Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோவையில் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் இயக்கத் தலைவர்கள் அனைவரும் அனைத்துத் தமிழ் உணர்வாளர்களோடும் இணைந்து நடாத்தும் "ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாபெரும் மாநாடு" நடைபெறவுள்ளது. 06.11.2011 நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு கோவையில் அமைந்துள்ள வ.உ.சி பூங்கா மைதானத்தில் இம் மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு. பழ.நெடுமாறன், மறுமலர்ச்ச்இ திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு. வைகோ, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர். இராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவழவன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் திரு. கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குனர் திரு. மணிவண்ணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் திரு…

  2. இலங்கை தொடர்பாக இயங்கும் அனைத்து இணையங்களும் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும் - 05 நவம்பர் 2011 அதிரடி நடவடிக்கை:- இலங்கையில் இருந்தோ அல்லது அதற்கு வெளியில் இருந்தோ இலங்கை தொடர்பாகவோ இலங்கை வாழ் மக்கள் தொடர்பாகவோ செய்திகளை தகவல்களை அல்லது படைப்புக்களை வெளியிடும் இணையத்தளங்கள் இலங்கையின் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இலங்கையின் தகவல் திணைக்களம் விதித்துள்ளதாக இலங்கையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் பதிவு செய்யப்படாத இணையங்கள் இலங்கையில் தடை செய்யப்படும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில் பல இணையங்கள் இலங்கையில் பார்க்க முடியாதவாறு தடைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்க…

  3. கோடம்பக்கம் நினைத்தால் இலங்கைகு செக் வைக்க முடியும்! சசிக்குமார் தமிழ்ப் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிப்பதும், தணிக்கை செய்வதும் தொடர்கிறது. அவர்கள் என்ன நமது படங்களுக்கு தடை விதிப்பது... இலங்கையில் எனது படத்தை திரையிட அனுமதி தரமாட்டேன். கோடம்பாக்கம் நினைத்தால் கொழும்பு வருமானத்துக்கே செக் வைக்க முடியும், என்றார் இயக்குநர், தயாரிப்பாளர் சசிக்குமார். சர்ச்சைக்குரிய தமிழ் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிக்கிறது. புதுப்படங்களை அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்களை நீக்குகிறது. இஷ்டம் போல் காட்சிகளை வெட்டித் தள்ளி அரை குறையாக தியேட்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தீபாவளிக்கு ரிலீசான 7ஆம் அறிவு…

  4. சிறீலங்கா மற்றும் சிறீலங்கா நாட்டவர்கள் தொடர்பில் செய்தி வெளியிடும் அனைத்து இணைய தளங்களும் சிறீலங்காவின்வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சில் தமது இணைய தளங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என சிறீலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசு இணையத்தள ஊடக செயற்பாட்டினை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான அறிவிப்பினை விடுத்துள்ளதுசிறீலங்கா தொடர்பான பல்வேறுபட்ட அரசியல் பொருளாதார கருத்துக்களையும் தமிழ் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பான கருத்துக்களையம் இணைய ஊடகங்கள் செய்தியாகவும் ஆய்வுகள் ஆகவும் வெளியிட்டு வரும் நிலையில் சிறீலங்காவின் அரசாங்க தகவல் திணைக்களம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது. http://www.pathivu.c...ticle_full.aspx

  5. சிங்களத்தின் தீபாவளி நிகழ்வை புறக்கணிக்கும் போராட்டம் நாளை Saturday, November 5, 2011, 18:08 சிங்கள அரசாங்கத்தின் தீபாவலி கொண்டாட்டத்தினை புறக்கணிக்கும் பொருட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை கனடாவில் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. நாடுகடந்த அரசின் கனடா கிளையினர் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கனடா நாடு கடந்த அரசாங்கம் கேட்டுள்ளது. போராட்டம் நடக்கும் இடம் Date: Sunday November 6th 2011. Time: 4 pm Venue: Korean Cultural Centre 1133 Leslie Street, North York, Ontario M3C 2J6 For more information please contact : (647)-822-8062 http://www.tamilthai.com/?p=29644

