Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடாளுமன்றின் முன்னால் ஈழத்தமிழருக்காக ஆர்ப்பாட்டம்; கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வலியுறுத்தி நேற்றுப் புதன்கிழமை இந்திய நாடாளுமன்றம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஈழத் தமிழர்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சம அந்தஸ்து, சம உரிமை, மாநில சுயாட்சி அதிகாரம் உள்ளடக்கிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்; இராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து இலங்கையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வுக்கான நடவடிக்கையை உடனடியாக உறுதி செய்திட வேண்டும்; இதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இப்…

    • 0 replies
    • 631 views
  2. விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் புலிகள் மீதான தடைக்கும் அவசரகால விதிகள் அவசியம்: ஹக்கீம் நிலுவையிலுள்ள விசாரணை நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கும் அதே நேரம் வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் மேலும் புலிகள் மீதான தடையை நீடிப்பதற்குமென அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் விளக்கமளித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்ட நீக்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் இங்கு மேலும் கூறுகையில், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருக்கின்ற …

  3. ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இலங்கையிலே வாழும் தமிழர்களுக்கு ஆபத்தாக அமையும் என்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்து பாரதூரமான இனவாத பிரகடனமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய கருத்தை சம்பிக்க ரணவக்க உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்து தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- இலங்கை அரசாங்கத் தலைவர்கள், எந்த நாடுகளுடன் இணைந்து யுத்தம் நடத்தினார்களோ, அந்த நாடுகளுடனையே பேசி தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகளுடனான இலங்கை அரசாங்கத்தின் ராஜதந்திர முரண்பாட…

  4. அரசுக்கு எதிரான பிரசாரங்களை விநியோகித்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஏழாலை இளைஞரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் யாழ். பொலிஸாரால் ஏழாலை மேற்கைச் சேர்ந்த செல்வராஜா செல்வகிரீஷன் (வயது 31) என்ற இளைஞர் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். இரவு 9.30 மணியளவில் வீட்டில் வைத்துக் கைது செய்யப் பட்ட செல்வகிரீஷன் நேற்று யாழ். நீதிமன்றத்தில் பொலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிவான் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தவிட்டுள்ளார் என இளைஞர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தவபாலன் தெரிவித்தார்.இந்த இளைஞர் விநியோகித்ததார் எனப் பொலிஸாரால் கூறப்பட்ட துண்டுப் பிரசுரத்…

  5. வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை - பசில் 08 செப்டம்பர் 2011 வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலவந்தமான முறையில் தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை மூலம் பார…

  6. தமிழ்நேஷனுக்கு என்ன நடந்தது? http://www.tamilnation.org/ கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு பிறகு தமிழ்நேஷன் வெப்சைட்டின் ஞாபகம் வந்து,போய் பார்த்தால் இப்படிக்கிடக்கு.....? எப்போர்பட்ட ஒரு இணையத்தளம் அது? ஒரு பொக்கிஷம் இல்லையோ? எவ்வளவு விபரங்கள்? இதை எப்படி அனுமதிக்கமுடியும்? யாருக்கு என்ன தெரியும்? தலைக்குமேல் வெள்ளம்போயிட்டு.. இனி என்ன? சும்மா சொல்லுங்கோ... நிர்வாகத்துக்கு.. நாட்டுக்கு மிகத்தேவையான இது போன்ற பதிவுகளை தயவு செய்து அழிக்கவேண்டாம்.

  7. [Thursday, 2011-09-08 10:48:17] கிறீஸ் பூதம் விவகாரம் தரம்குறைந்த பெற்றோல் சிமெந்து விவகாரம்; ஆசனிக் விவகாரம் ஆகிய வற்றின் பின்னணியில் சர்வதேசத்தின் சூழ்ச்சிகள் உள்ளன என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அந்தச் செவ்வியில் அவர் முக் கியமாகத் தெரிவித்துள்ளவை வரு மாறு: நாட்டில் அண்மையில் பரவலாகப் பேசப்படும் விடயங்களுள் பிரதானமானது கிறீஸ் பூதம் விவ காரம். மற்றது தரம் குறைந்த பெற் றோல் விவகாரம். உண்மையாகவே இவற்றின் பின்னணியில் சர்வதேச சூழ்ச்சிகள் இருப்பதாகவே நான் நினைக்கின்றேன்.ஏனென்றால் பெற்றோல் விநியோகிக்கும் நிறுவனங் கள் நாளாந்தம் கோடிக்கணக்கில் கொடுக்கல் வாங…

