ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
[Thursday, 2011-09-29 21:14:48] எனது ஊழல்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுமாயின் மாநகர முதல்வர் பதவியில் இருந்து உடன் விலகுவேன் என யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோயேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையின் 9 ஆவது கூட்டத்தொடர் இன்று வியாழக்கிழமை காலை யாழ்.மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். யாழ்.மாநகர சபையின் நிதி நிலமைகள், பாகுப்பாய்வு , வருமானங்கள் செலவீனங்கள் தொடர்பாக சபை உறுப்பினர்களுக்கு விளக்கும் தேவை தமக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் தான் மாநகர சபையின் வேலைத் திட்டங்களில் ஊழல் செய்து இருந்தால் அதனை ஆதாரங்களுடன் சபையில் நிரூபிக்கலாம் என சபை உறுப்பினர்களுக்கு அவர் சவா…
-
- 1 reply
- 856 views
-
-
கனடா தழுவி வெளியாகும் குளோப் அண்ட் மெயில் என்னும் ஆங்கில தினசரியின் செப்டம்பர் 29, வியாழன் பதிப்பில் கொள்கையில் மாற்றம்: மனித உரிமைகள் விடயத்தில் சிறீலங்காவின் மீது அழுத்தம் பிரயோகிக்கிறார் கனடியப் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் எனத் தலைப்பிட்டு சிறீலங்கா குறித்த கனடிய அணுகுமுறையின் பாரிய மாற்றங்கள் குறித்து விரிவான முதன்மைச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சமீபகாலமாக தமிழ் மக்களிடையே பெரிதாகவும், உலகலாவிய நாடுகள் மத்தியிலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்ற இவ்விடயம் குறித்து மேலும் தகவல் தெரிவித்துள்ள அப்பத்திரிகை கடந்த காலங்களில் தமிழர்கள் கனடிய அரசு குறித்து விசனம் கொண்டிருந்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. குறிப்பாக முள்ளிவாய்கால் பேரவலத்தின் போது பல சர்வதேச …
-
- 3 replies
- 1.2k views
-
-
[Thursday, 2011-09-29 21:07:47] யாழ்.குடாநாட்டில் இளவயதில் கர்ப்பமடைவோர் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மே மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையான காலப் பகுதியில் மாத்திரம் இத்தகைய 203 சம்பவங்கள் பிராந்திய சுகாதாரப் பணிமனையில் பதிவாகியுள்ளன. யாழ். மாவட்டத்தின் 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இளவயதுக் கர்ப்பங்கள் 75 மட்டுமே பதிவாகியிருந்தன. இதில் உடுவில் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிலே அதிகளவான சம்பவங்கள் பதிவாகியிருந்தன. நேற்றையதினம் யாழ். செயலகத்தால் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின்படி ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதிய…
-
- 0 replies
- 737 views
-
-
ஜெகதீஸ்வரனெண்ட ஒரு 33வயது இளைஞன் தன்ரை உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிற செய்திகளை அண்மைய நாட்களில நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறம். கடைசியுத்தத்தில காயமடைஞ்சு மருத்துவமனையிலயிருந்தவனை பூசா சிறைக்குக் கொண்டு போயிருக்கினம். அந்தச் சிறையில சரியான மருத்துவமில்லாமல் சரியான கவனிப்பில்லாமல் ஜெகதீஸ்வரன் தன்னுடைய இரண்டு சிறுநீரகமும் முழுமையாப் பாதிக்கப்பட்டு கடுமையான நிலமையில இப்ப கொழும்பு ஆதார வைத்தியசாலையில அவசர சிகிச்சைப்பிரிவில இருக்கிறார். இன்னும் 10கிழமையில இந்த இளைஞனுக்கு மாற்றுச்சிறுநீரகம் பொருத்தாவிட்டா இவரை காப்பாற்றேலாமப் போயிடும். எங்களுக்காக தன்னுடைய காலத்தை வாழ்வைத் தந்த ஜெகதீஸ்வரனுடைய உயிரைக் காக்க உலகமெல்லாம் வாழுற தமிழர்கள் எல்லாரிட்டையும் ந…
-
- 0 replies
- 818 views
-
-
ஹம்பாந்தோட்டையை வர்த்தகத் தலைநகரமாக்கும் திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்வு : 29 செப்டம்பர் 2011 அரசாங்கம் ஆராய்வு : கொழும்பின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் ஹம்பாந்தோட்டைக்கு மாற்றி அதனையே இலங்கையின்; வர்த்தகத் தலைநகரமாக்கும் திட்டம் குறித்து தற்போது அரசு ஆராய்ந்து வருவதாக துறைமுக அதிகார சபையின் தலைவரான கலாநிதி பிறியாத் பந்து விக்கிரம தெரிவித்துள்ளார்.கொழும்பில் வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிக்க இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் ஹம்பாந்தேட்டையில் தேவையான அளவு நிலம் உள்ளதன் காரணமாகவுமே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றுக் கொழும்பில் இடம்பெற்ற துறைமுக பாதுகாப்பு அதிகாரிகளின் மகாநாட்டில் கலந்து கொண்ட போதே அவ…
