ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
போர்க்குற்ற ஆவணங்களில் காணாமல் போனோர் குறித்த பட்டியலும் இணையும் சாத்தியம் -இதயச்சந்திரன் கடந்த புதன்கிழமையன்று, விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி சேவையில் பணியாற்றிய ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் படுகொலை குறித்த செய்தி ஆய்வு ஒன்றினை பிரித்தானிய “சனல்4′ தொலைக்காட்சி ஒளிபரப்பியது. போர்க்குற்ற மேகங்கள் இலங்கையைச் சூழ்ந்துள்ள இவ்வேளையில் புதிது புதிதாக வெளிவரும் காணொளி ஆதாரங்கள், ஐ. நா. சபையின் பொதுச் செயலாளர் அமைத் துள்ள போர்க் குற்ற விசாரணைக்கான ஆலோசனைக் குழுவிற்கு அழுத்தங்களைக் கொடுக்குமென எதிர்பார்க்கலாம். இக்காணொளி குறித்த செய்தி ஆய்வினை மேற்கொண்ட, “சனல் 4′ தொலைக்காட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோநாதன் மில்லர் (Jonathan Miller) பிரித்தானிய பிரபல சட்டத்தரணி ஜுலி…
-
- 0 replies
- 635 views
-
-
இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக தற்போது வெளியான வீடியோவில் இருக்கும் பெண்ணை விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியில் பணிபுரிந்த இசைப் பிரியா என்று தாம் அடையாளம் கண்டுள்ளதாக ஹூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியிருந்தது. இவர் கொல்லப்பட்டதற்கு இலங்கை இராணுவத்தின் 53 ஆவது டிவிஷன்தான் பொறுப்பு என்று எச் ஆர் டபிள்யூ குற்றம் சாட்டியிருந்தது. இது தொடர்பாக ஹூமன் ரைட்ஸ் வாட்சின் சட்ட இயக்குனர் ஜிம் ராஸ் அவர்கள் தமிழோசையிடம் கூறும் போது, 'இலங்கை பாதுகாப்பு அமைச்சு 53 ஆவது டிவிஷன் மே 18 ஆம் தேதியன்று கொல்லப்பட்டதாக கூறியிருந்த நபர்தான் இந்த வீடியோவில் கொல்லப்பட்டதாகத் தோன்றும் நபராக இருப்பதாக கருதுகிறோம். அரசு இவரது மரணத்துக்கு 53 ஆவது டிவிஷன்தான் காரணம் என்று …
-
- 1 reply
- 885 views
-
-
ஐக்கிய நாடுகள் இலங்கை சம்பந்தமான செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் சபை 2010 யூன் 22ந் திகதி ஐ.நா.செயலாளர் நாயகம், இலங்கையில ; நடைபெற்ற மோதலின் இறுதிக் கட்டங்களின் போது, சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டதாகக் குற்றம ; சாட்டப்படும் விடயங்கள் சம்பந்தமாகத் தனக்கு ஆலோசனை கூறுவதற்காக நிபுணர்கள் சபையொன்றை அமைத்தார். மார்சுக்கி தருஸ்மன் , ஸ்ரீவென் ரட்னெர், யஸ்மின் சூக்கா ஆகியோர் அச்சபையின் உறுப்பினர்களாவர். இந்த சபை 2010 செப்ரெம்பர் 16ல் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளை ஆரம்பித்தது. இச்சபை, இலங்கையில் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மீறல்களின் தன்மை மற்றும் நோக்கம் என்பனவற்றைக் கவனதத்திலெடுத்து, அவற்றைக் கையாள்வதற்கான முன் மாதி…
-
- 1 reply
- 641 views
-
-
Sri Lanka - Ambassador reports Sri Lankan President responsible for "alleged war crimes" WikiLeaks Staff, 1 December 2010, 19.00 GMT Sri Lankan President Mahinda Rajapaksa and his family are responsible for alleged war crimes against the Tamil, according to a cable sent by US ambassador to Sri Lanka Patricia Butenis. Butenis said complicity in alleged war crimes by the president and leader of the opposition was stalling progress in launching investigations into the country’s civil war. The long running conflict between the government of Sri Lanka and the LTTE, also known as the Tamil Tigers, was ended in May 2009 after the Sri Lankan army defeated LTTE le…
