ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 14, 2010 இந்தியாவின் மேலதிக அமர்வு நீதிமன்றத்தில் இந்த வாரம் முன்பிணை மனுவை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். சகல ஆவணங்களையும் இது தொடர்பாக தயார்படுத்தி வைத்திருப்பதாகவும் செவ்வாய் அல்லது புதன்கிழமை சென்னையிலுள்ள தனது வழக்கறிஞர் ஊடாக விண்ணப்பிக்கவிருப்பதாகவும் அமைச்சர் தேவானந்தா ஆங்கில ஊடகமொன்றின் இணையத்தளத்துக்கு தெரிவித்திருக்கிறார் ஈழ நாதம்
-
- 2 replies
- 487 views
-
-
தீவிரவாதத்துக்கான ஆதரவை இங்கிலாந்து அரசு இல்லாதொழிக்க வேண்டும்: ஜனசெத்த பெரமுன _ இங்கிலாந்து அரசாங்கம் தீவிரவாதத்துக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தி தீவிரவாத்தை ஒழிக்க வேண்டும் என ஜனசெத பெரமுன தெரிவித்துள்ளது. பிரித்தானியாவுக்கு எதிராக இன்று காலை 10 மணியளவில் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஜனசெத பெரமுனவின் தலைவர் சோமனந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாட்டில் சமாதானம் நிலவுவதோடு, எமக்கு தேவையானவையும் உள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீவிரவாதத்தை ஒழித்தது போன்று நாட்டில் தற்போது உள்ள பொருளாதார பிரச்சினையும் தீர்த்து நாட்டில் சிறப்ப…
-
- 2 replies
- 553 views
-
-
கூட்டமைப்பு-தமிழ்க்கட்சி அரங்கம் அரசியல் தீர்வுக்காக ஒன்றிணைவு - நேற்றைய சந்திப்பில் இணக்கம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-12 09:36:20| யாழ்ப்பாணம்] arankam_01தமிழ் மக்களுக்கான காத்திரமான அரசியல் தீர்வைப் பெற் றுக்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் கட்சிகளின் அரங்கமும் இணைந்து செயற்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துக்குமிடையில் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின்போதே இத் தீர்மானம் எடுக் கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தின. இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் மக்களின் அனை த்துக் கட்சிகளும் ஒன்று சே…
-
- 7 replies
- 776 views
-
-
இலங்கையின் வட மாகாணத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச செஞ்சிலுவை சங்க குழுவின் அலுவலகத்தை மூட வேண்டும் என இலங்கை அரசு விடுத்துள்ள அறிவுறுத்தல் குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற பொதுச் சபையில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளன. எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் இக்கேள்விகளுக்கு அந்நாட்டு வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார உதவி அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் பதில்கள் வழங்கினார். பிரித்தானிய அரசு இது குறித்து அறிந்து வைத்துள்ளது என்றும் செஞ்சிலுவைச் சங்கக் இதுப ற்றி ஆராய்ந்து மன்னார் மாவட்ட அலுவலகத்தை மூடி விட்டது என்றும் கூறினார். Siobhain McDonagh என்கிற தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பும்போது தமிழ் மக்களுக்கு அதிக உ…
-
- 4 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இலங்கை அரசு நாட்டை மாற்றி அமைக்க வேண்டும் என்று அமெரிக்கா இன்று வலியுறுத்தி உள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் P J Crowley இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் கொடுத்தபோது இவ்வாறு தெரிவித்தார். ” அந்நாட்டை மாற்றி அமைக்க இது மிகவும் சிறந்த சந்தர்ப்பம். முக்கியமான கால கட்டம். இன்றைய யுத்தம் அற்ற அமைதிச் சூழலை அந்நாட்டு அரசு உரிய முறையில் பயன்படுத்தும் என்று நம்புகின்றோம். மீண்டும் மீண்டும் கூறி வருகின்றோம்.” இவ்வாறு இவர் தெரிவித்தார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15778:2010-12-16-06-…
-
- 4 replies
