Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இனப்பிரச்சினைக்கு தீர்வினை முன்வைத்தல் என்ற பேரில் அனைத்துலகத்தை ஏமாற்ற மஹிந்தவின் அடுத்த அஸ்திரம் தயாராகின்றது. ஆம் இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றில் விசேட தேர்வுக் குழுவை அமைப்பது தொடர்பான யோசனை இன்று பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது. இதன் ஆயுட்காலம் ஆறு மாதமாம். ஆனால் ஐ. நா. வின் மனித உரிமைக்கூட்டத்தொடர் இன்னமும் நான்கு மாதத்தில் நடக்கப்போகின்றது. அந்த கூட்டத்தினை சமாளிக்கவே இந்த ஆறுமாத திட்டம். . இந்த பாராளுமன்ற தேர்வுக் குழுவில் 31 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஆளும் கட்சி பிரதிநிதிகள் 19 பேரும் எதிர்கட்சிப் பிரதிநிதிகள் 12 பேரும் உள்ளடங்குகின்றனர். . நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அப்படியே அமிழ்ந்துபோக இப்போ அடுத்த வெடி தயாராகின்றது. சிங்களத்தின் இந்த வரலா…

  2. தேசியத் தலைவர் அவர்களால், எங்கள் காவிய நாயகர்களுக்காகப் பிரகடனப்படுத்தப்பட்ட புனித நாள். எங்கள் தேசம் மீண்டும் சிங்கள ஆட்சியாளர்களிடம் வீழும்வரை, மாவீரர் நாள் தமிழீழத்தின் தேசிய எழுச்சி நாளாகக் கோலம் கொண்டது. தமிழீழம் மட்டுமல்ல, தமிழர் வாழு நாடுகளை அது பற்றிப் படர்ந்து பரணி பாட வைத்தது. இந்த நாள் எமக்கான மகத்துவமான புனித நாளாகப் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றாய் எழுந்து, எழுச்சியுடன் வீர வணக்கம் செய்தார்கள். புலம்பெயர் தேசங்களில் அந்தக் காவிய நாயகர்களது நினைவு வணக்க நாளை எழுச்சியுடன் நடாத்தும் செயற்பாடுகள் தேசியத் தலைவரால் விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களிடம் விடுக்கப்பட்டது. காலப் பெரு வெள்ளத்தாலும் அழியாத காவிய நாயகர்களை மீள எழுப்பி உறவாடும் நாளை முள…

  3. இரத்தப் பரிசோதனைக்குப் பதில் விசர்நாய்க்கடி ஊசி மருந்து ஏற்றிய தாதி. காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனொருவனின் இரத்த மாதிரியை பரிசோதிக்குமாறு வைத்தியர் வழங்கிய சீட்டை தவறாக வாசித்த தாதியொருவர், அவருக்கு விசர்நாய்க்கடிக்கான ஊசியை ஏற்றிய சம்பவம் ஒன்று அநுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நான்கு வயது சிறுவனை அவரது தாய் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன்போது சிறுவனை பரிசோதித்த வைத்தியர் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு மருத்துவ சீட்டு ஒன்றை வழங்கியுள்ளார். இந்தச் சீட்டைச் சரியாக வாசிக்காத தாதி அந்தச் சிறுவனுக்கு வேறொரு ஊசி மருந்தை ஏற்றியுள்ளத…

  4. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் நோக்கில் மக்கள் இயக்கமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் முதலாவது கூட்டம் கொழும்பு பொது நூலகத்தில் இன்று நடைபெற்றது. சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு சகல தரப்பினரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னணி அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக எவ்வாறான அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்க வேண்டுமென இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக யுத்தம் புரிந்த ஓர் படைத் தளபதியை இவ்வாறு சிறையில் அடைப்பது நியாய…