-
- 1 reply
- 1.1k views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பான ஒளிப்படத்தில் மற்றொரு போராளியும் அடையாளம் காணப்பட்டார்! மல்லாவி, யோகபுரம் 02 ம் யுனிற்றை சேர்ந்த சந்திரமோகன் - வினோதன் (இயக்க பெயர்- இமையவன் .வயது 20 ) என்பவராவார். 2007 / 03ம் மாத மளவில் இயக்கத்தில் இணைந்து கொண்ட இவர் கிளிநொச்சி மருத்துவ மனை,, புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஆகிய வைத்தியசாலைகளில் மருத்துவ போராளியாக காயமடைந்து வரும் பொது மக்களுக்கான பணியினை மேற்கொண்டிருந்தார். போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் மாத்தளன் மற்றும்,,முள்ளிவாய்க்கால் பகுதி தற்காலிக வைத்தியசாலைகளில் தனது கடமைகளை மேற்கொண்டிருந்த வேளை காயமடைந்த பொது மக்கள்,, போராளிகளுடன் இராணுவத்தால் 2009 / 05 /18 கைது செய்யபட்டுள்ளார் மேலும் இவரது சகோதரனான ச…
-
- 0 replies
- 959 views
-
-
றோ”விடம் போர்க்குற்ற ஆதாரங்கள் [10 டிசம்பர் 2010, வெள்ளிக்கிழமை 10:25 பி.ப இலங்கை] ”கிரவுண்ட் றிப்போர்ட்”என்ற இணையத் தளத்தில் விசுப்ரமணியம் என்ற பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையின்தமிழாக்கம் முள்ளிவாய்க்கால் படுகொலையில் புதுடில்லியின் தென்தொகுதியின் (South Block) ஈடுபாடு தொடர்பான விவரங்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன. இங்கு தென்தொகுதி என்பது வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றையே குறிக்கிறது. தற்போது காத்திரமான போர்க் குற்ற ஆதாரங்கள் வெளிவருவதானது புதுடில்லிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கைக்கு எதிரான அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முனைப்புகளை தடுத்து நிறுத்திய சோனியாவின் அதிகாரம் பெற்ற புதுடில்லி முகவரது செயற்பாடுகளை இ…
-
- 6 replies
- 1.9k views
-
-
உலக உணவுத்திட்டம் கிழக்கில் தமது அலுவலகங்களை மூடுகின்றது. உலக உணவுத்திட்டத்தின் கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டு வந்த கிளைகள் இவ்வருடத்தின் இறுதியுடன் மூடப்படவுள்ளதாக தொரிவிக்கப்படுகின்றது. இதன்படியாக இம்மாதம் 31ம் திகதியுடன் தமது பணிகளை கிழக்கு மாகாணத்தில் உலக உணவுத்திட்டம் நிறுத்திக்கொள்ளும். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய கிழக்கி மாகாண மாவட்ட அலுவலகம் உட்பட மொனறாகலை ஆகிய மாவட்ட கிளைகளும் தமது பணிகளை நிறுத்தவுள்ளன. ஏற்கனவே இப்பகுதியில் செயற்படுத்தப்பட்ட திட்டங்களை கண்காணிப்பதற்கு மட்டும் மட்டக்களப்பில் ஒரு அலுவலகம் செயற்படும். உதவி வழங்கும் நாடுகளினால் வழங்கப்பட்டு வந்த நிதியுதவிகளில் வீழ்ச்சி ஏற்பட்டதும், கிழக்குப் பகுதியில் யுத்தம் நிறைவடைந்துள்ள நில…
-
- 2 replies
- 416 views
-
-
ஆறு மாதக் குழந்தையின் தாயான இசைப்பிரியா எவ்வாறு ஆயுதம் ஏந்திப் போராடியிருக்க முடியும்..? சிறீலங்கா அரசின் 53 ஆவது படையணியினரிடம் சரணடைந்த ஊடகவியலாளர் சோபா (27) எனப்படும் இசைப்பிரியா, போரில் கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்றது.அவருக்கு லெப். கேணல் தர பதவியையும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. ஆனால் எந்தவித ஆயுதப்பயிற்சியும் எடுத்துக்கொள்ளாத இசைப்பிரியா தன்னை முழுமையாக ஊடகப்பணிகளில் ஈடுபடுத்தியிருந்தார். வன்னியில் இடம்பெற்ற போரில் மக்கள் அடைந்த துன்பங்களை அனைத்துலக ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பணிகளையே அவர் முதன்மைப்படுத்தியிருந்தார். மேலும் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற சிறீலங்கா படையினரின் தாக்தலில் சிக்கி இசைப்பிரியா…
