Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தயவு செய்து நேரம் ஒதுக்கி இந்த காணொளியை பாருங்கள். பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுப்போம்.. உங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா ? – குமுதம் இணையதளத்திற்காக அற்புதம் தாய் அளித்த செவ்விeelamwebsite.com

    • 1 reply
    • 553 views
  2. லண்டன் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு-சுசில் news ஹெஜிங் உடன்படிக்கை தொடர்பாக லண்டன் வர்த்தக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஆட்சேபித்து லண்டன் மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்றுத் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று ஹெஜிங் உடன்படிக்கை தொடர்பாக ஜே.வி.பியின் நாடாளு மன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்து உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வந்த நிலையில் ஹெஜிங் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு கொள்கையளவில் தீர்மானிக்கப…

    • 1 reply
    • 412 views
  3. தோ்தல் காலத்தில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வந்த மனிதாபிமானமான "மகிந்த சிந்தனை" : வட பகுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு கருணை அடிப்படையிலான நீதியைப் பெற்றுக் கொடுக்கப் போகிறாராம். [Friday, 2011-07-22 09:40:19] வட பகுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்,யுவதிகளுக்கு கருணை அடிப்படையிலான நீதியை பெற்றுக்கொடுக்க எண்ணியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள உத்தேச விளையாட்டரங்க கட்டிட தொகுதியின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். மாகாண மட்டத்தில் நிர்மாணிக்கப்படும் விளையாட்டு கட்டடிடத் தொகுதியுடன் இணைக்கப்படவுள்ள இந்த கட்டிடத்திற்காக 325 மில்லியன் ரூபா ச…

  4. மதியத்துக்கு முன்பே சென்று வாக்களியுங்கள் news நாடு பூராகவும் 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. வாக்காளர்கள் அனைவரையும் இயன்றளவு மதியத்துக்கு முன்னரேயே சென்று வாக்களிக்குமாறு கபே அமைப்பு கேட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: வாக்காளர் அனைவரும் மதியத்துக்கு முன்ன ரேயே வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்க ளிப்பதன் மூலம் வாக்காளர்களுக்கும் வாக்களிப்பு நிலையங்களிலுள்ள அதிகாரிகளுக்கும் இப்பணி இலகுவாக அமையும். தவிர மதியத்துக்குப் பின்னர் முறைகேடுகள் இடம்பெறுதல் உள்ளிட்ட அசம் பாவிதங்களையும் இதன் மூலம் இயன்றளவு தவிர்த்துக்கொள்ள முடியும். வட பகுதியில் தேர்தல் கண்காணிப்புப்…

  5. 2,98,000 கிலோ கோழி இறைச்சி காலாவதியானமையால் அழிக்கப்பட்டது news சொசேஞ் தயாரிப்புக்கென இறக்குமதி செய்யப்பட்டிருந்த 2,98,000 கிலோ எடைகொண்ட கோழி இறைச்சியும் சோயா புரதமும் பன்னல பொதுசன சுகாதார வைத்திய அதிகாரிகளால் அழித்தொழிக்கப்பட்டன. நான்கு கொள்கலன்கள் நிரம்பிய இந்த காலாவதியான கோழி இறைச்சியும் சோயாபுரதமும் பிரேஸில் நாட்டில் இருந்து தருவிக்கப்பட்டவை எனவும் இலங்கை வரலாற்றி லேயே இவ்வளவு பெரிய தொகை அழிக்கப்பட்டது இதுவே முதன்முறை எனவும் இலங்கை பொதுசன சுகாதார அதிகாரி சங்கத்தின் செயலாளர் செனரத்பண்டார தெரிவித்தார். பன்னல, மாகந்துர தொழிற் பேட்டையில் உள்ள சொசேஜ் தயாரிப்பு நிறுவனமொன்றில் இருந்தே இவை கைப்பற்றப் பட்டன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் இத்தகைய…