    • 5 replies
    • 1.2k views
  5. இலங்கை நாணயம் மூன்று வீதத்தினால் மதிப்பிறக்கம் வீரகேசரி தேசிய நாளேடு 11/23/2011 8:23:50 AM இலங்கை நாணயம் 3 சதவீதத்தினால் மதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாணய மதிப்பிறக்கம் செய்யும் யோசனையை அறிவித்திருந்தார். இதையடுத்து மத்திய வங்கி ஆளுனரிடம் கேள்வி எழுப்பியபோதே ரூபாவின் மதிப்பு நேற்று 3 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். ஐரோப்பிய கடன் நெருக்கடியை அடுத்து பிலிப்பைன்ஸ் தொடக்கம் மலேசியா வரையான ஆசிய நாடுகளைப் பின்பற்றி இலங்கையும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.…

  6. வண. உவத்தென்ன சுமண தேரரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதமன்றம் நேற்று பிடிவிறாந்து பிறப்பித்தது.வர்த்தகர் ஒருவருக்கு மாதம்பையில் காணியொன்றை பெற்றுத்தருவதாக உறுதியளித்து 30 லட்சம் ரூபா மோசடி செய்ததாக வண சுமண தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்தே அத்தேரரை கைது செய்யுமாறு நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவு பிறப்பித்தார். முறைப்பாட்டளரான எல்.கே. டி சில்வா தான் 16.08.2007 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வைத்து இத்தேரருக்கு 30லட்சம் ரூபாவை வழங்கியதாக நீதிமன்றுக்குத் தெரிவித்தார். இத்தேரர் உறுதியளித்தபடி காணியை வழங்கவில்லை எனவும் அதன்பின் பணத்தை தவணைமுறையில் திருப்பிக்கொடுப்பதற்கு தேர் இணங்கியதாகவும் கூறினார்.…

  7. புலிகளிகளை அழித்துவிட்டோம் எனக் கூறும் படையினர் மாவீரர்கள் உயிர்தெழுவார்களோ என அச்சம்:- 23 நவம்பர் 2011 இலங்கையின் வடபுலத்தினில் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினக்கொண்டாட்ட ஏற்பாடுகளில் பாதுகாப்புத் தரப்பு முழு அளவினில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக வன்னியிலும் குடாநாட்டிலும் பெருமளவினில் பொலிஸார் வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பாக பிரதான வீதிகளெங்கும் பெருமளவினில் பொலிஸார் வாகன சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு வேளை தாண்டியும் இச்சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதே போன்றே பொலிஸாருக்கு மேலதிகமாக படையினரும் பிரதான காவலரண்கள் தோறும் கடமையினில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.வழமையாக ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தின் 2…

  8. இலங்கையில் காணாமல் போன ஊடகவியலாளர் குறித்த திரைப்படம் ஒன்று வெளியிடப்படவுள்ளது: 23 நவம்பர் 2011 இலங்கையில் காணாமல் போன ஊடகவியலாளர் குறித்த திரைப்படம் ஒன்றை வெளியிடத் தயாராக உள்ளார் இலங்கையின் புகழ்பெற்ற சிங்கள நாடக மற்றும் திரைப்பட நடிகரும், நெறியாளருமான லின்டன் சேமகே. 'ஜேடு' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் இலங்கையில் காணாமல் போன ஊடகவியலாளர் ஒருவருடைய உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிய வருகிறது. கடந்த பல வருடங்களாக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலில் வசித்து வரும் லின்டன் சேமகே அண்மையில் சில மாதங்களாக இத்திரைப்பட வேலைகளில் ஈடுபட்டிருந்தார். இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி நெறியாள்கை செய்திருக்கிறார் லிண்டன் சேமகே. இதனைத் தயாரித்திருக…

  9. [ செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011, 04:08 GMT ] [ கார்வண்ணன் ] நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு சிறிலங்கா அரசிடம் பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகார பணியக அமைச்சர், அலிஸ்ரெயர் பேர்ட் நேற்று லண்டனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மோதல்களில் இருந்து சிறிலங்கா மீள்வதற்கு இந்த அறிக்கை ஒரு முக்கியமான மைல் கல்லாக அமையும் என்று பலரும் நம்புகின்றனர். தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிரூபிப்பதற்கான இந்த வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறிக்கையை விரைவாக பகிரங்கப்படுத்துவது இந்த உ…