  8. முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் நடந்த கொடுமைகள் மற்றும் அந்த சூழலைப்பார்த்து பான் கி மூன் அதிர்ந்து போயிருந்தார்.யுத்தம் நிறைவடைந்த அடுத்த வாரத்தில் முன்பு யுத்தசூனிய பகுதியாக காணப்பட்ட பிரதேசத்தின் ஊடக விமானத்தில் செல்லும் போது தான் முழு அழிவினையும் பார்த்ததாக ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இராஜதந்திரிகளுக்கு தெரிவித்திருந்ததாக சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், தான் பார்த்தவற்றுள் மெனிக்பாம் அகதிகள் முகாம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாக பான் கி மூன் இராஜதந்திரிகளுக்கு தெரிவித்திருந்ததார். 2009ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி இரவு பான் கி மூன் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவென கொழும்பு விமான நில…

  9. பாடசாலை மாணவியின் நெஞ்சில் பிளேட்டினால் கீறிய நபர்கள்; சாவகச்சேரியில் நேற்றுக் காலை சம்பவம் Thursday, September 8, 2011, 11:38 சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்குச் சென்ற மாணவியை வீதியில் இடைமறித்த இனந்தெரியாத நான்கு இளைஞர்கள் அந்த மாணவியின் நெஞ்சுப் பகுதியில் கூரிய பிளேட்டினால் கீறி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுக் காலை சாவகச்சேரி கச்சாய் வீதி யில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது நேற்றுக்காலை சாவகச்சேரி கச்சாய் வீதியில் இருந்து கயிலாயபிள்ளை வீதி ஊடாக மாணவி சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு நடந்து சென்றுள்ளார். இந்த வேளையில் மாணவியைத் திடீரென இடை மறித்த நான்…

  10. யாழ் ஏழாலையில் இளைஞர்கள் மீது பொலிசார் தாக்குதல்! Published on September 8, 2011-3:41 am ஏழாலை மயிலங்காட்டுப் பகுதியில் திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த சுன்னாகம் பொலிசார் குறித்த பகுதியின் வீட்டிற்கு அருகாமையில் வீதியோரமாக நின்று உரையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை இவ்விடத்தில் நிற்க வேண்டாம் எனத் தெரிவித்தனர். குறித்த இளைஞன் பொலிசாருடன் ஏன் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதா? ஏன்? ஏதற்காகக் கலைக்கிறீர்கள் என்று வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த இளைஞனைத் தாக்கிய பொலிசார் மற்றுமொரு பொலிசாரை அழைத்து குறித்த இளைஞனை உடனடியாகவே கைதுசெய்தனர். நேற்று புதன்கிழமை காலை நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர். இதனை விசாரணை செய்த நீதவான் பொலிசாரையும் …

  11. மர்ம மனிதர்களை தாக்கக் கூடாது! இராணுவம் கூறுவது எதற்கு? உயர் மட்ட மாநாட்டில் கேள்வி வீட்டில் இருப்பவர்களை மர்ம மனிதர்கள் தாக்கிக் காயப்படுத்தும் போது அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்யாதீர்கள் என்று இராணுவத்தினர் கூறுவது சமாதான சூழலில் தான் நாம் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ். குடாநாட்டு மக்களிடையே அண்மைக் காலமாக நிலவி வருகின்ற பீதி மற்றும் பதற்றநிலை தொடர் பில் ஆராய்ந்து அதற்கான தீர்வு காணும் வகையில் நேற்று யாழ். மாவட்ட கேட்போர் கூடத்தில் உயர்மட்ட மாநாடு ஒன்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட…

  12. சர்வதேச பொறிமுறை ஒன்றை அமைப்பது தொடர்பாக இலங்கைக் கட்சிகளின் கருத்துக்களை வெளிநாட்டுத் தூதுவர்கள் கேட்டு வருகிறார்கள். போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான சர்வதேச பொறிமுறை ஒன்றை இலங்கைக்கு எதிராக ஏற்படுத்துவது தொடர்பாக அந்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அறியும் முயற்சியில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய நாடுகளின் இராஜதந்திரிகள் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பமாகும் நிலையில் மேற்குலக ராஜதந்திரிகளால் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி போன்ற நாடுகள் இலங்கை தனது பொறுப்புக்கூறும் கடமையைத் தட்டிக்கழிக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்ற…

    • 4 replies
    • 842 views
  13. [Wednesday, 2011-09-07 11:32:57] வன்னியில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட போரின் போது பொதுமக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்காக எஞ்சியுள்ள போராளிகள் சரணடைவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடுநிலையாளர் ஒருவரை சிறிலங்காவை ஏற்க வைப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட மனிதநேய முயற்சி தோல்வியில் முடிந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 2009 மே 17ம் நாள் சிறிலங்காவுக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல் பரிமாற்றக்குறிப்பு ஒன்றிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளதாக அது தெரிவித்தள்ளது. சிறிலங்காவின் நிலைமை தொடர்பாக அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில், மே 17ம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தா…

