Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைப் போரின் இறுதிக் கட்டம் குறித்து சர்வதேச கண்காணிப்பில் விசாரணை நடைபெறவேண்டுமென கனேடிய லிபரல் கட்சி கேட்டுள்ளது. இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தின்போது புரியப்பட்ட சம்பவங்கள் குறித்துச் சர்வதேச கண்காணிப்பில் விசாரணை நடைபெறவேண்டுமென கனேடிய லிபரல் கட்சியின் தலைவர் பொப் றே தெரிவித்தார். கறுப்பு ஜூலையை முன்னிட்டு அறிக்கை ஒன்றை அவர் விடுத்தார். தமிழ் மக்களினதும், போரின்போது உயிரிழந்த ஏனையோரினதும் துன்பத்தை லிபரல் கட்சி உணர்வதாக பொப் றே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உண்மை என்னவென்று தெரியவராமல், மீள் இணக்கம் ஏற்பட முடியாதெனக் கனடா தெளிவாகக் குரல் எழுப்பவேண்டுமெனத் தெரிவித்துள்ள பொப் றே, குற்றங்கள் புரியப்பட்டிருந்தால், அதற்குப் பதில் விளைவுகள் இ…

    • 0 replies
    • 404 views
  2. 50 மீற்றருக்கு ஒரு, ஆயுதமேந்திய இராணுவம் என்ற நிலையிலேயே, தமிழர்கள் இராணுவ பிடிக்குள் வாழ்ந்து வருவதாக, இலங்கை சென்று வந்த மலேசிய தூதுக்குழுவின் உத்தியோகபூர் அறிக்கை தெரிவித்துள்ளது. போருக்கு பிந்திய இலங்கைத் தீவின் உண்மை நிலைவரத்தை கண்டறியும் நோக்கில், மலேசிய தூதுக் குழுவொன்று, 5நாள் பயணமாக, கடந்த மாதம் இலங்கைக்கு சென்று வந்திருந்தது. மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.மனோகரன், நாடாளுடன்ற உறுப்பினர் ஜொகாரி, செனட்சபை உறுப்பினர் எஸ்.இராமகிருஸ்ணன் மற்றும் அரசசார்பற்ற அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் இத்தூதுக்குழுவில் உள்ளடங்கியிருந்தனர். தமிழர் தாயகத்தின் வட-கிழக்கு பகுதிகள் மற்றும் புத்தளத்துக்கும் சென்று நிலைவரங்களைக் கண்டறிந்ததோடு, கட்சிகள் – தொண்டைமப்புக்கள் – …

  3. மறக்க முடியாத ஜுலைகள். யூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. பல வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான். 1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலர்றறில் “பண்டா – செல்வா ஒப்பந்தம்” என்று பெயர்பெற்றுவிட்ட இவ்வொப்பந்தம் பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு யூலை 27ஆம் நாள் விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுத வழித்தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அல்பிரேட் துரையப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதலே அது. “கறுப்பு யூலை” என்று இன்றுவரையும் அழைக்கப்படும் இம்மாதத்தின் 23 ஆம் நாள் தான்…

  4. இராணுவ ஆட்சியின் கீழ் தமிழர்கள்! பெண்கள்மீது பாலியல் அச்சுறுத்தல்!! இலங்கை சென்ற மலேசியத் தூதுக்குழு தெரிவிப்பு ஒவ்வொரு 50 மீற்றருக்கும் ஒரு ஆயுதமேந்திய இராணுவம் என்ற நிலையிலேயே ஈழத் தமிழர்கள் இராணுவ பிடிக்குள் வாழ்ந்து வருவதாக இலங்கைக்கு விஜயம் செய்த மலேசிய தூதுக்குழுவினர் வெளியிட்ட உத்தியோகபூர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். போருக்குப் பிந்திய இலங்கைத் தீவின் உண்மை நிலைவரத்தை கண்டறியும் நோக்கில், மலேசிய தூதுக் குழுவொன்று, 5 நாள் பயணமாக, கடந்த மாதம் இலங்கைக்கு சென்று வந்திருந்தது. மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.மனோகரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜொகாரி, செனட்சபை உறுப்பினர் எஸ்.இராமகிருஸ்ணன் மற்றும் அரசசார்பற்ற அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் இத்தூதுக…

