறுத்தினார். இதனால் தான் போடும் நாடகத்தினை சர்வதேசம் நம்பாது என மஹிந்த இராஜபக்‌ஷ ஊகிக்கின்றார் போலும். . ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினை இந்த குழுவில் இணைக்க அதன் தலைவர் இரா.சம்பந்தனுடன் நேரடிப் பேச்சு நடத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தயாராகி வருகிறார் என்று தெரியவருகிறது. . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு இல்லாமல் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முழுமையடையாது என்ற வகையில் சம்பந்தரின் உதவியை மஹிந்த நாடவுள்ளார். நாட்டின் தலைவர் என்பதற்கு …

  13. இல்லையேல் இலங்கை அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் - புரொன்ட் லைன் தமிழர்கள் பிரச்சினைக்கு இலங்கை எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன் வைக்காவிட்டால், அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டியேற்படும். இவ்விடயத்தில் மேலும் இந்தியா உதவி புரிய முடியாத நிலை ஏற்படும் என இந்தியச் சஞ்சிகையான புரொன்ட் லைன் தெரிவித்துள்ளது. நான்காம் கட்ட ஈழப்போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரும் ஐ.நாவானது மனிதாபிமான பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்தத் தவறியுள்ளதா என்பது தொடர்பாக ஆராய ஐ.நா மக்கள் நிதியத்தின் முன்னாள் தலைவரான தோரயா ஒபெய்ட் செப்டெம்பர் 24 திகதியன்று நியமிக்கப்பட்டார். எதிர்வரும் ஜனவரியில் இவரது அறிக்க…

  14. 'இலங்கை பூர்வீகத்தில் ஓர் இந்து நாடு' : யோகேஸ்வரன் வீரகேசரி தேசிய நாளேடு 12/3/2011 9:32:27 AM பல்லின சமயம் கொண்ட நாட்டில் பௌத்த சமயத்துக்கு கூடுதலாக முக்கியத்துவம் கொடுத்தால் மதப் பிரச்சினை தோன்றும் என்பதில் ஐயமில்லை என்பதுடன் வடக்கில் பௌத்த மக்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் முளைக்கின்றன. இது இந்து மக்களின் வழிபாட்டு உரிமையை பாதிக்கும் நடவடிக்கையாகும் எனக் கூறியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இந்நாடு பூர்வீகத்தில் ஓர் இந்து நாடு என்பதை யாரும் மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "இந்த நாடு ஒரு பௌத்த நாட…

  15. 2,000 ஏக்கர் அரச காணியை ஷிராந்தி ராஜபக்‌ஷ தனக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்கியுள்ளார் Saturday, December 3, 2011, 5:09 ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, தனது மருமகன்களில் ஒருவரான டில்ஷான் விக்ரமசிங்கவுக்கு திருகோணமலையில், 2 ஆயிரம் ஏக்கர் காணி ஒன்றை வழங்கியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரரும், ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ நிறுவனத்தின் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்கவின் புதல்வரே டில்ஷான் விக்ரமசிங்க ஆவார். ஸ்ரீலங்கா கேட்வே இண்டர்ஸ்டீஸ் பிறைவட் லிமிட்டட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் விசேட அபிவிவிருத்தி திட்டத்திற்காக இந்த காணி வழங்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் காணியுடன், தி…

  16. வடக்கு - கிழக்கு மக்களுக்கு 49ஆயிரம் வீடுகள் அமைக்க இந்தியா தீர்மானம்! வெள்ளிக்கிழமை, 02 டிசம்பர் 2011 13:39 இலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடக்கு கிழக்கு மக்களுக்கு 49 ஆயிரம் வீடுகளைக் அமைத்துக் கொடுக்க 1,319 கோடி இந்திய ரூபாவை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இடம்பெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கடந்த ஜுன் மாதம் இந்தியா சென்றிருந்த போது இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க இந்திய அரசு உதவி செய்யும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்திருந்தார். …