-
- 1 reply
- 781 views
-
-
[sunday, 2011-09-25 13:12:27] சனல்-4 வெளியிட்டுள்ள இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணத் திரைப்படத்தைக் கனடியப் பாராளுமன்றத்தில் எதிர்வரும் வாரங்களிற்குள் திரையிட மனிதவுரிமை கண்காணிப்பகம் நேரடியாக முயற்சிகளை எடுத்து வருவதாகத் தெரியவருகிறது. மனிதவுரிமை கண்காணிப்பகம் ஆரம்ப காலத்தில் விடுதலைப்புலிகளை தீவிரமாக எதிர்க்கும் ஒரு மனித அமைப்பாக செயற்பட்டு வந்தது. குறிப்பாக கனடாவில் விடுதலைப் புலிகளையும் உலகத் தமிழர் இயக்கத்தையும் தடை செய்வதற்காக நேரடியாக அது முழு மூச்சாக ஈடுபட்டது. மேற்படி விடுதலைப்புலிகளின் தடை தொடர்பான ஆவணத்திலும் மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் தகவல்களின் அடிப்படையிலேயே விடுதலைப்புலிகளைக் கனடாவில் தடை செய்வதாக கொன்சவேட்டிவ் அரசு அறிவித…
-
- 3 replies
- 939 views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தை அணுகுவதே பொருத்தம்! - சட்டநிபுணர் கருத்து!! வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு வெளியில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவகாரமானது இது குறித்த சாதகமான சமிஞ்கையை வெளிப்படுத்துவதாக சர்வதேச குற்றவியல் சட்டநிபுணர் Goran Sluiter தெரிவித்துள்ளதாக நெதர்லாந்து வானொலியின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து இந்த இணையத் தளத்தில் செய்திக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள ஊடகவியலாளரான Richard Walker, நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா படைத்தரப்பினர…
-
- 0 replies
- 844 views
-
-
Sep 30, 2011 / பகுதி: செய்தி / கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தில் பயணிகளை ;மயக்கி உடமைகள் கொள்ளை ஒருவர் மடக்கிப் பிடிப்பு! கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்ஸில் பயணித்த இருவருக்கு, நஞ்சு கலந்த பால் பக்கற் றுக்களை அருந்தக் கொடுத்து அந்த இருவரும் மயங்கிய பின்னர் அவர்களிடம் இருந்த 7 ஆயிரத்து 500 ரூபா பணம், கைத் தொலைபேசி, சங்கிலி என்பவற்றை அபகரித்துக் கொண்டு தப்ப முயன்ற காலியைச் சேர்ந்த ஒருவர் கையும் மெய்யுமாகப் பிடிபட்டு நீர்கொழும்புப் பொலிஸாரி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மயக்கமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இருவரும் உனடியாக நீர்கொழும்பு வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற…
-
- 1 reply
- 874 views
-
-
தேயிலை ஏற்றுமதியில் பெரும் பாதிப்பு ஜீவா சதாசிவம்/ வீரகேசரி இணையம் 9/29/2011 12:02:20 PM இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதும் முதுகெலும்பாகவும் விளங்கிய தேயிலை உற்பத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி ஆடைத் தொழில், உல்லாசபயணத்துறை ஆகியவையும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதானமாக உள்ளது. ஆனால், மேற்படி உற்பத்தித் துறைகள் இந்த வருடத்தில் வீழ்ச்சி கண்டுள்ளதாகத் தெரிய வருகிறது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் தேயிலை உற்பத்தியில் அதிகளவு வருமானம் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தபோதிலும் ஆகஸ்ட் மாத புள்ளிவிபரப்படி பெரும் வீழ்ச்சி கண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இதேவேளை, மத்தியகிழக்கு நாடுகளில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற அசாதாரண…
-
- 1 reply
- 1k views
-
-
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் இன்று காலை 10.26இற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். LC6286 என்னும் விமானத்தில் 100 பாதுகாப்புஉத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் மேற்படி 50 பேரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி நபர்களை தற்சமயம் தேசிய குற்றப் புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர். நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்களிடத்தே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை அகதிகள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவ்வாறு இலங்கை வந்த…
