ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=4j52PAGoQ8I
-
- 0 replies
- 1.1k views
-
-
தேசியத் தலைவர் அவர்களது பாதையில் ஒன்றிணைந்து விடுதலையை வென்றெடுக்க உறுதியுடன் பயணிப்போம்! ஜெர்மனியில் கூடிய தமிழ்த் தேசியப் பணியாளர்கள் உறுதி! தேசியத் தலைவர் அவர்களது பாதையில், ஒன்றிணைந்த சக்தியாக தமிழீழ விடுதலையை வென்றெடுக்க உறுதியுடன் பயணிப்போம் என ஜெர்மனியின் டுய்ஸ்பேக் நகரில் கூடிய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் உறுதி எடுத்துள்ளார்கள். கடந்த ஜனவரி 07 வெள்ளிக்கிழமை முதல் 09 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் 15 நாடுகளைச் சேர்ந்த 135 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். இந்த மூன்று நாட்களும் பகுதி பகுதியாகவும், ஒன்றாகவும் மேற்கொண்ட கலந்துரையாடல்களில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய விடுதலைக்கான …
-
- 21 replies
- 2.7k views
-
-
நேதாஜியின் வழியிலேயே பிரபாகரன் விடுதலை போரை தொடங்கினார்... திங்கட்கிழமை, 10 ஜனவரி 2011 17:47 நேதாஜியை படித்துத்தான் பிரபாகரன் விடுதலை போரை தொடங்கினார். 2 லட்சம் தமிழர்கள் ஈழப்போருக்காக உயிர் துறந்திருக்கிறார்கள். வெள்ளைக்காரன் கூட இப்படி குண்டு மழை பொழிந்திருக்க மாட்டான். ஆனால் உலகம் அத்தனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. பிற மொழிக் கலப்பின் காரணமாக தமிழர்களின் வாழ்வில் தமிழ் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது, என்றார் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் நடந்த ஒரு திருமண விழாவில் கவிஞர் காசி ஆனந்தன் கலந்துகொண்டார். மணமக்களை வாழ்த்தி அவர் பேசுகையில், “தமிழ் மொழியை காப்பாற்றும் பொறுப்பு தமிழர்களான நமக்குத்தான…
-
- 1 reply
- 1k views
-
-
http://meenakam.com இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்’மைக்கேல் வசந்தி’ என்ற இயற்பெயருடைய, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவியாவார். 1984 இல் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டதோடு முதலாவது பயிற்சிமுகாமிற் பயிற்சிபெற்று தாயகம் திரும்பினார். புலிகளின் படையணியில் மருத்துவப்போராளியாகவும் தளபதியாகவுமிருந்தார். மன்னாரில் லெப்.கேணல். விக்டர் தலைமையில் நடைபெற்ற பெண்புலிகளின் முதலாவது தாக்குதல் தொடக்கம் இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வரை இவர் பல களங்களைக் கண்டவர்.மணலாற்றுக் காட்டுக்குள் இருந்தகாலத்தில் ஒரு ந…
-
- 7 replies
- 621 views
-
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் சமகால நிலவரங்களை எமது நேசக்கரம் அம்பாறை இணைப்பாளர் முருகபதி அவர்களுடனான உரையாடல். தற்போதைய மக்களின் நிலவரங்களை இவ்வொலிப்பதிவில் கேளுங்கள். இந்த அவலத்தில் இன்னும் இந்து ஆலயங்கள் எதுவிதி பங்களிப்பையும் வளங்கவில்லை. என்பது வேதனை தரும் விடயமாகவுள்ளது.
