Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [saturday, 2011-09-10 11:21:57] யாருக்காகவும் நான் சாட்சி சொல்லப் போவதில்லை. அது தொடர்பில் தமிழ் மக்கள் பயப்பட வேண்டிய அவசியமுமில்லை. வன்னியில் சாவின் மத்தியில் நின்று பணியாற்றியவள் நான். யாழ் மாவட்டத்தின் மீள் குடியமர்வு அபிவிருத்தி தொடர்பாகவே ஜெனிவா மாநாட்டில் அறிக்கை சமர்ப்பிப்பேன். இவ்வாறு யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் வவுனியாவில் ஊடகவியலாளாகளிடம் தெரிவித்தார். ஜெனிவா பயணமாவதற்கு முன்பு நேற்றையதினம் வவுனியா வந்து திரும்பிய அவர் தனது பயணம் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: எமது தமிழ் மக்கள் மீது எனக்கு அக்கறை உண்டு. சாவ…

  2. காவடிகளின் அணிவகுப்புடன் அழகுச் சப்பறத்திலேறி பவனி வந்த சந்நிதி வேலன் (காணொளி)நாளை செல்வச் சந்நிதி முருகன் கோவில் வருடாந்த தேர்த்திருவிழா வாய் கட்டிப் பூசை செய்யும் அன்னதானக் கந்தனான சந்நிதியானின் சப்பறத் திருவிழாவில் ஏராளமான காவடிகளின் அணிவகுப்புடனும் மின் விளக்குகளால் மிளிர்நத சப்பறத்தில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்த காணொளி தங்களுக்காக thx http://www.newjaffna.com/index.php

  3. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வை.கோபாலசாமி 1993ம் ஆண்டு விலகியதன் பின்னர் அவர் தலைமையில் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்தெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் வைகோவுக்கு நிதியுதவி அளித்ததாக சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2006ம் ஆண்டு மே 15 திகதி தமிழக ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியதன் பின்னர் இரண்டு நாட்கள் கழிந்து விக்கிலீக்ஸ் இணையத்திற்கு இத்தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. ஐக்கிய அமெரிக்காவுக்கான அப்போதைய இந்திய பதில் கொன்சூலர் ஜெனரல் ரவி கந்ததாய் (Ravi Candadai) இத்தகவலை வெளியிட்டுள்ளார். எனினும் புலிகள் வைக்கோவுக்கு நிதியுதவி வழங்கியதை உறுதிப்படுத்த ஆதாரங்கள்…

  4. வேம்படி மகளிர் கல்லூரியில் கடந்த பதினைந்து ஆண்டுகள் அதிபராக அரும்பணி ஆற்றிய திருமதி கமலேஸ்வரி பொன்னம்பலம் எதிர்வரும் 12.09.2011 அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார். யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வேம்படி மகளிர் கல்லூரியில் பௌதிகவியல் ஆசிரியராக, உப அதிபராக, அதிபராகப் பணியாற்றியுள்ளார். இவரது சேவைக்காலத்தில் பாடசாலை பல தளங்களில் உயர்ச்சி பெற்றுள்ளது. அதிபர் திருமதி கமலேஸ்வரி பொன்னம்பலத்தின் ஓய்வுக்காலம் சிறப்புற்று அமைய www.newjaffna.com இணையம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. thx http://www.newjaffna.com/index.php

  5. [saturday, 2011-09-10 21:33:25] "யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குச் வெல்வதென்றால் கிளிநொச்சி மாங்குளம் என்று இறங்கினால் கொழும்புக்குச் சரியான நேரத்தில் செல்ல முடியாது அதுபோல இப்போது மனைப் பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குடிசைக்கைத்தொழில் எனும் பஸ்சில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உங்களை ஏற்றியுள்ளார் இடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிரிஸ் பூதம் என்று பலர் இடை மறிப்பார்கள். நீங்கள் இடையில் இறங்காது இந்த பஸ்ஸில் செல்லுங்கள். டீசல் முடிந்தால் அமைச்சர் பார்த்துக்கொள்வார் உங்கள் இலக்கை எட்டும் போது இறங்குங்கள்" என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருக்கிறார். யாழ் இந்துக்கல்லூரியில் இன்று காலை 10.30 மணியளவ…