    • 0 replies
    • 321 views
  5. சிலாபத்தில் குழாய்க் கிணற்றிலிருந்து எரிவாயு வெளியேற்றம்! சிலாபம், முன்னேஸ்வரம் பௌத்த விகாரையில் தண்ணீருக்காக தோண்டப்பட்ட குழாய்க் கிணற்றிலிருந்து ஒரு வகை எரிவாயு வெளியேறிவருகிறது. முதலில் குழாய்க் கிணறு தோண்டப்பட்ட போது நீருக்குள்ளிருந்து ஒருவகை வாயு வெளியேறுவது கண்டுபிடிக்கப்பட்டது. சுலபமாக தீப்பற்றிக் கொள் ளக்கூடியதாக இந்த வாயு இருந்ததுடன் இப்பகுதியில் மற்றுமொரு குழாய்க் கிணறும் தோண்டப்பட்டது. அதிலிருந்தும் இந்த வகையான வாயு வெளியேறியது. முதலில் மீதேன் வாயு என ஆய்வாளர்கள் குறிப்பிட்ட போதும் பின்னர் அதனை மறுத்துள்ளனர். சுமார் 200 மீற்றர் தொலைவிற்கு குழாய் மூலம் வாயுவை கொண்டு சென்று பரிசோதித்த போதும் மிக எளிதாக தீப்பற்றிக் கொண்டது. இப்பகுதியில் மேலும் 2 குழ…

  6. எம் இனிய புலம்பெயர் உறவுகளுக்கு யாழ் கிளிநொச்சி மண்ணிலிருந்து ஓர் அவசரமான வேண்டுகோள்! கூட்டமைப்பு எம்.பி.சிவஞானம் சிறீதரன். [Friday, 2011-07-22 09:59:27] வரும் 23ம் நாள் யாழ் கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் தேர்தல்களம் தமிழ்மக்களை பொறுத்தவரையில் சவால்களும் நெருக்கடிகளும் நிறைந்ததாக திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது. இராணுவநெருக்குவாரங்களுக்கு மத்தியில் தமிழ் தேசியத்தை நிலைநிறுத்துவதற்காக இந்த மண்ணில் துணிந்து களம் இறங்கியுள்ள த.தே.கூட்மைப்பு வேட்பாளர்கள் பற்றுறுதியோடு தேர்தல் பணியை நிறைவு செய்துள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கம் தனது முழுப்பலத்தையும் வளத்தையும் ஒருங்கிணைத்து யாழ் கிளிநொச்சி நோக்கி நகர்த்தியுள்ளதுடன் எமது தமிழ்ப் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களுக்கு சவால்…

  7. இலங்கை போர்க் குற்றம்: நாடாளுமன்றம் முன் வைகோ ஆர்ப்பாட்டம் இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி இந்தியாவிலும், உலக நாடுகளிலும் அதற்கு ஆதரவைத் திரட்ட டெல்லியில் ஆகஸ்ட் 12ம் தேதி நாடாளுமன்றத்திற்கு எதிரே மதிமுக தலைவர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சமச்சீர் கல்வி முறையை உடனே அமலாக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை கண்டனத்துக்கு உரியது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விஷயத்தில் அ.தி.மு.க அரசு, தன…

    • 0 replies
    • 414 views
  8. போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசு உரிய விசாரணை நடத்தவில்லை என்றால் அந்நாட்டுக்கான உதவிகள் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்து இறுதி கட்டப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் வீடியோ வெளியாகி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து உலக நாடுகள் இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், இது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கூறி வருகின்றன. இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவும் அறிக்கை சமர்பித்துள்ளது. எனினும் இலங்கை அரசு மெத்தனமாகத் தான் இருக்கிறது. இந்நிலையில் போர்க்குற்றம் குற…

  9. வெள்ளிக்கிழமை, யூலை 22, 2011 நேற்று முந்தினம் உள்ளுராட்சித் தேர்தலுக்கான துண்டுப்பிரசுரம் வினியோகிக்கும் போது கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தென்மராட்சி அமைப்பாளர் அருந்தவபாலன் நேற்று பினையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை குற்றப்புலனாய்வுப் காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட அருந்தவபாலன் விசாரனைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். நேற்று காலை கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்ட அவர் சாவகச்சேரி நீதிவான் மா.கனேசராஜா முன் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். Bookmark/Search this post with: http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%…

