ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
http://headlinestoday.intoday.in/site/headlines_today/programme/sri-lanka-war-crimes-on-tamils/1/144146.html இலங்கை பதில் கூற மறுக்கிறது. ஐ நா இந்த வீடியோவையும் பார்க்க வேண்டும்
-
- 0 replies
- 1.2k views
-
-
குடாநாட்டில் TNA வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றது. - 09 ஜூலை 2011 சிவாஜிலிங்கத்தின் வாசஸ்தலத்தின் மீது கழிவொயில்கள் - குளோபல் தமிழ்ச்செய்தியாளர் : உள்ளுராட்சித் தேர்தலுக்கான நாட்கள் அண்மித்து வருகின்ற வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்படுவது தொடர்கின்றது. இன்று அதிகாலை வேளையில் வல்வெட்டித் துறைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான சிவாஜிலிங்கத்தின் வாசஸ்தலத்தின்மீது கழிவொயில்கள் உள்ளிட்ட கழிவுகள் ஊற்றப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 3 மணியளவில் இரண்டிற்கு மேற்பட்ட கயஸ் வாகனங்களில் வந்த நபர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முன்னதாக வலி மேற்க…
-
- 1 reply
- 428 views
-
-
இலங்கை உயர்ஸ்தானிகரை ஜெயலலிதா சந்திக்க உள்ளார் 07 ஜூலை 2011 இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை தமிழக முதல்வர் ஜெயலிதா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரங்களில் இந்த சந்திப்பு நடைபெறும் எனக் குறிப்பிடப்படுகிறது. பிரசாத் காரியவசம் கடந்த செவ்வாய்கிக்கிழமை கொழும்பிலிருந்து, இந்தியா திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய இலங்கை உறவு தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜெயலலிதாவிற்கு விளக்கம் அளித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கையுடனான உறவுகளின் யதார்த்த நிலைமைகளை ஜெயலலிதா புரிந்து கொண்டுள்ளதாக பிரதமர் அண்மையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/…
-
- 10 replies
- 621 views
-
-
தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம். -பிரிட்டிஸ் எம்பிக்கள் Saturday, July 9, 2011, 22:33 உலகம், தமிழீழம் நாம் தமிழ் மக்களிற்கு நீதியும் நியாயமும் கிடைக்கும்வரை ஓயமாட்டோம் இவ்வாறு பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான குழு கூறியுள்ளது. 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இந்தக்குழு தனது ஊடக அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது. தமிழ் மக்களுக்கான நீதியை நிலை நாட்ட ஓர் சர்வதேச விசாரணை ஒன்றே தேவை எனவும் அந்த குழு கூறியுள்ளது. குழுவின் தற்போதைய தலைவரான லீஸ் ஸ்கொட் கையெழுத்திட்ட உத்தியோக பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது http://www.tamilthai.com/?p=21381
-
- 1 reply
- 721 views
-
-
இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கை குறித்து அடுத்து என்ன நடவடிக்கை மேற்கொள்வது என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்னும் யோசித்து வருவதாக ஐ.நா. வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகம் எப்போது உத்தியோகபூர்வமாக மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்புவார் என கேட்டபோது, நாம் இந்த அறிக்கையை ஏற்கெனவே பகிரங்கமாக்கியுள்ளோம். ஏனைய ஸ்தாபனங்களுக்கு அனுப்புவது மற்றும் அடுத்த நடவடிக்கை குறித்து செயலாளர் நாயகம் யோசித்து வருகிறார். அவ்வாறு மேலதிக நடவடிக்கை குறித்து அறிவிப்பதற்கு ஏதும் இருந்தால் அந்த வேளையில் அறிவிப் போம் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறினார். http:/…
-
- 4 replies
