Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆழ்கடல் மீன்பிடிக்கு இந்தியா ஊக்குவிப்பு இலங்கையும் இந்தியாவும் இணைந்து ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் வடகரைக்கு அப்பாலுள்ள ஒடுங்கிய கடற்பரப்பில் உண்டாகும் மோதல்களை தவிர்த்துக்கொள்ளலாமென இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் வலியுறுத்தியுள்ளார். ரஞ்சன் மத்தாய் தனது இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்தார். இரண்டு நாடுகளாலும் பயன்படுத்தக்கூடிய மீன்வளம் மிக்க கடல்ப் பகுதிகள் உள்ளதனால் வழமையான பகுதிகளுக்குள் மட்டும் மீன்பிடியை மட்டுப்படுத்த தேவையில்லையென அவர் கூறினர். வடபகுதிக்கு விஜயம் செய்த ரஞ்சன் மத்தாய் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமாரையும் சந்…

  2. [ புதன்கிழமை, 12 ஒக்ரோபர் 2011, 00:58 GMT ] [ கார்வண்ணன் ] தமிழ்மக்களின் மனிதஉரிமைகளை உறுதிப்படுத்தி, அதனைப் பாதுகாக்க ஊக்குவிப்பதாகவும், நீதியை நிலைநாட்டுவதாகவும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். நோர்வேஜிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐ.நா நிபுணர்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். நிபுணர்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும…

  3. தமிழ் அரசியல் கைதிகளின் அடிப்படைத் தேவைகளையாவது கொடுக்க உதவுங்கள். இலங்கை சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தமது அத்தியாவசிய தேவைகளுக்கான சிலவற்றுக்கான உதவிகளை வேண்டியுள்ளனர். அவசர தேவைகளான சவர்க்காரம் , பற்பசை , பற்தூரிகை போன்றவற்றை புலம்பெயர் சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கின்றனர். இவர்களது குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதும் இவர்களைச் சென்று பார்க்கவோ பொருட்களை வழங்கவோ பொருளாதார வசதிகள் இல்லாதுமுள்ளனர். உதவி வேண்டும் சிறைச்சாலைகளின் விபரமும் உதவி வேண்டும் தமிழ் கைதிகள் எண்ணிக்கையும் :- அனுராதபுரம் சிறைச்சாலை – 95பேர். கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலை – 240பேர். கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை – 200பேர் மொத்தம் = 535பேர்…

    • 0 replies
    • 471 views
  4. பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை அந்தப் பதவிலிருந்து உடனடியாகவே நீக்கி விடுமாறு அமைச்சர்கள், ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் என பல்வேறு தரப்பினரும் மஹிந்த ராஜபக்ஷவைக் நிர்ப்பந்தித்துள்ளனர் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலைக்கான முழுப் பொறுப்பையும் பாதுகாப்புச் செயலாளரே ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர். இதேவேளை கொலன்னாவைத் தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவி மற்றும் இந்தத் தொகுதியின் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து துமிந்த சில்வாவை உடனடியாகவே நீக்க வேண்டுமென அமைச்சர்கள் விடுத்த வேண்கோளையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது அந்தப் பொறுப்புகள் அனைத்த…

    • 3 replies
    • 1.6k views
  5. [Tuesday, 2011-10-11 20:41:32] பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களில் 3 தாலிக்கொடி அறுப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சில சம்பவங்கள் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பவுனின் விலை முன்னெப்போதும் இல்லாது உயர்வடைந்துள்ளது. இதனை சர்வதேச தொலைக்காட்சிகள் பலவும் நாளாந்தம் ஒளிபரப்பி வருகின்றது. பல தமிழ் பெண்கள் தமது தாலிக்கொடியை எந்நேரமும் அணிந்திருப்பது இல்லை. கோயில் அல்லது நல்ல காரியங்களுக்குச் செல்லும்போதே அதை அணிவது வழக்கம். ஆனால் சில பெண்கள் தாலிக்கொடியை எப்போதும் அணிவது வழக்கம். அவர்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்லும் போது கூட அதனை அணிந்தே செல்கிறார்…

