ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
நாம் தமிழீழத்தை மறந்து விட்டாலும் அரசும் பாதுகாப்புப்படையினரும் தமிழீழத்தை மறக்க மாட்டார்கள் போல் தெரிகிறது.நாம் அகிம்சை வழியில் நடத்தும் சாத்வீகப் போராட்டங்களுக்குத் தொடர்ந்தும் குந்தகம் ஏற்படுத்த முயன்றால் அதன் விளைவு விபரீதமாகவே இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய வினோ தொடர்ந்து உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார். வடக்கில் மட்டுமல்ல தென்பகுதியிலும் புழக்கத்தில் உள்ள சட்டவிரோத ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என ஆரம்பம் முதல் நாம் கோரிக்கை விடுத்தே வந்துள்ளோம். இதனை அரசு செவிமடு…
-
- 0 replies
- 826 views
-
-
கடற்படை வழங்கும் விசேட அடையாள அட்டையுடனேயே குடாக்கடலில் கடற்றொழில் செய்யமுடியும் என்ற புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒன்றரை மாதங்க ளுக்கு முன்னர் இந்த நடைமுறை கடற்படையினரால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகக் குருநகர், பாஷை யூர், நாவாந்துறை, காக்கைதீவு உள்ளிட்ட கடல் பகுதிகளில் மீனவர் தொழில் செய்வதாயின் கடற்படையினால் வழங்கப் படும் விசேட அடையாள அட் டையைப் பெற்றிருக்க வேண் டும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது. குடாக்கடலில் பல இடங் கள் இராணுவத்தின் வசமி ருந்து தற்போது கடற்படை யின் கட்டுப்பாட்டின் கீழ் கைமாறியதை அடுத்தே கடற் படையினர் இந்தப் புதிய நடை முறையை அமுல்படுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த காலங்களில் கடற் தொழில் செய்வதற்கு இராணுவத் தின் “பாஸ்” அனு…
-
- 2 replies
- 608 views
-
-
லங்கா ஈ நியூஸ் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது – CPJ 20 அக்டோபர் 2011 லங்கா ஈ நியூஸ் இணைய தளம் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஜே என்னும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குறித்த இணைய தளத்தின் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிப் பக்கங்களை உள்நாட்டில் பார்வையிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. லங்கா ஈ நியூஸ் ஊடகம் அரசாங்கத்திற்கு எதிரான வகையிலான தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 8ம் திகதி முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலும் அரசாங்கத்திற்கு எதிராக லங்கா ஈ நியூஸ் குற்றம் சுமத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. க…
-
- 0 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு மக்களுக்கு உரிய உழவு இயந்திரங்கள் வெலிஓயாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது:- 20 அக்டோபர் 2011 போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு என வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் வெலி ஓயாவுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் பத்து உழவு இயந்திரங்கள் இவ்வாறு எடுத்துச் செல்லப்படவுள்ளன. இதற்கான உத்தரவை முல்லை மாவட்ட கமநல சேவைப் பணிப்பாளர் வழங்கியுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவால் வழங்கப்பட்ட இச்த உழவு இயந்திரங்கள் வெலிஓயா பிரதேச செயலக பிரிவு சம்பத்த நுவரவுக்கு கொண்டு செல்வதற்கு உத்தரவ…
-
- 0 replies
- 509 views
-
-
2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்தவொரு பட்டதாரிக்கும் அரசாங்கம் வேலை வாய்ப்பு வழங்கவில்லை வடக்கு, கிழக்கு மீட்கப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 85 மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுவா அபிவிருத்தி என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான பா. அரியநேத்திரன் கேள்வி எழுப்பினார். 2011 ஆம் ஆண்டளவில் நாடளாவிய ரீதியில் 45 ஆயிரம் பட்டதாரிகள் இருக்கின்றனர். அதில் 6,000 பட்டதாகள் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் 45 வயதினையும் தாண்டிய வயது முதிர்ந்த பட்டதாகளாவர் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவி…