    • 4 replies
    • 714 views
  14. இலங்கை குற்றவியல் சட்டத்தின் 175, 180 ஆகிய சரத்துக்களை அமுல்படுத்தி அவற்றில் புதிய விடயங்களைச் சேர்க்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். புதிய திருத்தத்தின் கீழ் திட்டமிட்ட வகையில் நபர்களுக்கிடையில் குழப்பதை ஏற்படுத்துவது சட்டவிரோதமானதும் தண்டனைப் பெறக்கூடிய குற்றமுமாகும். இந்தக் குற்றங்களுக்காக விதிக்கப்படும் அபராதத்தைத் தொகையை அதிகரிப்பது குறித்துதும் ஆராய்ந்து பார்க்குமாறு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில், எதிர்காலத்தில் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 20,000 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கவும் இதில் …

  15. சுற்றுலா திட்டங்களுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் இலங்கை அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக தமது வாழ்வாதாரங்களை விட்டு வெளியேற நேர்வதாகக் கூறி நாட்டின் மீனவக் குடும்பங்களும் விவசாயிகளும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் தலைநகர் கொழும்பில் ஆத்திரம் மிக்க ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். குறிப்பாக அரசாங்கம் புதிதாக முன்னெடுக்கின்ற பெரிய சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை இம்மக்கள் எதிர்க்கின்றனர். 'மகிந்த சிந்தனை' என்று சொல்லப்படுகின்ற ஜனாதிபதி பெயரிலான அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் கட்டப்படுகின்ற கட்டமைப்பு பணிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் விமர்சித்திருந்தனர். நாடெங்கிலுமே சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் நிலங்களை அதன் நியாயபபூர்வ உரிமையாளர்களிடம் இருந்…

    • 3 replies
    • 554 views
  16. புதுக்குடியிருப்பு மருத்துமனை மீதான தாக்குதல் நடத்தியது 53வது டிவிசனே – உளறிக் கொட்டினார் சவீந்திர சில்வா. Wednesday, September 7, 2011, 10:46 `சிறிலங்காவின் கொலைக்களங்கள்` ஆவணப்படத்துக்குப் போட்டியாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தயாரித்த “Lies Agreed Upon,” என்ற ஆவணப்படம் ஐ.நா வளாகத்தில் நேற்று திரையிடப்பட்டுள்ளது.இதையடுத்து ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர். சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட- வெள்ளைக்கொடி விவகாரத்தில் பாலித கொஹன்னவின் பங்கு என்ன என்று அவரிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி …

    • 3 replies
    • 662 views
  17. சென்னை, செப். 7- தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவமதிக்கும் வகையில் இலங்கை அரசுடன் இந்தியா மிகப்பெரிய பொருளாதார உடன்பாட்டை செய்துகொண்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன் மீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை அவமதிக்கும் வகையில் இலங்கை அரசுடன் பொருளாதார உடன்பாட்டை இந்தியா செய்து கொண்டுள்ளது. இலங்கை கிழக்கு மாநிலத்தில் திரிகோணமலைக்கு அருகில் உள்ள சம்பூர் என்ற இடத்தில் 3150 கோ…

  18. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களையும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் தள்ளுபடி செய்துள்ளார். ‘21 ஆண்டு காலம் சிறையில் வாடிய பிறகும், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்து, 11 ஆண்டுகளுக்குப் பிறகும் இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது இயற்கை நீதிக்குப் புறம்பானது ’ என 26 தமிழர்கள் உயிர்காப்பு வழக்கு நிதிக்குழுத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றார். 1992ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கும் ஒட்டு மொத்தமாக மரண தண்டனை விதித்தபோது, நிரபராதிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், பழ.நெடுமாறன் அவர்கள் 26 உயிர்காப்பு அமைப்பை நிறுவி, இந்த வழ…

  19. அனைத்துப் பல்கலைக்கழகங்களில் நிலவும் ஊழியர் சம்பள முரண்பாடுகளை நீக்கக் கோரி யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் இன்று நண்பகல் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த ஆர்பாட்டத்தின் போது ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு அரசு உடன் பதில் கூறவேண்டும் என்ற கோரிக்கையை ஆர்ப்பாட்டகாரர்கள் முன்வைத்தனர். அத்தோடு “உத்தேசிக்கப்பட்ட சம்பளத் திட்டத்தினை பரிசீலனை செய்வதில் தாமதம் என்?” “உத்தேசிக்கப்பட்ட சம்பளத் திட்டத்தினை பரிசீலனை செய்” போன்ற பல பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணிநேரம் நீடித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்காணோர் பங்குகொண்டுள்ளனர். http://www.tamilthai.com/?p=26190

