ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71 சத வீதமானவை முறையாகச் செயற்படவில்லை: கணக்கெடுப்பில் தகவல்! Published By: VISHNU 26 FEB, 2024 | 05:21 PM நாட்டிலுள்ள அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71 சத வீதமானவை முறையாகச் செயற்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராசிரியர் வசந்த அத்துகோரலவின் வழிகாட்டலின் கீழ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளி விபரவியல் திணைக்கள மாணவர்கள் குழுவினால் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பின்படி, அரச நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உத்தியோக…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 26 FEB, 2024 | 03:35 PM இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சியை நடாத்தவுள்ளது என விமானப்படையின் எயர் வைஸ் மார்சல் முடித மகவத்தகே தெரிவித்துள்ளார். யாழில் இன்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிகழ்வை முன்னிட்டு, “நட்பின் சிறகுகள்” எனும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இம்முறை வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக “ எனது புத்தகமும் வடக்கில்” எனும் தொனிப்பொருளில் 73 ஆயிரம் புத்தகங்கள் ம…
-
- 21 replies
- 2.2k views
- 2 followers
-
-
26 FEB, 2024 | 12:33 PM யுனைடெட் பெற்ரோலியம் அவுஸ்திரேலியா பிரைவேட் லிமிடெட் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் உள்ளூர் சந்தையில் பெற்றோலிய பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்க்ஷனா ஜயவர்தன மற்றும் யுனைடெட் பெற்ரோலியம் அவுஸ்திரேலியா சார்பாக அதன் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற வகையில் எடி ஹேர்ஸ் (Eddie Hirsch) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான பெற்ரோலிய சில்லறை விற்பனையாளர் மற்றும் இறக்குமதியாளருக்கு இலங்கை முழுவதும் 150 எரிபொருள் நிலையங…
-
- 10 replies
- 951 views
- 1 follower
-
-
26 FEB, 2024 | 10:30 AM மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சமகால விவகாரங்கள் தொடர்பில் இந்தக் குழுவினர் கலந்துரையாடினர். இதன்போது பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள், நெருக்கடிகள் தொடர்பிலும் மத்திய வங்கி ஆளுநர் குழுவினர் விளக்கமளித்தனர். அத்தோடு, சந்திப்பில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்க…
-
- 1 reply
- 349 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவை நடைமுறைப்படுத்தினால் வழக்கை வாபஸ் பெறத் தயார்! இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் வழக்கினை மீளப் பெறவுள்ளதாக சந்திரசேகரம் பரா தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் 27 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற நிர்வாகத் பிரிவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் வழக்கினை மீளப் பெறுவதாக ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் உறுதியளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த சிரேஷ்ட தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின…
-
- 1 reply
- 610 views
-
-
இலங்கைகான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமனம்! இலங்கை;கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிரேஷ்ட அமெரிக்க ராஜதந்திரியான எலிசபெத் கெத்ரின் ஹோஸ்ட், பாகிஸ்தானுக்கு பொறுப்பான தலைமை பிரதி செயலாளராக பதவி வகித்து வருகின்ற நிலையிலேயே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க செனட் சபையின் அனுமதிக்கிணங்க இலங்கை அரசாங்கம் இதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 560 views
-
-
நாடளாவிய ரீதியாக சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டம்! நாடளாவிய ரீதியாக சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இலகுவில் அடையாளம் காணும் நோக்கில் இந்த புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபர் மற்றும் குடும்பங்களின் தகவல்கள், வசிக்கும் இடம், தேசிய அடையாள அட்டை எண், கிராம அலுவலர் பிரிவு போன்ற தகவல்களை உள்ளடக்கிய படிவத்தை பூர்த்தி செய்து தமது வசிப்பிடத்துக்கு உரிய பொலிஸ் நிலையத்தில் கையளிக்க அறிவுறுத்தப்படவுள்ளனர். குறிப்பாக யாரேனும் ஒருவர் தற்போதைய வசிப்…