- 752 views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கில் நடுத்தெருவில் கைவிடப்பட்ட மீள் குடியமர்த்தப்பட்ட மக்கள்!(video) Saturday, July 9, 2011, 21:20சிறீலங்கா, தமிழீழம், முதன்மைச்செய்திகள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் அண்மையில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாத நிலையில் இன்னும் சிலர் நடுத்தெருவில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, சிச்சியவெட்டை, போக்கறுப்பு ஆகிய பகுதிகளில் கடந்த 3ஆம் திகதி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். http://youtu.be/hVSg-qZbrS8 இவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே வீடுகள் உள்ளிட்ட ஏனைய உதவிப்பொ…
-
- 0 replies
- 422 views
-
-
இராணுவத்திற்குள் தொடரும் நெருக்கடி! மகேஸ் குமாரவை கட்டாய ஓய்வில் அனுப்ப இராணுவத் தளபதி முயற்சி! Saturday, July 9, 2011, 22:17 சிறீலங்கா தற்போதைய இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, வன்னி கட்டளைத் தளபதியாக பணியாற்றிய காலத்தில், அவர் தொடர்பாக இராணுவப் பொலிஸ் விசாரணையொன்றை முன்னெடுத்த மேஜர் ஜெனரல் மகே குமார என்ற அதிகாரியை, எந்தவொரு குற்றச்சாட்டுமின்றிகட்டாய ஓய்வில் அனுப்ப முனைப்புகளை முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில் மோதல்கள் இடம்பெற்ற பிரதேசத்தில் மதுபானம் பயன்படுத்தப்படுவது முற்றிலும் தடைவிதிக்கப்பட்டமை குறித்து இராணுவத் தலைமையகம் எழுத்துமூலம் உத்தரவிட்டிருந்த போதிலும், வன்னி பாத…
-
- 0 replies
- 730 views
-
-
வடக்கில் துணை இராணுவக் குழுக்கள் செயற்படவில்லை - இராணுவம் : 09 ஜூலை 2011 வடக்கில் துணை இராணுவக் குழுக்கள் இயங்கி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். சில அரசியல் கட்சிகள் போலியாக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்திலோ அல்லது வடக்கின் ஏனைய பகுதிகளிலோ துணை இராணுவக் குழுக்கள் இயங்கவில்லை எனவும், இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிப்பதாகவும் யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களை சீர் குலைக்கும் வகையில் துணை இராணுவக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக சில அரசியல் கட்ச…
-
- 1 reply
- 503 views
-
-
விளையாட்டும் உலகமும் வேறுவேறல்ல! - 'இலங்கையின் கொலைக்களம்' விளையாட்டு வீரர்கள் இடையே ஏற்படுத்திய அதிர்வுகள்!! வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கோள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் அவுஸ்திரேலிய துடுப்பெடுத்தாட்ட வீரர்களை கடுமையாகப் பாதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சனல் 4 தொலைக்காட்சியின் 'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படத்தை அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் பார்வையிட்ட அந்நாட்டின் பிரபல துடுபபெடுத்தாட்ட வீரர் ஒருவர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், பயங்கரமான கனவுகளைக் காண்பதாகவும் தெரிய வருவதாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் இருந்து வெளிவரும் The Sydney Morning H…
-
- 0 replies
- 687 views
-
-
யுத்த நினைவுச் சின்னங்களை அழிக்குமாறு வடக்கில் உத்தரவு வடக்கில் யுத்த நினைவுச் சின்னங்களென எவையும் எஞ்சியிருக்கக் கூடாதென வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நெல்லியடி மத்திய மகா வித்தியால மண்டபத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். நினைவுச் சின்னங்களை அகற்ற அவர் காலக்கெடுவொன்றையும் விதித்துள்ளார். விடுதலைப்புலிகளிளால் 1987 ஆம் ஆண்டில் ஜூலை 5 ஆம் திகதி, நடத்தப்பட்ட முதல் கரும்புலி தாக்குதல், இப்பாடசாலை கட்டிடங்களில் நிலை கொண்டிருந்த படையினர் மீதே நடத்தப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் நினைவுச் சின்னமாக சிறிய கட்டிடத் தொகுதியொன்று பேணப்பட்டு வந்தது. அத்துடன் இத்தாக்குதலை நடத்திய ம…
-
- 2 replies
- 526 views
-
-
மகிந்த - லியம் பொக்ஸ் இன்று சந்திப்பு! சிறிலங்கா சென்றுள்ள பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் மஹிந்த ராஜபக் சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. http://www.pathivu.com/news/17332/57//d,article_full.aspx
