ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
வெள்ளிக்கிழமை, மார்ச் 4, 2011 கடந்த 15 வருடமாக இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த சுபாஷ் விடுதி இன்று அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்.குடா நாட்டில் கடந்த 15 வருடமாக சிங்கலபப்டையின் 51ஆவது படைப்பிரிவு, சுபாஷ் விடுதியில் இதுவரை காலமும் கட்டுப்பாட்டில் வைத்திருந்து அதனை தமிழர்களின் சித்திரவதை கூடமாக செயற்படுத்தி வந்துள்ளது. இப்போ பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அதனை இராணுவம் ஒப்படைப்பதாக கூறி இன்று அதனை ஒப்படைத்துள்ளது. இதுவரை காலமும் சுபாஷ் விடுதியில் தங்கியிருந்த இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவினர் இன்று முதல் கோப்பாய் நகரின் புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கோப்பாய் முகாமும் தமிழ் மக்களின் சொந்த நிலமே இந்த முகாமை சீன அரசாங்கம் அம…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழர் மகா சங்கத் தலைவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் _ வீரகேசரி இணையம் 3/17/2011 2:00:19 PM Share அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் தலைவர் கல்யாணசுந்தரம் மீது இன்று முற்பகல் இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக பகிரங்கமாக அறிக்கை விடுத்திருந்த இவர் தனது வாகனத்தில் அலிகம்பை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் கடுமையாக தாக்கப்பட்ட அவர் அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண சபை அமைச்சர் நவரட்ணராசா தலைமையிலான குழுவினரே இத்தாக்குதலை நடத்தியதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக…
-
- 0 replies
- 717 views
-
-
Mar 16, 2011 / பகுதி: செய்தி / வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் காத்தான்குடி பொலிஸாரினால் கைது ! காத்தான்குடியிலிருந்து வெளிவரும் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.ஐ.றஹ்மத்துல்லா இன்று காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முடிவுற்ற போதிலும் இவ் வார உரைகல் பத்திரிகையில் காத்தான்குடி நகர சபைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சைக் குழுவொன்றிற்கு ஆதரவாக விளம்பரமிட்டு அதை இலவசமாக விநியோகிப்பதாக சிலரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இவர் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்தன தெரிவித்தார். கைது செய்யப்பட்ட வார உரைகல் பத்திரிகையின் பிர…
-
- 0 replies
- 570 views
-
-
இலங்கைக்கு வருக விசாரணை செய்க! நவநீதம்பிள்ளைக்கு அரசு அனுமதியாம்! விரைவில் இலங்கைக்கு விஐயம் செய்யவுள்ள நவனீதம்பிள்ளை. [Thursday, 2011-03-17 06:11:33] இலங்கையில் நடந்த போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கைக்கு வந்து நேரில் ஆராய்வதற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபையின் தலைவர் நவிப்பிள்ளையை அனுமதிப்பது என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் அவர் கொழும்பு வரவுள்ளார். இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து வலுத்து வரும் நிலையில் இலங்கை அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. நெருக்கடிகளைச் சமாளிக்கும் நோக்குடன் அது இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