-
- 0 replies
- 1.3k views
-
-
'தமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்' நாட்டில் குறுகிய இனவாத அரசியலுக்கு தான் இடமளிக்கப் போவதில்லை என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கூட்டுக் குடிநீர் விநியோகத் திட்டத்தை இன்று புதன் கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும், யாரும் எவருக்கும் அடிமையாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்தும் தாழ்ந்த நிலையில் வைத்திருக்க சில அரசியல் தலைமைகள் முற்படுவதாகவும் அதற்கு இடமளிக்க முடியாத வகையில் அரசாங்கம் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கி…
-
- 1 reply
- 965 views
-
-
ஓஸ்ரேலியாவின் பேர்த் நகரத்தில் , இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரின் போது கவனஈர்ப்பு போராட்டங்களை நடத்தப்போவதாக ஒஸ்ரேலிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. 28ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதிவரை நடைபெற உள்ள இக்கூட்டத்தொடரில் சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்ளவுள்ளார். சனநாயகப் பண்பாடுகளை பேணிப் பாதுகாப்பதற்காக நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில், பாரிய போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர் பங்குகொள்வது பொதுநலவாயக் கட்டமைப்பையே அவமதிப்பதாகும் என ஒஸ்ரேலிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. சனநாயகப் பண்புகள் மீறப்படுகின்றபோது குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடுகளைப் பொதுநலவாயக…
-
- 1 reply
- 1k views
-
-
இறுதி யுத்த களத்தில் விடுதலைப் புலிகளது உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவர்களது ஆன்மாக்கள் திசை எங்கும் சிதறிச் சென்று உலக நாடுகள் எங்கும் ஈழத் தமிழினத்தின் மேல் சிங்கள அரசு நடாத்திய இன அழிப்புப் போருக்காக நீதி கோரியபடியே உள்ளன. ஒவ்வொரு விடுதலைப் புலி வீழும்போதும் தன் இலட்சிய வேட்கையை இறுகப் பற்றிக்கொள்கின்றான். இறுதிக் கணத்திலும் அவனது உதடுகள் 'புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்' என்றே உச்சரிக்கின்றது. தேசியத் தலைவர் அவர்களை நெஞ்சில் சுமந்தபடியே அவன் காற்றில் கரைகிறான். ஆதலால்தான், அவர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகின்றார்கள் என்று ஈழத் தமிழர்கள் நம்புகின்றார்கள். ஆம், அவர்கள் விதைக்கப்படுகின்றார்கள்! 'விழ, விழ எழுவோம்;! விழ, விழ எழுவோம்! ஒன்று விழ ந…
-
- 0 replies
- 1k views
-
-
வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுமாயின் மக்கள் மயப்படத்தப்பட்ட போராட்டங்கள் வெடிக்கும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எங்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுமாயின் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை ஜனநாயக ரீதியில் முன்னெடுத்து சர்வதேசத்திற்கு எமது கருத்துக்களை வெளிக் கொண்டுவருவோம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியப் பிரதிநிதிகள் இன்று புதன்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி கருத்தினைத் தெரிவித்துள்ளனர். எங்கள் மீது தாக்குதல் நடத்தி எமது கல்வி நடவடிக்கையை பாதிக்கக் செய்யும் செயல்களை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்…
-
- 0 replies
- 641 views
-
-