    • 18 replies
    • 3.2k views
  6. யாழ்ப்பாணத்தில் இப்போது அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகங்கள் புலிகளின் காலத்தில் இடம்பெறவில்லை - யாழ். அரச அதிபர் முல்லைத்தீவில் அரச அதிபராகத் தான் இருந்த காலப் பகுதியில் அங்கு பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக தன்னிடம் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை எனவும், அங்கு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்றும் யாழ்ப்பாண அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாகப் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அளவுக்கதிகமாகக் கிடைத்திருப்பது குறித்து எமது செய்தியாளரிடம் கருத்துத் தெரிவிக்கைகயிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் உள்ள பல அரச அல…

    • 8 replies
    • 1.4k views
  7. வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன், வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள காணிப் பதிவு, நில அபகரிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் என்பவற்றுக்கு எதிராத் தமிழ்தேசிய கூட்டமைப்பு உண்ணாவிரதம் ஒன்றினை நடத்துவதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. வவுனியாவில் கூடிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றைய நிலையில் தமிழ் மக்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலநதுரையாடியுள்ளனர். இப்பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தினதும், சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை வவு…

  8. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புலி ஆதரவு அமைப்புக்களுக்குமிடையிலான தொடர்பு குறித்து 12 அக்டோபர் 2011 விசாரிக்க வேண்டும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய பாதுகாப்பச் செயலாளர் லியாம் பொக்ஸ்; மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளின் மூலம் இலங்கைக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. லியாம் பொக்ஸ் அவரது நண்பர் அடம் வெரிட்டியை இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களில் இணைத்துக் கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை …

  9. வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தையும் முகாம்களையும்அகற்றுமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்ற இவ்வேளையில், தற்காலிக முகாம்களை நிலையான முகாம்களாக மாற்றியமைப்பதான இராணுவத் தளபதியின் அறிவிப்பு தேவையற்றதும் ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தம் ஒன்றுக்கான தேவை அற்றுப் போயுள்ள நிலையில் படை முகாம்களுக்கான தேவை எதற்காக என்றும் அக்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. இலங்கை இராணுவத்தின் 62 ஆவது வருட நிறைவு விழாவில் கலந்து உரையாற்றிய இராணுவத் தளபதி, நாட்டிலுள்ள தற்காலிக இராணுவ முகாம்கள் நிரந்தரமாக்கப்படவிருப்பதாக கூறியிருந்தார். இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ம…

  10. இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்துவந்த அகதிகளில் ஒரு தொகுதியினர் இன்று காலை நாடு திரும்பினர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவின் ஏற்பாட்டில் இவர்கள் இன்று இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர். 15 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் இவ்வாறு இலங்கையை வந்தடைந்தனர். இலங்கையில் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது 276,000 பேர் அகதிகளாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து மே மாதம் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பிரகாரம் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு அழைத்துவர ஐக்கிய நாடுகள் சபை முயற்சி எடுத்த்து. இதன் படி இவ்வாண்டில் மட்டும் சுமார் 1,400 இலங்கை அ…

  11. ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட கல்முனை மாநகரசபை வேட்பாளர் கந்தையா விநாயகமூர்த்தி என்பவரது வீட்டில் நேற்று இரவு கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்துள்னர். கல்முனை பாண்டிருப்பு செல்லப்பர் வீதியிலுள்ள இவரது வீட்டிலேயே நேற்றிரவு 9.30 மணியளவில் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கைக்குண்டு தாக்குதலினால் இவரது வீட்டிற்கு சிறியளவு சேதங்களுக்குள்ளாகியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர். http://www.vanakkamnet.com/srilanka/

  12. [Tuesday, 2011-10-11 22:23:54] பாலியல் முறை கேடுகளில் பலாலி ஆசிரியகலாசாலை யாழ் மாவட்டத்தில் முன்னனியில் திகழ்வதாக மறைமுகமாகக் குறிப்பிட்ட யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாரை திட்டித் தீர்த்துள்ளார் பலாலி ஆசிரியர் கலாசலை அதிபர். பலாலி ஆசிரியர் கலாசாலையில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்த கருத்து வேதனையளிக்கிறது என பலாலி ஆசிரியர் கலாசாலையின் பீடாதிபதி எம். இக்னேஷியஸ் தெரிவித்துள்ளார். பலாலி ஆசிரியர் கலாசாலையில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்றுவருவதாகவும் இது தொடர்பில் தாம் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் தமிழ்மிரர் இணையத்தளத்திக்கு வழங்கி…