-
- 3 replies
- 1.4k views
-
-
மிக முக்கிய போர்க்குற்ற ஆதாரங்களை தற்போதே நான் காண்கிறேன்: போர்க்குற்ற வழக்கறிஞர் ஜுலியன் இரண்டாம் பாகம் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் கிடைத்த ஆதாரங்கள் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்விகளுக்கே இடமில்லாத மிகவும் காத்திரமான, அபூர்வமான ஆதாரங்கள். இவ்வாறான ஆதாரங்களை நான் சில தடவைகள் மட்டும்தான் கண்டுள்ளேன். யூகோஸ்லாவாக்கியாவில் இடம்பெற்ற படுகொலைகளின் சில காணொளிகளை நான் பார்த்துள்ளேன். அதன் பின்னர் இதனை தான் பார்க்கிறேன். என அனைத்துலகத்தின் பிரசிதித்திபெற்ற போர்க்குற்ற வழக்கறிஞர் ஜுலியன் நோவல்ஸ் சனல் போஃர் நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அந்த உரையாடலின் இரண்டாம் பாகம் (நேற்றைய தொடர்ச்சி) வருமாறு: சனல் போஃர்: இச…
-
- 3 replies
- 652 views
-
-
இனப்படுகொலை முதல்வரான கலைஞரின் மனதை மட்டும் காயப்படுத்தவில்லை! விடுதலையான சீமான் பேச்சு! ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை யார் யாருக்கெல்லாமோ மனதில் காயத்தை உண்டாக்கியிருக்கிறது. உலகத்தில் உள்ள மாற்று மதத்தவர்களின் மனதை காயப்படுத்தியிருக்கிறது. மாற்று இனத்தவர்களின் மனதை காயப்படுத்தியிருக்கிறது. மாற்று மொழிக்கார்களை காயப்படுத்தியிருக்கிறது. ஆனால் ஆறரை கோடி தமிழர்களின் முதல்வரான கலைஞரின் மனதை மட்டும் காயப்படுத்தவில்லை. சோனியாவின் மனதை காயப்படுத்தவில்லை. ஜெயலலிதாவின் மனதை காயப்படுத்தவில்லை. அதை என் என்று கேட்டால் அவர்களுக்கு குற்றமாகிவிடுகிறது. இவ்வாறு விடுதலையான, இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான சிறைவாசலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையி…
-
- 13 replies
- 2k views
- 1 follower
-
-
யாழ் சங்கானையில் இன்று இரவு அர்ச்சனை முடித்துவிட்டு வந்த அர்ச்சகர் மற்றும் அவரது மகன்கள் இருவர் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். http://meenakam.com/2010/12/11/15984.html
-
- 0 replies
- 728 views
-
-
கட்டுநாயக்கா தாக்குதல் ஊடகத்துறையை முடக்கும் செயல்: அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது ஊடகத்தறையை முடக்கும் திட்டமிட்ட செயற்பாடு என அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் பணியாற்றும் ஊடகவியலாளர்களான சாந்தா விஜயசூரியா மற்றும் பிரேம்லால் ஆகியோர் கடந்த 7 ஆம் நாள் விமான நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். முன்னாள் அரச தலைவர் வேட்பாளரும், அரசியல் கட்சி ஒன்றின் தலைவருமான விக்கிரமபாகு கருணாரட்னா நாடு திரும்பியபோது செய்தி சேகரிக்கச் சென்ற அவர்கள் மீது திட்டமிட்ட முறையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனா…
-
- 0 replies
- 573 views
-
-
அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளுடன் இணையத் தயார் –TNA 11 டிசம்பர் 2010 நல்லய்யா குமாரகுருபரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜனநயாக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் நல்லய்யா குமாரகுருபரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில்…