-
- 2 replies
- 482 views
-
-
26 FEB, 2024 | 10:25 AM யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பஸ்ஸின் மிதி பலகையிலிருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழந்துள்ள நிலையிலும், பஸ்ஸின் மிதிபலகையில் தொங்கியவாறு ஆபத்தான பயணங்களை இன்னமும் தொடர்கின்றனர். பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிலர் யாழ். நகர் பகுதியிலிருந்து காரைநகர் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸில், மிதிபலகையில் தொங்கியவாறு பயணிக்கும் போது, வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனத்துடன் மோதுண்டு விழும் காட்சிகளை ஒருவர் கையடக்க தொலைப்பேசியில் பதிவு செய்து, தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த 19ஆம் திகதி பஸ்ஸினை நிறுத்துவதற்கு முதல், பெண்ணொருவர் இறங்க முற்…
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
25 FEB, 2024 | 10:25 AM பல்வேறு நபர்களின் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய சில இணையத்தளங்களிலிருந்து பெறப்படும் தரவுகளைக் கணினி ஹெக்கர்கள், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதாகக் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்தும் போது பயனாளர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்க இணையதளத்தில் பல்வேறு பாதுகாப்பு உத்திகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் சில அரசு மற்றும் தனியார் இணையதளங்கள் மூன்றாம் தரப்பினருக்கு மிக எளிதாகத் தகவல்களைப் பெறும் திறனைக் கொண்டுள்ளன. முகநூல், வட்ஸ்அப், மின்னஞ்சல் போன்ற முக்கியமான தரவுகளை உள்ளடக்கிய தனிப்பட்ட கணக்குகள் கணினி ஹெக்கர்களால் திருடப்படலாம் என கணினி குற்றப் புலனாய…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் 15 வயது சிறுமி கடத்தல் : 18 வயது காதலனும் அவரது சிறிய தாயாரும் கைது Published By: VISHNU 25 FEB, 2024 | 09:31 PM மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியைக் கடத்திச் சென்ற 18 வயது இளைஞனையும் அவரது சிறிய தாயாரையும் பொலிஸார் வாகரையில் வைத்து சனிக்கிழமை (24) இரவு கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். கொக்குவில் பொலிஸ் பிரிவில் வசித்து வந்த சிறுமி கடந்த 7ம் திகதி பாடசாலைக்குச் சென்ற நிலையில் அவர் வீடு திரும்பாததையடுத்து அவரது உறவினர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தனர். இதையடுத்து கொக்குவில் ப…
-
- 0 replies
- 475 views
- 1 follower
-
-
25 FEB, 2024 | 06:05 PM மட்டக்களப்பு ஏறாவூர் கடற்கரை பகுதியில் சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான பெருமளவு சட்ட விரோத சுருக்குவலைகள் மற்றும் 3 தோணிகளை மீன்பிடி அதிகாரிகள் கடற்படையினருடன் இணைந்து கைப்பற்றியுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (25) சட்டவிரோத சுருக்கு வலைகளை கண்டுபிடிப்பதற்கான சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதே இந்த வலைகளும் தோணிகளும் அதிகாரிகள் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் சிலர் தொடர்ச்சியாக தடை செய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீனவர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர். …
-
- 0 replies
- 435 views
- 1 follower
-
-
25 FEB, 2024 | 04:11 PM தேராவில் குளத்து மேலதிக நீரினால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தீர்வு வழங்கும் விதமாக முல்லைத்தீவில் வெள்ளநீர் முகாமைத்துவ செயற்றிட்டம் மாவட்ட அரசாங்க அதிபரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளத்தின் மேலதிக நீரினை வெளியேற்றுவதற்கான செயற்றிட்டம் லைக்கா ஞானம் அறக்கட்டளை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பங்களிப்புடன் இன்று (25) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது தேராவில் குளத்து மேலதிக நீரினை வெளியேற்றும் இத்திட்டத்துக்கான பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. அதனை தொ…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