Thursday, 17 March 2011 00:29 வான்புலிகளை முறியடிக்க சிறிலங்காவுக்குப் போட்டி போட்டு உதவிய அமெரிக்காவும் இந்தியாவும் விடுதலைப் புலிகளின் வான் அணியினரின் அச்சுறுத்தலை அடுத்து சிறிலங்காவின் வான் பாதுகாப்புப் பொறிமுறையின் தரம் தொடர்பாக ஆராய்வதற்கும், இந்தப் பொறிமுறையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று பரிந்துரை செய்வதற்காக அமெரிக்கப் படைத்துறையின் எட்டுப் பேர் கொண்ட சிறப்பு அணி அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு ‘தி ஹிந்து‘ நாளேட்டில் நிருபமா சுப்ரமணியன் எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தகவல் பரிமாற்றக் குறிப்புகளை அடிப்படையாக வைத்து அவர் எழுதியுள்ள இந்தப் பத்தியை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. …
-
- 0 replies
- 995 views
-
-
ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சையில் 3,059 பேர் சகல பாடங்களிலும் ‘ஏ’ சித்தி! Posted by admin On March 17th, 2011 at 4:40 am / 1 Comment ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சையில் இம்முறை 3 ஆயிரத்து 59 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர். அதேவேளை, 14 ஆயிரத்து 961 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க நேற்றுத் தெரிவித்தார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டன.இதனையொட்டி நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்வருடம் ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சையில் 58.79 சதவீதமானோர் சித்தியடைந்துள்ளனர். கடந்த வருடம் இப…
-
- 0 replies
- 935 views
-
-
தோற்றுப் போனவர்களின் பாடல் வ.ஐ.ச.ஜெயபாலன் Posted 20 November 2009 - 12:42 PM http://www.yarl.com/forum3/index.php?showtopic=66130&st=0&p=551656&hl=%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D&fromsearch=1&#entry551656 சிங்களப் பயங்கரம் தாளாத முத்துக்குமரனாய் தமிழகம் தீக்குளிக்கையில், இனக்கொலையின் சாட்சியங்களை உலக மன்றுக்கு சிங்கள பத்திரிகையாளரே கடத்திச் செல்கயில், ஏன் ஏன் எங்கள் தாயாதிகள் நாடு நாட்டாய் சென்று இனக்கொலைக்கு வக்காலத்து வாங்கினர்? இந்…
-
- 0 replies
- 815 views
-
-
234 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று! வியாழன், 17 மார்ச் 2011 09:43 .நாடளாவிய ரீதியில் 234 உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல்கள் இன்று 7 ஆயிரத்து 396 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 234 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் 3ஆயிரத்து 36 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 29 ஆயிரத்து 108 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள 64 சபைகள் மற்றும் முல்லைதீவு மாவட்டத்தில் மிதிவெடி அகற்றப்படாத பகுதியில் இருக்கும் இரண்டு சபைகள் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட 34 சபைகள் தவிர்ந்த அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பே இன்று இடம்பெறுகின்றது. இம்முறை வாக்கள…
-
- 0 replies
- 601 views
-
-
யாழ் நாளிதழ் ஓன்றினுள் உட்புகுந்து கொலை அச்சுறுத்தல் தமிழ்க் காவற்துறை சிப்பாய் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளிதழ் அலுவலகம் ஓன்றினுள் உட்புகுந்து கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படும் தமிழ்க் காவற்துறை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது யாழ் காவற்துறை நிலையத்தின் விசேட பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். குறித்த நாளிதழில் வெளிவந்ததாக தெரிவிக்கப்படும் செய்தி ஒன்று தொடர்பாக விசாரிப்பதற்கென தெரிவித்து விளம்பரப் பிரிவுக்குள் உட்பிரவேசித்த நபர் தன்னை ஈபிடிபி அமைப்பின் முக்கியஸ்தர் என அடையாளப்படுத்திக் கொண்டு குறித்த நாளிதழின் விளம்பரப் பி…
-
- 0 replies
- 597 views
-
-