    • 0 replies
    • 438 views
  10. தமிழீழ விடுதலைப் புலிகளினால் புல்மோட்டைக் கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட ஸ்ரீலங்கா அரசின் கடற்படைக் கப்பலை மீட்பதற்கான முயற்சியை மேற்கொள்ளும் மற்றுமோர் கபட நாடகம் ஸ்ரீலங்கா அரசினால் அரங்கேற்ப்பட்டுள்ளது.மேற்படி மீட்புப் பணிக்காக ஈராக்கில் பதிவுசெய்யப்பட்டதும் பூம்ஹிகோ கப்பற் கம்பனிக்குச் சொந்தமானதுமான வெண்ணிற குயின் மேரி கப்பலானது ஸ்ரீலங்கா அரசினால் ஒப்பந்த அடிப்படையிலான வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டது. மேற்படி கப்பலானது அம்பாந்தோடடையில் இருந்து திருகோணமலை நோக்கி கடந்த 10ம் திகதி பயணித்த வேளையில் திடீரெனக் காணாமற் போய்விட்டதாக ஸ்ரீலங்கா பாதுகாப்புப் பிரிவினரும் அரசும் சேர்ந்து சொல்கிறது. அதனைச் சொல்லி சர்வதேசத்தின் கவனத்தை தனது போர்க் குற்ற விசாரணையினின்றும் திசை திர…

    • 2 replies
    • 1.1k views
  11. "கறுப்பு யூலை" 28 வது ஆண்டு நினைவு சுமந்து 20 நகரங்களுக்கு மேலாக கவனயீர்ப்பு நிகழ்வுகள் - யேர்மனி 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள இனவெறி அரசால் ஆரம்பிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறை 1983 ஆண்டு யூலை 23 ம் நாள் நள்ளிரவில் இருந்து திட்டமிட்ட இனப்படுகொலையாக மாறி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி எடுத்து, தொடர்ந்து உச்சக்கட்டமாக 2009 ஆண்டு மே மாதம் குறைந்தது 40 000 மக்களுக்கும் மேலாக கொண்று குவித்தனர். இன்று தொடர்ந்தும் எம் உறவுகள் சிங்கள இனவெறி அரக்கர்களிடம் அகப்பட்டு வேறு ஒரு வழியும் அற்று உளவியல் ரீதியாக உயிரெடுக்கப்படுகிறார்கள். அன்று திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமை தான் “கறுப்பு யூலை” ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்குக் காரணமென சிங்கள அர…

    • 0 replies
    • 320 views
  12. கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற நடை பவனியில் கலந்து கொள்வதற்குத் தமிழ் மாணவர்கள் பலாத்காரமாக அழைத்து வரப்பட்டிருந்தனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. போர்க்குற்றவாளி,சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினரும் ரவுடியுமான நாமல் ராஜபக்ஷவே இவ்வாறு தமிழ் மாணவர்களை பலாத்காரமாக இந்த நடை பவனியில் இணைத்திருந்தார். இந்த மாணவர்கள் அனைவரும் இராணுவ பஸ்களில் ஏற்றிக் கொண்டு வரப்பட்டு பின்னர் இரணைமடு சந்தியில் இறக்கப்பட்டு இந்த நடை பவனியில் இணைக்கப்பட்டுள்ளனர். நாமல் ராஜபக்ஷவின் இந்த நடை பவனியைப் படம் பிடிப்பதற்கு சிறிலங்கா படையினர் அனுமதிக்கவில்லை என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/story/%E0%A…

    • 0 replies
    • 469 views
  13. ஊட்டியில் சிறிலங்க படையினருக்குப் பயிற்சி – நாம் தமிழர் எதிர்ப்பு, மறியல் போராட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி்க் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்தும், அதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மறியல் போராட்டம் நடத்தப்போவதை அறிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை: ஊட்டி இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிறிலங்க படையினருக்குப் பயிற்சி : நாம் தமிழர் எதிர்ப்பு, மறியல் போராட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அருகே வெலிங்டனில் அமைந்துள்ள இந்திய இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சியளிப்பத…

  14. கறுப்பு ஜூலை நினைவேந்தல் - பிரித்தானியா பதிந்தவர்: தம்பியன் வெள்ளி, 22 ஜூலை, 2011 தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் முக்கிய நாளான கறுப்பு ஜூலை படுகொலைகளை நினைவேந்தி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன்பாக அணி திரள்வோம் என பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் முக்கிய நாளான கறுப்பு ஜூலை படுகொலைகளை நினைவேந்தி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன்பாக நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா இனவெறி அரசாங்கங்கள் மேற்கொண்டுவந்த இன அழிப்பின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக 1983 கறுப்பு ஜூலைப் படுகொலைகள் திகழ்கின்றன. இவ்வாறான …

