Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டு.ஊறணியில் வெள்ளைவான் அச்சுறுத்தல்! Saturday, September 3, 2011, 10:41 மட்டக்களப்பு ஊறணியில் கடந்த 3 வாரங்களுக்கு முன் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடையவர்களை வெள்ளை வானில் வரும் பொலிஸார் கைது செய்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்வதாகப் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதேநேரம் விசாரணைகளுக்கு வருமாறு சிலருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இது மட்டக்களப்புப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊறணிக்கு வெள்ளை நிற வானில் வருவோர் புகைப்படங்களை வைத்துக்கொண்டு இளைஞர்களைத் தேடி வருகின்றனர். இதனால் அப்பிரதேச மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மர்ம மனிதர் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட மோதலின் போது பொலிஸார் மீது தாக்…

  2. யாழ். பல்கலை மாணவர் மீது படையினர் தாக்கு Saturday, September 3, 2011, 10:23 யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை நேற்று இரவு இராணுவத்தினர் தாக்கினர் என்ற குற்றச்சாட்டு மாணவர்களால் தெரிவிக்கப்பட்டது. கிறீஸ் பூத விவகாரமே இந்தத் தாக்குதலுக்கு வழிவகுத்தது என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரவு 10.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பெண்கள் விடுதியின் மீது யாரோ விஷமிகள் கல்வீசியதை அடுத்து அவர்கள் தகவல் கொடுத்ததன் பேரில் ஆண்கள் விடுதியில் இருந்து மாணவர்கள் சிலர் பெண்கள் விடுதி இருந்த இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர். மாணவர்கள் அந்தப் பகுதிக்கு வந்தபோது, திடீரென இரண்டு ட்ரக்குகளில் அங்கு வந்த இராணுவத்தினர் தம்மில் இருவரைத் தாக்கினர் என்று…

  3. யாழ். கோண்டாவில் பிரதேசத்தில் நேற்று மாலை பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் கையளிக்கப்பட்ட மர்ம நபர் கோப்பாய் பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை மாலை யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டார். குறித்த சந்தேக நபர் காகவத்த வெல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த ரி.டி.தனஞ்சே (வயது 20) கைது செய்யப்பட்ட மேற்படி நபர் தீவிர பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அத்தோடு மர்ம மனிதனாக இருப்பவரை கோண்டாவில் பகுதி மக்கள் சிலர் இனம் கண்டுள்ளனர் இவர் சென்ற மாதம் அப்பகுதியிலுள்ள இராணுவக் காவலரனில் இயந்திரத்துப்பாக்கியுடன் காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவ வீரன் என பொதுமக்கள் இனம் கண்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் குறித்த…

  4. ஆனையிறவுப் பகுதியில் மனநோய் வைத்தியசாலை கட்டப்படவேண்டும் யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்கள் புளுத்து விட்டார்கள். இதனால் அவர்களில் ஒரு சிலரை பொதுமக்களால் பிடிக்க முடிந்துள்ளது. நேற்று முன்தினம் கோண்டாவில் பகுதியிலும் நேற்று சுழிபுரம் பகுதியிலும் இரண்டு மர்ம மனிதர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனம் சார்ந்தவர்கள் என்பதும் இங்கு நோக்குதற்குரியது. தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார்கள் என்பது உண்மையாயினும் தென் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்திலுள்ள கிராமங்களில் தனித்துத் திரிவதை சாதாரணமான காரணங்கள் மூலம் நியாயப்படுத்த முடியாது. இந்நிலையில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட தென்பகுதியைச் …

  5. சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டம் நேற்று இரவு கட்டுக்கடங்காமல் அதிகரித்தமையால் பெரும் அல்லோலகல்லோலப்பட்டது குடாநாடு. மக்கள் நித்திரையின்றிப் பீதியில் உறைந்தனர்.யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டங்கள் அதிகமாகக் காணப்பட்டமையால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் விடியும் வரை நித்திரை இன்றி விழித்திருந்தனர் என எமது பிரதேச செய்தியாளர்கள் உறுதிப்படுத்தினார்கள். சில இடங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியவர்களைத் துரத்திச் சென்ற இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே முறுகல் நிலையும் ஏற்பட்டது. இந்த இடங்களில் இளைஞர்களை அச்சுறுத்துவதற்காகப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் …