யுத்தத்திற்கு பின்னரான யாழ். குடாநாட்டின் நிலைமைகளை நேரில் வந்து அறிந்துகொள்வதற்காக ஜக்கிய அமெரிக்க நாடாளுமன்றக்குழுவினர் யாழ். குடாநாட்டிற்கான விஜயமொன்றை இன்று புதன்கிழமை மேற்கொண்டனர். கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் யாழ். சென்ற ஜக்கிய அமெரிக்க நாடாளுமன்றக்குழுவினரை வரவேற்ற யாழ். படைத் தலைமையக அதிகாரிகள் யாழ். கோட்டை மற்றும் யாழ். மாவட்ட செயலகம், யாழ். நகரப்பகுதி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். ஜக்கிய அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினரான கெட்சலர், வன்சான்சலர், ஜக்குயின்ரன்ஸ் ஆகியோரடங்கிய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தை நேரில் வந்து பார்வையிட்டனர். இதேவேளை, யாழ். குடாநாட்டின் மீள்குடியேற்றம், அபிவிருத்திப்பணிகள், மக்களின் வாழ்வாதார நிலைம…
-
- 0 replies
- 835 views
-
-
வடமாகாணத்திலேயே தமிழர்களை சிறுபான்மை இனத்தவராக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி: மனோ கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு குடியேற்றங்களை நடத்தி தமிழ், முஸ்லிம் மக்களை சிறுபான்மையினராக மாற்றி வருவதற்கு இணையான திட்டத்தை வடக்கில் அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. வடமாகாணத்தில் குறிப்பாக வன்னி பெருநிலப்பரப்பில் தமிழர்களை சிறுபான்மையினராக மாற்றிவிடும் கைங்கரியத்தில் அரசாங்கம் முனைப்புடன் செயற்படுகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழர்களை பொறுத்தவரையில் இந்த அரசாங்கத்திற்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. ஒரு முகத்தை வைத்துக்கொண்டு கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர். அடுத்த…
-
- 0 replies
- 314 views
-
-
25குடும்பங்களின் விபரங்கள்:- உதவிகளுக்காக காத்திருக்கிறார்கள். குறிப்பு :- இக்குடும்பங்களுடன் உதவிரும்புவோர் நேரடியாகவே தொடர்பு கொண்டு உதவலாம். தொடர்பு கொள்வோருக்கு நேரடியான தொடர்பினைத் தந்துதவுவேன். (1) வடிவேல் கோணேஸ்வரி (39 வயது) கணவன் : வடிவேல் (41 வயது) 30.08.2008 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர். பிள்ளைகள் (அ) காயத்திரி (19) பாடசாலை செல்பவர் (ஆ) ரசிகரன் (17) பாடசாலை செல்பவர் (இ) நிசாந்தன் (16) பாடசாலை செல்பவர் முகவரி இறால்குழி மூதுரில் (2) குகன் சுதர்சினி (27 வயது) கணவன் : நவரெட்ணம் குகன் (37) 04.02.2007 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர். பிள்ளைகள் (அ) தனுஜன் (10 வயது) (ஆ) சஜிதா (5 வயது) முகவரி கன்னிமேடு தம்பலகாமம் (3)…
-
- 1 reply
- 896 views
-
-
இலங்கையின் மனித உரிமை மீறல்கள்; பதிலளிக்காவிடின் அழுத்தம் அதிகரிக்கும்; மீண்டும் எச்சரிக்கிறது அமெரிக்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு உடனடியாக பிரதிபலிப்பை வெளிப்படுத்த வேண்டுமென்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறையின் பிரதிப் பேச்சாளர் மார்க்ரோனர், சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை இலங்கை வழங்கத் தவறும் பட்சத்தில் சர்வதேச அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியவை வருமாறு: இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க மற்றும் விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை இலங்கை ம…
-
- 1 reply
- 1.5k views
-
-
2007-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த நேரம் நான் பிரித்தானியாவின் முன் நாள் பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸ்( அந்த நேரம் அவர் நிழல் அமைச்சராக இருந்தார்) அவர்களை சந்தித்து சிறிலங்காவில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி கூறுவேன். . 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் பின்னரும் நான் அவரைச் சந்தித்தேன். அந்த நேரம் போர் முடிவடைந்துவிட்டதாகவும் இனிமேல் சிறிலங்காவில் அபிவிருத்தியினை மேற்கொள்ளவேண்டும் எனவும் ஃபொக்ஸ் கூறி இருந்தார். மட்டுமன்றி தன்னால் உருவாக்கப்பட்ட சிறிலங்காவை கட்டியெழுப்பும் நிதியத்திற்கு பலம் சேர்க்க பிரித்தானியாவில் உள்ள தமிழ் செல்வந்தர்களை தனக்கு அறிமுகப்படுத்தி தருமாறும் கேட்டுக்கொண்டார். . மேற்கண்டவாறு கூறியுள்ளார…
-
- 3 replies
- 1.3k views
-
-
