ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
யுத்த குற்றங்களிற்காக எவரையும் பொறுப்புக்கூறச்செய்யப்போவதில்லை என்பதை அரசாங்கம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது- இராணுவ அதிகாரிகள் இராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்டமை குறித்து பேர்ள்அமைப்பு Published By: RAJEEBAN 08 NOV, 2023 | 10:38 AM யுத்த குற்றம்சாட்டப்பட்ட மூவரை சர்வதேச இராஜதந்திரிகளாக நியமித்துள்ளதன் மூலம் இலங்கை அரசாங்கம் யுத்த குற்றங்களிற்காக எவரையும் பொறுப்புக்கூறச்செய்யப்போவதில்லை என்ற வலுவான அரசியல் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு பேர்ள் தெரிவித்துள்ளது. மூன்று யுத்த குற்றவாளிகளான ரவீந்திரசந்திரசிறி விஜயகுணரட்ண தமித் நிசாந்த சிறிசோம உலுகெட…
-
- 1 reply
- 181 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 08 NOV, 2023 | 01:21 PM கடலில் குளிக்கும்போதும், கடற்கரையில் வெறுங்காலுடன் நடக்கும்போதும் கவனமாக இருங்கள் ! பருவப்பெயர்ச்சி மழை காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் கடற்பகுதிகளில் 'கோன்மஹா-ஸ்டோன் ஃபிஷ்' (Gonmaha-Stone Fish) எனப்படும் அதிக விஷத்தன்மை கொண்ட கல் மீன் இனங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக சித்த மருத்துவத் திணைக்களத்தின் மூத்த விரிவுரையாளர் வைத்தியர் ஜானக ரூபன் தெரிவித்தார். குறித்த மீன் ஒரு பாறை மீன் ஆகும். இவைகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும், அவை மனிதர்களையோ அல்லது கடலில் உள்ள எந்த உயிரினத்தையோ தாக்குவதில்லை என தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, …
-
- 1 reply
- 433 views
- 1 follower
-
-
08 NOV, 2023 | 05:29 PM நாட்டில் நீரிழிவு நோயால் 14.6 வீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நாட்டில் வெவ்வேறு வகையான நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட போதிலும் , அவற்றில் வகை 1 மற்றும் வகை 2 ஆகிய நீரிழிவு நோய்களுக்கு தற்போது முன்னுரிமையளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு தமக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியாதுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோய் தொடர்பில் அனைவரும் பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியம் என்பதை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து …
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது! வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”ஷங்ரிலா ஹோட்டலை நிர்மாணிப்பதற்கு காலி முகத்திடல் நிலத்தை விற்பனை செய்ததன் பின்னர் எந்தவொரு நிலத்தையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யாமல் இருப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இருந்தபோதிலும், அரசாங்க வேலைத்திட்டங்களுக்காக நிலங்களை குத்தகை அடிப்படை…
-
- 0 replies
- 358 views
-
-
கொட்டி தீர்க்கும் காட்டு மழை : வீதிகளுக்கு பூட்டு மருதானைக்கும் பேஸ்லைனுக்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் களனிவெளி ஊடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் நெலுந்தெனிய மற்றும் உடுகும்புர பகுதிகளுக்கு இடையே மரம் முறிந்து வீழ்ந்ததால் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அத்தோடு கனமழையின் போது வாகன சாரதிகள் மிகவும் கவனமாக வாகனத்தை செலுத்த வேண்டுமென போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை – கொழும்பு பிரதான …
-
- 2 replies
- 477 views
- 1 follower
-
-
Published By: PRIYATHARSHAN 08 NOV, 2023 | 10:01 AM கொழும்பு துறைமுகத்தில் தெற்காசிய பிராந்தியத்திற்கு முக்கியமான உட்கட்டமைப்பை வழங்கக் கூடிய ஒரு ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் பணிக்கு உதவுவதற்காக அரை பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையினை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (DFC) இன்று அறிவித்தது. தனது பங்காளரின் அபிவிருத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவி செய்யும், உள்ளூர் சமூகங்களின் முன்னேற்றத்தில் முதலீடு செய்யும் மற்றும் உள்ளூர் நிதி நிலைமைகளுக்கு மதிப்பளிக்கும் உயர்தர உட்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதியளிப்பை மேற்கொள்வதில் அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி…
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 08 NOV, 2023 | 11:19 AM மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாடசாலைக்கு வீதியால் சென்ற மாணவர்கள் மீது பனை மரத்தில் இருந்த குளவி தாக்குதலில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (08) காலை 7.00 மணியவில் இடம்பெற்றுள்ளது. குறிஞ்சாமுனை பகுதியில் பனைமரத்தில் கூடுகட்டியுள்ள குளவிகள் வீதியால் நடந்து சென்ற மாணவர்களை தாக்கியுள்ளது. இந்நிலையில், 8 மாணவர்கள் அருகிலுள்ள தாண்டியடிபிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த குளவி கூடுகட்டியுள்ள பனை மரங்களில் இருந்து கூடுகளை அகற…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
