ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
http://www.yarl.com/files/110621_Mannar_UC_member.mp3
-
- 0 replies
- 562 views
-
-
http://www.yarl.com/files/110621_sivasakthi_anandan.mp3
-
- 0 replies
- 493 views
-
-
http://www.yarl.com/files/110621_ariyanethran.mp3
-
- 0 replies
- 398 views
-
-
தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மற்றும் காணாமற்போனோரின் பெயர் விவரங்கள் பயங்கரவாத விசாரணைப்பிரிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என அரசு அறிவித்துள்ளபோதிலும், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வவுனியா அலுவலகத்தில் அந்தப் பட்டியல் காட்சிப்படுத்தப்படவில்லை. நாள்தோறும் எதிர்பார்ப்புடன் செல்லும் மக்கள் ஏமாற்றத்துடனேயே திரும்புகின்றனர். "அரசு அறிவித்தபோதும், வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவுக்குச் செல்லும் உறவினர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.எந்த விவரமும் தம்மிடம் இல்லை என்று கூறி அதிகாரிகள் அவர்களைத் திருப்பி அனுப்பு கின்றனர்'' என தகவல்கள் தெரிவிக்கின்றன. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமல் போனோரின் பெயர் விவரங்களை நீண்டகால இழு பறியின் பின்னர் கொழும்பு, பூஸா, வவுனியா ஆகிய…
-
- 1 reply
- 382 views
-
-
பிரசுரித்தவர்: NILAA June 21, 2011 மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதியில் கருணா குழுவினரால் நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை சந்திவெளி பிரதேச மக்கள் அடித்து நொருக்கியுள்ளனர். மட்டக்களப்பு சந்திவெளி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருந்த இந்த நினைவுத் தூபி வாகரையில் விடுதலைப்புலிகளுக்கும் கருணாகுழுவிற்கும் இடையில் நடைபெற்ற ஆயத மோதலின் போது உயிரிழந்த கருணாகுழு உறுப்பினர்களின் நினைவாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் (கருணா) அமைக்கப்பட்டிருந்தது. இன் நினைவுத் தூபியையே சந்திவெளி மக்கள் நேற்றுக் காலை அடித்து நொருக்கியுள்ளனர். ஏற்கனவே இந்த இடத்தில் விடுதலைப்புலிகளின் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும் அதனை உடைத்துவிட்டே கருணா குழுவினர் தங்களுடைய உறுப…
-
- 3 replies
- 1.2k views
-
-
இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான குழுவினரே கூட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இக்குழு தொடர்பில் இனங்களுக்கு இடையிலான நல்லுறவுக்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் என்ற முறையில் வாசுதேவ நாணயக்கார என்ன செய்யபோகின்றார் என்பதை தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகின்றார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ் மாவட்ட தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனை கூட்டத்தில் தாக்குதல் நடத்தப்படவே இல்லை என்று முதலில் சொன்னார்கள். பின்னர் இ…
-
- 1 reply
- 828 views
-
-
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011 12:29 | இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் மீன்பிடிக்கும் போது இலங்கையின் கடல் எல்லைக்குள் தவறுதலாகச் சென்ற 23 மீனவர்களை இலங்கையின் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார். கடிதத்தில் அவர் - தமிழக மீனவர்கள் 23 பேர் மீன்பிடிக்கும்போது தவறுதலாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டனர். அவர்களை நேற்று பிற்பகல் இலங்கை கடற்படை கைது செய்து தலைமன்னார் பொலிஸ…
-
- 0 replies
- 311 views
-
-
பிரசுரித்தவர்: admin June 20, 2011 _பிரித்தானிய தமிழர் பேரவையை எமது கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் அவர்கள் நினைத்தபடி செயல்பட விடக்கூடாது, அத்தோடு உலகத் தமிழர் பேரவையின் நடவடிக்கைகளும் எமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என டென்மார்க் மக்களவை உறுப்பினர் ஸ்கைப்பில் பேசியது ஒலிநாடாவாக வெளியாகியுள்ளது. காலத்தின் தேவை கருதி அதனை நாம் வெளியிட்டுள்ளோம். சமீபத்தில் நடந்த இந்தக் கலந்துரையாடலின் முழுவடிவமும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. http://youtu.be/SynBi7K47vw http://youtu.be/jdq8Ot3VNuI உலகத் தமிழர் பேரவை தலைவர் பாதர் இமானுவேல் அடிகளார் குளறுபடியானவர்; அவர் குளறுபடியாக கதைப்பார் எனவே, அவரும் துரத்தபட வேண்டியவர் என்…
-
- 5 replies
- 1.2k views
-
-