தேசிய இனப்பிரச்சனையைப் பற்றிப் பேசும்போது தோழர் ஸ்டாலின் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறுவார். கடந்த இருபது வருடங்களாக தேசியப்பிரச்சனை அநேக முக்கிய மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கிறது, இரண்டாவது அகிலத்தின் காலத்திய தேசிய இனப்பிரச்சனையும், லெனினிய காலத்திய தேசிய இனப்பிரச்சனையும் ஒன்றே அல்ல. பரிமாணத்தில் மட்டுமல்லாமல் அவற்றின் உள்தன்மையிலும் அவை தீர்க்கமாக வேறுபட்டுள்ளன. (120) இரண்டாவது அகிலத்தின் காலத்திற்கும் தோழர் ஸ்டாலின் சொல்லும் பேராசான் லெனினின் காலத்திற்கும் இடையே குறைவான ஆண்டுகள் இடைவெளியே இருந்தாலும் அதற்குள்ளாக தேசியப் பிரச்சனை பற்றிய புரிதலில் மற்றும் அதுபற்றிய உரையாடலில் ஏற்பட்ட பாரதூரமான ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
[ புதன்கிழமை, 19 ஒக்ரோபர் 2011, 02:05 GMT ] [ கார்வண்ணன் ] அனைத்துலக அளவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய காவல்துறை சிறிலங்கா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். அண்மையில் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் நியுயோர்க் சென்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் எத்தனை பேர் அமெரிக்கா சென்றனர் என்றும் அவருடன் எத்தனை பாதுகாப்பு அதிகாரிகள் சென்றிருந்தனர் என்றும் ஐதேக உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “எவ்வளவு செலவு ஏற்பட்டாலும், எத்தகைய சூழ்நிலையிலும் சி…
-
- 0 replies
- 887 views
-
-
2012 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில், ஒதுக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாவில், கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்காக 3 சதவீதமான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மாத்திரம் 10 வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். நாடு அபிவிருத்தியடைவதாக அரசாங்கம் கூறினாலும், வீதிகளை அமைத்தாலும், நாட்;டில், வறுமையை ஒழிக்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. அத்துடன் நாட்டில் வறுமையை ஒழிக்க அரசாங்கத்திடம் எவ்விதமான வேலைத்திட்டங்களும் இல்லை எனவும் விக்ரமரத்ன கூறியுள்ளார். கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர…
-
- 0 replies
- 509 views
-
-
[Wednesday, 2011-10-19 11:21:00] வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் காணிப்பதிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க தமிழ்க் கூட்டமைப்புக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடந்தபோது அதில் கலந்துகொண்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்திருக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு எதிரான வகையில் செயற்பட்டு வருகிறது என்றும், அதற்குச் சிறந்த உதாரணமாக வவுனியாவில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் குறிப்பிடலாம் என்றும் அங்கு சுட்டிக்காட்டியுள்ள ஆளுங்கட்சி எம்.பிக்கள், அரசுக்கு சர்வதே…
-
- 0 replies
- 621 views
-
-
[Wednesday, 2011-10-19 11:12:45] இலங்கை தமிழர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாவது குறித்து ஜெயலலிதா மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என, தமிழக ஆளுநர் ரோசய்யா வலியுறுத்தியுள்ளார். நெல்லூர் மாவட்டம், காவலி அடுத்த முசுனூரு என்ற இடத்தில், நிருபர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது.. இலங்கையில், தமிழர்கள் தாக்குதலுக்குள்ளாவது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தங்களுக்கு அநியாயம் நடந்ததாக எவரேனும் எனது கவனத்திறகு கொண்டு வந்தால், அதற்கு தீர்வு காண, மாநில அரசுக்கு ஆலோசனை தெரிவிக்க தயாராக உள்ளேன். தமிழகத்தில் வாழும் தமிழர்களுடன், தெலுங்கு தாய் மொழியாக …
-
- 0 replies
- 1.1k views
-
-