    • 3 replies
    • 805 views
  10. தமிழீழ மாவீரர்நாள் வாரம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் குடாநாட்டில் இந்துகிறிஸ்த்தவ ஆலயங்களிற்கு இராணுவத்தினரின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன் மாவட்டத்தில் இராணுவ புலனாய்வாளர்களினதும் செய்பாடுகள் அதிகரித்திருக்கின்றன.கிராமப்புறங்களில் கடந்தாண்டு மாவீரர் நாளன்று மணியோசை எழுப்பப்படும் நேரத்தில் சில ஆலயங்களில் இளைஞர்கள் மணிகளை ஒலிக்கச் செய்திருந்தனர். இந்நிலையில் இவ்வாண்டு முற்கூட்டியே மாவீரர் வாரம் ஆரம்பித்தபோதே ஒவ்வொரு ஆலங்களுக்கும் இராணுவத்தினரின் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தப்பணியில் சுமார் 3தொடக்கம்5 வரையான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர் மேலும் கடந்தாண்டை விடவும் மக்கள் மத்தியில் தெளிவான நிலைப்பாடு உள்ளமையும் அவதானிக்கப்பட…

  11. நாட்டின் மீது அச்சுறுத்தல்கள் தொடர்வதால் பாதுகாப்புக்கு அதிக நிதி : ஜனாதிபதி எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்திலிருந்து வீரம் மிகுந்த படையினரால் தாய்நாடு விடுவிக்கப்பட்டபோதிலும் தேசத்தின்மீதும் நாட்டின் மீதும் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் இருப்பதால் 2012 வரவுசெலவுத் திட்டத்தில் நாட்டின் பாதுகாப்புக்காக பெரும்நிதியை ஒதுக்குவதைத் தவிர அரசாங்கத்துக்கு வேறு வழியில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதம் 2 வருடங்களுக்கு முன்னர் ஒழிக்கப்பட்ட போதிலும் இலங்கை எதிர்கொண்ட சவால்கள் முடிந்துவிடவில்லை எ…

  12. சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் மூலம் யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு எந்தவித நலன்களும் ஏற்படாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட 2012ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில்,யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கக் கூடிய திட்டங்கள் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பிற்காக பாரியளவில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தற்போது அவசியம்தானா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர்,இதன் மூலம் நாடு இராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கின்றது என்பது தெளிவாக புலப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார். http://www.tamilthai.com/?p=30891

  13. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் – கொழும்பு நாளேட்டில் வெளியானது இரகசியம் [ செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011, 02:46 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும் பகிரங்கப்படுத்தப்படாத நிலையில், கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றில் அதன் முக்கிய பரிந்துரைகள் வெளியாகியுள்ளன. “பலமான ஆயுதங்கள் தரித்த தீவிரவாதக் குழுவின் பிடியில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சிறிலங்காவை எந்தவொரு அரசாங்கமும் கேட்க முடியாது. அவ்வாறு போர் நடவடிக்கையை நிறுத்துவது தீவிரவாதிகள் மூர்க்கம் பெறுவதற்கு மட்டுமே வழிவகுக்கும். அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் …

  14. இந்த கிராமங்களில் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகளும்கிடப்பில்போடப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மக்கள் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளனர்.மேற்படி பகுதியில் முகமாலை இத்தாவில் இந்திராபுரம் சதாபுரம் அரசர்கேணி கச்சார்வெளியின் ஒரு பகுதி ஆகியவற்றில் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை இந்தப்பகுதிகளில் குறிப்பாக 95ம் ஆண்டு தொடக்கம் காலத்திற்குக் காலம் இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக இப்பகுதி மக்கள் சிறிது சிறிதாக இடம்பெயர தள்ளப்பட்டு இறுதியில் 2006ம் ஆண்டுடன் முளுமையாக மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற யுத்தத்தினால் இந்தப்பகுதி மிகவும் மோசம…

  15. யாழ் நெல்லியடியில் ஒரே இரவில் நான்கு கடைகள் உடைக்கப்பட்டு பெரும் தொகையான பணம் பல ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டதுடன் பெறுமதியான பொருட்கள் சேப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது. இக்கொள்ளைகள் சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு பின்னரே இடம்பெற்றுள்ளதாகவும் நெல்லியடிச் சந்தியிலிருந்து கொடிகாமம் செல்லும் வீதியில் அமைந்துள்ள இரத்தினம் மோட்டார்ஸ் கடையில் கதவு உடைக்கப்பட்டு 2 மோட்டார்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது. இதேவேளை, நெல்லியடிச் சந்தியில் இருந்து பருத்தித்துறைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் கதவு உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபா கொள்ளையடிக்கப…

