ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷ சகோதர்கள் காரணம் – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரே காரணம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, பி.பி.ஜயசுந்தர, இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட குழுவினரால் தாக்கல் செய்யப்பட்…
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள சூழ்நிலையில், 2023 ஆம் ஆண்டு நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு மாதாந்தம் 175, 490 ரூபாய்கள் தேவைப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள பெரும்பாலான அரச ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஒரு இலட்சம் ரூபா சம்பளம் பெறுவதே மிகக்குறைவு என்றும் அவர் இங்கு சுட்டிக்காட்டி உள்ளார். இவ்வாறிருக்கையில் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ள சூழ்நிலையில், அரச ஊழியர்களின் இந்த 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பதென்பது போதாத ஒ…
-
- 0 replies
- 330 views
-
-
https://www.facebook.com/564189140/posts/pfbid03QcQFimbx3SMcaHuQPMnW1Ag7U6Me2wTC5GppZr7LVNvva3mRBemWa8J4KDeBDQYl/
-
- 1 reply
- 728 views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட தகவல் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக போலியான முறையில் பிரச்சாரங்கள் முன்னெடுப்பதாக தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் துவாரகாவின் படத்தை உருவாக்கி அதனை மாவீரர் தினத்திற்கு வெளியிட்டு அவர் உயிருடன் இருக்கின்றார் என காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 27ம் திகதி வெளியிடுவதற்காக காணொளி ஒன்றை தயாரித்து வருகின்றனர். மாவீரர் தினம் இதற்காக விடுதலைப்புலிகளின் தலைவரின் உறவி…
-
- 9 replies
- 1.2k views
-
-
22 NOV, 2023 | 01:15 PM சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிக்காக சென்ற இலங்கைப் பெண் ஒருவர், அங்கு கடுமையாக துன்புறுத்தப்பட்டு இரும்பு ஆணிகளை பலவந்தமாக விழுங்க வைத்து பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் நாடு திரும்பியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் தர்ஷனி என்ற 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாவார். இவர் துணி துவைக்கும் இயந்திர அறைக்குள் இழுத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்து கடுமையாக தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதுடன், இரும்பு ஆணிகளை பலவந்தமாக விழுங்க வைக்கப்பட்டுள்ளமை அவர் சவூதி பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் விழுங்கிய ஆணிகள் தொண்டையில் ச…
-
- 1 reply
- 412 views
-
-
யாழ்.பல்கலையில் சட்டத்துறைப் போதனை தமிழிலும் வேண்டும்! ஆதவன் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியை மும்மொழிகளிலும் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சட்டத்துறையில் ஆங்கிலமொழி மூலத்தில்மட்டும் நடத்தப்பட்டுவருகின்றது. ஏன் யாழ். பல்கலையில் தமிழ்மொழி மூலத்தில் சட்டக்கற்கையை உட்புகுத்த முடியாது? என்று யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினருமான ம.இளம் பிறையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழ் மக்களினுடைய பண்பாட்டு, பாராம் பரிய விழுமியங்களைப் பாதுகாக்கின்ற பல்கலைக்கழகமாக இருக்கின்ற நிலையைச் சிதைத்து, சிங்கள மாணவர்களையும் …
-
- 0 replies
- 224 views
-
-
22 NOV, 2023 | 03:34 PM வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில்சார் அபிவிருத்திகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 03 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளதுடன் அது தொடர்பான ஒப்பந்தம் இன்று (22) நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி (Misukoshi Hiddheki) நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர். அண்மையில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி (Misukoshi iHiddheki) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கடற்றொழில் அமைச்சில் சந்தித்தபோது கலந்துரையாடப்பட்டமைக்கு அமைய, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்க…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
பரதநாட்டிய அவதூறு விவகாரம்; மன்னிப்புக் கோரியது உலமா சபை! ”மதம் மற்றும் கலாசார விழுமியங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும் கண்டனத்திற்குரியதுமாகும்” என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.அர்கம் நூராமித் தெரிவித்தார். பரதநாட்டியம் தொடர்பில் மௌலவி ஒருவர் தவறாக பேசிய விடயம் தொடர்பில் சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு மாளிகாவத்தை ஜம்இய்யதுல் உலமா தலைமைக் காரியாலத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்ஊடகவியலாளர் மாநாட்டில் அகில…
-
- 1 reply
- 263 views
-
-
சட்டக்கல்வி தமிழில் வேண்டும்! ”யாழ் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி ஆங்கிலத்தில் மாத்திரம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ் மொழியிலும் சட்டத்துறைக் கல்வி நடைபெறவேண்டும்” என யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினருமான மா.இளம்பிறையன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியினை மும்மொழிகளிலும் கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. எனினும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சட்டத்துறையில் ஆங்கிலமொழியில் மாத்திரம் சட்டக்கல்வி நடத்தப்பட்டு வருகின்றது. ஏன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலத்தில் சட்டக்கற்கையை உட்புகுத்த முடியாது? யாழ்ப்பாணப் பல்க…