இசைப்பிரியா படுகொலை குறித்து சர்வதேச விசாரணை! - ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு கோரிக்கை!! வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நியூயோர்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இப்போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டமையை உறுதி செய்வதற்கான சான்றாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் அமைந்ர்ள்ளதாக இவ்வமைப்பின் ஆசியப் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் Bob Dietz தெரிவித்துள்ளார். இசைப்பிரியா விடுதலைப் புலிகளின் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர் என சிறிலங்கா படைத்துறைச் செயல…
-
- 1 reply
- 1.6k views
-
-
[Tuesday, 2011-06-21 11:43:34] வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டும் இராணுவ பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளது என யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்ததையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பதிவு நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அவர் வழங்கிய உறுதிமொழியை அடுத்தே குறித்த மனுவை வாபஸ் பெற தீர்மானித்ததாக சிரேஷ்ட சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளு…
-
- 1 reply
- 757 views
-
-
தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 29 ஆவது இடம் மிகவும் தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 29 ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியிடப்படும் பொரின் பொலிஸி (வெளிவிவகாரக் கொள்கை) எனும் சஞ்சிகையினால் 'தோல்வியடைந்த நாடுகளின் சுட்டெண் 2011' எனும் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் சோமாலியா முதலிடத்திலும் சாட் இரண்டாவது இடத்திலும் சூடான் 3 ஆவது இடத்திலும் உள்ளன. இலங்கையின் அயல் நாடுகளில் பாகிஸ்தான் இதில் முன்னிலை வகிக்கிறது. இப்பட்டியலில் பாகிஸ்தான் 12 ஆவது இடத்தில் உள்ளது. மியன்மார் 18 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் 25 ஆவது இடத்திலும் நேபாளம் 27 ஆவது இடத்திலும் உள்ளன. 60 நாடுகளைக்கொண்ட இப்பட்டியலில் பூட்டான் 50 ஆவது இடத்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
Workflow: Public வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, யூன் 21, 2011 ஜோர்தானில் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில்புரிகின்ற பெண்களை தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகப்படுத்திவந்த இலங்கை சிங்களப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை தளமாக கொண்ட தொழில் மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஜோர்தான் ஆடைத்தொழிற்சாலையின் பிரதம முகாமையாளரான அனில் சாந்த என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷைச் சேர்ந்த பெண்ணொருவர் அனில் சாந்தவுக்கு எதிராக கொடுத்த வாக்குமூலத்தை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாட்சியம் வழங்கிய குறித்த பெண்ணை ஜோர்தானில் இருந்து தனது சொந்த நாட்டிற்கு செல்வதற்கு இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜெனீவா-கட்டுநாயக்க-முள்ளிவாய்க்கால் ஆக்கம்: சுனந்த தேசப்பிரிய ராவய கடந்த மே 30 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமான மனித உரிமைகள் பேரவைத் தொடர்பற்றிய கண்ணோட்டமே இது. மேற்படி பேரவையின் கூட்டத் தொடர், இலங்கையின் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அண்மையில் நிகழ்ந்த அடக்குமுறை, அராஜகம் மற்றும் யுத்தத்தின் இறுதிக் கட் டத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடூரங்கள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பிரபல ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய ராவய பத்திரிகைக்கு எழுதிய கண்ணோட்டத்தின் தமிழாக்கம். கடந்த மே மாதம் 30 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் 17 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமானது. அன்றைய கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் சட்டத்துக்கு முரணான படுகொலைகள் தொடர்பாக ஐ.நாவின் விசே…
-
- 1 reply
- 769 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அளவெட்டி தேர்தல் பிரசாரக் கூட்டத்தினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டவர்கள் இராணுவத்தினரே என்பதை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உறுதிப்படுத்தி உள்ளார். . கொழும்பிலிருந்து வெளியாகும் ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். அதிகாரி ஒருவரின் தலைமையில் படையினர் குழுவொன்று சமூக மண்டபத்துக்குச் சென்ற போது அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. . நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்ட, கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த சிலருக்கும் படையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது அமைச்சர்கள் பாதுகாப்பு…