-
- 3 replies
- 536 views
-
-
வடக்கில் ஹிட்லரின் நாஸிஸவாத ஆட்சி: அனுரகுமார வடக்கில் ஹிட்லரின் நாஸிஸவாத ஆட்சியே இடம்பெறுகின்றது. அங்கு மரபுரிமை, நாகரிகத்தை அழித்து சின்னாபின்னமான தமிழினம் ஒன்றை உருவாக்கும் முயற்சியிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுபவர்களை அடக்கும் செயற்பாட்டையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. மேற்கத்தைய நாடுகளின் சூழ்ச்சிகளை தோற்கடிக்க வேண்டுமானால் முதலில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண…
-
- 1 reply
- 550 views
-
-
தமிழ் மக்கள் தொடர்பில் அக்கறையுடன் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சம்பந்தன் சிந்திக்க வேண்டுமாம்: சம்பந்தனுக்கு ஆலோசனை கூறும் சம்பிக்க ரணவக்க. [saturday, 2011-07-09 18:32:29] தமிழ் பிரிவினைவாத அரசியலில் தமிழ் மக்களை பலிக்கடாவாக்கும் முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது. இதனை கைவிட வேண்டும் என மின் சக்தி வலு அமைச்சரும் ஜாதிகஹெல உறுமயவின் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில், தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்தாவிடின் தமிழ் மக்களை ஒன்றினைத்து அரசிற்கு எதிராக போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக தமது கருத்தை தெரிவிக்கும் வகையிலேயே சம்பிக்க …
-
- 0 replies
- 414 views
-
-
தனது இனத்தையே காட்டிக் கொடுத்தும் வால் பிடித்தும் பதவிக்கு வந்த அஸ்வரின் ஆலோசனை எமக்குத் தேவையில்லை என்கிறார் விக்கிரமபாகு கருணாரட்ன [saturday, 2011-07-09 09:25:41] மக்களின் வாக்குகளைப் பெறாமல் அரசை வால்பிடித்துப் பதவிக்கு வந்தவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கு நான் ஒரு போதும் அலட்டிக்கொள்ளப்போவதில்லை.இவ்வாறு புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று முன்தினம் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். அஸ்வர், தம்மைக் கடுமையாக விமர்சித்தமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே விக்ரமபாகு கருணாரட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: அஸ்வரின் நாடாளுமன்ற ஆயுள்காலமானது அரசைப் …
-
- 0 replies
- 411 views
-
-
கடலுணவுகளின் பெருக்கம் குடாக்கடலில் பெரும் வீழ்ச்சி றோலர் பாவனையே காரணம் என்கின்றனர் மீனவர்கள் குடாக்கடலில் கடலுணவுகளின் பெருக்கம் தற்போது குறைவடைந்து வருவதால் குடா நாட்டுச்சந்தைகளில் கடலுணவுகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளதாக மீனவர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில வாரங்களாகக் குடாநாட்டுச் சந்தையில் கடலுணவுகளின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளன. குடாக்கடலில் கடலுணவுகளின் பெருக்கம் குறைவடைந்துள்ளமை யால் மீனவர்களின் வலைகளில் அவை சிக்குவதில்லை. விலை அதிகரிப்புக்கு அதுவே காரணம் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய மீனவர்களின் அத்து மீறிய றோலர் மீன்பிடி காரணமாகவே இவ்வாறு குடாக்கடலில் மீன்களின் பெருக்கம் குறைவடைந்துள்ள…
-
- 2 replies
- 360 views
-
-
Saturday, July 9, 2011, 12:24இந்தியா, சிறீலங்கா தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமை தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு சிறிலங்கா அரசு தலைமை அழைப்பு விடுக்கவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் மூலமே இந்த அழைப்பை விடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அழைப்பானது மிகவும் இரகசியமான முறையிலேயே விடுக்கப்படவுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிலிருந்து கசிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுடன் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் பிரசாத் காரியவசத்தின் சந்திப்பின் போதே இந்த அழைப்பு விடுக்கப்படவுள்ளது. இது இவ்வாறிருக்க இவ்வாறானதொரு அழைப்பு விடுக்க…
