ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143185 topics in this forum
-
அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழுள்ள ஆறு உப-குழுக்களின் அறிக்கை நாடாளுமன்றத்தில், நேற்று சனிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த அறிக்கைகளின் மீதான விவாதம், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9,10 மற்றும் 11ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதேவேளை, அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டம் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழுள்ள உப-குழுக்களின் அறிக்கையை சமர்ப்பித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில், அடிப்படை உரிமைகள், நீதிமன்றம், நிதி, தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு…
-
- 0 replies
- 346 views
-
-
அரசியலமைப்புச் சபை வரும் போது கூட்டமைப்பு பிளவுபடுவதா? வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் கடந்த 19ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, மக்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூற வேண்டும். இது அரசியல் கட்சியா, இல்லையென்றால் இவ்வாறானதோர் அமைப்பு எதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கங்களும் இந்த புதிய அமைப்பின் நோக்கங்களும் ஒன்றா, ஒன்றாக இருந்தால் இரண்டு அமைப்புக்கள் எதற்கு, நோக்கங்கள் முரண்படுவதாக இருந்தால் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அதில் இயங்குவது எவ்வாறு? இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகள் எழும் என எதிர்பார்த்து, பேரவையின் சில தலைவர்கள் அவற்றுக்குப் பதிலளித்துள்ள…
-
- 4 replies
- 643 views
-
-
ஆஸி.யா செல்ல முயன்றவர் கைது! அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் இடம்பெயர்வதற்கு முயற்சி செய்த 31 வயதுடைய நபரை, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்துள்ளனர். குறித்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அவரை இன்று நீர்கொழும்பு நீதிமன்ற நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http://onlineuthayan.com/news/10384
-
- 0 replies
- 296 views
-
-
இந்த நான்கு கொலைகளையும் கிண்டி எடுக்கவும்: பிரதமருக்கு சங்கரி கடிதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், ரி.மகேஸ்வரன், ரி.எம்.தசநாயக்கா ஆகியோரின் படுகொலைகள் சம்பந்தமான விபரங்களை தந்து உதவுமாறு சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் தங்களை வேண்டியுள்ளதாக அறிகின்றேன். இதே காலத்தில்தான் தங்கத்துரை, கிங்ஸ்லி ராஜநாயகம், லக்ஸ்மன் கதிர்காமர் மற்றும் ஆகியோரின் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. தயவு செய்து இவர்களின் விபரங்களையும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றிய செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கவும் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கோரியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்ப…
-
- 0 replies
- 675 views
-
-
இந்திய மீனவர்கள் 7 பேர் கைது நெடுந்தீவின் வடமேற்கு பகுதியில், இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள், இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 2 டோலர் படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள், மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் கூறியுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/188330/இந-த-ய-ம-னவர-கள-ப-ர-க-த-#sthash.d6dFMapi.dpuf
-
- 0 replies
- 178 views
-
-
தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான ஒரு அங்கமே கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்துக்கு அருகில் அமைக்கப்படும் பௌத்த விகாரை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயச் சூழலில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையைப் நேற்று வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 'தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் பௌத்த மயமாக்கும் நோக்கத்துடனேயே இராணுவத்தின் துணையுடன் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன ஒரு வீதம் கூட பௌத்தர்கள் இல்லாத தமிழர்களை மாத்திரம் கொண்ட பகுதியில் இப்ப…
-
- 0 replies
- 414 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான் முக்கியமானது. அதற்கு பின்னரே அபிவிருத்தி நடவடிக்கைகள். தீர்வு காணவேண்டும் என்பதற்காக தான் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துக்கூறுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், “இலங்கை அரசாங்கம், சர்வதேச நன்கொடை மாநாட்டை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்து முற்படுகின்றது. யுத்தத்தின் பின்னரான வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கான நிதி அந்த மாநாட்டில் வைத்து வழங்கும…
-
- 3 replies
- 427 views
-
-
இராணுவம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும்: புதுக்குடியிருப்பு மக்கள் சண்முகம் தவசீலன் புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம், இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றது. 19 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள், வீடுகள் மற்றும் பொருளாதார நிலையங்கள் என்பவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள், கடந்த 8 வருடங்களாக வாடகை வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு …
-
- 0 replies
- 349 views
-
-
அண்மைய அசம்பாவிதங்களை தொடர்ந்து, இலங்கை குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள சிறப்பு அறிவித்தல்.