  6. இலண்டனுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினாகள் இருவர் மீது சிறிலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளும் என இன்று வெளியான திவய்ன என்ற இனவாத ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. . குறிப்பிட்ட இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலண்டனில் தங்கியிருந்த போது, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மர்ம மனிதர்களை உலவிட்டுத் தமிழ்ப் பெண்களை அச்ச நிலைக்கு சிறிலங்கா அரசு தள்ளியுள்ளது என்று தவறான பிரசாரங்களை மேற்கொண்டதுடன் நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தனர் எனவும் கூறியே இவர்கள் மீது விசாரணைகளை சிறிலங்கா அரசு ஆரம்பிக்கவுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக…

  7. கொழும்பு வரவிருக்கும் தெற்காசிய பிராந்திய துணை இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் பிளேக் முன்னதாக இந்திய தலைவர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பயணம் மிகப்பரந்தளவு செயற்திட்டங்களைக்கொண்டதாக அமையும் என அவரது பேச்சாளர் நுர்லாண்ட் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி ஸ்தாபனம் கூறியுள்ளது. மூலம்

  8. 881 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கிறது அரசாங்கம்:- 10 செப்டம்பர் 2011 இறுதிக் கட்ட யுத்தத்தில் 4281 பேரே கைதாம் 881 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த உறுப்பினர்களுகு எதிராக வழக்குகளைத் தொதாடர்வதற்கு முன்னதாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. விசாரணைகள் பூர்த்தியானதன் பின்னர் குற்றப்பாத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்படும் என பிரதி சொலிசுட்டர் ஜெனரல் சவேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 22 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றங்களிலும், 278 முன்னாள் புலி உறுப்பினர்கள…

  9. Sep 10, 2011 / பகுதி: செய்தி / இராசீவ் கொலையாளிகள் மூவரையும் சிறைக்குள் சென்று கொன்றிருக்க வேண்டும் இளங்கோவன் பேச்சு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் மூன்று தமிழர்கள் உயிர்காப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இராசீவ் கொலையாளிகள் மூவரையும் சிறைக்குள் சென்று கொன்றிருக்க வேண்டும். அப்படி செய்யாததால்தான் இன்று விடுதலை செய்ய வேண்டும் என்கிற அளவுக்குப் பேச ஆரம்பித்துவிட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பகிரங்கமாகப் பேசியிருக்கிறார். அவரின் இந்தக் கொலை வெறிப் பேச்சை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மகாத்மா காந்தி கொ…

  10. சோனியா காந்தி தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே ஒரு சாபக்கேடு என்பது எப்போது இந்தியர்களுக்கு விளங்கப்போகுது? காங்கிரஸ் கட்சி ஊழலை எதிர்க்கும் என கூறும் சோனியாவின் ஊழல் பேராட்சியை பாருங்கள்.. டாட்டா நிறுவுனர்க்கு ஒரு மல்ரி பில்லியனர் ஆக வருதற்கு 100 ஆண்டுகள் எடுத்தது. அம்பானி சகோதரர்கட்கு 50 ஆண்டுகள் எடுத்தது. ஆனால் சோனியாவின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ரொபேர்ட் வத்ரா மல்டி பில்லியனராக வருவதற்கு 10 ஆண்டுகளே எடுத்துள்ளது.. சோனியா செய்யும் ஊழல் எல்லாமே இத்தாலியில் உள்ள தனது குடும்பத்தாருடனும், தனது மருமகன் பேரிலும் முதலீடு செய்வதனால் யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படி கண்டுபிடிச்சாலும் பத்திரிகைகளில் வருவதில்லை காரணம் பலம், பணம். …

