ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - ரொபர்ட் ஓ பிளெக் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய விடயமாகும் என அவர் தெரிவித்துள்ளார். யார் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக்…
-
- 0 replies
- 879 views
-
-
வவுனியா கூமாங்குளம் பாடசாலை விளையாட்டுப்போட்டி அரசியல் தலையீட்டினால் நிறுத்தப்பட்டது. அமைச்சரை பிரதம விருந்தினராக அழைக்கவில்லையாம். GTN செய்தியாளர்:- வவுனியா கூமாங்குளம் பாடசாலை விளையாட்டுப் போட்டி அமைச்சரின் தலையீட்டினால் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினர்களாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்தச் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்ததாவது: அமைச்சராகிய தன்னை அழைக்காமல் தமிழ்த்தேசிய க…
-
- 0 replies
- 736 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச சட்டங்களை மீறிச் செயற்படுகிறது - இலங்கை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி .. ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச சட்டங்களை மீறிச் செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக் கடற்பரப்பில் ஐரோப்பிய நாடுகளின் மீனவர்கள் மீன்பிடிப்பதனை ஐரோப்பிய ஒன்றியம் தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக மீன்பிடி வள அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய …
-
- 0 replies
- 904 views
-
-
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 23, 2011 ஈழநாதம். முன் நாள் அமெரிக்க துணை இராஜாங்க செயலர் ரிச்சார்ட் ஆமிரேஜ் அவர்கள் கடந்த 18 ஆம் திகதி இலங்கைக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். இந்த விஜயம் தனிப்பட்ட விஜயம் என சொன்னாலும் இராஜதந்திரிகள், மற்றும் அரசியல் வட்டாரங்களில் உற்று நோக்கப்பட்ட விடயமாகவே இருந்தது. ரிச்சார்ட் ஆமிரேஜ் வந்ததும் மஹிந்த இராஜபக்ஷவை சந்தித்ததும் பூசி மெழுகப்பட்ட தொன்றாகவே இருக்கின்றது. சந்திப்பு நடந்த நான்கு நாட்களின் பின்னரே இது ஒரு முக்கியத்துவம் அற்ற செய்தியாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடக பிரிவு வெளியிட்டது. இதே வேளை ஆமிரேஜ் அவர்களின் சந்திப்பின் பின்னர் மஹிந்த இராஜபக்ஷ திடீர் பயணம் ஒன்றை அமெரிக்காவிற்கு 21 ஆம் திகதி மேற்கொள்கின்றார். ஆனால் இந்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
முல்லைத்தீவில் நான்கு நாள்களுக்கு முன்னர் கடற்றொழிலுக்காகச் சென்ற மீனவர் ஒருவர் முல்லைத்தீவு, அளம்பில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கேதீஸ் சந்திரமோகன்(வயது 34) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 11ஆம் திகதி கடலுக்கு தனியாகச் சென்றிருந்தபோது காணாமற் போயிருந்தார் என்றும் கடந்த மூன்று நாள்களாக தேடப்பட்ட நிலையில் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் முல்லைத்தீவு அளம்பில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தண்ணீரூற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://onlineuthayan.com/News_More.php?id=1105
-
- 0 replies
- 899 views
-
-
தேசியப்பற்றாளர் கனகசபை சிவராசா மறைவு! இறுதி நிகழ்வு யாழில்! Posted by admin On March 15th, 2011 at 2:46 am / No Comments தமிழ்த் தேசியப்பற்றாளர் கனகசபை சிவராசா அவர்கள் கடந்த 11.03.2011 அன்று இயற்கை எய்தினார். 1970களில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தமிழ் இளைஞர் பேரவையின் செயற்பாட்டுடன் விடுதலைப் பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், அரசியல் ரீதியாக வெகுசனப் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, ஆயுதப் போராட்டங்களின் தொடக்க காலம் முதல் இறுதிவரை நெருக்கடியான வேளைகளில் எல்லாம் துணிந்து நின்று தோள் கொடுத்தார். கிராம சேவகர், வடக்கு மாகாண கிராம சேவையாளர் சங்கத்தின் தலைவர், திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர் உட்பட்ட பொதுப் பணிகளில் அயராது உழைத்த சிவர…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜப்பான் செயலகத்தில் ருத்திரகுமாரன் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஐநாவுக்கான ஜப்பான் செயலகத்துக்கு, நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் நேற்று வந்து, ஜப்பான் மக்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இயற்கைப் பேரழிவில் சிக்கியுள்ள ஜப்பானுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் அவர் ஆறுதலை தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இதுதொடர்பான கடிதம் ஒன்றையும் அவர் ஜப்பான் செயலக அதிகாரியிடம் வழங்கினார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=50381
-
- 3 replies
- 1k views
-
-
http://www.yarl.com/files/110315-colombo-reporter.mp3
