ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
பெற்ற தகப்பனால் 'ஆமி புலனாய்வு ஆள்' என்று காட்டிக் கொடுக்கப்பட்ட மகன் 2011-01-16 03:02:24 வலிமேற்கில் உள்ள சாராய'பார்' ஒன்றில் தாகம் தீர்த்துக் கொண்டிருந்தார் 55 வயது மதிக்கதக்க நபர் ஒருவர். திடீரென அங்கு நுளைந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் குறிப்பிட்ட நபரின் கன்னத்தில் அறைந்து விட்டு அவரது பணம் மற்றும் சேட் பொக்கற்றில் இருந்த சில பொருட்களையும் பறித்துச் சென்றார். இதனை அவதானித்த சாராயக் கடை ஊழியர்கள் யார் அது என வினாவிய போது "அது ஆமிப் புலனாய்வு பொடியன். அதனால சும்மா விட்டுவிட்டன் இல்லாட்டி நடக்குறது வேற" என்று வீராப்பு பேசியுள்ளார். உடனடியாக செயலில் இறங்கிய சாராயக் கடை ஊழியர்கள் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு தகவல் அனுப்பியுள்ளார்கள். அங்கு வி…
-
- 0 replies
- 2k views
-
-
யாழப்பாணத்தில் வாக்களிக்கத் தகுதியானோர் 696,587 பேர் 2011-01-15 21:34:14 யாழ் மாவட்டத்தில் உள் ளூராட்சித் தேர்தலுக்கு வாக்களிக்க 696,587 பேர் தகுதி பெற்றுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் திணைக்கள உதவித் தேர்தல் ஆணையாளர் பொ. குகநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 13 பிரதேச சபைகளுக்கும், 3 நகர சபைகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளதகாவும், இதில் 201 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு பிரதேச சபைகளிலும், நகர சபைகளிலும் 9 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 12 பேர் போட்டியிட முடியும் எனத் தெரிவித்த அவர், இவற்றில் 5 இளைஞர்கள் கட்டாயமாகப் போட்டியிட வேண்டும் என்றும் கூறினார். பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய…
-
- 0 replies
- 744 views
-
-
சுவிட்சர்லாந்தில் இயங்கி வந்த விடுதலைப் புலிகளின் 23 நிதி நிறுவனங்கள் ? ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2011 14:24 விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான நிதியை வழங்குவதற்காக சுவிட்சர்லாந்தில் இயங்கி வந்த புலிகளின் 23 நிதி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் 19 மாதங்களாக சுவிட்சர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக ஞாயிறு திவயின தெரிவித்துள்ளது. இந்த நிதி நிறுவனங்களில் பிரதான நிறைவேற்று அதிகாரிகள் 10 பேர் சட்டமா அதிபர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில், சுவிஸ் பொட்போல் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனதாகவும் ஏற்கனவே ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குறித்த நிதி நிறுவனங்களில் பைனோன்ஸ், எனலோட் பைனேன்ஸ் ஆகிய நிறுவனங…
-
- 0 replies
- 1.6k views
-
-
Jan 16, 2011 / பகுதி: செய்தி / முன்னாள் போராளிகளை திருப்பி அனுப்பினால் உயிராபத்து – நெதர்லாந்து நீதிமன்றில் வாதாட்டம் அரசியல் தஞ்சம் கோரிய தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களுக்கு இலங்கை அரசால் கடும் உயிர் ஆபத்துக்கள் ஏற்படும். இவ்வாறு நெதர்லாந்து நீதிமன்றில் நடைபெற்ற அரசியல் தஞ்சக் கோரிக்கை வழக்கு ஒன்றில் வாதாடிய அந்த நாட்டு சட்டத்தரணி நீதிபதியிடம் எடுத்து விளக்கியிருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறிய முன்னாள் போராளியான முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேசு சந்திரகுமார் அந்த நாட்டில் அரசியல் தஞ்சம் கோரினார். அவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை குடிவரவு குடியகல்வு திணைக்களம் நி…
-
- 1 reply
- 1k views
-
-