-
- 0 replies
- 438 views
-
-
எதிரணியில் இருக்கும் போது மனித உரிமையின் பாதுகாவலனாக உள்ளவர்கள் பதவிக்கு வந்ததும் மனித உரிமைகளை மீறுபவர்களாக மாறிவிடுவது தான் இன்றைய விந்தையாக இருப்பதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவிக்கின்றார். மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும் போது இவர் இதனைக் குறிப்பிட்டார். மதிக்கப்படவேண்டியவர்களால் உரிமைகள் மீறப்படுவது கவலை தரும்விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=29010
-
- 0 replies
- 575 views
-
-
நீங்களும் பாதிக்கப்படிருந்தால், உங்கள் உறவினர் பாதிக்கப்படிருந்தால் அவர்கள் சார்பில் ஒரு வாக்கு மூலத்தை இன்றே காலம் தாழ்த்தாமல் பதிவு செய்யுங்கள் =========================================================================== வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், அரசியல் பிரமுகருமான க.வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகனான சூரியதீபனும் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து சிறிலங்கா படைத்தரப்பினரால் தனியாக அழைத்துச் செல்லப்பட்டதை தான் நேரில் கண்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவுக்கு எழுத்து மூல சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த எழுத்து மூல சாட்சியம் வழங்கியவரின் பெயரை அவரது பாதுகாப்ப…
-
- 0 replies
- 1.6k views
-
-
கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்னர் (1948 டிசம்பர் 10ம் திகதி) ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம் ஜக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சகல சர்வதேச சட்டங்களின் முன்னோடியாக அமைந்துள்ளது. முப்பது சாரங்களை கொண்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம் ஒரு தனிமனிதனின் சமூக, பொருளாதார,கலை-கலாச்சாரம் அரசியல் உரிமைகளை உள்ளடக்கியவையாக அமைகிறது. சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை பொறுத்தவரையில் ஜக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நூற்று தொன்றிரண்டு (192) அங்கவத்துவ நாடுகளும் தமது தலையாய கடமையாக ஏற்றுகொள்கின்றன. உலகம்பூராகவும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் ஏற்கப்பட்டபோதிலும், மனித உரிமை மீறல் என்பது பரவலாக சகல நாடுகளிலும் நடைபெறுகின்றன. வேறுபட…
-
- 1 reply
- 545 views
-
-
ஊடகவியலாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம். தமிழினப் படுகொலையும் வெளியாகும் ஆதாரங்களும் வியேத்நாம் போரின் கொடூரங்களை சொன்ன ‘ஓடி வரும் அந்த சிறுமியின் புகைப்படம்’ (கிம் சுக்) உண்மையை உரைத்த பிறகு போரை நிறுத்த,போராட்டம் நடத்த வேண்டிய அழுத்தத்தை உலகிற்கு கொடுத்தது, போர் முடிந்த பிறகும் அந்த சிறுமி இன்று வரை நம்முடன் உயிரோடு தான் இருக்கிறார். போரின் கொடுமையை தமிழினம் உரத்து கொடுத்த போது திரும்பி பார்க்காத சமூகம் இன்று வெளியாகும் காணோளிகளால் விழிப்படைந்து பார்க்கும் சமயம், அங்கு காப்பாற்ற மக்களும் இல்லை, பச்சைபடுகொலையை உணர்த்திய இசைபிரியாக்களும் இல்லை. பிணமாய் நாமும், படங்களை அவர்களும் துயரப்பட்டு கொண்டிருக்கிறோம். இசைபிரியாவையும் ஏனைய போராளிகளையும் பார்த்…
-
- 1 reply
