ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
Wednesday, June 15, 2011, 21:22சிறீலங்கா, தமிழீழம் போர்குற்றங்கள் குறித்தான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீது சில போர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஐநா நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசு தொடர்சியாக மறுத்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறவும் விசாரணைகளுக்கு தயாரெனவும் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணிப்பாளர் றெஜி அவர்கள் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படையாக தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகளின் நிலைப்பாடாக றெஜி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு தெரிவிக்கப்பட்ட இக்கூற்று சிறிலங்கா அரசுக்கு கடும் ந…
-
- 1 reply
- 1.5k views
-
-
செய்தித்துளிகள் [ புதன்கிழமை, 15 யூன் 2011, 11:11 GMT ] [ கார்வண்ணன் ] ஆசியாவின் இரண்டாவது சிங்கப்பூராக சிறிலங்காவினை மாற்றும் திறன் அதற்கு இருக்கிறது என வியட்னாம் கூறியதாக சிறிலங்காவினது வெளிவிவகார அமைச்சு கூறுகிறது. சிறிலங்காவின் துணை வெளிவிவகர அமைச்சர் நியூமல் பெரேராவினை வெளிவிவகார அமைச்சில் நேற்றையதினம் சந்தித்து உரையாடியபோது சிறிலங்காவிற்கான வியட்னாமியத் தூதுவர் ரொன் சின் தான் இந்தக் கருத்தினை வெளியிட்டிருக்கிறார். சிறிலங்காவிற்கும் வியட்னாமிற்கும் இடையிலான இருதரப்பு உறவினைப் பலப்படுத்துவது தொடர்பாகவே இந்தக் கலந்துரையாடலில் அதிகம் பேசப்பட்டதாகத் தெரிகிறது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான இருதரப்புப் பொருhளதார ஒத்துழைப்பினை மேம்படுத்துவது, உல்லாசப்பய…
-
- 2 replies
- 521 views
-
-
[Tuesday, 2011-06-14 21:55:49] வடமராட்சிப் பகுதியை இன்று மாலை 6 மணியளவில் சுழற்றி அடித்த மினி சூறாவளி காரணமாக சுனாமி எனப் பயந்து மக்கள் ஓட்டம் பிடித்தனர். சில இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் கூரைத் தகடுகள் காற்றில் பறந்ததாகவும் தெரியவருகின்றது. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த மினி சூறாவளி காரணமாக வடமராட்சிப் பகுதியில் பதற்றம் நிலவியது. கடற்கரைப் பகுதியில் இருந்தவர்கள் சுனாமி என பீதியடைந்து ஓடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.seithy.com/breifNews.php?newsID=44873&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 400 views
-
-
Wednesday, June 15, 2011, 21:09சிறீலங்கா சிறிலங்கா அரசாங்கத்தால் பருத்தித்தீவு சுற்றுலா மையமாக்கப்படவுள்ளது. ஆகையினால் அதன் மீன்பிடி வளம் குன்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வடக்கில் யாழ் .எழுவை தீவிற்கு அருகில் உள்ள பருத்தித்தீவு பிதேசத்தை சிறிலங்கா சிறிலங்கா அரசாங்கம் சுற்றுலா மையமாக்கியுள்ளது. எனவே இங்கு கடற்றொழில் பாதிக்ப்பட்டு கடல்வளம் குன்றும் அபாயம் உள்ளது என தேசிய மீனவர் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் ஹேமன் குமார தெரிவித்துள்ளார். கற்பிட்டியில் உள்ள பதினான்கு தீவுகளை சுற்றுலா மையமாக்க வெளிநாட்டிற்கு குத்தகைக்கு விடுவதற்கு அரசால் தீர்மானிக்கபட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக நான்கு தீவுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. அதே போன்று வடக்கில் உள்ள பருத்தித்தீவும் அவ்வாறு வ…
-
- 0 replies
- 782 views
-
-
Wednesday, June 15, 2011, 22:37உலகம் பிரித்தானியாவின் முக்கிய எதிர்கட்சியான தொழில் கட்சி நாடாளுமன்ற, மற்றும் நிழல் அமைச்சர்களுடன் தமிழர்கள் கலந்துரையாடும் நிகழ்வு ஒன்று இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. தெழில் கட்சிக்கான தமிழர் அமைப்பு(Tamils for Labour) இதனை நடத்தவுள்ளது. பாராளுமற வளாகத்தில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் முக்கிய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிழல் அமைச்சர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணக் காட்சிகள், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருக்கும் தமிழ் அகதிகள், மற்றும் இலங்கையின் தற்போதைய நிலை குறித்து முக்கியமாகக் கலந்தாலோசிக்கப்படுகிறது. தமிழ் மக்களும் இதில் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 850 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