-
- 0 replies
- 978 views
-
-
http://www.yarl.com/files/110315-pandian.mp3
-
- 0 replies
- 617 views
-
-
http://www.yarl.com/files/110315-jaffna-interview.mp3
-
- 0 replies
- 743 views
-
-
http://www.yarl.com/files/110315_remedias.mp3
-
- 0 replies
- 788 views
-
-
http://www.yarl.com/files/110315-silavaththaithamil-vidyalayam.mp3
-
- 0 replies
- 463 views
-
-
http://www.yarl.com/files/110315-sathaasivam.mp3
-
- 0 replies
- 464 views
-
-
http://www.yarl.com/files/110315-ilamkumaran.mp3
-
- 0 replies
- 701 views
-
-
தமிழீழ நாடு நிச்சயமாக மலரும், நாடு கடந்த தமிழீழ அரசின் துணைப் பிரதமர் கூறுகிறார் சிங்களவர்களின் ஆதிக்கத்தில் இருந்து வரும் இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களுக்காக ஒரு சுதந்திர நாட்டை உருவாக்குவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு அந்நோக்கத்தில் வெற்றி பெறும் என்பதில் உலக முழுவதும் பரவியிருக்கும் தமிழீழ மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். நேற்று கோலாலம்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் துணைப் பிரதமர் பேராசிரியர் இ.செல்வநாதன், “ஒரு சுதந்திர தமிழீழ நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற இலட்சியத்தை நாங்கள் அடைவோம். அது வர வேண்டும், நிச்சயமாக வரும்”, என்றார். நாடு கடந்த தமிழீழ அரசு ஓர் அதிர்காரப்பூர்வமான அரசல…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜப்பானிலுள்ள இலங்கையரை தாய்நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை ஜப்பானில் பணிபுரிகின்ற இலங்கையரை ஸ்ரீலங்கள் விமானம் மூலமாக பாதுகாப்பாக தாய்நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஜப்பானில் வசித்துவருவதாகவும் அவர்களில் சிலர் ஜப்பானிலுள்ள இலங்கை தூதரகத்தை நாடி, தாம் தாய்நாட்டுக்கு திரும்புவதற்கு ஏற்பாடு செய்து தரும்படியும் கோரியிருப்பதாக வெளிவிவகார அமைச்சில் மேலதிக செயலாளர் ரஞ்சித் உயங்கொட மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள சில குடும்பத்தினரும் தங்களுடைய உறவுகள் ஜப்பானில் இயற்கை அனர்த்தத்தில் சிக்கித் தவிப்பதாக முறைப்பாடுகள் செய்திருப்பதாகவும் தெரிவித்த ரஞ்சித் உயங்கொட, இதனடி…
-
- 0 replies
- 521 views
-
-
செவ்வாய்க்கிழமை, மார்ச் 15, 2011 இந்தியாவில் இருந்து பெற்றுகொள்ளப்பட்ட ராடார் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் தரமற்றவை என இலங்கை அரசு இப்போ கூறுகின்றது. அதற்கு பதிலாக அமெரிக்காவிடம் இருந்து ராடார் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்களை கொள்வனவு செய்ய அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்டுள்ளது இலங்கை அரசு. படிப்படியாக இந்தியாவிற்கு தண்ணி காட்டும் வேலைகலையே இலங்கை செய்துவருவதாக கூறபப்டுகின்றது. சில மாதங்களுக்கு முன்னால் இந்தியா செய்த உதவியினால்தான் புலிகளின் விமானத்தை வீழ்த்தியதாக இலங்கையின் புதிய விமானப்படை அதிகாரி கூறியிருந்தார். ஆனால் இப்போ ராடார் விமான எதிர்ப்பு தொகுதிகள் தரமற்றவை என கூறப்படுகின்றது. அமெரிக்கா இலங்கைக்கு பல அழுத்தங்களை கொடுத்து வருகின்றது. அதனை சமாளிக்க ஆயுத …
-
- 3 replies
- 1.1k views
-
-
திஸ்ஸமஹாராமையில் ஜனாதிபதியின் பிரசார நடவடிக்கை பிசுபிசுப்பு [ பிரசுரித்த திகதி : 2011-03-15 07:24:20 AM GMT ] ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராமை பகுதியில் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று நடைபெற்ற பிரசார நடவடிக்கைகள் பிசுபிசுத்துப் போனதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ள்ளூராட்சித் தோ்தலின் இறுதி நாளான நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டையில் சுமார் பதினாறு பிரசாரக் கூட்டங்களில் பங்குபற்றியிருந்தார். அதில் சுமார் மூன்றிலொரு பிரசாரக் கூட்டங்கள் திஸ்ஸமஹாராமை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் நடைபெற்றிருந்தது. ஆயினும் ஜனாதிபதியின் பிரசாரக் கூட்டம் என்ற போதிலும் அங்கு நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களுக்கு பொதுமக்கள் மிகவும் குறைந்த…
-
- 0 replies
- 843 views
-
-