10 ஆயிரம் இலங்கையருக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு 10,000 இலங்கைப் பண்ணைத் தொழிலாளர்களை உடனடியாக இஸ்ரேலில் வேலைக்கு அமர்த்த அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தமொன்று இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சர் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய நிறுவனங்களில் விவசாய துறைக்காக 5,000 தொழிலாளர்களை நாட்டுக்கு வரவழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், முதல் கட்டமாக இலங்கை விவசாய தொழிலாளர்கள் எதிர்வரும் வாரங்களில் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது. இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் காரணமாக இஸ்ரேலின் விவசாயத்துறை கடுமை…
-
- 2 replies
- 328 views
-
-
08 NOV, 2023 | 09:57 AM நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய நுவரெலியா தபால் நிலைய கட்டடத்தை புதிய முதலீடுகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பொறுப்பாக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டது. நுவரெலியா தபால் நிலையத்துக்கு பொருத்தமான பிறிதொரு கட்டடத்தை வழங்க நகர அபிவிருத்தி அதிகார சபை உறுதியளித்ததாக குறிப்பிட்டுள்ள தபால்மா அதிபர் எம்.ஆர்.ஜி.சத்குமார சகல சேவையாளர்களின் விடுமுறைகளும் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு (8, 9, 10 ஆகிய திகதிகள்) இரத்து செய்யப்பட்டுள்ளன. ஆகவே, பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாமல் சகல சேவையாளர்களும் ச…
-
- 0 replies
- 306 views
- 1 follower
-
-
Published By: VISHNU 07 NOV, 2023 | 09:30 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கச்சதீவை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்துடன் இந்திய இழுவைப்படகை எமது கடற்பரப்பில் ஒரு வினாடி கூட அனுமதிக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகாெண்டு எதிர்க்கட்சி உறுப்பினர் நிராேஷன் பெரேரா உரையாற்றும்போது எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். நிராேஷன் பெரேரா எம். பி. குறிப்பிடுகையில், …
-
- 2 replies
- 391 views
- 1 follower
-
-
சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசி மூட்டைகள் மாயம்! குருநாகல் பிரதேசத்தில் உள்ள 2 அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசி மூட்டைகள் காணமற் போயுள்ளதாக அரிசி சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்" 7,00,000 Kg அரிசி மூட்டைகளே இவ்வாறு காணாமற் போயுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். காணாமல் போன அரிசி முட்டைகளின் பெறுமதி சுமார் 65 – 70 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1356220
-
- 1 reply
- 471 views
- 1 follower
-
-
ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் அல்லது அதன் விதிகள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானவை அல்ல என்றும், சில சரத்துக்களில் குழுநிலைத் திருத்தங்களைத் தொடர்ந்து எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றப்படலாம் என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது, இருப்பினும் குழுநிலையில் அந்த சரத்துகள் திருத்தப்பட்டால், சட்டமூலத்தை தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றார். https://thinakkural.lk/article/280426
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
யாழ் பல்கலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – காணொளி வெளியானது! adminNovember 6, 2023 யாழ்ப்பாண பல்கலை கழக மாணவிகளுக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி , பாலியல் சேட்டைகளில் ஈடுபட்ட நபர் ஒருவரின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. குறித்த காணொளியை பல்கலைக்கழக மாணவி ஒருவரே தனது கையடக்க தொலைபேசியில் எடுத்து தனது நண்பர்கள் ஊடாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாகவும் , காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண பல்கலை கழகத்திற்கு அருகில் மாணவிகளின் விடுதிகள் உள்ளன. குறித்த பகுதிகளில் ஆள் நடமாட்டம் குறைவாக காணப்படுவதால், அங்கு பலர் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருவதாக பல தடவைகள் மாண…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
Published By: VISHNU 05 NOV, 2023 | 04:57 PM (நா.தனுஜா) இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இலங்கை விஜயம் குறித்த தகவல்கள் 'நாம் 200' நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் இரகசியமாக பேணப்பட்டமையினால், அவருடனான சந்திப்புக்கு அனுமதி கோருவதற்கு தமக்கு போதுமான கால அவகாசம் இருக்கவில்லை என இலங்கைத் தமிழரசு கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'நாம் 200' நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொள்வதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த இந்திய மத்திய நிதியமைச்ச…
-
- 15 replies
- 1.3k views
- 2 followers
-
-
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் : ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை மையப்படுத்தி பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. அத்துடன், இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யுடன் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் காலத்தில் மாவை சேனாதிராஜா, சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளது. மன்னரில் உள்ள ரெலோவின் அலுவலகத்தில் வார இறுதியில் இடம்பெற்ற ஜன…
-
- 4 replies
- 358 views
-
-