-
- 2 replies
- 630 views
-
-
நவாலிப் படுகொலைகள் நினைவு நாள் இன்று இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கைஇன்றைக்குப் 16 ஆண்டுகளுக்கு முன் னர்,1995 யூலை எட்டாம் நாள் அதிகாலை. “முன்னேறிப் பாய்தல்” என்ற பெயரிட்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமத்தைக் கைப்பற்றவெனத் திட்டம்போட்டு சிங்கள இராணுவம் புதிய படை நடவடிக்கையொன்றைத் தொடங்கியது. முதல் நாள் அது குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டது. ஏற்கெனவே பலாலித் தளத்திலிருந்து ஆரம்பித்து கரையோரம் உட்பட சில பிரதேரங்களை இராணுவம் கைப்பற்றியபோது இடம்பெயர்ந்திருந்த மக்களைச் செறிவாகக் கொண்டிருந்த பகுதிகளே இப்படை நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டன.ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு ஓ…
-
- 1 reply
- 606 views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் தவறுமானால் அத்தீர்வினைப் பெற்றுக் கொள்ள போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என தமிழத் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்றில் இன்று உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு எச்சரித்துள்ளார். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க இதுவே சிறந்த தருணம் என சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தீர்வு திட்டமொன்றை முன்வைப்பதன் நோக்கமாக அரசாங்க தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாக எட்டு தடவைகள் கூடி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சமஷ்டி முறையிலான தீர்வை வழங்க அரசாங்கம் இணங்கவில்லையாயின…
-
- 14 replies
- 1.2k views
-
-
தென் சூடானின் சுதந்திர தின வைபவத்திற்கு ருத்ரகுமாரனுக்கு அழைப்பு : 09 ஜூலை 2011 தென் சூடானின் மக்கள் அமைப்பின் அமெரிக்க பிரதிநிதி எல்.வெல்ட் இந்த அழைப்பை .. தென் சூடானின் சுதந்திர தின வைபவத்திற்கு ருத்ரகுமாரனுக்கு அழைப்பு : தென் சூடான் அரசாங்கம் இன்று கொண்டாட உள்ள சுதந்திர தின வைபவத்தில் கலந்துக்கொள்ளுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்ரகுமாரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தென் சூடானின் மக்கள் அமைப்பின் அமெரிக்க பிரதிநிதி எல்.வெல்ட் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இந்த நிலையில், தென் சூடானில் தான் ஒரு தமிழீழ தூதரகத்தை நிறுவ உள்ளதாக ருத்ரகுமாரன் அறிவித்துள்ளார். இலங்கை தென் சூடானுடன் தூதரக தொடர்புகளை இதுவரை ஏற்படுத்தவில்லை என உயர…
-
- 2 replies
- 660 views
-
-
மகிந்த அரசாங்கத்தின்: நகர்வுகளை முறியடிக்கின்ற ஆற்றல் “தமிழர்தரப்புக்கு மட்டுமன்றி” “இந்தியாவுக்கும் கூட” உள்ளதா…….? பிரசுரித்தவர்: admin July 9, 2011 நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம்அரசாங்கம் சாதிக்க நினைப்பது என்ன? இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வைக் காணும் பொறுப்பை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்து விட்டது. இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை- அதுவே இறுதியானது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். எந்தவொரு தீர்வானாலும் அதை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் தீர்வைத் தாம் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை காலமும் தன்னிடம் ஒரு தீர்வு யோசனை உள்ளதாக…
-
- 0 replies
- 714 views
-
-
