ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
[ வியாழக்கிழமை, 22 செப்ரெம்பர் 2011, 01:06 GMT ] [ தா.அருணாசலம் ] நியுயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 66வது கூட்டத்தொடரில் பங்கேற்க நியுயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அங்கு பல்வேறு நாடுகளினதும் தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் அவர், நைஜீரிய அதிபர் குட்லக் எபெலே ஜொனாத்தனையும், கிர்கிஸ்தான் அதிபர் றோசா ஒட்டுன்பயேவா அம்மையாரையும், ஸ்லோவேனிய அதிபர் டானியோ டக்கையும், செனகல் அதிபர் அப்துலாவ் வாடேயையும…
-
- 0 replies
- 432 views
-
-
இந்த வருடத்தின் இறுதிக்கு முன்பு பேச்சுக்களின் மூலம் தீர்வு கிட்டுமென மாவை சேனாதிராஜா நம்பிக்கை வெளியிட்டார் அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுக்களின் மூலம் இந்த வருட இறுதிக்குள் நல்ல தீர்வுகிடைக்குமென நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட அரசியல் பணிமனை, பாண்டிருப்பு நற்பிட்டிமுனை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். அரசுடன் மீண்டும் பேச்சு ஆரம்பிக்கப்பட்டமைக்கு, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் அழுத்தங்கள் காரணமெனவும், தமிழ்த் தேசியக் கூட்…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கையின் போர்க்குற்றம்- கனடா நாளை பிரேரணை சமர்ப்பிக்கிறது! Published on September 21, 2011-8:25 pm · No Comments ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமை பேரவையின் 18ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பான தீர்மானம் ஒன்றை நாளை வியாழக்கிழமை சமர்ப்பிக்க இருப்பதாக ஐ.நா.மனித உரிமை பேரவை வட்டாரங்கள் இன்று மாலை தெரிவித்தன. 18ஆவது கூட்டத்தொடரில் பிரேரணைகள் நாளை நண்பகல் ஒருமணிக்கு முதல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கால கெடு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதற்கு முன்னர் நாளை காலையில் கனடா இத்தீர்மானத்தை பேரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும், இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஒஸ்ரேலியா உட்பட ஐரோப்பிய நா…
-
- 2 replies
- 1.5k views
-
-
அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்கா சென்று தற்போது புதிய ஜேவிபி அணிக்கு தலைமை தாங்கும் குமார் குணரத்தினத்தை கொலை செய்யுமாறு கோத்தா உத்தரவு பிறப்பித்துள்ளார். குமார் குணரத்தினம் அண்மையில் கொழும்பு சென்று ஜேவிபி இனரது அணியை தமிழர்க்கு சாதகமாக செயற்பட தூண்டினார், ஆனால் அதற்கு ஜேவிபியில் உள்ள சிங்கள பேரினவாத குழுக்கள் மறுத்துவிட்டன. இதனால் குமார் பக்கம் பெரும்பாலான தலைவர்கள் சாய்ந்தனர். . குமார் பக்கம் உள்ள ஜேவிபி அணியினர் புதிய கட்சி ஒன்ரை உருவாக்க திட்டமிட்டு வந்துள்ளனர். இந்த பின்னணியில் குமார் குணரட்னம் சர்வதேச சமூகத்தால் சிங்களவர்களுக்கு பிரிவினையினை தோற்றுவிக்க வந்தவர் என்ற குற்றச்சாட்டினை கோத்தா சுமத்தியுள்ளதுடன் அவரை கைது செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார். மறுபுறமாக இ…
-
- 4 replies
- 1k views
-
-
Published on September 21, 2011-1:29 pm No Comments தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த மாநாடும், பொதுக்கூட்டமும் எதிர்வரும் 24ஆம் 25ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெறவுள்ளது என்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி அறிவிப்பு விடுத்திருந்தார். இந் நிலையில் இந்த நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்றும் மீறி நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வக்கீல் நோட்டீஸ் அனு…