  6. நோர்வேயின் சுற்றுப்புற சூழல் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்கைம் விரைவில் சிறிலங்கா வருவார் என நோர்வே தூதரக வட்டாரங்கள் கூறியுள்ளன. நோர்வே அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துடன் சுமுகமான உறவை பேணுவது என முடிவெடுத்துள்ளதாகவும். இதன் அடிப்படையில் பொருளாதார ஒப்பந்தங்களை செய்ய தீர்மானித்திருப்பதாகவும் நோர்வே தூதரகம் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளது. . சிறிலங்காவுடனான வணிக ஒப்பந்தங்களைச்செய்தல், அங்கு நடைபெறும் மீழ் குடியேற்றங்களுக்கு நிதி உதவி செய்தல், பாரம்பரிய தொழில்துறை மேம்பாட்டிற்கான இருபக்க ஒப்பந்தங்களைச் செய்தல் ஆகியன தொடர்பில் தற்போது நோர்வே அரசாங்கம் சிறிலங்காவுடன் சேர்ந்து செயற்படவுள்ளது. . சிறிலங்கா அமைச்சர்கள் இருவர் அண்மையில் நோர்வே சென்று எரிக…

  7. தமிழனின் தொடர்கதைகள் தொடர்ந்தே செல்லவிடாது தமிழர்கள் அதை மாற்றியமைக்க வேண்டும் சேரன்இ சோழன்இ பாண்டியன் கிரேக்கத்திலிருந்து அவுஸ்த்திரேலியா வரை உள்ள கரையோரத்தை ஆண்டார்கள் என்பது அழிந்தொழிந்த எங்சியுள்ள வரலாறுகள் மூலமும் புவி சார்ந்த கொள்கையாலும் விளங்கமுடிகின்றதுஇ இவர்களுக்கிடையில் போர் புரிந்து அழிந்தார்கள். அத்துடன் குமரிக்கண்டமான பாண்டிய நாடு பேரலை போன்ற அனர்த்தத்தில் மூழ்கி ஏராளமான தமிழர்கள் மாண்டு போக ஏஞ்சிய தமிழர்கள் ஆங்காங்கே மலேசியாஇ இந்தியாஇ சிங்கப்பூர்இ இந்தோனேசியாஇ அந்தமான் இலங்கை போன்ற இடங்களில் விடப்பட்டார்கள். பின்னர் அந்நியரின் வியாபாரப்படையெடுப்பால் ஒல்லாந்தர்இ போத்துக்கீசர்இ ஆங்கிலேயர் வந்து போரிட்டபோது தமிழ் மன்னர்கள் எதிர்த்துப்போரிட்டனர். காட்டிக்க…

    • 1 reply
    • 628 views
  8. Nov 6, 2011 / பகுதி: செய்தி / பருத்தித்துறையில் மட்டும் 115 வீடுகள் இராணுவத்தினர் வசம்! பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் மட்டும் நூற்றுப் பதினைந்து வீடுகள் சிங்களப் படைகள் வசம் உள்ளன. குடா நாட்டில் இராணுவத்தினர் நிலை கொண்டு 16 வருடங்கள் ஆகியும் இன்னமும் பொதுமக்களுக்கு அந்த வீடுகள் கையளிக்கப்படவில்லை. ஒவ்வொரு பிரதேச சபைக் கூட்டத்திலும் இராணுவத்தினரும் ஈபிடிபி இனரும் வீடுகளை மீழப்பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளிக்கின்றபோதும் அவற்றை பெற்றுத்தரவில்லை என மக்கள் விசனம் அடைந்துள்ளனர். http://www.pathivu.com/news/19075/57/115/d,article_full.aspx

  9. இலங்கையில் என் படத்தை வெளியிடமாட்டேன் – இயக்குநர் சசிகுமார்! Published on November 5, 2011-3:53 pm தமிழ்ப் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிப்பதும், தணிக்கை செய்வதும் தொடர்கிறது. அவர்கள் என்ன நமது படங்களுக்கு தடை விதிப்பது. இலங்கையில் எனது படத்தை திரையிட அனுமதி தரமாட்டேன். கோடம்பாக்கம் நினைத்தால் கொழும்பு வருமானத்துக்கே செக் வைக்க முடியும், என்று இயக்குநரும் தயாரிப்பாளருமான சசிகுமார் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய தமிழ் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிக்கிறது. புதுப்படங்களை அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்களை நீக்குகிறது. இஷ்டம் போல் காட்சிகளை வெட்டித் தள்ளி அரை குறையாக திரையரங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தீபாவளிக்…