  6. தேர்தல் முறைகேடுகள் குறித்து அறிவிக்க எண்கள் _ 7/22/2011 10:43:31 AM நாளை நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தல்களின்போது முறைகேடுகள், வன் முறைகள் இடம்பெற்றால் அவை குறித்து முறையிடுவதற்கு தேர்தல்கள் செயல கத்தில் ஒருங்கிணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறும் உள்ளூரதிகார சபைகள் தேர்தல்கள் தினத்தன்று நடக்கும் சம்பவங்கள் பற்றி அந்தந்த மாவட்டங்களுக்குரிய முறைப்பாடுகளை இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தின் தேசிய ஒருங்கிணைப்பு நிலையத்தில் கீழ்க்காணப்படும் தொலை நகல் இலக்கங்கள் ஊடாக தெரிவிக்க முடியுமென இத்தால் அறிவிக்கப்படுகின்றது. கொ…

  7. இராணுவமும் அரச தரப்பும் வடக்கில் எதிரணியின் பிரசாரத்துக்கு இடையூறு: புத்துஜீவிகள் ஒன்றியம் அறிக்கை [Friday, 2011-07-22 08:27:06] வடக்கில் பணியாற்றும் இராணுவத்தினராலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாலும் எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாகவும் மற்றும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இப்படி மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தேர்தல்களைக் கண்காணிக்கும் வலையமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு: 542ஆவது படையணித் தலைமையகத்தில் பணியாற்றும் லெப்டினன்ட்ரட்ணாயக்க என்ற அதிகாரி, கரைச்சி பிர தேசசபை எல்லைக்குட்பட்ட தர்மபுரம் கிராம மக்களை அழைத்து ஐக…

  8. திமிங்கல வேட்டையில் சிறிலங்கா கடற்படை- புதிதாக கிளம்பும் சர்ச்சை [ வியாழக்கிழமை, 21 யூலை 2011, 01:58 GMT ] [ தா.அருணாசலம் ] மன்னார் தாழ்வுபாடு கீரி கடற்கரையில் கரையொதுங்கிய திமிங்கலத்தை சிறிலங்கா கடற்படையினரே கொன்றிருக்கலாம் என்று சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இறந்தநிலையில் கரையொதுங்கிய திமிங்கலத்தில் இருந்த ஆம்பர் எனப்படும் விலை உயர்ந்த பொருள் காணாமற் போயிருந்ததாலேயே இந்த சந்தேகம் எழுந்துள்ளது. திமிங்கலத்தில் உள்ள ஆம்பர் எனப்படும் பொருள் சுமார் 100 மில்லியன் ரூபா வரை பெறுமதியானது என்று திருகோணமலை பிராந்திய கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அதிகாரி நீல் மொன்ரகே தெரிவித்துள்ள…

  9. குமரிகளின் குத்தாட்டத்தால் சூடு பிடித்த யாழ் உள்ளூராட்சிசபை தேர்தல் பிரசாரம்! வியாழக்கிழமை, 21 ஜூலை 2011 19:14 யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் தரப்பு சார்பில் பெருமெடுப்பில் யாழ் குடாநாட்டில் பிரச்சாரங்கள் இடம்பெற்றது. குறிப்பாக அமைச்சர்களின் படையெடுப்பு, ஜனாதிபதியின் பிரசன்னம் போன்ற நடவடிக்கையினால் யாழ் குடாநாட்டு தேர்தல் களம் என்றும் இல்லாதாவாறு களைகட்டி இருந்தது என்று கூறலாம். http://youtu.be/yJlAgOmm-iY குறிப்பாக எவ்வாறாவது உள்ளூராட்சி சபைகளினை கைப்பற்றி விடவேண்டும் என்னும் நோக்கில் ஆளும் தரப்பு வெவ்வேறு வகையான பிரச்சார உத்திகளினை கையாண்டு இருந்தது. குறிப்பாக யாழ் நகரின் முன்னணி நகரங்களில் இசை வாகன நிகழ்சிகளினை நடத்தி கவர்ச்சி…

