Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். பஸ் தரிப்பு நிலையத்தில் வாள் வீச்சு! மூவர் காயம் 2010-12-15 12:02:12 ]யாழ்ப்பாணம் பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று இடம்பெற்ற சண்டை ஒன்றில் மூவர் வாள் வெட்டுக்கு உள்ளாகிசிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். வாகனத்தில் பொதுமக்களை ஏற்றி விடுகின்ற தரகர் ஒருவருக்கும் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவருக்கும் இடையில் மாலை 3.00 மணி அளவில் வாய் தர்க்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் வேறு மூன்று நபர்கள் சென்று தொழிலாளிக்கு அடி கொடுத்து இருக்கின்றனர்.தரகர்தான் இதனை செய்தார் என முடிவு செய்த தொழிலாளி வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து தரகரை வெட்டி இருக்கின்றார். தரகரும் இன்னொரு வாளை எடுத்து தொழிலாளியை வெட்டியுள்ளார். இருவரும் வாள்க…

  2. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வினவியுள்ளார். இலங்கையின் ஊடக பிரதானிகள் புதுடில்லியில் சிவசங்கர் மேனனை சந்தித்த போதே இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா நடுவராக செயற்படப்போவதில்லை எனினும் உதவிகளை வழங்கும். இந்தநிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து உரிய தீர்வை இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இனரீதியானது மட்டுமன்றி, சமய கலாசார ரீதியான உறவுகளும் உள…

  3. இஸ்ரேலுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்த சிறிலங்கா முயற்சி:-இதன் ஒருகட்டமாக அடுத்த மாதம் இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிலங்கா வருகின்றனர். [Wednesday, 2010-12-15 11:40:11] இஸ்ரேலும் சிறிலங்காவும் நெருக்கமான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது சிறிலங்காவுக்கு ஆயுத தளபாட உதவிகளை வழங்கிய இஸ்ரேல் தற்போது விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவ முன்வந்துள்ளது. இதன் ஒருகட்டமாக அடுத்த மாதம் 10ம் திகதி இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் சலோம் சிமோன் தலைமையிலான குழுவொன்று சிறிலங்கா வரவுள்ளது. உலர் வலய விவசாய முயற்சிகள் தொடர்பாக இஸ்ரேலின் அனுபவங்களை சிறிலங்காவுக்கு வழங்குதல…

  4. கவச வாகனங்கள் கொள்வனவு தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை: ஜகத் ஜயசூரிய புதன்கிழமை, 15 டிசம்பர் 2010 12:06 மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது avaஇலங்கை இராணுவத்துக்கு கவச வாகனங்கள் கொள்வனவு செய்வது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறுவதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் கவசப் படை பிரிவின் 55 ஆவது ஆண்டு விழாவின் பூர்த்தியை முன்னிட்டு இராணுவத்தளபதி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தற்போது பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு சமாதானம் நிலவுகின்றது. இவ்வாறான ஒரு சூழலில் மீண்டும் ஒரு பயங்கரவாதம் உருவாக இடம்கொடுக்க மாட்டோம். மேலும் இலங்கை இராணுவத…

  5. விடுதலைப்புலிகளை கடைசி நேரத்தில் தப்பிக்கவைக்க முயற்சி எடுத்தேன்!" " அப்படி இப்படின்னு டுபாக்கூர் வேலை செய்துகொண்டிருந்த ஜெகத் கஸ்பார் அலுவலகத்தில் ரெய்டு...இவர் அலுவலகத்தில் என்ன சிக்குதோ...?சென்னை சங்கமம்,சர்வதேச மாரத்தான்,போன்ற நிகழ்சிகளை கனிமொழியோடு இணைந்து நடத்தி ...தமிழ் மையம் என்ற பெயரில் தன்னை விளம்பரப்படுதுபவர்... http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1012/15/1101215010_1.htm