-
- 2 replies
- 1.8k views
-
-
நியுயோர்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதிநிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குத் தொடர்பாக அமெரிக்கா கருத்து வெளியிட மறுத்துள்ளது. வொசிங்டனில் நேற்று நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் அம்மையாரிடம், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக வழக்குத் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு அவர், இது நியுயோர்க் நீதிமன்றத்தில் உள்ள சட்டவிவகாரம் என்றும் அதுபற்றி மேலதிகமாக தன்னால் கருத்து வெளியிட முடியாது என்றும் பதிலளித்துள்ளார். இதனிடையே, ஐ.நாவுக்கான பிரதிநிதி என்ற வகையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவைப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நா.வுக்கான பிரதிநிதி என்ற வகையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாக்கும் பொறுப்பு ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு உள்ளதென நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது தனியான வழக்கு தொடரப்பட்டுள்ள போதும் அவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
சட்ட விரோதமாக சேவையிலிருந்து விலகியுள்ள 60 ஆயிரம் இராணுவத்தினரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மீண்டும் பொது மன்னிப்புக்கான கால அவகாசம் வழங்குவது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆரச்சி தெரிவித்தார். இந்த இராணுவத்தினரைக் கைது செய்த பின்னர், சட்டப்படி இராணுவ சேவையிலிருந்து அவர்களை விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை சட்டவிரோதமாக சேவையிலிருந்து விலகிச்சென்ற 11 ஆயிரம் இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். http://www.tamilthai.com/?p=27327
-
- 0 replies
- 756 views
-
-
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடிய அரசியல் - சட்ட ரீதியிலான வாய்ப்பு இலங்கையில் இல்லை - 29 செப்டம்பர் 2011 உருத்ரகுமாரன் : தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடிய அரசியல் மற்றும் சட்ட ரீதியிலான வாய்ப்பு இலங்கையில் இல்லை என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் உருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த ரமேஷின் மனைவி நியூயோர்க் சிவில் நீதிமன்றில் தொடுத்துள்ள வழக்கு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்து முடிந்த யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த ரமேஷ், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் ராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் படையினரால் …
-
- 1 reply
- 645 views
-
-
[Thursday, 2011-09-29 10:48:36] புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் மீளாய்வு செய்யும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பீ.வீ.030 என்ற விமானத்தின் மூலம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் புதன்கிழமை 15.00 மணிக்கு நாடு கடத்தப்படவிருந்ததாக சர்ச்சைக்குரிய செனல்4 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்கள், வெளிநாட்டு கைதிகள் மற்றும் ஏனைய குடிவரவு சட்டங்களை மீறியவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த விமானத்தின் மூலம் நாடு கடத்தப்படவிருந்தனர். எனினும், இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இறுதி நேரத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. http://bcove.me/ojjj9pyp …
-
- 0 replies
- 815 views
-
-