-
- 2 replies
- 947 views
-
-
கடந்த 4 நாட்களில் குடாநாட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களின் 'ஸ்கோர்' விபரம் 2011-01-10 21:58:04 கடந்த 4 நாட்களில் குடாநாட்டில் 53 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இக் கொள்ளைச் சம்பவங்களில் கொள்ளையடிக்கபட்ட மொத்தப் பெறுமதி 30 இலட்சம் ரூபாவைத் தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வீடு புகுந்து அச்சுறுத்தித் திருடுதல், வழிப்போக்குத் திருட்டுக்கள், மற்றும் அறியா வண்ணம் திருடுதல், வாகனத் திருட்டு, மற்றும் கால்நடைத் திருட்டு என பல்வேறு வகையான திருட்டுக்கள் இதில் உள்ளடங்கியுள்ளது. newjaffna.com
-
- 1 reply
- 1.2k views
-
-
டொரொன்டோ வாழ் தமிழ் உறவுகளே! திங்கள் காலை 10:00 மணிக்கு(10/01/2011) ஆரம்பமாகும் கவனயீர்ப்புக்கு வருகை தாருங்கள். கொலை வெறியர்களினதும் காமுகப்பிரியர்களினதும் பிடியில் சிக்கி தவிக்கும் எமது தாய் தந்தையர்களையும் சகோதர சகோதரிகளையும் காப்பாற்றுமுகமாகவும் திறந்தவெளி சிறைச்சாலையாகத்திகழும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் நடக்கும் கொடூரங்களை வெளி உலகத்திற்கு தெரியபடுத்தவும் நடக்கும் இன் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தமிழர் சார்பில் தமிழரை அழைக்கிறார்கள். இடம்:40,St Clair Avu(சிறிலங்கா துணை தூதரக முன்றல்) டொரன்டோ யார் செய்கிறார்கள் என்பது முக்கியமில்லை! எதற்காக செய்கிறார்கள் என்பது தான் முக்கியம். "அடம்பன் கொடியும் திரண்டால்தான் மிடுக்கு" ORIGINAL VERSON:- தம…
-
- 2 replies
- 1.6k views
-
-
மீண்டும் அரசியலுக்கு வரும் நோக்கமில்லை; எனது பிள்ளைகளும் வரமாட்டார்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-11 08:26:51| யாழ்ப்பாணம்] மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற் கான எண்ணம் தன்னிடமில்லை எனவும் தற்போது பிரிட்டனில் வசிக்கும் தனது மகனோ மகளோ அரசியலுக்கு வரமாட்டார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறினார். கொழும்பு ஊடகமொன்றுக்கு நேற்று முன்தினம் வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நேற்றுமுன்தினம் இவ்வாறு கூறினார். நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் வகிப்பதற்கு அரசியலமைப்பில் இருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் மீண்டும் ஜனாதிபதி த…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஓநாய்களும் ஆடுகளும் கூட்டணி வைக்க முடியாது. பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாக பெரிய எடுப்பில் பத்துத் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து "தமிழ்க் கட்சிகளின் அரங்கு" என்ற அலங்காரப் பெயரோடு தொடக்கப்பட்ட கூட்டணி அற்ப ஆயுளில் உயிரை விட்டுள்ளது. ஆட்சித்தலைவர் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு கட்டுக்காசை இழந்த அண்ணர் சிவாஜிலிங்கம் அவர்கள்தான் இந்த அரங்கு மேடையேற உழைத்தவர். அவருக்கு போக்கிடம் இல்லாததால் ஒரு கடிதத் தலைப்புக் கட்சி ஒன்றைப் பதிவு செய்து அரசியல் வியாபாரம் செய்து வருகிறார். அந்தக் கட்சிக்குப் பெயர் தமிழ்த் தேசிய விடுலைக் கூட்டமைப்பு. சிவாஜிலிங்கம் செயலாளர் நாயகம். தலைவர் சிறீகாந்தா. ஆனால் சிறீகாந்தாவின் சத்தத்தைக் காணோம். எங்கேயாவது கு…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு பயிற்சி வழங்கத் தயார் – பாகிஸ்தான்: 11 ஜனவரி 2011 இலங்கைக் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கும் புலனாய்வுப் பயிற்சிகளை வழங்கத் தயார் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. தற்போது பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள சபாநாயகர் சமால் ராஜபக்ஷ தலைமையிலான பாராளுமன்ற குழுவினரை சந்தித்து உரையாடிய போது பாகிஸ்தானிய ஜனாதிபதி ஆசீப் அல் சர்தாரி தெரிவித்துள்ளார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீயும் சபாநாயகருடன் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இரு நா…