காட்டுப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற புலிகளின் முன்னாள் உறுப்பினர் காணாமல் போயுள்ளார்:- வன்னி மல்லாவி கள்ளுவான் காட்டுப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த திங்கட்கிழமை காலை 8 மணியளவில் முயல் வேட்டைக்கென தாங்கள் வைத்த பொறிகளில் முயல்கள் அகப்பட்டிருக்கின்றனவா என பார்ப்பதற்காக இவர் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக மனைவி கூறுகின்றார். விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான இவர் புனர்வாழ்வளிக்கப்பட்டு அண்மையிலேயே விடுவிக்கப்பட்டிருந்தார். புனர்வாழ்வு முகாமின் மற்றுமொரு பெண் போராளியை இவர் விரும்பியிருந்ததனை அடுத்து படையினரின் ஏற்பாட்டில் அவருக்கு திருமணமும் செய்…
-
- 0 replies
- 855 views
-
-
முள்ளிவாய்க்கால் பகுதியில் மீள்குடியேற்ற முயற்சிக்க வேண்டாம் இராணுவம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் – சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி கூறுகின்றார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களை அந்தப் பகுதிகளில் மீளக்குடியமர்த்துவதற்கு முயற்சி எடுக்கவேண்டாம் என்று முல்லைத்தீவு அரச அதிபருக்கு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அவர் அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முல்லைத்தவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, அம்பலவன் பொக்கணை ஆகிய மூன்று கிரா…
-
- 0 replies
- 996 views
-
-
நான் கடத்துப்படவில்லை : ஊடகங்கள் திரிவுபடுத்தின கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவிலிருந்து இலங்கை சென்றிருந்த ஊடகவியலாளர் திரு.சுந்தர் அவர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் தொடர்பாக பல முரரணான செய்திகள் வந்திருந்தன. தற்போது பிரித்தானியா திரும்பி வந்த சுந்தர் அவர்கள் தனது கைது தொடர்பில் தனது குரலில் இலங்கைநெற் என்ற இணையத்திற்கு கொடுத்த குரல்வளியான தகவலை இங்கு இணைக்கிறேன்.
-
- 1 reply
- 967 views
-
-
சர்வதேச வீரசாகசப் பயிற்சியில் யாழ்.ஆசிரியர்! Posted by admin On March 16th, 2011 at 12:23 pm / No Comments கடந்த மாதம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற சாரணர்களுக்கான 13 ஆவது சர்வதேச வீரசாகசப் பயிற்சிநெறியில் இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதிநிதியான ஆசிரியர் யோகநாதன் கேதீசன் கலந்துகொண்டிருந்தார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட இவர் சாரணர் சேவையில் 20 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளார். சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்ற இவருக்கு ஜனாதிபதி விருது, பேடன் பவல் விருது, தருசின்னம் என்பன முன்னர் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. saritham.com
-
- 0 replies
- 953 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2011, 09:44 GMT ] [ தி.வண்ணமதி ] அனைத்துலக ரீதியில் சிறிலங்காவினது பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் அனைத்துலக சமூகத்தின் கருத்துருவாக்கத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தியது வேறு யாருமல்ல, சிறிலங்காவிற்கு எதிரான அனைத்துலகப் போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என தொடர் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தமிழ் அமைப்புக்கள்தான். இவ்வாறு சிறிலங்காவில் இருந்து வெளிவரும் The Sunday Times ஆங்கில வாரஏட்டில் எழுதியுள்ள ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான Lasanda Kurukulasuriya தனது சிறப்பு பத்தியில் குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவது தி.வண்ணமதி. அப்பத்தியின் முழுவிபரமாவது, சிற…
-
- 1 reply
- 746 views
-
-