- 453 views
-
-
திங்கட்கிழமை, 13, டிசம்பர் 2010 (17:53 IST) ராஜபக்சே கோழை: இன்னொரு பிரபாகரன் உருவாவது நிச்சயம்: பொன்சேகா இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செயல்பாடுகள் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகும் வகையில் அமைந்துள்ளது என, அந்நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அந்நாட்டு மக்களுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சரத் பொன்சேகா கூறியுள்ளதாவது, தனக்கு எதிரான அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத் துறையினரை அடக்கி ஒடுக்கும் ராஜபக்சேவின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நிலைக்காது. என்னையும், என் குடும்பத்தையும் முன்னிறுத்தியதான அவரது அரசியல் செயற்பாடுகள் இலங்கை மக்க…
-
- 18 replies
- 1.4k views
-
-
சாலிண்ட தசநாயக்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான தமிழுணர்வாளர்கள் விடுதலை பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவந்த சிறீலங்கா அமைச்சர் சலிண்டா தசநாயக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட கர்நாடக தமிழர்கள் 39 பேர் ஐந்து நாள் சிறைவாசத்தின் பின்னர் நேற்றிரவு சிறையிலிருந்து விடுதலை ஆனார்கள். இப்போராட்டத்தில் 44 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பெண்கள் இருவர் மற்றும் குழந்தைகள் மூவர் கைதான அன்றே விடுதலை செய்யப்பட்டனர். வயது மூப்பின் காரணமாக சொந்தப்பிணையில் இரண்டு நாள் முன்னர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். மீதமிருந்த 38 பேரும் நேற்றிரவு விடுதலை ஆனார்கள் என்று மீனகம் செய்தியாளர் தெரிவித்தார். இப்போராட்ட…
-
- 1 reply
- 611 views
-
-
யாழ். சங்கானையில் பூசகர்கள் மூவர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் அவர்களுக்கு ஆயுதம் வழங்கிய இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். போதைக்கு அடிமையான இராணுவ சிப்பாய் ஒருவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கியுள்ளதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மானிப்பாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். இராணுவச் சிப்பாய்க்கு உதவிசெய்ததாகக் கூறப்படும் மற்றுமொரு இராணுவ வீரரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=291…
-
- 1 reply
- 587 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களிலுள்ள முகாம்களிலும் உறவினர்களது வீடுகளிலும் வசிப்போரை அந்த இடங்களிலேயே வாக்காளர்களாகப் பதிவு செய்யுமாறு திருமலை மாவட்ட அதிகாரிகளைத் தேர்தல் திணைக்களம் பணித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இதன் காரணமாக அந்த மக்கள் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் பாதுகாப்பு உயர் வலயம் என்ற போர்வையில் சம்பூர், கடற்கரைச் சேனை,கூனித்தீவு, தென்னை மரவாடி, சூரக்குடா, இலக்கந்த, நவரத்தினபுரம் போன்ற இடங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வெளியேற்றப…
-
- 1 reply
- 663 views
-
-
புனர்வாழ்வுக்கழக முக்கியஸ்தர்கள் ஐந்து பேருக்கு கொழும்பு நீதிமன்றம் இன்று பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கினார்கள் என்ற பெயரில் இலங்கை சட்ட மா அதிபரினாலும் இலங்கை மத்திய வங்கியினாலும் மேற்கொள்ளப்பட்ட வழக்கில் புனர்வாழ்வுக்கழக முக்கியஸ்தர்கள் ஆயராகவில்லை . ஆகவே இவர்களை கைது செய்யுமாறு இன்று நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. இந்த பகிரங்க பிடியாணை ஏற்கனவே புனர்வாழ்வுக்கழக நிறைவேற்றுப்பணிப்பாளர் கே.பி. ரெஜி மற்றும் நிதிக்கு பொறுப்பாக இருந்தவரும் கருணா குழுவினரால் கடத்தி கொல்லப்பட்டவருமான கணேசலிங்கம் ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கே.பி. ரெஜி அவர்களுக்கு ஏற்கனவே இலங்கை அரசு இன்ரபோல் ஊடாக பிடியாணை பிறப்பித்துள்ளது க…
