Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 04 DEC, 2023 | 06:38 PM யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தின் இறுதிவரையான காலப்பகுதியில் 2203 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில்,யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தின் செப்ரெம்பர் மாதத்தில் 110 டெங்கு நோயாளிகளும், ஒக்டோபர் மாதத்தில் 118 டெங்கு நோயாளிகளும் நவம்பர் மாதத்தில் 427 டெங்கு நோயாளிகளும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் 82 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். நவம்பர் மாதத்தில் கூடிய ட…

  2. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையிலுள்ள சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருக்கிறார். நேற்று (புதன், டிசம்பர் 6) இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையொன்றை நிகழ்த்திய போது அவர் இதனைக் குறிப்பிட்டார். அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 117 சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், பொலன்னறுவை நகரில் சோழர்களினால் நிர்மாணிக்கப்பட்ட சிவன் ஆலயத்தை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய அவர், தமிழர் பகுதிகளில் பௌத்த விக…

  3. வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் எமது வளங்களை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவர பொறிமுறை ஏற்படுத்த வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டு வளங்களை திருடி வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சொத்துக்களை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவர முடியுமான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் தொழிலட மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் …

  4. கல்முனையில் உள்ள சிறுவர் தடுப்பு நிலையத்தில் வைத்து அண்மையில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில், சிறுவனின் மரணம் தொடர்பாக குழந்தைகள் தடுப்பு மையத்தின் பாதுகாவலர் டிசம்பர் 15 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுவனைத் தாக்கியதாகக் கூறி கல்முனைப் பொலிஸில் சரணடைந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட…

  5. அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட ரோபோ தொழில்நுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவன் கிருபாகரன் கரல்ட் பிரணவன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தை பெற்றுள்ளார். அத்துடன் மாகாணம் மற்றும் வலய மட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். இவரது கண்டுபிடிப்பான Relief attempt monitoring system கிளிநொச்சி மத்திய கல்லூரியில் பொருத்தப்பட்டு வெற்றி கரமாக செயல்படுத்தபடுகின்றது. https://thinakkural.lk/article/283958

  6. யாழில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு நேற்றைய தினம் (06) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், சிறப்பு விருந்தினர்களாக சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் அகல்யா செகராசா, தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் சிவகெங்காதரன், சங்கவி பிலிம்ஸ் & சங்கவி தியேட்டர் பணிப்பாளர் Dr.துரைராசா சுரேஸ், வட மாகாண கைத்தொழில் அபிவிருத்தி சங்கத் தலைவர் தம்பிரா…

    • 0 replies
    • 382 views
  7. இருதரப்பு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் இலங்கையும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச தகவல் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தலைமையில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் மற்றும் நீதி, சிறைச்சாலை விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர். அலெக்சாண்டர் நிகோலாவிச் மற்றும் துணைச் செயலாளர் ஒலெக் விளாடிமிரோவிச் ஆகியோர் அடங்கிய ரஷ்ய…

    • 0 replies
    • 265 views
  8. Published By: RAJEEBAN 07 DEC, 2023 | 11:26 AM 1983 முதல் 2009 வரையான உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தமைக்காக இலங்கை அதிகாரிகள் நாட்டின் துஸ்பிரயோக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 9 தமிழர்களை தடுத்துவைத்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தனது சர்வதேசசகாக்கள் வர்த்தக சகாக்கள் ஐக்கியநாடுகள் ஆகியவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடப்போவதாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்து வந்துள்ளதுஇஎன சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் நீண்டகாலமாகசிறுபான்மை சமூகத்தினர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தடுத்துவைத்து சித்திரவதை செய…

  9. எழிலன். யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கியதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை கத்தோலிக்கராக உள்ளபோதும் தாயார் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் சிறுமி தேவாலயத்திற்குச் செல்வது கிடையாது. தந்தையாருடன் சில சமயம் தேவாலயம் சென்று வரும் பழக்கம் உடையவர் என்றும் இருந்தபோதும் கடந்த சில நாட்கள் தேவாலயம் செல்லாத சிறுமியை அழைத்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது…

    • 19 replies
    • 1.3k views
  10. 07 DEC, 2023 | 02:17 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஜஹ்ரான் குழுவினர் ஒத்திகை தாக்குதலொன்றை மேற்கொண்டனர், இந்த ஒத்திகை குறித்து சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றிற்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்பாக ஏப்பிரல் 16 ம் திகதி ஜஹ்ரான் குழுவினர் தாழங்குடாவில் ஒத்திகையில் ஈடுபட்டனர். இது குறித்து சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜயவர்த்தன இது குறித்து அப்போதைய…