இலங்கையின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட்டேயாக வேண்டும்: செய்தவர் யாரெனினும் பரவாயில்லை எனக் கண்டிப்பு காட்டுகிறது அமெ. போரின் இறுதிக் கட்டத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இருக்கிறது அமெரிக்கா. போர்க்குற்றங்களை யார் செய்தார்கள் என்பது பற்றிக் கவலையில்லை, செய்தவர்கள் அவற்றுக்குப் பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்குள், இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துவது இது இரண்டாவது தடவையாகும். இந்த விடயத்தில் அது இறுக்கமான போக்கைக்…
-
- 0 replies
- 847 views
-
-
பொன்சேகாவின் நண்பர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க நேபாளம் மறுப்பு முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவின் நெருங்கிய நண்பர்களுக்கு நேபாளத்தில் அரசியல் தஞ்சம் வழங்குவதற்கு அந்த நாடு மறுத்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, சரத் பொன்சேகாவுடன் இணைந்து பணியாற்றிய இவர்கள் நேபாளத்தில் அரசியல்த் தஞ்சம் கோரி கடந்த சில மாதங்களாக நேபாளத்தில் தங்கியுள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் இன்று காலை செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களுடைய அரசியல் தஞ்ச கோரிக்கைக்கு நேபாள அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேபாளத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென கூறியுள்ள அதேவேளை, வெளிவிவகார அமைச்சு இது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென்று …
-
- 1 reply
- 844 views
-
-
-
-
உடையார்கட்டில் விடுதலைப் புலிகளின் குண்டுத் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது [ பிரசுரித்த திகதி : 2011-03-16 06:00:08 AM GMT ] முல்லைத்தீவு உடையார்கட்டில் சக்திவாய்ந்த குண்டுகளுடன் விடுதலைப் புலிகளின் குண்டுத் தொழிற்சாலையொன்று விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ம் திகதி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே பிரஸ்தாப குண்டுத் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடையார்கட்டின் வனாந்திரப் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பிரஸ்தாப குண்டுத் தொழிற்சாலையில் தயாரித்து முடிக்கப்ட்ட குண்டுகள் மட்டுமன்றி அதற்கான மூலப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. …
-
- 1 reply
- 1.2k views
-
-
போர் முடிந்தும், புலிகள் துடைத்தழிக்கப்பட்டதாக கூறிய பின்னரும் இலங்கை அரசிற்கு புலிகளை கைவிட மனம் இல்லை. புலிகள் இல்லாவிட்டால் ஆட்சியே நடத்த முடியாது என்ர நிலை இப்போதும் ஆழுங்கட்சிக்கு இருப்பது எல்லோருக்கும் தெரியும். அண்மையில் அவசரகால சட்டத்தினை நீடிக்க புலிகள் தமிழ் நாட்டில் செயற்படுகின்ரார்கள் என அந்த நாட்டு பிரதமர் கூறி இருந்தார். நிச்சயமாக அவசர கால சட்டத்தை நீடிக்க புலிகள் மீதான ஒரு சோடிப்பு என பின்னர் தெரிய வந்தது. இதில் இடுந்து தெரிவது என்னவெனில் அவர்களுக்கு ஆட்சியை நடத்துவதற்கு புலிகளின் உதவி தேவை என்பதே. அவசரகால சட்டம் என்பது தமிழர்களை மேலும் ஒடுக்கவும், ஆட்களை கண்டபாட்டில் பிடித்து சிறையில் அடைக்கவும், தனக்கு எதிரானவர்கலை தடுத்து வைக்கவுமே பாவிக்கப்படுகின்ற…
-
- 0 replies
- 828 views
-
-
இலங்கைக்கு கதிர்வீச்சு அபாயமில்லை _ வீரகேசரி இணையம் 3/16/2011 8:44:25 AM Share ஜப்பானில் நில நடுக்கத்தால் சேதமடைந்த புக்குஷிமா அணு மின்நிலையத்தில் அணுஉலை உருகுவதினால் சிறிய அளவில் கதிர் வீச்சுத் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ள நிலையில் இலங்கைக்கு இதனால் எவ்வித ஆபத்தும் இல்லை என்று இலங்கை அணுசக்தி அதிகார சபை அறிவித்துள்ளது. காற்றினாலோ அல்லது மழையினாலோ இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட வாய்ப்புக்கள் இல்லை எனவும் இது தொடர்பில் கூறப்படும் பல்வேறு தகவல்கள் ஆதாரமற்றவை எனவும் அதிகாரசபை அறிவித்துள்ளது. எனினும் கதிர்வீச்சுத் தாக்குதலுக்கு ஆசிய நாடுகள் பாதிக்கப்படலாம் என உலக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