-
- 2 replies
- 492 views
-
-
மன்னார், நானாட்டான் பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட அச்சகுளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 500 துண்டு காணியில் இடம் பெறவிருந்த முஸ்லிம் மக்களின் குடியேற்றம் அப்பகுதி மக்களின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது.2004ஆம் ஆண்டு நானாட்டான் பிரதேச செயலாளரினால் 500 காணித்துண்டுகள் தமிழ் மக்களுக்கென ஒதுக்கப்பட்டன. காணிக்கச்சேரி நடத்தப்பட்டு உரியவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். இருந்தும் யுத்தம் காரணமாக இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது.இக் காணிகளில் இடம்பெயர்ந்திருந்த 30 குடும்பங்களைக் குடி யேற்றும் முகமாக ஒரு வைபவம்.நடைபெறவிருந்தது. இவ் வைபவத்தில் கலந்துகொள்வதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் மற்றும் அதிகாரிகளும் வைபவம் நடைபெறும் நானாட்டான் மகாவித்தியாலயத்துக்கு வருகை தந்தனர். அப…
-
- 1 reply
- 933 views
-
-
இறந்த உடலிலிருந்து நகைகள் கொள்ளை! இப்படியும் ஒரு ஈனப்பிழைப்பு! [ பிரசுரித்த திகதி : 2011-01-11 07:03:18 AM GMT ] பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 02.01.2011 அன்று இறந்த உடலில் இருந்து இறந்த பெண்ணொருவர் அணிந்திருந்த தாலி மற்றும் தோடு என்பன பிணவறைக்கு பொறுப்பான அதிகாரியால் களவாடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொகவந்தலாவை பிரதேசத்துக்குட்பட்ட தோட்டத்தில் வாழும் 50 வயதுடைய புஸ்வள்ளி என்ற பெண் சுகவீனம் காரணமாக 31.12.2011 அன்று பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதும் பயனின்றி 02.01.2011 மாலை இறந்திருக்கின்றார். குறித்த பெண் இறந்த சந்தர்ப்பத்தில் பெண்ணின் மகள் இருவர் மட்டுமே அவரின் அருகில் இரு…
-
- 2 replies
- 812 views
-
-
திருமலையில் தொடர்மழை! பெருமளவு மக்கள் பாதிப்பு! கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் கோவிலடி, சிப்பித்திடல், முள்ளியடி, கள்ளிமேடு, பத்தினிபுரம், பாலம்போட்டாறு, முள்ளிப்பொத்தானை, 96 வது மைல் கல், கல்மெடியாவ போன்ற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் 2 அடிக்கு மேலாக வெள்ளம் பாய்கின்றது. தம்பலகாமம் கிண்ணியா வீதி, கிண்ணியா வான் அல வீதி என்பன போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளன. கந்தளாய் குளத்தில் 116,000 கன அடி நீர் சேர்ந்துள்ளதால் 10 வான்கதவுகளும் நேற்றுக் காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டன. இதன் காரணத்தால் இப் பகுதிகள் மேலும் வெள்ளத்தால்…
-
- 1 reply
- 1.2k views
-
-
தைப்பொங்கள் தினத்தில் கேரதீவு - சங்குப்பிட்டிப் பாதை ஜனாதிபதியால் திறப்பு ? 2011-01-10 21:43:48 தைப்பொங்கல் விழாவையொட்டி யாழ்ப்பாணம் வரவிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேரதீவு-சங்குப்பிட்டி பாதையையும் திறந்து வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . அத்துடன் அரியாலைப் பகுதியில் இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுவரும் வீடுகளைப் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வார் எனவும் தெரியவருகின்றது. இதே வேளை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் பிரதான வீதியைப் புனரமைப்புச் செய்யும் பணிகள் நேற்று முதல் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சேதமடைந்திருந்த இந்த வீதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
(இவ்விடயத்தை எழுதாமல் விடுவோமா எழுதுவோமா என்ற மனக்குழப்பம் கடைசியில் எழுதச்சொல்லி எழுதியுள்ளேன். நிச்சயம் இவ்விடயம் உங்களையெல்லாம் கோபப்படுத்தும் என்னை இயலுமான வார்த்தைகளால் திட்ட வைக்கும். ஆனாலும் ஒதுங்கி நின்றாலும் ஓயாத தூவானமாகத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.) காலம் 09.01.2011 அதிகாலை 3.40மணி. அக்கா அவசரமாக் கதைக்க வேணும் ஒருக்கா எடுங்கக்கா….! சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தான். அக்கா செய்தியள் அறிஞ்சிருப்பியள் தானே…..! எங்கடை ஊரே தண்ணியில மூழ்கீட்டுது…வளவெல்லாம் தண்ணிதான் நிண்டது…வீட்டுக்கை வராதெண்டுதான் நம்பினமக்கா….ராத்திரி நாங்கள் சுத்தி எழுப்பின மண்சுவர் தண்ணீல கரைஞ்சு தகரங்கள் தடியள் எங்களுக்கு மேலை விழுந்து ஒண்டுமில்லையக்கா….. குழந்தைக்குப்…