  11. 10 செப்டம்பர் 2011 குளோபல் தமிழ்ச் செய்திகள் சர்வதேச ரீதியாக இலங்கை அரசுக்கு ஏற்பட்டு வரும் நெருக்கடிகளின் காரணமாகவும் செப்டம்பர் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியைத் தணிப்பதற்காகவும், பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்த அவசரகாலச்சட்டச் சட்;டத்தை நீக்கியதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த போதும் அதற்கு மாறான பல கடுமையான சட்டங்களை பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் இலங்கை அரசாங்கம் இயற்றியிருப்பதாக பல்வேறு தரப்பக்கள் இலங்கi அரசைக் குற்றம் சாட்டியுள்ளன. இவ்வாறு புதிய மாற்றங்களை உள்ளடக்கிய மூன்று வர்த்தமானிகளை இலங்கை அரசாங்கம் வெள…

  12. வெள்ளைக் கொடி விவகார வழக்கிற்கு உறுதியான சாட்சியமில்லை என மேல் நீதிமன்ற சட்டமா அதிபர் தெரிவிப்பு! [Thursday, 2011-09-10 10:50:31] கொழும்பு மேல் நீதி மன்ற சட்டமா அதிபரின் கூற்றுப்படி முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகா தொடர்பில் சண்டே லீடர் பத்திரிகை வெளியிட்ட வெள்ளைக் கொடி விவகாரத்தை இதுவரை பெற்ற சாட்சிகளின் மூலம் உறுதிப்படுத்த முடியவில்லை என சுறியுள்ளார். வெள்ளைக் கொடி விவகார வழக்கு நேற்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரச பிரதி வழக்கறிஞர் புவனெகா அலுவிஹாரே இது குறித்து அறிக்கை சமர்பித்து விளக்கமளித்துள்ளார். சரத் ​​பொன்சேகாவின் இக்குற்றச்சாட்டானது இனங்களை பிளவுபடுத்தவே வழிவகுக்கும் என அரச பிரதி …

  13. இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் இந்தியாவின் கருத்தை அறிய தவங்கிடக்கும் பான் கீ மூன்! [Thursday, 2011-09-10 11:08:44] இலங்கைக்கு எதிராக அனைத்துலக மட்டத்தில் சுமத்தப்பட்டள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்தியாவின் கருத்துக்களை அறிவதற்கான முயற்சிகளை ஐ நா சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மேற்க்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்தான விவாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆவது கூட்டத் தொடரில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 18. நாளை மறுதினம் ஆரம்பமாகும் இக் கூட்டத் தொடரின் ஆரம்பநாள்களில் இலங்கை விவகாரத்தை மேற்குலகு எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறான ஒரு நிலையி…

  14. அனைத்துக் கட்சிக்குழு இலங்கை பயணம்! Published on September 10, 2011-11:10 am இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, தனது தலைமையில் அனைத்துக்கட்சி குழு இலங்கை செல்வதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இரு சபைகளின் எதிர்க்கட்சி தலைவரான சுஷ்மா சுவராஜ், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், இலங்கை தமிழர் பிரச்சினை நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பா.ஜனதா சார்பில் குரல் கொடுத்து இருந்ததாக தெரிவித்தார். கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த சுஷ்மா சுவராஜ்,…

  15. கே.பியின் சகோதரனையும் இமெல்டாவையும் ஜெனிவாவுக்கு அனுப்பியது அரசாங்கம்! Saturday, September 10, 2011, 10:05 போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமான மீள்குடியேற்றமும் அபிவிருத்தியும் நடைபெறுகிறது என்றும், போரின் போது மக்கள் பாதிப்பின்றி மீட்கப்பட்டதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் பிரசாரங்களை மேற்கொள்வதற்காக ஜெனிவா செல்லும் யாழ். மாவட்ட அரச முகவர் இமெல்டா சுகுமாருடன் கே.பி என்று அழைக்கப்படும் பத்மநாதனின் சகோதரரும், வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தலைவருமான எஸ்.தவரட்ணமும் ஜெனிவா செல்கிறார். அரசாங்கம் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்கிறது என்றும் துரிதமாக புனர்வாழ்வு பணிகள் நடைபெறுகிறது என்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநி…