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழ்க்கள உறவுகளே கீழுள்ள இணைப்பைப் பார்த்து உங்களது கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். நன்றிகள் http://ca.news.yahoo.com/tamil-protesters-ask-probe-war-crimes-allegations-184553741.html
-
- 3 replies
- 1.2k views
-
-
ஐ.நா மனிதவுரிமைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர கனடா முயற்சி? தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவிற்கு எதிராக நாளை, வியாழக்கிழமை (22.09.11) தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு கனடா முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நாதம் ஊடகசேவை இன்று (21.09.11) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் 18வது மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் சர்வதேச நாடுகளும் அனைத்துலக மனிதவுரிமை அமைப்புகளும் கொடுத்துவரும் கடும் அழுத்தங்கள் காரணமாக சிறிலங்கா அரசாங்கம் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வ…
-
- 0 replies
- 972 views
-
-
உயிரைக் கொடுக்கும் உறவுகளுக்காக ஒரு நாளைக் கொடுப்பது கடினமா? [ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 08:04.18 PM GMT ] ஐ நா வரும் போர் குற்றவாளி ராஜபக்ச அரசியல் அடிப்படையிலும், சட்ட ரீதியிலுமான எமது எதிர்ப்பைக் காட்டவேண்டியது எமது கடமையல்லவா? கூண்டில் இருக்கவேண்டிய குற்றவாளி இன்று சுதந்திரமாக உலகெலாம் செல்வதற்கு யாரப்பா காரணம்? நாமல்லவா? இலவச பேரூந்து வண்டிகள் உயிருள்ளவரை வாழ்க்கைதான் என வாழும் ஓர் அழிக்கப்படும் இனத்தின் உறவுகளே! ஐ நா வரும் போர் குற்றவாளி ராஜபக்ச அரசியல் அடிப்படையிலும், சட்ட ரீதியிலுமான எமது எதிர்ப்பைக் காட்டவேண்டியது எமது கடமையல்லவா? கூண்டில் இருக்கவேண்டிய குற்றவாளி இன்று சுத்ந்திரமாக உலகெலாம் செல்வதற்கு யாரப்பா காரணம்? நாமல்லவா? சர்வ…
-
- 4 replies
- 768 views
-
-
ராஜபக்ச உரைக்கான திகதியில் மாற்றமில்லை-தமிழீழ அரசு அறிவிப்பு ஐ.நா சபையில் மகிந்த ராஜபக்ச ஆற்றவிருக்கும் உரைக்கான திகதியில் மாற்றமில்லை என்று நாடு கடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சு அறியத் தருகின்றது.மகிந்த ராஜபக்ச ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவிருந்த தினமான செப் 23 அன்று பல்லாயிரக் கணக்கில் தமிழ் மக்கள்,நாடு கடந்த தமிழீழ அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஐ.நா முன்றலில் திரள்வதை முடக்கு முகமாக ராஜபக்சவின் உரை 20ம் திகதிக்கு முன்போடப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா அரசுக்குச் சார்பான ஊடகங்களால் செய்தியொன்று கசிய விடப்பட்டிருந்தது. அச் செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்பதனால் நாடு கடந்த தமிழீழ மக்களை வீண் குழப்பமடைய வேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது. இதேவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
மகாத்மா காந்தி பிறந்த நாளன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் உயிரைக் காக்க உண்ணாவிரதம்: நெடுமாறன் அழைப்பு. [Wednesday, 2011-09-21 22:14:44] மகாத்மா காந்தி பிறந்த நாளன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது உயிரைக் காக்க பட்டினிப் போராட்டம் நடத்த வேண்டும் என்று 3 தமிழர் உயிர் காப்பு இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும், இந்தியாவில் மரண தண்டனையை அறவே ஒழிக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளையும் முன் வைத்து, காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து நகரங்களி…
-
- 0 replies
- 487 views
-
-
