ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
Wednesday, June 29, 2011, 0:13தமிழீழம், மாவீரர்கள் மண்டைதீவு படைத்தளத்தின்மீது விடுதலைப்புலிகள் அதிரடித்தாக்குதலொன்றை நிகழ்த்தி சிறிலங்கா படைத்தரப்புக்குப் பாரிய ஆள் – ஆயுத இழப்பை ஏற்படுத்தியதன் 16ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995 ஆம் ஆண்டு யூன் மாதம் இருபத்தியெட்டாம்நாள் அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக அண்மையிலிருக்கும் ஒரு தீவுப்பகுதி. அல்லைப்பிட்டியுட்பட்ட பெருந்தீவுப்பகுதியிடமிருந்து சிறுநீர்ப்பகுதியொன்றால் பிரிக்கப்பட்டுள்ளது. அந்நேரத்தில் சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கி இருமாதங்களே ஆகியிருந்தன. யாழ். குடாநாடு மீது மிகப்பெரும் படையெடுப்பொன்றை நிகழ்த்த சிறிலங்கா அரசு …
-
- 0 replies
- 723 views
-
-
Jun 28, 2011 / பகுதி: செய்தி / பதுளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை! பதுளை மாவட்டம் பசறை, படுகஸ்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய ஒரே குடும்பத்தைச சேர்ந்த இரண்டு பேருக்கு பதுளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நீதிபதி பியசிலி விக்ரமசிங்க மத்துரட்ட இந்த மரணதண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேற்படி கொலை 1998 ஆம் ஆண்டு இடம்பெற்றது. கொலை செய்யப்பட்டவருக்கும், தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் காணி தகராறு இருந்து வந்துள்ளது. காணி தொடர்பான வழக்கு பசறை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருந்த நாளுக்கு முதல் நாள் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்ததாக கூறப்படும் மூன்றாவது நபர் …
-
- 0 replies
- 710 views
-
-
புத்தூரில், கோல் கம்பத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என வைத்திய அறிக்கை கூறியுள்ளது. இதே வேளை தனது மகனுக்கு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரால் அச்சுறுத்தல் இருந்தது என்று பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார் இறந்த இளைஞரின் தந்தை. . எனது மகன் சற்குணநாதன் காதலித்த முஸ்லிம் பெண்ணின் உறவினர் ஒருவர் சி.ஐ.டியில் இருக்கிறார். எனது மகனுக்கும் எனக்கும் தொலைபேசி மூலம் அவர் கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்தார்.சம்பவம் நடப்பதற்கு பத்து நாள்களுக்கு முன்னர் யாழ். நகரில் உள்ள ராணுவ முகாம் ஒன்றுக்கு தன்னை அழைத்துச் சென்று விசாரித்தனர் என்று எனது மகன் என்னிடம் தெரிவித்திருந்தார்.அன்று முதல் சில நாள்கள் அவர் மனச் சோர்வுடனேயே இரு…
-
- 6 replies
- 776 views
-
-
Posted by சங்கீதா on 23/06/2011 in செய்தி யாழ்ப்பாணம்-சாவச்சேரியைச் சேர்ந்த டாக்டர் சிதம்பரநாதன் சபேசன் இங்கிலாந்தில் a groung breaking radio teal time tagging system என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார். இச் சாதனைக்காக அவருக்கு Uk pioneer (கண்டுபிடிப்பாளர்) மற்றும் royal academic enterpreneur ship (கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்துபவர்) ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர் தனது இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்கதுக் கல்லூரியில் பயின்று 2000 ஆம் ஆண்டு கா.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ,டி சித்தியையும் உயர்தரக் கல்வியை யாழ்.இந்துக் கல்லூரியிலும் கற்று 3 ஏ சித்தியையும் பெற்றார். தொடர்ந்து மொறட்டுவ பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்துக்குத் தெ…
-
- 42 replies
- 3.6k views
- 1 follower
-
-
[Tuesday, 2011-06-28 21:35:04] இனப்பிரச்சினைக்கான தீர்வினை இழுத்தடிப்பது என்பது சர்வதேசத்தின் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என டெலோ அமைப்பின் அரசியல்துறைத் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் ஊடகவியலாளர் பிரதானிகளிடம் வெளியிட்ட கருத்து தொடர்பில் கொழும்பு இணையம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். மேலும், அரசாங்கம் காலம் தாழ்த்துவது தமிழ் மக்களுக்கு தீர்வினை சர்வதேசத்தின் உத்தரவாதத்துடனும் பங்களிப்புடனும் பெற்றுக்கொள்ள வழி வகுக்கும் என அவர் தெரிவித்தார். எந்தவொரு தீர்வும் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும்13 ஆவது திருத்தம் தொடர்பாகவோ 13 பிளஸ் தொடர்பாகவோ இந்தியாவிடமிருந்து …
-
- 0 replies