-
- 1 reply
- 571 views
-
-
மண்டபம், ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து மீன்பிடிப்பதற்காகச் சென்ற 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து 5 படகுகளில் அதன் உரிமையாளர் விஜயன், பொன்னழகு உட்பட 23 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க நேற்று புறப்பட்டனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் அனைவரையும் சிறைபிடித்து சென்று இலங்கை தலைமன்னார் துறைமுகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் மார்க்கண்டேயன் கூறுகையில், கைது செய்ததற்கான காரணம் தெரியவில்லை என்றும், நள்ளிரவு 11 மணியளவில் இந்த கைது சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக மீனவர்களிடம் இருந்து 5 படகுகளையும் இலங…
-
- 2 replies
- 524 views
-
-
[Tuesday, 2011-06-21 11:56:05] ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் மிகவும் சூட்சுமமாக பம்பலப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த விபசார நிலையத்தினை சுற்றிவளைத்த பொலிசார் ஐந்து பெண்கள் அடங்கலாக எட்டு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறித்த நிலையத்தின் நடத்துனர் எனவும் அவருடைய அறையில் இருந்து இரண்டு துப்பாக்கிகள், இரண்டு மெகசீன்கள், 23 தோட்டாக்கள் மற்றும் 742 ஆண் உறைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பம்பலப்பிட்டி பகுதியில் ஹோட்டல் ஒன்றின் இரண்டாம் மாடியில் விபசார நிலையமொன்று இயங்கி வருவதாக பாணந்துறை வலான குற்றத்தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையிலேயே குறித்த நிலையம் நேற்று முன்தினம் சுற்றிவளைக்கப்பட்டுள…
-
- 2 replies
- 1.2k views
-
-
Posted by சங்கீதா on 21/06/2011 in செய்தி கட்டுநாயக்க சம்பவம் குறித்த உண்மைகளை எனது எதிர்கால நன்மை கருதி மௌனமாக புதைத்துக் கொண்டுள்ளேன் என்று முன்னாள் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க சம்பவம் குறித்து பேசப் போனால் அதன் பின்னணி பற்றியும் பேசியாக வேண்டும். அதன் போது துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் குறித்தும் பேச வரும். அதன் பின் அவர்களிடம் யாராவது விசாரணை மேற்கொள்ளும்போது தங்களுக்கு அதற்கான பணிப்புரை விடுத்தவர்கள் குறித்து அவர்கள் உண்மையை வெளியிட்டாக வேண்டும். அப்படி நடந்தால் நான் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்டாக வேண்டும். எனக்குக் கிடைக்கவுள்ள தூதுவர் பதவி பறிபோய் விடும். அதன் மூலமான வரப்பிரசாதங்களும் பறிபோய் …
-
- 2 replies
- 773 views
- 1 follower
-
-
[Tuesday, 2011-06-21 09:50:53] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் மீதான தாக்குதலானது இந்நாட்டில் தமிழர்களுக்கு ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதுடன் ஆயுதக் குழுக்களின் ஆட்சியும், இராணுவ ஆட்சியுமே இங்கு நடைபெறுகின்றது என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட…
-
- 2 replies
- 468 views
- 1 follower
-
-
Tuesday, June 21, 2011, 12:19சிறீலங்கா தமிழ்மக்களை கொலைசெய்த மஹிந்த ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றமைக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அமெரிக்கா செல்கின்றார். சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான சட்டத்தின் கீழ் இவருக்கு எதிராக அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகள் இடம்பெறுகின்றன. இவ்வழக்குகளில் ஆஜராக வேண்டும் என்கிற அழைப்புக் கட்டளை மஹிந்தவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஜனாதிபதியோ, அரசோ இக்கட்டளையை பொருட்படுத்துகின்றார்கள் இல்லை. இந்நிலையில் அமெரிக்கா வருகின்ற மஹிந்தர் கைது செய்யப்படலாம் என்று சர்வதேச சட்ட வல்லுனர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால் நாடு ஒன்றின் தலைவர் என்கிற வகையில் கைது செய்யப்படுகின்றமையில் இருந…
-
- 0 replies
- 1.8k views
-
-