-
- 1 reply
- 674 views
-
-
யாழ்ப்பாணத்தில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். யாழ். மானிப்பாய் வீதியின் ஆறுகால் மடச் சந்தியிலுள்ள வீட்டிற்குள் நேற்று நள்ளிரவுவேளையில் புகுந்த பத்திற்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய நகைகளையும் சைக்கிளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு சிறுமியொருவரை மாத்திரம் அழைத்து தங்கச்சாமான்கள் எங்கே இருக்கின்றன எனத் திருடர்கள் கேட்டுள்ளனர். பின்னர் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கடும் மழை பெய்து கொண்டிருந்ததால் வீட்டாரின் கூச்சல் வெளியில் கேட்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேபோன்று, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் க…
-
- 1 reply
- 882 views
-
-
Dec 16, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலை மேலதிக வேலைகளுக்காக சிற்பிக்கூடத்தில் பிரான்சில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலை சில மேலதிக வேலைகளை பூர்த்திசெய்வதற்காக சிற்பிக்கூடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைதொடர்பான வேலைகள் முழுமைப்படுத்தப்பட்டு, எதிர்வரும் சனவரி மாதம் முதல் வாரத்தில் மீள நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வேலை தொடர்பான செய்திகள் சிலை நிறுவும் முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புலம்பெயர்மக்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கும் முயற்சியாகவும், மகிந்தரின் இலண்டன் பயணத்தின் தோல்விகளை மறைப்பதற்காகவும் இது தொடர்பா…
-
- 1 reply
- 560 views
-
-
தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸில் எழுப்பப்பட்ட சிலை அகற்றம்! .தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு புலம்பெயர் தமிழர்களால் பிரான்ஸின் La Courneuve நகரத்தில் கடந்த மாதம் எழுப்பப்பட்ட சிலை அகற்றப்பட்டு உள்ளது. இலங்கை வெளிநாட்டு அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் பேச்சாளர் பந்துல ஜயசேகர ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார். http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15771:2010-12-16-05-11-33&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 12 replies
- 1.1k views
-
-
இலங்கையில் இறுதிப்போரின் போது இந்திய, சீன, இலங்கை நலன்களுக்கு ஏற்ப செயற்பட்டமையினால் அங்கு பல ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடியாமல் போனது. இந்த வேலையினை சரிவரச்செய்ய முடியாத நம்பியாரை இப்போ பர்மாவிற்கு பான் கி மூன் நியமித்துள்ளார். ஈழத்தமிழர்க்கு துரோகம் விளைவித்தது போலவே பர்மாவிலும் சிறுபான்மையினர்க்கும் சூகியின் ஆதரவாளர்களுக்கும் எதிராக நம்பியார் செயற்படுகின்றார் என மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த சூழலில் பர்மாவிற்கான பான்கிமூனின் தூதுவர் பதவியில் இருந்து நம்பியாரை அகற்றுமாரு பிரிட்டன் கோரியுள்ளது. இவர் ஏற்கனவே இலங்கைவிடயத்தில் சரியாக செயற்படவில்லை என்வும் பிரிட்டன் சுட்டிக்காட்டியுள்ளது. மேலதிக தகவல்கள்.. http://www.eelanatham.info…
-
- 8 replies
- 1.6k views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், ஆகியோர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய உளவுத்துறையின் தகவலை, தமிழகக் காவல்துறை உயரதிகாரி, டி.ஜி.பி. லத்திகா சரண் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனோ அல்லது பொட்டம்மானோ தமிழகத்திலோ அல்லது இந்தியாவின் பிறபகுதியிலோ இருப்பதாக இந்திய உளவுத்துறை அறிவித்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் விடுதலைப்புலிகள் குறித்து அவ்வாறான செய்திக…