மிட் நைட் சில்ரன் படமாக்கப்படுவது இலங்கையில் தடை செய்யப்பட்டிருக்கிறது:- 15 மார்ச் 2011 சல்மான்; ருஷ்டியின் பரிசு பெற்ற மிகப் பிரபலமான நாவலான மிட் நைட் சில்ரன் படமாக்கப்படுவது இலங்கையில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் பயர், வாட்டர், போன்ற சர்ச்சைக்குரிய திரைப்படங்களை இயக்கிய தீபா மேத்தா இறங்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஷபனா ஆஷ்மி, நந்திதா தாஸ், சீமா பிஸ்வால், இர்பான் கான், சோகா அலி கான், சந்தன் ரோய் சஞ்சய் போன்றோர் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் இலங்கையில் நடத்தத் திட்டமிட்டிருந்தது. இலங்கையில் படப்பிடிப்புக்கான நடவடிக்கைகளை பிரபல சிங்கள நடிகர் ரவீந்திர ரந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது குற்றமில்லை! - உயர்நீதி மன்றம் சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துச் சொல்வதோ, பிரச்சாரம் செய்வதோ சட்டப்படி குற்றமில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கருத்துரிமை இயக்கம் சார்பில் இயக்குநரும் பத்திரிகையாளருமான புகழேந்தி தங்கராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், "கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தனர். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தாலேயே அப்பாவித் தமிழ் மக்களைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கைது செய்தனர் [Tuesday, 2011-03-15 13:03:08] யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தாலேயே அப்பாவித் தமிழ் மக்களைப் குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்துள்ளனர். 10 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் எப்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருக்க முடியும். எனவும் சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆண்கள், பெண்கள், சிறார்கள் உட்பட 52 பேரை கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் இன்று ஆஜர்படுத்தினர்.அப்போது சந்தேக நபர்கள் சார்பில் வாதாடிய சட்டத்தரணிகளே இவ்வாறு தெரிவித்தனர். கொழும்பிலும் நீர்கொழும்பி…
-
- 0 replies
- 796 views
-
-
இரத்மலானை விமானப்படைத்தள புனரமைக்க மற்றும் விஸ்தரிப்புச் செய்ய இந்தியா உதவி செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2011 14:01 இரத்மலானை விமானப்படைத்தள புனரமைப்பு மற்றும் விஸ்தரிப்புச் செயற்பாடுகளுக்கு உதவிகளை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.இரத்மலானையில் அமைந்துள்ள விமானப்படைத்தளம் மற்றும் விமான நிலைய புனரமைப்பு மற்றும் விஸ்தரிப்புப் பணிகளுக்கு உதவ இந்திய நிறுவனமொன்று முன்வந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. அதற்கான ஒப்பந்தம் இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய நிறுவனத்துக்கும் இடையில் மிக விரைவில் கைச்சாத்திடப்படும் என்று சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பலாலி விமானப்படைத்தளத்தின் விஸ்தரிப்பு…
-
- 0 replies
- 629 views
-
-
விடுதலைப்புலி ஆதரவு பிரச்சாரம் குற்றம் ஆகாது; ஐகோர்ட் கருத்துரிமை இயக்கம் சார்பில் புகழேந்தி தங்கராஜ் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அம்மனுவில், ’’கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தனர். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் கமிஷனர் அனுமதி தர மறுத்து விட்டார். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது. அ…
-
- 0 replies
- 1.4k views
-
-
செவ்வாய்க்கிழமை, மார்ச் 15, 2011 சிங்கள இராணுவம் விமான சீட்டு விற்பனை நிலையம் ஒன்றினை ஆரம்பித்துள்லனர். போர் முடிந்து சுமார் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் , இராணுவம் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. இலங்கை இராணுவ அதிகாரிகளில் பலர் வெளிநாட்டு வேலைகளுக்காக செல்வதனால் இலங்கை இராணுவத்தின் சார்பில் விமான பயணச்சீட்டு பதிவு அலுவலகம் துவங்க வேண்டும் என்று திட்டமிட்டு, கடந்த ஆண்டே இந்த சேவையை துவங்கியதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறாயின் முதலில் இலங்கை இராணுவம் விபச்சார நிலையங்களையே ஆரம்பித்திருக்க வேண்டும் அல்லவா? அந்த நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை இலங்கை விமானப்படையின் தலைமை அலுவலகத்தை ஒட்டி நேற்று கோத்தா திறந்து வைத்தார். மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து சீனா…
-
- 0 replies
- 1.2k views
-
-
செவ்வாய்க்கிழமை, மார்ச் 15, 2011 பிள்ளையானுக்கும் கருணாவிற்கும் மோதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. கருணாவிற்கு அரசியல் எதிர்காலமே இல்லை என கூறியுள்ளார் பிள்ளையான். முன்னதாக பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் முழுக்க முழுக்க லஞ்சம், ஊழலில் சிக்கிப் போய்க் கிடப்பதாகவும் அதற்குக் கிழக்கில் எந்தச்செல்வாக்கும் இல்லை என்றும் பிரதி அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்துக் குறித்து பிள்ளையானைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "கருணாவுக்கு அரசியல் எதிர்காலம் என்றே ஒன்றில்லை. அப்படிப்பட்ட ஓருவர் சொன்னது குறித்துக் நான் கருத்துக்கூற விரும்பவில்லை'' என்று காட்டமாகச் சொல்லி முடித்து விட்டார். http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%B0%E…
-
- 0 replies
- 1.3k views
-