  10. அபிவிருத்தி திட்டங்கள் எதுவும் மீள்குடியேறியுள்ள மக்களிடம் போய்ச் சேரவில்லை - பிபிசி செய்தியாளர் [ வியாழக்கிழமை, 21 யூலை 2011, 09:04 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரானது நிறைவுக்கு வந்து இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். சிறிலங்காவின் வடபகுதிக்கான வெளித் தொடர்புகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. கடந்த காலங்களில் தமிழ்ப் புலிகளின் பிரதான செயற்பாடுகள் இடம்பெற்ற கிளிநொச்சி நகரைப் பார்வையிடச் சென்றிருந்த பி.பி.சி செய்தியாளர் சாள்ஸ் கவிலண்ட், [bBC correspondent Charles Haviland] தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்ப முயன்று கொண்டிருக்கும் மக…

  11. காலனித்துவ நாடுகளின் சதித் திட்டங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமென்கிறார் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ [Thursday, 2011-07-21 21:48:14] காலனித்துவ நாடுகளின் சதித் திட்டங்களை புரிந்து கொள்ள வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பென்தர எல்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறிய நாடொன்று அபிவிருத்தி அடைவதனை காலணித்துவ நாடுகள் ஏற்றுக்கொள்ளாது என அவர் தெரிவித்துள்ளார். ஏதேனும் ஒர் வழியில் சிறிய நாட்டுக்குள் புகுந்து அபிவிருத்தியை சீர் குலைக்க காலணித்துவ நாடுகள் முயற்சிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வியட்நாம் நாடு இந்த துர்ப்பாக்கிய நிலைமையை எதிர்நோக்கியதாகக் குறிப்…

  12. சென்னையில் ஹில்லரி கிளின்ரன் http://www.youtube.com/watch?v=NUD02Duv_II&feature=feedu

  13. அரசும், த.தே.கூவும் நேர்மையாக செயற்படவில்லையாம்: நேர்மையின் சின்னம் ரவூப் ஹக்கீம். [Thursday, 2011-07-21 21:39:02] அரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் நேர்மையாகவும் நீதியாகவும் செயற்படுமேயானால் முஸ்லிம் காங்கிரஸ் அந்த கொள்கையை கடைப்பிடிக்க முடியும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நேற்று அக்குறனையில் இடம்பெற்ற இறுதி தேர்தல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசாங்க வேலைவாய்ப்புகளை வழங்கும்போது, கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரப்படியும் தேசிய மட்டத்தில் திறமை அடிப்படையிலும் வழங்க அரசு தீர்மானித்தள்ளது. இதற்கு மாறான கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. அரசு க…

  14. போர் முடிந்தும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் வடக்கில் அதிகமாக இருக்கின்றன. அவற்றை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்தவேண்டும். இவ்வாறு கூறியுள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் வெளியுறவு செயலக அதிகாரி நேற்று டில்லியில் இந்த செய்தியினை வெளியிட்டார். . இலங்கையில் மீழ் குடியேற்றம் முன்னேற்றகரமாக உள்ளது. ஆனால் நல்லிணக்க முயற்சிகள் இல்லை. அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளை உறுதியாக எடுக்கவேண்டும். நல்லிணக்க முயற்சிகளுக்கு இந்தியாவும் நாமும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை கொடுத்து வருகின்றோம் என மேலும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%…

  15. இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் ஜெயலலிதாவுடன் சந்திப்பு:- 21 ஜூலை 2011 தமிழகத்திற்கு நேற்று விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனிடம் இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான மறு வாழ்வு அவர்களை பாரம்பரீய பிரதேசங்களில் குடியேற்றுதல் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக பேசிய நிலையில் சென்னை கோட்டையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தார். சற்று நேரத்திற்கு முன்னர் நடந்த சந்திப்பின் போது தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்துமாறு கரியவாசத்திடம் வலியுறுத்திய ஜெயலலிதாவிடம் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள…