  10. 2040 இல் மட்டக்களப்பின் 20 சதவீத மக்கள் கடல்நீரால் பாதிக்கப்படுவர் Saturday, November 5, 2011, 14:29 2040ம் ஆண்டளவில் இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்தில் வசிக்கும் மக்களில் 20 சதவீதமானோர் கடல் நீர் பெருக்கு காரணமாகப் பாதிப்படைவர் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை ஒன்றிலேயே இது குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் நீர்கொழும்பின் 15 சதவீத மக்களும் கடல்நீர் காரணமாக பாதிக்கப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 70 சதவீதமான மக்கள் கரையோரப் பகுதிகளில் உள்ள நகரங்களில் வசிக்கின்றனர். இவர்கள் கடல் நீர்மட்ட உயர்வு, வெள்ளப் பெருக்கு, நீர் பற்றாக்குறை, சூறாவளி, வரட்சி போன்றவற்றால் பாதிப்படைந்து வருவதாக மொரட்டுவ பல்கலைக்க…

  11. சரத் பொன்சேக்காவுக்கு எதிரான ஹைகோப் வழக்கு எதிர்வரும் 11ம் திகதிக்கு ஒத்திவைப்பு : 05 நவம்பர் 2011 சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் .. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிரான ஹைகோப் வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேக்கா மற்றும் அவரது மருமகன் தனுன திலக்கரட்னவுக்கு எதிரான இந்த வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. சரத் பொன்சேக்கா வெலிகடை சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதனை எதிர்வரும் 11 ஆம் திகதிக்க…

  12. இலங்கையில் 18 விமான நிறுவனங்கள் பணியில் – பஷில் தெரிவிப்பு! Published on November 5, 2011-8:43 am யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கையினுள் 18 விமான நிறுவனங்கள் தமது தொழில்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிரிபத்கொடவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள் அரசியல் அழுத்தங்களுக்கு அமைய நாட்டிற்கு வருகை தந்த நிறுவனங்கள் அல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் சிறந்த நிலையில் காணப்படுவதே இதற்கான காரணம் எனவும் அமைச்சர் பஷில் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். http://www.saritham.com/?p=39989

  13. [ சனிக்கிழமை, 05 நவம்பர் 2011, 01:50 GMT ] [ கனடா செய்தியாளர் ] போர்க்குற்றச்சாட்டுகளால் சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை கனடா நிறுத்திக் கொண்டால், சிறிலங்காவுக்குப் பாரிய இழப்பு ஏற்படும் என்று சிறிலங்காவின் மூத்த அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஒட்டாவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆனால் கனடாவின் உதவிகள் தடைப்பட்டு, இழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுடன் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ள கனடா, 1950ம் ஆண்டில் இருந்த நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது. சிறிலங்காவில் …

    • 2 replies
    • 892 views
  14. சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரியவர்களில் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களை திருப்பி அனுப்பும் தீர்மானம் மனிதாபிமானமற்றது என பார்சல் கன்ரூன் பார் அசோசியேசன் தலைவர் சிப்பிலி அசிஸ் கூறியுள்ளார். இந்த தீர்மானத்தினை உடனடியாக வாபஸ்பெறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.. முன்னதாக தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பியனுப்ப முடியும் என சுவிட்சர்லாந்து கூட்டாட்சி நிர்வாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.குறித்த இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்பமுடியும் என ஏற்கனவே செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அகதிகள் தொடர்பான சுவிஸ் கூட்டாட்சி காரியாலயம் தெரிவித்திருந்தது.. எனினும், மீண்டும் நாடுதிரும்பினால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என குறித்த அகதிகள் நீதிமன்…