-
- 1 reply
- 411 views
- 1 follower
-
-
இலங்கை: "தமிழர்களுக்கு சம அந்தஸ்து கொடுப்பது ஒன்றே தீர்வாகும்" பகிர்க விடுதலைப் புலிகளை உருவாக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அமைச்சர் ஒருவரும், புலிகள் காலத்தில் பாதுகாப்பு இருந்ததாக வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் கூறியிருப்பது, அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தைத் தருமா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே. ரஷிதா ரஷியின் கருத்து: "முப்பது வருட கால யுத்தத்தின் பின் தற்போதுதான் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். மனித ரத்தத்தை சிதறவைத்து ஒரு விடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை. சிறுபான்மையினராக இர…
-
- 2 replies
- 684 views
-
-
இவரைத் தெரிந்தால் அறிவிக்கவும் செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் கல்லூண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு இலக்காகி வீழ்ந்து கிடந்த நிலையில் மானிப்பாய் பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடர்பில், எந்தத் தகவலையும் பெறமுடியாத நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.என்.டி ஜெயவீர, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார். 45 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க மேற்படி நபர் கடந்த 16ஆம் திகதி இரவு கல்லுண்டாய் வெளிபகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள…
-
- 1 reply
- 477 views
-
-
உண்ணாவிரதம் கைவிடப்பட்டது -சண்முகம் தவசீலன், எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், அ.அகரன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியா, பிரதான தபாலகத்துக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வந்த, உண்ணாவிரதப் போராட்டம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியையடுத்து, கைவிடப்பட்டுள்ளது. அந்த பிரச்சினைக் குறித்து, எதிர்வரும் 9ஆம் திகதி, கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுப்பதாக அவர் வாக்குறுதியளித்துள்ளார். அன்றைய தினம், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அலரி மாளிக்கைக்கு வருமாறும் அவர் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளா…
-
- 9 replies
- 932 views
-
-
உதயசிறி விடுதலையானார் சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைப்பட்டிருக்கும் சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயசிறிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்றே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். எனினும், உதயசிறியை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை வரை அவரது விடுதலைக்கு தடையாக இருந்து வந்தது. இந்நிலையில் உதயசிறி, சார்பில் வழக்குத் தொடர்ந்த நல்லாட்சிக்கான மனித உரிமைகள் இயக்கமும், மனித உரிமைகள் …
-
- 17 replies
- 1.4k views
-
-
உள் வட்ட அரசியல் மப்றூக் ஆயுத இயங்கங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை உள்ளக முரண்பாடுகள் இல்லாதவை என்று எவையும் இல்லை. ஆனானப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கே உள்ளக முரண்பாடுகள்தான் காரணமாகிப் போயின. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையை முதன் முதலாக ஆட்சி செய்த ஐ.தே.கட்சியில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள்தான், அந்தக் கட்சிக்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாகுவதற்குக் காரணமானது. கடந்த 10 வருடங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகளால், மு.காங்கிரஸ் உடைந்ததோடு அந்தக் கட்சிக்கு எதிராக, அதிலிருந்து பிரிந்து சென்றவர்களாலேயே இரண்டு கட்சிகள் உருவாக்கப்பட்டன. …
-
- 0 replies
- 779 views
-
-
ஐ.தே.க அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, யானை சின்னத்துக்குச் சேதம் விளைவித்த கான்ஸ்டபிள் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/195815/ஐ-த-க-அல-வலகம-ம-த-த-ப-ப-க-க-ச-ச-ட-#sthash.FhjgH78i.dpuf
-
- 1 reply
- 259 views
-
-
ஒன்றிணைந்த எதிரணியின் பேரணிக்கு வந்த இருவர் உயிரிழப்பு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தின பேரணியில் கலந்துகொள்ள வந்த இருவர், சுகயீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிவித்திகல மற்றும் கண்டி ஆகிய பிரசேதங்களைச் சேர்ந்த இவருரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். உயிரிழந்தவரில் ஒருவரின் வயது 63, மற்றையவரின் வயது 80 என பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/195823/ஒன-ற-ண-ந-த-எத-ரண-ய-ன-ப-ரண-க-க-வந-த-இர-வர-உய-ர-ழப-ப-#sthash.FQZsbK7m.dpuf
-
- 1 reply
- 295 views
-
-
-
கங்காராமையில் மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கங்காராமை சீமா மாகலய விகாரைக்கு விஜயம் செய்துள்ளார். மங்கள விளக்கேற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர், வழிபாடுகளிலும் ஈடுபட்டார். - See more at: http://www.tamilmirror.lk/196467/கங-க-ர-ம-ய-ல-ம-ட-#sthash.xaYhyRz0.dpuf