http://youtu.be/W5HF2GTzueU முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது இடம்பெற்று வரும் சிங்களக் குடியேற்றம் உட்பட பலவேறு விடயங்கள் குறித்து தாம் இன்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பெற்றீசியா புயூட்டினிஸிடம் விளக்கியதாகத் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்த தகவல்களை ஒளிவடிவில் இணைத்துள்ளோம்.அதில் அவரது குரலைக் கேட்கலாம். http://www.globaltam...IN/article.aspx
-
- 0 replies
- 842 views
-
-
Published By பெரியார்தளம் On Wednesday, September 21st 2011. Under காணொளி, தமிழரைக்காப்போம் Edit Post போர்க்குற்ற வரலாற்றில் ராசீவ்காந்தியும் ராசபக்சவும் என்ற தலைப்பில் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், தோழர் தியாகு உரை… தோழர் தியாகு: ராசீவ் காந்தி உடலளவில் கொல்லப்பட்டார்; நாம் அவரை அரசியல் படுகொலை செய்வோம். http://www.periyarthalam.com/2011/09/21/war-criminals-rajiv-rajapakse/
-
- 0 replies
- 648 views
-
-
கே.பி யின் 600 வங்கிக் கணக்குகள் 15 கப்பல்களுக்கும் நடந்த மாயம் என்ன? _ 9/21/2011 6:52:03 PM குமரன் பத்மநாதனாகிய கே.பி கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு 600 வங்கிக் கணக்குகளும், 15 கப்பல்களும் இருப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் கூட இவற்றுக்கு என்ன நடந்துள்ளது என்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையிலும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்று ஜே.வி.பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிதி மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி சேகரிப்பதை ஒடுக்கும் சமவாய திருத்தச் சட்டப் பிரேரணை விவாதத்தில கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியினால் 2006 ஆம் ஆண்டு ஆரம…
-
- 0 replies
- 1.3k views
-
-
போர்க் குற்றவாளியான இலங்கை ஜனாதிபதியை ஜநா சபையில் பேச அனுமதிக்க கூடாது: பிரதமர் உருத்திரகுமாரன் கடிதம். [Wednesday, 2011-09-21 13:28:10] இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு ஜக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற அனுமதி வழங்கக்கூடாது என ஐ.நா சபை பொதுக்கூட்ட தலைவர் நஷீர் அப்துல் அசீச் அல்-நஷீருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றுள்ள இனப்படுகொலை மற்றும் யுத்தகுற்ற செயல்கள் தொடர்பில் ஜக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டியே அவர் இந்த கோரிக்கை முன்வைத்துள்ளார். இதேவேளை இறுதி யுத்தத்தில் சுமார் 40 ஆயிரம் பொது மக்கள் கொலை செய்யப்…
-
- 0 replies
- 611 views
-
-
சந்திரிக்காவும் அமெரிக்காவில்!.. கிளின்டன் உலகளாவிய முனைப்பு சந்திப்பில் கலந்துள்ளார்! [Wednesday, 2011-09-21 16:35:04] கிளின்டன் உலகளாவிய முனைப்பு ஏழாவது வருடாந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கலந்து கொண்டுள்ளார். செப்டெம்பர் 20ம் திகதி செரட்டோன் நியூயோர்க விடுதியில் ஆரம்பமாகியுள்ள குறித்த சந்திப்பு நாளை வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் 2006ம் ஆண்டு தொடக்கம் குறித்த சந்திப்பில் கலந்து கொள்வதோடு கிளின்டன் உலகளாவிய முனைப்பின் வறுமை ஒழிப்பு ஆலோசனைக் குழுவின் அங்கத்தவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச தலைவர்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி குறித்து கிளின்டன் உல…
-
- 0 replies
- 715 views
-
-