  13. மக்களுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாத நிலைக்கு அரசு எங்களைத் தள்ளிக்கொண்டு செல்கின்றது அரசு பேச்சுவார்த்தை என்று ஒருபுறம் கூறிக்கொண்டாலும் மறுபுறம் செய்கின்ற வேலைகள் தமிழ் மக்களுக்கு அச்சத்தையே ஏற்படுத்துகின்றது. அதுமட்டுமன்றி கூட்டமைப்பு மீதும் ஏன் இந்தியாவின் மீதும் கூட நம்பிக்கையீனம் ஏற்படும். இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலர் ரஞ்சன் மாத்தாயிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுத்துக் கூறப்பட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன்மாத்தாய்க்கும் இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெர…

  14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுக்களின் மூலமும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகவும், இனப்பிரச்சினைக்கு பொருத்த மான அரசியல் தீர்வு ஒன்று விரைவாக எட்டப்பட வேண்டும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மாத்தாய் இலங்கை அரசிடம் வலியுறுத் திக் கூறியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்திக் கூறியுள்ள தாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப் புடன் தொடர்ந்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு தீர்வு ஒன்று எட் டப்பட வேண்டும் என்பதில் இந்தியா அக்கறையுடன் இருப் பதாகவும், ரஞ்சன் மாத்தாய் இலங்கை அரசிடம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இ…

  15. ஏ.ஜே.எம் முஸாமில் கொழும்பு மேயராகவும், டைட்டஸ் பேரேரா பிரதி மேயராகவும் நியமிக்கப்படுவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சி தனது வெற்றிப் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க கூறினார். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதித் தலைவர் கருஜயசூரிய, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர். நகரில் அடிமட்ட மனிதர், நடுத்தர வகுப்பினர், குறைந்த வருமானமுடையோர் என அனைவரும் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதாக ரணில் விக்ரமசிங்க இதன்போ…

  16. வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறிப் பண மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நல்லூர் பகுதியில் வைத்துப் பொலிஸாரால் கைது செய் யப்பட்டுள்ளார். தற்போது கொழும்பில் வசித்து வரும் சிறிதரன் தம்பித்துரை என்பவரே யாழ்ப்பாண குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். நல்லூரில் உள்ள பிரபல விடுதி ஒன்றிலிருந்து வெளியே வந்த போதே சந்தேக நபர் வகையாக மாட்டிக் கொண்டார். சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே ஐந்து வழக்குகள் கல்கிசை நீதிமன்றில் உள்ளதாக யாழ்ப்பாண குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரான சிறிதரன் தம்பித்துரை, தான் தங்கியிருக்கும் இடத்தை அடிக்கடி மாற்றி வந்துள்ளார் எனவும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் சந்தேக…

  17. கனேடிய பிரதமர் ஹார்பர், ஜனாதிபதி மஹிந்தவை சந்திக்கத் திட்டம் 12 அக்டோபர் 2011 கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டு;ள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்;த் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கை ஜனாதிபதியை, பிரதமர் ஹார்பர் சந்திக்க எதிர்பார்ப்பதாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, எதிர்வரும் 2013ம் ஆண்டு இலங்கையின் ஹம்பாந்தொட்டையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை கனேடிய …

  18. பற்றி எரியும் எரிவாயு அரசியல் மன்னார் கடற்படுக்கையில், எரிவாயு வளம் இருப்பதை கெய்ன் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியிருப்பதாக கண்டியில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்த செய்தி உலகிலுள்ள ஏராளமான ஊடகங்களில் செய்தியாகியுள்ளது. போர் பற்றியும் அதற்குப் பின்னர் போர்க்குற்றங்கள், மனிதஉரிமைகள் தொடர்பாகவுமே இலங்கையில் இருந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் - இந்தச் செய்தி சிறிலங்காவை வேறொரு கோணத்தில் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதனால் தான் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் முக்கியமாக உற்று நோக்கியுள்ளன. அNதுவேளை, சர்வதேச அளவில் இந்தச் செய்தி பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்க, இலங்கையில் இதுபற்றிய சந்தேகங்களும் கிளம்பவே ச…

    • 0 replies
    • 512 views
  19. கட்சிக்கு கிடைத்ததை விடவும் மனோவிற்கு கிடைத்த விருப்பு வாக்குகள் அதிகம்! கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பெற்றுள்ள விருப்பு வாக்குகள் பற்றிய விபரத்தை சிறிலங்கா தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.ஐதேக சார்பில் மாநகர முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஏ.ஜே.எம். முசம்மில் 55,448 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை அடுத்து கிருசன் ஜோன் ராம் 9966 வாக்குகள் பெற்று இரண்டாது இடத்தைப் பெற்றுள்ளார். ஜனாநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசனுக்கு 28,433 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் கூறியுள்ளது. ஆனால் இந்தத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு கொழும்பு மாநகரசபையில் கிடைத்த மொத்த வாக்குகள் 26,22…