-
- 4 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=Bai7qaS2Kwc&feature=player_embedded
-
- 0 replies
- 877 views
-
-
குமுதினி படகு விரைவில் சேவையில் ஈடுபடும் 2011-01-11 02:25:00 எட்டுக்கோடி ரூபா செலவில் திருத்தி அமைக்கப்பட்ட குமுதினி பயணிகள் படகு விரைவில் குறிகட்டுவான் நெடுந்தீவு கடற்பயணத்திற்கு ஈடுபடுத்தப்படவிருப்பதாக யாழ். மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இப்படகு அடுத்தவாரம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது. இப்படகு பழுதடைந்தமையால் கடந்த இரண்டு மாத காலமாக நெடுந்தீவு படகுச்சேவை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது குறிகட்டுவான் நெடுந்தீவு கடல்பயணத்துக்கு சாதாரண வள்ளங்கள் மூலமே சேவை நடைபெற்று வருகின்றது. மீள நிர்மாணிக்கப்பட்டுள்ள பயணிகள் படகு 300 பேர் பயணம் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. newjaffna.com
-
- 0 replies
- 667 views
-
-
வீட்டில் காலை 8.30 மணியளவில் தனித்திருந்த குடும்பப்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 25 பவுண் நகைகளைச் சூறையாடிச்சென்றுள்ளனர் கொள்ளையர்.இந்தச் சம்பவம் சுழிபுரம் பத்திரகாளி கோயிலடிப்பகுதியில் நேற்றுக் காலை இடம் பெற்றுள்ளது. இந்தச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: கணவர் வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்பட்ட பின்னர் குளித்து விட்டுச் சுவாமியறையில் கும்பிட்டுக்கொண்டிருந்தபோது மூன்று இளைஞர்கள் கத்தியுடன் வந்து கழுத்தில் அழுத்தி வீட்டில் உள்ள நகைகளைத் தரும்படியும் மிரட்டியுள்ளார்.அப்போது அந்தப்பெண் வீட்டில் இருந்த "கவரிங்' நகைகளை அள்ளிக்கொடுத்தார்."எங்களுக்குக் கவரிங்' நகை ஒறிஜினல் நகை எதுவென்று தெரியும். மரியாதையாக நகையெல்லாத்தையும் எடுத்துத்தாடி, இல்லையென்றால் உ…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்த நீலாவணன் நினைவு நாள் இன்று கவிஞர் நீலாவணனின் வாழ்க்கைக் குறிப்புகள் கவிஞர் நீலாவணன் 31- 06- 1931ல் பெரிய நீலாவணையில் பிறந்தார். சித்தாயுள் வேத வைத்தியர் திரு. கேசகப்பிள்ளை, திருமதி. கே. தங்கம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வன் இவர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல வருடங்கள் நற்சேவை புரிந்த இவர், தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே ‘நீலாவணன்’ என்னும் புனைபெயரை வரித்துக் கொண்டு கால்நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக எழுதி வந்தார். இவர் இயற்கை எய்தும் வரை முழுமூச்சோடு ஆக்க இலக்கியத்துக்கு – குறிப்பாக ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவர் 1948ல் இருந்து எழுதத் தொடங்கினார். சிறுகதை மூலம் எழுத்துலக…
-
- 2 replies
- 677 views
-
-
சிறிலங்காத் தேயிலையாக மாறும் இலங்கைத் தேயிலை: 11 ஜனவரி 2011 பெயரில் இருக்கிறது மலையகத்தவரது வாழ்வு! ஜிரிஎன்னிற்காக சிவச்செல்வன் ரமணிதரன் வடக்கு கிழக்கிலும் சிங்களத்தில் தான் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு யாழ்ப்பாணத்தில் கல்வி அதிகாரி ஒருவரைப் பலி கொண்டிருக்கிறது. இப்போது அரசாங்கத்தின் அந்த நிலைப்பாட்டினை யாழ்ப்பாணத்தில் வலியுறுத்தியவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தான் என்று குட்டைப் போட்டு உடைத்திருக்கிறார் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர். தற்போது அரசாங்கம் அனைத்து உள்ராட்சி சபைகளையும் கலைத்திருக்கிறது தேர்தலை நடாத்துவதற்காக. வழமை போல தேர்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படும் சுற்று நிருபம் வடக்கு கிழக்கிற்கு இம்முறை சிங்களத்தில் தா…