  6. மனதுக்கு இதமாக இரவு நேரங்களில் மொட்டை மாடியில் விண்மீன்களும், நிலாச்சோறும் ரசித்திருப்பீர்கள். பகலில் 'நீலவான ஓடையிலோ' அல்லது 'வானம் எனக்கு போதிமரமோ' முணுமுணுத்துக் கொண்டு மேகங்களை வெறித்திருப்பீர்கள். இது போன்ற சுகமான விஷயங்களை மறந்து 24 மணி நேரமும் ஆபத்தை எதிர்பார்த்து ஒரு கூட்டம் கொட்டாவி விடக் கூட மறந்து வானத்தைப் பார்த்து கொண்டிருக்கிறது, ஒவ்வொரு நாட்டிலும். அவர்கள் யார்?, பயன்படுத்தும் தொழிநுட்பம் என்ன? அதில் உள்ள சவால்கள் குறித்து ஒரு பார்வை. வான் பாதுகாப்பு என்பது ரேடார் தொழில்நுட்பம் அறிமுகமாகும் வரை வாடகை மிதிவண்டியில் ஊர்சுற்றுவதைப் போல போர் விமானங்களில் பறந்து திரிவது மூலமாகவே நடைபெற்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு விமானத்தாக்குதல்கள் தந்த அனுபவத்…

  7. யாழ் சுப்பிரமணியம் பூங்காவில் எலிபன்ட் குளிர்பாண விற்பனை நிறுவனத்தால் வழங்கப்பட்ட சிறுவர்களுக்கான விளையாட்டுக் கருவிகளை இயங்க வைக்கும் நடவடிக்கை இன்று யாழ் மாநகரசபை ஆணையாளர் மு. சரவணபவ தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகரசபை மேயர் திருமதி.யோகேஸ்வரி பற்குணநாதன் பிரதம விருந்தினராகவும் எலிபன்ட் குளிர்பான இரண்டாவது தலைமை அதிகாரி சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றார்கள். யாழ் மாநகர சபையின் பிரதம எந்திரவியலாளர் வரவேற்புரையை நிகழ்த்தினார். thx http://www.newjaffna.com/

  8. பிலிப்பைன்ஸ் நாட்டின் குஸி விருதைப் பெற்றுக்கொண்ட யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனறல் மகிந்த கத்துறுசிங்க யாழ்ப்பாணத்தவர்களது விருந்துகளால் திக்குமுக்காடிப் போயுள்ளார். முன்னதாக விருதுபெற பிலிப்பைன்ஸ் செல்வதற்கு ஏற்பாடுகளில் அவர் ஈடுபட்டிருந்த வேளையில் அரச அதிகாரி இமெல்டா சுகுமார் தனது விருந்தை கொழும்பில் நட்சத்திர விடுதியில் வழங்கியிருந்தார். யாழ்ப்பாணத்தில் ஏற்பாடாகியிருந்த கூட்டங்கள் மற்றும் பல்வேறு சந்திப்புக்களை அவர் அதற்காக இரத்துச் செய்திருந்தார்.பின்னர் விருது பெற்று திரும்பியுள்ள நிலையில் நேற்று கொழும்பு மன்றக்கல்லூரியில் நடந்த நிகழ்விலும் அவர் பங்கெடுத்திருந்தார். அங்கு நன்றி உரையும் ஆற்றியிருந்தார். தற்போது மீண்டும் கடமைக்குத் திரும்பியிர…

  9. இரண்டு மகன்கள் யுத்தத்தில் இறந்து போனார்கள். ஒரு மகன் தடுப்புமுகாமில் இருக்கிறார். இரண்டரை வருட மணவாழ்வு மரணத்தில் முடிந்து அம்மாவின் மகள் இன்று ஒரு விதவை. அம்மாவுக்கு மிச்சமாய் ஒரு பிள்ளை இவள்தான். அண்ணனையும் தம்பியையும் இழந்து மிஞ்சிய இளைய தம்பி தடுப்பில் இருக்கிறான். குடும்பம் முழுவதும் வறுமையில் வாடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்த நகைகளை விற்றுச் சாப்பிட்டாயிற்று இன்றும் எதுவும் இல்லை. கணவனை இழந்த மருமகளும் பேரக்குழந்தையும் அம்மாவின் உதவியை நம்பியே இருக்கிறாள். எவராவது உதவுவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லாது போனதாய் இருந்த தருணமொன்றில் அம்மாவையும் அம்மாவின் மகளையும் தொடர்பு கொண்டோம். அம்மாவும் மகளும் பகிர்ந்து கொண்ட துயர் தரும் கதைகளை உங்களுக்காய் எடுத்து வரு…