Saturday, July 9, 2011, 11:37சிறீலங்கா ஜனநாயகத்தை நிலை நாட்டவும் அவசரகாலச் சட்டத்தை நீக்கவும், வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தவும் பான் கீமூனும் மன்மோகன் சிங்கும் எமக்கு ஆலோசனை கூறவேண்டிய அவசியம் இல்லை. அவற்றை நாமே ஏன் செய்ய முடியாது? என்று கேள்வி எழுப்புகிறார் ஜே.வி.பி. உறுப்பினர் விஜித ஹேரத். நேற்று நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளையில், இலங்கையின் பொருளாதார விவகாரங்களில் இந்தியாவின் அழுத்தங்கள் என்ற தலைப்பில் பிரேரணை ஒன்றை விஜித ஹேரத் சபையில் முன்வைத்தார்.இந்தப் பிரேரணையை முன் மொழிந்து உரையாற்றிய விஜித ஹேரத் தொடர்ந்து கூறியவை வருமாறு:இலங்கை விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள தருஸ்மன் அறிக்கை குறித்து இந்தியா இதுவரை தனது கருத்தை வெள…
-
- 0 replies
- 519 views
-
-
[saturday, 2011-07-09 12:12:51] வட சூடானில் இருந்து பிரிந்துள்ள தென் சூடான் சுதந்திர நாடாக தோற்றம் பெற்றுள்ளதுடன், உலக நாடுகள் வரிசையில் புதிய நாடொன்றாகவும் இணைந்துள்ளது.நாட்டில் நிலவிய நீண்டகால உள்நாட்டு யுத்தம் 2005 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. http://youtu.be/kxVKEOEhxoY South Sudan celebrates its independence by itnnews இதனையடுத்து நடத்தப்பட்ட மக்கள் வாக்கெடுப்பில் வட சூடானில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக 99 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்திருந்தனர்.தென் சூடானின் சுதந்திர தின நிகழ்வுகளில் வட சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளார் நாயகம் பான் கீ மூன் உட்பட சர்…
-
- 1 reply
- 772 views
-
-
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுக்கான பிரேரனை பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. விரைவில் பாராளுமன்றத்துக்கு இது தொடர்பான பிரேரணை கொண்டுவரப்படும். நாட்டின் எதிர்காலத்துடன் சம்பந்தப்பட்ட அரசியல் தீர்வு விடயமானது பாராளுமன்றத்தின் ஊடாக உருவாக்கப்படுவதே சிறந்ததாக அமையும் என்று ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். சனல் 4 வீடியோக் காட்சிகள் தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் இலங்கை வருகின்ற பிriத்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸுடன் சனல் 4 விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்தப்படும் சாத்தியமில்லை என்றும் அமை…
-
- 0 replies
- 588 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சேற்றை வாரி வீசியுள்ள யாழ். படைகளின் கட்டளைத் தளபதி [saturday, 2011-07-09 09:42:47] யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் இலாபம் தேடும் வகையில் சிலர் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார். யாழ். குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக சிலர் திரிபுபடுத்தி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று பொறுப்புடன் கூறிக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார். தேர்தல் காலங்களில் இது போன்ற செயற்பாடுகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட சி…
-
- 1 reply
- 805 views
-
-
ஹெட்லைன்ஸ் டுடே ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம்- இந்தியாவில் முதல் முறையாக ஒளிபரப்பாகியது சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் லண்டனின் சேனல் 4 தொலைக்காட்சி தயாரித்த டாக்குமென்டரிப் படம் நேற்று ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் ஒளிபரப்பாகியது. இதயமே இல்லாத மனிதர்கள் கூட பார்த்ததும் கலங்கிப் போய் விடுவார்கள் இந்தக் கோரக் காட்சிகளை. கொடூர மனம் படைத்த ஹிட்லரும், இதயமே இல்லாத இடி அமீனும் கூட இலங்கை என்றாலே வெறுத்துப் போய் விடுவார்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்தால். அப்படி ஒரு வலி மிகுந்த உதிரம் சிந்திய போராட்டத்தின் முடிவைத்தான் லண்டன் சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம், காட்சிகளாக தொகுத்து உலக மக்களின் பார்வைக்கு வைத்து நியாயம் வேண்டி நின்றது.…
-
- 3 replies
- 1.4k views
-