-
- 0 replies
- 859 views
-
-
திருக்கோவில் விநாயகபுரம் கிராம வீதி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றிரவு 9 மணியளவில் 5 லட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. திடீரென முகமூடியணிந்து துப்பாக்கியுடன் வீட்டினுள் நுழைந்த நால்வர் தூப்பாக்கியை காட்டி வீட்டில் உள்ளவர்களை மிரட்டி வீட்டிலிருந்த 5 லட்சம் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக திருக்கோவில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கபெற்று விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நேற்றிரவு திருக்கோவில் தபால் நிலையத்தினை உடைத்து களவாட முயன்ற கொள்ளையர்கள் சிலர் பொதுமக்களை கண்டதும் தப்பியோடியுள்ளதாகவும் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Add new comment Eelanat…
-
- 0 replies
- 777 views
-
-
இலங்கையில் இருந்து தமிழர்களை அழைத்துச் செல்லும் வர்த்தகம் சர்வதேச ரீதியான அச்சுறுத்தல் எனவும் சர்வதேச குற்றங்கள் முதல், சட்டவிரோத ஆயுதக் கடத்தல் வரை விரிவடையலாம் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சட்டவிரோதக் குடியேற்றங்கள் காரணமாகப் பாதிப்புக்குள்ளான நாடுகளின் ராஜதந்திர பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சின்போதே அமைச்சர் பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சட்டவிரோத நடவடிக்கையைத் தடுக்க விரிவான நோக்கங்களும், ஒத்துழைப்புகளும் ஏற்படவேண்டும். ஒரு நாட்டில் இருந்து இன்னோர் நாட்டுக்குச் செல்லும் சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தடுக்கவேண்டும். விடுதலைப் புலிகள் இதற்குச் சிறந்ததொரு உதாரணம் எனவும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அழைத்துச் செல்லும் வர்த்தகம்…
-
- 0 replies
- 579 views
-
-
தமிழீழ மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடும் போராளி சீமான் மீது இரண்டு முறை தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம் தவறாக பயன் படுத்தப்பட்டது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், ம.தி.மு.க. அலுவலகத்திற்கு இன்று காலை 10.55 மணிக்கு சென்று சுமார் 1 1/2 மணி நேரம் வைகோவை சந்தித்து கலந்துரயாடினார். இதன் பின்னர் நிரூபர்களுக்கு பேட்டியளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிரூபர்களிடம் மேலும் வைகோ கூறியதாவது:- சீமான் பேசிய அதே பேச்சை நான் தமிழ்நாடு முழுவதும் கூட்டங்களில் பேசினேன். அவர் பேச்சில் எந்த தவறும் இல்லை. வேலூர் சிறையில் …
-
- 0 replies
- 774 views
-
-
கிழக்கு மாகாணம் எங்கும் பெய்துவரும் அடை மழை காரணமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் எந்தவித உதவிகளும் இன்றி, அவலப்படுகின்றார்கள். தொடர்ந்து 7 நாட்களாகப் பெய்து வரும் இந்த மக்கள் மரங்களிலும், உயர் திடல்களிலும் பாரிய அவலங்கங்களில் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். வழக்கம் போலவே, பாதிக்கப்பட்ட சிறிய தொகையான சிங்கள மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அவசர உதவிகளை வழங்கி வருகின்றது. இஸ்லாமிய மக்களுக்கு இல்லாமிய அமைப்புக்கள் உதவி வருகின்றன. தமிழ் மக்கள் மட்டும் அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் கண்ணீருடன் காத்திருக்கின்றார்கள் என ஜெருசலேம் கிறிஸ்தவ சபையின் போதகர் ஜொனத்தன் தெரிவித்துள்ளார். மட்டகிளப்பு மாவட்டத்தில் 112,039 குடுபங்களும் அம்பாறை மாவட்டத்தில் 80,4…
-
- 1 reply
- 1.1k views
-
-
இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அரச தரப்பில் அமைச்சர்களான ரட்ணசிறி விக்ரமநாயக்க, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் ஜீ.எல்.பீரீஸ் ஆகியோரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதுபோன்ற சந்திப்புக்களை தொடர்ந்து நடத்துவதற்கு இதன் போது இணக்கம் காணப்பட்டது எனக் குறிப்பிட்ட அவர், இது…
-
- 1 reply
- 1.1k views
-