- 874 views
-
-
அஷ்ரவ் நகர் மக்களை வெளியேற உத்தரவு அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அஷ்ரவ் நகர் பிரதேசத்தில் 31 குடும்பங்களை அவர்களின் 66 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு அம்பாறை மாவட்ட அரச அதிபாரினால் அட்டாளைச்சேனைப் பிரதேச யெயலாளர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் இதுசம்பந்தமாக உரியவர்களுக்கு அறிவித்துள்ளார் . இவர்கள் தமது காணிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கவில்லை, இவர்களின் காணி அனுமதிப்பத்திரம் வலுவிழந்துபோயுள்ளதாக பிரதேச செயலாளாரின் கடிதத்தில் சுட்டிக்கபட்டப்பட்டுள்ளது. மேற்படி காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் கடந்த 1980ம் இறுதியாக புதுப்பிக்கப்பட்டதாக தொரிவிக்கப்படுகின்றது. யுத்தம் காரணமாக த…
-
- 1 reply
- 472 views
-
-
சலிண்டா தசநாயகா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெங்களூர் தமிழர்கள் 46 பேர் கைது பெங்களூரில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்ள வந்த சிறீலங்கா அமைச்சர் சலிண்டா தசநாயகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக தமிழ் அமைப்புகள் கூட்டமைப்பினர் 44 பேர் கைதாகியுள்ளனர். காலை 11 மணியிலிருந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு பின்னர் பிற்பகல் 3 மணியளவில் முற்றுகை போராட்டம் நடத்த சென்ற கர்நாடக தமிழ்மக்கள் கூட்டமைப்பினர் 44 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை காவல்துறையினர் விடுதலை செய்துவிட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், கர்நாடக தமிழர் ஒற்றுமைக்கழகம், நாம் தமிழர் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, மதர் இந்தியா அ…
-
- 2 replies
- 749 views
-
-
யாழப்பாணக் கோழியின் கலாச்சாரச் சீரழிவு??? நாய்க் குட்டியை அடைக்காக்கும் கோழி ( காணொளி) யாழ்பாணம் அரியாலையை சேர்ந்த ஒருவரது வீட்டில் அடை காத்து குஞ்சுகள் பொரித்த கோழி ஒன்று தனது குஞ்சுகளைக் கொத்திக் கலைத்துவிட்டு நாய்க் குட்டி ஒன்றுடன் அன்பைப் பரிமாறி குஞ்சுகளைப் புறக்கனிப்பதாகத் தெரியவருகின்றது. நாய்க்குட்டியும் கோழியுடன் கூடத் திரிவதாகவும் தனக்கு போடும் அரிசிக் குறுனி உட்பட எல்லாவற்றையும் நாய்க்குட்டிக்கு கோழி பரிமாறுவதாக தெரியவருகின்றறது. நாய்க் குட்டியை எவரும் தொட வந்தால் கொத்திக் கலைக்கின்றது அந்தக் கோழி. யாழ்ப்பாணத்தில் உள்ள மனிதர்களை கலாச்சாரத்தில் வென்றுவிட்டது இந்தக் கோழி http://newjaffna.com/fullview.php?id=MTE1NA==
-
- 5 replies
- 1.6k views
-
-
மகிந்த ஆதரவு பேரணியை புறக்கணித்த மட்டக்களப்பு மக்கள் இங்கிலாந்தில் போர்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷவிற்கெதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் ஒக்ஸ்போர்ட்டில் உரைநிகழ்த்த தடுத்தமை ஆகியவற்றை கண்டித்து கருணாவின் ஆதரவாளார்களால் மட்டக்களப்பு நகரில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பில் மட்டும்மன்றி கிழக்கு மாகணத்திலேயே ஆதரவை இழந்த கருணாவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகிந்த ஆதரவு பேரணிக்கு மக்கள் யாரும் வருகைதராததை அடுத்து தினறிப்போன கருணாவின் ஆதரவாளர்கள் மட்டக்களப்பு பின்தங்கிய பிரதேசமான படுவான்கரையில் உள்ள பாமர மக்களிடம், யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறி லோறிகளிலும் பஸ்களிலும் ஏற்றி வ…