ஜனாதிபதி யாழ்.வருகிறார் இன்று யாழ்ப்பாணம்,ஜன.16 யாழ்ப்பாணத்துக்கான இரண்டு நாள் விஜயத்தை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று ஆரம்பிக்கவிருக்கின்றார்.பிரிட்டிஷ் அரசின் உதவியுடன் அமைக்கப் பட்டுள்ள கேரதீவு சங்குப்பிட்டிப் பாலத்தை இன்று பிற்பகல் ஜனாதிபதி வைபவ ரீதியாகத் திறந்து வைக்கவிருக்கின்றார்.நாளை காலை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம் பெறும் சூரியப் பொங்கல் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளவிருக்கிறார்.அந்நிகழ்வில் வைத்து சிவாச்சாரியார்களுக்கும் கலைஞர்களுக்கும் ஜனாதிபதி வேட்டிகளை வழங்கவிருக்கிறார். பல்கலைக்கழகத்துக்கு தெரிவான 100 மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் ஜனாதிபதி வழங்கவிருக்கிறார்.பௌத்த, இந்து ஆலயங்களுக்கும் ஜனாதிபதி சென்று வழிபாடுகளில் கலந்துகொள்வார்.( uthay…
-
- 2 replies
- 1.3k views
-
-
'பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான்' - சுவிஸ் கொள்ளையர்கள். 'தர்மத்தை ஏமாற்ற நினைத்தால் தர்மம் ஏமாற்றிவிடும்' என்ற உண்மையின் தத்துவத்தை அறியாத 'எம்புரோட்டிக்' கள்ளர்கள் இன்று பிடிபட்டு மக்கள் முழி பேந்தப் பேந்த நிற்பதைப்பார்க்க நகைப்பாக உள்ளது. சர்வதேசத்திலே 'தமிழருக்கான' அந்தஸ்த்து(செம்மொழி) உயர்ந்துள்ளதன் காரணம் தமிழ்மொழியின் செழுமையும் அதன் பழமையும் ஆகும். அதே போல தமிழரின் வீரவரலாறு உயர்வதற்கு காரணம் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் தன்மையாகும். அந்தப் புனிதமான மாவீரர்களை உட்கொண்ட விடுதலைப்போரின் காரணமாக சுவிஸ் நாட்டில் உணர்வுள்ள மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதி உரிய இடத்திற்கு போகாமல் மோசடி செய்யப்பட்டது, உலகில் எந்த சக்தி மன்னித்தாலும் புனிதமான மாவ…
-
- 2 replies
- 2.2k views
-
-
கேபி அவர்கள் வருத்தம் தெரிவிக்கிறாராம் போர் மிகவும் கொடியதாம்....... கனபேர் போராலை கஸ்ரப்படுகினமாம்....
-
- 0 replies
- 1.7k views
-
-
சீனா ஏற்கனவே அம்பாந்தொட்டையிலும், கொழும்பிலும் சங்கிரிலா நிறுவன ஏழு நட்சத்திர ஹோட்டல்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போ சீனாவின் தேசிய விமான தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CATIC) எனும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கம்பனி கொழும்பில் 500 மில்லியன் டொலர்களில் முதலீடு செய்து கொழும்பில் ஓர் ஹோட்டலினை கட்டுகின்றது. உண்மையில் சீனா பாதுகாப்பு நிறுவனங்கள் இந்தியா, இலங்கை, பர்மா, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் தான் இந்த வியாபாரங்களை செய்கின்றது. மேற்கைத்தைய நாடுகளில் இந்த வியாபாரம் செல்லுபடியாகாது. அமெரிக்கா, கனடா உட்பட பல மேற்கைத்தைய நாடுகள் இத்தகைய நிறுவனங்களை தடைசெய்துள்ளது. ஆகவே சீனா வியாபாரம் செய்யப்போகின்றதா அல்லது வேறு ஏதாவது செய்யப்போகின்றதா என்பதனை பொறுத்திரு…
-
- 2 replies
- 969 views
-
-
அண்மையில் ஏற்பட்டுள்ள மழை அனர்த்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகணம் ஆலங்கேணி கிராமத்து மக்களுக்கு நேசக்கரம் அமைப்பினால் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கிராமத்திலிலிருந்து வெள்ளத்தால் பாதிப்புற்று வீடுகளை விட்டு வெளியேறிய மக்களுக்கு நேசக்கரம் கிழக்குமாகாண இணைப்பாளர்கள் நேரில் சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளனர். இலங்கை ரூபா ஒருலட்சத்து ஐயாயிரம் ரூபாவுக்கான பொருட்களாக குழந்தைகளுக்கான பால்மா , சீனி , தேயிலை , அரிசி போன்றவற்றோடு மேலும் சில அவசியமான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட இன்னொரு தொகுதி பொருட்கள் நாளை வழங்கப்படவுள்ளது. இவ்வுதவியை வழங்க தங்கள் பண உதவிகளை எமக்குத் தந்துதவிய புலம்பெயர் உறவுகளுக்கு நேசக்கரம் தனது ந…
-
- 1 reply
- 916 views
-
-