  15. லண்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் திரு. நிதின் கட்காரி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சியின் உயர்மட்டக் குழுவினரை பிரித்தானிய தமிழர் பேரவையினர் லண்டனில் சந்தித்தனர். பிரித்தானியாவிற்கு பிரச்சாரப் பணிகளுக்காக வருகைதந்த குழுவில் பாரதிய ஜனதாவின் மகளிர் அணித்தலைவி ஸ்மிருதி இராணி, ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராய சிந்தியா அம்மையார் மற்றும் டெல்லி மாநில சட்டசபை உறுப்பினர் விஜய் ஜோலி ஆகியோர் அடங்கி இருந்தனர். இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் மற்றும் மானுடத்திற்கெதிரான குற்றங்களை சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த, பல்வேறு தரப்பினரின் ஆதரவினை திரட்ட பாடுபடும் பிரித்தானிய தமிழர் பேரவை அதன் ஒரு அங்கமாக இந்தியாவின் எதிர்க்க…

  16. அன்பான எமது தமிழ் உறவுகளே!.. இத் தேர்தலில் தேசிய உணர்வுடன் எமது விடுதலையை நேசிக்கும் வேட்பாளர்களை தெரிவு செய்து எமது உறுதியை உலகிற்கு வெளிக்காட்டும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். [Friday, 2011-07-22 11:47:33] எமது தாயகத்தின் வடபகுதியில் உள்ளூராட்சித் தேர்தலை நடாத்துவதன் மூலம் சிங்களப் பேரினவாதம் தனது யுத்த வெற்றியாக வெளிக்காட்ட முற்படுகிறது. எமது தாயகப் பகுதியில் அமைதி நிலவுவதாகவும், எல்லா ஈழ மக்களும் நிம்மதியாக வாழ்வதாகவும், இயல்பு வாழ்வு திரும்பிவிட்டதாகவும் உலகிற்கு காட்ட முற்படுகின்றது. எமது தாயக மக்கள் நாளாந்தம் முகம் கொடுக்கும் துயரங்களுக்கு அளவில்லை. காணாமல் போதல், தற்கொலை எனும் பெயரில் படுகொலை, பாலியல் வல்லுறவு, கலாச்சாரச் சீரழிவு, நில ஆக்கிரமிப்ப…

  17. சர்வதேசத்தின் தீர்வு நமக்கு தேவையில்லை எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க முடியுமாம் [Friday, 2011-07-22 08:35:55] சர்வதேசத்தின் தீர்வு நமக்குத் தேவையில்லை நமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என பிரதமர் டி.எம். ஜயரட்ன பூநகரியில் தெரிவித்தார்.தமிழ், சிங்கள மக்கள் தமக்கிடையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் இரு சமூகங்களுக்கிடையிலுள்ள இடைவெளி குறைந்து ஒற்றுமை வலுப்பெறும் எனவும் பிரதமர் தெரிவித்தார். கிளிநொச்சி பூநகரி பகுதிகளில் நேற்று முன்தினம் 20 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் மேலும் தெரிவிக்கையில்; ஜனாதிபதி சகல இ…

  18. வைகோ எதிர்ப்பு: கிளிநொச்சி இசை நிகழ்ச்சியை ரத்து செய்த பாடகர் மனோ மன்னிப்பு கேட்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தால் கிளிநொச்சியில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாடகர் மனோ, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்பினார். இலங்கையில் கிளிநொச்சியில் உள்ளாட்சி மன்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் ராஜபக்சே பங்கேற்கிறார். அந்த பிரச்சாரத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இசை நிகழ்ச்சியில் ராஜபக்சேவுடன் பங்கேற்பதற்காக தமிழ் திரைப்பட பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இதனை ஏற்று 20.07.2011 அன்று காலை மூன்று பேரும் சென்னையி…

  19. விதவைகளுக்கு 01 Kg அரிசி கொடுத்து ஏமாற்றிய தந்தையும், தனயனும்!! Published on July 22, 2011-9:56 am கிளிநொச்சியில் நேற்று முன்நாள் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த விதவைகளுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளதால் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களை மஹிந்த பங்கு கொண்ட நிகழ்வில் கலந்து கொள்ளச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஒவ்வொரு பகுதி கிராம அலுவலர்கள் ஊடாக விதவைகளுக்கான உதவிகள் தொடர்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உதவிகள் வழங்கப்படவுள்ளமையால் விதவைகளையும் அவர்களின் உறவினர்கள், பிள்ளைகளையும் கலந்து கொள்ளுமாறு குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனை நம்பி ஏமாந்த வ…

  20. இலண்டனில் வருகின்ற ஞாயிறு அன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் சுமந்திரன் மக்களைச்சந்திக்கின்றார். இலண்டனில் சவுத் எண்ட் அக்‌ஷயா மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. மேலதிக விபரம் வருமாறு.. TAMIL NATIONAL ALLIANCE (UK) BRANCH PUBLIC MEETING THIIS WILL TAKE PLACE ON SUNDAY 24 07 2011 FROM 1.00 PM TO 4.00 PM AT AKSHAYA HALL SOUTH END ROAD…