ரஷ்யா, உக்ரைன் நாட்டவர்களை வெளியேற விடுத்த அறிவிப்பு தொடர்பில் விசாரணை - அமைச்சரவை அனுமதியின்றி குடிவரவு திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்ததாக ஊடகங்களில் செய்தி Rizwan Segu MohideenFebruary 25, 2024 – உடன் விசாரிக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு ரஷ்யா மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென விடுக்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சரவையின் முன் அனுமதியின்றி குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி…
-
- 3 replies
- 679 views
-
-
ரணிலை இரகசியமாக சந்திக்கும் பொன்சேகா! சரத் பொன்சேகா இரவு நேரங்களில் டயனா கமகேவின் வீட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமது பணி இடைநிறுத்தம் மற்றும் பதவி நீக்கத்தை தடுக்குமாறு சரத்பொன்சேகா நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளார். சரத் பொன்சேகாவிடம் நாம் ஒர…
-
- 4 replies
- 704 views
-
-
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டம் : மேற்கு, கிழக்கு மூலோபாய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துரைப்பு 25 FEB, 2024 | 03:09 PM ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகளை தேசிய பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும் வகையில் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனை கிழக்கு சீனாவின் சோங்கிங் துறைமுகம் வரையில் விரிவுபடுத்தி, பின்னர் ஆபிரிக்கா வரை அதனை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாக குறிப்…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
25 FEB, 2024 | 03:07 PM திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் வழமைபோன்று எவ்வித இடையூறுகளும் இன்றி திட்டமிட்டபடி இடம்பெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு வருடாவருடம் இடம்பெறும் திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் இம்முறையும் திட்டமிட்டபடி இடம்பெறவுள்ளதாகவும், அதற்கு எந்த தடைகளும் இல்லை எனவும் பக்தர்கள் அது தொடர்பில் எவ்வித ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அத்துடன் கடந்த வருடத்தை விட இம்முறை மிகவும் சிறப்பான முறையில் நகர்வலம் இடம்பெறும் என எதிர்பார்ப்பத…
-
- 1 reply
- 580 views
- 1 follower
-
-
பெரும்பான்மை வாதம் குறித்து இலங்கை எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்; அதிகாரப் பகிர்வு அபிவிருத்திக்கு மிகவும் அவசியம் - இந்தியாவில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூர்ய Published By: RAJEEBAN 25 FEB, 2024 | 12:23 PM அதிகார பகிர்வு அனைவரையும் உள்வாங்கும் அபிவிருத்தி ஆகியவை இலங்கையின் பேண்தகு அபிவிருத்திக்கு மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூர்ய பெரும்பான்மைவாதம் குறித்தும் எச்சரித்துள்ளார் இந்தியாவின் 2022 ரைசினா டயலொக் 2024 நிகழ்வின் ஒரு பகுதியாக இடம்பெற்ற கலந்துரையாடலில்கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவ…
-
- 2 replies
- 385 views
- 1 follower
-
-
நாட்டின் மூத்த குடிமக்களின் வருமானம் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். வங்கி வட்டி விகிதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் வங்கிகள் பரிவர்த்தனைகளில் 3 சதவீதம் எடுத்துக் கொள்வதாலும் இவ்வாறு மூத்த குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூத்த குடிமக்கள் ஓய்வு பெற்ற பின், வாழ்நாள் முழுவதும் சேவை செய்து கிடைக்கும் வருமானத்தை வங்கிகளில் வைப்பு செய்து, வட்டியில் தான் வாழ்கின்றனர். வங்கி வட்டி ஆனால் இன்று வங்கிகளில் வட்டி கொடுக்கும் முறையால் அவர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவுகளால் ஏராளமான குடும்பங்கள் ஆதரவற்ற நிலையி…
-
- 1 reply
- 510 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 25 FEB, 2024 | 10:40 AM உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள்குறித்த விசாரணகளின் அவசியத்தை அமெரிக்காவின் முகாமைத்துவம் மற்றும் வளங்கள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா வலியுறுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடி உத்தேபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நல்லிணக்கம் போன்றவழமையான விவகாரங்களிற்கு அப்பால் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணகள் குறித்தும் வெர்மா ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியுடனான சந்திப்பின்போதும் பின்னர் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போதும் ரிச்சட்உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணைகள் குறித்து ஆராய்ந்துள்ளார் என தகவல்கள் வெளியாகிய…