தினக்குரல் பிரதம ஆசிரியர் உதவி ஆசிரியர்கள் தினக்குரல் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க தடை! Published on September 12, 2011-1:04 pm · தினக்குரல் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம் உட்பட செய்தி ஆசிரியர், உதவி ஆசிரியர்கள், உட்பட 25க்கும் மேற்பட்ட ஆசிரிய பீட உறுப்பினர்களையும் நாளை மறுதினம் செப்;டம்பர் 14ஆம் திகதியிலிருந்து தினக்குரல் நிறுவனத்திற்குள் பிரவேசிக்க முடியாது என தினக்குரல் வெளியீட்டு நிறுவனத்தை வாங்கி வீரகேசரி நிறுவனம் தற்போது உருவாக்கியிருக்கும் ஏசியன் மீடியா பப்ளிகேசன் நிறுவனம் அறிவித்துள்ளது. தினக்குரல் பப்ளிகேசன் நிறுவனத்தை வாங்கிய வீரகேசரி நிறுவனம் தினக்குரல் பத்திரிகையை யூன் 30ஆம் திகதியிலிருந்து நடத்தி வருகிறது. இதேவேளை தினக்குரல் பப்ளிகேசன் நிறுவனத்தி…
-
- 2 replies
- 1.3k views
-
-
Published By பெரியார்தளம் On Wednesday, September 21st 2011. Under சென்னை, பெரியார் திராவிடர் கழகம், முதன்மைச்செய்திகள் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனைக்கு எதிரான பயணக் தொடக்கம் மற்றும் பொதுக்கூட்டம் என்ற பெயரில் நடந்த கூட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செ.துரைசாமி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன், விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய வைகோ, தலைநகர் சென்னையின் வரலாற்றில் உயர்நீதிமன்ற…
-
- 0 replies
- 617 views
-
-
பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனைக்கு எதிரான பயணக் தொடக்கம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கி ஆற்றிய உரை. இந்த பரப்புரை பயணம் மூவருக்கான மரண தண்டனையை ரத்து செய்யுங்கள், மரண தண்டனை என்பதையே நீக்கி விடுங்கள் என்ற கருத்துக்களை உள்ளடக்கி, ஒரு பரப்புரை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான், இந்த பயணத்தை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். இப்போது நாம் மூன்று தமிழர்களின் உயிர் பாதுகாப்பு என்பதை தான் முதண்மை செய்தியாக பேசிக்கொண்டிருக்கிறோம். அதை இன்னும் விரிவாக மரண தண்டனை வேண்டாம் என்று சொல்லுகிறோம். தண்டனை வேண்டாம் என்பது அல்ல …
-
- 0 replies
- 502 views
-
-
[ புதன்கிழமை, 21 செப்ரெம்பர் 2011, 02:01 GMT ] [ மட்டக்களப்புச் செய்தியாளர் ] சிறிலங்கா கடற்படையுடன் போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக வந்துள்ள இந்திய கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதிகளவிலான பாரிய போர்க்கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. கடந்த 19ம் நாள் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தப் போர்க்கப்பல்கள், எதிர்வரும் 24ம் நாள் போர்ப்பயிற்சிகள் நிறைவடைந்த பின்னரே புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அதிகளவிலான வெளிநாட்டுப் போர்க்ப்பல்கள் தரித்து ந…
-
- 2 replies
- 890 views
-
-
சிறிலங்காவின் தலைவிதி ஆபத்தானதாகவே அமைந்துள்ளது. தற்போது நாட்டுக்கு எதிராக சர்வதேசத்தில் உள்ள அச்சுறுத்தல்கள் குறித்து பொதுமக்கள் போதியளவு விழிப்புடன் இல்லை. புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலத்தை விட ஆபத்தான சூழலே இன்று இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.. ஜெனீவா மனிதஉரிமைகள் சாசனத்தில் இலங்கைக்கு எதிரான ஆபத்துக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்குலகத்தின் நோக்கமே நாட்டை இரண்டாக பிரிப்பதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிரேஷ்ட அரச தலைவர்களை தூக்கிலேத்துவதுமே ஆகும்.. பான்கீமூன் நிபுணர் குழுவின் அறிக்கையை ஜெனீவாவிற்கு அனுப்பியது திட்டமிட்ட செயலாகும். அரசாங்கத்தின் முட்டாள் தனத்தால் தான் ஐ.நா.அறிக்கைக்கு அங்கீகாரம் கிடைத்தது எவ்வாறாயினும் எதிர் வரும் மார்ச் மாதத்திற்கு …
-
- 1 reply
- 1k views
-
-