  6. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கைப் பிரதி பிரதிநிதி மேஜர் ஜெனரல் சாவேந்திரா சில்வா தொடர்பில் இரகசிய அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பிரிகேடியர் அருண வன்னியாரச்சியிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் சவேந்திர சில்வாவின் நடவடிக்கைகள் குறித்து தகவல் திரட்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சொந்த வாழ்க்கை, பெண்களுடனான உறவு, ஊடகவியலளார்களுடனான தொடர்பு, வெளிநாட்டு பயணங்கள், வெளிநாடுகளுடன் பேணிய உறவு, சொத்து விபரங்கள் உள்ளிட்ட சகல விடயங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமா…

  7. தடுத்து வைத்திருப்பவர்கள் தொடர்பிலான குற்றப்பத்திரிகையைக் கோருகிறது அமெரிக்கா அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான குற்றப்பத்திரிகையை இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா கோரியுள்ளது. இல்லாவிடின் அவர்களை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர்; இக்கருத்தினை தெரிவித்துள்ளார். இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளமையை நாம் வரவேற்றாலும் கூட தொடர்ச்சியாக அதன் கண்காணிப்பில் ஈடுபடுவோம். இதேவேளை, இறுதிக் கட்ட யுத்தத்தின்போது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் பெரும்பாலானவ…

    • 5 replies
    • 1.1k views
  8. ‘வீ’ எப். எம் வானொலியின் பிரதம நிறைவேற்று அதிகாரிமீது தாக்குதல் 02 செப்டம்பர் 2011 ‘வீ’ எப். எம் வானொலியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ருவன் சுகததாச மீது பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தற்போது கிடைத் செய்திகள் தெரிவிக்கின்றன. பொரலஸ்கமுவ, கங்காராம வீதியிலுள்ள அவரது வீட்டிற்குள் இன்றிரவு ஏழு மணியளவில் திடீரென உட்பிரவேசித்த இனந்தெரியாத குழுவொன்றோ அவர்மீது தாக்குதல் நடத்தி விட்டுச் சென்றுள்ளது. இவர்கள் தாக்குதல் நடத்துவதற்காக WP/ GA 1893 என்ற இலக்கத்தைக் கொண்ட ஜீப் வண்டியிலேயே வந்துள்ளனர். படுகாயமடைந்த ருவன் சுகததாச தனியார் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ‘வீ’ எப். எம் வானொ…

  9. Sep 3, 2011 / பகுதி: செய்தி / மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதிலளிப்பார் . மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதிலளிக்கும் காணொளி இருவாரங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகராலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காணொளி பேஸ்ப்புக்கில் உள்ள BHC Colombo என்ற பக்கத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 13ம் திகதி தொடக்கம் பகிரப்படவுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் உயர்ஸ்தானிகரிடம் கேட்க வேண்டிய கேள்வியை BHC பேஸ்புக் பக்கத்தினூடாக என்றால் “Ask the High Commissioner” என்று அடையாளப்படுத்தியும் @UKinsrilanka மற்றும் @UKinmaldives ரிவிட்டர்…

  10. மரண தண்டனைக்கு எதிராக பேரறிவாளன், சாந்தன், முருகன் தொடர்ந்துள்ள வழக்கில் உயர்நீதிமன்றத்தின் நோட்டீல் கிடைத்தவுடன் பதில் அனுப்பப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தொடர்ந்துள்ள வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. இதுதொடர்பாக 8 வாரங்களுக்குள் பதில் அனுப்புமாறும் சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் குறித்து என்ன பதில் அனுப்பப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் டெல்லியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, நீதிமன்றத்தின் நோட்டீஸ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இன்னும் கிடைக்கவி…