  16. இலங்கை இனப்பிரச்சினை, உள்நாட்டுப் பிரச்சினை, உள்நாட்டினுள்ளேயே பேசித் தீர்வு காணப்பட வேண்டுமென்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் சியாம் சரண். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், மீண்டும் ஞான உபதேசங்களை அள்ளிவிடத் தொடங்கியிருக்கிறார் இவர். மீண்டும் யுத்தம் வெடித்த 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்தவர். இழுபறிப்பட்டுச் செல்லும் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்த விவகாரத்துக்காக மன்மோகன் சிங்கின் பிரதிநிதியாக ஓடித்திரிந்தவர். இராணுவ நிர்வாகத்தின் கீழுள்ள ஆசிய நாடுகள் பலவற்றிற்கும் தூதுவராகவும் இருந்துள்ளார். இந்த வகையில் சியாம் சரணின் கருத்து, இந்திய மத்திய அரசினது கருத்து என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கப் போவத…

    • 8 replies
    • 2.1k views
  17. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைகையில் அடுத்து என்ன? நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கடந்த 20ம் திகதி- கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது பற்றிய செய்திகளை உலகின் மிகமுக்கியமான ஊடகங்கள் செய்திகளாக்கிய விதம் சர்வதேச அளவில் இந்த அறிக்கை பற்றிய எதிர்பார்ப்புகள் உச்சநிலையில் இருக்கின்றது என்பதற்கான எடுத்துக் காட்டாக உள்ளது. ஏற்கனவே இந்த ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய எதிர்பார்ப்புகள் குறித்து அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளால் கருத்துகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அந்த எதிர்பார்ப்புகளை ஈடேற்றும்வகையில் அறிக்கை அமையுமா என்பது கேள்விக்குரிய விடயமாகவே உள்ளது. இந்த அறிக்கையை அடுத் மாதமே பகிரங்கப்பத்ப் போவதாக அரசாங்கம் அறிவித்து…

    • 0 replies
    • 590 views
  18. http://youtu.be/CIqbOrOdXyQ ஈழத்தமிழனின் வரலாற்றுப்பயணம் – வெடித்த நிலத்தில் வேர்களைத்தேடி. இயக்கம் சோமிதரன், வெளியீடு Save Tamils Visual Media… முழு நீள ஆவணப்படம் இணைப்பு ஈழவிடுதலைப் போராட்டத்தின் வரலாறே இன்று எமது கையில் இருக்கும் ஆற்றல் வாய்ந்த கருவி என்பதல் அதனை இந்த தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் முகமாக இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. http://youtu.be/CIqbOrOdXyQ http://youtu.be/fEh06lSxxq0 http://youtu.be/tYgaxUM-rQs http://youtu.be/Gx82oXElcuo http://youtu.be/3qv9k-As5Ok http://youtu.be/h-zA9B-UOHk http://youtu.be/MICg8XOkusw http://meenakam.com/...deos/2011/11/22

  19. 2012 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய வடக்கு கிழக்கில் நிரந்த இராணுவ முகாம் மற்றும் இராணு குடியிருப்பு அமைக்கப்படுவது பாராட்டப்பட வேண்டியதென பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரித்துள்ளார். யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கில் படையினரை நிரந்தரமாக நிலைக்கொள்ளச் செய்வதற்கு இதுபோன்ற தேவைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று 2012 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது பாதுகாப்புச் செயலாளர் மேலும் குறிப்பிடுகையில், தான் செயலாளரா கடமையாற்றும் பாதுகாப…