[ புதன்கிழமை, 21 செப்ரெம்பர் 2011, 01:30 GMT ] [ தா.அருணாசலம் ] ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்ரனைச் சந்தித்துப் பேசியுள்ளார். கிளின்ரன் நிலையத்தின் வருடாந்தக் கூட்டத்தின் போதே பில் கிளின்ரனை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று சந்தித்துள்ளார். அதேவேளை, சிறிலங்கா அதிபர் மிகப்பெரிய பட்டாளத்துடன் நியுயோர்க் சென்று பணத்தை வீணடிப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று விமர்சித்துள்ளது. மகிந்த ராஜபக்சவுடன் 116 பேர் நியுயோர்க் சென்றுள்ளனர். இவர்கள் தங்குவதற்கு நியுயோர்க்கின் றிட்ஸ் காட்டன் விடுதியிலும், ஹெம்லி காக்லின் விடுதியிலும் …
-
- 2 replies
- 848 views
-
-
அமெரிக்கத் தூதுவர் வன்னி விரைவு: கூட்டமைப்யையும் சந்திக்கிறார் Wednesday, September 21, 2011, 12:08 வன்னியின் இன்றைய நிலவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுட்டனிஸ் இன்று அங்கு பயணமொன்றை மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது அரச அதிகாரிகளை மட்டுமன்றி பொதுமக்களையும் அமைப்புகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிய வருகிறது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வன்னிக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதி ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார். மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனையும் அவர் கிளிநொச்சியில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதன்கிழமை, செப்டம்பர் 21, 2011 யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற கிறிஸ் பூதம் நடவடிக்கைகள், களவு,கொலைகள் உட்பட்ட அசாதாரண சூழ்நிலைகளை கட்டுப்படுத்த பொலிஸார் தவறுகின்றனர் என யாழ் அரச முகவர் திருமதி இமெல்டா சுகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் கட்டளைத்தளபதிக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில். யாழ்ப்பாணத்தில் கிறிஸ் பூதம்என்ற போர்வையில் பெண்கள் மீதான சேட்டைகளும் திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இது தொடர்பில் பொதுமக்களால் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதில்லையென தெரியவந்துள்ள…
-
- 0 replies
- 698 views
-
-
சிறிலங்காவில் பிரபல பத்திரிகைகளின் கூட்டு நிறுவனமான லேக் ஹவுஸ் குழுமத்தின் தலைவர் பந்துல பத்மகுமார அவர்களை மஹிந்தவின் புதல்வர் நாமல் இராஜபக்ஷ பணி நீக்கம் செய்யப்போவதாக கூறப்பட்டுள்ளது. இதனை ஊழியர்கள் கூட்டத்தில் நாமல் பகிரங்கமாகவே கூறியுள்ளார் இதனால் கொதிப்படைந்த பந்துல அவர்கள் நாமல் என்னை பதவி நீக்கம் செய்ய யார்? அவரால் என்னை ஒன்று செய்ய முடியாது என சவால் விடுத்துள்ளார். மேலும் தனக்கு மஹிந்த இராஜபக்ஷ ஒருவரே தலைவர் என்றும் மற்றவர்கள் ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார். தான் மஹிந்த இராஜபக்ஷவை அண்மையில் சந்தித்துள்ளதாகவும் அவர் தனக்கு ஆதரவு வழங்குவதாகவும் கூறியுள்ளார். நாமல் இராஜபக்ஷ தனது தாய்வழி உறவினர்களை பெரும் பொறுப்புக்களில் அமர்த்துவதற்காக இத்த…
-
- 0 replies
- 806 views
-
-
[ புதன்கிழமை, 21 செப்ரெம்பர் 2011, 00:40 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவைக் குறிவைத்து அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக் குழுவை அமைக்கும் நோக்கில், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பல்வேறு பொய்களும் அவிழ்த்து விடப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், போரின் கடைசி 5 மாதங்களில் வன்னியில் ஒரு இலட்சம் பேர் மரணமானதாக பிரித்தானிய நாடாளுமன்ற விவாதத்தில் கூறப்பட்டுள்ளதாவும், இந்த விபரங்கள் அவர்களுக்கு எப்படித் தெரியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் கவனத்தை …
-
- 2 replies
- 1.3k views
-