  20. செங்கல்பட்டில் உள்ள அகதி முகாமில் 13 இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 41 இலங்கை அகதிகள் செங்கல்பட்டில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் கடந்த திங்கட் கிழமை முதல் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுத்து தங்கள் மீதுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு தங்களை குடும்பத்துடன் வாழ ஏற்பாடுகள் செய்யும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகக் கூறி அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர். 2வது நாளாக நேற்றையை தினமும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்ததாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது…

  21. வவுனியாச் சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலைப் பாதுகாவலர்களுக்கும் இடையில் மோதச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமையால் கைதி ஒருவரும் சிறைக்காவலர் ஒருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா சிறைச்சாலைக்கு வழமையாக நீர்வழங்கும் பவுஸர் இன்று காலை சிறைச்சாலைக்குச் செல்லவில்லை. இதனை அடுத்து தமக்கு நீர் வேண்டும் எனக் கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளைக் கேட்டிருக்கின்றனர். இதனை அடுத்து இரண்டு தரப்பிற்கும் இடையிலான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியிருக்கின்றது. இதன் பின்னரே கைதி ஒருவரும், சிறைக்காவலர் ஒருவரும் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இதேவேளை சிறைச்சாலையில் பதட்டமான சூழல் ஏற்பட்…

  22. தனது தம்பியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோதபாய ராஜபக்ஷவை தனது பதில் செயலாளர்களாகவும் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளமைக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பாரிய எதிர்புக் கிளர்ந்துள்ளது.. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து கொண்டே அமைச்சர்கள் மட்டும் அதிகாரிகளின் பணிகளில் தலையீடுகளை மேற்கொண்டு வரும் கோதபாய, ஜனாதிபதியின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டதனையடுத்து மேலும் அதிகார துஷ்பிரயோகங்களில் அவர் ஈடுபடுவதாக இவர்கள் குற்றஞச்சாட்டியுள்ளனர்.. ஜனாதிபதி மஹிந்தவின் செயலாளரான லலித் வீரதுங்க வெளிநாடு சென்றிருப்பதன் காரணமாக அந்த இடத்துக்குப் பதில் செயலாளராக தனது தம்பியை அவர் நியமித்துள்ளார். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த…

  23. [Tuesday, 2011-09-06 10:18:43] குடாநாட்டில் கிறீஸ் பூதங்களால் பதற்ற நிலையில் வாழ்ந்து வருகின்ற மக்கள் வாழும் சில பகுதிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்றிரவு திடீரென சைக்கிளில் பயணம் செய்து கிறீஸ் பூதங்கள் பற்றி மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். யாழ் ஸ்ரான்லி வீதியிலிருந்து தனது சைக்கிள் பயணத்தை ஆரம்பித்த அமைச்சர் அவாகள் நாவாந்துறை, சூரியவெளி, கொட்டடி, பண்ணை, வண்ணார்பண்ணை, சின்னக்கடை, குருநகர் போன்ற பகுதிகளுக்கு சென்றிருந்தார் அதன்போது அவர் பயணித்த பாதைகளில் இராணுவத்தினரும் அவரது மெய்க்காப்பாளர்களும் அவரது வருகைக்கு முன்…

    • 18 replies
    • 1.7k views
  24. அரசாங்கத்தின் அண்மைய அபிவிருத்தித் திட்டங்களை கேள்வியெழுப்புமுகமாகவும் கண்டிக்குமுகமாகவும் நேற்று கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள், மீனவர்கள், தொழிற்சங்கங்கள் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன. போர் முடிவடைந்ததன் பின்னர் மக்களின் நல்வாழ்வு அவர்களுடைய முன்னேற்றம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தாம் மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அரசாங்கம் அபிவிருத்தியின் பெயரால் மேற்கொண்டு வரும் பல திட்டங்கள் அந்த மக்களுக்கு நன்மை பயப்பதற்குப் பதிலாக அந்த மக்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குப் பதிலாக கெடுதல்களை விளைவிப்பனவாக அவர்களை தமது வாழ்விடங்களிலிருந்தும் பாரம்பரிய தொழில்களிலிருந…

  25. காலி கடற்படை படகொன்றில் கடமையிலிருந்த ஒரு கடற்படை வீரரை நேற்றுமுன் தினம் திங்கட்கிழமையிலிருந்து காணவில்லையெனவும் இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. http://www.tamilthai.com/?p=26171

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.