  20. தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வை முன்வைத்த அரசாங்கம் இன்று தனதுசக்திக்கு மீறிய இராணுவத்தை தொடர்ந்து சுமந்து செல்லவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழர் பிரச்சினைக்கு இராணுவத்தீர்வை தேடிய அரசாங்கம் எதிர்காலத்தில் நாட்டின் குறிப்பாக சிங்கள மக்களின் பொருளாதாரப்பிரச்சினைகளுக்கும் இராணுவத்தீர்வையே காண்பதற்கு தன்னை தயார்படுத்துகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நேற்று பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது இராணுவத் தீர்வுக்காக இந்நாட்டின் பொருளாதாரத்தால் தாங்கமுடியாத ஒரு இராணுவத்தை அரசாங்கம் கட்டியெழுப்பியுள்ளது. இராணுவம், விமானப்படை…

    • 2 replies
    • 1.1k views
  21. யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வரவு செலவுத்திட்டத்தில் நலத்திட்டங்கள் ஏதுமில்லை; த.தே.கூ சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் மூலம் யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு எந்தவித நலன்களும் ஏற்படாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட 2012ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில், யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கக் கூடிய திட்டங்கள் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பிற்காக பாரியளவில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தற்போது அவசியம்தானா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், இதன் மூலம் நாடு இராணுவ மயமாக்கலை நோக…

    • 2 replies
    • 849 views
  22. தமிழ் மக்கள் போர்க்குற்றம் தொடர்பான நடவடிக்கைகளை மட்டும் முன்னெடுத்து செல்லாது இலங்கை அரசின் கடந்த 60 வருடகால தமிழ் இனப்படுகொலையையும் சேர்த்து முன்னெடுக்க வேண்டும் எனவும், வடக்கு மாகாண சபைத் தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பதோடு, அது பிழையானவர்களின் கைகளுக்கு செல்லாதிருப்பதற்காக தமிழ் புத்திஜீவிகளை நிறுத்த வேண்டும் எனவும், அதற்கு தமது ஆதரவு இருக்கும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்தவாரம் லண்டனில் உள்ள தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.கட்சி அரசியலை முன்னிலைப்படுத்திச் செயற்படுவது தமிழ் தேசியத்திற்கு ஆபத்தானது என்றும் தெரிவித்தார். வடக்கு மாகாண சபைத் தேர்தல் மாகாண சபைகள் என்பது 13 திருத்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தமிழ…

  23. அதிகார பகிர்வுபற்றி பேசுவது எம் இனத்தை நாமே அழிக்கும் செயல்: கஜேந்திரகுமார் சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் பெற்றுக் கொள்ளும் வண்ணம் நாம் நடந்து கொண்டால் எமது சுயநிர்ணய உரிமையினை நாமே புறந்தள்ளும் செயற்பாடாக அது அமையும்.சுயநிர்ணய உரிமைக்கான ஆணையை தமிழ் மக்கள் வழங்கியுள்ள நிலையில் அதனை வலியுறுத்துவதை விடுத்து பின்னர் ஒரு சந்தர்பத்தில் மீண்டும் வலியுறுத்தலாம் என்பது சர்வதேச ஒழுங்கின் அடிப்படையில் முடியாத காரியம். இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். . அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது: . இனப் பிரச்சினை…

  24. சிறிலங்காவின் நாணயம் இன்று 3 வீததினால் மதிப்பிறக்கம் செய்யப்படவுள்ளது. சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாணய மதிப்பிறக்கம் செய்யும் யோசனையை அறிவித்திருந்தார். இதையடுத்து சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனரிடம் கேள்வி எழுப்பிய போதே, ரூபாவின் மதிப்பு இன்று 3 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தினார். ஐரோப்பிய கடன் நெருக்கடியை அடுத்து பிலிப்பைன்ஸ் தொடக்கம் மலேசியா வரையான ஆசிய நாடுகளைப் பின்பற்றி சிறிலங்காவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியா தொடக…

  25. யுத்தக் குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பயங்கரவாதிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இராணுவ முன்நகர்வுகளை நிறுத்துமாறு எந்தவொரு நாடும் கோரிக்கை விடுக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு யுத்தத்தை இடைநடுவில் நிறுத்துவதன் மூலம் பயங்கரவாதிகள் மேலும் வலுவடையக் கூடிய ஆபத்து காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்கள் நிலைகள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவதனை சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் ஏற்றுக்கொள்ளாத போதிலும், மனிதாபிமான மீட்பு முயற்சிகளை தடை செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.