  15. 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தாமதமாவதால் ஈழத்தமிழருக்கு இந்திய நேரடி நிதியுதவி; ஒவ்வொருவருக்கும் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கத் தீர்மானம் news 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் இலங்கைத் தமிழர்களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இலங்கை ரூபா மதிப்பில் ஒவ் வொருவருக்கும் தலா ரூபா 5 இலட்சத்து 50 ஆயிரம் (இந்திய ரூபா மதிப்பில் 2 லட்சத்து 45 ஆயிரம்) வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக ரூபா 1,000 கோடி ஒதுக்கப்பட உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்க ளுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க இந்திய அரசு உறுதியளித்தது. இதன்படி தமிழர் பகுதிகளான மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பா…

  16. தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைப்பதைத் தடுப்பதற்காகப் பேரினவாதிகள் சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் வெளிநாட்டு விஜயத்துக்கு இனவாதச் சாயம் பூசுகின்றனர் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நாட்டுக்குள் பிரச்சினை தீர்க்கப்படாத போதும் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அக்காலங்களில் வெளிநாடுகளுக்குச் சென்று முறைப்பாடு செய்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இது தொடர்பாக புளொட் இயக்கத் தலைவர் த.சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடு சென்றுள்ள கூட்டமைப்பினர் எந்தவொரு இடத்திலும் தனித் தமிழீழம் தொடர்பாக கருத்துக்களை வெளியிடவில்லை. அத்தோடு தமிழ் அரசியல் தலைவர்கள் வெளிநாட்டுகளுக்கு சென்றமை இது முதற்தடவையல்ல. கடந்த காலங்களிலும் த…

  17. சனிக்கிழமை, 05 நவம்பர் 2011, 02:32 GMT ] [ அ.எழிலரசன் ] சிறிலங்காவில் தமிழர்களின் இனப்படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் மன்னிப்பு வழங்கக் கோரியும் கோயம்புத்தூரில் மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளது. நாளை பிற்பகல் 4 மணியளவில் கோவை வஉசி மைதானத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, குடியியில் உரிமைகளுக்கான மக்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல்கட்சிகள், பொதுஅமைப்புகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளன. மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக நிறுவுனர் ராம…

  18. யுத்தத்தின்போது உதவியது போன்று அபிவிருத்தியிலும் இலங்கைக்கு உதவிசெய்வோம்: ரஷ்யா அறிவிப்பு [Friday, 2011-11-04 10:54:07] யுத்தத்தின்போது எவ்வளவு அர்ப்பணிப்புடன் ரஷ்யா உதவிபுரிந்ததோ அதேபோல் பொருளாதார அபிவிருத்தியிலும் உதவிசெய்யும் என்று ரஷ்ய தூதுவர் விளாடிமிர் பி.மிகேலோ குறிப்பிட்டார். கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் வரவேற்கத்தக்க வகையிலேயே உள்ளது. எனவே இவ்வுறவு மேலும் வலுப்பெற ரஷ்யா இலங்கையுடன் ஒன்றினைந்து செயற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்குன் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுபட ரஷ்யா உதவி செய்யும் என்றும், பொருளாதாரம் மற்றும் கண்ணிவெடி அகற்றலிலும் உதவி செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளா…

  19. சீன நிறுவனத்துடன் இலங்கை அரசு புதிய ஒப்பந்தம் இலங்கைக்கு போர் விமானங்களை விற்றுவந்த சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனமொன்றுடன் சிவில் கட்டுமான ஒப்பந்தமொன்றை இலங்கை அரசு செய்துகொண்டுள்ளது. முன்னதாக, இதே நிறுவனத்துடன் செய்துகொண்டிருந்த காணி விற்பனை ஒப்பந்தமொன்றை இலங்கை அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொண்டிருந்ததால், அந்த நிறுவனம் வழக்கு போடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே இந்த புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. காட்டிக் என்கின்ற சீன தேசிய விமானத் தொழிநுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தானம் என்பது இலங்கைக்கு போர் விமானங்களை ஏற்றுமதி செய்துவந்த சீன அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு இராணுவ ரீதியான ஏற்றுமதி இறக்கு…