  20. கூட்டமைப்பினருக்கு ஹிலாரி கிளிங்டன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழர்களுக்கு துரிதகதியில் காத்திரமான ஓர் அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என இந்தியாவும், அமெரிக்காவும் இராஜதந்திர ரீதியில் வலியுறுத்திவரும் நிலையில் தீர்வுப் பேச்சுக்களின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்காவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவு படுத்துவதற்காக விரைகின்றனர்.. எதிர்வரும் 25ஆம் திகதியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கொண்ட குழு அமெரிக்கா புறப்படவுள்ளது. வோஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உயர்நிலை அதிகாரிகளைச் சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் தற்போ…

    • 10 replies
    • 1.2k views
  21. [Tuesday, 2011-10-11 21:28:31] கனடாவில் தற்போது எழுந்துள்ள தமிழர்களிற்கு ஆதரவான நிலைமை குறித்த விவகாரத்தில் ஆலோசனை வழங்கவும் கனடியத்தமிழர்களது எழுச்சிகளை கட்டுப்படுத்தவும் கனடாவிலுள்ள தூதுவருக்கு உதவவுவதற்காகா சிறப்பக் குழு ஒன்று கனடாவிற்கு விரைவில் செல்லவுள்ளதாக தெரியவருகிறது. கனடாவில் தற்போது கடமையிலிருக்கும் சிறீலங்காவிற்கான தூதுவர் சித்திராங்கனி வாகிஸ்வராவிற்கு உதவுவதற்கென அமைக்கப்பட்டுள்ள இக் குழுவில் கொழும்பிலுள்ள பெரும்பாண்மை இன ஊடகவியலாளர் ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதேவேளை, மேற்படி ஊடகவியலாளரே கருணா விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்த போது முதலில் கருணாவைப் பேட்டி கண்டவர் என்பதோடு அவரே கே.பி. என அழைக்கப்படும் குமரன…

  22. இலங்கை அரசின் நடவடிக்கையிலும் இலங்கையில் இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களிலும் நான் பொறுமை இழந்துள்ளேன் என்று ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்தார் நோர்வேயில் திங்கள் கிழமை ஆரம்பமான உலகில் அனைவருக்கும் 2030ஆம் ஆண்டுக்கிடையில் மின்சாரம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வந்தபோது விசேடமாக தெரிவு செய்யப்பட்ட சர்வதேச பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் போது இலங்கை தொடர்பாக நீண்ட நெடு நேரம் கருத்து தெரிவித்த ஜ.நா பொதுச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை விடயத்தில் நான் ஒரு விசேட நிபுணர் குழுவை அமைத்திருந்தேன். http://youtu.be/OxNNnO_FeFw அது உங்களுக்…

  23. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்டுத்துதல் போன்ற பிரச்சினைகளை முன்னெடுப்பதில் சிறீலங்கா அரசாங்கம் காலதாமதம் ஏற்படுத்துவதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். மனித உரிமைகள் நல்லாட்சி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு திருப்தியளிப்பதாக இல்லை என பிரிட்டன் தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு எதிர்வரும் 2013 ஆண்டில் சிறீலங்காவில் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள நிலையில் மனித உரிமைகள் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் சிறீலங்காவை பிரிட்டன் கோரியுள்ளது. குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்…

  24. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவுஸ்திரேலியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் பாரிய மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரொட் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஏற்கனவே அவுஸ்திரேலியா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடத்த அவுஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சாலீல் ஷெட்டி கோரிக்கை விடு…

  25. ஹம்பாந்தோட்டையில் தற்போது நடைபெற்று வரும் தெற்காசிய கடற்கரை விளையாட்டு விழாவையொட்டி இன்று (11) இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கடற்படையினருக்கும் பிரதேசவாசிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் கடற்படையினர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்த கடற்படையினர் இருவரும் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்துள்ளமை மருத்துவ அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது. மோதலின் பின்னர் ஏற்பட்ட நிலைமையைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டிருந்தனர். ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கடற்படையினருக்கும் பிரதேசவாசிகளுக்குமிடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.