Tuesday, June 21, 2011, 12:10சிறீலங்கா முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் முருகன் ஆலயத்துக்கு பாதயாத்திரை சென்ற குழுவினர் மீது அம்பாறை பாலமுனைப் பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியூடாக இப்பாதயாத்திரை பாலமுனை சந்திக்கு வந்த போது அதிகாலை 4.45 மணியளவில் திடீரென வந்த சிலர் பாதயாத்திரையில் வந்தவர்கள் மீது கற்களை வீசித்துரத்தியதுடன் பெண் யாத்திரிகர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி உள்ளதுடன் மிகவும் அநாகரிகமான முறையில் நடந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதயாத்திரையில் ஈடுபட்டவர்கள் அக்கரைப் பற்று பொலிஸ் நிலையத்திலும் இந்து கலாசார திணைக்களத்திடமும் முறையிட்டுள்ளனர். 80 பேர் கொண்ட…
-
- 0 replies
- 566 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 21 யூன் 2011, 04:14 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] பிரான்சில் அகதி தஞ்சம்கோரும் தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிறன்னு [யூன்19] சிறப்பாக இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவாகார அமைச்சகம், இந்த கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரபல வழங்கறிஞர்களான Marc Lecacheux - Sandrine Dupuy இருவரும் பங்கெடுத்து கருத்துரைகளையும் - ஆலோசனைகளையும் வழங்கினர். முதலில் அகதிகள் விவாகாரம் தொடர்பிலான கருத்துரைகள் முன்வைக்கப்பட்டன. 2009 மே மாதத்துக்கு பின்னர், இலங்கையில் யுத்தம் ஒய்ந்துவி;ட்டது என்ற விடயம், அரசியல் அரங்குகளில் மட்டுமல்ல அகதிகள் விவகாரத்திலும் பேசப்பட்டும், கருதப…
-
- 0 replies
- 551 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 21 யூன் 2011, 04:08 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் நல்லிணக்க முயற்சிகளைக் கெடுக்கும் வகையில் கூட்டமைப்பின் ஒருபகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நிராகரித்துள்ளார். கோத்தாபய ராஜபக்ச கூறுவது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எந்தக் கருத்து வேறுபாடுகளோ பிளவுகளோ இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. கூட்டமைப்பின் தலைவர்கள் ஒன்றாகவே செயற்படுகிறார்கள். முரண்பாடு என்று கூறுவதெல்லாம் பொய்யா…
-
- 0 replies
- 672 views
-
-
சிறீலங்காவின் பதிலுக்கு கால எல்லை வேண்டும்: பிரான்ஸ், பிரித்தானியா முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் Tuesday, June 21, 2011, 8:37 உலகம் சிறீலங்கா விவகாரங்கள் தொடர்பில் ஒரு கால எல்லையை நிர்ணயிக்குமாறு நாம் எமது அரசுகளை கோரவுள்ளோம். இந்த காலஎல்லைக்குள் சிறீலங்கா அரசு சாதகமான பதிலை தரவேண்டும். அவ்வாறு தரப்படாதுவிட்டால், நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவித்தது போல அனைத்துலக நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், பிரான்ஸின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சுனர் ஆகியோர் த நியூயோர்க் ரைம்ஸ் நாளேட்டில் எழுதிய கருத்துப் பத்தியில் தெரிவித்துள்ளனர். அதன் தமிழ் வடிவம் வருமாறு:…
-
- 1 reply
- 486 views
-
-
தமது இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான கடும் போக்குடைய இரகசிய குழுவினரே யாழ்ப் பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியிலுள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஒரு சில குழுக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்று தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். . கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடந்தமை உறுதிப்படுத்தபடக்கூடிய நிலையில் முதலில் அடியோடு மறுத்த இராணுவம் இப்போ தாம்தான் தாக்குதல் நடத்தியதாக கூறுகின்றது. கோத்தாவும் இன்று ஒப்புக்கொண்டுள்ளார். இப்போ இந்த வாசுதேவ என்ற விசுவாச நாய் மஹிந்தவினை காப்பாற்றும…
-
- 1 reply
- 460 views
-
-
சிறையில் இருந்த தமிழ்க் கைதி விசாரணைக்காக கொழும்புக்கு news அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த இரு வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான இராசவல்லபன் தவரூபன் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கென நேற்று கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நீதிமன்ற விசாரணைக்கென நேற்று அவர் அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வருகை தந்திருந்த கொழும்பு, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைக்காக அவரை அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் விண்ணப்பித்தனர்.அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தவரூபனை விசாரணைக்கு அழைத்துச்செல்ல அனுமதித்தது. 21 ஜுன் 2011, செவ்வாய் 7:5…
-
- 0 replies
- 319 views
-