- 544 views
-
-
http://www.yarl.com/files/110628_colombo_reporter.mp3
-
- 0 replies
- 620 views
-
-
http://www.yarl.com/files/110628_sivaajilingam.mp3
-
- 0 replies
- 670 views
-
-
http://www.yarl.com/files/110628_gtf_suren.mp3
-
- 0 replies
- 462 views
-
-
http://www.yarl.com/files/110628_sanjay.mp3
-
- 0 replies
- 497 views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான தமரா குணநாயகம் என்பவர் ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். . 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, இந்த விடயம் குறித்து முறைப்பாடு செய்வதற்கு ஜெனீவா செல்லும்போது. அங்கு சென்ற அவர் தமரா குணநாயகத்துடனேயே தங்கி இருந்து தனது பணிகளை மேற்கொள்வாராம். . கியூபாவிலுள்ள சிறிய இலங்கைத் தூதரகத்தில் சிறிலங்கா தூதுவராகத் தற்போது கடமையாற்றி வரும் தமரா குணநாயகம் தற்போது மிக முக்கியத்துவமிக்க தூதுவர் பதவிக்கு ஜனாதிபதி மஹிந்தவால் நியமிக்கப்பட்டுள்ளதனை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. . இவர் 1970 ஆம் ஆண்டுகளின் போது இலங்கையில் செயற்பட…
-
- 2 replies
- 990 views
-
-
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜேர்மன் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம் திகதி வரை அவர் ஜேர்மனில் தங்கியிருப்பதுடன் அந்நாட்டின் முக்கிய தலைவர்களுடன் இலங்கை தொடர்பில் பேச்சு நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதாவது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அந்த கூட்டத்தொடல் இலங்கைக்கு ஆதரவை பெறும் நோக்கிலேயே அமைச்சர் ஜேர்மன் சென்றுள்ளதாக தெயவருகின்றது. இந்த விஜயத்தின்போது யுத்தத்துக்கு பின்னரான இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மீள்குடியேற்றம் மீள்கட்டுமானம் போன்ற நிலைமைகள் க…
-
- 0 replies
- 694 views
-
-
28 ஜூன் 2011 பொதுநலவாய நாடுகள் செயலகம் செனல்4 ஊடகக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது னஎ பொதுநலவாய நாடுகள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானிய தொலைக்காட்சி ஊடகமான செனல்4 வினால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பாராட்டுக்குரியது என பொதுநலவாய நாடுகள் செயலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். செனல்4 ஊடகத்தினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையென்றால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம், பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு அறிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பத…
-
- 0 replies
- 694 views
-
-
28 ஜூன் 2011 வாசுதேவ நாணயக்கார GTBC.FM ன் விழுதுகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி http://youtu.be/3AOeQ7OmB50 இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? அல்லது ராணுவ சர்வாதிகாரமா? விசேட கலந்துரையாடல் - 25.06.2011 சனிக்கிழமை www.gtbc.fm விழுதுகள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் 2 Kuruparan 1.what do you think about, the militarisation of the civil affairs of the whole society in the north east? 2.the military is more and more, invloving in politcs.military attacking and disturbing, election meetings. the defence minister, making political decisions. how is it, going to end? 3. minister, vasudeva nanayakara you said…
-
- 0 replies
- 485 views
-
-
[Tuesday, 2011-06-28 12:29:12] சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான தமரா குணநாயகம் என்பவர் ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, இந்த விடயம் குறித்து முறைப்பாடு செய்வதற்கு ஜெனீவா செல்லும்போது. அங்கு சென்ற அவர் தமரா குணநாயகத்துடனேயே தங்கி இருந்து தனது பணிகளை மேற்கொள்ளுமளவுக்கு நம்பிக்கையும் சினேகமும் உள்ளவரென தெரியவருகிறது. கியூபாவிலுள்ள சிறிய இலங்கைத் தூதரகத்தில் சிறிலங்கா தூதுவராகத் தற்போது கடமையாற்றி வரும் தமரா குணநாயகம் தற்போது மிக முக்கியத்துவமிக்க தூதுவர் பதவிக்கு ஜனாதிபதி மஹிந்தவால் நியமிக்கப்பட்டுள்ளதனை சிறிலங்கா வெளிவிவகார அம…
-
- 1 reply
- 535 views
-
-