  11. இலங்கை அரசு- சர்வதேச சமூக 'பரிமாற்றங்கள்' குறித்து தனியார் துறையினர் அச்சம் பொறுப்புடைமை விவகாரம் குறித்து, இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையில் நடைபெறும் பரிமாற்றங்கள் நாட்டின் கைத்தொழில்துறைக்கு கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என தனியார் துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர். ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கான நிபுணர் குழுவின் ஆலோசினை அறிக்கை தொடர்பான இலங்கை தனியார்துறையின் மதிப்பீடு எனும் அறிக்கையில் இந்த அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்துடனான அரசாங்கத்தின் இடைவினைகளானவை, சிறு வர்த்தகர்கள் மீது ஏற்படுத்தம் தாக்கத்தை இந்த அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இழப்பானது ஆடை தயாரிப்…

    • 0 replies
    • 560 views
  12. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் கடைசி கட்டத்தில் பிரிந்து சென்ற நபர்களை கண்டுபிடித்து அவர்களை குடும்பத்துடன் இணைக்க ஒரு முக்கியமான திட்டம்விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக யுனிசெப் என அழைக்கப்படும், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. யுனிசெப்பின் இந்நடவடிக்கை 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பமானது. இந்த வேலைத் திட்டத்தில் முன்னேற்றங்கள் பலவற்றை கண்டுள்ள யுனிசெப், நிர்க்கதியான பல சிறுவர்களை அவர்களது குடும்பத்துடன் ஒன்றிணைத்துள்ளது. எனினும் மேலும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் காணாமல் போயுள்ளதுடன் இளைஞர்கள் பற்றிய விபரங்களும் தெரியவில்லை. காணாமல் போயுள்ள சிறுவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் யுனிசெப் நிறுவனத்தி…

  13. [Friday, 2011-09-02 20:43:14] நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவக்கைகள் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஏனைய நிறுவனங்களிடம் அறிக்கையை சமர்ப்பிப்பதா என்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நிபுணர் குழு அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுமா என ஊடகியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பான் கீ மூன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டம…

  14. http://www.globaltam...or%20Die_CI.bmp இலங்கையில் சிறுபான்மை இனம் என்று ஒன்று கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான இலக்கு தமிழ் முஸ்லிம் மக்களை இணங்கச் செய்வதே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரே தேசம், நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் நாட்டின் அபிவிருத்திக்காக பாடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 60ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஒரே தேசம், ஒரே நாடு என்ற கோட்பா…

  15. "எந்தவொரு இன, மத பேதங்களைக் காட்டாது எமது பிள்ளைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் எமக்கு உதவுங்கள்" என கொழும்பில் இடம்பெற்ற அனைத்துலக காணாமற்போனோர் தினத்தில் தமது பிள்ளைகளைத் தேடியலையும் தமிழ்த் தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிறீஸ்தவர்களை அதிகமாகக் கொண்ட பல்வேறுபட்ட பொது அமைப்புக்களால் ஒழுங்குபடுத்தி கொழும்பில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில், சிறிலங்காவில் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் காணாமற்போனவர்கள் தொடர்பாக சரியான விசாரணை ஒன்றை மேற்கொண்டு தமது பிள்ளைகளைத் தேடியலைகின்ற இந்தத் தாய்மார்களுக்கு விரைவான பதில் ஒன்றைத் தரவேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "கடந்த காலங்களில், நாட்டின் தெற்குப் பகுதியில் காணாமற்போன குடும்பங்களுக்காக நா…

  16. அமெரிக்கப் போர் விமானங்கள் சிறிலங்கா வான்பரப்பில் ஊடுருவியது பற்றிய செய்திகளை வெளியிட சிறிலங்கா விமானப்படைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஊடகங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தக் கருத்தையும் வெளியிடக் கூடாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா வான்பரப்பில் பத்து அமெரிக்கப் போர் விமானங்கள் கடந்தமாதம் 2ம் நாள் ஊடுருவிய செய்தியை சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் அன்றூ விஜேசூரிய உறுதி செய்திருந்தார். ஆனால் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும், சிறிலங்காவின் குடியியல் விமானப்போக்குவரத்து அமை…