கொழும்பு சேரிப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு புதிய வசிப்பிடங்களை வழங்குவது அரசாங்கத்தின் விசேட கவனத்திற்குரிய விடயமாகும். எனவே 'வத்தைகள்' எனக் கூறப்படும் தோட்ட குடியிருப்புகளில் வாழ்வோர் இடவசதியுள்ள வீட்டுத் திட்டங்களில குடியமர்த்தப்படுவர் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்று கூறியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செய்தியாளர் மாநாட்டில் பேசிய நீர்ப்பாசன அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அத்துமீறிய குடியிருப்பாளர் உட்பட சகல சேரிவாழ் மக்களுக்கும் கட்டம் கட்டமாக வீடுகள் வழங்கப்படும் எனக் கூறினார். இவ்வாறு நடப்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிடிக்கவில்லை. அவர்கள் எத்தியோப்பியா, பொஸ்னியா, தமிழ்நாடு என பட்டப்பெயர் சூட்டப்பட்ட சேரிகளில் இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
[ வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2011, 00:13 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவில் நடந்து முடிந்த போரின் போது ஐ.நாவின் மனிதாபிமான மற்றும் பாதுகாப்புத் தொடர்பான கடப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் தொடர்பாக மீளாய்வு செய்ய ஐ.நா பொதுச்செயலர் உத்தரவிட்டுள்ளது சிறிலங்காவுக்கு மேலும் பல பிரச்சினைகளை உருவாக்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மீளாய்வை மேற்கொள்ள சவூதி அரேபிய நாட்டவரான ஐ.நாவின் முன்னாள் சனத்தொகை நிதியப் பணிப்பாளர் தொராயா ஒபெய்ட்டை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்துள்ளார். இவர், அடுத்த மாதம் ஆரம்பித்து நான்கு மாதங்களுக்குள் தனது பணியை நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …
-
- 0 replies
- 861 views
-
-
[ வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2011, 00:25 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை ஒளிபரப்ப நோர்வேயின் என்ஆர்கே தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒஸ்லோவில் உள்ள சிறிலங்கா தூதுவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த ஆவணப்படம் முற்றிலும பக்கச்சார்பானது என்றும், இதில் சிறிலங்கா மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வேக்கான சிறிலங்கா தூதுவர் றொட்னி பெரேரா குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், இத்தகைய ஆவணப்படத்தை ஒளிபரப்புவது அதனைக் குழப்பத்துக்கு உள்ளாக்கும் என்றும் அவர் தனது கடிதத…
-
- 0 replies
- 801 views
-
-
[ வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2011, 02:15 GMT ] [ தா.அருணாசலம் ] நியுயோர்க்கில் மகிந்த ராஜபக்சவுடன் சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து மாலைதீவு உதவி அதிபர் மொகமட் வாகிட் ஹசன் கலந்துரையாடியதாக சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட தகவலை மாலைதீவு உதவி அதிபரின் செயலகம் நிராகரித்துள்ளது. ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற போது சிறிலங்கா அதிபரை மாலைதீவு உதவி அதிபர் சந்தித்துப் பேசியதாகவும், ஆனால் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து அதன்போது பேசப்படவில்லை என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மனிதஉரிமை நிலைமைகள் குறித்த சிறிலங்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்குவதாக மாலைதீவு உதவிஅதிபர், சிறிலங்கா அதிபருக்கு வாக்குறுதி அளித்…
-
- 0 replies
- 720 views
-
-
முன்னாள் போராளிகள் 1750பேரை அலரிமாளிகையில் வைத்து மஹிந்த விடுவிப்பாம்! Published on September 29, 2011-9:54 am புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 1750 பேர் நாளை அலரிமாளிகையில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இவர்கள் 1750 பேரும் முதல் முறையாக நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரி மாளிகையில் வைத்து அவர்களது உறவினர்கள், பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எம்.எஸ். சதீஷ்குமார் தெரிவித்தார். வவுனியா புனர்வாழ்வு முகாமிலிருந்து அழைத்து வரப்படும் இவர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினரால் அலரி மாளிகைக்கு அழைத்துவரப்படுவர். அலரி மாளிகையில் நடைபெறும் நிகழ்வின் பின்னர் ஜனாதிபதியினால் இவர்கள் சமூ…