  16. அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் : சனல்-4 (காணொளி) இலங்கையில் இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ‘அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை’ நடத்தப்பட வேண்டும் என, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருவதாக, சனல்-4 (Channel-4) தொலைக்காட்சி இன்று (20-07-2011) செய்தி வெளியிட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் அவலங்களை பன்னாட்டு சமூகத்திடம் கொண்டு சென்ற பெருமைக்குரிய பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, அடிக்கடி ஈழத்தமிழர் பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றது. இன்று வெளியிடப்பட்ட செய்தியில், சனல்-4 முன்னர் வெளியிட்ட காணொளிகள் மற்றும் இலங்கையின் படுகொலைக்களம் போன்ற காட்சிச் சாட்சிக…

    • 1 reply
    • 650 views
  17. யாழ் மாவட்ட உள்ளுராட்சிசபைத் தேர்தல் நேர்மையான வகையில் இடம்பெறுமென்ற நம்பிக்கை இல்லை - 21 ஜூலை 2011 நாளை மறுதினம் சனிக்கிழமை இடம்பெறவுள்ள யாழ் மாவட்ட உள்ளுராட்சிசபைத் தேர்தல் நேர்மையான வகையில் இடம்பெறுமென்ற நம்பிக்கை தமக்கு இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பி யும் அறிவித்திருக்கின்றன. இன்றையதினம் யாழ் செயலகத்தில் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதியான உதவித் தேர்தல் ஆணையாளர் முகமட்டும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவ்வேளையிலேயே ஏற்கனவ…

  18. Jul 22, 2011 / பகுதி: செய்தி / சிறிலங்காவில் நிறம் சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்களின் விற்பனைக்குத் தடை! மக்களின் பாவனைக்கு தகுதியற்ற நிறம் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான பல முறைப்பாடுகள் சுகாதார அமைச்சுக்கு கிடைத்துள்ளதை அடுத்து இதற்கான முழு அதிகாரத்தையும் உணவுப் பரிசோதகர்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளை அரிசி, நிறமூட்டப்பட்டு சிவப்பரிசியாக விற்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளதோடு ரோச சம்பா போன்ற பெயர்களில் இவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவு…

  19. மண்டை தீவில் வாக்காளர் அட்டைகள் திருட்டு தேர்தல் மோசடி அம்பலம்! பிரசுரித்தவர்: NILAA July 21, 2011 மண்டைதீவு அஞ்சல் அலுவலகத்திலிருந்து வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் இனந்தெரியாதவர்களால் திருடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இந்த உள்ளூராட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்று பாரிய மோசடி வேலைகளில் அரச தரப்பினர் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்; தமது வாக்காளர் அட்டைகளை பொதுமக்கள் பெறுவதற்கான மண்டைதீவு அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்றபோது அவர்களிடம் கையொப்பம் வாங்கிய சிலர் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுச் சென்றதாக தபாலதிபர் கூறியுள்ளார். அவ்வாறு வாக…

  20. வடமாகாணத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் வாக்களிப்பின் போது இராணுவத்தினரைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. . இதன்படி,வடக்கில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரைப் பயன்படுத்தி தமிழ் வாக்காளர்களை அச்சுறுத்தி பலாத்காரமாக வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் சென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். . வடமாகாணத்தில் நிலை கொண்டுள்ள இராணுவ அணிகளில் ஒன்றான லெப்டினன்ட் ரத்நாயக்க தலைமையிலான 542 ஆவது படையணியே இந்த வாக்குக் கொள்ளைக்குப் பயன்படுத்தப்படவுள்ளது. . விசேடமாக,கரைச்சி மற்றும் தர்மபுரம் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களைப் பலாத்காரமாக அழைத்துச் சென்று…