' [Wednesday, 2011-06-15 16:26:24] பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பிய 'இலங்கையின் கொலைக்களம்'எனத் தலைப்பிடப்பட்ட ஆவணப்படத்தை இலங்கை அரசாங்கம் பரிசோதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை நாம் மிகக் கவனமாக பரிசோதிப்போம். இதற்கு எமது சொந்த தடவியல் நிபுணர்களும் வெளிநாட்டு நிபுணர்களும் உள்ளனர். அதை பரிசோதித்தபின்னர் நாம் பதிலளிப்போம் என அரசாங்கப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல கூறினார். அரசாங்கம் இதற்கு எப்படியான பதிலை அளிக்கும் என இப்போது கூறுவது காலத்திற்கு முந்திய செயற்பாடாக அமையும் எனவும் அவர் கூறினார். 2009 ஆம் ஆண்டிலும் சனல் 4 அலைவரிசை இவ்வாறான வீடியோவொன்றை ஒளிபரப்பியதாகவும் அது போலியானது என நிரூபிக்கப்ப…
-
- 1 reply
- 990 views
-
-
இரத்தக் கடலில் மாலை சூடிவரும் மன்னவன். சனல் 4 காணொளியில் வன்னிப் படுகொலைக்களம் காண்பிக்கப்பட்டபோது அதன் அறிவிப்பாளர் இப்படியொரு பாரதூரமான மனிதநேயமற்ற படுகொலை நடைபெற்றபோது ஐ.நா என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்வியை எழுப்புகிறார். அந்த நேரம் எதுவுமே செய்யாத ஐ.நா அதற்குப் பிறகாவது என்ன செய்தது என்றும் வினவுகிறார். எதுவுமே செய்யவில்லை என்கிறார் தகவல் தரும் வாணி குமார் என்ற பெண்மணி. சம்பவம் முடிவடைந்த இடத்தை வெறும் சகட்டுமேனிக்கு ஐ.நா செயலர் பான் கி மூன் வானத்தில் பறந்தபடி பார்த்தார். வெறும் 15 நிமிடங்கள் அங்கு நின்று மாலை மரியாதைகளை இராணுவத்திடம் ஏற்றுக் கொண்டுவிட்டு பறந்துவிட்டார். இத்தனை கொலைகளையும் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்த ஐ.நாவின் இரும்பு இதயத்திற்கு போடப்பட…
-
- 1 reply
- 1.4k views
-
-
Wednesday, June 15, 2011, 15:36சிறீலங்கா மட்டக்களப்பு மாவட்டம் தரவைப் பகுதியில் முகாம் அமைத்துள்ள சிறீலங்கா இராணுவத்தினர் தமிழ் மக்களை மிரட்டி பணம் பறித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பால்பண்ணை உரிமையாளர்கள், பால் வினியோகம் செய்வோர், விவசாயிகள் ஆகியோரை சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவினர் மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவுடன் இணைந்து இயங்கிவரும் மணியம் என்பவரே மக்களை மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளை முன்னின்று மேற்கொண்டு வருகின்றார். அதேசமயம், கிரான், சித்தாண்டி மற்றும் வந்தாறுமூலை ஆகிய பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் தமிழர்களை மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைக…
-
- 0 replies
- 745 views
-
-
இலங்கையின் கொலைக்களம்: பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது! - விசாரணைகளை வலியுறுத்தினார் பிரதமர் டேவிட் கமரூன்!! வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போது சனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு (14.06.11) ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கொன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் பிரதமர் டேவிட் கமரூனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இக்கேள்…
-
- 2 replies
- 1.5k views
-
-
நமீபியாவில் இலங்கையர் இமாலய சாதனை:1516 குற்றச் செயல்களுக்குச் சொந்தக்காரர் விடுதலை வேண்டி நிற்கும் வேடிக்கை [Wednesday, 2011-06-15 16:12:37] சுமார் 1516 குற்றச்சாட்டுக்களுக்கு சொந்தக்காரராகி நமீபியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜை ஒருவர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி பிணை மனு தாக்கல் செய்துள்ளார். குற்றச்சாட்டுகள் குறித்த இலங்கை பிரஜை கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக நமீபிய தகவல்கள் தெரிவிக்கின்றன. என்டனி சுரேஷ்குமார் ஸ்டெனிஸ் என்ற 34 வயதுடைய இலங்கை பிரஜை நமீபிய வின்டோக் மேல் நீதிமன்றில் நேற்று தனது பிணை மனுவை சமர்பித்துள்ளார். சுரேஷ்குமாரும் அவருடைய மற்றுமொரு சகாவும் குற்றவாளிகள் என கடந்த ம…
-
- 1 reply
- 897 views
-
-