  17. விகடனில் வெளிவந்த ஒப்புதல் வாக்குமூலம் உலுக்கும் உண்மைகள்! [Friday, 2011-09-02 10:39:34] 'பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் மரணத்தில் இருந்து காப்பாற்றுங்கள்!' என நீள்கின்றன கண்ணீர்க் கோரிக்கைகள். கடந்த 21 வருடங்களாகக் கடிதங்கள், புத்தகங்கள் மூலமாக ஒலிக்கும் இந்தக் கதறல் யார் மனதையும் உலுக்காமல் போனதுதான் வேதனை. இவர்கள் மீதான குற்றத்துக்கு சாட்சிகள் இல்லை; ஆவணங்கள் இல்லை. 'தூக்குத் தண்டனையைச் சுமக்க வேண்டிய ஆட்கள்தான் இவர்கள் என்பதற்கு அதிகாரி கள் காட்டும் ஒரே ஆதாரம்... இவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்தான். "செய்த தவறையும் சதிக்கான பங்களிப்பையும் அவர்களே ஒப்புதல் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுவிட்டார்கள். அப்படி இருக்க, வேறு சாட்சி எதற்கு?" என்கிறது அதிகாரத் தரப்பு…

  18. [Wednesday, 2011-08-31 21:19:07] காடு பற்றி எரிய கரடிக் காவடி எடுத்தது போல லண்டனுக்கு குத்தாட்டம் போடவரும் ராதிகா சரத் குமார் கும்பல் !.. தான் நடத்தும் நாடகங்களால் மக்களை கவர்ந்தவர் ராதிகா. தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்படும்போது ஒன்றும் அறியாதவர் போல தனது நடிப்பு திறமையை காட்டியவர் , தமிழர்களுக்கான எந்த போராட்டதிலும் கலந்து கொள்ளாதவர், தமிழ் பேசினாலும் தான் ஒரு சிங்கள வம்சதை சேர்ந்தவர் என்பதை எப்போதும் மனதிலும் செயலிலும் கொண்டவர் , நாடகம் போட்டு நல்ல கருத்துக்களை சொல்வதாக சொல்லும் இவரின் நாடகங்களில் ஈழ தமிழர்களுக்கு சார்பாக எதுவும் சொல்லபடுவதில்லை, மாறாக சிங்களவர்களை நன்றாக சித்தரித்து அவர்களை , நல்ல உள்ளம் படைத்தவர்கள் போல காட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு …

    • 28 replies
    • 3.3k views
  19. கடந்த மாதம் 25 ஆம் திகதி மஹிந்த இராஜபக்‌ஷ தனது அமைச்சர்கள் புடைசூழ பாராளுமன்றம் வந்திருந்தார். ஆனால் அவர் என்ன சொல்லப்போகின்றார் என்பது திட்டவட்டமாக ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இந்திய ஊடகங்களோ மஹிந்த இராஜபக்‌ஷ அவசரகாலசட்டத்தினை நீக்கப்போகின்றார் என பறந்தடிச்சு சொல்லிவிட்டார்கள். சிறிலங்காவில் அவசரகால சட்டம் கடந்த 30 வருடங்களால இருந்துவருகின்றது. இடையிடையே நிறுத்தியும் பின்னர் நடைமுறைப்படுத்தியும் வந்துள்ளனர் ஆட்சியாளர்கள். . இப்போது அனைத்துலகத்தின் அழுத்தங்களினால் மஹிந்த இராஜபக்‌ஷ அவசரகால சட்டத்தினை நீக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் இன்னமும் இதில் தெளிவு இல்லை. அதாவது இந்த சட்டம் நீக்கப்பட்டாலும் இராணுவம் எதை எதை செய்யும் எவற்றை செய்யாது என்பதில் தெளிவு இல…

  20. போர்க்குற்றச்சாட்டுக்களை ஜெனிவாவில் எதிர்க்க முயற்சி; சிங்களவரை ஒன்று திரள அழைப்பு Friday, September 2, 2011, 10:19 ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டங்களை நடத்து வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை அரசின் மறைமுக ஆதரவுடன் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 12ஆம் திகதிமுதல் 30ஆம் திகதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படலாமென பரவலாக எதிர்பார…