  11. 04 DEC, 2023 | 08:25 PM யாழ் தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழு மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த வன்முறை சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சிலர் தெல்லிப்பழை பகுதியில் பயணித்துள்ளனர். இதன்போது ஹயஸ் வானில் வந்த வாள்வெட்டு குழுவினரை பார்த்து மோட்டார் சைக்கிளில் வந்த ஏனையவர்கள் தப்பித்து செல்ல ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு கும்பல் மருதனார்மடம் நோக்கி தப்பிச் சென்றுள்…

  12. எமது தமிழ் இளைஞர்கள் இந்த நாட்டில் தொடர்ச்சியாக ஒரு அச்ச உணர்வுடன் வாழ முடியாது : பா.உ கலையரசன்! kugenDecember 7, 2023 (சுமன்) இந்த நாட்டில் தொடர்ச்சியாக எமது தமிழ் இளைஞர்கள் ஒரு அச்ச உணர்வுடன் வாழ முடியாது. அவர்களும் இந்த நாட்டின் பிரஜைகள். அவர்களுக்கும் தன் இனம், சமூகம் சார்ந்த உணர்வுகள் இருக்கின்றது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களை சுதந்திரமாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு இந்த நாட்டின் அனைத்து அரசியற் தலைவர்களுக்கும் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். நேற்றைய தினம் பாராளுமன்றில் சக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில…

  13. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக வடிவேல் சுரேஷ் நியமனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மலையகத் தமிழர்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்வது குறித்து அறிக்கையிடும் பொறுப்பு வடிவேல் சுரேஷுக்கு இருக்கும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து வடிவேல் சுரேஷை கட்சி நீக்கியது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது வடிவேல் சுரேஷ் ஆதரவாக வாக்களித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. https://thinakkural.lk/article/283864

  14. உக்ரேன் இராணுவத்தில் கடமையாற்றிய இலங்கையர்கள் மூவர் உயிரிழப்பு உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலில் உக்ரேனிய இராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்றிய இலங்கையர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம், பக்முட்டில் நடந்த அதிரடி நடவடிக்கையில் இலங்கை அதிகாரிகள் மூவரும் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது. கடந்த செவ்வாய்க்கிழமை ( 05) உக்ரைன் போர்முனையில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போரிட்ட போது அவர்கள் உயிரிழந்ததாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. உயிரிழந்த மூன்று அதிகாரிகளில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் கெப்டன் ரனிஷ் ஹெவகேயும் உள்ளடங்குவார். உயிரிழந்த மற்றும் காயமடைந்த உக்ரேனிய இராணுவத்தினரை வெளியேற்…

  15. மீண்டும் தொடங்கும் கிரீஸ் மனிதன் வழக்கு! 2011 ஆம் ஆண்டு யாழ் குடா நாட்டில் ‘கிரீஸ் மனிதன்’ எனப்படும் அடையாளம் தெரியாத நபர்களின் மிரட்டல் செயல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகளின்படி ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவில்லை என உயர் நீதிமன்றம், சட்டமா அதிபருரை கடுமையாக சாடியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய செயற்பாடாமை தொடர்பில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்கவை கடுமையாக சாடிய உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா, நீதிமன்ற நேரத்தை வீணடிக்காது மனுதார்களுக்கு ஆட்சேபனை நகலை ஒப்படை…

  16. ’நினைவு கூர உரிமையுண்டு ஆனால் மீறமுடியாது’ உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு, ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை யாரும் மீற முடியாது அவ்வாறு மீறியவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இவ்வாறு கைது .கைது செய்யுமாறு கூட எவரும் கட்டளை பிறப்பிக்கவில்லை.பொலிஸார் தமது கடமையை செய்துள்ளார்கள் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06 விசேட கூற்றை முன்வைத்த போதே இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி,புதிய சட்டத்தை உருவாக்க ம…

  17. யாழில். கடற்படையினர் இரத்த தானம்! adminDecember 7, 2023 இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, காங்கேசன்துறையில் “உத்தர” கடற்படை தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த இரத்த தான நிகழ்வில் கடற்படை தளபதிகள் உள்ளிட்ட 195 கடற்படையினர் இரத்த தானம் வழங்கி இருந்தனர். https://globaltamilnews.net/2023/198268/