இலங்கையின் கொலைக்களம்* : சாட்சிகளற்ற யுத்தம் குறித்த மூன்று ஆவணப்பட சாட்சியங்கள் 15 ஜூன் 2011 இலங்கை அரசு பத்திரிக்கையாளர்களை நாடுகடத்தியும் ஐக்கிய நாடுகள் சபையினருக்கு நிரப்பந்தம் கொடுத்தும் அவர்களை வெளியேற்றியும் சாட்சியமற்ற ஒரு யுத்தத்தை நடத்த விரும்பியது. என்றாலும், கைத்தொலைபேசியினதும் தொலைமதித் தொழில்நுட்பத்தினதும் அசாதாரணமான சக்தியை அதனால் வெளியேற்ற முடியவில்லை. எமது பல்லாண்டு கால யுத்தகள ஊடக அனுபவத்தில் நான் என்றும் பார்த்திராத, வலியுடன் பதிவுசெய்யப்பட்ட, மணிக்கணக்கிலான மிகக் கொடூரமான காட்சிப் பதிவுகளை நாங்கள் அகழ்ந்தபடி நடந்தோம். இலங்கையைப் பொறுத்து மட்டுமல்ல, சர்வதேசியச் சட்டங்கள் மீறப்படப்போகும் எதிர்காலத்திலும் கூட, ஐக்கிய நாடுகள் சபை செயல்படத் தவறு…
-
- 17 replies
- 2.3k views
- 1 follower
-
-
[Wednesday, 2011-06-15 13:43:13] இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கும் விடயத்தில் தொடர்ந்தும் பழைய 13ஆவது திருத்தச் சட்டத்தையே அணைத்துக் கொண்டு அழக்கூடாதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அதற்கு மாறாக யுத்தத்தால் வேதனைப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சிறந்த தீர்வு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். திருக்கோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், 13க்கு அப்பால், 13ற்கு மறுபால் என கூறிக் கொண்டு 13ஆவது திருத்தச் சட்டத்தையே பிடித்துக் கொண்டு தடுமாறுவதை நாம் செய்யக்கூடாது. பழைய 13ஆவது திருத்தத்தை அணைத்துக் கொண்டு தடுமாறுவதை …
-
- 0 replies
- 718 views
-
-
-
- 24 replies
- 2.4k views
- 1 follower
-
-
திருகோணமலை,தம்பலகாமம்,ஜெயபுரத்துக்கு அண்மித்தாகவுள்ள பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பைக் கொண்ட காணியில் புதிய வீடமைப்புத் திட்டம் ஒன்றுக்கான அடிக்கல் நடும் வைபவம் இன்று இடம்பெற்றுள்ளது. . இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு உரித்தான உறுதிப் பத்திரங்கள் கொண்ட காணிகளையே இவ்வாறு அவர்களின் அனுமதி பெறாமல் அடாத்தாகப் பிடித்து இந்த வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாகக் காணி உரிமையாளர்களான தமிழ் மக்கள் தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். . குறிப்பிட்ட வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல்லை சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச இன்று நாட்டி வைத்தார். இந்த அடிக்கல் நடும் வைபவத்திற்கு சிங்கள அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் அரசியல்வாதிகள் …
-
- 1 reply
- 600 views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
http://www.yarl.com/files/110614_kirupakaran.mp3
-
- 1 reply
- 1.4k views
-
-
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றுக்கு எதிரான சக்திகள் இரஷ்யாவில் கூடுகின்றன. பொருட்காட்சி எனும் விழாவில் இந்த மாதம் 18 ஆம் திகதி சந்திக்கின்றனர். அமெரிக்காவிற்கு எதிரான நாடுகளில் சீனா அதிபர், மெக்சிக்கோ உட்பட பல ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களும் வருகின்றனர். . இந்த பொருட்காட்சி விழாவிற்கு மஹிந்த இராஜபக்ஷவும் வருகின்றார். நாளை கொழும்பில் இருந்து பயணமாகி மூன்று நாள் இரஷ்யாவில் தங்கி இருக்கும் மஹிந்தா, சீன அதிபர் ,இரஷ்ய அதிபர் ஆகியோரையும் சந்திக்கின்றார். இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்குலகின் அழுத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. . கூடவே இந்தியாவின் அழுத்தம் பற்றியும் மஹிந்த சீனா, இரஷ்யா ஆகியவற்றுடன் சிலாகிப்பார் என தெரியவ…
-
- 0 replies
- 875 views
-
-
http://www.yarl.com/files/110614_suresh_premachandran.mp3
-
- 1 reply
- 786 views
-
-
[Wednesday, 2011-06-15 09:22:18] இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வடபிராந்தியக் கடற்படைக் கட்டளைத் தளபதி விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை தொடக்கம், சுண்டிக்குளம் வரையிலான கடற்பகுதியே பாதுகாப்புக் கடற்படையின் விசேட அணியினரின் பாதுகாப்பில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சமாசத்தில், வட மாகாண மீனவ சமாசப் பிரதிநிதிகளுக்கும், வடபிராந்திய கடற்படையினருக்கும் இடையே நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததாக, வடமராட்சி வடக்குக் கடற்தொழிலாளர் சமாசத் தலைவர் எமிலியாம்பிள்ளை கூறினார். வடகடல…
-
- 0 replies
- 526 views
-
-