Published By: DIGITAL DESK 3 07 NOV, 2023 | 09:16 AM மட்டக்களப்பு மேச்சல்தரை மயிலத்தமடு மாதவனை பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு சிரஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) திறந்து வைத்ததையடுத்து பொலிஸார் கடமைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த மேச்சல்தரை பகுதியில் பொலிஸ் காவல் அரண் ஒன்று அமைக்குமாறு மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் பண்ணையாளர்கள் கோரிக்கைக்கு அமைய சோதனைசாவடி அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட பொலிஸ் சோதனைச் சாவடியை கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் பிரிவாக புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு அதனை நேற்று திங்கட்கிழமை (06) சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்…
-
- 0 replies
- 593 views
- 1 follower
-
-
02 NOV, 2023 | 07:11 PM மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு “நாம்-200” நிகழ்ச்சி கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. https://www.virakesari.lk/article/168355
-
- 28 replies
- 2.3k views
- 1 follower
-
-
வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை தடுக்கவே சிங்கள பேரினவாதம் முயல்கிறது: வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை விரும்பாத சிங்கள பேரினவாதம், தமிழர்கள் இணைந்து மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்குமுறை மூலம் அடக்க நினைப்பதாக பொத்துவில் பொலிகண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் நிலங்கள் சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. மாணவர்கள் மீதான தாக்க…
-
- 0 replies
- 158 views
-
-
அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பொரலுகந்த ரஜமஹா விகாரைப்பகுதியில் பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்களினால் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் ஆரம்பத்தில் புத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநர் செந்தில்…
-
- 7 replies
- 708 views
- 1 follower
-
-
ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது : வரதராஜப் பெருமாள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தியாவுடனான தங்கள் ஈடுபாட்டை வலுப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், இந்த விடயத்தில் தமிழ் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 1983-87 காலப்பகுதியில் தமிழ் கட்சிகளும் அதன் தலைவர்களும் புதுடில்லி மற்றும் தமிழ்நாட்டிலுள்ள இந்தியத் தலைவர்களுடன் அடிக்கடி தொடர்பு இருந்ததை …
-
- 0 replies
- 464 views
-
-
ஜனாதிபதி ரணில் மீதான நம்பிக்கை வீழ்ச்சி: கருத்துக் கணிப்பில் அதிர்ச்சித் தகவல்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10 வீதத்திற்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. தேசத்தின் மனநிலை எனும் தொனிப்பொருளில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு அறிக்கையின் படி” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அங்கீகாரம் ஜூன் மாதத்தில் 21வீதமாக இருந்த நிலையில் அது நவம்பர் மாதத்தில் 9 வீதமாக குறைவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. அதே போன்று கடந்த நான்கு மாதங்களில் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள திருப்தி என்ற கா…
-
- 0 replies
- 129 views
-
-
Published By: DIGITAL DESK 3 06 NOV, 2023 | 09:39 AM பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஒரு ஊழல் பேர் வழியாக காட்ட முனைந்தால் அது பிழை.சம்பந்தன் அவர்கள் தனது முதுமை காரணமாக பதவி விலக விரும்பினால் அவர் விலக முடியும். அது அவருடைய முடிவு என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் இலங்கையில் இடம் பெறும் ஊழல் …
-
- 1 reply
- 322 views
- 1 follower
-
-
06 NOV, 2023 | 05:22 PM புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் யாழ்.நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் நிறைவடையும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வாகனத் தரிப்பிடம், நவீன அலுவலகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இது அமைக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக 600 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இது முழுக்க முழுக்க திறைசேரியில் இருந்து நிதியளிக்கப்பட்ட திட்டமாகும். மொத்த மதிப்பிடப்பட்ட தொகை 2350 மில்லியன் ரூபா ஆகும். யாழ்ப்பாண நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் 2022 நவம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
05 NOV, 2023 | 09:14 AM தையிட்டி சட்டவிரோத விகாரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நாளை திங்கட்கிழமை (06) நடைபெறவுள்ள விசேட நிகழ்வுகளை முன்னிட்டு, மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு சட்டத்தரணி சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/168527
-
- 4 replies
- 438 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 05 NOV, 2023 | 09:51 AM ஆர்.ராம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் உட்பட இலங்கை அரசாங்கம் உள்ளக ரீதியில் முன்னெடுக்கின்ற முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு ஒத்துழைப்புக்களை வழங்குவதாக தெரிவித்துள்ளதோடு, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வீரகேசரியிடம் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினருடனான சந்திப்பு குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார மீட்…
-
- 3 replies
- 372 views
- 1 follower
-