2008 - 2010 ஆண்டு காலப்பகுதியில் 2006 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன வீரகேசரி நாளிதழ் 10/19/2011 10:12:03 AM இலங்கையில் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிகளில் 2006 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி நிதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஐ. தே. கட்சி எம்.பி சஜித் பிரேமதாச வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று நண்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. வாய் மொழி ம…
-
- 0 replies
- 464 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரோபர் 2011, 02:28 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] போர்க்குற்ற விசாரணை நெருக்கடிகளை அனைத்துலக அளவில் சந்திக்க ஆரம்பித்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்ற, நோபல் பரிசுக் குழுவை பயன்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்துலக அளவில் சரிந்து வரும் சிறிலங்கா அதிபரின் செல்வாக்கை தூக்கி நிறுத்தி, போர்க்குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு, அவருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இணையத்தளம் மூலம் முன்வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறிலங்காவில் தீவிரவாதத்தை முற்றாக அகற்றியது, அமைதியை ஏற்படுத்தி மூன்றாண்டுகளாக நிம்மதியான வாழ்வை மக்களுக்கு ஏற்படுத்திக்…
-
- 7 replies
- 1.1k views
-
-
சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் முன் வைத்த பிரேரணை ஒன்றுக்கு எந்த எதிர்ப்போ, மறுப்போ இல்லாமல் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. ருவண்டா மற்றும் தென்சூடான் ஆகிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது பற்றிய பிரேரணையே அதுவாகும். இந்தப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் அடுத்த கட்டமாக இந்த நாடுகளுக்கான தூதுவர்களை நியமித்து, தூதரகங்களையோ அல்லது தூதரகப் பணியகங்களையோ அமைக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளது. ஆபிக்காவில் உள்ள 54 நாடுகளில் அடங்கியுள்ள ருவண்டாவும், தென்டானும் 118 நாடுகள் அங்கம் வகிக்கும் அணிசேரா நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன. தென்சூடான் அ…
-
- 1 reply
- 887 views
-
-
முள்ளிவாய்க்காலில் நின்ற நேரடிச் சாட்சி மீனா:(Video in) Wednesday, October 19, 2011, 7:22 இறுதிப் போர் நடைபெற்றவேளை அவுஸ்திரேலிய தமிழ் பிரஜையான திருமதி மீனா கிருஷ்னமூர்த்தி தனது நேரடிச் சாட்சியத்தைப் பதிவுசெய்துள்ளார். அவருடன் டாக்டர் சாம்பவியும் இணைந்து அவுஸ்திரேலியாவில் 3 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்க முனைப்புகளைக் காட்டியுள்ளனர். இதனை அவுஸ்திரேலியாவின் முன்னணி தேசிய தொலைக்காட்சியான எ.பி.சி ஒளிபரப்பியுள்ளது. சுமார் 9 நிமிடம் ஒளிபரப்பப்பட்ட இந்தக் காணொளியால் அவுஸ்திரேலிய மக்கள் ஆடிப்போயுள்ளனர். மீனா தனது அனுபவத்தை விவரிக்கையில் தாம் முள்ளிவாய்க்கால் வரை சென்று எவ்வாறு உயிர்பிழைத்தேன் எனக் கூறியுள்ளார். வைத்தியசாலைகளை நோக்கி இலங்கை இராணுவம் ஏவிய ஏவுகணைகள் தொடக்கம் கட…
-
- 0 replies
- 1.2k views
-
-
பஞ்சம்: சோமாலியா http://save-somalia.blogspot.com/
-
- 0 replies
- 594 views
-
-
புதன்கிழமை, 19 ஒக்ரோபர் 2011, 01:32 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த பத்து மாதங்களில் 17 நாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் இந்த ஆண்டின் செப்ரெம்பர் மாதம் வரையான காலப் பகுதியிலேயே 17 நாடுகளுக்கு இவர் பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஜி.எல்.பீரிசின் இந்த வெளிநாட்டுப் பயணங்களுக்காக 15 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அதேவேளை பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா இந்தக் காலப்பகுதியில் 7 நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்து…
-
- 1 reply
- 692 views
-