  17. குமரன் பத்மநாதனை கைது செய்ய இன்டர்போலுக்கு சென்னை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது: ஜயலத் ஆயுதங்கள், வெடிமருந்துகளை பயன்படுத்தியமை, கிரிமினல் சதி, மற்றும் பயங்கரவாதம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரத ஆயுத கொள்வனவாளரான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கு சென்னை நீதிமன்றமொன்று இன்டர்போலிடம் பிடியாணையொன்றை பிறப்பித்திருந்தது என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன நாடாளுமன்றத்தில் வியாழனன்று தெரிவித்தார். இத்தேடுதல் ஆணையின் பிரதியொன்றையும் வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது, ஜயலத் ஜயவர்தன, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அண்மையில் தான் சென்னைக்கு விஜயம் செய்தபோது, இலங்கை அரசாங்கத்தின் காவலில் கே.பி. இருப்பது குறித்து…

  18. சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளை இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவம் செய்தது என்பதற்கப்பால் இவ்வாறு செய்வதற்கான கட்டளைகளை இலங்கை அரசாங்கமே வழங்கியிருந்தது என படைத்தரப்பின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் சாட்சியளித்துள்ளதாக The International எனும் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த ஊடகத்தில் நேற்று பிரசுரிக்கப்பட்ட புலனாய்வுக் கட்டுரை ஒன்றிற்காக மேற்கொள்ளப்பட்ட செவ்வி ஒன்றிலேயே சிறிலங்காவின் முன்னாள் படை அதிகாரியினால் இவ்வாறு வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை பொதுமக்களுக்கு எதிரான மிக மோசமான பல கொடூரங்கள் மேற்கொள்ளப்பட்டதை நேரடியாகக் கண்ட ஒருவரும் சாட்சி இந்த ஊடகத்திற்கு சாட்சியம் வழங்கியுள்ளார். இது தொடர்பாக இக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘படைத்தர…

  19. லண்டன் தமிழீழ புரட்சிகர மாணவர்களும் அதிர்வும் முன்னாள் போராளிகள் வயிற்றில் மண்ணை அள்ளிப்போடும் பாதகச்செயலில் இறங்கியுள்ளனர். கேபியின் கணக்கும் செயலகத்தின் கணக்கும் என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரை பல முன்னாள் போராளிகள் வயிற்றில் மண்ணை கொட்ட உள்ளது. நேர்டோ நிறுவனத்தின் உதவியாளாள் ஒருவருடன் இந்த செய்தி சம்பந்தமாக கேட்டபோது 50மேற்பட்ட முன்னாள் போராளிகள் தற்போது நேர்டோ நிறுவன பணியாளர்களாக பணிபுரிகிறார்கள். இவர்களில் பலர் ஊனமடைந்தவர்கள். ஆனால் இந்த விடயங்கள் எதுவும் தெரியாது இவ்வாறு கேலிசெய்வது இந்த முன்னாள் போராளிகளின் வயிற்றில் மண்ணை வாரும் செயலே. அது மட்டுமல்லாது நேர்டோவின் நிவனத்தில் பல மாவீரர்களின் விதைவைகளும் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் மற்றும் இவர்களின் க…

  20. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டில் மூன்று ஈழத் தமிழர்கள் அமெரிக்க நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தமிழ்நெற் இணையத்தின் மூலம் எதிரிக்கு அழைப்பாணை வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதித்துறை வரலாற்றில் இது மிகவும் முக்கியமான மைல்கல். கொலம்பியா டிஸ்திறிக்கின் டிஸ்திறிக் நீதி மன்றத்தில் (District Court of The District of Columbia) டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் உட்பட மூன்று வழக்காளிகள் ஜனவரி 2011ல் தாக்கல் செய்த வழக்கில் நீதிக்குப் புறம்பான விதத்தில் தமது உறவுகளை அரச படைகள் கொலை செய்த குற்றத்திற்கு அரச அதிபர் தண்டிக்கப்பட வேண்டும் என்று குற்றஞ் சுமத்தினார்கள். திருகோணமலை கடற்கரையில் வைத்து டாக்டர் காசிப்பிள்ளை மனோகரனின் மகன் ராஜீ…