-
- 2 replies
- 1.4k views
-
-
புலிகளுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்படும் - கெஹலிய 16 டிசம்பர் 2010 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடுவது தொடர்பில் இந்தியா உதவிகளை கோரினால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலளார் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாக்குதல் அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென அண்மையில் இந்திய ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதலளிக்கும் வகையில்…
-
- 1 reply
- 835 views
-
-
அலைகற்றை ஊழல் விவகாரத்தில் தன்னையும் தன்குடும்பத்தையும் ஊடகங்கள் கடித்துக் குதறுவதில் இருந்து தப்பிக்க நல்லவே திட்டம் போட்டிருக்கிறார் கருணாநிதி. தமிழகம் முழுவதும் சி.பி.ஐ 27 இடங்களில் சோதனையிட்டது. இதில் முக்கியமாக கனிமொழியின் தாயும் கருணாநிதியின் துணைவியுமான ராசாத்தியம்மாளின் தணிக்கையாளர் வீட்டில் நடந்த சோதனை தான் உச்சம். இதை ஊடகங்கள் ஊதிபெரிதுபடுத்திவிடும் என்ற பயம் திமுக தலைமையை கிடுகிடுக்க வைத்துவிட்டது. அதை எதிர்கொள்ள எடுத்த ஆயுதம் தான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான அறிக்கையின் பின்னனி. ராசாத்தியம்மாள் வீடு வேறு கருணாநிதி வீடு வேறு அல்ல. அப்படியிருக்கும்போது கருணாநிதியின் தணிக்கையாளர் வீட்டில்தான் இந்த சோதனை நடந்துள்ளது. இந்த கேவலத்தை எப்படி சமாளிப…
-
- 3 replies
- 1.8k views
-
-
நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஜனவரியில் சென்னைக்கு வருகை தரும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், தமிழக முதல்வர் கருணாநிதியையும் விடுதலைப்புலிகள் கொலை செய்ய திட்டமிட்டி ருப்பதாக மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழக டி.ஜி.பி. லத்திகாசரண் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இன்றைய நிலையில் இலங்கையின் சூழலும் இந்தி யாவின் சூழலும் பதட்டம் நிறைந்ததாக இருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டு விட்டது என்று அறிவித்தவர்கள் இன்று தங்கள் பிழைப்புக்காக அவர்களை வைத்து பூச்சாண்டி காட்டுகின்றனர். விடுதலைப்புலிகளால் இவர்களின் உயிருக்கு ஆபத்து அல்ல. இவர்களால் தான் தமிழ் இனத்திற்கு ஆபத்து. இவ…
-
- 0 replies
- 764 views
-
-
கனடாவில் இருந்து இருபது வருடங்களுக்கு பின் நாடு திரும்பிய தமிழர் சடலமாக மீட்பு! கனடாவில் இருந்து இருபது வருடங்களுக்கு பின் நாடு திரும்பி வந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் கொழும்பில் கொட்டாஞ்சேனையில் தங்கி இருந்த வீட்டின் இரண்டாவது மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். அ. சுரேஸ்குமார் (வயது-33) என்பவரே உயிர் இறந்தவர் ஆவார். இவர் ஐந்து நாட்களுக்கு முன்புதான் வந்து இருந்தார். இவரது மனைவி இந்தியாவில் உள்ளார். இது படுகொலையா? தற்கொலையா? என்கிற புலனாய்வு விசாரணைகளை கொட்டாஞ்சேனைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் முடுக்கி விட்டு உள்ளார்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15804:2010-12-16-18-02-12&c…
-
- 0 replies
- 1.6k views
-
-
தேசிய கீதம் தமிழில் இனி வரும் நாட்களில் இசைக்கப்படுமா? என்று கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடக அமைச்சரும், அரசின் பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெலவிடம் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டன. ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விகளும் அமைச்சரால் சொல்லப்பட்ட பதில்களும் வருமாறு " கேள்வி:- இனி வரும் காலங்களில் தேசிய கீதத்தை தமிழில் இசைக்கமுடியுமா? பதில்:- அரசமைப்பில் எப்படி உள்ளதோ அப்படியே அமுல்படுத்தப்படும். அதை விடுத்து தேசிய கீதத்தை பாடிக்கொண்டு நடனம் ஆட முடியாது. கேள்வி:- சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறி உள்ளாரே? பதில்:- அது சரி. அவரால் சிங்களத்தில் மட்டுமே இசைக்க முடியும். அதனால் அவர் அவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நேரடியாகச் சவால் விடும் வகையில் இன்று கொழும்பில் முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க நடந்து கொண்டுள்ளதாக எமது கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதாரணமாக ஜனாதிபதியைத் தவிர வேறு எவரும் மீறத் துணியாத கோத்தபாய ராஜபக்ஷவின் வாகனத் தொடரணிப் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் மீறிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை பாதுகாப்புச் செயலாளரின் பயணத்துக்காக கொழும்பு புல்லர்ஸ் பாதை மூடப்பட்டிருந்த வேளையில் அவ்வழியாக முன்னாள் பிரதமரும், தற்போதைய சிரேஷ்ட அமைச்சருமான ரட்னசிறி விக்கிரமநாயக்க வந்துள்ளார். பாதை மூடப்பட்டிருப்பதைக் கண்டு அவரே இறங்கி வந்து இராணுவத்தினரிடம் அது பற்றி விசாரித்துள்ளார். “சேர்.. செக்ரட…
-
- 0 replies
- 705 views
-
-
நேர்மையான உழைப்பில் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த நாள் பூராக 500 ரூபாக்கு கஸ்ரப்படும் உறவுகள் இருக்கும் பூமியில் கொலை செய்து கொள்ளையடிக்கும் கூட்டத்தையும் பாடசாலைகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு பாடசாலை அபிவிருத்திக்கு குழு, பழைய மாணவர் சங்கம் என லஞ்சம் வாங்கும் ----- கட்டுப்படுத்துவதற்கு புது அவதாரங்களை எதிர்பார்க்கிறார்கள் யாழ் மக்கள் thx http://www.newjaffna.com/index.php
-
- 1 reply
- 622 views
-
-
'இத்தனை ஆண்டுகளாக சிறையில் வாடுவதைவிட சாவது மேல்'! அரசியற் கைதிகள் குறித்து BBC கட்டுரை 'நாங்கள் குறித்த காலத்திற்கொருமுறை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறைக்கு திருப்பியனுப்பப்படும் நிலை நீடிக்கிறது. இத்தனை ஆண்டுகளாக சிறையில் வாடுவதைவிட சாவது மேல்' என தமிழ் அரசியற் கைதியொருவர் தெரிவித்ததாக, BBC இணையத்தளம் இது தொடர்பான தனது அண்மைய கட்டுரையில் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில், பல ஆண்டுகளாக சட்ட நடவடிக்கைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மீது கருணை காட்டுமாறும் சட்ட நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டுள்ளனர். பல ஆண்டுகளாக பயங்கரவா…
-
- 0 replies
- 833 views
-
-
தேவையற்ற அதிகாரங்களைத் தமிழ்க்கட்சிகள் கோருகின்றன - அமைச்சர் முரளிதரன் சாட்சியம் [ செவ்வாய்க்கிழமை, 14 டிசெம்பர் 2010, 08:43 GMT ] [ கார்வண்ணன் ] மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரம் போன்ற தேவையற்ற அதிகாரங்களை தமிழ்க்கட்சிகள் கோருகின்றன. இது பெரும்பான்மையின மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சர் முரளிதரன் சாட்சியளித்துள்ளார். நேற்று நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தனது சாட்சியத்தில் மேலும் கூறியிருப்பதாவது, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், பெரும்பான்மை சமூகத்தைப் புண்படுத்தாத அரசியல் தீர்வே காணப்பட வேண்டும். தற்போது மாகாணசபைகள் ஊடாகவே தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. …
-
- 0 replies
- 577 views
-
-
புலிகளின் செயற்பாடுகளை விசாரணை செய்யும் நோக்கில் ஐரோப்பிய பிரதிநிதிகள் இலங்கை விஜயம் : 16 டிசம்பர் 2010 தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை விசாரணை செய்யும் நோக்கில் ஐரோப்பிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். 2008ம் ஆண்டு இத்தாலியில் கைது செய்யப்பட்ட 38 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கான முனைப்…
-
- 2 replies
- 521 views
-