    • 0 replies
    • 811 views
  10. இன்னர்சிட்டி பிரஸ் இரண்டு முக்கிய விடயங்களை சுட்டி காட்டுகிறது 1. சேமிப்பு இடம் போதாமையால் சிலருக்கு மின்னஞ்சல்கள் சென்றடைவதில் சிரமம் ஏற்படுவதாகவும் (bouncing back) இதனால் கால அவகாசத்தை கூட்ட வேண்டும். 2. வெற்றிகரமாக அனுப்பியவர்களுக்கு "உங்கள் மின்னஞ்சலை பெற்று கொண்டோம். ஆனால் நாங்கள் தற்சமயம் ஆபிசில் இல்லை" என்று ஆட்டோமாடிக் மறுமொழி வருகின்றது. நேரம் போதாமையால் நேரடியாக மக்களை சந்திப்பதை தவிர்த்தவர்கள் இரண்டு கிழமை லீவில் போய் விட்டார்களா? தவிர தை மாசத்தில் இவர்கள் திரும்பி வந்து தங்கள் வேலையை செய்து முடிக்க காலம் போதுமா? http://www.innercitypress.com/banex6sri121510.html

  11. தமிழர்களின் விரோதிகளாக தமிழர்களே இருக்கின்றனர் பொதுவில் சிங்களவர்கள் நல்லவர்கள் என்று நாம் கேள்விப்பட்டதுண்டு. தென் பகுதியில், அரச பணியில் ஈடுபட்ட தமிழர்கள், மற்றும் தென்பகுதியில் வர்த்தகம் செய்த தமிழர்கள் இவ்விதம் கூறிக்கொள்வர். சிங்களவர்கள் உதவி செய்வார்கள், மற்றவர்க ளுக்கு மதிப்பளிப்பது அதிகம், இரக்கம் காட்டுவார் கள் என்றெல்லாம் எம்மவர்கள் கூறக் கேட்ட நாம் நடைமுறையில் அதைக் காணவில்லையே என்று நினைப்பதும் உண்டு. ஆனால், இப்போதுதான் நிலைமையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. அதாவது தமிழர்களாகிய நாம் இத்துணை துன்ப துயரங்களுக்கு ஆளாகியதற்கு சிங்களவர்களை விட தமிழர்களே அதீத பங்காற்றினர் என்பது புலப்படுகின்றது. சிங்களவர்கள் தமிழர்களுக்கு ஏதேனும் கொடுப் போம் என்றாலும் அதற்…

    • 0 replies
    • 639 views
  12. இலங்கை இராணுவத்திற்கு செயற்கை தொழில்நுட்பத்துடனான கவச வாகனங்களை கொள்வனவு செய்வது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். கொழும்பு, முகத்துவாரம் ரொக் ஹவுஸில் அமைந்துள்ள இராணுவத்தின் கவச படைப் பிரிவின் 55ஆவது ஆண்டு பூர்த்தி விழா இன்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "சர்வதேச நாடுகளிலிருந்து எவ்வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் இலங்கைக்கும் மீண்டும் பயங்கரவாதம் உருவாகுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்ல என்றும் இராணுவ தளபதி கூறினார். அத்…

    • 0 replies
    • 688 views
  13. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் தற்போது சந்தித்திருப்பது ஒரு பயனற்ற விடயமே. இது எவ்விதத்திலும் பயன்படப் போவதில்லை. இவர்களால் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சிறிதரன் தெரிவித்துள்ளார். வவுனியா முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது:- இந்த இணைவில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் நான் அந்த நிகழ்வுக்குப் போகவில்லை. இலங்கையில் தமிழர்கள் என்ற ஒரு இனம் இருப்பதற்கும் அந்த இனத்தின் பிரச்சினைகள் இன்று சர்வதேச ரீரியில் கொண்டு செல்லப்பட்…

    • 0 replies
    • 483 views
  14. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். . தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஆதிச்ச…

    • 8 replies
    • 2.1k views
  15. வன்னி இறுதிக்கட்டப் போரில் ஈடுபட்ட 1000 படைவீரர்களுக்கு பதக்கம் - அலரிமாளிகையில் வைபவம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-15 07:38:21| யாழ்ப்பாணம்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடை பெற்ற இறுதிக்கட்ட போரில் திறமையாகச் செயற்பட்ட இலங்கை முப்படைகளையும் சேர்ந்த 1000 வீரர்கள் நேற்று அலரிமாளிகை யில் பதக்கம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு யுத்தத்தின்போது காத்தி ரமான முறையில் பங்களிப்பு வழங்கிய படை வீரர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு இவ் வாறு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் டி.எம். ஜயரட்ண,பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்ச, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர…