-
- 1 reply
- 700 views
-
-
புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011 14:02 | 50 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்தவர்களில் ஒரு தொகுதியினர் சற்று நேரத்துக்கு முன்னர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 50 இலங்கையர்களும் அடங்குவர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மாலை பிரித்தானிய நேரடிப்படி நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாளை அதிகாலை கொழும்பை வந்தடையவுள்ளனர். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=9996:50---&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
-
- 2 replies
- 967 views
-
-
இந்தியா ஒரு போர்க்குற்றவாளி- சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு அன்புத்தோழர்களே வணக்கம். இந்திய அரசு இந்திய அமைதிப்படை என்னும் பெயரில் ஈழத்தில் செய்த கொடுமைகள் நீங்கள் அறிந்ததே. அந்தக்கொடுமைகளுக்கு கேள்வி கேட்கும் நேரம் இதோ வந்து விட்டது. கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என்று உட்பட எண்ணற்ற போர்க்குற்றங்களை செய்த இந்திய அரசை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம். உங்கள் ஆதரவையும், ஆதாரங்களையும் அளிக்க வேண்டி நிற்கின்றோம். சேதணை தாண்டி வந்தாடிய வானரக்கூட்டம் செய்த போர்க்குற்றங்களுக்கும், கொலைகளுக்கும் பொறுப்பேற்க வைப்போம். வீடியோ, செய்தித்தாள்கள், இன்னபிற அனைத்து ஆதாரங்களையும், அது சம்பந்தப்பட்ட தகவல்களையும் உடனடியாக ipkfwar…
-
- 5 replies
- 2k views
-
-
சிறிலங்காவின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் போர்க்குற்றவாளியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராஜதந்திரி என்பதால், ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள வியன்னா ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் சலுகைகள், நியமங்கள் ஊடாக அவர் பாதுகாக்கப்படுவார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. . மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மற்றும் அவருக்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் அனுப்பியுள்ள அழைப்பாணை என்பவற்றை தாம் கவனத்தில் எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். . ஐக்கிய நாடுகள் வழங்கும் இராஜதந்திரிகளுக்கான பாதுகாப்பு மற்றும் வியன்னா உடன்படிக்கை கூற்றுக்கள் என்பன…
-
- 5 replies
- 1.9k views
-
-
நெதர்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து மனித நேயப்பணியாளர்கள் மீதான வழக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றதிற்கு வருகின்றது. நெதர்லாந்தில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியதாகவும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி இவர்களுக்கு நீண்டகால சிறைத்தண்டனையை வாங்கிக்கொடுப்பதற்கு சிறீலங்கா கடுமையாக முயன்றுவருகின்றது. இவர்களுக்கு எதிராக வாதிடும் நெதர்லாந்து சட்டத்தரணிகளும் பத்து முதல் 16 ஆண்டுகளுக்கு நீண்டகால சிறைத்தண்டனையை வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றார்கள். எனினும், இவர்களுக்கு ஆதாரவாக வாதிட்டுவரும் சட்டத்தரணி விக்டர் கோப், சந்தேக நபர் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும் அதிர்ச்சியளிக்கும் வகையிலான குற்றச்சாட்டுக்கள் சுமத்த…
-
- 1 reply
- 548 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் தலை தூக்கியுள்ள மர்மநபர்கள் நடமாட்டத்தினால் அச்சமான சூழ்நிலை நிலவி வருகின்றது.நேற்றைய தினம் திருவையாறு பிரதேசத்தில் மர்மநபர்கள் வீடு புகுந்து நடத்திய வாள்வெட்டில் தந்தையும், மகனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது குறித்த பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக மர்மநபர்கள் நடமாட்டம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு 5பேர் கொண்ட மர்மநபர்கள் வீட்டினுள் நுழைந்துள்ளனர். வீட்டினுள் நுழைந்தவர்கள் உடனடியாகவே வீட்டில் படுத்துறங்கிக் கொண்டிருந்த தந்தையான பொன்னையா பாலசிங…
-
- 0 replies
- 507 views
-