  16. மஹிந்தவின் வாக்குறுதி காற்றில்! குடாநாட்டில் வன்முறை தொடர்கிறது! Published on September 10, 2011-9:02 am யாழ். நவாலி, அட்டகிரிப் பாடசாலைக்கு முன்பாக வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம மனிதன் உடைகளை உலரவிட்டுக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணிக்கு இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற நேரம் இராணுவத்தினர் அந்தச் சுற்றாடலில் காணப்பட்டனர். எனினும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: குடும்பப் பெண் ஒருவர் உடைகளை உலரவிட்டுக் கொண்டிருந்த வேளை, ஒருவர் அவரைப் பின்புறமாகக் கட்டிப் பிடித்து கழுத்துப் பகுதியை திருகியதுடன் வாயையும் இறுக்கப் பொத்தியுள்ளார். பெண்ம…

  17. Started by வீணா,

    Stop the 2018 Commonwealth Games Going to Sri Lanka http://www.thepetitionsite.com/1/Sri-Lanka-Commonwealth-Games/ இது பிரித்தானியா அரசு அறிவிப்பு: (பிரித்தானியா வாழ் அனைத்து மக்களுக்கும்) குறைந்தது 1 லட்சம் ஓட்டுகள் விழுந்தால் இலங்கையின் மீதான யுத்த குற்ற விசாரனையை பிரித்தானியா அரசு பாராளுமன்றத்தில் விசாரிக்கும். http://epetitions.direct.gov.uk/petitions/14586 via..fb

  18. லிபிய தலைவர் கேணல் மொஹம்மர் கடாபிக்கு இன்டர்போல் எனப்படும் சர்வதேசப் பொலிஸார் பிடியாணை பிறப்பித்துள்ளனர்.அவரோடு சேர்த்து அவருடைய மகன் சைப் அல்-இஸ்லாம் மற்றும் ஸ்பை பிரதானி அப்துல்லாஹ் அல்-சன்சுய் ஆகியோருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மொஹம்மர் கடாபி எங்கு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. அவர் நைஜருக்கு தப்பிச் சென்றுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ள போதும் தான் லிபியாவை விட்டுத் தப்பிச் செல்லவில்லை எனவும் தாக்குதல்களைத் தொடருமாறும் கேணல் கடாபி தமது படைகளுக்கு ஆணையிட்டுள்ளார். http://www.tamilthai.com/?p=26366

  19. வலிகாமம், கிழக்கு புத்தூர் பிரதேசத்தில் நேற்று (09) மாலை ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னரே வீசப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. இவரது.சடலம் உருக்குலைந்திருந்த போதும் உடலில் சித்திரவதை செய்யப்பட்டமைக்கான தடயங்களும் காணப்பட்டதாக அச்சுவேலி பொலிசார் தெரிவிக்கின்றனர்.புத்தூர்- மீசாலை வீதிப்பகுதியில் புத்தூர் சந்தியிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள விதவாணி பகுதியிலேயே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதனை அவதானித்த வீதியால் பயணித்த சிலர் அங்கு சென்று பார்த்த போதே சடலத்தினைக் கண்டுள்ளனர்.மீட்டெடுக்கப்பட்ட சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. http://www.tamilthai.com/?p=26386

  20. மெக்சிகோ, அவுஸ்திரேலியா, சுவிஸ்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இதயத்தில் ரத்தம் என்ற இருவட்டுக்கு பின்னூட்டல்கள் வந்துள்ளது என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் படுகொலை பற்றியது எனக் கூறி இதயத்தில் ரத்தம் என்ற தலைப்பிலான இருவட்டினை மதிமுக பொது செயலாளர் வைகோ தயாரித்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இருவட்டில் ஈழத்தமிழர்கள் வரலாறு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, இலங்கை தலைவரின் அட்டூழியம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன் என வைகோ கூறினார். மேலும் இருவட்டினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, கணேசமூர்த்தி எம்.பி. மூலம் 139 நாடுகளின் தூதரகத்துக்கு அனுப்பி வைத்தேன் எனவும் தற்போது மெக்சிகோ, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில்…