[Wednesday, 2011-06-15 09:13:03] வலி. வடக்கில் மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் தாமதமடைவது தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அதிகாரிகளை கடுமையாகச்சாடினார்.தாமதத்துக்கான சரியான காரணம் பொருத்தமான பதிலைக்கூற முடியாது அதிகாரிகள் திக்குமுக்காடினர். அவர்கள் தடுமாற்றத்துடன் பதிலளித்தனர். வலி. வடக்கில் மக்கள் மீளக்குடியமர அனுமதிகக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் வலி.வடக்கில் நேற்று இடம்பெற்றன. இந்த நிகழ்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக தெல்லிப் பழை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் எஸ்.முரளிதரன் மற்றும் திணைக் களத் தலைவர்களுடன் கலந்த…
-
- 0 replies
- 524 views
-
-
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 06:08 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] நாட்டினது உள்நாட்டு விவகாரத்தில் ஏனையவர்கள் தலையிடக்கூடாது என்ற சிறிலங்கா அரசாங்கத்தினது நிலைப்பாட்டிற்கு மலேசியா வழங்கிவரும் ஆதரவினை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்போரின் இறுதி நாட்களில் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றதைக் காட்டும் காத்திரமான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக ஐ.நாவின் வல்லுநர்கள் குழு இனங்கண்டிருக்கிறது என மலேசியாவின் 'புறோகம்' (Persatuan Promosi Hak Asasi Manusia - Proham) மனித உரிமை அமைப்பு தனதறிக்கையில் கூறியிருக்கிறது. "இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான சுதந்தி…
-
- 0 replies
- 404 views
-
-
யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் கொடூர சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் மீது இலங்கை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சனல் 4வின் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதை அடுத்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரை காண்பிக்கப்படாத இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்களின் தொகுப்பினை இலங்கையின் கொலைக்களங்கள் என்ற தலைப்பில் சனல் 4 இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.35 மணியளவில் ஒளிபரப்பியது. இக்காணொளியில் தமிழர்கள் அநீதியான முறையில் இராணுவத்தினால் கொள்ளப்படுவது போன்ற காட்சிகள் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதேவேளை, குறித்த காணொளி சித்தரிக்கப்பட்டவை என்றும் இலங்கை இராணுவத்துக்கு அபகீர்த்தியேற்படுத்தவே…
-
- 2 replies
- 838 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்காக திமுக செய்தவை என்ன? இலங்கைத் தமிழர் பிரச்னையில் தாம் எப்போதும் கேலிக் கூத்தாடியது இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கை மீது பொருளாதாரத் தடை கோரும் தீர்மானத்தை சட்டப் பேரவையில் வரவேற்றது திமுக. அப்போது பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், காவிரிப் பிரச்னையில் தமிழகத்தை திமுக வஞ்சித்துவிட்டது என்று வேண்டுமென்றே பேசி விஷத்தைக் கக்க வேண்டிய அவசியம் என்ன? இலங்கைத் தமிழர்களுக்காக நான் எதைச் செய்தாலும் அதை ""கபட நாடகம்'' என அறிக்கை விடுகிறார் ஜெயலலிதா. 1956-ல் சிதம்பரம் திமுக பொதுக் குழுவில் அண்ணா முன்னிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை நான்தான் முன்மொழிந்தேன். 2…
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
நான் செத்தாவது ஏனையோரை..! பிரித்தானியச் சிறையிலிருந்து சுதாகரன் சற்றுமுன் ஜீரீவீ யில் வெளிச்சம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. இதிலே பிரித்தானியாவில் அகதித் தஞ்சம்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களைத் திருப்பியனுப்பவது தொடர்பான விடயம் பேசப்பட்டது. இதில் திருப்பியனுப்புவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் திரு சுதாகரன் என்பவருடன் உரையாடியிருந்தார்கள். அந்த உரையாடல் நெஞ்சைப்பிழிவதாக உள்ளது. தமிழினம் தொடர்ந்தும் இழக்கும் இனமாகவே இருக்கிறதே என்ற ஆதங்கமே எழுகின்றது. ஏன் எமக்கு இப்படி? எப்படி இதைத் தடுக்கலாம்? சுதாகரன் சொல்லிய கருத்தின் சாராம்சம்……..(இவர் ஒருமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்) அதாவது தன்னையர்பணித்தாவது திருப்பியனுப்பப்படவிருக்கும் ஏனையோரைக் காப்பதே …
-
- 7 replies
- 1.5k views
-