சனல் 4வின் ஜோன் ஸ்னோ - கலம் மெக்ரேவிற்கெதிராக மூன்று சிங்கள அமைப்புகள் 28 ஜூன் 2011 வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை : சனல் 4வின் ஜோன் ஸ்னோ - கலம் மெக்ரேவிற்கெதிராக மூன்று சிங்கள அமைப்புகள் கண்ணில் கண்ட சாட்சி இல்லாமல் இலங்கை மக்களை அவமானப்படுத்தும் நோக்கில் போலியான வீடியோ படத்தை உலகம் முழுவதும் ஒளிபரப்பியமை சம்பந்தமாக சனல் 4 தொலைக்காட்சியில் ஜோன் ஸ்னோ மற்றும் அந்தத் திரைப்படத்தின் இயக்குனர் கலம் மெக்ரே ஆகியோரிடம் 100 மில்லியன் டொலர்களை இழப்பீடாகக் கோரி அவுஸ்திரேலியா, கனடா மற்றும் சுவிஸர்லாந்திலுள்ள மூன்று சிங்கள அமைப்புகள் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன. பிரித்தானிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த வழக்கு தொடர்பில் ஐந்து பேர் அ…
-
- 2 replies
- 803 views
-
-
செவ்வாய்க்கிழமை, 28, ஜூன் 2011 (16:33 IST) இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வலியுறுத்தி நடிகர், நடிகைகள் பேரணி இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மயில்சாமி,ராதாரவி, நடிகைகள் மனோரமா, குயிலி உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர். இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ‘’தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்தோம். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு…
-
- 1 reply
- 792 views
-
-
அதிகாரப்பகிர்வு: தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் 12 அம்ச யோசனை ஒப்படைப்பு கொழும்பு , செவ்வாய், 28 ஜூன் 2011( 14:51 IST ) அதிகாரப்பகிர்வு குறித்த 12 அம்ச யோசனைத் திட்டமொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இலங்கை அரசு ஒப்படைக்கப்படவுள்ளது இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே அதிகாரப் பகிர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அப்போது தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வாக,வட மாகாணத்தில் அமல்படுத்தக் கூடிய வகையிலான 12 அம்ச யோசனைத் திட்டமொன்றை அரசாங்கம் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 23 ஆம் தேதியன்று இலங்கை அரசாங்கத்திற்கும், கூட்டமைப்பினருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் போது, தமிழ தேசிய கூட்டமைப்பினர் 51 அம்ச யோச…
-
- 1 reply
- 496 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை அரசாங்கமே வழங்க வேண்டுமே தவிர பாராளுமன்றம் வழங்க முடியாது. இது மஹிந்த சிந்தனையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமே இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கருத்து தெவிக்கையில், 13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு அவசியமில்லை. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இதற்காக மக்கள் ஆணையும் கிடைத்தது. அத்தோடு அமைச்சர் திஸ்ஸ விதா…
-
- 1 reply
- 685 views
-
-
600 முன்னாள் போராளிகள் ஜூலை முதல் வாரத்தில் விடுதலை _ வீரகேசரி இணையம் 6/28/2011 10:59:34 AM Share புனர்வாழ்வு பெற்ற 600 முன்னாள் போராளிகள் இவ்வார இறுதியில் விடுதலை செய்யப்படவுள்ளனர். இதற்கான விசேட நிகழ்வு வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறுகையில்:, யுத்தத்தின் இறுதிக்காலப் பகுதியில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களை சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும் தொகையான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளனர். 3508 போராளிகள் மட்டுமே இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் …
-
- 1 reply
- 341 views
-
-
[Tuesday, 2011-06-28 13:05:00] மனிதக் கடத்தல்கள் தடுப்பதற்கான குறைந்தபட்ச தராதரங்களுக்குரிய கடப்பாடுகளை இலங்கை முழுமையாக நிறைவேற்றவில்லை எனவும் ஆனால், இதில் குறிப்பிடத்தக்களவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் மனிதக் கடத்தல்கள் தொடர்பான அமெரிக்காவின் 2011 ஆம் ஆண்டின் அறிக்கையில்; குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், சிறார்கள் ஆகியோர் கட்டாய வேலைவாங்கல், மற்றும் பாலியலுக்காக கடத்தப்படுவதில் இலங்கை ஒரு மூலமாக இருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்விடயத்தில் இலங்கையை கண்காணிப்புப் பட்டியலிலில் இருந்து நீக்கியுள்ள அமெரிக்கா, இரண்டாம் மட்டத்தில் குறித்துள்ளது. அதன் பொருள், கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தை இலங்கை முழுமையாக நிறைவே…
-
- 0 replies
- 995 views
-
-