அரசியல் அதிகார பகிர்வுக்கு நான் தயார் ஆனால் பொலிஸ் அதிகாரம் கொடுக்க மாட்டேன் இவ்வாறு கூறியுள்ளார் மஹிந்த இராஜபக்ஷ. இன்று செய்தியாளரை சந்தித்த மஹிந்த தமிழர்களுக்கு வடக்கு கிழக்கில் அதிகாரங்களை பகிர நான் தயார் ஆனால் அவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வரவேண்டும். அத்துடன் 13 ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரம் வழங்குவேன். எனினும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது எனவும் கூறியுள்ளார். மேற்கத்தைய உலகத்துடனான உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது. கண்டா குடுவரவு சட்டத்தை மாற்றுகின்றது. இதனால் புலிகள் அங்கு குடிகொள்ள முடியாது. ஜேர்மனி, சுவிற்ற்சலாந்து புலிகளை கைது செய்துகொண்டிருக்கின்றது. இவை எல்லாம் இலங்கையுடனான உறவுகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும் என்றார் மஹிந்த. ஈழ நாதம்
-
- 7 replies
- 1.3k views
-
-
Friday, January 14th, 2011 | Posted by admin தனித் தமிழ்நாடுதான் இனித் தீர்வு! மீண்டும் கடலில் ஒரு படுகொலை! தனித் தமிழ்நாடுதான் இனித் தீர்வு! தமிழர்களம் அரிமாவளவன் அறைகூவல்! விழுகிற பிணங்களை எண்ணிக் கொண்டிருப்பதுதான் நமது வேலையா? கூலிக்கு மாறடிக்கிறவனுக்குக்கூட குருதி கொப்பளிக்குமே! என் சொந்த மக்களின் 535ஆவது உடல் துடிதுடித்து விழுகிறது! 1947ல் என்னைப் பாதுகாப்பதாக வாக்குறுதி கொடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றிய தில்லி அரசோ எள்ளளவும் கவலை கொள்ளவில்லை! “பார்த்துச் சுடு” என்று பக்குவமாகச் சொல்கிறது! தமிழ்நாட்டு அரசு வழக்கம்போல மனு, எச்சரிக்கை என்று ஓரம் கட்டிக் கொள்கிறது! தேர்தல் நெருங்கிவிட்டதால் இழப்பீட்டுத் தொகையை சற்று உயர்த்தி ஐந்து லட்சமாக அறிவிக்கிறது…
-
- 5 replies
- 1.6k views
-
-
Saturday, January 15th, 2011 | Posted by admin தமிழகத்தை நெருக்கும் சீன பேராபத்து : இலங்கையிலிருந்து அதிர்ச்சி ரிப்போர்ட் ராஜபக்ஷேவால் தென்னிலங்கையில் வலுவாகக் காலூன்றிய சீனா, இப்போது இந்தியாவிற்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. சீனாவின் வல்லாதிக்கம், இப்போது வடக்கு இலங்கையின் வடபகுதி முனைவரையிலும் கூட நெருக்கமாக முன்னேறி இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாகியிருப்பதுதான் இப்போது லேட்டஸ்ட் சர்ச்சை. இலங்கையின் யாழ் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் வங்காள விரிகுடாவை ஒட்டி அனலை தீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, காரைதீவு, மண்டைதீவு, பாலைதீவு, இரணைதீவு என்று பல சிறிய தீவுகள் சிதறிக் கிடக்கின்றன. இவற்றில் காரை தீவு, மண்டைதீவு போன்றவை யாழ் குடாநாட்டின் பெரு…
-
- 10 replies
- 1.6k views
-
-
யாழ். குற்றச்செயல்கள் இராணுவத்திலிருந்து தப்பியோடியோரின் செயலாக இருக்கும் என கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஊகம் வெளியிட்டுள்ளார். இன்று சிங்கள இணையத்தளத்திற்கு பிரபா கணேசன் கொடுத்த நேர்முகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு மார்ச் மாதம் அமைச்சுப்பதவி கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். ஈழநாதம்
-
- 2 replies
- 698 views
-
-
டாக்டர் அம்பேத்கர், தந்தைபெரியார், ஈகி முத்துக்குமரன் நினைவுநாள் மற்றும் கொடுங்கோலன் ராஜபக்சேவை குற்றவாளியாக அறிவிக்கக்கோரியும், நாடு கடந்த தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்கக்கோரியும், கூட்டு இராணுவ பயிற்சியை திரும்ப்பெறக்கோரியும், சிங்கள அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறை சென்ற தமிழர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் பெங்களூரில் பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் இன்று (15.01.2011) மாலை 4 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேரலை ஒலிபரப்பு http://meenakam.com/
-
- 1 reply
- 796 views
-
-