  21. பொலிஸ் போதைப் பொருள் பணியகத்திற்கு கையெழுத்திடச் சென்ற நபர் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பாக அப்பணியகத்தின் உத்தியோகஸ்தர்களை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். மாளிகாவத்தையை சேர்ந்த மொஹமட் சதாக் மொஹமட் பாஹிம் எனும் 30 வயதான இந்நபர் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி பொலிஸ் போதை ஒழிப்பு பணியகத்திற்கு கையெழுத்திடச் சென்றபின் மரணமடைந்திருந்தார். இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேற்படி நபரின் மரணம் தொடர்பாக இதுவரை கொழும்பு கோட்டை பொலிஸார் மேற்கொண்ட விசாரணை நீதிமன்றத்திற்கு திருப்தியளிக்கவில்லை என நீதவான் தெரிவித்தார். இவ்விசாரணை விபரங்களை கொழும்பு மத்திக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் ஒ…

  22. அமெரிக்காவின் உலங்கு வானூர்தி கம்பனியான பெல் தனது பிந்திய தயாரிப்பான பெல் 412 ரக உலங்கு வானூர்திகள் இரண்டினை சிறிலங்காவிற்கு விற்றுள்ளது. அமெரிக்காவிலுள்ள ரென்ஸி எனும் இடத்தில் வைத்து வைபவரீதியாக கையளித்ததாக அறிவித்துள்ளது. சிறிலங்கா விமானப்படையுடன் தமக்கு 40 வருடங்களுக்கும் மேலாக உறவு உண்டு என பெல் ஹெலிகொப்டர் கம்பனியின் உபதலைவர் லாரி றொபேட்ஸ் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு ஹெலிகொப்டர்களையும் எயார் மார்ஷல் அபேவிக்கிரம பொறுப்பேற்றுக்கொண்டார். பெல் 412 ஹெலிகொப்டர்கள் தமது தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான நம்பத்தகுந்த ஆற்றல்வாய்ந்தவை என இலங்கை விமானப்படையின் தளபதி எச்.டி.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். http://www.tamilthai.../newsite/?p=827

    • 5 replies
    • 1.2k views
  23. தமிழீழம் முல்லைத்தீவு மாவட்டம். கல்லாறு பாடசாலை மைதானத்தில் மாவீரர் நாளன்று ஏற்றப்பட்ட தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 26 ஆம் நாள் இரவு ஏற்றப்பட்ட தமிழீழத் தேசியக் கொடி மறுநாள்27 ஆம் நாள் மாவீரர் நாளன்று மைதானத்தில் பட்டொளி வீசி பறந்நதாக நேரில்கண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.அதை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த படையினர் தமிழீழத் தேசியக் கொடியை இறக்கிதம்முடன் எடுத்து சென்றுள்ளதாகவும் விசாரணைக்கென 50 இற்க மேற்பட்ட இளையோரை அழைத்து சென்று கடும் விசாரணையின் பின்னர் விடுதலை செய்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலையில் பாடசாலை மைதானத்தில் பறந்த தமிழீழத் தேசியக் கொடியை மக்கள் அமைதியாக தரிசித்து சென்றதாகவும் 200…

  24. 2000ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தை சித்தரிக்கும் "பாலை" திரைப்படம் வெளியீடு! இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. …

  25. ஈழத் திரைத்துறை கலைஞர்களால் “வாக்குமூலம்” எனும் குறும்படம் கார்த்திகை 27 2011 இல் வெளியிடப்பட்டது. இக் குறும்படமானது தமிழ் நாட்டில் இருந்து வெளிவருகின்ற “ஆனந்தவிகடன்” வார இதழில் வெளிவந்த ஒரு போராளியின் கடிதத்தை அடிப்படையாக கொண்டது. நெஞ்சை உலுப்பும் காட்சிகளைக் கொண்ட இத் திரைப்படத்தை 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பார்க்கவேண்டாம். எமது விடிவிற்காய்ப் போராடி இறுதியில் கைதாகி தற்போது கடும் சித்திரவதைகளை அனுபவித்து வரும் எம் தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் கதை இது. http://youtu.be/AQxbz6MGirM http://www.vannionli...-post_4466.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.