-
- 0 replies
- 299 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு ரூ.7.6 மில். நட்டம் ஜனனி ஞானசேகரன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்ட ஆறு மாத காலப்பகுதியில், 7.6 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார் ஜே.வி.பி தலைமையகத்தில் இன்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “திரட்டிக்கொண்ட கறுப்புப் பணத்தை, ஏதாவதொரு இலாபம் தரக்கூடிய வியாபாரத்தில் முதலிடுவது போலவே, இந்த கட்டுநாயக்க விமான நிலைய…
-
- 0 replies
- 440 views
-
-
கண்டி வன்முறை: மோதலும் இணக்கமும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கண்டியில் சமீபத்தில் நடந்த இன ரீதியான தாக்குதல்களில் இஸ்லாமியர்களின் வீடுகளும் சொத்துக்களும் குறிவைத்துத் தாக்கப்பட்ட சம்பவத்தின்போது, பல சிங்களர்கள் தங்கள் அண்டைவீட்டு இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார்கள். Image captionதையூப். அன்றைய தினத்தை மிகத் தெளிவாக நினைவு கூர…
-
- 0 replies
- 401 views
-
-
கன்னங்கர பாடசாலை: இந்து சமய ஆசிரியர் ‘வாசமே’ இல்லை -ஜே.ஏ.ஜோர்ஜ் “களுத்துறை மாவட்டத்தில், மத்துகம கன்னங்கர தேசிய சிங்களப் பாடசாலையுடன் இணைந்து இயங்கி வருகின்ற தமிழ்ப் பிரிவு மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று சுட்டிக்காட்டிய யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, “அங்கு இந்துசமயப் பாடத்துக்கு ஆசிரியர் இருந்த வரலாறே இல்லை” என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) நிலையியற் கட்டளையின் கீழ் கல்வியமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தபோதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், “இந்தப் பாடசாலை…
-
- 2 replies
- 409 views
-
-
கலாமுக்கு சிலை -சொர்ணகுமார் சொரூபன் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும் இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தையுமாகிய மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (17) திறந்து வைக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து அப்துல் காலமின் திருவுருவச் சிலையை திரைநீக்கம் செய்து வைத்தனர். இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த அழகிய திருவுருவச் சிலை யாழ் பொது நூலகத்திலுள்ள இந்திய கோணர் வளாத்தில்…
-
- 9 replies
- 924 views
-
-
கல் வீசியவர்களுக்கு புதுமையான தண்டனை பொரளை பிரதேசத்தில் பள்ளிவாசல் மீது கல் வீசிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு 5 பேருக்கு புதுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பொரளை வஜீராராம விகாரையின் ஊடாக வழங்குமாறு 5 பேருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி பொரளையிலுள்ள பள்ளிவாசல் மீது கற்களை வீசியதாக 5 நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்களிடம் இருந்து பெறப்படும் அபராதத் தொகை வெள்ளத்தால் பாதிக்கப்பட்;ட மக்களுக்கு நிவாரண பொருட்களை பெற்றுக்கொடுக்க பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது…
-
- 0 replies
- 262 views
-
-
Views - 1 -சண்முகம் தவசீலன் மகாவலி அதிகார சபையினால் பறிக்கப்பட்ட முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மக்களின் வயல் காணிகள் தொடர்பான பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய காணி அமைச்சு எழுத்து மூலமாக கொடுத்த உத்தரவை மாவட்டச் செயலகம், மற்றும் பிரதேச செயலகம் ஆகியன மூடி மறைத்துள்ளதாக கொக்குத்தொடுவாய் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 1984ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை பகுதியில் உள்ள கிராமங்களிலில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 2009ஆம் ஆண்டில் போர் நிறைவடைந்த பின்னர், மீள்க்குடியேறினர். இந்நிலையில், அவர்களுக்கு சொந்தமான சுமார் 2157 ஏக்கர் வயல் காணிகள்; மகாவலி அதிகார சபையின் (எல்) வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு, அதில் பெரும் பகுதி …
-
- 0 replies
- 493 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுவதில் இருந்து புளொட் வெளியேறியுள்ளது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இணங்கிக் கொண்டதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசன ஒதுக்கீடு வழங்கப்படாததை அடுத்து அந்த மாவட்டத்தில் போட்டியிடுவதில் இருந்து புளொட் வெளியேறியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர் பதவிகளும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே வழங்கப்பட்டன. எனவே, ஒப்பந்தப்படி அந்தக் கட்சி 60 சதவீதமான வேட்பாளர்களையும், ஏனைய இரண்டு கட்சிகளும் தலா 20 சதவீதமான வேட்பாளர்களையும் நிறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசனப் பங்கீடு தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்…
-
- 1 reply
- 401 views
-