தென்கிழக்கு கடற்பிராந்திய பாதுகாப்பு பலப்படுத்தப்படும் இந்திய கடற்படை தெரிவிப்பு இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களையடுத்து தென்கிழக்குக் கரையோரம் பாதுகாப்பை பலப்படுத்தப் போவதாக இந்தியக் கடற்படை தெரிவித்திருக்கிறது. தென்கிழக்குக் கரையோரப் பாதுகாப்பை நாங்கள் வலுப்படுத்துவோம் என இந்தியாவின் கிழக்குப் பிராந்திய கடற்படை பிரதம அதிகாரி எஸ்.வி.தோஹரே நேற்று நிருபர்களிடம் தெரிவித்ததாக இந்து பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவரொருவர் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இந்தியக் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரியான தோஹரே இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். தமிழக மீனவர் கொல்லப்பட்ட விடய…
-
- 1 reply
- 916 views
-
-
வடமராட்சியில் கலை, கலாசாரங்களுக்கு பெயர்பெற்ற வல்வெட்டித்துறையில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தால் இந்த வருடமும் தைப்பொங்கல் தினத்தன்று பட்டம் விடும் போட்டி சிறப்பாக நடாத்தப்பட்டதுடன் யாழ் மாவட்டத்திலிருந்து பல பாகங்களிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக பூனைக்குட்டி, கொக்கு, மணிக்கூடு, கடற்கன்னி, குதிரை, சரித்திரப் பிரசித்திபெற்ற அன்னபூரணி கப்பல், பருந்து, விமானம் போன்ற பட்டங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. பல சிறுவர்களும் இப்போட்டியைக் கண்டு குதூகலித்தனர். thx http://www.newjaffna.com/index.php
-
- 1 reply
- 1.1k views
-
-
Saturday, January 15th, 2011 | Posted by admin இந்தியாவிடம் சவால் விடும் இலங்கை கடற்படை தளபதி இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய மீனவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை முடிந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு புதிய கடற்படைத் தளபதி சோமதிலக திஸாநாயக்க இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். இலங்கையின் 17ஆவது கடற்படைத் தளபதியாக சோமதிலக திஸாநாயக்க பாதுகாப்பு செயலாளரால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Short URL: http://thaynilam.com/tamil/?p=1939
-
- 4 replies
- 957 views
-
-
ஜப்பான் வழங்கிய வெள்ள நிவாரணம் [ Sat, Jan 15, 2011, 05:00 pm ] வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 26.7 மில்லியன் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. இதில் 400 கூடாரங்கள், 2000 படுக்கை விரிப்புக்கள் உள்ளிட்ட பல நிவாரணப் பொருட்கள் காணப்படுவதாக இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கவனத்தில் கொண்டு இன்னும் சில நிவாரணங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜப்பான் குறிப்பிட்டுள்ளது. http://www.thaalamnews.com/news.ph…
-
- 1 reply
- 835 views
-
-
வல்வெட்டித்துறை ஊரிக்காடு இராணுவ முகாமிற்கு 100 மீற்றர் தொலைவில் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலத்தை வல்வெட்டித்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். கைப்பற்றிய சடலத்தின் இடது கையில் கே.குப்புசாமியென பச்சசைகுற்றப்பட்டுள்ளதாகவும், நபரின் உயரம் 5 அடி 4 அங்குலம் எனவும், நபரின் வயது 40 தொடக்கம் 45 வயது வரை இருக்கலாம் எனவும் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குறித்த சடலம் இந்திய மீனவருடையதாக இருக்கலாம் என வல்வட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈழ நாதம்
-
- 1 reply
- 848 views
-
-