    • 2 replies
    • 369 views
  21. இந்தியா என்பது இந்திய மாநிலங்களின் கூட்டாட்சிதான். இந்தியாவிற்குள் இருக்கிற தமிழ்த் தேசிய இனத்தின் ஒருமித்த குரலைத்தான் தமிழ்நாடு சட்டமன்றம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனைக் குறைப்பு பற்றிய தீர்மானத்தில் வெளிப்படுத்தியது. ஆனால் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்சித் என்பவர், “அது எங்களைக் கட்டுப்படுத்தாது” என்று சொல்வது மக்களின் குரல் எங்களைக் கட்டுப்படுத்தாது நாங்கள் தான்தோன்றித்தனமாகத்தான் செய்வோம் என்றே பொருள்படுகிறது. தமிழக மக்கள் என்றைக்கும் நீதிக்குப் புறம்பாக செயற்படுகிறவர்கள் அல்லர். நாங்கள் தப்பானவர்களுக்காக கையேந்தி யாரிடமும் பிச்சை கேட்கவில்லை. எந்த வகையிலும் வன்முறையை நாடுகிறவர்கள் தமிழர்கள் அல்லர். 3 லட்சம் ஈழத் தமிழர்களை இலங்கை இந்திய…

  22. Sep 1, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / தமிழக முதல்வருக்கு இந்திய மத்திய அரசு விடுத்துள்ள சவால் - வேல்ஸ் இல் இருந்து அருஷ் இந்தியாவின் முன்னாள் பிரதமரும், இந்திய அமைதிப்படை என்ற போர்வையில் இந்திய இராணுவத்தை ஈழத்தமிழ் மக்கள் மீது ஏவிவிட்டு பல ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்து, யாழ் வைத்தியசாலையினுள் புகுந்து அப்பட்டமான இன அழிப்பை மேற்கொண்டு, ஈழத்தமிழ் மக்களை பகிரங்கமாக படுகொலை செய்தாலும் இந்த உலகம் ஏன் என கேட்காது என்பதை சிறீலங்கா இனவாதிகளுக்கு உணர்த்தியவருமான ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பில் இந்திய காவல்துறையினரால் பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்ட மூன்று அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்வதற்கு இந்திய மத்திய அரசு நாள் குறித்துள்ளது. இந்தியாவின் இந்த ஜனநாயக விரோத செ…

  23. 02 செப்டம்பர் 201 நாட்டின் சகல அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் அகற்றப்பட வேண்டும் எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்காது, தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படாமையின் ஊடாக வடக்கு கிழக்கில் அரசாங்கம் இராணு ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றமை தெளிவாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். …

  24. பதிந்தவர்: ஈழப்பிரியா வெள்ளி, 2 செப்டெம்ப்ர், 2011 தனுவின் நெற்றியில் இருந்த பொட்டு ராஜீவ் காந்தி படுகொலை மீண்டும் எழும் சந்தேகங்கள். மறைந்த பாராதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பாக திருச்சி வேலுச்சாமி குமுதம் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் இதுவரை வெளிவராத இரகசியங்கள் பலதை வெளியிட்டுள்ளார். ராஜீவ்காந்தியைக் கொல்வதற்கு வெடிகுண்டு கட்டிச் சென்ற பெண் என்று கூறப்படும் தனுவின் நெற்றியில் உள்ள பொட்டை முக்கிய தடயமாக அவர் முன் வைத்தார். வெடிகுண்டு வெடிப்பதற்கு சுமார் 15 நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிவராசனுக்கு அருகில் மாலையுடன் நிற்கும் தனுவின் நெற்றியில் பொட்டு இல்லை. வெடிகுண்டு வெடித்து சிதறிக்கிடக்கும் தனுவின்…

  25. மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக சட்டப் பேரவையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றுமாறு தீர்மானம் நிறைவேற்றியதற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். இந்த தீர்மானத்தை டெல்லியில் உள்ளவர்கள் கொச்சைப் படுத்துகின்றனர். இதனை தமிழக மக்களுடன் இணைந்து தமிழக ஊடகங்களும் கண்டிக்க வேண்டும். கருணை மனு பற்றி இரண்டு வருடத்தில் பதில் அளிக்க வேண்டும். ஆனால ஏதோ ஒரு அமைச்சரவை சக்தியால் இது கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றார். http://www.nakkheera...ws.aspx?N=60657

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.