  16. யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவனின் படைப்பு சர்வதேச தரத்தில் இருந்ததனால் இளம் விஞ்ஞானிகள் தெரிவில் இடம் பிடித்துள்ளார். உலகெங்கும் தற்போது அதிக கவனத்திற் கொள்ள வலியுறுத்தப்படும், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில், இவர் அமைத்திருந்த திட்ட மாதிரி ஒன்று சர்வதேச தரத்தில் அமைந்திருந்தமையினாலே இச்சிறப்பு அவருக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒக்டோபர் மாதம், கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்ட போட்டிக் கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்ட, யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் காலிங்கராசா ஹரிச்சந்திரன், சர்வதேச ரீதியில் கவனிக்கப்படும், இயற்கைச் சூழலுக்கு ஏற்ற முறையில் எதிர்கால வீடொன்றை அமைப்பதற்கான மாதி…

  17. உலகத் தமிழர் போரவையை கலைக்கவேண்டும் என தற்போது கூறும் றொஹான் குணரத்தினா என்பவர் முன்னர் பேராசிரியராக இருக்கவில்லை, ஒரு இரகசிய காவல்த்துறை அதிகாரியாக பணியாற்றியிருந்தார். அவர் என்னை பின்தொடர்ந்ததுடன், வேறு நாடுகளிலும் என்னை சந்தித்திருந்தார். நானும் அவரின் உளவறியும் வளர்ச்சியை கவனித்தே வந்துள்ளேன். தற்போது அவர் தன்னை தானே ஒரு உலகநிபுணர் என தெரிவித்துவருகின்றார். சிறீலங்கா அரசுடன் இணைந்து அவர் பணியாற்றுவதுடன், எம்மீது கடும் ஆத்திரம் கொண்டுள்ளதையும் நான் புரிந்து கொண்டுள்ளேன். உலகத் தமிழர் பேரவை கலைக்கப்படவேண்டும் எனவும், என்னைப்பற்றி பல விடயங்களை தவறாகவும் எழுதியுள்ளார் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் காலாநிதி இம்மானுவேல் அவர்கள் எமக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலி…

  18. ஆனையிறவு கடல் நீரேரியின் தொடு வாய் கடந்த செவ்வாய்க்கிழமை பகல் சுண்டிக் குளம் பகுதியில் தகர்க்கப்பட்டுள்ளது. பெருவெள்ளம் காரணமாகத் திறந்துவிடப் பட்ட இரணைமடுக்குளத்தின் நீரினால் ஆனையிறவுக் கடல் நீரேரியின் கிழக்குப் பகுதி நிறைந்துள்ளது. இதனால் கண்டாவளை, முரசுமோட்டை, பரந்தன், தட்டுவன் கொட்டி, ஊரியான், கோரக்கன்கட்டு, புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களில் பெரு வெள்ளம் ஏறியிருந்தது. இதனையடுத்தே வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆனையிறவுக் கடல்நீரேரியின் தொடுவாய் உடைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது. பெருவெள்ளத்தினால் மக்களுக்கு ஏற்பட விருந்த அனர்த்தத்தையுணர்ந்த கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவுப் பணிப்பாளர் வைரமுத்து, கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்…

  19. திருமணமாகி சில மாதங்களேயான குடும்பஸ்தர் ஒருவர் நேற்று தூக்கிட்டுக் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை 11 மணியிலிருந்து 11.30 மணிக்கு இடைப்பட்ட பகுதியில் தூக்கிட்டு கொண்டுள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்றுக் காலை யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த 30 வயதான ஜேசுதாசன் ஜெயக்குமார் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மரணமானவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது சடலம் 11.47 மணியளவில் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும், பிரேத பரிசோதனைகள் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் வைத்திய சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈழ நாதம்