    • 0 replies
    • 526 views
  21. விரும்பிய தேவைகளுக்குச் செலவிடலாம் என்ற ஒப்பந்த அடிப்படையில் சீனா அரசினால் சிறிலங்கா அரசுக்கு வழங்கப்பட்ட நிதி தொடர்பான விபரங்களை வெளியிட்டமைக்காக ‘சண்டே லீடர்’ பத்திரிகை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எரிச்சலுக்கு உள்ளாகியுள்ளது. . சீன அரசாங்கத்தினால் இவ்வாறு வழங்கப்பட்ட ஒன்பது மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொடர்பில் இந்தப் பத்திரிகை கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது. . இதனைக் கண்ணுற்ற ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷ, பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த லால் விக்கிரமதுங்கவை தொலைபேசியில் அழைத்து திட்டித் தீர்த்துள்ளார். அத்துடன் இந்த விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை அமைச்சர் மேர்வின் சில்வாவிடமும் ஒப்படைத்துள்ளார். Eelanatham

    • 0 replies
    • 647 views
  22. வவுனியா-கொழும்புக்கு இடையில் பயணிகள் விமானசேவை ஆரம்பம்: ஒருவழிக் கட்டணம் 6,600 ரூபா [Thursday, 2011-07-21 09:45:30] வவுனியாவிற்கும் இரத்மலானைக்கும் இடையிலான பயணிகள் விமானசேவை இலங்கை விமானப் படையினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். வவுனியாவிலிருந்து கொழும்புக்கான போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்குடனும் விரைவான சேவையை கருத்திற் கொண்டும் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பயணி ஒருவரிடமிருந்து ஒரு வழிக் கட்டணமாக 6,600 ரூபா அறவிடப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வவுனியா விமானப்படைத்தளத்தில் பயணிகள் காத்திருப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அன்றாடம் பயணிகள் எண்ணிக்கைக்கேற்ப இச்சேவை விஸ்தரிக்கப்பட…

  23. முரளிதரன் போன்று உங்கள் பகுதியிலிருந்தும் வீரர்கள் உருவாகவேண்டும்: கிளிநொச்சியில் ஜனாதிபதி _ வீரகேசரி இணையம் 7/21/2011 11:13:00 AM எமது கிரிக்கெட் அணியில் முத்தையா முரளிதரன் போன்று உங்கள் பகுதிகளிலிருந்து தர்மலிங்கம், ராஜலிங்கம், இதயராஜ் போன்ற தமிழ் இளைஞர்கள் விளையாட வேண்டும். அந்த கனவு நனவாக வேண்டும். அதுவே எனது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது இன்றும் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்கள் உரிமைகள் உங்களிடமே இருக்க வேண்டும். அதனை யாராலும் பறிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டரங்கின் நிர்மாண பணிகளை ஆரம்பித்துவைத்து உரையா…

  24. July 21, 2011 – 9:37 am By Guest Writer Sidharth Gautham Sunder | Permalink | Print This Article | It was presumed in the recent article in truthdive.com that the discussion about the investigations on war crimes in Sri Lanka will not be in the agenda of Ms. Hillary Clinton the US Secretary of state visiting Chennai on Wednesday. http://truthdive.com/2011/07/18/hillary-clinton-india-and-war-crimes-in-srilanka.html As predicted the Government of India have managed to silence both Ms. Hillary Clinton and the Chief Minister J.Jayalalithaa to fall in line with the official position of India in offering no comments on investigations of war crimes in Sri Lank…

  25. போர் முடிந்த காலப்பகுதியில் இருந்து 11732 உரிமை மீறல்கள் Thursday, July 21, 2011, 19:15சிறீலங்கா போர் முடிந்த காலப்பகுதியில் இருந்து இதுவரை மனிதை உரிமை மீறல்கள் தொடர்பில் 11,732 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. இதனை ஆளும்கட்சி பிரதம கொரடா தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் எதிர்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அம்முறைபாடுகளில் 2009ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்டவை என்றும் அவற்றுள் 2691 பொலிஸாருக்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilthai.com/?p=22394

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.