-
- 4 replies
- 835 views
-
-
(விசு கருணாநிதி, லோரன்ஸ் செல்வநாயகம்) தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழ கத்தின் உரையில் தெளிவுபடுத் துவதற்கு நான் திட்டமிட்டி ருந்தேன். இதனூடாக எமது திட்டம் சர்வதேச மயப்படுவதைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளனரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து ஜனாதிபதி நேற்று உரையாற்றினார். சுமார் 50 நிமிடம் சபையில் பேசிய அவர் மேலும் கூறியதாவது; வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை எனச் சிலர் இனவாத ரீதியாகக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். பிரித்தானியாவில் இடம்பெற்ற …
-
- 5 replies
- 1.2k views
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள்: கொழும்பினை விடவும் புதுடில்லியே அஞ்சுகின்றது [ புதன்கிழமை, 08 டிசெம்பர் 2010, 18:15 GMT ] [ தி.வண்ணமதி ] மே 2009ல் விடுதலைப் புலிகளமைப்பு தோற்கடிக்கப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தது கோத்தாபய ராஜபக்சதான். எல்லாவற்றையும் விட மேலாக கோத்தாபயவினது இராசதந்திரச் செயற்பாடுகள்தான் சிறிலங்காவினது போர்க்குற்ற விடயத்தில் இந்தியாவினை இன்னமும் வாய்திறக்க முடியாமல் செய்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. இவ்வாறு Ground Report என்னும் இணையத்தளத்தில் 'Vssubramaniam' எழுதியுள்ள அரசியல் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பான ஆதாரங்களை இந்திய…
-
- 2 replies
- 892 views
-
-
வலிகாமம் வடக்கில் படைத்தரப்பு மீண்டும் மண் அணைகள் அமைப்பு - 10 டிசம்பர் 2010 நலன்புரி அமைப்புக்கள் போர்க்கொடி:- வலிகாமம் வடக்கில் படைத்தரப்பு மீண்டும் மண் அணைகள் அமைப்பு - GTN செய்தியாளர் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீண்டும் படைத்தரப்பு அமைக்கத் தொடங்கியிருக்கும் மண் அணைகள் தொடர்பில் இடம்பெயர்ந்த நலன்புரி அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. அண்மையில் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லைக் கிராமங்களான இளவாலை வடக்கு இளவாலை வடமேற்கு மற்றும் யுத்தகபுரம் ஆகிய 3 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியமர்வு அனுமதிக்கப்பட்டது. இந்தப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளினை உள்ளடக்கி படைத்தரப்பு புதிய மண் அணைகளை அமைத்து வருகின்றது. இதனா…
-
- 1 reply
- 806 views
-
-
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி லியூ ஜியாபோவிற்கு நோபல் பரிசு வழங்கியிருப்பது மேற்கு நாடுகளின் பனிப்போர் மனப்பான்மையை காட்டுவதாக சீனா கூறியுள்ளது. சீனாவில் ஜனநாயக ஆதரவாளர் லியூ ஜியாபோவிற்கு இந்தாண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இது சீனாவிற்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. பரிசு வழங்கும் விழாவை புறக்கணிக்குமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்த சீனா, அந்த விழா, சீனாவில் ஒளிபரப்பப்படுவதை தடுத்து விட்டது. சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த விழாவில் லியூவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா, இது மேற்கு நாடுகளின் பனிப்போர் மனப்பான்மையை காட்டுவதாக கூறியுள்ளது. http://www.dinamalar.com/Ne…
-
- 2 replies
- 1.2k views
-