-
- 2 replies
- 357 views
-
-
முள்ளியவளையில் தனது முச்சக்கரவண்டியில் ‘மாவீரன்’ என எழுதப்பட்ட பெயர் பலகையை காட்சிப்படுத்தியிருந்தமைக்காக அதன் சாரதியான தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். ‘மாவீரன்’ என்பது தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுபடுத்தும் பெயர். ஆகவே குறித்த முச்சக்கரவண்டியின் உரிமையாளர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணைபோகிறார். அவரைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை செய்யவேண்டும், எனக் கூறியே பொலிஸார் தடுத்துவைத்திருந்தனர். பின்னர் சட்டத்தரணிகளின் விரைவு நடவடிக்கையினால் குறித்த இளைஞர் விடுவிக்கப்பட்டார். உயிர்க்கொடையாளர்கள் எம் மாவீரர்கள் குறித்த இந்த சம்பவமானது, மாவீரரை தமிழர்கள் மறந்தாலும், தமிழர்கள் மீது வன்முறைகளையும், ஒடுக்குமுறைகளையும் கட்டவ…
-
- 0 replies
- 391 views
-
-
4 வயதை பூர்த்தியடைந்த குழந்தைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்க்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இன்று (22)பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பான யோசனைகள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர், 10ஆம் ஆண்டில் பொதுத் தரப் பரீட்சை நடைபெற உள்ளதாகவும், ஒரு குழந்தை 17 வயதில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/282024
-
- 0 replies
- 316 views
- 1 follower
-
-
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய இழுவை படகுகளை தடுப்பதற்கு புதிய அணுகுமுறையாக, கடும் நடவடிக்கைகளை எடுக்க மீன்வளத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை இலங்கை கடற்பரப்பில் அவர்களின் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை தடுக்கும் என்று தாம் நம்புவதாக, மீன்பிடி மற்றும் நீரியல் வளத் துறை பணிப்பாளர் எஸ்.ஜே.கஹவத்த தெரிவித்துள்ளார். சிறைத்தண்டனைக்கு பின் விடுவிப்பு தற்போது, கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள், நீதிமன்றங்களால் இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். எனினும் புதிய சட்டத்தின்படி, படகுகளின் உரிமையாளர்களுக…
-
- 11 replies
- 1.1k views
-
-
21 NOV, 2023 | 05:22 PM வடமாகாணத்தில் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல், மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில், இன்று செவ்வாய்க்கிழமை (21) வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. சுற்றுலாதுறை உள்ளிட்ட வருமானம் ஈட்டக்கூடிய துறைகளில் காணப்படக்கூடிய சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அதிகாரிகளின் ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் கிடைக்கும் பட்சத்தில் முதலீட்டு ஊக்குவிப்புகளை மேற்கொள்ள முடியும் என இதன்போது வட மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் . சுற்றுலாதுறை உள்ளிட்ட வருமானம் ஈட்டக்கூடிய…
-
- 1 reply
- 347 views
- 1 follower
-
-
110 மில்லியன் டொலர் ஒப்பந்தம் : இலங்கையில் கால்பதிக்கும் அமெரிக்க நிறுவனம் ! உலகின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஆர்.எம். பாரக்ஸ் நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 110 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தின்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 150 உரிமையுடைய எரிபொருள் நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவவுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் நீண்ட கால ஒப்பந்தத்தின்படி ஷெல் தயாரிப்புகள் இலங்கையில் விற்பனை செய்யப்படும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவற்றில் சிறிய அளவிலான பல்பொருள் அங்காடிகள், வாகனங்களுக்கு சார்ஜ் செய…
-
- 0 replies
- 360 views
-
-
சர்ச்சைக்குரிய வகையில் தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைத்தியர் கபில விக்கிரமநாயக்க மற்றும் ஏனைய மூவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஒக்டோபர் மாதம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம், தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்த மருந்து நிறுவன உரிமையாளரையும், சுகாதாரத் துறையின் மேலும் இரண்டு அரச உயர் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு உத்தரவிட்டதை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது. சுகாதார அமைச்சின் வழங்கல் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்க…
-
- 3 replies
- 569 views
- 1 follower
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள ஆபத்தான 46 மரங்கள் முழுமையாக அகற்றும் பணி இன்று ஆம்பமானது. குறித்த வீதியில் ஆபத்தானதாக 57 மரங்கள் அடையாளம் காணப்பட்டது. அதில் 46 மரங்கள் முழுமையாக அகற்றவும், 11 மரங்களின் ஆபத்தான கிளைகளை அகற்றவும் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில், அனுமதி கிடைக்கப்பெற்றதை அடுத்து அகற்றுவதற்கான கேள்வி கோரப்பட்டது. இதனை அடுத்து இன்று குறித்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் குறித்த நடவடிக்கைக்கு போக்குவரத்து பொலிசார், மின்சார சபையினர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபையினர் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். குறித்த மரங்களில் அதிகமான பா…
-
- 0 replies
- 541 views
- 1 follower
-
-
திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு உடன் நடவடிக்கை வேண்டும்! ராஜபக்ஸக்களிடம் மக்கள் இழப்பீடு கோரலாம்! adminNovember 21, 2023 இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மேலும் அதிகமாக வரி விதித்து மக்கள் மீது சுமையை ஏற்படுத்தாது, கடன்களை செலுத்துவதற்கும், பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பவும் “திருடப்பட்ட சொத்துக்களை” மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரத்தை திவாலாக்கியதற்கு யார் காரணம் என்ற வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு அரிய மற்றும் சிறந்த தீர்ப்பு. மனுவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு…
-
- 0 replies
- 468 views
-
-
மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்! பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிட நேரம் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் முன்பாக இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்,விரிவுரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது நடன உடையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் ”பரதக்கலை என்பது தமிழர்களின் பூர்வீக கலையாகும். இக்கலையை தெய்வீக கலையாக நாங்கள் கருத…
-
- 18 replies
- 1.6k views
-
-
எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திர இரவு நிகழ்ச்சி என்பன இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்ச்சியானது Northern Uniஆல் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. இசை நிகழ்ச்சி இவ்வாறான சூழலில் குறித்த நிகழ்ச்சியில் குஷ்பு கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து அவர் செவ்வியொன்றில் தெரிவித்த கருத்துக்கள் காரணமாக மக்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவருக்கு பதிலாக டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக Northern Uni ஏற்பாடுகளை செய்துள்ளது. …
-
- 12 replies
- 1.4k views
-
-
இந்திய கடற்பகுதியில் எல்லைத் தாண்டி வரும் இலங்கை கடற்படையினரையும், கடற்கொள்ளையர்களையும் இந்திய அரசு பாரபட்சமின்றி சுட்டு வீழ்த்தினால் தான் இந்தியாவின் மீது இலங்கை அரசுக்கு பயம் வரும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். ''எல்லைத் தாண்டி மீன் பிடிக்கச் சென்றதாக கூறி, பாம்பன் மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், அவர்களுடைய படகுகள், மீன்பிடி வலைகள், திசைகாட்டும் கருவிகள் உள்ளிட்ட உடைமைகள் பறிக்கப்படுவதும் வாடிக்கையாக …
-
- 4 replies
- 921 views
-
-
Published By: PRIYATHARSHAN 18 NOV, 2023 | 08:23 PM சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட தூதுக் குழுவினர் இன்று சனிக்கிழமை 18ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கும் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசாங்கத்தின்…
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் – காரைநகரில் 100 கிலோ கிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 101 கிலோகிராம் 750 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவினை கடற்படையினர் இன்று காலை பறிமுதல் செய்துள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, 11 ஆயிரத்து 880 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸ் பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே இரு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ள…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
17 NOV, 2023 | 06:30 PM கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பல் (INS) கோரா இன்று வெள்ளிக்கிழமை ( 17) இந்தியாவிற்கு புறப்பட்டது. இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படை மரபுகளுக்கு அமைய குறித்த கப்பலை வழியனுப்பி வைத்தனர் . 91.1 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலானது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணை கப்பலாகும். கோரா கப்பலின் கட்டளை அதிகாரியான கொமாண்டர் ஆர்.எம். நம்பியர், ரியர் அட்மிரல் சமன் பெரேராவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த கப்பலில் வருகை தந்திருந்த இந்திய கடற்படையினர் நாட்டில் இருந்த போது கொழும்பில் உள்ள சில சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. …
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
திருநர் வலையமைப்பினால் நடைபயணம் November 19, 2023 யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்றுகூடியவர்கள் நகரை சுற்றி நடைபயணத்தில் ஈடுபட்டனர். இந்த சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும் சமூக பொறுப்புடையவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு திருநர் சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம், மனிதர்களை மனிதர்களாக மதிப்போம் என நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். திருநர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையால் உயிரிழந்தவர்களுக்கு இதன்போது மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://globaltamilnews.net/2023/197515/
-
- 0 replies
- 291 views
-
-
யாழ்ப்பாணம் உரும்பிராயில், முதியவர் ஒருவர் அடித்து கொலை! adminNovember 19, 2023 யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில், முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உரும்பிராய் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய எஸ். பிரேமராஜன் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவம் தொடர்பில் செல்வபுரம் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையான நபர் கோண்டாவில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்பவர் எனவும் கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். அதேவேளை கொலை சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் நேரில் சென்று விச…
-
- 0 replies
- 288 views
-