சீனப் புதத்தை காட்டித் துள்ளிக் குதிக்கும் இலங்கை ஆட்சிப் பீடத்தை சமாளித்து வழிக்குக் கொண்டுவர வகை தெரியாமல் விழிபிதுங்கி தடுமாறித் திணறுகின்றது இந்திய உபகண்டப் பேரரசு ராஜபக்ஷேவால் தென்னிலங்கையில் வலுவாகக் காலூன்றிய சீனா, இப்போது இந்தியாவிற்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. சீனாவின் வல்லாதிக்கம், இப்போது வடக்கு இலங்கையின் வடபகுதி முனைவரையிலும் கூட நெருக்கமாக முன்னேறி இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாகியிருப்பதுதான் இப்போது லேட்டஸ்ட் சர்ச்சை. இலங்கையின் யாழ் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் வங்காள விரிகுடாவை ஒட்டி அனலை தீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, காரைதீவு, மண்டைதீவு, பாலைதீவு, இரணைதீவு என்று பல சிறிய தீவுகள் சிதறிக் கிடக்கின்றன. இவற்றில் காரை தீவு,…
-
- 2 replies
- 1.3k views
-
-
உள்ளூராட்சித் தேர்தல்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 4 தமிழ்க் கட்சிகள் இணையும்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-15 09:58:42| யாழ்ப்பாணம்] நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் 4 அரசியல் கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.கே.சிவாஜி லிங்கம் கருத்து தெரிவிக்கையில…
-
- 3 replies
- 810 views
-
-
தாயகம் நோக்கி எம்.வி.அகத் கப்பலில் வந்துகொண்டிருந்தவேளை 16.01.1993 அன்று வங்கக் கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடற்படையினர் முற்றுகையிட்டு கைது செய்ய முற்பட்டவேளை கப்பலுடன் தம்மை அழித்துக்கொண்ட மூத்த தளபதி கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட்ட 10 வீரவேங்ககைளினதும் 18ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 6 replies
- 1.1k views
-
-
அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்றைய பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த விசேட வழிபாட்டிற்கு அங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகள் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைதிகள் இந்த வழிபாட்டிற்காக முன்கூட்டியே சிறைச்சாலைகள் ஆணையாளரிடமிருந்து அனுமதியைப் பெற்றிருந்தார்கள். ஆனால், சிறைச்சாலையிலுள்ள அதிகாரிகள் இந்த வழிபாட்டிற்கு அனுமதி வழங்க முடியாதெனக் கூறி தடை விதித்துள்ளனர். நேற்றைய தினம் கைதிகளின் அறைகளைத் திறக்காது பூட்டிவைத்ததுடன், உறவினர்கள் அவர்களைப் பார்வையிடவும் தடைவிதித்தனர். ஈழ நாதம்
-
- 0 replies
- 473 views
-
-
சுனாமி வதந்தியால் கல்முனை,காரைதீவு மக்கள் நள்ளிரவில் பரபரப்பு! [ பிரசுரித்த திகதி : 2011-01-16 06:51:53 AM GMT ] கல்முனைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு சுனாமி ஏற்படப் போவதாக வதந்தியொன்று பரவியதையடுத்து மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு வீடுகளைவிட்டு வெளியேறினர். நள்ளிரவு 02 மணியளவில் இப்பிரதேசத்தில் தொலைபேசி ஊடாக சுனாமி ஏற்படப் போவதாகவும் இதனால் பாரியவிளைவொன்றை எதிர்நோக்க நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டது. உடனடியாக கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும் விஷமிகள் சிலர் பரப்பிவிட்ட தவறான செய்தியாலும் வதந்தியாலும் கல்முனைப் பிரதேசத்தில் அச்சமும் பீதியும் நிலவியதுடன் மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களைத் தேடிச் செ…
-
- 1 reply
- 931 views
-
-
தமிழ் திங்கள்களை பின்பற்றும் மலையாளிகளும்; சமஸ்கிருத திங்களை பின்பற்றும் தமிழர்களும் நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம். மற்றவை மானம், உயிர். குடும்பம், குமுகாயம், ஊர், நகர், நாடு உலகம் பற்றிய நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்குக் கால அளவை இன்றியமையாத ஒன்றாகிறது. `நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்’ என்ற குறள் மூலமும் காலம் அறிதல் என்ற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார். நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுது…
-
- 1 reply
- 1.1k views
-