  20. தன்னை சிறுவயதில் தத்துக்கொடுத்த பெற்றெடுத்த தாயினை தனக்கு இனம்காண தற்போது பெல்ஜியத்தில் வாழும் 23 வயதான இலங்கைப் பெண் ஷானிகா லிபேட்டி உதவி கோரியுள்ளார். தனது தாயார், தான் பிறந்து 6 - 9 மாதங்களுள் தன்னை கொழும்பில் உள்ள அமைப்பபொன்றிடம் வழங்கியதாகவும், அந்த அமைப்பிலிருந்து தன்னை பெல்ஜியம் நாட்டவர் தத்தெடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார் 1987 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி பிறந்த ஷானிகா, தனது பிறப்பு சான்றிதழில் உள்ள தாயாரின் விபரத்தை கொண்டு தனது தாயாரை பற்றிய விபரங்களை பெற்று கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தான் பிறந்த போது தாயார் மிரிகான பகுதியில் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த விபரங்களின்படி அவரது தாயார் நவம்பர் 14 ஆம் திகதி 1968 ஆண்டு பதுளையில்…

  21. திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் 60 துப்பாக்கி ரவைகள் மற்றும் தண்ணீர் தாங்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மூதூர் சாபிநகரை சேர்ந்தவர் எனவும் அவர் 40 வயதுடையர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், நபர் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈழ நாதம்

  22. புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவியதாக கூறி அவர் மேல் தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது. நேற்று அவரை புதுச்சேரி சிறையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். அதன் பிறகு புதுச்சேரி பத்திரிக்கையாளர் மன்றத்தில் சீமான் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்..அதன் காணொளி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. http://www.naamtamilar.org

    • 0 replies
    • 593 views
  23. மாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை நினைவு கூறுவோம்.தொடர்ந்து போராடுவோம்.சீமான் அறிக்கை. மாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம்.தொடர்ந்து வழி நடப்போம்.சீமான் அறிக்கை. இது குறித்து இன்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முதலாக தன்னைத் தானே எரியூட்டிக் கொண்ட மாமனிதன் அப்துல் ரவூப் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.தன் 24 ஆம் வயதில், தன்னையொத்த தமிழ்ச் சொந்தங்கள் ஈழத்தில் இன உரிமைக்காக உயிரைத் துறந்து போராடிக் கொண்டிருக்கையில் அதே உணர்வோடு தன் இன்னுயிரை தீக்குளித்துப் போக்கிய வீரம் செறிந்த நாள் இது.அன்று எந்த நோக்கத்திற்காக அப்துல் ரவூ…

    • 0 replies
    • 452 views
  24. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மன்னார் மாவட்டத்தில் சாட்சியங்களைத் திரட்டத் தீர்மானம் : 15 டிசம்பர் 2010 உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மன்னார் மாவட்டத்தில் சாட்சியங்களை திரட்டவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதத்தில் மன்னார், அம்பாறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சாட்சியமளிக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஏற்கனவே கடந்த நவமப்ர் மாதம் 7ம் திகதி முதல் 9ம் திகதி வரையில் சாட்சியம் திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஜனவரி மாதம் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரையில் அம்பாறை மாவட்டத்தில் சாட்சியங்கள் திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளத…

  25. யாழ் வர்த்தகத்தை சுவிகரிக்கும் தென்னிலங்கை! [ பிரசுரித்த திகதி : 2010-12-15 06:08:01 AM GMT ] யாழ் குடாநாட்டிற்கு பல்வேறு நாட்டுப் பிரதானிகளும் படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில் யாழ் நகரை அவசரஅவசரமாக அழகுபடுத்த யாழ் மாநகரசபை களத்தில் குதித்துள்ளது. கடந்தகால யுத்தம் காரணமாக யாழ்.நகரப் பகுதி பெரும்பாலும் இடிபாடுகளுடனும் குண்டும் குழியுமான வீதிகளுடனேயே இருக்கின்றது. யாழ் நகரிலுள்ள பெரும்பலான காணி, கட்டடங்களை தென்னிலங்கை சுவீகரித்துக் கொண்டுள்ளது. பெரும்பாலான யாழ்ப்பாண வர்த்தகர்கள் புலிகளுக்கான நிதி உதவிக் குற்றச்சாட்டின் கீழ் முடக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்னிலங்கை வர்த்தக சமூகம் பல்பொருள் அங்காடிகள், காட்சியறைகள் என்பன வேகமாக கடைவிரித்து வர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.