[Tuesday, 2011-06-28 12:37:03] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஈ.பி.டி.பி.யும் அதிகாரப் பகிர்வை பெற்றுக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கில் சுயநிர்ணய ஆட்சியை அமைத்துக்கொள்ள சூழ்ச்சிசெய்கின்றன. இதற்கு இந்தியாவின் அழுத்தம் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குறிப்பிட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடை முறைப்படுத்தவல்ல அதனை முற்றாக இலங்கை அரசியலில் இருந்து ஒழிக்கவே பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியமாகும். எனவே கூட்டமைப்புடனான சந்திப்புகளின் தீர்மானத்தை நாளை புதன்கிழமை அரசு வெளியிட்டவுடன் தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவ் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்க…
-
- 0 replies
- 479 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 28 யூன் 2011, 01:38 GMT ] [ கார்வண்ணன் ] அம்பாந்தோட்டையில் 2018ம் ஆண்டில் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் கனவில் போர்க்குற்றச்சாட்டுகளும், சனல் 4 வெளியிட்ட ஆவணப்படமும் மண் அள்ளிப் போடக் கூடும் என்ற அச்சத்தை சிறிலங்கா அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. 2018ம் ஆண்டு கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அம்பாந்தாட்டையில் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரும் அம்பாந்தோட்டை நகரும் இந்தப் போட்டியை நடத்துவதற்கு கடுமையாகப் போட்டியிட்டு வருகின்றன. இந்தப் போட்டிக்கான மாதிரி இலச்சினையைக் கூட அண்மையில் சிறிலங்கா வெளியிட்டுள்ளது. இந்தநிலையில்…
-
- 0 replies
- 544 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 28 யூன் 2011, 00:34 GMT ] [ கார்வண்ணன் ] வடக்கிலுள்ள தமிழர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து உறவினர்கள் அனுப்பும் பணம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. சிறிலங்காவின் அரச வங்கிகளே வன்னிப் பகுதியில் அதிகளவில் கிளைகளைக் கொண்டுள்ள நிலையில் அவற்றின் ஊடாக இலகுவாக சிறிலங்கா அரசாங்கம் இதுபற்றிய தகவல்களை திரட்டி வருவதாக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நோர்வே ,கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தே, வன்னிப் பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகளவிலான பணம் கிடைத்து வருவதாக அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. போர் முடிவுக்கு வந்த பின்னர், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் கிளைகளை ஆரம்பித்த சிறிலங்…
-
- 0 replies
- 521 views
-
-
லிபியாவைப் போன்றதொரு தலையீடு இலங்கையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்: [ பிரசுரித்த திகதி : 2011-06-28 04:34:46 AM GMT ] லிபியாவைப் போன்றதொரு தலையீடு இலங்கையிலும் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐ.நா. சபையின் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் தொடர்பான விசாரணை அதிகாரி கிறிஸ்டோபர் ஹைன்ஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் முன்னணி ஆங்கில செய்தி ஊடகமான லக்பிம நியூஸ் இணையத்தளத்துக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே மேற்கண்ட விடயத்தை வலியுறுத்தியுள்ளார். லிபியா தொடர்பிலான சர்வதேசத் தலையீடு ஒன்று இருப்பது போன்று இலங்கை மீதும் சர்வதேசத் தலையீடொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடாக இருக்கின்றது. திட்டமிடப்பட்ட ரீதியில் வேண்டுமென்றே சிவிலியன்…
-
- 1 reply
- 464 views
-
-
செவ்வாய்க்கிழமை, யூன் 28, 2011 அடுத்த வருடம் பொது நலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு நடந்தால் அது சிறிலங்காவின் போர்க்குற்றச்சாட்டினை முழுமையாக மறைத்துவிடும் என்பது பலரது கருத்து. ஆகவே இந்த மா நாட்டிற்கு முன்னராக சிறிலங்கா அரசு ஏதாவது ஒன்றை செய்து பொது நலவாய நாடுகளை திருப்திப்படுத்தவேண்டும். . இதன் அடிப்படையிலேயே சனல் 4 வின் இலங்கையின் கொலைக்களங்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை நம்பகத்தகுந்த விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்று பொது நலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மாவின் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார். . அடுத்த ஆண்டு மா நாட்டிற்கு முன்னராக சிறிலங்கா அரசாங்கம் எதையாவது செய்தாகவேண்டும் இல்லாவிடில் அனைத்துலக மட்டத்தில் …
-
- 0 replies
- 591 views
-