-
- 0 replies
- 252 views
- 1 follower
-
-
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடம் வெளிநாட்டு கையிருப்புகளை அனுப்ப வேண்டாம் என எமது நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக உடைந்து போனோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பொருளாதார வீழ்ச்சி இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் முறைமையின்படி அரசாங்கத்தின் பிரதான மதிப்பீட்டாளரின் பெறுமதி பெறப்பட்டதுடன் அரசாங்கத்தின் மதிப்பீட்டுத் தொகை 8,299 மில்லியன் ரூபாவாகும். சுயாதீன மதிப்பீட்டாளரிடமிருந்து பெறப்பட்ட மதிப்பீட்டின் ஆரம்ப முதலீட்டு அறிக்கையை சம்பந்தப்பட்ட முதலீட்டாளர் சமர்ப்பித்திருந்தார். அதன் மதிப்பீடு 3,256 மில்லியன் ரூபாவாக காட்டப்பட்டது. இந்தத் தொகைய…
-
- 2 replies
- 564 views
-
-
இலங்கை வழங்கும் ஆதரவிற்கு நன்றி இந்திய சமுத்திரத்தில் கடல் பயணத்தை சுதந்திரமாக மேற்கொள்ள இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மாவை சந்தித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு வருகை தந்த நான்காவது அமெரிக்க பிரதிநிதி ரிச்சர்ட் வர்மா என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். …
-
- 0 replies
- 470 views
-
-
கடந்த ஆண்டு 1 மில்லியனுக்கும் அதிகமான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன : பாராளுமன்றக் குழு வெளிப்படுத்துகிறது நாடு முழுவதும் கடந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மின் துண்டிப்புகள்செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழு நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய போது இவ்விடயம் தெரியவந்துள்ளது. கடந்த வருடம் 10,69,000 மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக தலைவர் வலேபொட தெரிவித்தார். இணைப்பு துண்டிக்கப்பட்ட நுகர்வோருக்கு, மறு இணைப்பு கட்டணத்த…
-
- 0 replies
- 418 views
-
-
இலங்கையர்களை நாடு கடத்திய சீனா! கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். இந்த 2 சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த கொள்கலனில் மறைந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். அவர்களில் ஒருவர் 26 வயதுடைய மலர்மதி ராஜேந்திரன் என்றும் மற்றவர் 39 வயதான ஜெயக்குமார் தருமராசா என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி 30, 2023 அன்று குறித்த இருவரும் ம…
-
- 0 replies
- 336 views
-
-
Published By: DIGITAL DESK 3 24 FEB, 2024 | 03:21 PM இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றினை இந்திய - இலங்கை கடல் எல்லையில் நடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. இன்று சனிக்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலுயே, அந்த அமைப்பின் பிரதிநிதி பாக்கியநாதன் றேகன் அவர்கள் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய இழுவை படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் முதல்களை அழித்து வந்த வேளை, எமதா கடற்படையினரால் அந்த இந்திய இழுவைப்படகுகள் கைப்பற்றப்பட்டு அதில…
-
- 1 reply
- 298 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 24 FEB, 2024 | 11:46 AM மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை, நெடியமடு கற்பானைக்குளம் போன்ற கிராமங்களுக்குள் இன்று சனிக்கிழமை (24) அதிகாலை சில காட்டு யானைகள் ஊடுருவி அங்குள்ள இரண்டு வீடுகளையும் விவசாயிகளின் தென்னை மரங்களையும் அழித்து துவம்சம் செய்துள்ளது. யானை பாதுகாப்பு மின்சார வேலிகள் இருந்தும், அவ் வேலிகளைத் தாண்டி மாலை கிராமங்களுக்குள் ஊடுருவி தமது பயிர்களையும் வீடுகளையும் தாக்கி சேதப்படுத்தி வருவதாகவும், இம்மாதம் 12ம், 16ம் திகதிகளில் வயோதிபப்பெண் ஒருவரையும் விவசாயி ஒருவரையும் நெடியமடு, களிக்குளம் கிராமத்தில் வீதியால் சென்றே போது யானை தாக்கி தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயி…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-