  21. யுத்தத்திற்கு பின்பு இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பில் மிகவும் நெருங்கிய ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. நேற்று தென் கொரிய தலைநகரம் சியோல் இல் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இற்கும் தென்கொரிய வெளிநாட்டு அமைச்சர் சுங் ஹுவானுக்கும் இடையில் நிகழ்ந்த கலந்துரையாடலின் போதே தென் கொரிய வெளிநாட்டமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விசேடமாக வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் வலுசக்தி மற்றும் நீர்பாசன துறை அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொரிய நாட்டு முதலீட்டாளருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தென் கொரிய வெளிநாட்டமைச்சர் இலங்கை மேற்கொள்ளும் அப…

    • 31 replies
    • 2.1k views
  22. புதிய தமிழ் அரசியல் தலைமை தாயகத்தில் தேவை ஈழத் தமிழினத்தின் மீது பற்றுக்கொண்ட புலம்பெயர் சகோதரங்களுக்கு அன்பு வணக்கம். நீண்டகாலமாக கடிதம் எழுதும் அவா. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் நம் விருப்புக்கு தடை விதித்தன. இருந்தும் தற்போதைய சூழ்நிலையில் இக் கடிதத்தை எழுதாமல் விடுவது வரலாற்றுத் தவறாகிவிடும் என்ற அடிப்படையில் கடிதம் எழுதத் துணிந்தோம். தமிழினத்தின் இழப்புகள், தோல்விகள், துன்பங்கள் என்ற நெடுந்துயரின் வெறுப்புத் தனங்கள் தமிழ் மக்களின் வாழ்வுக்கே பங்கம் விளைவிப்பதாக இருக்கின்ற இவ்வேளையில், தங்கள் முயற்சிகள் சர்வதேச சமூகத்துடன் கொண்டுள்ள தொடர்புகள், தென் சூடான் எங்கள் மீது காட்டும் கரிசனை என்பன மன ஆறுதலைத் தருவதாக இருக்கின்றது. நீங்கள் சர்வதேச ரீதியில்…

    • 5 replies
    • 1.6k views
  23. இன்னர் சிற்றி பிரஸிடம் தடுமாறிய இலங்கை இராஜதந்திரிகள்! Friday, September 9, 2011, 0:13 பாதுகாப்பு அமைச்சு தயாரித்த ஆவணப் படம் ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் நேற்று முன்தினம் காட்சிப்படுத்தப்பட்ட போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அரசாங்கத்தின் இராஜதந்தரிகள் திண்டாடியுள்ளனர். சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படத்திற்குப் போட்டியாக இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித்த கோஹனவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் பதிலளித்துள்ளனர். வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது…

    • 3 replies
    • 1.9k views
  24. மக்களை ஊமைகளாக்கி நடத்தப்படும் விபச்சாரம் (ஓர் ஏழைக் கிராமத்தின் அவலக் குரல்) _ வீரகேசரி இணையம் 2011.09.09 10.41.47 6Share யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரி லிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருக் கிறது உதயசூரியன் கிராமம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள நம் தமிழ் உற வுகளின் சிறு எண்ணிக்கையிலானோர் வாழ்கின்ற கிராமம் அது. சிறு தூறல்களைக் கூட தாங்கிக்கொள் ளாத குடிசைகள், மணலில் விழுந்த இனிப் பையும் விட்டுவைக்க மறுக்கும் பள்ளிக்குச் செல்லாத சிறுவர் கூட்டம், அரை வயிறும் அன்றாட தொழிலும் எனக் காலம் கழிக் கும் பெற்றோர் என நகர்கிறது அவர்களின் வாழ்க்கை. அந்த கிராமத் துக்கு அருகில் இனந் தெரியாத குழுவினரால் விபச்சாரம் நடத்தப்படுவதாகவும் இதுகுறித்து கேட் பார் யாரும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.