  20. மேற்குலக நாடுளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், மக்களை பிழையான வழியில் இட்டுச் செல்லும் அரசியல் கட்சிகளை அரசாங்கம் சுவீகரிக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய காலாணித்துவ ஆட்சியாளர்களுக்கு கோள் சொல்லும் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள் குறித்து விசாரணை நடத்தி அவற்றை தடை செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். வினைத்திறனற்ற நிறுவனங்களை தேசியமயப்படுத்தும் அரசாங்கத்தின் உத்தேச யோசனைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இவ்வாறு தோல்வியடைந்த அரசியல் கட்சிகளை சுவீகரிக்கும் அதிகாரத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். …

  21. வன்னியில் முக்கியமான தொழிற்றுறைகள் விவசாயம் கடற்றொழிலும். நடந்த போர் இந்தத் தொழில்களையும் இந்தத் துறையினரையும் முற்றாகவே சிதைத்துவிட்டது. இப்பொழுது வன்னியில் ஒரு மீன்பிடித்துறைகம் கூட இல்லை. மீனவர்கள் தங்கள் தொழிலுக்கும் வாழ்வுக்குமாக சேகரித்து வைத்திருந்த எந்தப் பொருளுமே மிஞ்சவில்லை. அதைப்போலவே விவசாயிகளும் எல்லாவற்றையும் இழந்துவிட்டனர். பெரும்பாலான விளை நிலங்கள் போர் அணைப்பரப்பாகவும் கண்ணிவெடிப் பகுதிகளாகவுமே இருக்கின்றன. ஆனால் மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த இரண்டு தரப்பினர்களுக்கும் உதவிகள் ஓரளவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தவிர, மிகக் குறைந்த வட்டி வீதத்தில் தாராளமான கடனுதவிகளும் வழங்கப்படுகின்றன. இவையெல்லாம் …

  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் குறித்து கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற இரு வெவ்வேறு கூட்டங்களில் தெரிவித்திருந்த கருத்துகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ப. அரியநேத்திரம் எமது இணையத்துக்கு இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஜயமாகும். இதில் யார் செல்ல வேண்டுமென்றோ எந்தப் பிரதேசங்களைச் சேர்ந்தோர் செல்ல வேண்டுமென்றோ நோக்கப்பட வேண்டியதில்லை. முழு கிழக்கு மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே இந்தக் குழுவ…

  23. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து கூடுதல் எதிர்பார்ப்பு - காணப்படுகின்றது – அமெரிக்கா உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து கூடுதல் எதிர்பார்ப்பு காணப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த ஏழு ஆண்டுகள் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை உயரிய தரத்தில் இருக்கும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரச் செயலாளர் வெண்டி செர்மனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிக…

    • 4 replies
    • 769 views
  24. வன்னி மக்களுக்கு சொந்தமான பணத்தையும் சொத்துக்களையும் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். இந்த சொத்துக்கள் யாவும் அரச மாளிகையில் வசிக்கும் கே.பி.யிடமே உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களது மனைவியர் மற்றும் அவர்களது சகோதரிகளுக்கென ஐக்கியதேசியகட்சியின் ஐக்கிய மகளிர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில், மத்திய வகுப்பினரது வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக விளங்குகின்ற திட்டங்களை முடக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களே அதி…

  25. இலங்கை உள்ளிட்ட சட்டவிரோத குடியேறிகள் பலர் பாகிஸ்தானில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் மொத்தமாக ஐந்து மில்லியன் சட்டவிரோத குடியேறிகள் தங்கியிருக்கின்றனர். இலங்கை, பங்களாதேஸ், இந்தியா, ஈரான், ஈராக், சோமாலியா, ஜோர்தான், உஸ்பெகிஸ்தான், எகிப்து, பர்மா, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், அசர்பய்ஜான் உள்ளிட்ட 26 நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் இவ்வாறு சரணடைந்துள்ளனர். சட்டவிரோத குடியேறிகளின் அதிகரிப்பினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத குடியேறிகளினால் நாட்டில் பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான சட்டவிரோத குடியேறிகள் அரசியல் …

    • 2 replies
    • 763 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.