    • 0 replies
    • 410 views
  21. தீவகத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் எடுத்துவரப்படுகின்றபோது தேர்தல் முறைகேடுகள் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பம் உண்டென கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. காரணம் வாக்குப்பெட்டிகள் எண்ணிக்கைக்காக எடுத்து வரப்படும் போது அவை கடற்படையினரின் படகுகளிலும், விமானபப்டைகளின் ஹெலிகொப்டர்களிலுமே கொண்டுவரப்படவுள்ளன. ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் படையினர் கள்ள வாக்குகளை போடலாம் என கூட்டமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. . ஆனால் இதனைத் தடுப்பதற்கு தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளில் ஒருவர் வாக்குப்பெட்டிகளுடன் செல்வார் என கூறியுள்ளார் அரச அதிபர். என்றாலும் இது நம்பிக்கைக்குரிய விடயம் அல்ல என கூட்டமைப்பு கூறியுள்ளது. http://www.eelanatham.net/st…

    • 0 replies
    • 354 views
  22. இந்துமதம் பழமையற்றது – யாழ்ப்பாணத்தில் கதைவிட்டார் பிரதமர்! Published on July 20, 2011-9:50 am 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பௌத்த மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இந்து மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. 800 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இஸ்லாம் மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. அந்தக் காலத்தில் சிங்கள மன்னர்களின் கீழ் தமிழ் மன்னர்கள் இருந்தார்கள். இவ்வாறு இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன புதிய சரித்திர விளக்கம் ஒன்றை தெரிவித்தார். கோப்பாய் நாவலர் வித்தியாலயத்தின் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்ட வரலாற்று விளக்கத்தை அளித்தார். அவர் மேலும் …

  23. இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் சாம் ராயப்பா. இவர் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை நன்கு அறிந்தவர் என வர்ணிக்கப்படுபவர். இவர் அண்மையில் 'த ஸ்டேட்ஸ்மன்' என்ற பத்திரிகையில் உலகமறிந்த உண்மையை போட்டு உடைத்துள்ளார். இதன் தாக்கங்கள் நீண்டகாலத்திற்கு புது டெல்லியில் இருக்கும். அந்த உண்மை இதுதான்: 'சோனியா காந்தி அவர்கள் பணிப்பின்பேரில் தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வும் இல்லாத நிலையில் புலிகளை முற்றாக அழிக்க புதுடெல்லி கொழும்புக்கு சகல உதவிகளையும் வழங்கியது'. தனது தேசிய நலன்களை விட தனிப்பட்ட காரணங்களை இந்தியா முன்வைத்ததால் அது இன்று அரசியல் ரீதியில் தென்இந்திய பகுதியில் பலவீனமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 'முள்ளிவாய்க்கால்' இரத்தம் இந்திய கைகளிலும் படிந…

  24. யாழ் செயலகத்தில் நடைபெற்ற கட்சிப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது கடும் வாக்குவாதம்!(காணொளி) Published on July 22, 2011-12:43 am No Comments யாழ் செயலகத்தில் இன்றையதினம் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது கட்சிகளின் பிரதிநிதிகள் பல்வேறு குற்றச்சாட்டை முன்வைத்தனர். 1. தீவகத்திற்கு வாக்குகள் போடப்பட்ட வாக்குப் பெட்டிகளை எடுத்து வருவதற்கு பயன்கடுத்தப்படவுள்ள ஹெலிகொப்ரர், கடற்படைப் படகு போன்றவற்றில் கண்காணிப்பாளர் ஒருவரையாவது நியமிக்க வேண்டும்- த.தே.கூட்டமைப்பு 2. நீதியான தேர்தல் நடைபெறுமா என்பதை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? என ஜே.வி.பி., த.தே.கூ.வும் கேள்வி. சனிக்கிழமை…

  25. தேர்தல் பிரசாரத்தில் இராணுவம் ஈடுபடுவது இதுவே முதல் முறை; நாடாளுமன்றில் ரணில் தெரிவிப்பு Friday, July 22, 2011, 10:24 சிறீலங்கா இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பேச்சுக்களில் வடக்குத் தேர்தல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இத் தேர்தலை சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இராணுவத்தை தேர்தலுக்குப் பயன்படுத்தக் கூடாது. தேர்தல் பணிகளில் இராணுவம் பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறை இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை.இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுக் கோரிக்கை விடுத்தார். வடக்குத் தேர்தல் நிலைவரம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.