- 1 reply
- 675 views
-
-
மட்டக்களப்பு கறுத்தப்பாலம் இரண்டாக பிரிந்தது! Posted by admin On March 15th, 2011 at 10:11 pm மட்டு.செங்கலடி பதுளை வீதியில்(ஏ5) அமைந்துள்ள கறுத்தப்பாலம் இன்று(15.03.2011) மாலை 4.00 மணியளவில் இரண்டு துண்டுகளாக பிளவுபட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்தப் பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சீன நிறுவனத்தினுடாக மட்டு மாவட்ட வீதிகள், பாலங்கள் புனரமைக்கப்பட்டுள்ள போதும் இப்பாலத்தை தற்போதைக்கு புனரமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற உத்தரவாதத்தை சீன பொரியியலாளர்கள் வழங்கியிருந்தனர். இந்நிலையில் பாலத்தின் இணைப்புபகுதி இரண்டு துண்டுகளாக பிளவுபட்டுள்ளதற்கான காரணங்களை…
-
- 0 replies
- 762 views
-
-
புதிதாக ஐந்து விமானங்களைக் கொள்வனவு செய்ய இலங்கை அரசு தீர்மானம் [Wednesday, 2011-03-16 02:48:26] இலங்கையிலிருந்து ஐரோப் பாவுக்கும் அவுஸ்திரேலி யாவின் மெல்போர்னுக்கும் புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பதற்காக 5 புதிய விமானங் களை கொள்வனவு செய்யவிருப்பதாக சிவில் விமான சேவை அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த ஐந்து விமானங்களையும் இந்த வருடம் கொள்வனவு செய்யவிருப்பதா கவும் அத்துடன் கனடாவுக்கும் புதிய விமான சேவையொன்றை ஆரம்பிக்கவிருப்ப தாகவும் அமைச்சர் மேலும் கூறினார். வெளிப்படைத் தன்மையுடன் கூடிய விலை கோரல் ஊடாக இந்த விமானக் கொள்வனவு இடம்பெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதேவேளை லண்டனுக்கான விமான…
-
- 0 replies
- 634 views
-
-
அநுராதபுரத்தில் பிள்ளையார் கோயிலுக்குத் தீ வைப்பு: பிள்ளையார் சிலையில் டயர் போட்டு எரிப்பு [Wednesday, 2011-03-16 03:20:25] அநுராதபுரம்,தேவநம்பிய திஸ்ஸ மாவத்தையிலுள்ள (நீராவி பிரதேசம்) பிள்ளையார் கோவிலுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினமிரவு இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்த பிள்ளையார் சிலைக்குச் சேதமேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1983ம் ஆண்டுக்கு முன்னரே அமைக்கப்பட்டிருந்த பிரஸ்தாப கோயில் இதுவரை ஓரளவுக்கு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்திருந்தது. அங்கிருந்த பிள்ளையாரை சிங்கள மக்களும் வழிபட்டு வந்தனர். அவ்வாறான நிலையில் கடந்த 14ம் திகதி கோயிலினுள் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலைக்கு இனந்தெரியாதோர் தீவைத்துள்ளதாக அறியக்…
-
- 0 replies
- 896 views
-
-
மாங்குளம் மகாவித்தியாலயத்தில் அமைந்திருந்த இராணுவமுகாம் அகற்றப்பட்டது! கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாரிய இராணுவமுகமாக காட்சி தந்த மாங்குளம் மகாவித்தியாலயத்தில் அமைந்திருந்த இராணுவமுகாம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது; எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாங்குளம் மகாவித்தியாலயம் சொந்த இடத்தில் இயங்குவதோடு துணுக்காய் கல்வி வலயமும் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என மாங்குள இராணுவ பொறுப்பதிகாரி கேர்ணல் தென்னக்கோன் தெரிவித்ததாக வவுனியா நகரசபையின் உப தலைவர் எம்.எம். ரதன் தெரிவித்தார். இன்றைய தினம் மு/மாங்குளம் மகாவித்தியாலயம் மற்றும் வலயக்கல்வி அலுவலகம் என்பவற்றை அவர் நேரில் பார்வையிட்டார். கடந்த இரண்டு ஆண…
-
- 0 replies
- 383 views
-