  18. தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 18 வயது மாணவனை சொகுசு காருடன் கடத்திச் சென்று பலவந்தமாக மாணவனுக்குச் சொந்தமான காணி ஒன்றை பதிவு செய்ய முயற்சித்த தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடத்தப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர்களால் கடத்தப்பட்ட காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மாணவன் கடந்த 4ஆம் திகதி தனது தந்தையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்கி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் களுபோவில ஆசிரி மாவத்தையில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய போது கடத்தப்பட்டதாக பொலிஸார் தெ…

    • 9 replies
    • 1.1k views
  19. இனியபாரதி. சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்தும் செல்லும் பயணம் 100 இளைஞர் அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆதரவுடன் ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட 100 இளைஞர்கள் அமைப்புக்கள் கண்டி தலதா மாளிகை தொடக்கம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வரை உள்ள சர்வமத தலைவர்களுக்கு சமாதானத்தின் செய்தி மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தனர். நேற்று முன்தினம் திங்கட்கிழமை கண்டி தலதா மாளிகை மற்றும் கண்டி சிறீ நாட்ட தேவாலத்திற்கருகாமையில் இந்த செயற்திட்டத்தை ஆரம்பித்த இளைஞர்கள் நேற்று பிற்பகல் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்தனர். குறித்த இந்த வேலைத்திட்டம் அன்பிற்கும் நட்புக…

    • 3 replies
    • 681 views
  20. யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை? பாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்“ மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டில் திறமையானவர்கள் பலர் உள்ளனர். எனவே கிரிகெட், காற்பந்து, வலைப்பந்து போன்ற அனைத்து விளையாட்டுகளுக்குமான மைதானங்களை புனரமைப்பு செய்வதற்கு நிதி தேவைப்…

    • 7 replies
    • 858 views
  21. இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மலையகத்தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும்! சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ”சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் உள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதில் இந்திய அரசு தவறிழைத்துவிட்டதாக” சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கும் விதமாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இழைக்கப்பட்டுள்ள வரலாற்றுத் தவறை சரி செய்வதற்கு த…

  22. O/L பரீட்சை குறைவான பெறுபேறு – பெற்றோர் கண்டனம் – பிள்ளை மரணம்! adminDecember 6, 2023 வெளியாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக தெரிவித்த பெற்றோர் குறித்த மாணவியை கண்டித்த நிலையில் அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார். வாலை அம்மன் வீதி, அராலி கிழக்கினைச் சேர்ந்த சிவகுமார் பானுப்பிரியா என்ற 17 வயதான மாணவியே தவறான முடிவெடுத்து இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி நேற்று (05.12.23) 11 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம்…

  23. Published By: VISHNU. 06 DEC, 2023 | 07:50 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பெறுமதி சேர் வரியை 18 வீதமாக அதிகரித்து மக்கள் மீது எல்லையற்ற அழுத்தங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வாறு போகும் போக்கில் எதிர்காலத்தில் உடல் உறுப்புகளுக்கும் ''வற்'' வரி விதிக்கப்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) நிலையியற் கட்டளைகள் 27 (2) இன் கீழ் கேள்வி எழுப்பும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஒவ்வொரு நபரின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர அனைவரும் தியாகம் செய்ய வேண்டியி…

  24. (எம்.மனோசித்ரா) கொழும்பு பாதுகாப்பு பேரவை உடன்படிக்கை, புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தலைமையக ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்து சமுத்திரத்தின் பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் பொதுவான பாதுகாப்புக்குள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக உறுப்பு நாடுகளின் பெறுமதிகளுக்கு மதிப்பளித்து இயங்குகின்ற ஒரு பேரவையாக கொழும்பு பாதுகாப்பு பேரவை தாபிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பேரவையில் இந்தியா, மாலைதீவு, மொரிசீயஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் உறுப்பு நாடுகளாகவும், பங்களாதேஷ் மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகள் அவதானிப்பு நாடுகளாகவும் செயலாற்றுகின்ற பிராந்திய அமைப்பாகும். இப்பேரவையின் பணிகளை மிகவும் …

  25. ”தாய்மொழியில் சட்டக் கல்வி கற்கும் வாய்ப்பு தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” தாய்மொழியில் சட்டக்கல்வியை கற்கும் வாய்ப்பு தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் இதற்கமைய யாழ். பல்கலைக்கழகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்வது அவசியமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி எஸ். ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். யாழ். தீவக பாடசாலைகளில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் சேவை வழங்குகின்றர். இதனைக் கவனத்திற் கொண்டு அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் கல்வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.